நிலுவையில் உள்ள அகவிலைப்படி (Dearness Allowance (DA)) மற்றும் அகவிலை நிவாரண (Dearness Relief (DR)) தவணைகளை வழங்குவதில் மாநில அரசு தாமதம் செய்ததையும், ஓய்வூதியதாரர்களின் வயதின் அடிப்படையில் நிலுவைத் தொகையைப் பிரித்து வழங்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தையும் மனுதாரர்கள் எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய 90 பக்கத் தீர்ப்பு, பஞ்சாபில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் உரிமைகளை வலுப்படுத்தியுள்ளது. அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவை விருப்பத்தின் பேரில் வழங்கப்படும் சலுகைகள் அல்ல, மாறாக அவை செயல்ப்படுத்தக்கூடிய உரிமைகள் என்றும், சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கட்டமைப்புகளின் ஒரு பகுதியாகவும், பணவீக்கத்துடன் இணைக்கப்பட்டவை என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 8 அன்று வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில், நீதிபதி ஹர்பிரீத் சிங் பிரார், பஞ்சாப் மாநில மின்சாரக் கழகம் லிமிடெட் மற்றும் லூதியானா மாநகராட்சி ஆகியவற்றின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தாக்கல் செய்த மூன்று நிதிப் பேராணை மனுக்களைத் தள்ளுபடி செய்தார். நிலுவையில் உள்ள அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) தவணைகளை வழங்குவதில் மாநில அரசு காட்டிய தாமதத்தையும், ஓய்வூதியதாரர்களின் வயதின் அடிப்படையில் நிலுவைத் தொகையைப் பிரித்து வழங்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தையும் மனுதாரர்கள் எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்தத் தீர்ப்பு, அரசு சீராகச் செயல்பட வேண்டும், ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தக் கூடாது என்றும் அனைத்து ஊழியர்களையும் ஓய்வூதியதாரர்களையும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, நிர்வாகம் குறித்த ஒரு பரந்த செய்தியையும் அனுப்புகிறது.
இந்த சர்ச்சை எதைப் பற்றியது?
6-வது பஞ்சாப் ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பஞ்சாப் அரசு செயல்படுத்தியதை மையமாகக் கொண்டு இந்த வழக்கு அமைந்தது. 2021-ல் மாநில அரசு இந்தப் பரிந்துரைகளை முறையாக ஏற்றுக்கொண்டு, அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) விஷயத்தில் “ஒன்றிய அரசின் முறையைப்" பின்பற்ற ஒப்புக்கொண்ட போதிலும், பல தவணைகள் செலுத்தப்படாமல் இருந்தன அல்லது தாமதமாகின.
2025-ல், நிலுவைத் தொகையைப் படிப்படியாக வழங்குவதற்காக, ஓய்வூதியதாரர்களை வயது அடிப்படையிலான பிரிவுகளாகப் பிரித்து, அரசு ஒரு "அலுவல்முறைக் கலைப்பு திட்டத்தை" (liquidation plan) அறிமுகப்படுத்தியது. மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் இளைய ஓய்வூதியதாரர்கள் நீண்டகாலம், சில சமயங்களில் பல ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் கொடுப்பனவுகளில் ஏற்பட்ட தாமதமும், வயது அடிப்படையிலான சமத்துவத்திற்கான அரசியலமைப்பு உத்தரவாதங்களை மீறுவதாக மனுதாரர்கள் வாதிட்டனர்.
கொள்கை சார்ந்த விஷயங்களில் நீதிமன்றம் என்ன தீர்ப்பை வழங்கியது?
அகவிலைப்படி (DA), அகவிலை நிவாரணம் (DR) மீதான தீர்ப்புகள் கொள்கைக்குள் வருவதால், அவை நீதித்துறை ஆய்வுக்கு அப்பாற்பட்டவை என்ற அரசின்வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. கொள்கை முடிவுகள் தன்னிச்சையாகவோ அல்லது அரசியலமைப்பின் 14, 16 மற்றும் 21 ஆகிய பிரிவுகளின் கீழ் உள்ள அடிப்படை உரிமைகளை மீறும்போதோ நீதிமன்றங்கள் தலையிடலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
செயலற்ற தன்மையையோ அல்லது சமமற்ற நடத்தையையோ நியாயப்படுத்த, அரசாங்கம் "கொள்கையை" ஒரு காரணமாக பயன்படுத்த முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு கோடிட்டுக் காட்டியது.
மாநிலம் ஒன்றிய அரசின் வழிமுறைக்குக் கட்டுப்பட்டதா?
ஆம். பஞ்சாப், ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, ஒன்றிய அரசின் வழிமுறையை பின்பற்ற தேர்ந்தெடுத்தவுடன், அதை முழுமையாகச் செயல்படுத்த சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதில் அகவிலைப்படியின் விகிதம், கணக்கீட்டிற்குப் பயன்படுத்தப்படும் சூத்திரம் மற்றும் திருத்தங்களின் நேரம் ஆகியவற்றை ஒப்பிடுவதும் அடங்கும். எந்தவொரு பகுதியளவு அல்லது தாமதமான செயலாக்கமும், ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டமைப்பிலிருந்து விலகுவதற்குச் சமம் என்று நீதிமன்றம் கூறியது.
ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், அதன் பலன்கள் உரிமையாகவே கிடைக்கும், அவற்றை பாகுபடுத்திப் பயன்படுத்த முடியாது என்ற உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
நிதி நெருக்கடிகள் தாமதத்தை நியாயப்படுத்த முடியுமா?
இதற்கு நீதிமன்றம் எதிர்மறையாகப் பதிலளித்தது. அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம்த் தொகையை (DR) மறுப்பதற்கோ அல்லது காலதாமதப்படுத்துவதற்கோ நிதி நெருக்கடியை ஒரு பொதுவான காரணமாகப் பயன்படுத்த முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அகவிலைப்படியை (DA) பணவீக்கத்தை ஈடுசெய்வதற்கான ஒரு வழிமுறை என்று விவரித்த நீதிமன்றம், அதை நிறுத்தி வைப்பது ஒரு அரசின் கடமைகளைச் சீர்குலைக்கும் என்று கூறியது. மேலும், பஞ்சாபின் நிதி நிர்வாகத்தை விமர்சித்த முந்தைய தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டியை நீதிமன்றம், இது போன்ற வாதங்களை நிராகரித்தது.
"அலுவல்முறைக் கலைப்பு" (liquidation plan) திட்டத்திற்கு என்ன ஆனது?
பிப்ரவரி 18, 2025 தேதியிட்ட ஓய்வூதியத் திட்டத்தை அரசியலமைப்புக்கு முரணானது எனக் கூறி நீதிமன்றம் ரத்து செய்தது.
அனைத்து ஓய்வூதியதாரர்களும் ஒரே சீரான பிரிவினர் என்றும், தவணை முறையில் பணம் வழங்குவதற்காக அவர்களை வயது வாரியாகப் பிரிப்பது தன்னிச்சையானது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பணவீக்கம் அனைத்து ஓய்வூதியதாரர்களையும் சமமாகப் பாதிக்கிறது என்றும், செயற்கையான பிரிவுகளை உருவாக்குவது அரசியலமைப்பின் 14-வது பிரிவின் கீழ் உள்ள சமத்துவ உரிமையை மீறுகிறது (right to equality) என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
ஏற்கனவே தங்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகைக்காக இளம் ஓய்வூதியதாரர்களைப் பல ஆண்டுகள் காத்திருக்க வைப்பதாகவும் இந்தத்திட்டம் விமர்சிக்கப்பட்டது.
ஊழியர்களிடையே உள்ள சமத்துவம் என்றால் என்ன?
மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து (Consolidated Fund) பெறும் அனைத்து ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.
அகில இந்திய சேவை அதிகாரிகள் போன்ற உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரண (DR) பலன்களை வழங்கி, மற்றவர்களுக்கு அதை மறுக்கவோ அல்லது தாமதப்படுத்தவோ அரசால் முடியாது என்று நீதிமன்றம் கூறியது. அதுபோன்ற எந்தவொரு பாகுபாடும் பகுத்தறிவு அடிப்படையற்றது மற்றும் அரசியலமைப்புரீதியாக அனுமதிக்க முடியாதது என்று நீதிமன்றம் கூறியது.
இந்தத் தீர்ப்பு மனுதாரர்களைத் தாண்டி மற்றவர்களுக்கும் பொருந்துமா?
ஆம். ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்தத் தீர்ப்பு "தனிநபர் மீதான நடவடிக்கை" (in rem) அடிப்படையில் பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியது. இது நீதிமன்றத்தை அணுகியவர்களுக்கு மட்டுமல்லாமல், அதேநிலையில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்.
இது மாநிலம் முழுவதும் மிகப் பெரிய குழுவினருக்கு இந்த உயர்வு பயனளிப்பதை உறுதி செய்கிறது.
நீதிமன்றம் என்ன வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது?
நீதிமன்றம் ஒரு தெளிவான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. நிலுவையில் உள்ள அனைத்து அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலைநிவாரணத் (DR) தவணைகளையும் ஜூன் 30, 2026-க்குள் ஒன்றிய அரசின் விகிதாச்சாரப்படி வழங்குமாறு மாநில அரசு மற்றும் அதன் கழகங்களுக்கு உத்தரவிட்டது.
மேலும், 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் முறையிலேயே அனைத்து ஓய்வூதிய நிலுவைத் தொகைகளும் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன் மூலம், படிப்படியாக (staggered system) வழங்கப்பட்ட முறை நடைமுறையில் நீக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதிசெய்து, ஜூலை 2, 2026-க்குள் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு தலைமைச் செயலாளர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
Original Link: Why the Punjab and Haryana High Court ruled that DA, DR are a right, not a favour?.