சாதிவாரி கணக்கெடுப்பதற்கான 'திறந்த-முறை' (open-ended) அணுகுமுறை, பயன்பாட்டிற்கு ஏற்ற தரவை வழங்காமல் போகலாம்.
2027-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டத்திற்கான முன்னோட்டப் பணிகள் (rehearsal), கடந்த ஜூலை 6 முதல் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு முக்கிய அம்சம் உள்ளது. அதாவது, பதிலளிப்பவர்கள் தங்கள் சாதியைக் குறிப்பிடுவதற்காக ஒரு 'திறந்த கட்டம்' (open column) இதில் வழங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பாளர் அந்தப் பதிலைப் பதிவு செய்வார். 2011-ம் ஆண்டின் சமூக-பொருளாதார மற்றும் சாதி வாரியான கணக்கெடுப்பிலும் (Socio-Economic and Caste Census (SECC)) சாதியைக் குறிப்பிட இதேபோன்ற திறந்த கட்டம் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மேற்கொள்ளப்படும் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது. ஏனெனில், இது அதிகாரப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாகும். இந்த முன்னோட்டப் பணிகள் சோதனை ஜூலை 20 அன்று முடிவடைகிறது. அதன் பிறகு சாதிவாரியாகக் கணக்கிடுவதற்கான வழிமுறையை இறுதி செய்வோம் என்று அரசாங்கம் கூறுகிறது. இந்த முன்னோட்ட சோதனையின் முடிவுகள், ஏற்கனவே அறியப்பட்ட ஒரு விஷயத்தை உறுதிப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதாவது, 2011 சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பில் (SECC) காணப்பட்டதைப் போல, சாதிவாரி குறித்த திறந்தநிலை பதில் சிக்கலான தரவுகளையே அளிக்கிறது, அது இறுதியில் பயன்படுத்த முடியாததாக நிரூபிக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வது கடினமல்ல. இந்த முறையானது, சாதியைப் பட்டியலிட்ட கடைசி கணக்கெடுப்பான 1931-ல் 4,147 "சாதிப் பெயர்கள்" மட்டுமே பதிவான நிலையில், 2011 சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பில் 46 லட்சத்திற்கும் அதிகமான "சாதிப் பெயர்கள்" பதிவாக வழிவகுத்தது. பல பதிலளிப்பவர்கள் தங்கள் குடும்பப் பெயர்கள் (surnames), உட்பிரிவுகள் (sub-castes) மற்றும் குலப் பெயர்களைச் சாதிப் பெயர்களாகக் கருதிப் பதிவு செய்தனர். இது பதிவுகளின் எண்ணிக்கையை வெகுவாக அதிகரித்ததுடன், தரவுகளைக் குழப்பமானதாகவும் சீரற்றதாகவும் மாற்றியது. 2021-ல், சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு (SECC) தரவுகளில் அதிகப்படியான பிழைகள் இருந்ததாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இடஒதுக்கீடு தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு அந்தத் தரவுகள் போதுமான அளவு நம்பகமானதாக இல்லை என்றும் அது கூறியது. அதற்குப் பதிலாக, இந்த முன்னோட்ட சோதனையானது ஒரு சிறந்த முறையைச் சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது, டிஜிட்டல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் கையடக்கக் கருவிகளைப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கருவிகளில், கவனமாகத் தொகுக்கப்பட்ட சாதிகள் மற்றும் உட்பிரிவுகளின் பட்டியல் முன்பே ஏற்றப்பட்டிருக்கும். இதன்மூலம், கணக்கெடுப்பாளர் பதிலளித்தவரிடம் கேட்ட பிறகு 'சரியான' பதிவைத் தேர்ந்தெடுக்க முடியும். தவறுகளும் பொருத்தமின்மைகளும் ஏற்படக்கூடும். ஆனால், 2022-23 பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு வெளிப்படுத்தியபடி, இந்த முறை மேலும் பயன்படுத்தக்கூடிய தரவுகளை வழங்கக்கூடும்.
மொழி, மதம், பாலினம் போன்ற மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படும் மற்ற அடையாளங்களைப் போலல்லாமல், சாதி என்பது ஒரு அருவமான மற்றும் பகுத்தறிவற்ற அடையாளமாகும் (abstract and irrational identity). அது மக்களை உயிரியல், உடல் அல்லது சுயமாக அறிவிக்கப்பட்ட பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்துவதில்லை. மாறாக, அது பிறப்பின்போதே அவர்களுக்கு ஒரு சமூக அடையாளத்தை வழங்குகிறது. இந்த அடையாளம் ஒரு சமூகப் படிநிலைக்குள் வைக்கப்படுகிறது. இந்தப் படிநிலை கூட நிலையானதாகவோ அல்லது தெளிவானதாகவோ இல்லை. வெவ்வேறு சாதிகள் பெரும்பாலும் தங்களின் சமூக தகுதிநிலை குறித்த கருத்துக்கள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று முரண்பாடான கருத்துக்களைக் கொண்டுள்ளன. சமூகநீதிக்கு உறுதியளித்த இந்திய அரசியலமைப்பு, தீண்டாமையை ஒழித்து, சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடைசெய்து, ஒரு குடிமகனின் நிலையை பிறப்பு தீர்மானிக்காத ஒரு குடியரசின் வாக்குறுதியை அளித்து, சாதிக்கு எதிராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. அப்படியென்றால், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஏன் சாதியைக் கணக்கிட வேண்டும்? ஏனெனில், கணக்கிடும் செயலே இந்த அருவமான அடையாளத்தை (abstract identity) வலுப்படுத்தவோ அல்லது நிரந்தரமாக்கவோ முடியும்.இதற்கான முக்கிய காரணம், சாதி என்பது சுயமாக அடையாளம் காணப்பட்டதாக இருந்தாலும் சரி அல்லது சமூகத்தால் திணிக்கப்பட்டதாக இருந்தாலும் சரி, அது தொடர்ந்து சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது. இந்த ஏற்றத்தாழ்வுகளைக் களைய, நலத்திட்டங்களுக்கும் சமூகநீதிக் கொள்கைகளுக்கும் சாதித் தரவுகள் தேவைப்படுகின்றன. காலப்போக்கில், இத்தகைய நடவடிக்கைகள் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை வலுப்படுத்துவதற்குப் பதிலாக பலவீனப்படுத்தக்கூடும். நலத்திட்டங்களையும் இடஒதுக்கீட்டையும் இன்னும் துல்லியமாக இலக்கு வைப்பதன் மூலம், அனுபவப்பூர்வமான சாதித் தரவுகள், வசதி படைத்தவர்கள் மற்றும் இடஒதுக்கீட்டால் ஏற்கனவே பயனடைந்து வரும் சாதி அமைப்புகள், மேலும் துணைப் பிரிவுகளாகப் பிரிப்பது போன்ற கேள்விகளுக்கும் வழிகாட்ட முடியும். இவற்றில், மேம்பட்ட தரவுகள் இன்றியமையாதவை. சாதியைக் கணக்கிட வேண்டுமானால், அதைத் துல்லியமாகக் கணக்கிட வேண்டும். அதை வரையறுக்கப்படாத முறையில் பதிவு செய்வது என்பது, அதன் நோக்கத்தை நிறைவேற்றாது.
Original article : Checkbox caste: On the counting of caste, Census 2027.