Showing posts with label yojana. Show all posts
Showing posts with label yojana. Show all posts

நாரி சக்தி : அடுத்த பத்தாண்டுகளுக்கான இந்தியாவின் முக்கியச் சீர்திருத்தம் -சங்கீதா ரெட்டி

அடுத்த ஐந்து ஆண்டுகளில், பெண்கள் தேர்தல்ரீதியாக மட்டுமல்லாமல், நிறுவனரீதியாகவும் தலைமை தாங்குவதற்கு அவர்களைத் தயார்படுத்துவதில் இந்தியா முதலீடு செய்யவேண்டும்.


கடந்த பத்தாண்டுகளில், மிகச் சில நாடுகள் மட்டுமே பெரிய அளவில் சாதித்த ஒன்றை இந்தியா செய்துள்ளது. அது பெண்களின் அதிகாரமளித்தலை வெறும் ஒரு கருத்தாக்க நிலையிலிருந்து, ஒரு வலுவான உள்கட்டமைப்பு நிலைக்கு அமைப்புரீதியாக நகர்த்தியுள்ளது. இந்த மாற்றம் இயல்பாக நிகழ்ந்துவிடவில்லை. இது மிகக் கவனமாகத் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், முன்னேற்றம் அடையும்போது, ஒட்டுமொத்தப் பொருளாதாரங்களும் வேகமெடுக்கும் என்பதை உணர்ந்து, கொள்கைகள் பெண்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.


அதன் விளைவுகள் தெளிவாகவும், அளவிடக்கூடியதாகவும் உள்ளன. பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana) திட்டத்தின்கீழ் 57 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் 55%-க்கும் அதிகமானவை பெண்களின் வசம் உள்ளன. இது லட்சக்கணக்கான பெண்களுக்கு முறையான நிதி அமைப்பில் முதல் அடியை எடுத்துவைக்க உதவியுள்ளது. ஏறக்குறைய 10 கோடி பெண்கள், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களாக (self-help groups) ஒருங்கிணைந்து, தற்போது அடித்தளத்தில் தொழில்முனைவு மற்றும் உள்ளூர் பொருளாதார மீள்திறனை முன்னெடுத்துச் செல்கின்றனர். பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana) 10.5 கோடிக்கும் அதிகமான குடும்பங்களைச் சென்றடைந்து, சுகாதார பாதிப்புகளைக் குறைத்து, அதிக நேரம் எடுக்கும் வேலையிலிருந்து பெண்களை இந்த திட்டம் விடுவித்துள்ளது. மேலும், கடன் பெறுவதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது. பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட கடன்களில் ஏறக்குறைய 70% பெண் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளன. நீண்டகாலமாக இருந்துவந்த வீழ்ச்சியை மாற்றியமைத்து, பெண் தொழிலாளர்களின் பங்களிப்பும் கிட்டத்தட்ட 37% ஆக உயர்ந்துள்ளது.


சுகாதாரத் துறையில், தூய்மை இந்தியா (Ayushman Bharat) மற்றும் பிரதமரின் பாதுகாப்பான தாய்மை இயக்கம் (Pradhan Mantri Surakshit Matritva Abhiyan) போன்ற திட்டங்கள், வாழ்க்கையின் முக்கிய காலகட்டங்களில் அணுகலை விரிவுபடுத்தி, பாதிப்புக்குள்ளாகும் தன்மையைக் குறைத்துள்ளன. பெண்குழந்தைகளை பாதுகாப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் (Beti Bachao Beti Padhao) திட்டம் போன்ற முன்னெடுப்புகள், சமூகத்தில் வலுவாக வேரூன்றிய மனப்பான்மைகளை மாற்றத் தொடங்கியுள்ளன.


தனித்தனியாகப் பார்க்கும்போது, இவை வலுவான திட்டங்கள் ஆகும். ஆனால், இவை அனைத்தும் ஒன்றாகச் சேரும்போது, பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் ஆதரவைப் பெறுபவர்களாக அல்லாமல், அவர்களுக்கான வளர்ச்சியை மேம்படுத்துபவர்களாக இந்தியாவின் பார்வையில் ஒரு கட்டமைப்பான மாற்றத்தைக் குறிக்கின்றன. கொள்கை வகுப்பாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இது ஒரு தெளிவான பாடத்தை வழங்குகிறது. இது வடிவமைப்பு, செயல்பாடு மற்றும் பொறுப்புணர்வு ஆகியவை சீரமைக்கப்படும்போது, பெரிய அளவிலான திட்டங்கள் வெற்றிபெறுகின்றன.


ஆசிரியரின் நிபுணத்துவத் துறையான சுகாதாரத் துறையில், கோட்பாட்டு மாதிரிகளைச் சார்ந்து இல்லாமல், உண்மையான தேவைகளை மையமாகக் கொண்டு அமைப்புகள் கட்டமைக்கப்படும்போது விளைவுகள் மேம்படுகின்றன. இந்த திட்டத்திற்கான அணுகல் எளிமையாக்கப்பட்டு, செயல்பாடு சீராக இருந்து, விளைவுகள் கண்காணிக்கப்படும்போது, உண்மையான தாக்கம் ஏற்படுகிறது. இருப்பினும்கூட, அடுத்த கட்டத்திற்கு இன்னும் அதிகக் கவனம் தேவைப்படும். ஏனெனில், நமக்கு முன்னால் உள்ள சவால் இனி கொள்கை உருவாக்கம் அல்ல, கொள்கைகள் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதே ஆகும்


இறுதி கட்டம்


திட்டங்கள் பெரிய அளவில் இருந்தாலும், அதற்கான விழிப்புணர்வு குறைந்தளவே நீடிக்கின்றன. பலருக்கு இந்தத் திட்டங்களைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. மேலும், பிராந்தியங்கள் முழுவதும் இந்த திட்டத்திற்கான சேர்க்கையும் சீரற்றதாகவே உள்ளது. மேலும் இறுதிகட்ட செயல்பாடு உள்ளூர் திறனைச் சார்ந்தே தொடர்கிறது. வாய்ப்பைப் பெற்ற ஒவ்வொரு பெண்ணுக்கும், அணுகல் இல்லாததால் பெண்களில் பலர் விளிம்புநிலையில் உள்ளனர். இங்குதான் வலுவான நிர்வாகத் தலைமை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.


இந்தியா திட்டங்களை அறிவிப்பதிலிருந்து முழுமையடைவதை உறுதி செய்வதற்கும், வெளியீடுகளை அளவிடுவதிலிருந்து விளைவுகளைக் கண்காணிப்பதற்கும், காகிதத்தில் உள்ள தகுதியிலிருந்து நடைமுறையில் உண்மையான அணுகலைப் பெறுவதற்கும் மாற வேண்டும். மாவட்ட அளவிலான உரிமை, தரவு சார்ந்த கண்காணிப்பு மற்றும் துறைகள் முழுவதும் ஒருங்கிணைப்பு ஆகியவை முக்கியமானதாக இருக்கும். மேலும், தொழில்நுட்பம் இதை விரைவுபடுத்த முடியும் என்றாலும், அது களத்தில் உள்ள பொறுப்புணர்வுக்கு மாற்றாக அமையாது. எனவே, ஒவ்வொரு கொள்கை வகுப்பாளருக்குமான கேள்வி எளிமையானது. இவை தகுதியுள்ள எந்தப் பெண்ணும் விடுபடாமல் இருப்பதை நாம் எப்படி உறுதி செய்வது?


இங்குதான் நாரி சக்தி வந்தன் அதினியம் (Nari Shakti Vandan Adhiniyam) நமது காலத்தின் மிக முக்கியமான சீர்திருத்தங்களில் ஒன்றாக மாறக்கூடும். சட்டமன்ற அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்துவதன் மூலம், கொள்கை வடிவமைப்பை வாழ்க்கை அனுபவத்துடன் சீரமைப்பதற்கான வாய்ப்பை இது உருவாக்குகிறது. பெண் தலைவர்கள், சமூக யதார்த்தங்களால் வடிவமைக்கப்பட்ட தங்கள் நுண்ணறிவுகளைக் கொண்டு, திட்டங்களையும், அவற்றின் செயலாக்கம், இலக்கு நிர்ணயம் மற்றும் ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றையும் வலுப்படுத்த முடியும்.


கூடுதலாக, நாரி சக்தி வந்தன் அதினியம் (Nari Shakti Vandan Adhiniyam) திட்டத்தை நோக்கத்துடன் செயல்படுத்தப்படும்போது, தலைமைப் பதவிகளில் அதிக பெண்கள், அதிகளவில் பதிலளிக்கக்கூடிய கொள்கைகள், அதிக பங்கேற்பு மற்றும் வலுவான தலைமைத்துவ வரிசைகள் ஆகியவற்றுடன் ஒரு அதிகப்படியான விளைவைத் தூண்ட முடியும். இது சீர்திருத்தத்தை தன்னைத்தானே வலுப்படுத்திக்கொள்ளும் ஒன்றாக மாற்றும்.


உலகளவில், அறிவு, புதுமை மற்றும் தொழில்நுட்பத்தால் வரையறுக்கப்பட்ட ஒரு பத்தாண்டில் நாம் நுழைகிறோம். உலக அளவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (Science, technology, engineering, and mathematics (STEM)) கல்வியில் அதிக விகிதத்தில் பெண்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதால், இந்தியா ஏற்கனவே ஒரு வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது. இந்த முன்னேற்றத்தை, காலம் தாழ்த்தாமல் சுகாதாரம், அறிவியல், தொழில் மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் தலைமைத்துவமாக மாற்றுவதற்கு இது ஒரு உகந்த தருணமாகும்.


நல்ல கொள்கை வடிவமைப்புடன் அரசியல் உறுதிப்பாடு இணையும்போது என்ன சாதிக்க முடியும் என்பதை கடந்த பத்தாண்டுகள் காட்டியுள்ளன. இன்று, இந்தியா ஒரு வலுவான அடித்தளத்துடன், நாரி சக்தி வந்தன் அதினியம் (Nari Shakti Vandan Adhiniyam) திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், அதிகாரமளித்தலை அணுகல் என்ற நிலையையும் கடந்து, அது நிர்வாகம் என்ற நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்.


முன்னோக்கிய பாதை


பிரதிநிதித்துவம் மட்டும் போதாது, அது உண்மையான திறனுக்கு வழிவகுக்க வேண்டும். இந்தத் திறன், வலுவான நிறுவன ஆதரவின் மூலம் வளர்க்கப்பட வேண்டும். அப்போதுதான், இத்திட்டத்தைச் செயல்படுத்துவது உண்மையான பலன்களைத் தரும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா பெண்களைத் தேர்தல்ரீதியாக மட்டுமல்லாமல், நிறுவன ரீதியாகவும் தலைமை தாங்குவதற்குத் தயார்படுத்துவதில் முதலீடு செய்ய வேண்டும். இதன் பொருள், கட்டமைக்கப்பட்ட வழிகாட்டுதல், கொள்கை வெளிப்பாடு மற்றும் திறமையான நிர்வாகத்தை செயல்படுத்தும் நிர்வாக ஆதரவு அமைப்புகள் தேவை.


நாடு கொள்கைகளை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதை மறுபரிசீலனை செய்வதையும் இது குறிக்கிறது. திட்டங்களை அணுகுவது எளிதாகவும், அவற்றை விரைவாகச் செயல்படுத்தவும் வேண்டும். தேவைக்கேற்ப கொள்கைகள் உருவாகும் வகையில் கருத்துப் பின்னூட்ட அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும். மேலும், எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என்பதை மட்டும் கொண்டு வெற்றியை அளவிடப்படாமல், பல்வேறு துறைகளில் ஏற்படும் உண்மையான விளைவு மாற்றங்களைக் கொண்டும் அதை அளவிட வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த நாடாக மாறும் தனது தொலைநோக்குப் பார்வையை நோக்கி இந்தியா நகரும்போது, இந்தப் பயணத்தில், இந்தப் பிரச்சினை இரண்டாம் பட்சமானதல்ல. இது வெற்றிக்கு மிகவும் முக்கியமானதும் மையமானதுமாகும். பெண்களின் பங்களிப்பு பொருளாதார வளர்ச்சி, சமூக நிலைத்தன்மை மற்றும் நிறுவன செயல்திறன் ஆகியவற்றுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.


இந்தியா அனைவருக்கும் முழுமையான அணுகலை உறுதிசெய்து, பங்களிப்பை வலுப்படுத்தி, தலைமைத்துவத்தை செயல்படுத்த முடிந்தால், அது தனது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்லாமல், அதன் வளர்ச்சிப் பாதையையும் மறுவரையறை செய்யும். கொள்கை வகுப்பாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அறிக்கை தெளிவாக உள்ளது. செயல்படுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் இதுவே சரியான நேரம்.


சங்கீதா ரெட்டி, அப்பல்லோ மருத்துவமனைகளின் இணை நிர்வாக இயக்குநர் ஆவார்.

Original article :  Nari Shakti, India’s defining reform for the next decade -Sangita Reddy

Share:

ஏழைகளுக்கு ஆதரவான மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் தங்கள் வெளிச்சத்தை இழந்து வருகின்றன. -இந்திரனில் டி

 பல முக்கிய திட்டங்களுக்கு செலவிடப்பட்ட பணம் நிதிநிலை அறிக்கை ஒதுக்கீட்டை விட குறைவாக உள்ளது. இந்தப் பற்றாக்குறை பொருளாதார வளர்ச்சி மற்றும் பொது நலன் இரண்டையும் பாதிக்கும்.


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தனியார் நுகர்வு மற்றும் முதலீட்டால் இயக்கப்படுகிறது. இருப்பினும், தேவைப்படும்போது பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கு அரசாங்க செலவினம் அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளது.


விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் அரசாங்க செலவினம் முக்கிய பங்கு வகிக்கிறது. காலநிலை காரணிகளுடன், தொழில்நுட்ப இடைவெளிகள் மற்றும் கட்டமைப்பு சிக்கல்களுடனும் போராடுகின்றன.


பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா (Pradhan Mantri Krishi Sinchai Yojana (PMKSY)) மற்றும் அதன் நீர்நிலை மேம்பாட்டு கூறு ஆகிய இரண்டு முக்கிய மத்திய திட்டங்களுக்கான செலவு 2025–26 ஆம் ஆண்டில் நிதிநிலை அறிக்கை ஒதுக்கீட்டைவிட கணிசமான அளவில் செலவு 22.86 சதவீதமாக குறைவாக இருந்தது. மேலும், நீர்நிலை மேம்பாட்டு கூறுக்கு இது 40.12 சதவீதம் குறைவாக இருந்தது.


மேலும், 2025-26 உடன் ஒப்பிடும்போது 2026-27-ஆம் ஆண்டில் நிதிநிலை அறிக்கையில்ல் ஒதுக்கப்பட்ட தொகை 20.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.


வேளாண் உற்பத்தித்திறன் குறைவதற்கு ஒரு முக்கிய காரணம் யூரியாவின் அதிகப்படியான பயன்பாடு ஆகும். நைட்ரஜன் (N):பாஸ்பரஸ் (P):பொட்டாசியம் (K) ஆகியவற்றிற்கான வேளாண் அளவுகோல் 4:2:1 ஆகும். இருப்பினும், இந்த சமநிலை காலப்போக்கில் இது 2009-10-ல் 4:3.2:1 ஆக இருந்து 2023-24-ல் 9:4.1:1 ஆக மோசமடைந்துள்ளது. இது அடுத்த நிதியாண்டில் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட யூரியா மானியத்தை 1.76 சதவீதம் குறைக்க அரசாங்கத்தைத் தூண்டியிருக்கலாம்.


அதேநேரத்தில், தற்போதைய நிதியாண்டில் மானியத்தில் 6.37 சதவீதம் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும் ஏழைகளுக்கும் பரந்த தாக்கங்களை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு (நீர்ப்பாசனம் மற்றும் நீர்நிலைகள்) குறைவாக செலவிடப்பட்டதால் இது கவலை அளிக்கிறது. இதற்கு நேர்மாறாக, மானியத் திட்டங்களுக்கு அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. இந்த மானியங்கள் பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகளைவிட பெரிய விவசாயிகளுக்கு பயனளிப்பதாக விமர்சிக்கப்படுகின்றன.


இதேபோல், வருமான ஆதரவுத் திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி, முழு நிதிநிலை அறிக்கை தொகையையும் செலவிடுவதன் மூலம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படுவது இந்த முழுமையான பயன்பாட்டை அடைய உதவியிருக்கலாம். இருப்பினும், அத்தகைய பணப் பரிமாற்றம் மற்றும் மானியத் திட்டங்களின் வெற்றி நீர்ப்பாசனத் திட்டங்களின் மோசமான செயல்திறனை ஈடுசெய்யாது. பணப் பரிமாற்றங்கள் அல்லது மானியங்களை சீராக செயல்படுத்துவதற்கும் பொது சொத்து உருவாக்கும் திட்டங்களின் பலவீனமான செயல்திறனுக்கும் இடையிலான வேறுபாடு செயல்படுத்தலில் திறமையின்மையைக் குறிக்கிறது.


மத்திய அரசு அழுத்தம்


மாநில அரசுகளால் பொருத்தமான மானியங்களை வழங்க முடியாவிட்டால், மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கி நிதிக் கட்டமைப்பை மாற்ற வேண்டும். நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகையைவிட குறைவாகச் செலவிடுவதும் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை இலக்குகளை அடைய உதவியது.


சுய உதவிக் குழு (SHG)-வங்கி கடன் இணைப்புக்கு (bank credit linkage) நிதியளித்து வாழ்வாதார நடவடிக்கைகளை உருவாக்கும் திட்டமான தீனதயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தில் (National Rural Livelihood Mission (DAY-NRLM)) 15.81 சதவீதம் குறைவாக செலவிடப்பட்டுள்ளது. இத்தகைய குறைவாக செலவிடுவது கிராமப்புற ஏழைகளின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனை நேரடியாக பாதிக்கிறது. இது பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான நிதி அணுகலைக் கட்டுப்படுத்துகிறது. சுய உதவிக் குழுக்களிலிருந்து தொழில்முனைவோராக மாறுவதை ஊக்குவிக்கும் வகையில், 2026-27 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட SHE-Marts முன்முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால், மிகவும் அடிப்படையான திட்டமான தீனதயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம் (DAY-NRLM), குறைவான செயல்திறன் கொண்டதாகத் தெரிகிறது.


கிராமப்புற ஏழைகளிடையே கடன் தேவை குறைவாக இருப்பது இந்த நிலைமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இது ஒரு சாத்தியமான தேவைக் கட்டுப்பாட்டைக் குறிக்கிறது. இந்த நிதியாண்டில், வேளாண் அல்லாத துறையில் நுண் நிறுவனங்களை அமைப்பதற்கான வங்கி நிதியுதவி மானியத்தை ஆதரிப்பதற்காக தொடங்கப்பட்ட பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 13.71 சதவீதம் குறைவாக செலவிடப்பட்டுள்ளது.


கல்வி மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் திட்டங்களில் மிகப்பெரிய அளவில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. நிதியாண்டு 26-ல் பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மானில் (Pradhan Mantri Poshan Shakti Nirman) 15.20 சதவீதம் குறைவாக செலவிடப்பட்டுள்ளது.


இந்தத் திட்டத்திற்கு 2026-27 நிதிநிலை அறிக்கையில் ஒரு சிறிய அதிகரிப்பு மட்டுமே உள்ளது. இது பணவீக்கத்தின் விளைவுகளிலிருந்து இந்தத் திட்டத்தைப் பாதுகாக்கவில்லை.


புதிய எய்ம்ஸ் நிறுவனங்களை (AIIMS institutions) நிறுவுவதற்கும், தற்போதுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளை நவீனமயமாக்குவதற்கும், இதனால் சுகாதார சேவைகளில் பிராந்திய ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கும் 2006-ல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனாவில் (Pradhan Mantri Swasthya Suraksha Yojana) நிதிநிலை அறிக்கை ஒதுக்கீட்டைக் குறைப்பதை நியாயப்படுத்துவதும் கடினம்.


எந்தவொரு உயர் மதிப்புள்ள திட்டத்தையும் போலவே சமூக உள்கட்டமைப்பு முக்கியமானது. ஜல் ஜீவன் மிஷனில் (தேசிய கிராமப்புற குடிநீர் திட்டம்-National Rural Drinking Water Mission) குறைவாக செலவிடப்பட்டது தற்போதைய நிதியாண்டில் 74.63 சதவீதம் ஆகும்.


நடப்பு நிதியாண்டில் தூய்மை இந்தியா திட்டத்தில் (Swachh Bharat Mission) கிராமப்புறங்களில் 16.57 சதவீதமும், நகர்ப்புறங்களில் 60 சதவீதமும் குறைவாக செலவிட்டுள்ளது. பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனாவில் 42.11 சதவீத குறைவாக செலவிடப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டில் எந்த அதிகரிப்பும் இல்லை. இது நிதியாண்டில் ஒரு உண்மையான கால குறைப்பைக் குறிக்கிறது.


மாநிலங்களால் பொருத்தமான மானியங்களை வழங்க முடியவில்லை என்றும், இதுவே மோசமான செயல்பாட்டிற்குக் காரணம் என்றும் சிலர் வாதிடுகின்றனர்.  அப்படியானால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) மற்றும் துடிப்பான கிராமங்கள் திட்டம் - கிராம கௌரவத் திட்டம் (Vibrant Villages Programme - Gram Gaurav) போன்ற பொது வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கான நிதிநிலை அறிக்கை ஒதுக்கீட்டில் 46.15 சதவீத அதிகரிப்பு அர்த்தமற்றதாகிவிடும். ஏனென்றால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தில் (MGNREGA) 25 சதவீதத்திலிருந்து MGNREGA-க்கு மாற்றாக வரும் ‘வளர்ச்சியடைந்த இந்தியா - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத திட்டம் - கிராமப்புறத்தில் (VB-G RAM G) மாநிலங்களின் பங்கு 40 சதவீதமாக அதிகரித்துள்ளது.


வேலையின்மை அதிகரிப்பு பொருளாதாரத்தில் தேவையைக் குறைக்கும். இது பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கும். மோசமான செயல்திறன் பலவீனமான நிர்வாகத்தால் ஏற்பட்டால், அரசாங்கத்தின் நோக்கம் நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த சீர்திருத்தங்கள் கவனம் செலுத்தப்பட்டு காலக்கெடுவுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். நிதிப் பற்றாக்குறை பிரச்சினை என்றால், மத்திய அரசு வருவாய் வசூலை அதிகரிக்க வேண்டும். அதிக வளங்களை திரட்ட வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த சூழ்நிலையில், செல்வ வரியை அறிமுகப்படுத்த இந்த நேரம் பொருத்தமானது. இது மிகவும் நெறிமுறையான மற்றும் நியாயமான சமூகத்தை உருவாக்க உதவும்.


எழுத்தாளர் ஒரு பேராசிரியர் மற்றும் IRMA "திரிபுவன்" சஹ்காரி பல்கலைக்கழகத்தில் ஆக்சிஸ் வங்கியின் தலைவராக உள்ளார்.          

Original article : Pro-poor, capacity building schemes losing sheen. -Indranil De

Share:

பணம் மற்றும் பொருள் வழங்கும் திட்டங்கள் நலத்திட்ட-முதலீட்டு முரண்பாட்டை (welfare-investment dilemma) உருவாக்குகின்றனவா? -புஷ்பேந்திர சிங் மற்றும் அர்ச்சனா சிங்

 பெண்களை மையமாகக் கொண்ட பணப் பரிமாற்றங்களின் அதிகரிப்பு ஒரே நேரத்தில் இரண்டு உண்மைகளை வெளிப்படுத்துகிறது. பெண்கள் இறுதியாக நலத்திட்ட கொள்கையின் முக்கிய அங்கமாக இருந்து வருகின்றனர். மேலும், நிதி நெருக்கடியில் இருக்கும்போதுகூட மாநிலங்கள் அவற்றை தருவதாக உறுதியளிக்கின்றன. இருப்பினும், அத்தகைய உறுதிமொழிகள் விரிவடையும் போது, ​​ஒரு கேள்வி எழுகிறது. எதிர்கால முதலீடுகளுக்குத் தேவையான நிதியைப் பயன்படுத்தாமல் நலத்திட்டங்கள் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்கமுடியுமா?


மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில், ஆளும் கட்சியின் மூன்று கூட்டணிக் கட்சிகளான பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை அரசாங்கத்தின் பிரபலமான முதன்மைத் திட்டமான முதலமைச்சரின் மஜ்ஹி லட்கி பஹின் யோஜனாவுக்குப் (Mukhyamantri Majhi Ladki Bahin Yojana) பெருமை தேடி கொள்கின்றனர்.


பெண் வாக்காளர்கள் ஏறக்குறைய 50 சதவீத வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு மாநிலத்தில், அவர்களைக் கவரும் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக பயனுள்ளதாக இருக்கிறது. இந்த முறை ஒரு பெரிய நடைமுறைப் போக்கின் ஒரு பகுதியாகும், இது சமீபத்தில் பீகாரில் காணப்பட்டது. அங்கு முதல்வர் நிதிஷ் குமார் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சரின் மகிளா ரோஜ்கர் யோஜனா (Mukhyamantri Mahila Rojgar Yojana (MMRY)) திட்டத்தை அறிவித்தார்.


பெண்களை மையமாகக் கொண்ட பணப் பரிமாற்றங்களின் அதிகரிப்பு இரண்டு உண்மைகளை வெளிக்காட்டுகிறது: பெண்கள் நலக் கொள்கைகளின் முக்கிய நபர்களாக மாறிவிட்டனர். மேலும் நிதி நெருக்கடியில் இருந்தாலும் மாநிலங்கள் தேவையான நிதியை அளிப்பதாக உறுதியளிக்கின்றன. அதே நேரத்தில், இத்தகைய நலத்திட்டங்கள், குறிப்பாக விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு நேரடி பரிமாற்றங்கள், பெரும்பாலும் நிதி சார்ந்த சிக்கலைக் குறைத்து, நீண்டகால வளர்ச்சியில் முதலீடு செய்யும் திறனை நீட்டிக்கின்றன.


இந்த உறுதிமொழிகள் விரிவடையும்போது, ​​ஒரு கேள்வி எழுகிறது: நாளைய முதலீடுகளுக்குத் தேவையான நிதி இடத்தைக் கட்டுப்படுத்தாமல் நலத்திட்டங்கள் தொடர்ந்து வளர முடியுமா? ஆராய்வோம்.


இந்தியா எவ்வாறு ஒரு கலப்பின நலத்திட்ட அரசை உருவாக்கியது


கடந்த பத்தாண்டுகளில், நியாய விலைக் கடைகள் மற்றும் பொதுப்பணிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு நலத்திட்ட அமைப்பிலிருந்து, டிஜிட்டல் பரிமாற்றங்கள் மற்றும் பெண்களை மையமாகக் கொண்ட வருமான ஆதரவு மூலம் வரையறுக்கப்பட்ட ஒரு அமைப்பிற்கு இந்தியா நகர்ந்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு, பல மாநிலங்கள் முன்பைவிட மிகப் பெரிய அளவில் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தை அனுப்பத் தொடங்கியபோது, ​​இந்த மாற்றம் மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறியது.


இதனால், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் நலத்திட்ட அமைப்பு நீண்ட தூரம் வந்துவிட்டது. அப்போது, ​​அரசாங்கம் பட்டினியை (hunger) எதிர்த்துப் போராடுவதிலும் அடிப்படை பொருளாதார பாதுகாப்பை (economic security) வழங்குவதிலும் கவனம் செலுத்தியது. அரசியலமைப்பின் வழிகாட்டுதல் கோட்பாடுகள் (Directive Principles) - சமத்துவமின்மையைக் குறைத்தல் பிரிவு 38 மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் பிரிவு 41 - உணவு விநியோகம், பொதுப்பணிகள் மற்றும் மானிய விலையில் வழங்கப்படும் சேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நலத்திட்ட மாதிரியை வடிவமைத்தன. பற்றாக்குறை மற்றும் பலவீனமான சந்தைகளை எதிர்கொள்ளும் ஒரு நாட்டில், பொது விநியோக முறை (Public Distribution System (PDS)), நில சீர்திருத்தங்கள் மற்றும் ஆரம்பகால வேலைவாய்ப்பு திட்டங்கள் முக்கியக் கருவிகளாக மாறின.


காலப்போக்கில், பொதுநலத் திட்டங்கள் இரண்டு முக்கிய வழிகளில் வளர்ந்தது. முதலில், அத்தியாவசியப் பொருட்களைப் பொருள் பரிமாற்றங்கள் வழங்கின: அவை பொது விநியோக முறை மூலம் மானிய விலையில் தானியங்கள், பிரதம மந்திரி போஷன் சக்தி நிர்மான் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM-POSHAN)) திட்டத்தின் கீழ் சமைத்த உணவு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana (PMAY)) மூலம் வீட்டுவசதி மற்றும் பிரதம மந்திரி போஷன் சக்தி நிர்மான் திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து கருவிகள் ஆகும். வீட்டு வருமானம் குறைந்தபோது, ​​இந்தத் திட்டங்கள் குடும்பங்களுக்கு அடிப்படை ஆதரவை வழங்கின.


பின்னர் பணப் பரிமாற்றங்கள் வந்தன. ஆதார், ஜன்-தன் மற்றும் நேரடி பணப் பரிமாற்றத்தால் சாத்தியமானது. இந்தத் திட்டங்கள் மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தை அனுப்புகின்றன, அவர்கள் தேவைக்கேற்ப

அதைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன. உதாரணமாக, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN)) விவசாயிகளுக்கு வருமான ஆதரவை வழங்குகிறது; முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியங்கள் நேரடி வங்கி பரிமாற்றம் (Direct Benefit Transfer) மூலமாக  வழங்கப்படுகின்றன.


இந்த இரண்டு வடிவங்களும் – நிதி மற்றும் பொருள் உதவி – சேர்ந்து ஒரு கலப்பு நல அரசை (Hybrid Welfare State) உருவாக்கியுள்ளன. இது நேரடியாக ஒவ்வொரு குடும்பத்தோடும் இணைக்கப்பட்டுள்ளது. சில நிதி மற்றும் பொருள் சார்ந்த திட்டங்களை ஆராய்வோம்.


ஒதுக்கீடு, விநியோகம், நிலைப்படுத்தல்


ஒவ்வொரு நலத்திட்ட அமைப்பின் மையக் கருத்தும் எளிமையானது: அனைவரும் கண்ணியத்துடன் வாழ சமூகம் அதன் வளங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பொருளாதார நிபுணர் Richard A Musgrave’s-ன் பொது நிதிக் கோட்பாடு, அவரது “Theory of Public Finance” (1959) என்ற புத்தகத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இது அரசின் மூன்று அடிப்படைக் கடமைகள் மூலம் இதை விளக்குகிறது: அவை,



ஒதுக்கீடு (Allocation) – அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல்.


விநியோகம் (Distribution) – உதவி தேவைப்படுபவர்களுக்கு தேவையான ஆதரவு அளித்தல்.


நிலைப்படுத்துதல் (Stabilisation) – கடினமான காலங்களில் வாழ்க்கையை நிலையாக வைத்திருத்தல் போன்றவையாகும்.


இந்தக் கடமைகள் இந்தியாவின் பொதுநலத் திட்டங்களில் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன, அவை:


பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana (PMGKAY))

கொரோனா தொற்றுக் காலத்தில் இந்தத்திட்டம் தொடங்கப்பட்டது. மிகக் கடினமான காலத்திலும் ஏழை எளிய மக்களுக்கு உணவு கிடைக்கச் செய்யும் நோக்கத்தில் செயல்படுத்தப்படுகிறது.


பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மாண் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM POSHAN))


2021-ல் மதிய உணவுத் திட்டமாகத் தொடங்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பால்வகுப்பு (pre-primary) முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சமைத்த மதிய உணவு வழங்குகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.


சக்ஷம் ஆங்கன்வாடி மற்றும் போஷன் (Saksham Anganwadi and POSHAN) 2.0

குழந்தைகள், பருவ வயது பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டக்குறைபாட்டைப் போக்க ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து ஆதரவுத் திட்டமாக செயல்பட்டு வருகிறது.


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமீன் & நகர்ப்புறம் (Pradhan Mantri Awas Yojana-Gramin and Pradhan Mantri Awas Yojana-Urban (PMAY-G/U))


“அனைவருக்கும் வீடு” என்ற நோக்கத்துடன், ஊரக மற்றும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு சொந்த வீடு கிடைக்கச் செய்யும் திட்டமாகும்.


தீன்தயாள் அந்த்யோதய யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (Deendayal Antyodaya Yojana – National Rural Livelihood Mission (DAY-NRLM)

ஏழைக் குடும்பங்கள் சுயதொழில் அல்லது திறமையான வேலைகள் மூலம் வாழ்க்கையை நடத்த உதவும் ஒரு திட்டமாக இந்தத்திட்டம் உள்ளது. ஏழை குடும்பங்களை சுய உதவிக் குழுக்களாக (Self Help Groups (SHGs)) ஒருங்கிணைத்து, கற்றல்-சம்பாதித்தல்-சேமித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.


பிரதான் மந்திரி உஜ்வலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana (PMUY))


இது புகை சூழ்ந்த சமையலறைகளில் வேலை செய்வதிலிருந்தும், விறகு சேகரிக்க நீண்டதூரம் நடந்து செல்வதிலிருந்தும் பெண்களைக் காப்பாற்றுகிறது.


இந்த திட்டங்கள் அனைத்திற்கும் 3.4 லட்சம் கோடி ரூபாயைக் கடக்கின்றன. இது மத்திய பட்ஜெட்டில் 7 சதவீதமாகும். மேலும், மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையை மிகவும் பாதுகாப்பானதாக ஆக்குகிறது.


பணப் பரிமாற்றத்தின் (Cash Transfer) தாக்கம்: எண்ணிக்கை மட்டுமே முழுக் கதையைச் சொல்லுமா?


நலத்திட்டங்களில் பணப் பரிமாற்றங்கள் கூடுதல் ஆதரவை வழங்குகின்றன. பணப் பரிமாற்றத் திட்டங்களின் சில எடுத்துக்காட்டுகள்:


பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi scheme (PM-KISAN)) என்பது விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரங்கள் போன்ற விவசாயச் செலவுகளை ஈடுகட்ட பணத்தை வழங்கும் ஒன்றிய அரசால் நிதியளிக்கப்பட்ட ஒரு அரசாங்கத் திட்டமாகும். இது விவசாயிகள் கடனில் இருந்து விடுபட்டு, அவர்களின் நிலத்தை உற்பத்தித் திறன் மிக்கதாக வைத்திருக்க உதவுகிறது.


தேசிய சமூக உதவித் திட்டம் (National Social Assistance Programme (NSAP))


இது முதியவர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. இது அவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளுக்கு ஒரு சிறிய ஆனால் நிலையான வருமானத்தை அளிக்கிறது.

73,000 கோடி மதிப்புடைய இந்தப் பணத் திட்டங்கள் பட்ஜெட்டில் 1.5 சதவீதமாகும். மொத்தத்தில், இந்த ஒன்றிய அரசின் பணமும், நலத்திட்டங்களுக்கான பொருட்களும் 3.85 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளன, இது அரசாங்க செலவினங்களில் ஏறக்குறைய 8.5 சதவீதமாகும்.


அவற்றின் உண்மையான தாக்கம் எண்ணிக்கையில் அல்ல, மாறாக அன்றாட தருணங்களில் உணரப்படுகிறது: நன்றாக சாப்பிடும் குழந்தை, சுத்தமான காற்றை சுவாசிக்கும் தாய், கடனைத் தவிர்க்கும் விவசாயி, பாதுகாப்பாக உணரும் குடும்பம் - இது Musgrave’s-ன் கருத்தின் எளிய உண்மையைக் காட்டுகிறது: பொது நிதி என்பது பணத்தைப் பற்றியது மட்டுமல்ல, மக்களுக்கு பாதுகாப்பு, தேர்வுகள் மற்றும் நம்பிக்கையை வழங்குவது பற்றியதாகும்.


பெண்களை மையமாகக் கொண்ட பணப் பரிமாற்றங்களின் புதிய அலை


இலக்கு நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட குடும்பங்களுக்கு அளிக்கப்படும் ஆதரவு ஒரு குடும்பத்தையே மாற்றி அமைக்கும் என்பதை உணர்ந்த பிறகு, மாநில அரசுகள் பெண்களுக்கான மிகவும் நேரடியான உதவிகளை சோதனை முயற்சியாகத் தொடங்கின. பெண்களுக்கான புதிய அலை பணப் பரிமாற்றத் திட்டங்கள் 2020-ல் தொடங்கின. அசாம் மாநிலம் “ஒருனோடோய்'” (Orunodoi) என்ற முதல் பெரிய அளவிலான, அனைவரையும் உள்ளடக்கிய (universal-style) பெண்களுக்கான பண உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 2021-ல் மேற்கு வங்கம் “லக்ஷ்மீர் பண்டார்” (Lakshmir Bhandar) திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, ​​அந்த யோசனை பரவலாகப் பரவி மிகவும் பிரபலமடைந்தது.


இன்று, 13 மாநிலங்கள் பெண்களின் கைகளில் நேரடியாக பணத்தை வழங்கும் பணப் பரிமாற்றத் திட்டங்களை செயல்படுத்துகின்றன. பீகார் ஒரு முறை 10,000 உதவியை வழங்கும் அதே வேளையில், மீதமுள்ள 12 மாநிலங்கள் மாதமாதம் பணத்தை வழங்குகின்றன. இந்த உறுதிமொழிகள் அனைத்தும் சேர்ந்து 2025-26ஆம் ஆண்டில் 1.75 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 0.5 சதவீதமாகும். இது இனி ஒரு சிறிய நலத்திட்டம் மட்டுமல்ல; மாநிலங்கள் தங்கள் வரவு செலவுத் திட்டங்களை எவ்வாறு திட்டமிடுகின்றன என்பதில் இது ஒரு பெரிய மாற்றத்தைக் காட்டுகிறது.


எண்ணிக்கைகள் தெளிவாகப் பேசுகின்றன. மகாராஷ்டிரா (36,000 கோடி), கர்நாடகா (28,608 கோடி), மேற்கு வங்கம் (26,700 கோடி) மற்றும் மத்தியப் பிரதேசம் (18,669 கோடி) ஆகியவை இப்போது நீர்ப்பாசனம், ஊரக சாலைகள் அல்லது முக்கிய பொது சுகாதார அமைப்புகளைவிட பெண்களின் இடமாற்றங்களுக்கு அதிகமாக செலவிடுகின்றன. ஜார்க்கண்ட் 13,363 கோடி, தமிழ்நாடு 13,807 கோடி, ஒடிசா 10,145 கோடி மற்றும் பீகார் 7,500 கோடியை அதன் ஒரு முறை மானியத்தின்மூலம் செலவிடுகிறது. பொது நலத்திட்டங்கள் அத்தகைய அளவை அடையும்போது, ​​அது மாநிலக் கொள்கையின் வரையறுக்கும் அம்சமாக மாறும்.


ஆனால், அளவும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்தத் திட்டங்கள் சேர்க்கப்பட்டவுடன் இந்த 13 மாநிலங்களில் ஆறு மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. மாநிலக் கடன் ஏற்கனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27.5 சதவீதத்தை நெருங்கி வருவதால், இந்த மாதாந்திர பணபரிமாற்றங்கள் மற்ற முதலீடுகளுக்கான நிதியைக் கட்டுப்படுத்துகின்றன மற்றும் நீண்டகால வளர்ச்சியை கடினமாக்குகின்றன.


அரசியல் பொருளாதாரப் பொறியா?


நலத்திட்டச் செலவுகள் ஒரு வரவு-செலவுத் திட்டத்துடன் முடிவடைவதில்லை. உணவுப் பாதுகாப்பு, ஓய்வூதியம், ஊட்டச்சத்து மற்றும் பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கான பண ஆதரவு போன்ற உறுதிமொழிகள் ஒவ்வொரு ஆண்டும் திரும்ப வருகின்றன. அவை வளரும்போது, ​​முதலீடுகள் நாளை கட்டமைக்கத் தேவையான இடத்தில் படிப்படியாக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4%-ஆக வைத்திருக்க, அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் அதிக வருவாயைச் சேகரிக்க, அதிக கடன் வாங்க அல்லது முதலீடுகளைக் குறைக்க முடிவு செய்ய வேண்டும். இந்தத் தேர்வுகள் எதுவும் செலவுகள் இல்லாமல் வருவதில்லை.


ஆனால் இந்த பதற்றம் வெறும் எண்கணிதம் மட்டுமல்ல. இது அரசியல் சார்ந்ததும் கூட. நலத்திட்டங்கள், குறிப்பாக விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு நேரடி பணப்பரிமாற்றங்கள், உடனடி மற்றும் வெளிப்படையான ஆதாயங்களை உருவாக்குகின்றன. அவற்றின் பலன்கள் விரைவாக வந்து சேரும். மேலும், மக்களால் நேரடியாக உணரப்படுகின்றன. இது அவர்களை தேர்தல்ரீதியாக பிரபலமாக்குகிறது.


இதற்கு நேர்மாறாக, நீர்ப்பாசன அமைப்புகள், மருத்துவமனைகள் அல்லது டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்ற மூலதனத் திட்டங்கள் பலனைத் தர பல ஆண்டுகள் ஆகும். அவற்றின் பலன்கள் நீண்டகால அடிப்படையில் அமைந்திருக்கும், பெரும்பாலும் உடனடியாகத் தெரிவதில்லை. இதன் காரணமாக, வரவு-செலவுத் திட்டமிடல் குறைவாக இருந்தாலும், அரசியல்வாதிகள் நலத்திட்டங்களை விரிவுபடுத்த விரும்புகிறார்கள். அதே, நேரத்தில் முக்கியமான நீண்டகால முதலீடுகள் பெரும்பாலும் தாமதமாகின்றன.


இது பொருளாதார வல்லுநர்கள் அரசியல் பொருளாதார பொறி (political economy trap) என்று அழைப்பதை உருவாக்குகிறது: பொதுநலத் திட்டங்களுக்கான செலவினங்கள் ஒட்டும் தன்மையுடையதாகவும், குறைக்க கடினமாகவும் மாறும், முதலீடு நெகிழ்வானதாகவும், குறைக்க எளிதானதாகவும் மாறும், மேலும் பற்றாக்குறைகளை நிர்வகிப்பது படிப்படியாக கடினமாகிவிடும். பொதுநலத் திட்டங்களுக்கான செலவினங்களைக் குறைப்பது உடனடி பொதுமக்களின் எதிர்வினைக்கு வழிவகுக்கும் என்ற உண்மையால் இந்தப் பொறி வலுப்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் மூலதனச் செலவினங்களைக் குறைப்பது குறைவாகவே தெரியும் மற்றும் அரசியல் ரீதியாக பாதுகாப்பானது. இருப்பினும், தற்போதைய நலத்திட்டங்களுக்கு அதிகமாகச் செலவிடுவது, நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் முதலீடு செய்யும் அரசாங்கத்தின் திறனைப் பலவீனப்படுத்தும்.


இந்த பதற்றத்தை நிர்வகிப்பதற்கு வரவு-செலவுத் திட்ட கணக்கீட்டுத் தாள்கள்/விரிதாள்களைவிட (sheets/spreadsheets) அதிகமாக தேவைப்படுகிறது. இதற்கு வெளிப்படையான கணக்கியல், நம்பகமான நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை நெறிமுறை மற்றும் குறுகிய கால அழுத்தங்கள் அதிகரிக்கும் போதும் மூலதன முதலீட்டைப் பாதுகாப்பதற்கான நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவை தேவைப்படுகின்றன. பொது  நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிக்கு இடையே தேர்வு செய்வது சவாலாக இல்லை. மாறாக இரண்டையும் ஒன்றாக வைத்திருப்பது தான்- நாளையை பொழுதை சார்ந்திருக்கும் நிதி மற்றும் பொருளாதாரத் திறனை பலவீனப்படுத்தாமல் இன்றைய அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.


பொது  நலத்திட்டங்கள்-முதலீட்டு சிக்கலை எவ்வாறு தீர்க்க முடியும்?


மக்களை நிகழ்காலத்தில் பாதுகாப்பது மற்றும் அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சூழ்நிலையில் முதலீடு செய்வது ஆகிய இரண்டு பொறுப்புகளை மாநிலங்கள் ஒரே நேரத்தில் கையாளும்போது, ​​பொது  நலத்திட்டங்கள்-முதலீட்டு குழப்பம் சமாளிக்க கூடியதாக மாறுகிறது. சுகாதாரம், கல்வி மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான செலவினங்களைப் பாதுகாத்தால், ஒரு மாநிலம் வலுவான நலத்திட்டங்களையும் அதே நேரத்தில் வலுவான முதலீடுகளையும் கொண்டிருக்க முடியும் என்பதை தமிழ்நாடு அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டுகிறது.


தொழில்நுட்பம், திறன்கள் மற்றும் தொழில்துறை மூலம் உறுதியான வளர்ச்சி அடித்தளத்தை உருவாக்குவது, பொதுநலத் திட்டத்தை மேலும் நிலையானதாக மாற்றுகிறது என்பதை கர்நாடகா அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில், இது போன்ற செயல்முறைகள் அதிகரித்து வரும் நிதி அழுத்தத்தைக் குறைக்கிறது. உள்கட்டமைப்பு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Micro, Small, and Medium Enterprises (MSME)) ஒன்றிய அரசால் முதலீட்டு இயந்திரம் வேகமாக செயல்படும், அடிப்படை வரி விரிவடைகிறது மற்றும் நலத்திட்டங்களுக்கு குறைவாக இருப்பதற்குப் பதிலாக அதிக பணம் கிடைக்கிறது என்பதை குஜராத் மாநிலம் நமக்கு நினைவூட்டுகிறது.


மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை, படிப்பினை தெளிவாக உள்ளது: சமநிலையைக் கண்டறிவதுதான் முன்னேற ஒரே வழியாகும். பொதுநலத்திட்டங்கள் இப்போது மக்களை ஆதரிக்க வேண்டும். அதேநேரத்தில் முதலீடுகள் எதிர்காலத்தைப் பாதுகாக்கின்றன. ஆனால், பல மாநிலங்கள் தங்கள் நலத்திட்டச் செலவுகள் ஒன்றிய அரசிடமிருந்து பெறும் நிதியைவிட வேகமாக வளர்ந்து வருவதால் சிரமப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், ஒன்றிய அரசு ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.


ஒன்றிய அரசு நீண்டகால முதலீடுகளைப் பாதுகாக்க வேண்டும். மாநிலங்களுக்கு எதிர்பார்க்கக்கூடிய பரிமாற்றங்களை உறுதி செய்யவும், சரக்கு மற்றும் சேவை வரி  வருவாயை வலுப்படுத்தவும், நீண்டகால வளர்ச்சியின் செலவில் பொதுநலத்திட்டங்களின் விரிவாக்கம் வராமல் பார்த்துக் கொள்ளவும் ஒன்றிய அரசு தேவை என்று வாதிடலாம். நிதி ரீதியாக வலுவாக உள்ள ஒன்றிய அரசு மாநிலங்கள் தங்கள் வரவு-செலவுத் திட்டங்களை பொறுப்புடன் நிர்வகிக்க உதவுகிறது. இந்தியாவின் பொதுநலத்திட்டங்களின் எதிர்காலம், கவனமாக திட்டமிடுவதோடு பராமரிப்பையும் சமநிலைப்படுத்துவதையும், வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில் பாதுகாப்பை வழங்குவதையும் சார்ந்துள்ளது.  


Original link:

Do cash and kind transfer schemes create welfare-investment dilemma?




Share: