முக்கிய அம்சங்கள்:
• திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க அரசிதழ் அறிவிப்பில், மத்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs (MHA)), 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு-18-ன்கீழ் உருவாக்கப்பட்ட 'குடியுரிமை (திருத்த) விதிகள், 2026' (Citizenship Amendment Rules, 2026), 2009-ஆம் ஆண்டு விதிகளின் அட்டவணை (IC)-ல் ஒரு புதிய பத்தியைச் சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அந்தப் புதிய விதியான பத்தி (iiiA)-ன்படி, விண்ணப்பதாரர்கள் தங்களுக்குப் அண்டை நாடுகள் மூன்றில் ஏதேனும் ஒன்றால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அல்லது காலாவதியான கடவுச்சீட்டு (Passport) உள்ளதா என்பதைக் குறிப்பிட வேண்டும். அத்தகைய கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்கள், அதன் எண், வழங்கப்பட்ட தேதி, இடம் மற்றும் காலாவதியாகும் தேதி போன்ற விவரங்களை வழங்க வேண்டும். மேலும், தங்களுக்கு இந்தியக் குடியுரிமைக்கான ஒப்புதல் கிடைத்த 15 நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட அஞ்சல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் அல்லது அஞ்சல்துறை கண்காணிப்பாளரிடம் அந்த கடவுச்சீட்டை ஒப்படைக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
• அரசாங்க அறிவிப்பின்படி, இந்த புதிய விதிகள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் குடியுரிமை தொடர்பான வழக்குகளில், சரிபார்ப்பு மற்றும் ஆவணப் பராமரிப்பை மேம்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு நிர்வாகரீதியான தெளிவுபடுத்தல் மட்டுமே இந்தத் திருத்தம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
• இந்த மாத தொடக்கத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் 'குடியுரிமை (திருத்த) விதிகள், 2026'-ஐ அறிவித்தது. இது மின்னணு இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (electronic Overseas Citizen of India (e-OCI)) அட்டைகள், முழுமையான இணையவழி விண்ணப்ப முறை மற்றும் சிறுவர்களுக்கான இருநாட்டு கடவுச்சீட்டுகள் (Dual passports) மீதான கடுமையான விதிகளை அறிமுகப்படுத்துகிறது. இணையவழி விண்ணப்பங்கள், மின்னணு ஆவணங்கள் மற்றும் ஒப்புகைகளைக் கட்டாயமாக்குவதன் மூலம் முழுமையான மின்னணு இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (OCI) அமைப்பை இந்த விதிகள் உருவாக்குவதோடு, மீண்டும் மீண்டும் காகிதங்களில் செய்யப்படும் எழுத்துப் பணிகளைக் குறைப்பதாக மத்திய உள்துறை அமைச்சக (MHA) அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான காகிதமில்லா அடையாள அமைப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன், நேரடியாக வழங்கப்படும் அட்டைகளுடன் சேர்த்து மின்னணு இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (e-OCI) அட்டைகளை வழங்குவதற்கும் ஒரு புதிய விதிமுறை அனுமதிக்கிறது. மேலும், எதிர்காலத்தில் தானியங்கிப் பதிவிற்கு வசதியாக, அதிவேக குடிவரவுத் திட்டங்களுடன் இணைக்க விண்ணப்பதாரர்கள் தங்களின் உயிரியல் அடையாளத் தரவுகளைப் (Biometric) பகிரவும் சம்மதிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
Original Link: What is Citizenship (Amendment) Rules, 2026?