ஈடுசெய் காடு வளர்ப்பு என்றால் என்ன? -விக்னேஷ் பி. வெங்கடேஷ்

வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் நிலையான வளர்ச்சியை (Sustainable Development) பாதுகப்பதற்கும் ஈடுசெய் காடு வளர்ப்பு (Compensatory Afforestation) ஒரு பயனுள்ள முறையாக இருந்தாலும், அதில் உள்ள முக்கியக் குறைபாடு, புதிதாக உருவாக்கப்படும் மரத் தோட்டங்கள் (Plantations) இயற்கையான காடுகளுக்கு (Natural Ecosystems) சமமானவை அல்ல என்பதாகும்


நாடு முழுவதும் வனவிலங்குகள் மற்றும் பசுமைப் பரப்பைப் பாதுகாப்பதற்கான பல்வேறு முயற்சிகளுடன், ஆற்றுப் படுகையில் உள்ள டால்பின்கள், பனிச்சிறுத்தைகள், இந்திய காண்டாமிருகங்கள் மற்றும் காட்டு நீர் எருமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட நான்கு திட்டங்களுக்கு 'தேசிய ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம்' (National Compensatory Afforestation Fund Management and Planning Authority (CAMPA)) கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. 2016-ஆம் ஆண்டு 'ஈடுசெய் காடு வளர்ப்பு நிதிச் (Compensatory Afforestation Fund Act) சட்டத்தின் கீழ், நிறுவப்பட்ட தேசிய ஈடுசெய் காடுவளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம், ஈடுசெய் காடு வளர்ப்பு நிதியைப் பயன்படுத்துவதற்கான ஒரு ஒழுங்குமுறை அமைப்பாகச் செயல்படுகிறது. இதில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமும் உள்ளூர் அளவிலான திட்டங்களை மேற்கொள்ளத் தங்களது மாநிலங்களுக்கென ஒரு தனி CAMPA அமைப்பைக் கொண்டுள்ளன. அதேவேளையில் தேசிய அளவிலான CAMPA அமைப்பு விரிவான கொள்கை வழிகாட்டுதல்களையும் தொழில்நுட்ப மேற்பார்வையையும் வழங்குகிறது.


ஈடுசெய் காடு வளர்ப்பு என்றால் என்ன?


பெயர் குறிப்பிடுவது போல, பசுமையைப் பராமரிப்பதற்காக உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக மாற்றப்பட்ட வன நிலங்களுக்குப் பதிலாக புதிய காடுகளை உருவாக்கும் நடைமுறையே ஈடுசெய் காடு வளர்ப்பு (compensatory afforestation) ஆகும். ஒரு பிராந்தியத்தின் சூழல் மண்டலத்தை மாற்றும் பெரிய அளவிலான திட்டங்களுக்கு இந்த நடைமுறையை ஒரு காரணமாகக் கூற முடியாது என்றாலும், முக்கியமான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும்போது நீடித்த நிலைத்தன்மையுடன் இருப்பதற்கு ஈடுசெய் காடு வளர்ப்பு ஒரு சிறந்த வழியாகும். இந்தியாவில், வன நிலத்தை வனம் தொடர்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கும் அனுமதி பெறுவதற்கும் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக 'ஈடுசெய் காடு வளர்ப்பு' (compensatory afforestation) இருந்து வருகிறது. இது 'நிலத்திற்குப் பதிலாக நிலம்' மற்றும் 'மரங்களுக்குப் பதிலாக மரங்கள்' என்ற அடிப்படையில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதை நோக்கம் கொண்டுள்ளது. 1980-ஆம் ஆண்டின் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் (Forest (Conservation) Act (FCA)) கீழ், மத்திய அரசின் முன் அனுமதியைக் கோரிச் சமர்ப்பிக்கப்படும் எந்தவொரு முன்மொழிவும், சம்பந்தப்பட்ட மாநில அல்லது யூனியன் பிரதேச நிர்வாகத்தின் சமந்தப்பட்ட அதிகாரியால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட, ஈடுசெய் காடு   வளர்ப்புக்கான விரிவான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்.


ஈடுசெய் காடு  வளர்ப்பு நிதிச் (Compensatory Afforestation Fund Act) சட்டத்திற்கு நிதி எங்கிருந்து வருகிறது?


ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி சட்டத்திற்க்கான முதன்மை நிதி  ஆதாரம், வன நிலங்களை பிற பயன்பாடுகளுக்காக மாற்றும் (Diversion of Forest Land) எந்தவொரு தனிநபர், நிறுவனம் அல்லது அரசு துறையிடமிருந்து வசூலிக்கப்படும் இழப்பீட்டு கட்டணங்கள் (Compensatory Charges) கட்டணங்களாகும். இந்தக் கட்டணங்களில், வன நில இழப்பை ஈடுசெய்வதற்காக மேற்கொள்ளப்படும் ஈடுசெய் காடு வளர்ப்புக்கான (Compensatory Afforestation) செலவுகளும் அடங்கும். இந்த நிதி காலாவதியாகாத (Non-lapsable) தன்மை கொண்டது. ஒரு நிதியாண்டின் முடிவில் பயன்படுத்தப்படாத தொகை காலாவதியாகாமல், அடுத்த நிதியாண்டிற்கும் பயன்ப்படுத்தபடும். மேலும், இந்த நிதி வட்டி ஈட்டும் (Interest-bearing) தன்மை கொண்டது. இந்த நிதி தேசிய ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம்' (National Compensatory Afforestation Fund Management and Planning Authority (CAMPA)) மற்றும் மாநிலம்/ஒன்றியப் பிரதேச தேசிய ஈடுசெய் காடுவளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் நிதிகளுக்கு 10 : 90 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. தேசிய ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் நிதி இந்தியாவின் பொதுக் கணக்கில்  பராமரிக்கப்படுகிறது. அதேபோல், மாநிலம்/ஒன்றியப் பிரதேச தேசிய ஈடுசெய் காடுவளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணைய நிதிகள், அந்தந்த மாநிலம் அல்லது ஒன்றியப் பிரதேசத்தின் பொதுக் கணக்கில் (Public Account) பராமரிக்கப்படுகின்றன.


தேசிய ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணைய நிதிகள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன?


தேசிய ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணைய நிதிகள் நிதிகளின் முக்கியப் பயன்பாடானது, மரங்களை நடுவதன் மூலம் சுற்றுச்சூழல் அமைப்புகளை நீடித்த முறையில் மேம்படுத்துதல், வளங்களைப் பாதுகாத்தல், வனப்பகுதிகளைப் பாதுகாத்தல் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான உள்கட்டமைப்பு மற்றும் வாழ்விடங்களை மேம்படுத்துதல் ஆகும்.


தேசிய ஈடுசெய் காடு  வளர்ப்பு நிதி மேலாண்மை திட்டத்தின்கீழ் உள்ள சமீபத்திய திட்டங்கள் என்னென்ன?

தேசிய ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை திட்டத்தின் (CAMPA) நிர்வாகக் குழு, ஜூலை 10 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில், ஆற்றுப் படுகையில் டால்பின்களுக்கான பாதுகாப்பு மற்றும் மீட்பு செயல் திட்டம், பனிச்சிறுத்தை திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள்தொகை மதிப்பீட்டுடன் கூடிய ஆய்வு, இந்திய காண்டாமிருகத்திற்கான பாதுகாப்பு செயல் திட்டம் மற்றும் காட்டுப் பகுதியில் உள்ள நீர் எருமைக்கான அகில இந்திய பாதுகாப்பு அணுகுமுறை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்தது. மேலும், மணிப்பூரின் புருவக் கொம்பு மான் (Sangai) பாதுகாப்பிற்கான தொடர் ஆதரவிற்கும் ஒப்புதல் அளித்ததுடன், அதன் முதன்மை சதுப்புநில மறுசீரமைப்புத் திட்டமான மிஷ்டி (Mangrove Initiative for Shoreline Habitats and Tangible Incomes (MISHTI)) திட்டத்தை ₹600 கோடி திருத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டுடன்  மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்தது.


தேசிய ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம்' (National Compensatory Afforestation Fund Management and Planning Authority (CAMPA)) குறித்து எழுப்பப்பட்டுள்ள கவலைகள் யாவை?


ஒரு வளரும் பொருளாதாரம் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கு ஈடுசெய்யும் காடு வளர்ப்பு தேவையானதாக இருந்தாலும், அதன் முக்கிய குறைபாடுகளில் ஒன்று, காடு வளர்ப்புப் பகுதிகள் இயல்பாகவே இயற்கைச் சூழல் அமைப்புகளிலிருந்து வேறுபட்டவை என்பதாகும். வளர்ச்சி முயற்சிகளால் சீர்குலைந்த ஒரு பகுதியின் சூழலியல் சமநிலையைக் கருத்தில் கொள்ளாமல் செய்யப்படும் வெறும் காடு வளர்ப்பு, பசுமைப் போர்வையை மீட்டெடுக்கும். ஆனால், அது சூழல் அமைப்பை மீண்டும் உருவாக்குவதில் தோல்வியடையும். ஈடுசெய்யும் காடு வளர்ப்பு ஒப்பந்தத்தில் (CAF) குறிப்பிடப்பட்டுள்ளபடி, காடுகள் அல்லாத பகுதிகளில் இல்லாமல் வன நிலங்களில் ஈடுசெய்யும் காடு வளர்ப்புப் பகுதிகள் மேற்கொள்ளப்படுவது, அந்த இழப்பீட்டின் நோக்கத்தையே சிதைக்கும் ஒரு   பிரச்சினையாகும் என்று காலநிலை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Original Link: What is compensatory afforestation? 


Share: