விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதம் (ஊரகம்) இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005-ல் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? - பிரியா குமாரி சுக்லா

தற்போதைய நிகழ்வு என்ன? 


விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதம் (கிராமப்புறம்) இயக்கம், (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin)) எனும் இத்திட்டம், கிராமப்புறக் குடும்பங்களுக்கான வேலை நாட்களை 125-ஆக உயர்த்தும். மேலும், இத்திட்டத்திற்கான செலவில் 40 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும்.


முக்கிய அம்சங்கள் :


• விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதம் (கிராமப்புறம்) இயக்கம் (VB—G RAM G) சட்டம் 2025 : 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்-2005'-ஐ (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) ரத்து செய்துவிட்டு, ஒரு புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இச்சட்டம், ஜூலை மாதம் 1-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்.





• மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த திங்கள்கிழமை வெளியிட்டது. இதன் மூலம், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டு, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த 'நூறு நாள் வேலைத் திட்டம்' ஜூலை மாதம் 1-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.


• விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதம் (கிராமப்புறம்) இயக்கம் (VB-G RAM G) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பிரிவு 22-ன்கீழ் உள்ள நிதிப்பகிர்வு முறை, பிரிவு 4-ன் துணைப்பிரிவு 5-ன்கீழ் நிர்ணயிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு முறை, மற்றும் மேலும், பிரிவு 6-ன்கீழ், தீவிர விவசாயம் மும்முரமாக நடைபெறும் காலங்களில் வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை நிறுத்தி வைப்பது (பிரிவு 6) ஆகியவற்றை எதிர்க்கின்றனர். ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் மாநிலங்களுக்கு, இந்த அம்சங்கள் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்கின்றனர். 


உங்களுக்குத் தெரியுமா?


• கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசு விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதம் (கிராமப்புறம்) இயக்கம் (VB-G RAM G) சட்டம் 2025'-ஐ இயற்றியது. இந்தத் திட்டத்தின் நோக்கம், ஒரு நிதியாண்டில் ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் 125 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை சட்டப்பூர்வமாக உறுதி செய்வதாகும். இதில் உடலுழைப்பு சார்ந்த பணிகளைச் செய்ய முன்வரும் அக்குடும்பத்தின் பெரியவர்களுக்கு வேலை வழங்கப்படும். 'வளமான மற்றும் மீள்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்க, வளர்ச்சி மற்றும் அதிகாரமளித்தலை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.


• ஊதியச் செலவு முழுவதையும் ஒன்றிய அரசே ஏற்றுக்கொண்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்-2005 திட்டத்தைப் போலன்றி, விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதம் (கிராமப்புறம்) இயக்கம் (VB-G RAM G) என்பது ஒன்றிய அரசால் நிதியுதவி அளிக்கப்படும் ஒரு திட்டமாகும். இத்திட்டத்தில், அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப்பகிர்வு விகிதம் 60:40-ஆகவும், வடகிழக்கு மாநிலங்கள், இமயமலை மாநிலங்கள் மற்றும் சட்டமன்றம் கொண்ட ஒன்றியப் பிரதேசங்களுக்கு 90:10-ஆகவும், சட்டமன்றம் இல்லாத ஒன்றியப் பிரதேசங்களுக்கு 100-சதவீத ஒன்றிய அரசின் பங்காகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


• மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்ட (MGNREGA) திட்டத்திலிருந்து மாறுபட்டு, இந்த கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு நிதியளிப்பதில் மாநிலங்களின் பங்கை அதிகரிக்குமாறு விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதம் (கிராமப்புறம்) இயக்கம் (VB—G RAM G) சட்டம் முன்மொழிகிறது. அச்சட்டத்தின் பிரிவு 22(1)-ன்படி, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப்பகிர்வு முறை, 11 குறிப்பிட்ட மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதத்திலும், மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் 60:40 என்ற விகிதத்திலும் இருக்கும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்ட (MGNREGA) திட்டத்தின்கீழ், ஊதியச் செலவு முழுவதையும் ஒன்றிய அரசே ஏற்றுக்கொண்டதுடன், இந்தத் திட்டத்திற்கான பொருட்கள் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்கான தொகையில் 75 சதவீதத்தையும் ஒன்றிய அரசே வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



Original Link: How Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) is different from Mahatma Gandhi National Rural Employment Guarantee Act 2005?


Share: