2016 முதல் 2025-ஆம் ஆண்டு வரை இந்தியா தனது புத்தொழில் நிறுவனங்கள் துறையை எவ்வாறு வளர்த்தெடுத்தது. -தில்லை ராஜன் ஏ., சினி சைதன்யா, வாமிகா பெருமாள்

 தேவையான கொள்கை சூழல், வலுவான புத்தொழில் வளர்ச்சி மற்றும் சாதகமான முதலீட்டுச் சூழல் ஆகியவற்றின் காரணமாக 'புத்தொழில் இந்தியா'  (Startup India scheme) திட்டம் வெற்றி பெற்றுள்ளது.


2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தனது சுதந்திர தின உரையில், புத்தொழில்  துறையில் இந்தியாவை 'முதல்' நாடாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பு நாட்டின் தொழில் முன்னேற்றத்துக்கான சூழலில் ஒரு முக்கியமான மாற்றத்திற்கான தொடக்கமாக பார்க்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் புத்தொழில் நிறுவனங்களின் பொருளாதாரம் முதிர்ச்சி அடைந்து, குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது.


பாரம்பரிய வணிகங்களிலிருந்து புத்தொழில் நிறுவனங்களை வேறுபடுத்திக் காட்டும் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன: அவை புதுமைக்கு அளிக்கும் முன்னுரிமை, தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் சந்தை வாய்ப்பு போன்றவை ஆகும். பிற வணிகங்களிலிருந்து புத்தொழில் நிறுவனங்களை வேறுபடுத்தி தெரிந்து வகையில், அரசின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கும் நிறுவனங்களை 'புத்தொழில் நிறுவனங்களாக’ அங்கீகரிக்கும் நடைமுறையை 'தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் துறை' (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) தொடங்கியது. புத்தொழில் நிறுவனங்கள் செயல்படுவதற்கு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் துறையின் அங்கீகாரம் கட்டாயமில்லை என்றாலும், அந்த அங்கீகாரத்தைப் பெற விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அக்காலத்தில் செயல்பட்ட மொத்த புத்தொழில் நிறுவனங்களில் வெறும் 3 சதவீதமாக இருந்த 288 நிறுவனங்கள் என்ற நிலையிலிருந்து, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் துறையின் வரம்பு 2025-ல் 77 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் புத்தொழில் வளர்ச்சிக் கதையின் வெற்றியை அளவிடும் முக்கியமான அளவுகோல்களில் ஒன்றாக, மக்கள் மற்றும் தொழில்முனைவோர் முறையான புத்தொழில் சூழலமைப்பில் இணைவதற்கான அதிகரித்து வரும் விருப்பம் அமைந்துள்ளது.



வெற்றியின் மற்றொரு குறியீடாக, நாடு முழுவதும் புத்தொழில் கலாச்சாரம் பரவியிருப்பது அமைந்துள்ளது. புத்தொழில் நிறுவனங்கள் உருவாவதில், முதல் நிலை நகரங்களிலிருந்து மூன்றாம் நிலை நகரங்களில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2016-ல், புத்தொழில் நிறுவனங்கள் உலகில் முதல் நிலை நகரங்கள் ஆதிக்கம் செலுத்தின. அந்த ஆண்டில் அமைக்கப்பட்ட மொத்த புத்தொழில் நிறுவனங்களில் 65% முதல் நிலை நகரங்களைச் சேர்ந்தவை. மூன்றாம் நிலை நகரங்கள் 15% மட்டுமே இருந்தது. 2020-ல், இந்தப்பங்குகள் முறையே 49% மற்றும் 27%-ஆக மாறின. இருப்பினும், மிகப்பெரிய மாற்றம் 2025-ல் நிகழ்ந்தது. அப்போது புதிய புத்தொழில் நிறுவனங்களில் முதல் நிலை நகரங்களின் பங்கு 18% ஆக இருந்த நிலையில், மூன்றாம் நிலை நகரங்களின் பங்கு 71%-ஆக உயர்ந்தது. இந்த மாற்றம், முக்கிய நகர்ப்புற மையங்களைத் தாண்டி புத்தாக்கம் பரவியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

புத்தொழில் நிறுவனர்களின் வயது மற்றும் பாலினப் பரவல்கள், இளைஞர்களின் வலுவான பங்களிப்பை வெளிப்படுத்துகின்றன. இரு பாலினத்தைச் சேர்ந்த நிறுவனர்களில் கணிசமான பகுதியினர் (66% ஆண் நிறுவனர்கள் மற்றும் 59% பெண் நிறுவனர்கள்) 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார். ஒருவரின் தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே தொழில்முனைவைத் தேர்வு செய்வது, புத்தொழில் நிறுவனங்கள் வளர்வதற்கான சாதகமான மற்றும் ஆதரவான சூழல் நிலவுவதை  காட்டுகிறது.


பெண்கள் தங்களது தொழில்முனைவுப் பயணங்களை ஆண்களைவிட தாமதமாகத் தொடங்குகிறார்கள் என்றும், வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறது என்றும் தரவுகள் காட்டுகின்றன. 30 வயதுக்குட்பட்ட நிறுவனர்களில் பெண்கள்  21%-ஆக இருக்கும் நிலையில், 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் அவர்கள் 33%-ஆக உள்ளனர். பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ஆதரவான சூழலை உருவாக்குவது ஒரு முக்கியமான கொள்கைத் தேவையாக இருந்து வருகிறது. பெண் நிறுவனர்களின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (Compound Annual Growth Rate (CAGR)) 20%-ஆக இருந்தது. இது ஆண்களின் 14% உடன் ஒப்பிடுகையில், பெண்கள் தொழில் முனைவில் அதிகளவில் ஈடுபடும் வலுவான போக்கை  காட்டுகிறது.



2016-ஆம் ஆண்டு மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆண் மற்றும் பெண் நிறுவனர்களின் வளர்ச்சி


நிதி திரட்டும் சூழல்


2016-ஆம் ஆண்டு மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் காலகட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம், இந்திய புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய வளர்ச்சியாகும். 2016-ல் இந்தியாவில் 10,000 புத்தொழில் நிறுவனங்கள் இருந்தன. அவற்றில் 2,000 நிறுவனங்கள் நிதி உதவி (funded ventures) பெற்றவையாகும். 2025-ல் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து, தற்போது 2,50,000 புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 75,000 நிறுவனங்கள் நிதி உதவி பெற்ற பெற்றவையாகும். இது முறையே 25 மடங்கு மற்றும் 38 மடங்கு வளர்ச்சி அடைந்திருப்பதை  குறிக்கிறது.


புத்தொழில் இந்தியா (Startup India) திட்டத்தின் முதல் 10 ஆண்டுகளில், ஆதரவான கொள்கைச் சூழல், வலுவான  வளர்ச்சி மற்றும் சாதகமான முதலீட்டு சூழல் ஆகியவை பல வெற்றிக்கதைகளை உருவாக்கியுள்ளன.


இந்தப் போக்குகள், இந்தியாவை உலகின் முன்னணி புத்தொழில் தொழில் தொடங்கும் நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளன. குறிப்பாக, 2016–2025 காலப்பகுதி இந்தியாவை உலகின் முதல் நான்கு புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கும் நாடுகளின் வரிசையில்  நிலைநிறுத்தியுள்ளது.



குறிப்பு: விளக்கப்பட தரவுகள், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)), பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் (Ministry of Corporate Affairs (MCA)) மற்றும் YNOS வென்ச்சர் எஞ்சின் அமைப்பு ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டன.


தில்லை ராஜன் ஏ., சின்னி சைதன்யா மற்றும் டாக்டர் வாமிகா பெருமாள், சென்னை  இந்திய தொழில்நுட்பக் கழக புத்தொழில் நிறுவனங்களுக்கான ஆராய்ச்சி மையத்தை சார்ந்தவர்கள்.


Original article : How India scaled its startup industry from 2016 to 2025. -Thillai Rajan A., Chinni Chaitanya, Vamika Perumal

Share: