உலகத் தலைநகரங்களிலேயே பறவை இனங்களின் பன்முகத்தன்மையில் நைரோபிக்கு அடுத்தபடியாக டெல்லி ஏன் இரண்டாம் இடத்தில் உள்ளது? 471 வகையான பறவை இனங்களுக்கு ஒரு பெருநகரம் எவ்வாறு புகலிடமாக அமைகிறது? இந்தப் பல்லுயிர் வளம் அதிகமாக உள்ள பகுதியை எது வடிவமைக்கிறது? இது குறித்த முழுமையான தகவல்கள் இங்கே உள்ளன.
தற்போதைய செய்தி
ஜூன் 5 அன்று வெளியிடப்பட்ட டெல்லி பறவைகள் வரைபடத் தொகுப்பு, முதன்முறையாக நகரம் முழுவதும் உள்ள பறவை இனங்களின் பரவல் மற்றும் எண்ணிக்கையை வரைபடமாக்கியுள்ளதாகக் கூறுகிறது. மேலும், இது "பறவைகளின் பன்முகத்தன்மையில் உலகின் தேசியத் தலைநகரங்களுள் நைரோபிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில்" டெல்லியை நிலைநிறுத்தியுள்ளது. இந்தச்சூழலில், டெல்லி பறவை வரைபடத் தொகுப்பு மற்றும் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட புல்வெளிப் பறவைகள் (grassland bird census) கணக்கெடுப்பு ஆகியவற்றின் முக்கிய முடிவுகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.
முக்கிய அமங்கள்:
1. பறவை ஆர்வலர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வனத்துறை ஊழியர்கள் மற்றும் குடிமக்கள் தன்னார்வலர்களின் பங்கேற்புடன், டெல்லி வனத்துறை, 'இந்திய பறவைகள் கணக்கெடுப்பு' (Bird Count India), 'இயற்கைக்கான உலகளாவிய நிதியம்' (World Wide Fund for Nature (WWF)) இந்தியா மற்றும் பிற கூட்டு அமைப்புகள் இணைந்து இந்த வரைபடத் தொகுப்பை உருவாக்கின.
2. வரைபடத் தொகுப்பின்படி, 1975-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பதிவு செய்யப்படாத 22 இனங்களைத் தவிர்த்து, “டெல்லி பறவைகள் பட்டியல் தற்போது 471 இனங்களைக் கொண்டுள்ளது.
3. ஆரவல்லி மலைத்தொடரின் வடக்கு விளிம்புப் பகுதியில், மேற்கு இமயமலைக்கு அருகில் இடம் பெற்று இருப்பது, யமுனா மற்றும் சாஹிபி வெள்ளச் சமவெளிகள் மற்றும் ஆர்க்டிக்கிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரை நீண்டுள்ள ஒரு முக்கியப் பறவைகள் வலசைப் பாதையான மத்திய ஆசியப் பறவைப் பாதைக்கு (Central Asian Flyway (CAF)) அருகே அமைந்திருப்பது, இந்நகரின் தனித்துவமான புவியியல் சூழலே, இங்குள்ள பறவை இனங்களின் பன்முகத்தன்மைக்கு முதன்மைக் காரணமாக இருக்கலாம் என்று வரைபடத் தொகுப்பு குறிப்பிடுகிறது.
4. இந்த வரைபடத் தொகுப்பு தனது மாதிரி வடிவமைப்பில் டெல்லியின் பரப்பளவில் 11 சதவீதத்தை கொண்டுள்ளது. ஜனவரி 2025-ல் தொடங்கப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு, குளிர்காலம் மற்றும் கோடைக்காலம் போன்ற ஆண்டுக்கு இருமுறை மேற்கொள்ளப்பட்டு, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடைபெறும்.
5. முதல் ஆண்டில், நகரம் முழுவதும் 221 இனங்கள் பதிவு செய்யப்பட்டன; இதில் குளிர்காலத்தில் 200 இனங்களும், கோடையில் 152 இனங்களும் அடங்கும். இவற்றில், 126 இனங்கள் உள்ளூர் பகுதிகளில் நிரந்தரமாக வாழும் இனங்களாகவும், 81 இனங்கள் குளிர்கால வலசைப் பறவைகளாகவும், 14 இனங்கள் கோடைகால வலசைப் பறவைகளாகவும் இருந்தன. பதிவு செய்யப்பட்ட பறவைக் கூட்டத்தில் ஏறக்குறைய பாதி, 108 இனங்கள் அல்லது 48.87 சதவீதம், முதுகெலும்பற்ற உயிரினங்களை உண்ணும் பறவைகளாக இருந்தன. தாவரம் மற்றும் விதைகளை உண்பவை 37 இனங்களையும், அனைத்துண்ணிகள் (omnivores) 34 இனங்களையும், முதுகெலும்புள்ள உயிரினங்கள் மற்றும் அழுகிய உடல்களை உண்பவை 33 இனங்களையும், பழம் மற்றும் பூந்தேனை உண்பவை ஒன்பது இனங்களையும் கொண்டிருந்தன.
6. இந்த வரைபடத் தொகுப்பு, மேலும் 18 உள்ளூர்-பூர்வ (எண்டெமிக்) பறவை இனங்களையும் பதிவு செய்கிறது; அதாவது, ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் மட்டுமே காணப்படும் இனங்கள். மேலும், இது பல பாதிக்கப்படக்கூடிய பறவை இனங்களையும் பட்டியலிடுகிறது. அவற்றில், ஆபத்தான நிலையில் உள்ள (Endangered) எகிப்திய கழுகு (Egyptian Vulture) மற்றும் கருப்பு வயிற்று ஆற்றுப் புறா (Black-bellied Tern), பாதிக்கப்படக்கூடிய (Vulnerable) ஆற்றுப் புறா (River Tern) மற்றும் பொதுவான போச்சார்ட் வாத்து (Common Pochard), மேலும் அச்சுறுத்தலுக்கு நெருக்கமான (Near Threatened) கருப்பு வால் கோட்விட் (Black-tailed Godwit), பெருஞ்சிவப்பு வாத்து (Ferruginous Duck), வர்ண நாரை (Painted Stork), கருந்தலை ஐபிஸ் (Black-headed Ibis) மற்றும் கிழக்கு டார்டர் (Oriental Darter) ஆகிய இனங்களை பட்டியலிடுகிறது.
7. இந்த வரைபடத் தொகுப்புடன் தொடர்புடைய வல்லுநர்கள், டெல்லியின் பறவைப் பன்முகத்தன்மைக்கு, டெல்லி ஒரு சூழலியல் சந்திப்பில் அமைந்துள்ளதே காரணம் என்று கூறுகின்றனர்: ரிட்ஜ் மலைத்தொடர் ஆரவல்லி நிலப்பரப்பைத் தலைநகருக்குள் கொண்டுவருகிறது. அதே நேரத்தில், யமுனை நதிப்படுகை மற்றும் அதனுடன் தொடர்புடைய சதுப்பு நிலங்கள், நீர்ப்பறவைகளுக்கும் வலசைப் பறவைகளுக்கும் புகலிடம் அளிக்கின்றன.
8. அதே சமயம், மேற்கு இமயமலைக்கு அருகில் இருக்கும் நகரம் அமைந்திருப்பது பருவகால இடப்பெயர்வுக்கு வழிவகுக்கிறது. டெல்லியை வரைபடத் தொகுப்பு குறிப்பிடுகிறது. மத்திய ஆசிய பறவைகள் வலசைப் பாதையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால், இது "மத்திய ஆசியா மற்றும் ஆர்க்டிக் போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்து வரும் உயிரினங்களுக்கு ஒரு பருவகால புகலிடமாக" அமைகிறது.
9. இதற்கிடையில், இந்த வரைபடத் தொகுப்பு , டெல்லியை “வரலாறு, புவியியல் மற்றும் பல்லுயிர் வளத்தின் சங்கமப் புள்ளி” என்று விவரிக்கிறது. உலகின் மிக அதிக மக்கள்தொகைக் கொண்ட நகரப் பகுதிகளில் ஒன்றாக இருந்தாலும், டெல்லியில் இத்தகைய பன்முக உயிரியல் மற்றும் இயற்கை வளங்கள் இன்னும் நிலைத்திருப்பதாக அது குறிப்பிடுகிறது. மேலும், "டெல்லிப்பகுதியைத் பாதுகாக்கும் பசுமையான மற்றும் நீல நிறப் பகுதிகளைப்" பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது. குறிப்பாக, யமுனை ஆற்றின் தாழ்வான நிலப்பகுதிகள், பாதுகாப்பு மற்றும் வாழ்விட மறுசீரமைப்பிற்கான ஒரு முக்கிய சூழல் மண்டலமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
முதல் புல்வெளிப் பறவைகள் கணக்கெடுப்பு
1. கடந்த ஆண்டு மே மாதம், கசிரங்கா தேசியப் பூங்காவில் உள்ள புல்வெளிப் பறவைகளின் எண்ணிக்கையைப் பதிவு செய்வதற்காக, வனத்துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் இயற்கை பாதுகாவலர்களை கொண்ட குழு ஒன்று ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டது. அதன் பின்னர், “முதல் புல்வெளி பறவைகள் கணக்கெடுப்பு அசாமின் கசிரங்கா தேசியப் பூங்காவில் நடத்தப்பட்டது.
2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature (IUCN)) சிவப்புப் பட்டியலின்படி, புல்வெளிப் பறவைகள் கணக்கெடுப்பில் மொத்தம் 43 புல்வெளிப் பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், அதிகரித்து வரும் நிலையில் உள்ள 1 இனமும், அதிகரித்து வரும் நிலையில் உள்ள 2 இனங்களும், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள 6 இனங்களும் அடங்கும்.
காசிரங்கா தேசியப் பூங்கா ஏன் புகழ் பெற்றது?
42,996 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட கசிரங்கா தேசியப் பூங்கா, அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கின் வெள்ளச் சமவெளியில் உள்ள, சிக்கல் இல்லாத மற்றும் பிரதிநிதித்துவமான மிகப்பெரிய பகுதியாகும். இது 1985-ல் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உலக பாரம்பரிய தளமாகும். இது இங்குள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்காகப் புகழ்பெற்றது. கசிரங்கா தேசியப் பூங்கா, 446 பட்டாம்பூச்சி இனங்களுடன் இந்தியாவின் 2-வது பெரிய பட்டாம்பூச்சி வாழ்விடமாகத் திகழ்கிறது.
3. கணக்கெடுப்பில் ஒரு புதிய வழிமுறை பயன்படுத்தப்பட்டது. கசிரங்கா தேசியப் பூங்கா இயக்குநர் டாக்டர் சோனாலி கோஷின் கூற்றுப்படி, இதன் செயலற்ற ஒலிப்பதிவு அடிப்படையிலான கண்காணிப்பு முறை பயன்படுத்தப்பட்டதே இந்தக் கணக்கெடுப்பின் முக்கிய சிறப்பம்சமாகும்.
4. உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளான அல்லது பிரம்மபுத்திரா வெள்ளச் சமவெளிகளுக்கு மட்டுமே உரிய 10 உயிரினங்களுக்கு இந்தக் கணக்கெடுப்பு முன்னுரிமை அளித்தது:
5. பிரம்மபுத்திரா வெள்ளப்பரப்பிற்கு மட்டுமே சொந்தமான, அழிவின் அபாயத்தில் உள்ள பின் தூக்கணாங்குருவி (Finn’s Weaver) பறவையின் இனப்பெருக்கக் கூட்டத்தை கண்டறியப்பட்டுள்ளதால், தேசியப் பூங்கா அதிகாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Original article : What makes Delhi one of the world’s most bird-diverse capitals? -Roshni Yadav