மாற்றங்களைச் சரிசெய்தல்: தகுதி அடிப்படையிலான மருத்துவக் கல்வி பாடத்திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் குறித்து . . .

 புதிய பாடத்திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையம் (NATIONAL MEDICAL COMMISSION (NMC)) திரும்பப் பெற்றது அனைவராலும் வரவேற்க்கப்படுகிறது.  


சமூக முன்னேற்றத்திற்கு கல்வி முக்கியம். ஆனால், கல்வி என்று அழைக்கப்படும் அனைத்தும் நல்லது அல்ல. கால மாற்றத்தினால் கல்வியில் திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட தகுதி அடிப்படையிலான மருத்துவக் கல்வி (Competency-Based Medical Education) பாடத்திட்ட வழிகாட்டுதல்களை அரசாங்கம் சமீபத்தில் திரும்பப் பெற்றது. இந்த வழிகாட்டுதல்கள் பல தவறான விளக்கங்களைக் கொண்டிருந்தன.

 

ஆகஸ்ட் 31-அன்று வெளியிடப்பட்ட பாடத்திட்டம்,  பால்புதுமையினரை "இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள்" (unnatural sexual offences) என்று குறிப்பிட்டது மற்றும் அவற்றை பாலியல் குற்றங்கள் என்ற பிரிவின் கீழ் சேர்த்தது. 


தேசிய மருத்துவ ஆணையம் (NATIONAL MEDICAL COMMISSION (NMC)) தேவையான ஏழு மணிநேர மாற்றுதிறனாளிகளுக்கான பயிற்சியை அடிப்படை படிப்பிலிருந்து நீக்கியது. இதைச் செய்வதன் மூலம், தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவ மாணவர்களை சரியான நேரத்தில் பின்னுக்குத் தள்ளுவது மட்டுமல்லாமல், குறைந்தபட்சம் இரண்டு சட்டங்களை மீறியது மற்றும் ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்களைப் புறக்கணித்தது.

 

பால்புதுமையினரை குற்றங்கள் அல்லது வக்கிரங்கள் என்று பெயரிடுவதன் மூலம், தேசிய மருத்துவ ஆணையம்,  திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 (Transgenderpersons (Protection of Rights) Act, 2019)-ஐ மீறியது. மேலும், சென்னை மற்றும் கேரள உயர் நீதிமன்றங்கள் எச்சரித்த பிறகு, LGBTQIA+ சமூகத்தைப் பற்றி தவறான  அல்லது பாரபட்சமான தகவல்களை ஏற்க வேண்டாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் அனைத்து மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கும் அக்டோபர் 2021-ஆம் ஆண்டில் கூறியது.


அடிப்படைப் பாடத்தில் இருந்து மாற்றுதிறனாளிகளுக்கான தேவையான  பயிற்சிகளை நீக்குவதன் மூலம், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் (Rights of Persons with Disabilities Act) 2016, தேசிய மருத்துவ ஆணையம் மீறியது.  பள்ளிகள், கல்லூரிகள் மற்றும்  பல்கலைக்கழகங்கள் தங்கள் பாடத்திட்டத்தில் குறைபாடுகள் உள்ளவர்களின் உரிமைகளை சேர்க்க வேண்டும் இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கான பயிற்சியின் ஒரு பகுதியாகமாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி இருக்க வேண்டும் என்றும் அது அறிவுறுத்துகிறது.

 

தேசிய மருத்துவ ஆணையம், பல ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு, 2019-ஆம் ஆண்டில் மாற்றுதிறனாளிகளுக்கான திறன்களை தனது பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியது. இந்தத் திறன்கள், மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்புக்கான தடைகளைக் உடைப்பதற்கும், தரமான பராமரிப்புக்கான நியாயமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் அடிப்படை உரிமைகள் தேவைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

 

திருநங்கைகள் மற்றும் ஊனமுற்றோர் உரிமைக் குழுக்கள் (Transgender and disability rights groups) திருத்தப்பட்ட பாடத்திட்டத்திற்கு எதிராக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்புக்கு கடிதம் எழுதப்போவதாக குழுக்கள் மிரட்டின.  தவறுகள் உடனடியாக சரி செய்யப்படாவிட்டால், தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறினர்.


 

தற்போது முடிவுக்கு வந்தாலும், இச்செயல் பொதுமக்கள் மற்றும் சமூகத்தில் மிகவும் பின் தங்கிய குழுக்களின் நம்பிக்கையை சேதப்படுத்தியுள்ளது. அரசாங்கம்  நலன்களை மனதில் கொண்டிருக்கிறதா என்ற சந்தேகத்தை இது அவர்களுக்கு ஏற்படுத்தியது. உணர்வுகளையும் பழைய பார்வைகளையும் மாற்றுவது கடினமான செயல்முறையாகும். இந்த சிறிய ஆதாயங்களை ஒரு அரசாங்க அமைப்பு ரத்து செய்வது பாரபட்சமான செயல். வழிகாட்டுதல்களை திரும்பப் பெற்றது ஒரு பெரிய நிவாரணம்.



Original article:

Share:

நிதிப் பற்றாக்குறையை நிதி விவேகத்திற்கான விதிமுறையாகக் கருதவும் -சி.ரங்கராஜன், டி.கே.ஸ்ரீவஸ்தவா

 தற்போது, குறைந்த அளவிலான குடும்ப சேமிப்புகள் (household financial savings) இருப்பதால், நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) 3%-ஆக வைத்திருக்க வேண்டும்.

 

அரசாங்கத்திற்கு வருவாயை விட செலவு அதிகமாக இருந்தால், அது பல்வேறு சிக்கல்களை உருவாக்கும். 1980-ஆம் ஆண்டில், அதிக நிதிப்பற்றாக்குறைகள் மற்றும் வளர்ந்து வரும் அரசாங்கக் கடன் ஆகியவை கடினமான பணச் சமநிலை நிலைமைக்கும், அதிக வட்டி செலுத்துதலுக்கும் வழிவகுத்தது.  இதனால், அரசு தனது வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிக கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

 

நிதிநிலை அறிக்கையின் குறிப்பு


2024-25-ஆம் ஆண்டிற்கான  ஒன்றிய அரசின் இறுதி நிதிநிலை அறிக்கை, 2026-27-ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதே இலக்கு என்றும், ஒன்றிய அரசின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாக குறையும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். ஒன்றிய அரசின் நிதிப்பற்றாக்குறை 2024-25-ல் 4.9%  இருந்து 2025-26-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5% ஆக குறைக்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிதி ஒருங்கிணைப்பு (fiscal consolidation) ஏன் மிகவும் முக்கியமானது?


இரண்டு ஆண்டுகளுக்கான இந்த நிதிப் பற்றாக்குறை அளவுகளுடன், ஒன்றிய அரசின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி  விகிதம் 2025-26-ஆம் ஆண்டில் 54% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மதிப்பீடு இரண்டு ஆண்டுகளில் 10.5% என்ற பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. 


மொத்த உள்நாட்டு உற்பத்தி  கடன் விகிதத்தை மட்டும் குறைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடைய ஒரு குறிப்பிட்ட திட்டத்தை நிர்ணயிக்கவில்லை. 2018-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தபட்ட நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (Fiscal Responsibility and Budget Management (FRBM)) இலக்குகளை ஒன்றிய அரசுக்கு 40% மற்றும் மாநில அரசாங்கத்திற்கு 60% என்ற இலக்கை காலவரையறையின்றி கைவிடுவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.  


நிதிப் பற்றாக்குறையை 4.5% ஆக வைத்திருக்கும் அதே வேளையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 10% -11% ஆக வளர்ந்தால், ஒவ்வொரு ஆண்டும் வீழ்ச்சியடையும் கடனுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை பராமரிக்க முடியும். இந்த நிதிப் பற்றாக்குறை மட்டத்தில், கடனுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 2048-49-ஆம் ஆண்டுக்குள் 48%-ஆகக் குறைந்து. மொத்த உள்நாட்டு உற்பத்தி  கடன் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே இருக்கும்.


மாநில அரசுகள் அவற்றின் சொந்த நிதி பொறுப்புடைமை சட்டங்களை (Fiscal Responsibility Legislations (FRLs)) கொண்டுள்ளன மற்றும் நிதிப் பற்றாக்குறையை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (Gross State Domestic Product (GSDP)) 3% ஆக நிர்ணயித்துள்ளன. இருப்பினும், அவர்கள் தங்கள் இலக்குகளை கைவிட்டு, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கவனம் செலுத்தலாம். ஒன்றிய  மற்றும் மாநில அரசுகள் நிதிப் பற்றாக்குறையை முறையே 4.5% மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% ஆக பராமரித்தால், ஒருங்கிணைந்த பற்றாக்குறை பல ஆண்டுகளுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5% ஆக இருக்கும். 


  கடன் மற்றும் நிதிப் பற்றாக்குறையால், தனியார் துறை மூலம் கிடைக்க கூடிய கிடைக்கக்கூடிய முதலீட்டு நிதிகளை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். இந்தச் சூழல் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்யும்.

 

பன்னிரண்டாவது நிதிக்குழு, தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா துறைகளுக்குக் கிடைக்கும் பணம் வீட்டுச் சேமிப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் இருந்து வருகிறது என்று கூறியது. இந்தப் பணத்தை ஒன்றிய, மாநில அரசுகள் தங்கள் பங்கை கடனாகப் பெறப்படலாம் என்று வாதிட்டது. 


பன்னிரண்டாவது நிதிக்குழு (அதன் அறிக்கையின் பத்தி 4.41-ல்) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% குடும்ப சேமிப்பு, 1.5% நடப்புக் கணக்கு பற்றாக்குறையுடன் சேர்ந்து, அரசாங்க நிதிப் பற்றாக்குறை 6% ஆகவும், தனியார் நிறுவனங்கள் 4%, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5% கடன்களை அரசு சாரா பொது நிறுவனங்கள் வாங்குகின்றன என குறிப்பிட்டது.


சமீப காலமாக, வீட்டு சேமிப்பு குறைந்துள்ளது. 2022-23-ஆம் ஆண்டில், வீட்டு நிதி சேமிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3% ஆக இருந்தது. இது முந்தைய நான்கு ஆண்டுகளில் 7.6% ஆக இருந்தது.  குடும்ப சேமிப்பு 5.3% ஆகவும், வெளிநாட்டு மூலதன வரவு (foreign capital inflow) சுமார் 2% ஆகவும் இருந்தால், மொத்த முதலீட்டு உபரி (total investible surplus) 7.3% ஆகும். இந்த உபரியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5% ஆக இருக்கும். நிதிப் பற்றாக்குறை சரி செய்யபட்டால், குடும்ப சேமிப்பு கணிசமாக அதிகரிக்கும். 


நிலையான கடன் மற்றும் நிதிப் பற்றாக்குறை


  நிதிப்பற்றாக்குறைக்கும்  மொத்த உள்நாட்டு உற்பத்தி-கடன் விகிதத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது.  மொத்த உள்நாட்டு உற்பத்தி-கடன் விகிதத்தைக் குறைக்க, நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தைச் சரிசெய்ய வேண்டும். 


2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிறுவப்பட்ட இந்தியாவின் நிதிப் பொறுப்புக் கட்டமைப்பானது, மாநிலங்கள் தங்கள் நிதிப் பொறுப்புச் சட்டங்களை (Financial responsibility laws (FRLs)) ஏற்றுக்கொள்வதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி-கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி நிதிப் பற்றாக்குறை அளவுகளுக்கான வழிகாட்டுதல்களை அமைத்துள்ளது.


இந்தியாவில், மொத்த உள்நாட்டு உற்பத்தி-கடன் விகிதம் நிதிப் பொறுப்புச் சட்ட விதிமுறைகளை விட அதிகமாக இருந்தால், வருவாய் வரவுகளுக்கு (revenue receipts) வட்டி செலுத்தும் விகிதம் அதிகமாக இருக்கும். இது மற்ற செலவினங்களுக்கான அரசாங்கத்தின் வருவாயைக் கட்டுப்படுத்துகிறது.


2016-17-ஆம் ஆண்டில் வரிப் பகிர்வைத் (tax devolution) தவிர்த்து, வருவாய் ரசீதுகளுக்கான ஒன்றிய அரசின் வட்டி செலுத்துதலின் விகிதம் 35%-ஆகக் குறைந்தது. இருப்பினும், 2021-22-ஆம் ஆண்டு முதல் 2023-24-ஆம் ஆண்டு  வரை, இந்த விகிதம் சராசரியாக 38.4% ஆக அதிகரித்துள்ளது. வரி பகிர்வு மற்றும் மானியங்கள் உட்பட அனைத்து வருவாய் ஆதாரங்களையும் கருத்தில் கொள்ளும்போது, ​​இந்த விகிதம் சராசரியாக 51.6% ஆக இருந்தது.

 

ஒரு சர்வதேச ஒப்பீடு


பல நாடுகளில் இந்தியாவை விட அரசாங்க கடனுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகமாக உள்ளது. இருப்பினும், வருவாய் ரசீதுகளுடன் ஒப்பிடும்போது அவர்களின் வட்டி செலுத்தல்கள் மிகக் குறைவாக உள்ளது. 2015-19-ஆம் ஆண்டுக்கு இடையில், வருவாய்க்கு வட்டி செலுத்துதல் விகிதம் ஜப்பானில் சராசரியாக 5.5%, இங்கிலாந்தில் 6.6% மற்றும் அமெரிக்காவில் 8.5% ஆக இருந்தது. இதற்கு மாறாக, 2015-16-ஆம் ஆண்டு முதல் 2019-20-ஆம் ஆண்டு வரை, வருவாய் ரசீதுகளுக்கான இந்தியாவின் ஒருங்கிணைந்த வட்டி செலுத்துதல் (combined interest payments) விகிதம் சராசரியாக 24% ஆக இருந்தது, இடமாற்றங்களைக் கணக்கிட்ட ஒன்றிய அரசின் விகிதம் சராசரியாக 49% ஆக இருந்தது. 


சமீபத்திய கொள்கைகள் கடனுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தை ஒரு முக்கிய காரணியாக குறிப்பிடுகின்றன. ஆனால், அந்த இலக்கை அடைவதற்கான இலக்கு அல்லது பாதையை குறிப்பிடவில்லை. பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையின் சிக்கல் என்னவென்றால், COVID-19 தொற்றுநோய் போன்ற இயற்கை பேரிடர்கள்  கடனுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தை கடுமையாக மாற்றின. எடுத்துக்காட்டாக, இந்தியாவின் கடனுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் தொற்றுநோய் காரணமாக 2019-20-ஆம் ஆண்டில் 50.7%-ஆக இருந்து 2020-21-ஆம் ஆண்டில் 60.7% ஆக உயர்ந்தது. 


தொற்றுநோய்க்கு முந்தைய கடன் அளவுகளுக்குத் திரும்புவது மெதுவாக உள்ளது. இன்னும் அந்த இலக்கிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். பொருளாதார பின்னடைவுகளுக்குப் பிறகு கடனுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதங்களை சரிசெய்வது அவற்றை மீண்டும் கீழே கொண்டு வருவதை விட வேகமாக இருக்கும். அரசாங்கங்கள் பெரும்பாலும் கடன் அளவைக் குறைப்பதில் தாமதப்படுத்துகின்றன. வருவாயுடன் ஒப்பிடும்போது வட்டி அதிகமாக செலுத்துகின்றன.

 

முதலீடு செய்ய போதுமான பணம் இல்லை என்றால் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதில் எந்தப் பயனும் இல்லை. தற்போதைய, குறைந்த குடும்பச் சேமிப்பைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% வைத்திருக்க வேண்டும். இந்த இலக்கை அடைய தெளிவான திட்டம் வேண்டும். இந்த விதியை தளர்த்துவது மோசமான நிதி நிர்வாகத்திற்கு வழிவகுக்கும்.


சி.ரங்கராஜன், பேராசிரியர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர். 

டி.கே. ஸ்ரீவஸ்தவா, பேராசிரியர் மற்றும் பதினாறாவது நிதி ஆணையத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்.



Original article:

Share:

கிக் தொழிலாளர்களின் இ-ஷ்ரம் சேர்க்கை அதிகரிக்கப்பட வேண்டும்

 தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் என்ற அவர்களின் இரட்டை அடையாளம், அவர்கள் சமூகப் பாதுகாப்பு பலன்களை இழக்க நேரிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. 


இ-ஷ்ரம் தளத்தில் ( e-shram portal) அமைப்புசாரா துறை தொழிலாளர்களைச் சேர்ப்பதை அதிகரிக்க மத்திய அரசு சமீபத்தில் வலியுறுத்தியுள்ளது.


Gig Workers- ஒரு சுதந்திரமான ஒப்பந்ததாரர்கள் அல்லது பகுதி நேர பணியாளராக, பொதுவாக சேவைத் துறையில் தற்காலிக வேலைகளில் ஈடுபடும் அமைப்புசாரா நபர்கள் ஆவார்.


 அதே நேரத்தில் இது தொடர்பாக 'நடை மேடை தொழிலாளர்களுக்கு' முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. 2021-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இ-ஷ்ரம் தளம், சுமார் 300 மில்லியன் தொழிலாளர்களைச் சேர்த்துள்ளது. இது ஒரு சுவாரஸ்யமான சாதனையாகும். அமைப்புசாரா துறை தொழிலாளர்களில் சுமார் 75 சதவீதம் பேர் (மொத்த தொழிலாளர்களில் சுமார் 80 சதவீதம்) பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று அது அறிவுறுத்துகிறது. 


இருப்பினும், வாக்குறுதியளிக்கப்பட்ட நன்மைகள் (ஓய்வூதியம், ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு) பயனாளிகள் அல்லது அவர்களின் உறவினர்கள் இல்லாமல் வழங்கப்படுகிறதா என்பது குறித்து குறைவான நிச்சயத்தன்மை உள்ளது. ஏப்ரல் 2023-ஆம் ஆண்டில் மக்களவையில் ஒரு அறிக்கையின்படி, அமைப்புசாரா தொழிலாளர்களின் நலத் திட்டங்களுக்காக 2020-2025 நிதியாண்டு காலத்திற்கு  ₹704 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.


இதில் மார்ச் 2023-ஆம் ஆண்டு வரை ₹418 கோடி ரூபாய்  வழங்கப்பட்டது. பதிவுசெய்யப்பட்ட எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு இது குறைவாகத் தெரிகிறது. கோவிட்டுக்குப் பிந்தைய ஆண்டுகளில் அவர்களின் விரைவான வளர்ச்சியிலிருந்து எழுகிறது. இது நகர்ப்புறங்களில் இணைய அணுகல் மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் வளர்ச்சியுடன் ஒத்துப்போகிறது. 


தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் என்ற அவர்களின் இரட்டை அடையாளம், அவர்கள் சமூகப் பாதுகாப்பு பலன்களை இழக்க நேரிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. தற்போது, இதுபோன்ற தொழிலாளர்களில் எந்த விகிதத்தில் இ-ஷ்ரம் தளத்தில்  சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.,


 ஏனெனில் இது தொடர்பாக  விவரங்களை இ-ஷ்ரம் தளம்  வழங்கவில்லை. தொழிலாளர்களை சேர்க்க திரட்டிகளை வற்புறுத்துவதற்கான ஒரு உந்துதல் தேவைப்படுகிறது. தற்போது, அத்தகைய தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை கூட ஒரு  எதிர்மறையாக உள்ளது.   நிதி ஆயோக் ஆய்வு, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை 'கிக் தொழிலாளர்களுக்கு' 7.7 மில்லியன் எண்ணிக்கையை மேற்கோள் காட்டுகிறது. இது உண்மையில் அனைத்து தற்காலிக தொழிலாளர்களையும் குறிக்கிறது. 


2029-30-ஆம் ஆண்டில் நடைமேடை தொழிலாளர்களின் எண்ணிக்கை 23.5 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விவசாயம் அல்லாத தொழிலாளர்களில் 6.7 சதவீதமாக உள்ளது. இது இன்று 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. காலமுறை தொழிலாளர் நலன் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey) ஒரு முயற்சியை மேற்கொண்ட போதிலும், அது துல்லியமற்றதாகவே உள்ளது. 


நடை மேடை தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கண்டறிய மற்றொரு வழி நலன்புரி வாரிய (welfare board) வழியாகும். ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா திட்டமிட்டபடி,  நலன்புரி நோக்கங்களுக்காக பரிவர்த்தனை கட்டணத்திலிருந்து செஸ் வரியைக் கழிக்கும் நோக்கில், எதிர்பார்த்தபடி, சேவை வழங்குநர்களை இங்கே திரட்டி குழுவுடன் சேர்த்துக் கொள்கிறது.


எவ்வாறாயினும், இ-ஷ்ரம் பயிற்சி அனைத்து வகை 'கிக்' அல்லது அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான நலன்புரி சேவைகளை வழங்குவதை நோக்கி நகர வேண்டும். 


நடை மேடை தொழிலாளர்கள் பொது விநியோக அமைப்பு (Public Distribution System (PDS)) போன்ற நன்கு நடத்தப்படும் சேவைகளிலிருந்து விலக்கப்படக்கூடாது. ஏனெனில் அவர்கள் ஒரு சொத்தை சொந்தமாக வைத்திருப்பார்கள். ஆயுஷ்மான் பாரத் அல்லது அதற்கு சமமான திட்டங்களில் இதுபோன்ற வகையான விலக்குகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். தொடக்கத்தில், ஒரு விரிவான கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் கிக் மற்றும் நடை மேடைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையின் சிறந்த தரவுத்தொகுப்பு கிடைக்கச் செய்யப்பட வேண்டும்.  மேலும், அவர்களுக்கு இதுவரை கிடைத்த நலத்திட்ட உதவிகள் குறித்து ஆராய வேண்டும்.



Original article:

Share:

பிரதமர் நரேந்திர மோடியின் சிங்கப்பூர் பயணம் இந்தியாவின் குறைமின்கடத்தி (Semiconductor) உந்துதலுக்கு ஏன் முக்கியமானது -சுபாஜித் ராய்

 பிரதமர் மோடியின் சிங்கப்பூர் பயணத்தின் போது  சிலிகான் சில்லு (chip)  உற்பத்தியில் கவனம் செலுத்துவது புவிசார் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது. சிங்கப்பூர் தொழில்துறையில் ஒரு ஆரம்ப நகர்வாக இருந்தது. அதன் ஒத்துழைப்பு அதிக வாக்குறுதியைக் கொண்டுள்ளது. 


பிரதமர் நரேந்திர மோடி தனது தென்கிழக்கு ஆசிய சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக சிங்கப்பூர் சென்றார். அவர் முன்னதாக பயணத்தின் முதல் பகுதியில் புருணை தாருஸ்ஸலாம் சென்றிருந்தார். இந்தியப் பிரதமர் ஒருவர் புருணைக்கு மேற்கொண்ட முதல் பயணமும், சிங்கப்பூருக்கு மோடியின் ஐந்தாவது பயணமும் இதுவாகும். 

இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் தொலைநோக்கு பார்வையில் புருனே முக்கிய பங்குதாரராக உள்ளது. இந்த பயணத்தின் போது, உலகின் மிக நீண்டகாலம் ஆட்சி செய்த மன்னரான சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை மோடி சந்தித்தார். வர்த்தகம், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் கலாச்சார உறவுகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். 


சிங்கப்பூரில், குறைமின்கடத்திகள் (Semiconductor), டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், சுகாதாரம், திறன் மேம்பாடு குறித்த ஒப்பந்தங்களுக்கு இந்தப் பயணம் வழிவகுத்தது. இந்தியா-சிங்கப்பூர் குறைமின்கடத்தி சுற்றுச்சூழல் கூட்டாண்மை (India-Singapore Semiconductor Ecosystem Partnership) குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதை பிரதமர் மோடியும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் நேரில் பார்த்தனர். 


ஏவுகணைகள் மற்றும் மொபைல் போன்கள் முதல் கார்கள் மற்றும் கணினிகள் வரை பரந்த அளவிலான தயாரிப்புகளுக்கு குறைமின்கடத்தி (Semiconductor) அவசியம். எனவே, சிங்கப்பூருடனான ஒப்பந்தம் புவிசார் பொருளாதாரம் ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. 


கோவிட் -19 தொற்றுநோய்களின் போது, விநியோக இடையூறுகள் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள், குறிப்பாக தைவான் ஜலசந்தி மற்றும் தென் சீனக் கடலில் சீனாவின் நடவடிக்கைகள் காரணமாக, இந்தியா தனது சொந்த குறைமின்கடத்தி தொழிலை உருவாக்க வேண்டிய அவசரத்தை அதிகரித்தது. உலகளாவிய சிலிகான் சில்லு (chip) தொழில் ஒரு சில நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களால் மட்டுமே கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், இந்தியா இந்த உயர் தொழில்நுட்ப மற்றும் விலையுயர்ந்த துறையில் சமீபத்தில் நுழைந்துள்ளது. 


இந்தியா குறைமின்கடத்தி (Semiconductor) திட்டம் 2021-ஆம் ஆண்டில் 76,000 கோடி ரூபாய் ஊக்கத் திட்டத்துடன் தொடங்கியது. இந்த திட்டம் குறைமின்கடத்தி ஆலைகளுக்கான மூலதன செலவில் பாதியை உள்ளடக்கிய மானியத்தை வழங்குகிறது. பிப்ரவரியில், சுமார் 1.26 லட்சம் கோடி ரூபாய் குறைமின்கடத்தி முதலீடுகளுக்கு தொடர்பான திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 


டாடா குழுமம் மற்றும் தைவானின் பவர்சிப்  மேனுஃபேக்சரிங் கார்ப்பரேஷன் (Powerchip Semiconductor Manufacturing Corporation (PSMC)) இடையே ஒரு கூட்டணியை அரசாங்கம் அறிவித்தது. இந்த கூட்டாண்மை ஒரு குறைமின்கடத்தி ஃபேப்ரிகேஷன் ஆலையை (semiconductor fabrication plant) நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் இதுவரை நான்கு அசெம்பிளி யூனிட்டுகள் உட்பட ஐந்து குறைமின்கடத்தி சில்லுகள் (Semiconductor) யூனிட்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 


சிங்கப்பூரின் சிலிகான் சில்லு (chip) கதை


சிங்கப்பூர் அதன் ஆரம்பகால தொடக்கம் மற்றும் அதன் முதல் பிரதமர் லீ குவான் யூவின் தொலைநோக்கு காரணமாக வலுவான குறைமின்கடத்தி தொழில்துறையைக் கொண்டுள்ளது. 


கிறிஸ் மில்லரின் *சிப் வார்: உலகின் மிக முக்கியமான தொழில்நுட்பத்திற்கான போராட்டம்* (2022) படி, லீ குவான் யூ 1973-ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனிடம் வேலைகளை உருவாக்க ஏற்றுமதியை நம்பியிருப்பதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் அசெம்பிளி வசதிகளைக் கட்டுவதில் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் மற்றும் நேஷனல் செமிகண்டக்டர்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் ஆதரவளித்தது. 


1980-ஆம் ஆண்டில் தொடக்கத்தில், மின்னணுத் தொழில் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% பங்களித்து அதன் உற்பத்தி வேலைகளில் கால் பகுதியை வழங்கியது. 


தற்போது, சிங்கப்பூர் உலகின் குறைமின்கடத்திகளில் சுமார் 10%, உலகளாவிய ஃபேப்ரிகேஷன் திறனில் 5% மற்றும் குறைமின்கடத்தி உபகரணங்களில் 20% உற்பத்தி செய்கிறது. உலகின் முதல் 15 குறைமின்கடத்தி நிறுவனங்களில் ஒன்பது சிங்கப்பூரில் அமைந்துள்ளன. ஒருங்கிணைந்த சுற்று (integrated circuit (IC)) வடிவமைப்பு, இணைத்தல், தொகுத்தல், சோதனை, கட்டுமானம் மற்றும் உபகரணங்கள் / மூலப்பொருள் உற்பத்தி போன்ற குறைக்கடத்தி மதிப்புச் சங்கிலியின் அனைத்து அம்சங்களிலும் உள்ளூர் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. 




முக்கியமான பாடங்கள் 


1960-ஆம் ஆண்டு மற்றும் 1970-ஆம் ஆண்டுகளில், அமெரிக்க சிலிகான் சில்லு (chip) உற்பத்தியாளர்கள் தொழிலாளர் செலவுகளைக் குறைக்கவும், ஒரு திறமையான தொழிலாளர் சக்தியைக் கண்டறியவும் தங்கள் உற்பத்தி செயல்முறையின் சில பகுதிகளை தென்கிழக்கு ஆசியாவிற்கு அனுப்பத் தொடங்கினர். 


சிங்கப்பூர் அதன் உள்கட்டமைப்பு, இணைப்பு, நிலையான வணிகச் சூழல் மற்றும் முழு குறைமின்கடத்தி மதிப்புச் சங்கிலியை உள்ளடக்கிய முன்னணி நிறுவனங்களின் செறிவு ஆகியவற்றால் வெற்றி பெற்றது. கூடுதலாக, சிங்கப்பூரில் பொருத்தமான மனித மூலதனம் உள்ளது. 


சிங்கப்பூரில் குறைக்கடத்தி சில்லுகள் (Semiconductor) ஆலைகள் 374 ஹெக்டேர் பரப்பளவில் நான்கு ஃபேப்ரிகேஷன் பூங்காக்களில் அமைந்துள்ளன. முதலீட்டாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட உள்கட்டமைப்பு தீர்வுகளை அரசாங்கம் வழங்குகிறது. 


திறமைகளை வளர்க்க, சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த சுற்று (integrated circuit (IC))  வடிவமைப்பில் பட்டப் படிப்புகளை வழங்குகின்றன. அவர்கள் தங்கள் ஊழியர்களுக்கான முனைவர் பட்ட ஆராய்ச்சியில் குறைமின்கடத்தி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். 


குறிப்பாக அமெரிக்க-சீனப் போட்டி அதிகரித்து வரும் நிலையில், விநியோகச் சங்கிலி விரிதிறனை மேம்படுத்துவதில் உலகளாவிய கவனம் செலுத்துவதால் சிங்கப்பூர் பயனடைகிறது. 


2022-ஆம் ஆண்டில், தைவானின் யுனைடெட் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் சிங்கப்பூரில் ஒரு குறைமின்கடத்தி ஃபேப்பில் $5 பில்லியன் முதலீட்டை அறிவித்தது, இந்த ஆண்டு செயல்பாடுகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


செப்டம்பர் 2023-ஆம் ஆண்டில், குளோபல்ஃபவுண்டரீஸ் சிங்கப்பூரில் $4 பில்லியன் ஃபேப்ரிகேஷன் (fabrication) ஆலையைத் திறந்தது. இது மேம்பட்ட "28 nm" முனை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறப்பு சில்லுகளை உற்பத்தி செய்யும். 


ஜூன் 2024-ஆம் ஆண்டில், வாகன, தொழில்துறை, நுகர்வோர் மற்றும் மொபைல் சந்தைகளுக்காக 40 முதல் 130 nm சில்லுகளை உற்பத்தி செய்யும் ஆலைக்கு $7.8 பில்லியன் கூட்டு முயற்சியை அறிவித்தன. 2027-ஆம் ஆண்டில் உற்பத்தி தொடங்க உள்ளது. 


சவால்கள் மற்றும் வாய்ப்புகள் 


புதுதில்லியின் பார்வையில், சிங்கப்பூரின் குறைமின்கடத்தி தொழில்துறை உபகரணங்கள், கார்கள் மற்றும் தொழில்துறை உபகரணங்களில் பயன்பாடு மீது கவனம் செலுத்துகிறது. இது செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும் உயர்நிலை தர்க்க சில்லுகளை உருவாக்குகிறது. 


உற்பத்திச் செலவுகள் அதிகரித்து வருவதால், குறைமின்கடத்தி (Semiconductor) நிறுவனங்கள் சில குறைந்த செலவு, தொழிலாளர் தேவைப்படும் செயல்பாடுகளை சிங்கப்பூருக்கு வெளியே நகர்த்தி வருகின்றன. உதாரணமாக, குறைமின்கடத்தி (Semiconductor) சோதனை மற்றும் அசெம்பிளி சேவை வழங்குநரான யுடாக், சில செயல்பாடுகளை தாய்லாந்துக்கு மாற்றியுள்ளது. குறைமின்கடத்தி (Semiconductor) முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஊக்கத்தொகைகளையும் சிங்கப்பூர் நாடவில்லை. 


இந்தியா உட்பட நாடுகள் தங்கள் சொந்த குறைமின்கடத்தி துறைகளை உருவாக்கி வருகின்றன. இது அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள் மற்றும் குறைந்த நிலம் மற்றும் தொழிலாளர் வளங்கள் காரணமாக சிங்கப்பூரின் தொழில்துறைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். 


திறனை வளர்ப்பதிலும், குறைமின்கடத்தி தொழில்துறை பூங்காக்களை நிர்வகிப்பது குறித்த அறிவைப் பகிர்ந்து கொள்வதிலும் சிங்கப்பூருடன் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளை இந்தியா காண்கிறது. 

இந்தியாவின் பெரிய நிலப்பரப்பு மற்றும் குறைந்த தொழிலாளர் செலவுகள் ஆகியவை சிங்கப்பூரிலிருந்து குறைக்கடத்தி நிறுவனங்களை விரிவாக்கத்திற்காக ஈர்க்கக்கூடும். கூடுதலாக, இந்தியா தனது சொந்த குறைமின்கடத்தி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க சிங்கப்பூர் குறைமின்கடத்தி உபகரணங்கள் மற்றும் பொருள் உற்பத்தியாளர்களுடன் ஒத்துழைக்க முடியும்.



Original article:

Share:

உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு இந்தியா ஒரு மாற்று வளர்ச்சிப் பாதையை வழங்குகிறது -சச்சின் சதுர்வேதி

 நிலைத்தன்மை, சுகாதாரப் பாதுகாப்பு, நிதி உள்ளடக்கம் போன்ற துறைகளில் கொள்கை வகுப்பதில் அனுபவங்கள் மற்றும் நுண்ணறிவுகளை பகிர்ந்து கொள்வதன் மூலம், மற்ற வளரும் நாடுகளுக்கு இந்தியா ஒரு புதிய திசையை வழங்க முடியும். 


பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சி மாநாட்டில் (Voice of Global South Summit (VoGSS)) "டெவலப்மென்ட் காம்பாக்ட்" (Development Compact) என்ற புதிய கட்டமைப்பை அறிமுகப்படுத்தினார். திறன் வளர்ப்பு, தொழில்நுட்ப பகிர்வு, வளர்ச்சிக்கான வர்த்தகம், மானியங்கள் மற்றும் சலுகை நிதி ஆகிய ஐந்து வகையான ஈடுபாடுகளை சமநிலைப்படுத்துவதை இந்த கட்டமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.  இந்தியாவின் வளர்ச்சி ஒப்பந்தம் வெற்றி பெற்றால், உலகளாவிய தெற்கத்திய நாடுகளுடன் ஈடுபடுவதற்கான புதிய தரத்தை அமைக்கும். 


உலகளாவிய தெற்கு பகுதி கடுமையான கடன் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (United Nations Conference on Trade and Development (UNCTAD)) 2023 படி, வளரும் நாடுகளின் பொதுக் கடன் 2023-ஆம் ஆண்டில் $29 டிரில்லியனை எட்டியது.  இந்த கடனுக்கான அவர்களின் நிகர வட்டி 847 பில்லியன் டாலர்.  ஐம்பத்தி நான்கு வளரும் நாடுகள் தங்கள் வருவாயில் 10% க்கும் அதிகமாக  செலவிட்டன.  


கூடுதலாக, வளரும் நாடுகள் 2022-ஆம் ஆண்டில் எதிர்மறையான நிகர வள பரிமாற்றத்தைக் கண்டன. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (The Organization for Economic Cooperation and Development (OECD)) நாடுகள் தங்கள் ஐ.நா இலக்கான மொத்த தேசிய உற்பத்தியில் 0.7% அதிகாரப்பூர்வ வளர்ச்சி உதவியாக ((official development assistance) (ODA)) வழங்குவதையும், அவற்றின் $100 பில்லியன் காலநிலை மாற்ற உறுதிப்பாட்டையும் பூர்த்தி செய்யத் தவறியதால் கடன் நெருக்கடி மோசமடைந்துள்ளது. 


உலகளாவிய தெற்கு வளர்ச்சி என்ற கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ரீகனிசம் மற்றும் தாட்சரிசத்தால் (Reaganism and Thatcherism’s approach) உந்தப்பட்ட உலகக் கொள்கையிலிருந்து மாறியது வளரும் நாடுகளுக்கான கொள்கை இடத்தை பிடித்தது. இது ராவுல் ப்ரெபிஷ் மற்றும் பிறரின் மைய-சுற்றளவு கோட்பாடு (centre-periphery theory) பற்றிய கவலைகளை வலுப்படுத்தியது. உலகளாவிய தெற்கு  பகுதியின் சரிந்த பொருளாதார வளர்ச்சி, சமூக உள்ளடக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றிற்கான மாற்று வளர்ச்சிப் பாதைகள்  புதிய நம்பிக்கையை வழங்குகிறது. 


வளர்ச்சி அனுபவங்களையும், கொள்கை நுண்ணறிவுகளையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். இந்த ஆண்டு உச்சி மாநாட்டின் கருப்பொருள், "நிலையான எதிர்காலத்திற்கான உலகளாவிய தெற்கை மேம்படுத்துதல்", அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வது மற்றும் தெற்கு முன்னோக்குகளின் அடிப்படையில் புதிய வளர்ச்சி முன்னுதாரணங்களை ஆராய்வதில் கவனம் செலுத்துகிறது. 


இந்தியாவின் சமீபத்திய வளர்ச்சி முயற்சிகள் உலகளாவிய தெற்கிற்கு ஐந்து வாய்ப்புகளை வழங்குகின்றன: 


நிலைத்தன்மை: 


சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறையை (Lifestyle for Environment (LiFE)) வலியுறுத்துதல், நிலையான வளர்ச்சி இலக்குகளை மீண்டும் புதுப்பித்தல் மற்றும் சூரிய பேனல்கள் மற்றும் சூரிய பண்ணைகள் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவித்தல். 


சுகாதார பாதுகாப்பு: 


"ஒரே உலகம் ஒரே ஆரோக்கியம்" (“One World One Health”) என்ற கருத்தை ஊக்குவித்தல்.  இந்தியாவின் ஆரோக்கிய மைத்ரி மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் தீவுகளில் மருத்துவமனைகள் மற்றும் மக்கள் மருந்தக மையங்களை உருவாக்குவதற்கான ஆதரவு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 


மனிதாபிமான பதில்: 


பப்புவா நியூ கினியா, கென்யா, காசா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் நெருக்கடி காலங்களில் இந்தியாவின் பங்கு திறமையான வழிமுறைகளை கையாண்டது. 


நிதி உள்ளடக்கம்: 


டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மூலம் நிதி உள்ளடக்கம் மற்றும் கடைசி மைல் இணைப்பை ஊக்குவித்தல்.  டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்த 12 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தங்களை செய்துள்ளது. 





கல்வி மற்றும் திறன்கள்: 


கல்வி, திறன்கள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் பரஸ்பர இணைப்புகளை வலுப்படுத்துதல். 


இந்தியாவின் வளர்ச்சி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நிறுவன கட்டமைப்புகள் முக்கியமானதாக இருக்கும். அறிவு மேம்பாடு மற்றும் திறன் வளர்ப்புக்கான வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சி மாநாட்டில் (Voice of Global South Summit (VoGSS))  பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டார். இத்தகைய நிறுவனங்கள் அறிவு பரிமாற்றத்தை எளிதாக்கலாம் மற்றும் அணுகல், சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள முடியும். 


மற்ற குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் பின்வருமாறு: 


  1. திறன் மேம்பாட்டிற்காக 2.5 மில்லியன் டாலர் சிறப்பு நிதி. 


  1. வர்த்தக கொள்கை வகுப்பதில் பயிற்சிக்கு $1 மில்லியன். 


     3)   $25 மில்லியன் ஆரம்ப பங்களிப்புடன் ஒரு சமூக தாக்க நிதி. 


இந்தியா தற்போது ஆண்டுதோறும் சுமார் 7.5 பில்லியன் டாலரை பல்வேறு உலகளாவிய தெற்கு கூட்டாளர்களுக்கு வழங்குகிறது. 


உலகளாவிய தெற்கு ஒன்றிணைந்து பொதுவான பிரச்சனைகள் நிவர்த்தி செய்ய பிரதமர் மோடியின் அழைப்பு முக்கியமானது.  


அதிகரித்து வரும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் பாதிப்புக்கு மத்தியில் இந்த பிரச்சினைகளை விவாதிக்க வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சி மாநாட்டில் (Voice of Global South Summit (VoGSS))  ஒரு தளமாக செயல்படுகிறது. 




இடைக்கால அரசாங்க ஆலோசகர் முஹம்மது யூனுஸின் பங்கேற்பு உட்பட வங்கதேச சமீபத்திய நிகழ்வுகள், நிலையற்ற சக்திகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் அமைதியான தீர்வுகளை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.



Original article:

Share:

இந்தியாவில் தேர்தல் செயல்முறை: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எவ்வாறு வாக்களிக்கிறது?

 இந்தியாவில் தேர்தல் செயல்முறை என்பது இந்திய தேர்தல் ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் பல கட்ட நடைமுறையாகும். இந்தியாவில் தேர்தல் நடைமுறை என்ன? அது எப்படி தொடங்கி எப்படி முடிகிறது? இந்தியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் தேர்தலின் பங்கு என்ன? 


தேர்தல்கள் மூலம் இந்திய ஜனநாயகத்தை செயல்படுத்துவது என்பது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதைத் தாண்டி உள்ளது. மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கும் தேசிய நிர்வாகத்தில் பங்கேற்பதற்கும் இது ஒரு வழியாகும். இந்த செயல்முறை அரசியல் பொறுப்புணர்வை ஊக்குவிக்கிறது மற்றும் தலைவர்கள் பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. 


பன்முகத்தன்மைக்கு இடமளிப்பதன் மூலம் பெரிய அளவிலான ஜனநாயக நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கான இந்தியாவின் தேர்தல் செயல்முறை ஒரு முன்மாதிரியாக அமைகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போன்ற தொழில்நுட்பங்கள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ( Election Commission of India (ECI)) போன்ற சுதந்திர அமைப்புகள் தேர்தல்களின் நம்பகத்தன்மையையும் செயல்திறனையும் உறுதிப்படுத்த உதவுகின்றன. 


இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, நவீன இந்தியாவின் நிறுவனர்கள் உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையை ஏற்றுக்கொண்டனர் என்று குறிப்பிட்டுள்ளார். சாமானிய இந்தியர் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று அவர்கள் நம்பினர். இருப்பினும், பரவலான கல்வியறிவின்மை மற்றும் வறுமை போன்ற காரணங்கள் இருந்தன. 


எடுத்துக்காட்டாக, முதல் பொதுத் தேர்தலின் போது, தகுதியான வாக்காளர்களில் 85% பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. இது வாக்காளர்களைக் கண்டறிவது  மற்றும் பதிவு செய்வது ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக மாறியது.  

தேர்தல் ஜனநாயகத்தின் தேர்வை "ஒரு மாபெரும் முன்னோக்கிய பாய்ச்சல், ஒரு துணிச்சலான முயற்சி, ஒரு இணையற்ற சாகசம்" என்று எஸ்.ஒய் குரேஷி விவரித்தார். 


ரஜினி கோத்தாரி, தனது "இந்தியாவில் அரசியல்" என்ற புத்தகத்தில், சமூக இயக்கத்தின் அடிப்படையில் தேர்தல் முறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சுதந்திரத்திற்குப் பிறகு, உயர் வர்க்கத் தலைவர்கள் அடித்தட்டு வர்க்கங்களின் ஆதரவைப் பெற வேண்டியிருந்தது. பஞ்சாயத்துகளை ஒரே கட்டமைப்பில் ஒருங்கிணைப்பது அவர்களை ஒழுங்குபடுத்த உதவியது. மேலும் "மர அதிகாரத்துவம்" (wooden bureaucracy) சவால் செய்யப்பட்டது. மர அதிகாரத்துவம் என்பது ஒரு விருப்பமற்ற மற்றும் ஊழல் அதிகாரத்துவத்தைக் குறிக்கிறது, இது பல இந்திய மாநிலங்களில் பொதுவானது. 


ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் போன்ற பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. ஜார்க்கண்ட் ஒரு எதிர்ப்பான அரசியல் வரலாற்றைக் கொண்டுள்ளது. 23 ஆண்டுகளில் ஏழு முதல்வர்களுடன். பாஜகவின் ரகுபர் தாஸ் மட்டுமே 2014 முதல் 2019 வரை முழு ஐந்தாண்டு பதவிக்காலத்தை வகித்த ஒரே முதல்வர் ஆவார். ஜம்மு-காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு அதன் மாநில அந்தஸ்து கலைக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இது மிகவும் முக்கியமானது. 


மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க இந்தியா முதலில் தபால் வாக்கு முறையைப் பயன்படுத்துகிறது.

 இந்த அமைப்பில், அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுகிறார்கள். தேர்தல்களை நடத்துவதற்கு இந்த முறை நேரடியானது. 


மாநிலங்களவை மற்றும் குடியரசுத் தலைவர் தேர்தல்களில் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை அரசியல் நிர்ணயசபை பரிந்துரைத்தது. மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து வாக்காளர் குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 


தேர்தல் ஒற்றை மாற்று வாக்கு முறையைப் பயன்படுத்துகிறது, இது விகிதாசார பிரதிநிதித்துவத்தின் ஒரு வடிவமாகும். மாநிலங்களவையின் கலவை வெவ்வேறு கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதத்தை பிரதிபலிக்கிறது என்பதை உறுதிப்படுத்த இந்த அமைப்பு உதவுகிறது. 


இதேபோல், நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய வாக்காளர் குழுவால் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 


தேர்தல்களை நடத்துவதற்கான செயல்முறை பல படிகளை உள்ளடக்கியது: 


எல்லை நிர்ணய ஆணையத்தால் இட ஒதுக்கீடு, தேர்தல் அறிவிப்புகள், வேட்பு மனுக்கள், பிரச்சார அறிக்கைகள், வாக்களிப்பு செயல்முறைகள், வாக்குப்பதிவு நாட்கள், வாக்கு எண்ணிக்கை மற்றும் சபையை உருவாக்குதல். எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது இங்கே: 


 




எல்லை நிர்ணய ஆணையம்: 


இந்திய அரசியலமைப்பின் 82 மற்றும் 170 வது பிரிவுகள், ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் உள்ள இடங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றை தொகுதிகளாகப் பிரித்தல் ஆகியவற்றை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என குறிப்பிடுகிறது. 


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை அடையாளம் காண்பதும் இந்த நடைமுறையில் அடங்கும். தேர்தல் ஆணையம் எல்லை நிர்ணய ஆணைக்குழு (Delimitation Commission) உத்தரவுகளைப் பின்பற்றுகிறது. எல்லை நிர்ணய ஆணையம் பாராளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது. 


1951, 1961 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள் தொகை முறையே 36.1, 43.9 மற்றும் 54.8 கோடியாக இருந்தது, மக்களவை 494, 522 மற்றும் 543 இடங்களைக் கொண்டிருந்தது. இது சராசரியாக ஒரு இருக்கைக்கு 7.3, 8.4 மற்றும் 10.1 லட்சம் நபர்கள் ஆகும். 


 தேர்தல் அறிவிப்பு மற்றும் நியமனம்: 


இந்திய தேர்தல் ஆணையம் எல்லை நிர்ணய ஆணைக்குழு (Delimitation Commission) மற்றும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் பட்டியல் இனத்தவர் (Scheduled Castes) மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு (Scheduled Tribes) இடங்களை ஒதுக்குகிறது. 


வேட்புமனு தாக்கல் தேதி, வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் உள்ளிட்ட தேர்தல் அட்டவணையை அறிவிக்கிறது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் வேட்பாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். நியமன செயல்முறை பின்வருமாறு: 




ஆவணங்கள்: 


கட்சித் தலைவர் வேட்பாளர்களுக்கு தேர்தலில் பங்குபெற வாய்ப்பு கொடுக்கிறார். பின்னர் அவர்கள் வேட்புமனு படிவங்களை பூர்த்தி செய்கிறார்கள். வேட்பாளர்கள் தங்கள் பின்னணி, சொத்துக்கள், பொறுப்புகள், கல்வி, சாதி மற்றும் பலவற்றைப் பற்றிய ஆவணங்களை பாதுகாப்பு வைப்புத்தொகையுடன் வழங்க வேண்டும். 


இணையவழி மற்றும் நேரடி மனு தாக்கல்:  


வேட்பாளர்கள் இணையவழியில் அல்லது நேரடியாக வேட்புமனுக்களை சமர்ப்பிக்கலாம். இணைய அமைப்பான சுவிதா போர்ட்டல், வேட்பாளர்கள் பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்தவும், பிரமாணப் பத்திரங்களை பதிவேற்றவும் அனுமதிக்கிறது. வேட்பாளர் சுயவிவரத்தை உருவாக்க நேரடி சமர்ப்பிப்புகள் தேர்தல் அதிகாரியால்  டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன. 


வேட்பு மனு சமர்ப்பித்த பிறகு, வேட்பாளர்கள் சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டும். இந்த உறுதிமொழி இந்திய அரசியலமைப்பின் 3 வது அட்டவணையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒரு தேர்தல் அதிகாரி அல்லது உதவி தேர்தல் அதிகாரி  முன் எடுக்கப்பட வேண்டும். 


இந்திய அரசியலமைப்பின் 84வது பிரிவின்படி, வேட்பாளர்கள் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். சட்டப்பிரிவு 84-ன் படி, மக்களவை வேட்பாளர்களின் குறைந்தபட்ச வயது 25 ஆண்டுகள் ஆகும்.  இதேபோன்ற விதி 173-வது பிரிவின் கீழ் மாநில சட்டமன்றங்களுக்கும் பொருந்தும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, வேட்பாளர்கள் போட்டியிட நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர்களாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. 




நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் ரூ.25,000 பாதுகாப்பு டெபாசிட் செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வைப்பீடு தொகையாக ரூ.12,500 ஆகும். சட்டசபை தேர்தலுக்கு 10,000 ரூபாய், தாழ்த்தப்பட்டோர் அல்லது பழங்குடியினருக்கு 5,000 ரூபாய். 


அசாம், லட்சத்தீவு, சிக்கிம் ஆகிய மாநிலங்களைத் தவிர மற்ற எந்த மக்களவைத் தொகுதிகளிலும் வேட்பாளர்கள் போட்டியிடலாம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்டு, பிணையில் இருந்தாலும் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்கிறது. 


அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை முன்மொழிய தொகுதியில் இருந்து ஒரு வாக்காளர் மட்டுமே தேவை. சுயேட்சை வேட்பாளர்கள் அல்லது அங்கீகரிக்கப்படாத கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் வேட்புமனுவை முன்மொழிய தொகுதியிலிருந்து பத்து வாக்காளர்கள் தேவை. 


நாடாளுமன்ற அல்லது சட்டசபை தேர்தலில் இரண்டுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட முடியாது. தேர்தல் அதிகாரிகள் வேட்புமனுக்களை சரிபார்க்கிறார்கள். 

அவை சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்துகின்றன. செல்லாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும். வேட்பாளர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு, பிரசாரம் தொடங்கியது. 


பிரச்சாரத்தின் போது, வேட்பாளர்களும் கட்சிகளும் தங்கள் கொள்கைகளை முன்னிலைப்படுத்தி வாக்காளர்களின் ஆதரவைப் பெறுகின்றனர். பிரச்சாரங்கள் என்பது வாக்காளர்களின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்த வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது குழுக்களின் முயற்சிகள். ஒரு வேட்பாளர் அல்லது கட்சியை ஆதரிக்க வாக்காளர்களை இணங்க வைக்க பல்வேறு வழிகள் பயன்படுத்தப்படுகின்றன. 


இறுதியில், இந்தியாவின் ஜனநாயகம், அதன் பெரிய மற்றும் மாறுபட்ட வாக்காளர்களுடன், நியாயமான பிரதிநிதித்துவம் மற்றும் அரசியல் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிக்கலான அமைப்பாக இருந்தாலும், அது வலுவான அமைப்பாகும். 


அதன் சவால்கள் இருந்தபோதிலும், தேர்தல் செயல்முறை நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிற ஜனநாயகங்களுக்கு ஒரு முன்மாதிரியாக செயல்படுகிறது. அரசாங்கம் அமைப்பதில் குடிமக்களை பங்கேற்க அனுமதிப்பதன் மூலம், இந்தியாவின் தேர்தல்கள் ஜனநாயக முறையை நிலைநிறுத்துகின்றன.



Original article:

Share: