மதமாற்றத்தைத் தொடர்ந்து பழங்குடியினர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதால் ஏற்படும் அரசியலமைப்புரீதியான தாக்கங்கள் யாவை? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


ஒரு வாரத்திற்குப் பிறகு, புது டெல்லி சங்கத்துடன் இணைந்த ஒரு பெரிய ஆதிவாசிக் கூட்டம், கிறிஸ்தவம் அல்லது இஸ்லாமிற்கு மதம் மாறும் பழங்குடியினரை பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes (ST)) பிரிவிலிருந்து "பட்டியல் நீக்கம்" செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.


 "பட்டியல் நீக்கம்" (Delisting) என்பது, கிறிஸ்தவம் அல்லது இஸ்லாமிற்கு மதம் மாறும் பழங்குடியினர், பட்டியல் பழங்குடியினருக்கான சலுகைகளைத் தொடர்ந்து பெறக்கூடாது என்ற கோரிக்கையைக் குறிக்கிறது. இந்தக் கோரிக்கையை எழுப்புபவர்களில் ஆதிவாசி இந்துக்களும் அடங்குவர்.


ஆனால், ஆதிவாசிகளின் மற்றொரு பிரிவான சர்னா சமூகம் தங்களை இந்து என்றோ கிறிஸ்தவர் என்றோ அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. பழங்குடியினருக்கான அங்கீகாரத்தை நீக்குவதற்கு மதம் அடிப்படையாக அமைந்தால், இந்து மதத்திற்கு மாறிய பழங்குடியினருக்கும் அதே விதி பொருந்த வேண்டும் என்று கூறுகிறது.


பட்டியலிலிருந்து நீக்குவது குறித்த இந்த புதிய விவாதம், மதம் மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்பு சார்ந்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. கிறிஸ்தவம் அல்லது இஸ்லாம் மதத்திற்கு மாறும் தலித்துகள், சட்டப்பிரிவு 341-ன் கீழ் பட்டியல் சாதி அங்கீகாரத்தை தொடர்ந்து கேட்க முடியாது என்று உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் கூறிய நிலையில் மீண்டும் இந்த கோரிக்கை எழுந்துள்ளது. இருப்பினும், பழங்குடியினரைப் பற்றிக் கூறும் சட்டப்பிரிவு 342, மதத்தை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.  தற்போது பழங்குடியினர் அடையாளம் மற்றும் மதமாற்றம் தொடர்பான விவாதங்களில் முக்கியப் புள்ளியாக மாறியுள்ளது.



உங்களுக்குத் தெரியுமா?


பட்டியலிலிருந்து நீக்கம் என்ற கருத்து இந்திரா காந்தியின் அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சராக பணியாற்றிய முக்கிய ஆதிவாசி தலைவர் பாபா கார்த்திக் ஓரான் அவர்களிடம் இருந்து தொடங்கியதாகக் கருதப்படுகிறது.


கார்த்திக் ஓரான், 1962-ல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியான லோஹர்தகாவில் போட்டியிட்ட முதல் மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார். அவருக்கு எதிராக நின்ற வேட்பாளர், அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் இனி ஓரான் சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியினர் அல்லாத நபர் என்றும், எனவே அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் பாட்னா உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார். இருப்பினும், பாட்னா உயர் நீதிமன்றம், ஓரோன் என்பது "முதன்மையாக ஒரு பழங்குடி மற்றும் இன அடையாளம், வெறும் மதம் அல்ல" என்று தீர்ப்பளித்தது. கிறிஸ்தவ ஓரான் பழங்குடியினர் தங்கள் பழங்குடி குல முறை, கலாச்சாரம் மற்றும் சடங்குகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதை பாட்னா உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. அவர்கள் "முதலில் ஓரான்கள், அதன் பிறகுதான் கிறிஸ்தவர்கள்" என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. பட்டியலிலிருந்து நீக்கக் கோரும் கோரிக்கையின் எதிர்ப்பாளர்கள், பழங்குடியின அடையாளத்தைத் தீர்மானிப்பதில் மதம் முக்கியமானது அல்ல என்று கூறுவதற்கு, உயர்நீதிமன்றத் தீர்ப்பை அடிக்கடி மேற்கோள் காட்டுகின்றனர்.


1967-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கார்த்திக் ஓரோன் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தபோது, ​​இந்தியா முழுவதும் சாதிகள் மற்றும் பழங்குடியினரைச் சேர்ப்பது மற்றும் விலக்குவது தொடர்பான விதிகளைத் திருத்துவதற்காக, அரசாங்கம் 'பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆணைத் திருத்த மசோதாவை' (Scheduled Castes and Scheduled Tribes Order Amendment Bill) மக்களவையில் அறிமுகப்படுத்தியது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம், அந்த மசோதாநாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது.


அந்தக் குழு, 1969-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி அளித்த   அறிக்கையில், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியப் பழங்குடியினராக மதம் மாறியவர்களைப் பட்டியல் பழங்குடியினர் பிரிவிலிருந்து விலக்குவதற்காக மசோதாவில் திருத்தத்தை மேற்கொள்ள பரிந்துரை செய்தது. இருப்பினும், அரசாங்கம் அந்தப் பரிந்துரை குறித்துத் தனது ஆட்சேபணைகளைத் தெரிவித்தது. நாடாளுமன்றம் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.


Original article : What are the constitutional implications of delisting Scheduled Tribes following religious conversion? -Priya Kumari Shukla

Share: