வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, டிஜிட்டல் ஆளுகை (Digital Governance) மற்றும் ஆதார் (Aadhaar) திட்டத்தின் முன்னோடியின் கருத்தைக் கேளுங்கள்.

ஆர். எஸ். சர்மா  வாதிடுவதுபோல், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக ஆதாரை நம்பகமான முகவரி ஆதாரமாக (Credible Address Proof) ஏற்காமல் இருப்பதன் மூலம், அரசு தானே உருவாக்கியுள்ள ஆதார் தரவுத்தளத்தை (Aadhaar Database) பயனுள்ள முறையில் பயன்படுத்தத் தவறுகிறது. அந்த தரவுத்தளத்தில் உயிர்அடையாளத் தகவல்கள் (Biometric Details) மற்றும் வயது தொடர்பான ஆதாரங்களும் இடம்பெற்றுள்ளன.

நாட்டின் டிஜிட்டல் நிர்வாகத் துறையின் முன்னோடிகளில் ஒருவர், வாக்காளர் பட்டியல் ‘சிறப்பு தீவிர திருத்தப்பணி (Special Intensive Revision (SIR))’ குறித்து முன்வைத்துள்ள விமர்சனங்களை அரசும் இந்தியத் தேர்தல் ஆணையமும் (ECI) கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின்' (Unique Identification Authority of India (UIDAI)) நிறுவன இயக்குநராக, நலத்திட்டங்களைச் செயல்படுத்த அரசுகள் தற்போது சார்ந்திருக்கும் கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய ராம் சேவக் சர்மா, இந்த செயல்முறை தொடங்கியதிலிருந்தே எழுப்பப்பட்டு வரும் கவலைகளை இந்தச்செய்தித்தாளில் வெளியான ஒரு கட்டுரையின் மூலம் வலியுறுத்தியுள்ளார். வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பதில் உள்ள நியாயமான தேவைகளுக்கும் (இரட்டைப் பதிவுகள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குதல் மற்றும் தகுதியுள்ள புதிய குடிமக்களைச் சேர்த்தல்), அதேசமயம் தகுதியுள்ளவர்களைத் தவறாகப் பட்டியலில் இருந்து நீக்கிவிடாமல் இருப்பதற்கான கட்டாயத்திற்கும் இடையே சரியான சமநிலையைப் பாதுகாக்கத் தவறியதற்காகத் தேர்தல் ஆணையம் விமர்சனங்ககளை எதிர் கொண்டுள்ளது. தகுதியை நிரூபிப்பதற்கான சுமை முக்கியமாற்றதாகவும் நியாயமற்ற முறையிலும் குடிமக்கள் மீதே சுமத்தப்படுவதாகப் பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. பிறப்பு, வசிப்பிடம் மற்றும் குடியுரிமைக்கான சான்றுகளைச் சமர்ப்பிக்குமாறு மக்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சர்மா சுட்டிக்காட்டுவது போல, அது போன்ற ஆவணங்களைப் பராமரிப்பதில் அரசே பொறுப்புடன் செயல்பட்டதில்லை என்பதே உண்மையாக உள்ளது. 


ஆதார் திட்டத்தின் மூலம், அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான (Identity Verification) தொழில்நுட்பரீதியாக மிகவும் மேம்பட்ட அமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது. ஆனால், ஆர். எஸ். சர்மா  கூறுவதுபோல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்ததிற்க்காக ஆதாரை நம்பகமான முகவரி ஆதாரமாக (Credible Address Proof) ஏற்காமல் இருப்பதன் மூலம், உயிர்அடையாளத் தகவல்கள் (Biometric Details) மற்றும் வயது ஆதாரம் ஆகியவற்றையும் கொண்டுள்ள, அரசே உருவாக்கியுள்ள அந்தத் தரவுத்தளத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த அரசு தவறுகிறது. இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் (Digital Public Infrastructure (DPI)) அடிப்படை நோக்கம், குடிமக்களிடம் அதிக ஆவணங்களைக் கேட்பதல்ல. மாறாக, குறைவான தகவல்கள் மற்றும் ஆவணங்களின் மூலமே சேவைகளை வழங்குவதாகும். ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறை இதற்கு நேர்மாறான திசையில் செல்வதாகத் தெரிகிறது. ஆர். எஸ். சர்மா கூறுவதுபோல், “நாடு ஏற்கனவே தீர்வு கண்டுவிட்ட ஒரு பிரச்சினையை, தேவையற்ற வகையில் ஆவணங்களைச் சேகரிக்கும் (Document-heavy) முறையின் மூலம் மீண்டும் தீர்க்க முயல்கிறது


வாக்குரிமை பறிக்கப்படும் (Disenfranchisement) சாத்தியக்கூறைக் கொண்ட ஒரு நடைமுறைக்கு, மிக நுணுக்கமான அரசியலமைப்பு ஆய்வு தேவைப்படுகிறது. எனவே, அரசாங்கமும் இந்தியத் தேர்தல் ஆணையமும், சில காலத்திற்கு முன்பு வரை இந்த அமைப்பின் ஓர் அங்கமாக இருந்த ஒருவரின் வார்த்தைகளைப் புறக்கணிக்க இயலாது: “தனது கடமைகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் ஒரு அரசு, தங்களது மக்கள் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கச் செய்வதில்லை.” வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த அறிக்கை (SIR) செயல்முறை தொடங்கியபோது இந்தியத் தேர்தல் ஆணையத்தை அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்குமாறு வலியுறுத்தியது. ஆனால், மேற்கு வங்கத்தில் அந்த ஆய்வு நடத்தப்பட்டபோது குறைந்த விழிப்புணர்வுடன் இருந்த உச்சநீதிமன்றம், ஷர்மாவின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்த வேண்டும்: இந்தியாவிடம் தற்போது உலகம் உற்றுநோக்கும் வகையிலான ஒரு டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) உள்ளது. அதில் எதையும் நம்ப முடியாது என்று கூறுவது   தவறானதாக  அமையும்.



Share: