பாகிஸ்தானில் ஊழல் குறித்த IMF அறிக்கை : பாகிஸ்தான் தனது கடனைப் பெற சர்வதேச நாணய நிதியம் (IMF) 11 புதிய கட்டமைப்புக்கான அளவுகோல்களை விதித்ததுள்ளது. அவற்றில் வரி சீர்திருத்தங்கள், அரசு அதிகாரிகளின் சொத்து அறிவிப்புகள் மற்றும் எரிசக்தி துறையில் தனியார் துறை பங்கேற்பு தொடர்பான மூன்று நிபந்தனைகள் டிசம்பர் மாதம் இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்
பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிக்கை செய்தி : பாகிஸ்தானின் வணிகம் மற்றும் நற்பெயர் அபாயங்கள் குறித்த கவலைகள் குறைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இந்த முன்னேற்றம் இந்தியாவுடனான பதட்டங்களைத் தணிப்பதோடு தொடர்புடையது. மே மாதத்தில் பதட்டங்கள் உச்சத்தை எட்டியிருந்தன. பின்னர், குறைந்துவிட்டன. பாகிஸ்தான் குறித்த அதன் சமீபத்திய மதிப்பாய்வு அறிக்கையில் IMF இந்தக் கருத்தை வியாழக்கிழமை வெளியிட்டது.
எவ்வாறாயினும், பாகிஸ்தான் தனது கடனைப் பெற சர்வதேச நாணய நிதியம் (IMF) 11 புதிய கட்டமைப்பு அளவுகோல்களை விதித்தது. அவற்றில் வரி சீர்திருத்தங்கள், அரசு அதிகாரிகளின் சொத்து அறிவிப்புகள் மற்றும் எரிசக்தி துறையில் தனியார் துறை பங்கேற்பு தொடர்பான மூன்று நிபந்தனைகளை நாடு டிசம்பர் மாதம் இறுதிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.
"நிலையான திட்ட செயல்திறன் மற்றும் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டபடி, வலுவான உரிமை, வணிக அபாயங்களை குறைக்கும் ஒரு முக்கிய காரணியாக செயல்படுகிறது. திட்டத்தை செயல்படுத்துவதில் சில அபாயங்கள் மற்றும் அதிகரித்த உலகளாவிய அபாயங்கள் இருந்தபோதிலும் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மே மாதத்தில் உச்சத்தை அடைந்த பிறகு, இந்தியாவுடனான பதட்டங்கள் குறைந்துவிட்டன. மேலும், வணிக அபாயங்கள் (எ.கா., நிதி, வெளியுறவு மற்றும் சீர்திருத்த இலக்குகளை சமரசம் செய்யும் நீண்டகால இராணுவ மோதல்) மற்றும் நற்பெயர் அபாயங்கள் (எ.கா., நிதி வழங்கல்களை தவறாகப் பயன்படுத்துவதாகக் கருதப்படுவது) பற்றிய தொடர்புடைய கவலைகளையும் குறைக்கின்றன," என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) அதன் $7 பில்லியன் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (Extended Fund Facility (EFF)) கடன் திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டிற்கான இரண்டாவது $1 பில்லியன் தவணையைச் செயல்படுத்த அக்டோபரில் ஒப்புக்கொண்ட பிறகு, வியாழக்கிழமை (டிசம்பர் 11) பாகிஸ்தானுக்கான நாட்டு அறிக்கையை வெளியிட்டது. மேலும், இஸ்லாமாபாத் $200 மில்லியனைப் பெற அனுமதித்தது.
இந்த தவணைகளுடன், பாகிஸ்தானுக்கு சுமார் $3.3 பில்லியன் நிதியை வழங்கியுள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) கூறியது. மே மாதத்தில், சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானுக்கு நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) கடன் திட்டத்தின் ஒரு பகுதியாக $1 பில்லியன் தொகையை வழங்க அனுமதித்தது மற்றும் காலநிலை சார்ந்த மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மை வசதி (Resilience and Sustainability Facility (RSF)) கீழ் சுமார் $1.4 பில்லியனை அணுக அனுமதித்தது.
11 புதிய நிபந்தனைகள்
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்தும் முயற்சியில், ஜூன் 2025 சட்டத் திருத்தங்களின்படி, உயர் மட்ட கூட்டாட்சி அரசு ஊழியர்களின் சொத்து அறிவிப்புகளை அரசாங்க வலைத்தளத்தில் வெளியிட வேண்டும் என்று IMF பாகிஸ்தானுக்கு ஒரு நிபந்தனையை விதித்துள்ளது. நவம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியம் (IMF) அதன் 'நிர்வாகம் மற்றும் ஊழல்-கண்டறிதல் (Governance and Corruption-Diagnostic (GCD)) மதிப்பீட்டில்' ஊழல் என்பது பாகிஸ்தானின் நிர்வாக நிலப்பரப்பின் ஒரு "தொடர்ச்சியான அம்சம்" என்றும், பணமோசடியைத் தண்டிப்பதில் அதன் அமலாக்க நடவடிக்கை "பலவீனமானது" என்றும், "நீதித்துறை நிறுவனங்கள்" "ஊழல் நிறைந்தவை" என்றும், ஊழல் எதிர்ப்பு நிறுவனங்கள் "அரசியல் செல்வாக்கின் வரலாறு இருப்பதாகவும்" அந்த அறிக்கை மேலும் கூறியது.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலும், பொருளாதார செயல்திறனைக் குறைக்கும் நிர்வாக பலவீனங்கள் மற்றும் ஊழல் பாதிப்புகளைக் கண்டறிந்து பகுப்பாய்வு செய்வதற்காகவும், அதன் ஆதரவுடன் இந்த நிர்வாகம் மற்றும் ஊழல்-கண்டறிதல் (GCD) நடத்தப்பட்டது. உலக வங்கியின் நிபுணர்களுடன் இணைந்த துறைகளுக்கு இடையேயான IMF குழு, ஜனவரி 2025-ல் நிர்வாகம் மற்றும் ஊழல்-கண்டறிதல் (GCD) பணியைத் தொடங்கியது. பாகிஸ்தான் தனது சர்ச்சைக்குரிய 27-வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றியதால் இது முக்கியத்துவம் பெற்றது. இந்தத் திருத்தம் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனிரின் அதிகாரங்களை விரிவுபடுத்துகிறது. அதே நேரத்தில், உச்ச நீதிமன்றத்திற்கு மேலே மற்றொரு நீதிமன்றத்தை உருவாக்குவதன் மூலம் அது உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் குறைக்கிறது.
அது வரி கொள்கை சீர்திருத்தங்களுக்கான ஒரு படிநிலைப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தை உள்ளடக்கியிருக்க வேண்டும். அது வரி நிர்வாகம் மற்றும் வரிச் சட்டங்களில் உள்ள சீர்திருத்தங்களையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். அந்த உத்தி நிர்வாக ஏற்பாடுகளைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அது செயலாக்கத்திற்கான ஒரு வளத் திட்டத்தையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். பாகிஸ்தான் இந்த நிபந்தனையை டிசம்பர் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.
கூடுதலாக, சர்வதேச நாணய நிதியம், பாகிஸ்தானின் பொதுத்துறை பயன்பாட்டு நிறுவனங்களான ஹைதராபாத் மின்சார விநியோக நிறுவனம் (Hyderabad Electric Supply Company (HESCO)) மற்றும் சுக்கூர் மின்சார நிறுவனத்தில் (Sukkur Electric Power Company (SEPCO)) தனியார் துறை பங்கேற்புக்கான முன்நிபந்தனைகளை டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க இஸ்லாமாபாத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மற்ற நிபந்தனைகளில் மார்ச் மாதத்திற்குள் ஒரு நிதிசார் செயல் திட்டத்தை இறுதி செய்வதும் அடங்கும். இந்தச் செயல் திட்டம் முக்கிய சீர்திருத்தப் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்தல், பணியாளர் தேவைகள் மற்றும் பொறுப்புகளை வரையறுத்தல், குறிப்பிட்ட காலக்கெடு மற்றும் இலக்குகளை நிர்ணயித்தல், வருவாய் தாக்கத்தை மதிப்பிடுதல் மற்றும் முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளை அடையாளம் காண்பது ஆகியவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும்.
அந்நியச் செலாவணி வரவை அதிகரிக்க, பாகிஸ்தான் பணம் அனுப்பும் செலவுகள் மற்றும் எல்லை தாண்டிய கொடுப்பனவுகளுக்கான தடைகள் குறித்த முழுமையான மதிப்பீட்டை முடிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு மே மாத இறுதிக்குள் ஒரு செயல் திட்டத்தையும் அது தயாரிக்க வேண்டும்.
ஜூன் மாத இறுதிக்குள், மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும். பின்னர், மத்திய அமைச்சரவை சர்க்கரை சந்தையை தாராளமயமாக்குவதற்கான ஒரு தேசியக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தக் கொள்கையில் உரிமம் வழங்குதல், விலைக்கட்டுப்பாடுகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிகள், மண்டலப் பிரிப்பு மற்றும் செயல்படுத்தலுக்கான தெளிவான காலக்கெடு குறித்த முக்கியப் பரிந்துரைகள் அடங்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் சர்வதேச நாணய நிதியம் (IMF) கடன், இந்தியாவின் கவலைகள்
மே மாதத்தில், பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்துர் ஆகியவற்றிற்குப் பிறகு, இந்தியா சர்வதேச நாணய நிதியத்தின் வாரியக் கூட்டத்தில் வாக்களிப்பதைத் தவிர்த்தது. பாகிஸ்தானின் "மோசமான சாதனைப் பதிவு" காரணமாக, அந்நாட்டிற்கான சர்வதேச நாணய நிதியத் திட்டங்களின் செயல்திறன் குறித்து இந்தியா கவலைப்பட்டது. அரசால் நிதியுதவி செய்யப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு கடன் நிதி தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் இந்தியா கவலைப்பட்டது. கூட்டத்திற்கு முன்பு, இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அந்த நாட்டிற்கு நிதி உதவி வழங்குவதற்கு முன்பு, நிதியத்தின் வாரியம் உண்மைகளை கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார்.
பாகிஸ்தானுக்கு 2.4 பில்லியன் டாலர் கடன்களை அங்கீகரிப்பதற்காக, மே 9 அன்று வாஷிங்டன் டி.சி.யில் அதன் வாரியம் கூடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள், நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய “நற்பெயர் அபாயங்கள்” குறித்து எச்சரித்தனர். இந்தியாவுடனான அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக “நிறுவன அபாயங்கள்” அதிகரிப்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் தொடர்ந்தாலோ அல்லது மோசமடைந்தாலோ, அது பாகிஸ்தானின் நிதி நிலைமை, வெளிநாட்டுக் கணக்குகள் மற்றும் சீர்திருத்த இலக்குகளுக்கு அபாயங்களை அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் கூறினர்.
இஸ்லாமாபாத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் 7 பில்லியன் டாலர் உதவித் தொகுப்பு செப்டம்பர் 2024-ல் அங்கீகரிக்கப்பட்டது. தற்போதைய 37 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தில், இந்த நிதி உதவிக்காலத்தின் போது ஆறு ஆய்வுகள் உள்ளன. நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டம், சரிசெய்ய நேரம் தேவைப்படும் கட்டமைப்பு பலவீனங்களால் ஏற்படும் தீவிரமான நடுத்தர கால செலுத்துதல் இருப்புச் சிக்கல்களைக் கொண்ட நாடுகளுக்கு நிதி உதவி வழங்குகிறது.
இது கட்டமைப்பு சீர்திருத்தங்களை ஆதரிக்க நீண்ட கால திருப்பிச் செலுத்தும் காலங்களையும் வழங்குகிறது. இதற்கிடையில், மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மை வசதி (Resilience and Sustainability Facility (RSF)) திட்டம், காலநிலை தொடர்பான பாதிப்புகளிலிருந்து பாகிஸ்தானின் செலுத்துதல் இருப்பு அபாயங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர்வதேச நாணய நிதிக் (IMF) குழு செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 8 வரை கராச்சி மற்றும் இஸ்லாமாபாத்திற்கு பயணம் மேற்கொண்டு நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இரண்டாவது மதிப்பாய்வு மற்றும் மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மை வசதியின் (RSF) கீழ் முதல் மதிப்பாய்வு குறித்து விவாதித்தது. பாகிஸ்தானின் பொருளாதாரத் திட்டம் "பேரியல் பொருளாதார நிலைத்தன்மையை நிலைநிறுத்துகிறது மற்றும் சந்தை நம்பிக்கையை மீண்டும் உருவாக்குகிறது" என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) அப்போது குறிப்பிட்டது.
Original link: