முக்கிய அம்சங்கள்:
— தேசிய நெடுஞ்சாலைகள் மொத்த சாலைக் கட்டமைப்பில் வெறும் 2.3% மட்டுமே உள்ளன. ஆனால், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் 36%-க்கும் அதிகமானவை இந்த நெடுஞ்சாலைகளில்தான் நடக்கின்றன. இதனால், தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகள் எப்போதும் ஒரு பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகின்றன.
— கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில், 2025-ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த மொத்த விபத்துகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளன. புள்ளிவிவரங்களின்படி, 2024-ஆம் ஆண்டில் நிகழ்ந்த 1,50,958 விபத்துகள் மற்றும் 64,772 உயிரிழப்புகளை விட, 2025-இல் விபத்துகள் (1,34,307) மற்றும் உயிரிழப்புகள் (57,482) 11 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளன. இதற்கு முன்னதாக, 2023-ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்த 1,50,177 விபத்துகளில் 63,112 பேர் உயிரிழந்தனர்.
— மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் (Ministry of Road Transport and Highways (MoRTH)) தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் சாலை விபத்து மரணங்கள் குறைந்ததற்கு முக்கியமாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களே காரணமாகும். இந்த மாநிலங்களில், 2024-ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2025-ஆம் ஆண்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,072-ஆக குறைந்துள்ளன. இது 2025-ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த மரணங்களின் எண்ணிக்கையை 7,290 வரை குறைக்க உதவியுள்ளது.
— இந்தத் தரவுகள் தற்காலிகமானவை. இவை சாலை விபத்து தரவுகளைப் பதிவு செய்யவும், நிர்வகிக்கவும் மற்றும் பகுப்பாய்வு செய்யவும் உருவாக்கப்பட்ட மத்திய அமைப்பான விரிவான விபத்து மின்னணு அறிக்கையின் (e-Detailed Accident Report (eDAR)) வலைதளப் பக்கத்தில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சமர்ப்பித்த தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன.
— இருப்பினும், 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சில மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. உதாரணமாக, குஜராத்தில் விபத்துகளின் எண்ணிக்கை 3,519-லிருந்து 3,944-ஆகவும், உயிரிழப்புகள் 2,192-லிருந்து 2,380-ஆகவும் உயர்ந்துள்ளன.
— உலகிலேயே ஆண்டுதோறும் சாலை விபத்து உயிரிழப்புகள் அதிகம் நடக்கும் நாடு இந்தியா தான். இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனா (இந்தியாவின் மொத்த உயிரிழப்புகளில் 36%) மற்றும் அமெரிக்கா (25%) உள்ளன. மேலும், இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய சாலைக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 1.46 லட்சம் கி.மீ தேசிய நெடுஞ்சாலைகளும், 1.80 லட்சம் கி.மீ மாநில நெடுஞ்சாலைகளும் உட்பட மொத்தம் சுமார் 63.45 லட்சம் கி.மீ சாலைகள் உள்ளன.
உங்களுக்குத் தெரியுமா?
— வாகனத்திலிருந்து வாகனத்திற்கு இடையில் பரிமாற்றம் (V2V (Vehicle-to-Vehicle)) செய்யப்படும் தகவல் தொடர்பு என்பது வாகனங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள உதவும் ஒரு கம்பியில்லா (wireless) தொழில்நுட்பமாகும். இதன் மூலம் வாகனங்கள் அவற்றின் வேகம், இருப்பிடம், முடுக்கம் மற்றும் பிரேக் போடும் விவரம் போன்ற நேரடித் தரவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இது, புத்திசாலித்தனமான போக்குவரத்து அமைப்பின்கீழ் (Intelligent Transport System) வரும் வாகனத்திலிருந்து எல்லாவற்றிற்கும் இடையிலான தகவல் தொடர்பு V2X (Vehicle-to-Everything) என்பதன் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
— விமானப் போக்குவரத்துத் துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைப் போலவே இந்த அமைப்பும் (system) செயல்படுகிறது. அங்கு விமானங்கள் தங்களின் இருப்பிடம், வேகம் மற்றும் உயரம் ஆகிய தகவல்களை அருகில் உள்ள பிற விமானங்களுக்கும் தரைக்கட்டுப்பாட்டு நிலையங்களுக்கும் தெரிவிக்கின்றன. விமானப் போக்குவரத்தில் இது உலகம் முழுவதும் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்தாலும், சாலைப் போக்குவரத்துத் துறையில் இது இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது. வாகனங்களுக்கு இடையேயான இந்தத் தொடர்பு (V2V - Vehicle-to-Vehicle) தற்போது ஒரு சில வளர்ந்த நாடுகளில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
— சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை (MoRTH) அதிகாரிகளின் கருத்துப்படி, கார்களில் உள்ள உள்-மின்னணு சாதனம் (On Board Unit ((OBU)) என்ற கருவி பொருத்தப்படும். இதன் மூலம் அருகில் வரும் வாகனங்கள் தங்களுக்குள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். இது விபத்து அதிகம் நடக்கும் பகுதிகள், தடைகள், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், மூடுபனி மற்றும் இதர ஆபத்துகள் குறித்து ஓட்டுநர்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
— வாகனத்திலிருந்து வாகனத்திற்கு இடையில் (V2V) தகவல் பரிமாற்ற அமைப்புகள் வழக்கமாக சுமார் 300 மீட்டர் தொலைவு வரை செயல்படும் திறன் கொண்டவை. இந்தத் தொலைவிற்குள் இருக்கும் வாகனங்களை அவற்றால் கண்டறிய முடியும். உதாரணமாக, ஒரு கார் திடீரென நிறுத்தம் செய்தால், அந்தத் தகவலைப் பின்னால் வரும் வாகனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகப் பெற்றுவிடும் என்பதால் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க உதவுகிறது.
— உலகிலேயே சாலை விபத்து மரணங்களில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது, மற்ற நாடுகளைவிட இது மிக அதிகம். இந்தியாவின் சாலை விபத்து மரணங்களோடு ஒப்பிடும்போது, சீனாவில் 36% சதவீதமும், அமெரிக்காவில் 25% சதவீதமும் மட்டுமே பதிவாகின்றன.
— இந்த புதிய நடைமுறையை அமல்படுத்துவதற்கான குறிப்பிட்ட தேதியை அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் அமைச்சகத்தின் (MoRTH) இந்த ஆண்டு சாலை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை ஒரு முக்கியமான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
Original article : Road Accidents in India-Know Broad Profile of Road Accidents -Khushboo Kumari