முக்கிய அம்சங்கள்:
— 30 கிலோ எடை கொண்ட சோழர் காலத்துச் செப்புப்பட்டயங்கள் (Chola Plates) மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவது, அவை இந்தியாவிற்குச் சொந்தமானவை என்பதற்கான வலுவான ஆதாரங்களை இந்தியா வழங்கியதாலும், காலனித்துவ காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைத் திருப்பித் தருவதற்கான நெதர்லாந்து (டச்சு) அரசாங்கத்தின் கொள்கையினாலும் சாத்தியமாகியுள்ளது. கடந்த 1862-ஆம் ஆண்டு முதல் லைடன் பல்கலைக்கழகத்தில் (Leiden University) வைக்கப்பட்டிருந்த இந்த செப்புப்பட்டயங்கள், நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களால் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவை இன்னும் சில வாரங்களில் இந்தியாவை வந்தடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
— இந்தியப் பண்பாட்டு அமைச்சகத்தின் 2023-ஆம் ஆண்டின் கோரிக்கையை ஏற்று, நெதர்லாந்தின் தேசியக் காலனித்துவ சேகரிப்புக் குழுவின் (Colonial Collections Committee) ஆலோசனையின் பேரில் இந்த மீட்பு நடவடிக்கை ஒப்புக்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்தச் சோழர் காலத்துச் செப்புப்பட்டயங்கள் இந்தியாவிற்குச் சொந்தமானவை என்றும், நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு புத்த வழிபாட்டுத் தலம் மற்றும் பல மடாலயங்களுக்குக் கிராம வருவாயை வழங்குவது தொடர்பான உரிமைகள் குறித்த முக்கியப் பதிவுகள் இதில் அடங்கியுள்ளன என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.
— இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான மற்றும் மகிழ்ச்சியான தருணம் என்று ‘X’ தளத்தின் சமூக ஊடகப் பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதில் அவர், "...சோழர் காலச் செப்புப்பட்டயங்களில் (Chola Copper Plates) 21 பெரிய பட்டயங்களும், 3 சிறிய பட்டயங்களும் அடங்கும். இவை பெரும்பாலும் உலகின் மிக அழகான மொழிகளில் ஒன்றான தமிழில் எழுதப்பட்டுள்ளன. மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழன் முன்பு அளித்த வாக்குறுதியை, அவரது மகனான முதலாம் ராஜேந்திர சோழன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துவதை இவை விவரிக்கின்றன. மேலும், சோழப் பேரரசின் பெருமையையும் இவை பிரதிபலிக்கின்றன. சோழர்கள், அவர்களின் பண்பாடு மற்றும் கடல்சார் வலிமை குறித்து இந்தியா மிகுந்த பெருமிதம் கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்காக அவர் நெதர்லாந்து அரசுக்கும், லைடன் பல்கலைக்கழகத்திற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
— கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த, ஒரு வெண்கல வளையத்தால் ஒன்றாக இணைக்கப்பட்ட 21 செப்புப்பட்டயங்கள் இந்த வரலாற்றுப் பொருளில் (இதன் தோற்றம்: கி.பி. 1687) அடங்கியுள்ளன. அந்த வெண்கல வளையத்தில் இராஜேந்திர சோழரின் அதிகாரப்பூர்வ முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. இந்த 21 பட்டயங்களில், ஐந்து பட்டயங்கள் சமஸ்கிருத மொழியிலும், மீதமுள்ள பட்டயங்கள் தமிழ் மொழியிலும் கல்வெட்டு எழுத்துக்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
— மற்றொரு வரலாற்றுப் பொருள் (கி.பி. 1688-ஐச் சேர்ந்தது) மூன்று செப்புப்பட்டயங்களைக் (Copper plates) கொண்டுள்ளது. இதில் தமிழ் கல்வெட்டுகள் (Tamil inscriptions) செதுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று பட்டயங்களும் முதலாம் குலோத்துங்க சோழ மன்னரின் முத்திரையைக் கொண்ட ஒரு வெண்கல வளையத்தால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
— லைடன் பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி, இந்த செப்புப்பட்டயங்களின் தொல்லியல் பின்னணி குறித்த ஆய்வு, இவை 1687 மற்றும் 1700-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தால் (Vereenigde Oostindische Compagnie) நாகப்பட்டினத்தில் ‘Fort Vijf Sinnen’ கோட்டை கட்டப்பட்டபோதும் மற்றும் அங்கிருந்த 'சீனப் பாகோடா' (Chinese Pagoda) தளம் மறுசீரமைப்பு செய்யப்பட்டபோதும் இவை கண்டறியப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. அந்த காலகட்டத்தில், நாகப்பட்டினம் டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் (VOC) கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது.
உங்களுக்குத் தெரியுமா?
— சென்னை சுங்கத்துறை அளித்துள்ள தகவலின்படி, ஆனைமங்கலம் செப்பேடுகளில் 21 பெரிய தகடுகளும், மூன்று சிறிய தகடுகளும் உள்ளன. தமிழ்நாட்டின் சோழர்காலத் துறைமுக நகரமான நாகப்பட்டினத்தில் இருந்த ஒரு புத்த விகாரத்திற்கு (Buddhist monastery), புகழ்பெற்ற சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜன் வழங்கிய நிலக்கொடைகளைக் குறிக்கும் வகையில் இவை வெளியிடப்பட்டன. இந்த விகாரமானது, தென்கிழக்கு ஆசியாவின் சைலேந்திர வம்சத்து மன்னரான சூளாமணிவர்மனால் (Chulamanivarman) கட்டப்பட்டது.
— சோழப் பேரரசு தற்போதைய தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகாவின் சில பகுதிகள் வரை பரவியிருந்தது.
— கி.பி 947-ஆம் ஆண்டில் இரண்டாம் பராந்தக சோழ மன்னருக்கு மகனாகப் பிறந்த முதலாம் ராஜராஜன், சோழ வம்சத்தின் மிகச் சக்திவாய்ந்த பேரரசராகக் கருதப்படுகிறார். செப்பேட்டு கல்வெட்டுகளின்படி, இவருக்குப் பிறப்பின்போது வைக்கப்பட்ட பெயர் 'அருள்மொழிவர்மன்' என்பதாகும். கி.பி 985-ஆம் ஆண்டில் அரியணை ஏறிய பிறகு, அவர் "அரசர்களுக்கெல்லாம் அரசன்" என்ற பொருள்படும் 'ராஜராஜன்' என்ற பட்டப் பெயரைப் சூடிக்கொண்டார்.
— கடந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ராஜேந்திர சோழனின் வடஇந்திய வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஒரு நினைவு நாணயத்தை வெளியிட்டு, அது தொடர்பான ஒரு கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். சோழ வம்சத்தின் புகழ்பெற்ற கடற்படைத் தலைவரான முதலாம் ராஜேந்திரன், தனது தந்தை முதலாம் ராஜராஜனிடமிருந்து ஒரு வலிமையான ராஜ்யத்தை மரபாகப் பெற்றார். அவரது ஆட்சியின்போதும் சோழப் பேரரசின் விரிவாக்கம் தொடர்ந்து நீடித்தது.
— கி.பி. 11 மற்றும் 12-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் ஆகிய மூன்று அரசக் கோயில்களும் சோழர்களின் கலைச்சிறப்பிற்கு மிகச்சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) இந்த மூன்று கோயில்களையும் 1987-ஆம் ஆண்டில் "அழிவில்லா மாபெரும் சோழர் காலக் கோயில்கள்" (Great Living Chola Temples) என்ற பெயரில் உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது.
Original Link: about the Emperors of the Chola Kingdom.