தற்போதைய செய்தி? :
மார்ச் 4 புதன்கிழமை அன்று, ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ (torpedoed) தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இலங்கை கடற்கரையில் அதன் கடல் எல்லைக்கு வெளியே நடந்தது.
முக்கிய அம்சங்கள் :
கடந்த மாதம் விசாகப்பட்டினத்தில், இந்திய கடற்படையில் சில ஏற்பாடுகள் மேற்கொண்ட பலதரப்பு கடற்படைப் பயிற்சியான சர்வதேச கடற்படை மதிப்பாய்வு (International Fleet Review) மற்றும் மிலன்-2026 (MILAN) ஆகியவற்றில் பங்கேற்ற பிறகு கப்பல் திரும்பிக் கொண்டிருந்தது.
போர்க்கப்பல் மூழ்கியதில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்தச் சம்பவத்தில் குறைந்தது 80 மாலுமிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போரின் தாக்கத்தால் இது விரிவுபடுத்தியுள்ளது. இனி இந்த மோதல், மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளைத் தாண்டி இந்தியாவின் உடனடி எல்லைக்கு அருகில் விரிவுபடுத்தியுள்ளது.
இது இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பு குறித்த விவாதத்தையும் தொடங்கியுள்ளது. இது இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க கடற்படை இருப்பைப் பராமரிக்கும் ஒரு முக்கியப் பிராந்தியமாகும்.
சர்வதேச கடல்சார் சட்டம் ஐக்கிய நாடுகளின் கடல்சார் சட்ட மாநாட்டின் (United Nations Convention on the Law of the Sea(UNCLOS)) வரம்பிற்குள் வருகிறது. இருப்பினும், அமெரிக்கா இந்த மாநாட்டில் கையெழுத்திடவில்லை.
இருப்பினும், ஆயுத மோதலின் போது போர்க்குணமிக்க தரப்பினரின் நடத்தையை ஒழுங்குபடுத்தும் வெளிப்படையான விதிகள் இதில் இல்லை. ஏனெனில், அதன் முதன்மை கவனம் அமைதிக்கால நிர்வாகத்தில் உள்ளது.
மாறாக, மோதல்களின் போது கடற்படைப் போர் சட்டம் ஐக்கிய நாடுகளின் கடல்சார் சட்ட மாநாட்டுடன் (UNCLOS) இணையாக செயல்படுகிறது. எனவே, தேனா போர்க்கப்பல் மோதலில் நேரடியாகப் பங்கேற்றதா என்பது முக்கியமல்ல. இது ஈரானிய கடற்படையின் போர்க்கப்பலாக இருந்தது. இந்த நிலை காரணமாக, இது ஒரு சட்டப்பூர்வமான இலக்காகக் கருதப்படலாம்.
ஐக்கிய நாடுகளின் சாசனமும் சர்வதேச நீரில் பலத்தைப் பயன்படுத்துவதையும் கையாள்கிறது. தனிநபர் அல்லது கூட்டு சுய பாதுகாப்பு உரிமை தொடர்பான சாசனத்தின் பிரிவு-51 மற்றும் சாசனத்தின் பிரிவு 2 (4) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இராணுவப் பலத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கு விதிவிலக்கு அளிக்கிறது. மேலும், சாசனப் பிரிவு 51 குறிப்பிடுவதாவது, "ஆயுதத் தாக்குதல்" (armed attack) ஏற்பட்டால் ஐக்கிய நாடு உறுப்பினர்கள் தங்கள் தற்காப்பைப் பயன்படுத்தலாம்
மாற்றாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (International Committee of the Red Cross) வழக்குப் புத்தகத்தில் மற்றொரு சாத்தியமான விதிமுறையாக நியாயப்படுத்தல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டால் இராணுவத் தாக்குதலும் நடக்கலாம் என்று அது கூறுகிறது. வளைகுடாப் போரின் போது இந்த வகையான அங்கீகாரம் பயன்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை 1990ஆம் ஆண்டின் வளைகுடாப் போருக்கு முந்தையது என்றாலும், அது எப்போதும் சாத்தியமற்றதாக இருக்கலாம்.
ஈரானிய போர்க்கப்பலுக்கு பிப்ரவரி 2023இல் அமெரிக்க கருவூலத் துறை அனுமதி அளித்தது. அதே நேரத்தில், பரவர் பார்ஸ் கம்பெனி என்ற ஈரானிய ட்ரோன் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், தடைகள் என்பது அந்தக் கப்பல் அமைதிக்கால பலதரப்பு கடல்சார் பயிற்சியில் பங்கேற்க முடியாது என்று அர்த்தமல்ல. கட்டுப்பாடுகள் முக்கியமாக வணிகம் அல்லது பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்குப் பொருந்தும்.
இந்திய கடற்படையின் முன்னாள் துணைத் தலைவரும், நாட்டின் முதல் தேசிய கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளருமான வைஸ் அட்மிரல் ஜி அசோக் குமார் (ஓய்வு), கடல்சார் பகுதியில் போர் மண்டலத்திற்கு எந்த தடையும் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
முன்னாள் கடற்படை அதிகாரி மேலும் கூறுகையில், இந்த சம்பவம் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் நடந்தது. எனவே, அவர்கள் விரைவாக தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் இறங்கலாம்.
அந்தநேரத்தில், ஈரானிய போர்க்கப்பல் அமைதியான பாதையில் இருந்தது. அந்த அதிகாரியின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போரில் ஒரு "பெரிய அதிகரிப்பை" (big escalation) குறிக்கிறது.
சி. உதய் பாஸ்கர் இத்தகைய நிகழ்வுகளை குறிப்பிட்டதாவது, பெரிய கடல்சார் சக்திகளால் நடத்தப்பட்ட, சர்வதேச கடற்படை மதிப்பாய்வுகளின் பண்டைய அஸ்வமேத யாகத்தைப் போலவே, தொழில்முறை கடற்படை நம்பகத்தன்மையையும், அருகிலுள்ள கடல்சார் பகுதியில் அண்டை நாட்டின் இறையாண்மை மற்றும் முதன்மையை பிராந்திய மற்றும் உலகளாவிய சக நாட்டின் குழுவினர் ஒப்புக்கொள்வதையும் இது காட்டுகிறது.
தேனா போர்க்கப்பல் இலங்கையிலிருந்து 40 கடல் மைல் தொலைவில் மூழ்கடிக்கப்பட்டதால், இந்தியாவிற்கு கடுமையான இராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியில் கவலையை உருவாக்குகிறது. இந்த நிலைமையை விவரிக்க, மிகுந்த அவமானமான நிலையை (egg on the face) உருவாக்குகிறது என்று குறிப்பிடலாம்.
இந்த பிரச்சினை தொடர்பாக இந்தியா ஒரு கேட்ச்-22 (catch-22) என்ற சூழ்நிலையில் இருக்கும். இது இரண்டு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. ஒன்று, அதன் அருகிலுள்ள கடல்பரப்பில் இதுபோன்ற நீர்மூழ்கிக் கப்பல் செயல்பாடு குறித்து இந்தியா அறிந்திருக்கவில்லையா? ஆம் எனில், இது இந்தியாவின் கடலுக்குள் உள்ள கள விழிப்புணர்வின் திறன் குறியீட்டில் மேலும் கேள்விகளை எழுப்புகிறது.
இரண்டு, அத்தகைய செயல்பாடு குறித்து இந்தியா அறிந்திருந்தால், தேனா போர்க்கப்பல் ஈரானிய கடல்பரப்பை நோக்கி விசாகப்பட்டினம் புறப்பட்டபோது முன்மொழியப்பட்ட அமெரிக்க நடவடிக்கை குறித்து இந்தியாவுக்கு அறிவிக்கப்பட்டதா/தெரிவிக்கப்பட்டதா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரு உறுதியான பதில், உள்நாட்டு மற்றும் பிராந்திய சூழலில் இந்தியாவிற்கு முரண்பாடான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
தேனா மூழ்கியதன் மிக மோசமான விளைவு பரந்த போர் சூழ்நிலையுடன் தொடர்புடையது. முன்னதாக, பிராந்திய மோதல் புவியியல் ரீதியாக கட்டுப்படுத்தப்பட்டது. இது முக்கியமாக வான்வழி சக்தி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு மட்டுமே பயன்பட்டது. இப்போது நிலைமை மாறிவிட்டது. மோதல் உலகளாவிய கடல்சார் பகுதியில் விரிவடைந்துள்ளது. இந்த விரிவாக்கம் போரை பரந்ததாகவும் சிக்கலானதாகவும் மாற்றக்கூடும்.
இந்தியப் பெருங்கடலானது மிக முக்கியமாக உலகளாவிய பிராந்திய மற்றும் அனைத்து முக்கிய ஆசிய பொருளாதாரங்களுக்கும் பயன்படுத்தும் ஹைட்ரோகார்பன் மற்றும் எரிசக்தி விநியோகங்களை ஏற்றிச் செல்லும் ஒரு முக்கிய வழிதடமாக உள்ளது. இந்த கடல் வழிகளைக் கடத்தும் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயில் கிட்டத்தட்ட 88 சதவீதத்தை இந்தியா நம்பியுள்ளது மற்றும் விரிவாக்கத்திற்கு ஆளாகக்கூடும்.
பிராந்தியத்தில் ஒரு பரந்த மோதல் கடல்சார் வர்த்தகத்தை பாதிப்பதுடன், இது முக்கிய கடல்சார் வர்த்தக, கடல் சார்ந்த பாதைகளை சீர்குலைக்கலாம். இத்தகைய உறுதியற்ற தன்மையின் போது, கப்பல்களுக்கான காப்பீட்டு செலவுகள் அதிகரிப்பு, கப்பல்கள் நீண்ட மாற்று வழிகளை எடுக்க தூண்டும். இதனால் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை பாதிக்கும்.
தெற்காசிய சுற்றுப்புறத்தில் பரவும் பெரிய எரிசக்தி மோதல்கள் குறித்து இந்தியா எப்போதும் எச்சரிக்கையாக இருந்து வருகிறது. ஈரான் குறித்து ஒருவித எதிர்மறையான உணர்வு உள்ளது. 1979-ம் ஆண்டில், ஈரானிய புரட்சி மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் படையெடுப்பு பிராந்தியத்தில் பெரும் உறுதியற்ற தன்மையை பல ஆண்டுகளாக உருவாக்கி உள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?:
இந்திய கடற்படை கடந்த மாதம் பிப்ரவரி 15 முதல் 25 வரை விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை மதிப்பாய்வு (IFR), மிலன்-2026 (MILAN) மற்றும் இந்தியப் பெருங்கடல் கடற்படை சிம்போசியம் (Indian Ocean Naval Symposium (IONS)) தலைவர்களின் மாநாடு உள்ளிட்ட மூன்று முக்கிய கடல்சார் நிகழ்வுகளை நடத்தியது.
மிலன் 2026, உலகெங்கிலும் உள்ள கடற்படைகளை ஒன்றிணைத்து, அவற்றுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன், கடல்சார் கள விழிப்புணர்வு மற்றும் கூட்டு மறுமொழி திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
இந்தப் பயிற்சியின் துறைமுகம் மற்றும் கடல் கட்டங்கள் சிக்கலான கடல்சார் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தின. இவற்றில் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர், வான் பாதுகாப்பு, தேடல் மற்றும் மீட்பு மற்றும் கூட்டுறவு பாதுகாப்பு பணிகள் ஆகியவை அடங்கும். இந்த நடவடிக்கைகள் கடல்களை சுதந்திரமாகவும், திறந்ததாகவும், உள்ளடக்கியதாகவும், விதிகளின் அடிப்படையில் பராமரிக்கவும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்தின.
Originala article :What maritime laws and conventions protect the international waters? -Khushboo Kumari