நாரி சக்தி : அடுத்த பத்தாண்டுகளுக்கான இந்தியாவின் முக்கியச் சீர்திருத்தம் -சங்கீதா ரெட்டி

அடுத்த ஐந்து ஆண்டுகளில், பெண்கள் தேர்தல்ரீதியாக மட்டுமல்லாமல், நிறுவனரீதியாகவும் தலைமை தாங்குவதற்கு அவர்களைத் தயார்படுத்துவதில் இந்தியா முதலீடு செய்யவேண்டும்.


கடந்த பத்தாண்டுகளில், மிகச் சில நாடுகள் மட்டுமே பெரிய அளவில் சாதித்த ஒன்றை இந்தியா செய்துள்ளது. அது பெண்களின் அதிகாரமளித்தலை வெறும் ஒரு கருத்தாக்க நிலையிலிருந்து, ஒரு வலுவான உள்கட்டமைப்பு நிலைக்கு அமைப்புரீதியாக நகர்த்தியுள்ளது. இந்த மாற்றம் இயல்பாக நிகழ்ந்துவிடவில்லை. இது மிகக் கவனமாகத் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், முன்னேற்றம் அடையும்போது, ஒட்டுமொத்தப் பொருளாதாரங்களும் வேகமெடுக்கும் என்பதை உணர்ந்து, கொள்கைகள் பெண்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.


அதன் விளைவுகள் தெளிவாகவும், அளவிடக்கூடியதாகவும் உள்ளன. பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana) திட்டத்தின்கீழ் 57 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் 55%-க்கும் அதிகமானவை பெண்களின் வசம் உள்ளன. இது லட்சக்கணக்கான பெண்களுக்கு முறையான நிதி அமைப்பில் முதல் அடியை எடுத்துவைக்க உதவியுள்ளது. ஏறக்குறைய 10 கோடி பெண்கள், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களாக (self-help groups) ஒருங்கிணைந்து, தற்போது அடித்தளத்தில் தொழில்முனைவு மற்றும் உள்ளூர் பொருளாதார மீள்திறனை முன்னெடுத்துச் செல்கின்றனர். பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana) 10.5 கோடிக்கும் அதிகமான குடும்பங்களைச் சென்றடைந்து, சுகாதார பாதிப்புகளைக் குறைத்து, அதிக நேரம் எடுக்கும் வேலையிலிருந்து பெண்களை இந்த திட்டம் விடுவித்துள்ளது. மேலும், கடன் பெறுவதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது. பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட கடன்களில் ஏறக்குறைய 70% பெண் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளன. நீண்டகாலமாக இருந்துவந்த வீழ்ச்சியை மாற்றியமைத்து, பெண் தொழிலாளர்களின் பங்களிப்பும் கிட்டத்தட்ட 37% ஆக உயர்ந்துள்ளது.


சுகாதாரத் துறையில், தூய்மை இந்தியா (Ayushman Bharat) மற்றும் பிரதமரின் பாதுகாப்பான தாய்மை இயக்கம் (Pradhan Mantri Surakshit Matritva Abhiyan) போன்ற திட்டங்கள், வாழ்க்கையின் முக்கிய காலகட்டங்களில் அணுகலை விரிவுபடுத்தி, பாதிப்புக்குள்ளாகும் தன்மையைக் குறைத்துள்ளன. பெண்குழந்தைகளை பாதுகாப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் (Beti Bachao Beti Padhao) திட்டம் போன்ற முன்னெடுப்புகள், சமூகத்தில் வலுவாக வேரூன்றிய மனப்பான்மைகளை மாற்றத் தொடங்கியுள்ளன.


தனித்தனியாகப் பார்க்கும்போது, இவை வலுவான திட்டங்கள் ஆகும். ஆனால், இவை அனைத்தும் ஒன்றாகச் சேரும்போது, பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் ஆதரவைப் பெறுபவர்களாக அல்லாமல், அவர்களுக்கான வளர்ச்சியை மேம்படுத்துபவர்களாக இந்தியாவின் பார்வையில் ஒரு கட்டமைப்பான மாற்றத்தைக் குறிக்கின்றன. கொள்கை வகுப்பாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இது ஒரு தெளிவான பாடத்தை வழங்குகிறது. இது வடிவமைப்பு, செயல்பாடு மற்றும் பொறுப்புணர்வு ஆகியவை சீரமைக்கப்படும்போது, பெரிய அளவிலான திட்டங்கள் வெற்றிபெறுகின்றன.


ஆசிரியரின் நிபுணத்துவத் துறையான சுகாதாரத் துறையில், கோட்பாட்டு மாதிரிகளைச் சார்ந்து இல்லாமல், உண்மையான தேவைகளை மையமாகக் கொண்டு அமைப்புகள் கட்டமைக்கப்படும்போது விளைவுகள் மேம்படுகின்றன. இந்த திட்டத்திற்கான அணுகல் எளிமையாக்கப்பட்டு, செயல்பாடு சீராக இருந்து, விளைவுகள் கண்காணிக்கப்படும்போது, உண்மையான தாக்கம் ஏற்படுகிறது. இருப்பினும்கூட, அடுத்த கட்டத்திற்கு இன்னும் அதிகக் கவனம் தேவைப்படும். ஏனெனில், நமக்கு முன்னால் உள்ள சவால் இனி கொள்கை உருவாக்கம் அல்ல, கொள்கைகள் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதே ஆகும்


இறுதி கட்டம்


திட்டங்கள் பெரிய அளவில் இருந்தாலும், அதற்கான விழிப்புணர்வு குறைந்தளவே நீடிக்கின்றன. பலருக்கு இந்தத் திட்டங்களைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. மேலும், பிராந்தியங்கள் முழுவதும் இந்த திட்டத்திற்கான சேர்க்கையும் சீரற்றதாகவே உள்ளது. மேலும் இறுதிகட்ட செயல்பாடு உள்ளூர் திறனைச் சார்ந்தே தொடர்கிறது. வாய்ப்பைப் பெற்ற ஒவ்வொரு பெண்ணுக்கும், அணுகல் இல்லாததால் பெண்களில் பலர் விளிம்புநிலையில் உள்ளனர். இங்குதான் வலுவான நிர்வாகத் தலைமை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.


இந்தியா திட்டங்களை அறிவிப்பதிலிருந்து முழுமையடைவதை உறுதி செய்வதற்கும், வெளியீடுகளை அளவிடுவதிலிருந்து விளைவுகளைக் கண்காணிப்பதற்கும், காகிதத்தில் உள்ள தகுதியிலிருந்து நடைமுறையில் உண்மையான அணுகலைப் பெறுவதற்கும் மாற வேண்டும். மாவட்ட அளவிலான உரிமை, தரவு சார்ந்த கண்காணிப்பு மற்றும் துறைகள் முழுவதும் ஒருங்கிணைப்பு ஆகியவை முக்கியமானதாக இருக்கும். மேலும், தொழில்நுட்பம் இதை விரைவுபடுத்த முடியும் என்றாலும், அது களத்தில் உள்ள பொறுப்புணர்வுக்கு மாற்றாக அமையாது. எனவே, ஒவ்வொரு கொள்கை வகுப்பாளருக்குமான கேள்வி எளிமையானது. இவை தகுதியுள்ள எந்தப் பெண்ணும் விடுபடாமல் இருப்பதை நாம் எப்படி உறுதி செய்வது?


இங்குதான் நாரி சக்தி வந்தன் அதினியம் (Nari Shakti Vandan Adhiniyam) நமது காலத்தின் மிக முக்கியமான சீர்திருத்தங்களில் ஒன்றாக மாறக்கூடும். சட்டமன்ற அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்துவதன் மூலம், கொள்கை வடிவமைப்பை வாழ்க்கை அனுபவத்துடன் சீரமைப்பதற்கான வாய்ப்பை இது உருவாக்குகிறது. பெண் தலைவர்கள், சமூக யதார்த்தங்களால் வடிவமைக்கப்பட்ட தங்கள் நுண்ணறிவுகளைக் கொண்டு, திட்டங்களையும், அவற்றின் செயலாக்கம், இலக்கு நிர்ணயம் மற்றும் ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றையும் வலுப்படுத்த முடியும்.


கூடுதலாக, நாரி சக்தி வந்தன் அதினியம் (Nari Shakti Vandan Adhiniyam) திட்டத்தை நோக்கத்துடன் செயல்படுத்தப்படும்போது, தலைமைப் பதவிகளில் அதிக பெண்கள், அதிகளவில் பதிலளிக்கக்கூடிய கொள்கைகள், அதிக பங்கேற்பு மற்றும் வலுவான தலைமைத்துவ வரிசைகள் ஆகியவற்றுடன் ஒரு அதிகப்படியான விளைவைத் தூண்ட முடியும். இது சீர்திருத்தத்தை தன்னைத்தானே வலுப்படுத்திக்கொள்ளும் ஒன்றாக மாற்றும்.


உலகளவில், அறிவு, புதுமை மற்றும் தொழில்நுட்பத்தால் வரையறுக்கப்பட்ட ஒரு பத்தாண்டில் நாம் நுழைகிறோம். உலக அளவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (Science, technology, engineering, and mathematics (STEM)) கல்வியில் அதிக விகிதத்தில் பெண்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதால், இந்தியா ஏற்கனவே ஒரு வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது. இந்த முன்னேற்றத்தை, காலம் தாழ்த்தாமல் சுகாதாரம், அறிவியல், தொழில் மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் தலைமைத்துவமாக மாற்றுவதற்கு இது ஒரு உகந்த தருணமாகும்.


நல்ல கொள்கை வடிவமைப்புடன் அரசியல் உறுதிப்பாடு இணையும்போது என்ன சாதிக்க முடியும் என்பதை கடந்த பத்தாண்டுகள் காட்டியுள்ளன. இன்று, இந்தியா ஒரு வலுவான அடித்தளத்துடன், நாரி சக்தி வந்தன் அதினியம் (Nari Shakti Vandan Adhiniyam) திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், அதிகாரமளித்தலை அணுகல் என்ற நிலையையும் கடந்து, அது நிர்வாகம் என்ற நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்.


முன்னோக்கிய பாதை


பிரதிநிதித்துவம் மட்டும் போதாது, அது உண்மையான திறனுக்கு வழிவகுக்க வேண்டும். இந்தத் திறன், வலுவான நிறுவன ஆதரவின் மூலம் வளர்க்கப்பட வேண்டும். அப்போதுதான், இத்திட்டத்தைச் செயல்படுத்துவது உண்மையான பலன்களைத் தரும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா பெண்களைத் தேர்தல்ரீதியாக மட்டுமல்லாமல், நிறுவன ரீதியாகவும் தலைமை தாங்குவதற்குத் தயார்படுத்துவதில் முதலீடு செய்ய வேண்டும். இதன் பொருள், கட்டமைக்கப்பட்ட வழிகாட்டுதல், கொள்கை வெளிப்பாடு மற்றும் திறமையான நிர்வாகத்தை செயல்படுத்தும் நிர்வாக ஆதரவு அமைப்புகள் தேவை.


நாடு கொள்கைகளை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதை மறுபரிசீலனை செய்வதையும் இது குறிக்கிறது. திட்டங்களை அணுகுவது எளிதாகவும், அவற்றை விரைவாகச் செயல்படுத்தவும் வேண்டும். தேவைக்கேற்ப கொள்கைகள் உருவாகும் வகையில் கருத்துப் பின்னூட்ட அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும். மேலும், எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என்பதை மட்டும் கொண்டு வெற்றியை அளவிடப்படாமல், பல்வேறு துறைகளில் ஏற்படும் உண்மையான விளைவு மாற்றங்களைக் கொண்டும் அதை அளவிட வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த நாடாக மாறும் தனது தொலைநோக்குப் பார்வையை நோக்கி இந்தியா நகரும்போது, இந்தப் பயணத்தில், இந்தப் பிரச்சினை இரண்டாம் பட்சமானதல்ல. இது வெற்றிக்கு மிகவும் முக்கியமானதும் மையமானதுமாகும். பெண்களின் பங்களிப்பு பொருளாதார வளர்ச்சி, சமூக நிலைத்தன்மை மற்றும் நிறுவன செயல்திறன் ஆகியவற்றுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.


இந்தியா அனைவருக்கும் முழுமையான அணுகலை உறுதிசெய்து, பங்களிப்பை வலுப்படுத்தி, தலைமைத்துவத்தை செயல்படுத்த முடிந்தால், அது தனது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்லாமல், அதன் வளர்ச்சிப் பாதையையும் மறுவரையறை செய்யும். கொள்கை வகுப்பாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அறிக்கை தெளிவாக உள்ளது. செயல்படுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் இதுவே சரியான நேரம்.


சங்கீதா ரெட்டி, அப்பல்லோ மருத்துவமனைகளின் இணை நிர்வாக இயக்குநர் ஆவார்.

Original article :  Nari Shakti, India’s defining reform for the next decade -Sangita Reddy

Share: