சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்த ஒரு பார்வை: எந்தெந்த அம்சங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்? -ரோஷ்னி யாதவ்

தற்போதைய  செய்தி?


சிந்து நதி நீர் ஒப்பந்தம் (Indus Waters Treaty (IWT)) தொடர்பாக பாகிஸ்தானுடனான சர்ச்சைகள் குறித்து, மே 15 அன்று "சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதாகக் கூறப்படும்" நடுவர் நீதிமன்றம் வழங்கிய "விருது என்று சொல்லப்படுவதை", இந்தியா மே 16-அன்று நிராகரித்தது. ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "நடுவர் நீதிமன்றம் என்று சொல்லப்படும்" இந்த  அமைப்பு உருவாக்கபட்டதை இந்தியா ஒருபோதும் அங்கீகரித்ததில்லை என்று தெரிவித்தார். இந்த  அமைப்பின் மூலம்  மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையோ, வழங்கப்படும் விருதோ அல்லது எடுக்கப்படும் முடிவோ பயனற்றவை ஆகும். சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான இந்தியாவின் முடிவு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்  கூறினார்.


இந்தச் சூழலில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் தெரிந்து கொள்வதும், சிந்து நதி அமைப்பைப் புரிந்துகொள்வதும் முக்கியத்துவம் பெறுகிறது.


முக்கிய அம்சங்கள்:


சிந்து நதிநீர் ஒப்பந்தம் (Indus Waters Treaty (IWT))


1. சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளின் நீர்ப் பங்கீட்டை உறுதி செய்வதற்காக, இந்தியாவும் பாகிஸ்தானும் 1960 செப்டம்பர் 19 அன்று சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் கராச்சியில், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.



2. இந்த ஒப்பந்தத்தில் 12  பிரிவுகளும், 8 இணைப்புகளும் (A முதல் H வரை) உள்ளன. ஒப்பந்தத்தின் விதிகளின்படி, சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகிய “கிழக்கு நதிகளின்” (Eastern Rivers) நீர் முழுவதிலும் இந்தியாவிற்கு பிரத்தியேக உரிமைகள் கிடைத்தன. இது 33 மில்லியன் ஏக்கர் அடி (million acre-feet (MAF)) அல்லது சிந்து நதி அமைப்பின் மொத்த நீரில் ஏறத்தாழ 20% ஆகும்.

3. சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய மூன்று “மேற்கு நதிகளின்” (Western Rivers) மீது பாகிஸ்தான் கட்டுப்பாட்டைப் பெற்றது. இது  135 மில்லியன் ஏக்கர் அடி நீர்,  மொத்த நீரின் 80% அளவு, பாகிஸ்தானுக்கு கிடைத்தது.


4. இருப்பினும், இந்தியா மேற்கு நதிகளின் நீரை, குறிப்பிட்ட வீட்டு உபயோக, நுகர்வு அல்லாத மற்றும் விவசாயத் தேவைகளுக்காகப் பயன்படுத்தலாம். மேலும், வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டிற்கான குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு ஏற்ப, ஆற்றோட்டத் திட்டங்கள் (run-of-the-river (RoR)) மூலம் நீர்மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் இந்தியாவிற்கு உரிமை உண்டு.


5. ஒப்பந்தத்தின் IX  பிரிவு,  பிரச்சனைகளை தீர்க்கும் வழிமுறையைக் கொண்டுள்ளது. இது ஒரு மூன்று-கட்ட செயல்முறையாகும்: முதலாவதாக,  இரண்டு நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட 'நிரந்தர சிந்து ஆணையம்' (Permanent Indus Commission (PIC)) மூலமாகப் பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன. அதன் பிறகு, உலக வங்கியால் நியமிக்கப்படும் 'நடுநிலை நிபுணர்' மூலமாகவும்; இறுதிக்கட்ட நடவடிக்கையாக, 'நிரந்தர நடுவர் நீதிமன்றம்' (Permanent Court of Arbitration) மூலமாகவும் அவை கையாளப்படுகின்றன.


6. குறிப்பாக 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், இந்தியா அந்த ஒப்பந்தத்தில் “திருத்தம்” செய்யவேண்டும் பாகிஸ்தானுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இந்திய நீர் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில், இது போன்ற முதல் அறிவிப்பு இதுவாகும்.


7. 2024-ஆம் ஆண்டு செப்டம்ர் மாதத்தில், இந்தியா இஸ்லாமாபாத்திற்கு மற்றொரு முறையான அறிவிப்பை வெளியிட்டு, இந்தியா தனது நிலைப்பாட்டின் தீவிரத்தை அதிகரித்தது. இந்த முறை, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை "மறுஆய்வு மற்றும் மாற்றம்" செய்யுமாறு இந்தியா கோரிக்கை விடுதுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, "மறுஆய்வு" என்ற வார்த்தை, இந்த ஆண்டு 65 வயதை எட்டும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த புது டெல்லியின் நோக்கத்தையே வெளிப்படையாகக்  காட்டுகிறது.


8. ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதோடு, 10 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து, இந்திய நீர் ஒப்பந்தத்தை (IWT) நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்தது.


சிந்து நதி அமைப்பு (Indus River system)


1. ஒரு நதி, அதன் துணை நதிகளுடன் சேர்ந்த பின்னர், அது நதி அமைப்பு (river system) என்று அழைக்கப்படுகிறது. சிந்து நதி அமைப்பில் ஆறு நதிகள் உள்ளன: அவை சிந்து, ஜீலம், செனாப், ராவி, பியாஸ் மற்றும் சட்லஜ் ஆகும். சிந்து  மற்றும் சட்லஜ்  நதிகள்  பழமையான ஆறுகள் ஆகும். இமயமலை உருவாகும் முன்பே இந்த நதிகள் தோன்றின. திபெத் பகுதியில் உருவாகி, இமயமலைப் பகுதிகள் பிளவுபட்ட போதிலும், நதிகளின் ஓட்டத்தைத் தடைபடாமல் தொடர்ந்த இந்த நதிகள் ஆழமான பள்ளத்தாக்குகளை உருவாக்கியுள்ளன. மற்ற நான்கு நதிகளான ஜீலம், செனாப், ராவி மற்றும் பியாஸ் ஆகியவை இந்தியாவில் உருவாகின்றன.


2. சிந்து நதி சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு  நாடுகளுக்கு செல்கிறது.


3. இந்தியாவில், இந்த நதியானது லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களையும், சண்டிகர் மற்றும் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கும் செல்கிறது.


மேற்கு  ஆறுகள்


1. சிந்து நதியானது, திபெத்தில் உள்ள கைலாஷ் என்ற இமயமலைத் தாண்டி  அமைந்துள்ள மானசரோவர் ஏரிக்கு அருகில் உருவாகிறது. அங்கு இது 'சிங்கி கம்பன்' (Singi Khamban) அல்லது 'சிங்கத்தின் வாய்' (Lion’s Mouth) என்று அழைக்கப்படுகிறது. மேற்கு நோக்கிப் பாய்ந்து, லடாக்கில் உள்ள டெம்சோக் என்ற இடத்தில் இந்தியாவிற்குள் நுழைகிறது. இந்தியாவில், இது லடாக் யூனியன் பிரதேசத்தில், லடாக் மற்றும் காரகோரம் மலைத்தொடர்களுக்கு இடையே செல்கிறது.


2. சிந்து நதியின் முக்கிய வலக்கரை துணை ஆறுகளாக ஷியோக் (ரிமோ பனிப்பாறையிலிருந்து உருவாகிறது). ஷிகார் மற்றும் கில்கிட் ஆகும். அதேவேளையில், ஜாஸ்கர் மற்றும் ஹான்லே ஆகியவை அதன் இடது கரைத் துணை நதிகளாகும். இந்தியாவில் இந்த நதி  மொத்தம் 2,880 கிலோமீட்டர் தூரம் பயணித்து. பாகிஸ்தானின் கராச்சிக்கு அருகே அரபிக்கடலில் கலக்கிறது.


3. ஜீலம் ஆறு (252 கி.மீ.) பிர் பஞ்சால் அருகே உள்ள வெரினாக் என்னும் இடத்தில் ஒரு நீரூற்றில் உருவாகி, ஸ்ரீநகரில் உள்ள வுலர் (Wular) ஏரி வழியாகப் பாய்ந்து பாகிஸ்தானுக்குள் நுழைகிறது. இது பாகிஸ்தானில் உள்ள ஜாங் எனப்படும் இடத்திற்கு அருகே செனாப் நதியுடன் இணைகிறது.


4. சிந்து நதியின் மிகப்பெரிய துணை நதியான செனாப் ஆறு, இந்தியாவில் 1,180 கி.மீ. நீளம்  செல்கிறது. இது இமாச்சலப் பிரதேசத்தின் கீலாங் மாவட்டத்தில் உள்ள தாண்டி என்ற இடத்தில் சந்திரா மற்றும் பாகா ஆறுகள் இணையும் இடத்தில் உருவாகிறது.


கிழக்கு  ஆறுகள்


1. ராவி நதியின் நீளம் 95 கி.மீ ஆகும். இது  இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரோஹ்தாங் கணவாய்க்கு அருகிலுள்ள குல்லு குன்றுகளில் உற்பத்தியாகி, பாகிஸ்தானில் உள்ள சராய் சித்து என்னுமிடத்தில் செனாப் ஆற்றுடன் இணைகிறது.


2. பியாஸ் நதியின் நீளம் 354 கி.மீ. ஆகும். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரோஹ்தாங் கணவாய்க்கு அருகில், கடல் மட்டத்திலிருந்து 4,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பியாஸ் குண்டில் இருந்து உருவாகிறது. இது குலு பள்ளத்தாக்கு வழியாகப் பாய்ந்து, இந்தியாவின் பஞ்சாபில் உள்ள ஹரிகே அருகே சட்லஜ் நதியுடன் கலக்கிறது. இந்திரா காந்தி கால்வாய் அமைப்புக்கு நீரைத் திருப்பிவிடும் ஹரிகே தடுப்பணை (Harike Barrage), 1952-ல் கட்டப்பட்டது.





3. திபெத்தில் உள்ள மானசரோவருக்கு அருகில் உள்ள ராகஸ்தால் ஏரியில் (கடல் மட்டத்திலிருந்து 4,555 மீ உயரம்) உருவாகும் சட்லெஜ் நதி 676 கி.மீ) ஒரு பழமையான  நதியாகும். இது இந்தியாவிற்குள் ரோபார் அருகில் நுழைவதற்கு முன்பு திபெத்தில் 'யானை வாயிலிருந்து உருவாகும் நதி' (Langchen Khambab) என்று அழைக்கப்படுகிறது.


சிந்து நதி அமைப்பு என்பது சிந்து, ஜீலம், செனாப், ராவி, பியாஸ் மற்றும் சட்லஜ் போன்ற ஆறு நதிகளை அமைப்பாகும்.


கிழக்கு நதிகள் என்பது சட்லஜ், பியாஸ் மற்றும் ராவி ஆகும். அவை இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. 


மேற்கு நதிகள் என்பது சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகும். அவை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ளது. 


உலக வங்கி மத்தியஸ்தம் மூலம்  1960-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது.


நிரந்தர சிந்து ஆணையம் (Permanent Indus Commission (PIC)) மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் நடுநிலை நிபுணர் (Neutral Expert) நியமிக்கப்படுவார். அதிலும் முழுமையான தீர்வு கிடைக்காவிட்டால் இறுதியாக நடுவர் மன்றம் (Arbitration) மூலம் தீர்ப்பு வழங்கப்படும்.


இந்தியா மேற்கு நதிகளை வரையறுக்கப்பட்ட நுகர்வு அல்லாத (non-consumptive use) பயன்பாட்டிற்குப் பயன்படுத்தலாம்.


கிழக்கு நதிகளின் மீதான முக்கிய அணை மற்றும் கால்வாய் திட்டங்கள்


1. கிழக்கு நதிகளின் நீரைப் பயன்படுத்துவதற்காக, இந்தியா ராவி நதியின் மீது ரஞ்சித் சாகர் அணையையும், சட்லஜ் நதியின் மீது பக்ரா அணையையும், பியாஸ் நதியின் மீது போங் மற்றும் பாண்டோ அணைகளையும் கட்டியுள்ளது.


2. இந்த நதிகளின் மீதான மற்ற சில முக்கிய திட்டங்களில் பியாஸ்-சட்லஜ் இணைப்பு, மாதோபூர்-பியாஸ் இணைப்பு மற்றும் இந்திரா காந்தி கால்வாய் திட்டம் ஆகியவை அடங்கும். இந்தத் திட்டங்களின் உதவியுடன், இந்தியா கிழக்கு நதிகளின் நீரில் ஏறக்குறைய 95 சதவீதத்தைப் பயன்படுத்துகிறது.


3. இருப்பினும், மேற்கு நதிகளில் இந்தியா செயல்படுத்தும் சில திட்டங்களுக்குத்தான் பாகிஸ்தான் காலப்போக்கில் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது. மேற்கு நதிகளில் இந்தியாவின் முக்கியத் திட்டங்களான சலால் அணைத் திட்டம், பக்லிஹார் நீர்மின் திட்டம், பகல்துல் திட்டம் மற்றும் கிரு திட்டம் ஆகியவை செனாப் நதியின் மீது அமைந்துள்ளன. அதேசமயம், துல்பூல் திட்டம் (Tulbul Project) ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜீலம் நதியின் மீது அமைந்துள்ளது.

ORIGINAL LINK:

Indus Waters Treaty in Focus: What aspects need to be revisited?


Share: