சிறப்பு தீவிர திருத்த (SIR) தீர்ப்பு : நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை அறிக்கையாகச் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு; குடியுரிமைச் சரிபார்ப்புகளுக்கு வழிவகுக்கிறது. -அபூர்வா விஸ்வநாத்


தேர்தல் வாக்காளர் பட்டியல்களைத் தயாரிக்கும்போதோ அல்லது திருத்தும்போதோ, ​​குடியுரிமை தொடர்பான கேள்விகளை ஆராய்வதற்காக தேர்தல் ஆணையத்திற்கு "சந்தேகத்திற்கு இடமின்றி அதிகாரம் உள்ளது" என்று உச்சநீதிமன்றம் கூறியது. இருப்பினும், நீதிமன்றம் இந்த அதிகாரத்தை "முற்றிலும் மேலோட்டமான மற்றும் சூழல் சார்ந்ததாகவே" இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, அதற்கு வரையறை செய்தது.


தேர்தல் ஆணையத்தால் (Election Commission (EC)) வாக்காளர் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தத்தின் (SIR) சட்டப்பூர்வத் தன்மையை உறுதி செய்து, உச்சநீதிமன்றம் புதன்கிழமை வழங்கிய முக்கியத் தீர்ப்பு, ஒரு குறிப்பிடத்தக்க முரண்பாடாக அமைந்துள்ளது.


சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) செயல்முறையானது வாக்களிப்பதற்கான தகுதியைச் சரிபார்ப்பதோடு மட்டுமே நின்றுவிடும் என்றும், வாக்காளர் பட்டியலிலிருந்து ஒருவரை நீக்குவது என்பது "அந்த நபர் இந்தியக் குடிமகன் அல்ல என்று அறிவிப்பதற்குச் சமமாகாது" என்றும் நீதிமன்றம் வலியுறுத்திய அதேவேளையில், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்கள், அடுத்த தேர்தல்களுக்கு முன்னதாகவே "தங்கள் குடியுரிமை தொடர்பான சட்டரீதியான தீர்ப்பிற்கு" (adjudication) உட்படுத்தப்படுவார்கள் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


2003-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயர், அவர் இந்தியக் குடிமகன் அல்ல என்று தேர்தல் ஆணையம் கருதியதன் அடிப்படையில் நீக்கப்பட்டிருந்தால், அத்தகைய வழக்குகளை நான்கு வாரங்களுக்குள், 1955-ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் (Citizenship Act) கீழ் செயல்படும் உரிய அதிகார அமைப்பிடம் தேர்தல் ஆணையம் அனுப்பிவைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. அந்த அதிகார அமைப்பு, பின்னர் சட்டத்திற்கு உட்பட்டு அந்த நபரின் குடியுரிமை தன்மையைத் தீர்மானிக்கும். நாடாளுமன்றம், சட்டமன்றம் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் எது முதலில் வருகிறதோ, அதற்கு முன்னதாகவே, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அந்த அதிகார அமைப்பு அறிவிப்பு அனுப்ப வேண்டும். மேலும், தங்கள் தரப்பு விளக்கத்தை அளிப்பதற்கான வாய்ப்பையும் அவர்களுக்கு வழங்க வேண்டும். நீதிமன்றம் வழங்கிய 124 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் ஒரு பகுதியாக இந்த வழிகாட்டுதல் அமைந்திருந்தது.


உள்துறை அமைச்சகம், குடியுரிமைச் சட்டம் மற்றும் 'வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களின்' (Foreigners’ Tribunals) கீழ், குடியுரிமை தொடர்பான கருத்துக்கணிப்புகளின் பல்வேறு அம்சங்களை விசாரிக்கிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்கள் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு நான்கு வார கால அவகாசம் அளிப்பதன் மூலம், நீக்கப்பட்ட நபர்களே தாங்கள் இந்தியக் குடிமக்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய சுமையை, நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் அவர்கள் மீது சுமத்துகிறது.


வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும்போதோ அல்லது திருத்தும்போதோ, குடியுரிமை தொடர்பான விவகாரங்களை ஆராய்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்குத் தெளிவாகவே வழங்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. இருப்பினும், நீதிமன்றம் இந்த அதிகாரத்தை ”முற்றிலும் மேலோட்டமான மற்றும் சூழல் சார்ந்ததாகவே" இருக்க வேண்டும் என்று வரையறுத்தது. அதன் "சரியான கண்ணோட்டத்தில்" புரிந்து கொள்ளும்போது, ​​"இது அந்த நபர் இந்தியக் குடிமகன் அல்ல என்ற பிரகடனத்திற்கு சமமாகாது. தேர்தல் நோக்கங்களுக்காக, சட்டப்பூர்வ நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பதில் ஆணையத்திற்கு திருப்தி ஏற்படாததையே இது பிரதிபலிக்கிறது" என்று நீதிமன்றம் கூறியது.


லால் பாபு ஹுசைன் vs வாக்காளர் பதிவு அதிகாரி (Lal Babu Hussein vs Electoral Registration Officer) வழக்கில் 1995-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற வாக்காளர்கள் பெயர்கள் குடியுரிமை பெற்றதற்கான கருத்துகணிப்பிற்கு உரிமையுடையவர்கள் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். அந்தத் தீர்ப்பில், வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது ஒரு அலுவல்சார்ந்த செயல் என்பதால், அது முறைப்படுத்தப்பட்டதற்கான கருத்துகணிப்பைக் கொண்டுள்ளது என்ற முன்னுதாரணத்தின் அடிப்படைக் கொள்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டபோதிலும், அதை தற்போதைய வழக்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டியது. இந்த கருத்துகணிப்பு சான்று அடிப்படையிலானது மற்றும் ஆதாரத்துடன் இதை எதிர்த்து சவால் செய்ய கூடியது என்றும், இது ஒரு இறுதி அல்லது முழுமையான சட்டப் பாதுகாப்பு அல்ல. மேலும், இது ஆய்வுக்கு எதிரான ஒரு நிரந்தர உத்தரவாதமும் அல்ல என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறையை நீதிமன்றம் எவ்வாறு நியாயப்படுத்தியது?


இந்தத் தீர்ப்பில், ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு தீவீர திருத்தம் (SIR) செயல்முறையானது, “ஆவணப்படுத்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொது அணுகல் தொடர்பாக நியாயமான கவலைகளை எழுப்பியது” என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. “இருப்பினும், தொடர்ச்சியான நீதித்துறைத் தலையீடுகள் மூலம் இந்தக் கவலைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, அந்தச் செயல்முறையில் படிப்படியாகப் பாதுகாப்பு அம்சங்கள் புகுத்தப்பட்டன என்பதும் தெளிவாகத் தெரிகிறது,” என்றும் நீதிமன்றம் கூறியது.


இந்தத் தலையீடுகளின் காரணமாக, சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறை "அரசியலமைப்புக்கு இணக்கமானதாக" மாறியது என்று நீதிமன்றம் கூறியது.


மேலும் "சிலரால் புறக்கணிப்பதாகக் கருதப்படக்கூடிய ஒரு செயல்முறையை, பொருத்தமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம், செயல்படுத்தும்போது அரசியலமைப்புக்கு இணக்கமானதாக மாற்ற முடியும்," என்று நீதிமன்றம் கூறியது.


சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் விலக்கப்பட்டதற்கான காரணங்களுடன், அவர்களின் முழுமையான வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கான தனது முடிவை, "ஆரம்பத்தில் ஒரு வெளிப்படையற்ற நிர்வாகப் பயிற்சியிலிருந்து, சரிபார்க்கவும் சவால் செய்யவும் கூடிய ஒன்றாக மாற்றியது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


"இந்தத் தீர்ப்புகள், சிறப்பு தீவிர திருத்த செயல்முறையான நடைமுறை நியாயத்தின் தேவைகளுடன் சீரமைக்கப்படுவதை உறுதிசெய்யும் கட்டமைப்புச் சீர்திருத்தங்களாகச் செயல்பட்டன," என்று நீதிமன்றம் கூறியது.

உச்சநீதிமன்றம், 2025 ஜூலை மாதம் தொடங்கி ஏழு மாதங்களுக்கும் மேலாக இந்த வழக்கை விசாரித்து, நீதிமன்றம் ஜனவரி மாதம் தனது தீர்ப்பை ஒத்திவைத்தது.


வாக்காளர் பட்டியல்களைத் தயாரிக்கும் அல்லது திருத்தும் செயல்பாட்டின்போது, ​​குடியுரிமை தொடர்பான கேள்விகளை ஆராய தேர்தல் ஆணையத்திற்கு "சந்தேகத்திற்கு இடமின்றி அதிகாரம் உள்ளது" என்று உச்சநீதிமன்றம் கூறியது. இருப்பினும், நீதிமன்றம் இந்த அதிகாரத்தை "முற்றிலும் மேலோட்டமான மற்றும் சூழல் சார்ந்ததாகவே" என்று குறிப்பிட்டு, அதற்கு வரையறை செய்தது.

Original link:

SIR ruling: Supreme Court tells Election Commission to report deleted names, sets stage for citizenship test.



Share: