இந்தியாவின் குடிநீர் எதிர்காலத்திற்காக ஒரு வலுவான தகவல் அமைப்பை உருவாக்குதல் -அனுஜ் ஷர்மா, மனு ஸ்ரீவஸ்தவா

 குழாய்களும் விசைக்குழாய்களும் தண்ணீரை வழங்கும். ஆனால், டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆதரவளிக்கும்போது, நம்பகமான பகிரப்பட்ட தகவல்களே அவற்றை பல ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட வைக்கும். 


தரவும், முறையான தரவு மேலாண்மையுமே எந்தவொரு அமைப்பின் முதுகெலும்பாகும். அதில் உள்ள வேறுபாடுகள் தொழில்நுட்பரீதியாகத் தோன்றினாலும், அவை உண்மையான விளைவுகளைக் கொண்டுள்ளன. இதில் வரையறைகள் வேறுபடும்போதும், தரவு மூலங்கள் முரண்படும்போதும், மாநிலங்கள் களத்தில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக, வெறும் அறிக்கைகளை சரிசெய்து வெளியிடுவதில் மதிப்புமிக்க நேரத்தைச் செலவிடுகின்றன. இதனால், பழுதுபார்ப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பது பொறியாளர்களுக்குச் சிரமமாகிறது. இதன் விளைவாக, முன்னேற்றம் குறைகிறது. இது முயற்சியின்மையால் நடப்பதில்லை. ஒரு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த கண்ணோட்டம் இல்லாததாலேயே இதற்கு காரணமாக அமைகிறது.


இந்தியா தற்போது உலகின் மிகப்பெரிய கிராமப்புற நீர் விநியோக மாற்றங்களில் ஒன்றைச் செயல்படுத்தி வருகிறது. இந்தச் சவாலுக்கு அவசர கவனம் தேவை. 2019-ல் ஜல் ஜீவன் இயக்கம் (Jal Jeevan Mission) தொடங்கப்பட்டதிலிருந்து, கிராமப்புற இந்தியாவில் வீட்டுக் குழாய் நீர் இணைப்பு 16.72%-லிருந்து 81%-க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்தச் சாதனை என்பது வெறும் குழாய்களைப் பதித்து இணைப்புகளை வழங்குவது மட்டுமல்ல. இது வாழ்க்கையை மேம்படுத்துவதாகும். இது, குறிப்பாகப் பெண்களுக்கு, 5.5 கோடிக்கும் அதிகமான தினசரி கடின உழைப்பைச் சேமித்துள்ளது. வயிற்றுப்போக்கு நோய்களால் ஏற்படும் கிட்டத்தட்ட நான்கு லட்சம் இறப்புகளைத் தடுக்கவும் இது உதவியுள்ளது.

ஆனால், குழாய்களையும் பம்புகளையும் அமைப்பது இந்தச் செயல்முறையின் ஒரு பகுதி மட்டுமே. அது மட்டும் போதுமானதல்ல. வரும் ஆண்டுகளில் தண்ணீர் சீராகவும், பாதுகாப்பாகவும், நிலையானதாகவும் பாய்வதை உறுதி செய்வதே உண்மையான சவாலாகும். இதை அடைவதற்கு, உள்கட்டமைப்பைத் தொடர்ந்து கண்காணிப்பது, பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிவது, மற்றும் பல நிறுவனங்கள் முழுவதும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுப்பது அவசியம்.


இந்தியா, குடிநீர் துறைக்காக ஒரு டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்கத் தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கை, நீர் அமைப்புகளைச் சிறப்பாக நிர்வகிப்பதற்கான அடித்தளத்தை அமைக்கிறது. இது, சுஜலாம் பாரத் ஐடிகள் (Sujalam Bharat IDs) மற்றும் சுஜல் கௌன் ஐடிகள் (Sujal Gaon IDs) மூலம் ஒவ்வொரு குடிநீர் திட்டத்திற்கும் ஒரு தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தை வழங்குவதாகும்.


ஒரு சுஜலம் பாரத் ஐடி (Sujalam Bharat ID), என்பது நீர் மூலத்திலிருந்து தொடங்கி குழாய் வரை, நீரியல் ரீதியாக இணைக்கப்பட்ட அனைத்து வளங்களின் முழுமையான டிஜிட்டல் பதிவை உருவாக்குகிறது. சுஜலம் பாரத் செயலி (Sujalam Bharat App) போன்ற தளங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, இது சுஜல் காவ்ன் ஐடிகளை (Sujal Gaon IDs) உருவாக்க உதவுகிறது மற்றும் நீர் அமைப்புகள் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய தெளிவான பார்வையை வழங்குகிறது. இந்த அமைப்பு கண்காணிப்பை மேம்படுத்துகிறது, வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கிறது. மேலும், தொழில்நுட்பரீதியாக வலுவூட்டப்பட்ட வளர்ந்த இந்தியா 2047-ஐ (Viksit Bharat @2047) உருவாக்குவதற்குப் பங்களிக்கிறது.


திட்டச் செயல்திறன்


உள்கட்டமைப்புத் தரவுகள் (Infrastructure data) மட்டும் போதாது. குடிநீர் அமைப்புகள் நம்பகத்தன்மையுடன் இருப்பதற்கு, காலப்போக்கில் இந்தத் திட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் டிஜிட்டல் அமைப்புகள் பதிவு செய்ய வேண்டும். நீர் விநியோகத்தின் சீரான தன்மை, நீர்மூலங்களில் உள்ள நீர் மட்டங்கள், நீரின் தரக் குறிகாட்டிகள் மற்றும் திட்டங்களின் நிதி நிலைத்தன்மை குறித்த தரவுகளும் சம முக்கியத்துவம் வாய்ந்தவை. இத்தகைய தகவல்கள் டிஜிட்டல் அமைப்புகளுக்குள் சீராகப் பாயும்போது, திட்டங்கள் திட்டமிட்டபடி செயல்படுகின்றனவா என்பதையும், எங்கு கவனம் தேவை என்பதையும் அரசாங்கங்களும் சமூகங்களும் நன்கு புரிந்துகொள்ள முடியும்.


நம்பகமான செயல்பாட்டுத் தரவுகள் (Reliable operational data), இத்துறை சார்ந்த சவால்களுக்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை மாற்றும் ஆற்றல் கொண்டவை. குறைந்துவரும் நீர்வள மட்டங்கள் மற்றும் சீரற்ற விநியோக முறைகளை முன்கூட்டியே கண்டறிய முடியும். நீரின் தர அபாயங்கள் பொது சுகாதாரக் கவலைகளாக மாறுவதற்கு முன்பே அவற்றை சுட்டிக்காட்ட முடியும். செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான சரியான நேர நிதித் திட்டமிடல், அமைப்புகள் அவற்றின் நோக்கம் கொண்ட பலன்களைத் தொடர்ந்து வழங்குவதை உறுதி உதவுகிறது.


அதேபோல் முக்கியமாக, இந்த வெளிப்படைத்தன்மை சமூக நிர்வாகத்தை வலுப்படுத்துகிறது. கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழுக்கள், உள்ளூர் தேவைகள் மற்றும் பருவகால நீர் நிலவரங்கள் குறித்த ஆழ்ந்த புரிதலுடன், கிராமப்புற குடிநீர் அமைப்புகளை நிர்வகிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.


உள்ளூர் அமைப்புகள், உண்மையான உள்கட்டமைப்பையும் அதன் செயல்பாட்டையும் காணும்போது, தங்களின் நீர் விநியோக அமைப்புகள் குறித்து தெளிவான புரிதலைப் பெறுகின்றன. அவர்களால் குழாய்கள், பம்புகள் மற்றும் தொட்டிகள் குறித்த தகவல்கள், விநியோகத்தின் சீரான தன்மை, நீர் மட்டங்கள், நீரின் தரம் மற்றும் நிதி நிலைத்தன்மை குறித்த தரவுகளுடன் இணைந்து, கிராம அமைப்புகளுக்கு அவற்றின் அமைப்புகள் குறித்த எளிமையான ஆனால் சக்திவாய்ந்த ஒரு தெளிவான பார்வையை வழங்குகின்றன. இந்தத் தரவுகளின் மூலம், சமூகங்கள் பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து, பொறியாளர்களுடன் இணைந்து அவற்றைத் தீர்க்க முடியும். கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழுக்களுக்கு, இந்த வெளிப்படைத்தன்மை உள்ளூர் நீர் மேலாண்மை மற்றும் மக்கள் பங்களிப்பை வலுப்படுத்துகிறது.


இந்த உள்கட்டமைப்பு வளரும்போது, மாநிலங்கள் பொதுவான தங்களின் நீர் வடிவங்களைப் பயன்படுத்தி தகவல்களை எளிதாகப் பகிர்ந்து கொள்ள முடியும். எது சிறப்பாகச் செயல்படுகிறது?, எங்கு மேம்பாடு தேவை? என்பது குறித்த ஒருங்கிணைந்த கற்றலை செயல்படுத்தும் அதே வேளையில், அவை தங்கள் அமைப்புகளின் மீதான கட்டுப்பாட்டையும் தக்கவைத்துக் கொள்கின்றன.

இந்த அடிப்படை அமைப்புகள் தரவு சார்ந்த மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான புத்தாக்கங்களை ஆதரிக்க முடியும். களப்பணியாளர்கள் பம்புகள் மற்றும் குழாய்களின் உள்கட்டமைப்பு படங்களை எடுக்க முடியும். மேலும், செயற்கை நுண்ணறிவு விநியோகத்தை மதிப்பிடவும், சேதத்தைக் கண்டறியவும், பராமரிப்புத் தேவைகளைக் குறிக்கவும் முடியும். தரவுப் பகுப்பாய்வுகள் மூலம் கவனம் தேவைப்படும் அபாயங்களையும் வடிவங்களையும் அடையாளம் காண முடியும். இந்த மேம்பாடுகள் அனைத்தும் ஒரு இன்றியமையாத காரணியைச் சார்ந்திருக்கின்றன. இவை இம்முறையின் ஊடாக, நம்பகமான மற்றும் சார்ந்திருக்கக்கூடிய தகவல்கள் தடையின்றிப் பெறுவது அவசியமாகும்.


குழாய்களும் விசைக்குழாய்களும் தண்ணீரை வழங்குகின்றன. ஆனால், நம்பகமான மற்றும் பகிரப்பட்ட தகவல்கள் இந்த அமைப்புகளைப் பல ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட வைக்கின்றன. சமூகங்கள் தங்கள் நீர் அமைப்புகளைப் புரிந்து கொள்ளும்போது, அவை அவற்றைப் பேணுகின்றன. உள்ளூர் அமைப்புகளிடம் சரியான தகவல்களும் முறையான கருவிகளும் இருக்கும்போது, அவர்களால் இந்த அமைப்புகளை நம்பிக்கையுடன் நிர்வகிக்க முடியும். அவர்களால் தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும், சிக்கல்களை விரைவாகத் தீர்க்கவும் முடியும். மேலும், டிஜிட்டல் உள்கட்டமைப்பு களத்தில் உள்ள மக்களுக்கு ஆதரவளிக்கும்போது, ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் பாதுகாப்பான மற்றும் நீடித்த குடிநீரை உறுதி செய்யப்படலாம்.


சமூகங்கள் தங்கள் நீர் அமைப்புகளைப் புரிந்து கொள்ளும்போது, அவற்றைப் பேணிப் பாதுகாக்கத் தொடங்குகின்றன. உள்ளூர் நிறுவனங்கள் சரியான தகவல்களையும் கருவிகளையும் கொண்டிருக்கும்போது, அவை நம்பிக்கையுடன் அவற்றை நிர்வகிக்கின்றன. மேலும், டிஜிட்டல் உள்கட்டமைப்பு களத்தில் உள்ள மக்களுக்கு ஆதரவளிக்கும்போது, ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் பாதுகாப்பான மற்றும் நீடித்த குடிநீர் தொடர்ந்து கிடைக்க முடியும். ஜல் ஜீவன் இயக்கம், லட்சக்கணக்கான கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் நீரை வழங்கியுள்ளது. இந்த அமைப்புகள் காலப்போக்கில் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்வதே அடுத்த கட்டமாகும். சமீபத்தில் நிறைவடைந்த ஜல் மஹோத்சவ்-2026 (Jal Mahotsav), இந்த மாற்றத்தைப் பிரதிபலித்தது. குடிநீர் வளங்களை நிர்வகிப்பதில் நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் பங்களிப்பை அங்கீகரித்ததன் மூலம், இந்த உணர்வு ஏற்கனவே அடிமட்ட நிலையில் வேரூன்றி வருவதையும், அமைப்புகள் காலப்போக்கில் தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்ய இப்போது அது வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இது காட்டியது.


அனுஜ் ஷர்மா, அர்க்யம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், மனு ஸ்ரீவஸ்தவா அதன் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாகவும் உள்ளனர்.


Original article : Building the information backbone for India’s drinking water future -Anuj Sharma, Manu Srivastava

Share: