உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization) தடுமாறிக் கொண்டிருக்கிறது. -பிரபாஷ் ரஞ்சன்

 உலக வர்த்தக அமைப்பின் (WTO) 14-வது அமைச்சர்கள் மாநாடு, விதிகள் அடிப்படையிலான வர்த்தக அமைப்பில் உள்ள கடுமையான குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது.


இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வர்த்தகப் பன்முகத்தன்மையானது, அதன் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்கா ஒரு வற்புறுத்தும் ஒருதலைப்பட்ச அணுகுமுறைப் போக்கும், மிகவும் விரும்பப்படும் தேசம் (most-favoured nation (MFN)) போன்ற அடிப்படை விதிகளை பலவீனப்படுத்தச் செய்யும் முயற்சிகளும் மற்றும் இந்த நடவடிக்கைகள் முழு அமைப்பையும் பலவீனப்படுத்துவதற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. வரலாற்றின் இந்த முக்கியமான தருணத்தில், சமீபத்தில் கேமரூனின் யவுண்டேவில் (மார்ச் 2026) நிறைவடைந்த உலக வர்த்தக அமைப்பின் (WTO) 14-வது அமைச்சர்கள் மாநாடு (Ministerial Conference (MC14)), மேலாதிக்கப் போக்குகளைக் கட்டுப்படுத்தும் விதிகள் அடிப்படையிலான உலகளாவிய வர்த்தக ஒழுங்கின் முக்கியத்துவம் குறித்து உலக சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் என்று பலர் எதிர்பார்த்தனர்.


இருப்பினும், 14-வது அமைச்சர்கள் மாநாடு (MC14) இந்த சவாலை எதிர்கொள்ளத் தவறிவிட்டது. மேலும், இந்த மாநாடு பெரும் வெற்றி பெறும் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில், 166 உறுப்பினர்களைக் கொண்ட உலக வர்த்தக அமைப்பு, எதிர்காலப் பணிகளை கோடிட்டுக் காட்டும் ஒரு அடிப்படை அமைச்சர்கள் மட்டத்திலான பிரகடனத்தை வெளியிடுவதில்கூட ஒருமித்த கருத்தை நிறைவேற்றத் தவறியது கவலையளிக்கிறது. இந்தக் குறைபாடுகளை மறைக்கும் விதமாக, உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர், 14-வது அமைச்சர்கள் மாநாட்டில் (MC14) சில வரைவு முடிவுகளை உள்ளடக்கிய ஒரு யவுண்டே தொகுப்பைத் (Yaoundé package) தயாரித்துள்ளது என்றும், இதன்பொருளானது, இன்னும் இறுதி செய்யப்படாத முடிவுகள், வரும் மாதங்களில் ஜெனீவாவில் விவாதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.


இரண்டு தற்காலிகத் தடை உத்தரவுகளின் கதை


இரண்டு தற்காலிகத் தடைகள் குறித்த நீண்டகால ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த நிகழ்வாக 14-வது அமைச்சர்கள் மாநாடு (MC14) வரலாற்றில் இடம்பிடிக்கும். இதில் முதலாவதாக, மின்னணு வர்த்தகப் பரிவர்த்தனைகள் மீதான சுங்க வரிகள் (customs duties) ஆகும். 1998 முதல், டிஜிட்டல் வர்த்தகப் பரிமாற்றங்களைத் தடையின்றி வைத்திருக்க, மின்னணு வர்த்தகப் பரிவர்த்தனைகள் மீது சுங்க வரிகளை விதிக்க வேண்டாம் என உலக வர்த்தக அமைப்பின் (WTO) உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன. இந்தத் தற்காலிகத் தடை, அது தொடங்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் நீட்டிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், 14-வது அமைச்சர்கள் மாநாட்டில் (MC14), தற்காலிகத் தடையை நீட்டிப்பது குறித்து உறுப்பு நாடுகளால் ஒரு உடன்பாட்டிற்கு வர முடியவில்லை. இதனால், அந்தத் தடை மார்ச் 31 அன்று காலாவதியானது.


தற்போது, நாடுகள் டிஜிட்டல் வர்த்தகப் பரிமாற்றங்கள்மீது சுங்க வரிகளை விதிக்க சுதந்திரம் பெற்றுள்ளன. இருப்பினும், வரும் மாதங்களில் உலக வர்த்தக அமைப்பின் பொதுச் சபை இந்த விவகாரம் குறித்து மீண்டும் விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வளரும் நாடுகளுக்குத் தங்கள் வருவாயைப் அதிகரிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்கக்கூடும் என்றாலும், நுகர்வோர் மற்றும் வணிகங்களுக்கு இது ஒரு சுமையாக அமையும். மின்னணு வர்த்தகத் தடை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிகழ்ந்தது, உலக வர்த்தக அமைப்பின் 66 உறுப்பு நாடுகளால் கையெழுத்திடப்பட்ட மின்னணு வர்த்தக ஒப்பந்தமாகும் (e-commerce agreement (ECA)) ஆகும். இந்த ஒப்பந்தம் டிஜிட்டல் வர்த்தகத்தின் மீதான சுங்க வரிகளைத் தடை செய்கிறது.


உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிப்புத்தகத்தில் (rulebook) இன்னும் இடம்பெறாமலும், கையொப்பமிட்ட உறுப்பு நாடுகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தக்கூடியதாகவும் இருந்தாலும், இந்த ஒப்பந்தம் இரண்டு தனித்தனி சட்டக் கட்டமைப்புகளை உருவாக்கும். ஒன்று, டிஜிட்டல் வர்த்தகத்தின் மீது சுங்க வரிகளை (tariffs on digital trade) அனுமதிக்கும் உலக வர்த்தக அமைப்பு (WTO), மற்றொன்று, அதை அனுமதிக்காத மின்னணு வர்த்தக ஒப்பந்தம் (e-commerce agreement (ECA)) ஆகும்.


இரண்டாவது தடை உத்தரவு 1995 முதல் அமலில் உள்ளது. இது உலக வர்த்தக அமைப்பின், அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள்-டிரிப்ஸ் (Trade-Related Aspects of Intellectual Property Rights(TRIPS)) ஒப்பந்தத்தின் கீழ் விதிமீறல் அல்லாத புகார்களைத் தடுத்து நிறுத்தியது. உலக வர்த்தக அமைப்பு, சட்ட மீறல்களுக்காக மட்டுமல்லாமல், ஒரு நாட்டின் நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவையாக இருந்தாலும், அவை மற்றொரு நாட்டின் எதிர்பார்க்கப்பட்ட நன்மைகளைச் செயலிழக்கச் செய்யும்போதும் நாடுகள் புகார்களைப் பதிவு செய்ய அனுமதிக்கிறது.


பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக வளரும் நாடுகள் இயற்றும் சட்டங்கள், வளர்ந்த நாடுகளின் அறிவுசார் சொத்துரிமைகளின் மூலம் எதிர்பார்க்கப்படும் பலன்களைக் குறைக்கின்றன என்று குற்றம் சாட்டி, அவர்களிடமிருந்து புகார்களைப் பதிவு செய்ய முடிந்தாலும், அவை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை கடந்தகால அனுபவம் காட்டுகிறது. உலக வர்த்தக அமைப்பில் (WTO) பொருட்கள் வர்த்தகம் தொடர்பான 10 விதிமீறல் அல்லாத புகார்களும் தோல்வியடைந்ததே இதற்குச் சான்றாகும்.





பன்முகப் புதுமை முயற்சிகள் (Plurilateral innovation)


14-வது அமைச்சர்கள் மாநாட்டில் (MC14), 166 நாடுகளில் 129 நாடுகளின் ஆதரவுடன், பலதரப்பு முதலீட்டு வளர்ச்சி வசதி (plurilateral Investment Facilitation for Development (IFD)) ஒப்பந்தத்தை உலக வர்த்தக அமைப்பின் (WTO) ஒப்பந்தத்தின் இணைப்பு 4-ல் இணைப்பது என்பது எளிதில் அடையக்கூடிய ஒரு இலக்காக இருந்தது. இருப்பினும், இந்தியாவின் எதிர்ப்பின் காரணமாக அது நிறைவேறவில்லை. உலக வர்த்தக அமைப்பின் சட்டத் தொகுப்பில் பலதரப்பு ஒப்பந்தங்களை இணைப்பதற்கான சட்டப் பாதுகாப்புகள் இல்லாதது உட்பட பல காரணங்களுக்காக, இந்தியா பலதரப்பு முதலீட்டு வளர்ச்சி வசதியை (IFD) இணைப்பதை எதிர்த்தது.


உலக வர்த்தக அமைப்பின் சட்டக் கட்டமைப்பில் புதிதாகச் சேர்க்கப்படும் பன்முக ஒப்பந்தங்கள், அனைவருக்கும் திறந்ததாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும். முதலீட்டு வளர்ச்சி வசதி (IFD) ஒப்பந்தத்தை உள்ளடக்கத் தவறியது, உலக வர்த்தக அமைப்பின் சட்ட நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. ஏனெனில், 21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்வதற்கான விதிகளை வகுப்பதில் இவ்வமைப்பு தற்போது பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறது.


எதிர்காலத்திற்கான செயல் திட்டம் இல்லை


உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தங்களுக்கான தெளிவான செயல் திட்டத்தை 14-வது அமைச்சர்கள் மாநாடு (MC14) வழங்கத் தவறிவிட்டது. உலக வர்த்தக அமைப்பின் தகராறு தீர்வு அமைப்பில், முடங்கிப்போன மேல்முறையீட்டுச் செயல்பாட்டை மீண்டும் செயல்படுத்துவது போன்ற முக்கியப் பிரச்சினைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, மிகவும் விரும்பப்படும் நாடு (MFN) மற்றும் சிறப்பு மற்றும் வேறுபட்ட அணுகுமுறை போன்ற முக்கியக் கொள்கைகளைச் சீர்குலைக்க மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும்.


வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் அதையே தொடர்ந்து செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள் என்றொரு பொதுவான கூற்று உண்டு. வர்த்தகப் பன்முகத்தன்மை எப்போதெல்லாம் மந்தமடைகிறதோ, அப்போதெல்லாம் அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் அதிகரிக்கின்றன என்பதை வர்த்தகப் பன்முகத்தன்மையின் வரலாறு நிரூபிக்கிறது. 1970-களின் முற்பகுதியில், சுங்கவரிகள் மற்றும் வர்த்தகம் மீதான பொது ஒப்பந்த (General Agreement on Tariffs and Trade (GATT)) பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தபோது இது நிகழ்ந்தது. இது, 1974-ம் ஆண்டின் அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301 ஆனது கடுமையான நடவடிக்கைகள் இயற்றப்படுவதற்கு வழிவகுத்தது. நியாயமற்றதாகக் கருதப்படும் வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்க இந்த விதிமுறை அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கிறது. நாம் தற்போது இதேபோன்ற ஒரு சூழ்நிலையைக் காண்கிறோம். ஆனால் இம்முறை காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமலும், மிக அதிக பழிவாங்கும் உணர்வுடனும் இது நிகழ்கிறது. 14-வது அமைச்சர்கள் மாநாட்டில் (MC14) ஏற்படும் ஒரு பின்னடைவு இந்தப் போக்குகளை மேலும் மோசமாக்கும்.


மேலும், 14-வது அமைச்சர்கள் மாநாட்டின் (MC14) தோல்வியானது, உலக வர்த்தக அமைப்புக்கு வெளியே உள்ள நாடுகள் புதிய வர்த்தக விதிகளை உருவாக்கும் போக்கை வேகப்படுத்தும். உலக வர்த்தக அமைப்பின் முக்கியத்துவத்தைத் தக்கவைக்க, புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான தீர்வுகள் அவசியம். உலக வர்த்தக அமைப்புக்குள் பன்முக ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கும் மற்றும் ஏற்றுகொள்ளுவதற்கும் தேவையான சட்டப் பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்குவதில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும். இதை அடைவதற்கு ஒரு புதுமையான அணுகுமுறையும், வர்த்தகப் பன்முகத்தன்மைக்கு அசைக்க முடியாத அரசியல் அர்ப்பணிப்பும் தேவைப்படும்.


பிரபாஷ் ரஞ்சன், ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் ஜிண்டால் குளோபல் சட்டப் பள்ளியில் பேராசிரியராகவும், ஆராய்ச்சித் துணைத் தலைவராகவும் உள்ளார்.


Original article: The World Trade Organization is flailing. -Prabhash Ranjan

Share: