இந்தியா தனது 100-வது ராம்சார் தளத்தைச் சேர்த்துள்ளது — சதுப்பு நிலங்கள் ஏன் முக்கியமானவை? -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி :


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேசத்தின் பல்லியாவில் உள்ள இந்தியாவின் 100-வது ராம்சார் தளமான ஜெய் பிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம் (சுர்ஹா தால்) என்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களின் பட்டியலில் சேர்ப்பதாக அறிவித்தார். இந்தப் பட்டியலில் ஒரு சதுப்பு நிலம் சேர்க்கப்பட்டிருப்பது, அதன் சூழலியல் தன்மையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசின் உறுதியான நிலைப்பாட்டைக் காட்டுகிறது.


இந்தச் சாதனை, சதுப்பு நிலப் பாதுகாப்பில் இந்தியாவின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. ஆனால், இந்தச் சூழல் அமைப்புகளை இவ்வளவு முக்கியமானதாக ஆக்குவது எது?


முக்கிய அம்சங்கள்:


1. 1991-ல், பல்லியா நகரப் பகுதியிலுள்ள பான்ஸ்திஹ் கிராமத்தைச் சேர்ந்த 45 கிராமங்களின் நிலப்பரப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு, மொத்தமாக 3432.93 ஹெக்டேர் பரப்பளவில் ‘சுர்ஹா தால்’ (Surha Taal) உருவாக்கப்பட்டது. 2002-ல், இதன் பெயர் “ஜெய் பிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம்” என்று  மாற்றப்பட்டது.


2. இது பல்லியா நகரப் பகுதியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சரணாலயத்திறக்கு  மேற்கில் பிக்கம்பூர் கிராமம் வரையிலும், வடகிழக்கில் சிங்ஹௌலி வரையிலும், தென்கிழக்கில் துல்வாரா கிராமம் வரையிலும் பரவியுள்ளது. இது பல்லியா மற்றும் பான்ஸ்திஹ் நகரப்பகுதியின் கட்டுப்பாட்டிற்குள்  வருகிறது.


3. சுராஹ்தால் என்பது இயற்கையாக உருவான, ஆண்டு முழுவதும் நீர் கொண்டிருக்கும் வளைவு ஏரி (Oxbow Lake) ஆகும். இது மத்திய ஆசிய பறவை இடம்பெயர்வு பாதையில் (Central Asian Flyway) பயணம் செய்யும் பல்வேறு பறவை இனங்களுக்கு முக்கியமான குளிர்கால தங்குமிடமாக விளங்குகிறது.  உத்தரப் பிரதேச சூழல் சுற்றுலாவின் கூற்றுப்படி, சரணாலயம் வனவிலங்குகளுக்கும் அருகிலுள்ள வேளாண்  நிலங்களுக்கும் ஆதரவளிக்கிறது. பருவமழையின் போது, ​​ஏறக்குறைய 25,000 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்குகிறது. இது, இந்தியாவில் உள்ள மிகச் சில சதுப்பு நிலங்களால் மட்டுமே ஈடுசெய்யக்கூடிய பரந்த அளவிலான இயற்கையான வாழ்விடத்தை உருவாக்குகிறது.


சதுப்பு நிலங்கள் என்றால் என்ன?


1. ராம்சார் ஈரநிலங்கள் ஒப்பந்தம் (Ramsar Convention on Wetlands) ஈரநிலங்களை பின்வருமாறு வரையறுக்கிறது: சதுப்பு நிலங்கள் (marsh), சேற்று நிலங்கள், கரிமண் நிலங்கள் அல்லது நீர்நிலைகள் ஆகியவை இயற்கையானவையாக இருந்தாலும் செயற்கையானவையாக இருந்தாலும், நிரந்தரமானவையாக இருந்தாலும் தற்காலிகமானவையாக இருந்தாலும், தேங்கியோ ஓடியோ இருக்கும் நன்னீர், உவர்நீர் அல்லது உப்புநீரைக் கொண்ட பகுதிகள், மேலும் குறைந்த நேரத்தில் ஆறு மீட்டருக்கு கீழ் ஆழமுள்ள கடல் நீர் பகுதிகளை கொண்டவையே சதுப்பு நிலங்கள் எனப்படுகின்றன.


2. இருப்பினும், இந்திய அரசின் சதுப்பு நில வரையறையானது ஆற்றுப் பாதைகள், நெல் வயல்கள் மற்றும் வணிக நடவடிக்கைகள் நடைபெறும் பிற பகுதிகளை உள்ளடக்கவில்லை. ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட சதுப்பு நிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2017-ன் படி, சதுப்பு நிலங்களின் வரையறையானது, ஆற்றுப் பாதைகள், நெல் வயல்கள், குடிநீர் தேவைகளுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்நிலைகள்/குளங்கள் மற்றும் மீன் வளர்ப்பு, உப்பு உற்பத்தி, பொழுதுபோக்கு மற்றும் நீர்ப்பாசன நோக்கங்களுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டமைப்புகளை உள்ளடக்கவில்லை.


ராம்சார் உடன்படிக்கை (Ramsar Convention) எவ்வாறு உருவானது?


3. ராம்சார் உடன்படிக்கை 1971-ஆம் ஆண்டு ஈரானின் ராம்சார் நகரில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1975-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இது சதுப்பு நிலங்களை மட்டுமே மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசுகளுக்கிடையேயான  முதல் (Intergovernmental) சர்வதேச ஒப்பந்தமாகும்.


உங்களுக்குத் தெரியுமா?


பூமியின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றான சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2-ஆம் தேதி உலக சதுப்பு நில தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “ஈரநிலங்களும் பாரம்பரிய அறிவும்: பண்பாட்டுப் பாரம்பரியத்தைக் கொண்டாடுதல்” (Wetlands and traditional knowledge: Celebrating cultural heritage) என்பதாகும்.


4. இந்த உடன்படிக்கையானது, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களைப் பாதுகாத்தல், ஒரு நாட்டின் எல்லைக்குள் உள்ள அனைத்து சதுப்பு நிலங்களையும் விவேகத்துடன் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் மற்றும் வலசைக்கு செல்லும் உயிரினங்கள் குறித்த சர்வதேச ஒத்துழைப்பு போன்ற மூன்று அடிப்படைக் கொள்கைகளை கொண்டுள்ளது.

5. இந்த மாநாட்டில் 172 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. சதுப்பு நிலக் காப்பகங்களை உருவாக்குவதற்கும், சதுப்பு நில வாழ்விடங்களின் விவேகமான பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் அவை கடமைப்பட்டுள்ளன. இந்தியா 1982-ல் இதில் இணைந்தது. இந்தியாவின் முதல் ராம்சார் தளங்களாக, ஒடிசாவில் உள்ள சிலிகா ஏரி மற்றும் ராஜஸ்தானில் உள்ள கியோலாடியோ தேசிய பூங்கா ஆகியவை அறிவிக்கப்பட்டன.


6. இந்தத் தளங்கள் “சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்கள்” என்று அங்கீகரிக்கப்படுகின்றன. அவை அமைந்துள்ள நாடுகளுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் குறிப்பிடத்தக்க மதிப்பு வாய்ந்தவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஒரு சதுப்புநிலம் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்படுவது, அதன் சூழலியல் தன்மையைப் பாதுகாப்பதை உறுதிசெய்வதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசின் உறுதிப்பாட்டைப் காட்டுகிறது.


சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் என்ன?


7. சதுப்பு நிலங்கள் புவியின் மிகவும் வளமான சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். அவை நிலச் சூழல்களுக்கும் நீர்ச் சூழல்களுக்கும் இடையிலான இடைநிலைச் சூழல் அமைப்புகளாகும். இங்கு நிரந்தரமாகவோ அல்லது பருவகாலமாகவோ நீர் இருப்பதுடன், பல்வேறு தாவர மற்றும் விலங்கு வாழ்வு ஆதரிக்கப்படுகிறது. அவை பல்லுயிர் வளம் கொண்டவை மற்றும் சூழலியல் சமநிலையைப் பாதுக்காப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.


பூமியின் நிலப்பரப்பில் சதுப்பு நிலங்கள் 6 சதவீதம் மட்டுமே இருந்தாலும், அவை 40 சதவீத தாவர மற்றும் விலங்குகளுக்கு வாழ்விடத்தையும் இனப்பெருக்கத்திற்கு தேவையான இடங்களையும் வழங்குகின்றன.


மேலும், சதுப்பு நிலங்கள் புயல் அலைகள், சூறாவளிகள் மற்றும் சுனாமிகளின் தாக்கத்தைத் குறைப்பதன் மூலம், கடற்கரையோரங்களில் வாழும் உலக மக்கள்தொகையில் 60 சதவீத்தினருக்கு இயற்கைப் பாதுகாப்பை வழங்குகின்றன.


சதுப்பு நிலங்கள் மனிதர்களுக்கு உணவு மற்றும் கால்நடைக்கு தேவையான   தீவனத்தை, முக்கியமாக அரிசி மற்றும் மீன் போன்றவற்றை வழங்குவதோடு, மீன்வளம், வேளாண்மை மற்றும் சூழல் சுற்றுலா மூலம் வாழ்வாதாரத்தையும் ஆதரவளிக்கின்றன.


அவை இயற்கையான கடற்பஞ்சுகள் போலச் செயல்பட்டு, அதிகப்படியான மழைநீரை உள்வாங்குவாதன்  மூலம் வெள்ள அபாயத்தைக் குறைக்கின்றன.


திறமையான கார்பன் சேமிப்பு இடங்களாக, சதுப்பு நிலங்கள் மண்ணிலும் உயிரிப் பொருளிலும் (biomass) கார்பனைச் சேமிக்கின்றன.


மாசுபடுத்தும் பொருட்களை வடிகட்டி நீக்குதல், நீரை சுத்திகரித்தல் மற்றும் நீரின் தரத்தைப் பாதுகாத்தல் போன்ற திறன்கள் காரணமாக, சதுப்பு நிலங்கள்    “நிலப்பரப்பை சுத்திகரிக்கும் சிறுநீரகங்கள்” (Kidneys of the Landscape) என்று அழைக்கப்படுகின்றன.


சதுப்பு நிலங்களுக்கு என்னென்ன அச்சுறுத்தல்கள் உள்ளன?


8. அவற்றின் முக்கியத்துவம் இருந்தபோதிலும், சதுப்பு நிலங்கள் பூமியின் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகவும் இருக்கின்றன. 2025-ஆம் ஆண்டின் ராம்சார் மாநாட்டின் உலகளாவிய சதுப்பு நிலக் கண்ணோட்டத்தின்ப்படி, 1970-ஆம் ஆண்டு முதல் குறைந்தது 400 மில்லியன் ஹெக்டேர் சதுப்பு நிலங்கள் அழிந்துள்ளன. அவற்றில் கால் பகுதி மோசமான நிலையில் உள்ளது.


9. 2025-ஆம் ஆண்டின், உலகளாவிய சதுப்புநிலக் கண்ணோட்ட அறிக்கையின்படி, “சதுப்பு நிலங்கள் ஒவ்வொரு ஆண்டும் சமூகத்திற்கு $39 டிரில்லியன்  வரையிலான நன்மைகளை வழங்குகின்றன. ஆனால், நாம் அவற்றை ஆண்டுக்கு 0.52% என்ற விகிதத்தில் தொடர்ந்து இழந்து வருகிறோம்.


சதுப்பு நில இழப்பு என்பது, சதுப்பு நிலத்தின் சூழலியல் தன்மையை கணிசமாக மாற்றும் மனிதச் செயல்பாடுகளால், சதுப்பு நில உயிரினங்கள்  மற்றும் துணை உயிரினங்கள் தங்குவதற்கும், உணவருந்துவதற்கும், ஓய்வெடுப்பதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் போதுமான தரத்துடன் நீர் கிடைக்கும் இடத்தின் அளவு குறைவதாகும். இயற்கை சதுப்பு நிலங்களை வேளாண்மை, மீன் வளர்ப்பு, வனவியல், நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் மற்றும் அதிகரித்து வரும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் போன்ற பிற நிலப் பயன்பாடுகளுக்காக மாற்றுவதால் சதுப்பு நில இழப்பு ஏற்படுகிறது.


2025-ஆம் ஆண்டின், உலகளாவிய சதுப்புநிலக் கண்ணோட்ட அறிக்கை


10. வேளாண்மைக்காக நிலங்களை மாற்றுதல், நகரமயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை சதுப்புநிலப் பகுதிகள் குறைவதற்கான முக்கியக் காரணிகளாகும். மேலும், தொழிற்சாலை மற்றும் வீட்டுக் கழிவுகள் நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றன, மற்றும் நிலையற்ற வேளாண் முறைகள் நீரியல் அமைப்பைச் சீர்குலைக்கின்றன. பருவநிலை மாற்றம், மழைப்பொழிவு முறைகளை மாற்றுவதன் மூலமும் தீவிர நிகழ்வுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமும் இந்தச் சவால்கள் மேலும் அதிகரிக்கிறது.


அலையாத்தி சதுப்புநிலங்கள்


1. அலையாத்தி சதுப்புநிலங்கள் என்பவை வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் கடலோர சதுப்புநிலங்கள் ஆகும். 2025-ஆம் ஆண்டின், உலகளாவிய சதுப்புநிலக் கண்ணோட்ட அறிக்கை, அலையாத்தி சதுப்புநிலங்களை உள்ளடக்கிய 11 பரந்த சதுப்புநில வகைகளை மதிப்பீடு செய்துள்ளது. உலகளாவிய அலையாத்தி சதுப்புநில கண்காணிப்பின்படி, 15.11 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு அலையாத்தி சதுப்புநிலங்ளின்கீழ் உள்ளது.


2. அலையாத்தி சதுப்புநிலங்கள் உப்புத்தன்மையைத் தாங்கக்கூடிய மரங்கள் மற்றும் புதர்களாகும். இவை பொதுவாக ஆற்றுமுகப் பகுதிகள் (Estuaries) மற்றும் அலைக்கற்றைப் பகுதிகளில் (Intertidal Regions) காணப்படுகின்றன. நன்னீரும் உப்புநீரும் சந்திக்கும் பகுதிகளில் இவை வளர்கின்றன. அலையாத்தி சதுப்புநிலங்கள் பொதுவாக காற்றில் மிதக்கும், சுவாசிக்கக்கூடிய வேர்களையும், மெழுகு போன்ற, சதைப்பற்றுள்ள இலைகளையும் கொண்டிருக்கும். மேலும், இவை பூக்கும் தாவரங்களாகும். 26°C முதல் 35°C வரையிலான வெப்பநிலை நிலவும், அதிக மழைப்பொழிவு உள்ள (1,000–3,000 மி.மீ) பகுதிகளில் இவை அதிகமாக வளர்கின்றன.


உங்களுக்குத் தெரியுமா?


ஜூலை 26-ஆம் தேதி 'அலையாத்தி சதுப்புநிலங்கள் சூழல் மண்டலப் பாதுகாப்பிற்கான சர்வதேச நாள்' ஆகக் கொண்டாடப்படுகிறது. 2015-ல் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தின் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) பொது மாநாட்டின் 38-வது கூட்டத்தொடரில் இந்நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


3. அலையாத்தி சதுப்புநிலத் தாவரங்களின் தனித்துவமான பண்பு, அவற்றின் விதைகள் முளைக்கும் விதமாகும். விதைகள் மரத்திலேயே முளைத்து, பின்னர் மரத்திலிருந்து தண்ணீரில் விழுகின்றன; சேறு மற்றும் வண்டல் மண்ணில் படியும்போது மட்டுமே அவை வேரூன்றி வளர்கின்றன. இது அலையாத்தி சதுப்புநிலத் தாவரங்களில் உள்ள ஒரு தனித்துவமான தகவமைப்பு ஆகும்.இது கடுமையான உப்புத்தன்மை கொண்ட சூழல்களிலும் அவை நிலைத்து வளர உதவுகிறது. இந்த நிகழ்வு அறிவியல் ரீதியாக 'கனியிலேயே விதை முளைத்தல்' (vivipary) என்று அழைக்கப்படுகிறது.



4. 2023-ஆம் ஆண்டில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ‘கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான அலையாத்தி சதுப்புநில முன்முயற்சி (Mangrove Initiative for Shoreline Habitats & Tangible Incomes (MISHTI))’-ஐத் தொடங்கியது. இது, ஒரு உயிர் கவசமாகச் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், மிக அதிக உயிரியல் உற்பத்தித்திறன் மற்றும் கார்பன் பிரித்தெடுப்புத் திறனைக் கொண்ட ஒரு தனித்துவமான, இயற்கைச் சூழல் அமைப்பாக சதுப்புநிலங்களை மேம்படுத்துவதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


5. குஜராத் முதல் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் வரை, மீண்டும் வளர்ச்சியடையும் வாய்ப்பை கொண்ட கடற்கரைகள், சூழலியல் மறுசீரமைப்பு, சிறந்த வாழ்வாதார வாய்ப்புகள், பல்லுயிர் பாதுகாப்பு, நீலப் பொருளாதார வளர்ச்சி மற்றும் பருவநிலை நடவடிக்கை ஆகிய பொதுவான தொலைநோக்குப் பார்வையின்கீழ், MISHTI அமைப்பானது 13 கடலோர மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் ஒன்றிணைக்கிறது.


Original article : India adds its 100th Ramsar site — Why are wetlands important? -Khushboo Kumari

Share: