முக்கிய அம்சங்கள்:
- இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், சட்டத்தின் பெயரையே பூஜ்ய பாபு கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் (Pujya Bapu Rural Employment Guarantee Act) என்று மாற்றுவது குறித்து ஒன்றிய அமைச்சரவை விவாதித்ததாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
— சட்டம் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்திருந்தாலும், 2024-25ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தின்கீழ் ஒரு வீட்டிற்கு வழங்கப்படும் சராசரி வேலை நாட்கள் 50 நாட்களாக மட்டுமே இருந்தன. உண்மையில், கடந்த ஆண்டு 100 நாட்களை நிறைவு செய்த குடும்பங்களின் எண்ணிக்கை 40.70 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு, 6.74 லட்சம் குடும்பங்கள் மட்டுமே முழுமையாக 100 நாட்கள் வேலையை முடித்துள்ளன.
— ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் 11-வது நிதிக் குழுவின் கீழ் இந்தத் திட்டத்தைத் தொடர்வதற்கான அரசாங்கத்தின் ஒப்புதல் செயல்முறையைத் தொடர்ந்து இந்த முன்மொழிவு வந்துள்ளது.
— 2022ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) நிர்வகிக்கும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழு, மாநிலங்களின் செயல்திறன் மற்றும் திட்டத்தின் நிர்வாகம் தொடர்பான சிக்கல்களைப் பற்றி ஆய்வு செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டது. குழு கடந்த ஆண்டு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
— தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் 2005ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மேலும், அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தால் அக்டோபர் 2, 2009 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் என மறுபெயரிடப்பட்டது. ஆதாரங்களின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கம் அதன் பெயரை மாற்றவும், உத்தரவாதமான வேலை நாட்களின் எண்ணிக்கையை 100-லிருந்து 125ஆக அதிகரிக்கவும் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும்.
— கடந்த காலங்களில், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் மூலம் பணி செய்த தொழிலாளர்களிடம் 100 நாள் வேலை உச்சவரம்பை உயர்த்தக் கோரி வருகின்றன. மாநிலங்கள் 100 நாட்களுக்கு மேல் வேலை வழங்க முடியும் என்றாலும், அவர்களே அதற்கு நிதியளிக்க வேண்டும், சில மாநிலங்கள் மட்டுமே அவ்வாறு செய்கிறார்கள்.
2024-25ஆம் ஆண்டு நிதியாண்டுகளில் உருவாக்கப்பட்ட 290 கோடி மனித நாட்களில், வெறும் 4.35 கோடி வேலை நாட்கள் மட்டுமே மாநிலங்கள் தங்களின் சொந்த நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை ஆகும். தங்களின் சொந்த வளங்களைப் பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகும்.
கடந்த நான்கு ஆண்டுகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின்கீழ் பணிபுரியும் குடும்பங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துள்ளது — 2021-22ஆம் ஆண்டில் 7.25 கோடி 2022-23-ல் 6.18 கோடியாகவும், 2023-24இல் 5.99 கோடியாகவும், 2024-25இல் 5.79 கோடியாகவும் இருந்தது. கடந்த மூன்று நிதியாண்டுகளுக்கான (2022–23 முதல் 2024–25 வரை) தரவுகளில் மேற்கு வங்கம் சேர்க்கப்படவில்லை. ஏனெனில், அந்த மாநிலத்தில் மார்ச் 2022 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
— ஆண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) கீழ், திறமையற்ற உடலுழைப்பு வேலைகளைச் செய்ய தன்னார்வத் தொண்டு செய்யும் வயது வந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒவ்வொரு ஊரகப் பகுதிகளில் உள்ள குடும்பமும், ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்கள் கூலி வேலைவாய்ப்பைப் பெற உரிமை உண்டு.
2006-07ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய 200 ஊரக மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், 2007-08ஆம் ஆண்டில் மேலும் 130 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. மேலும், 2008-09 நிதியாண்டு முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.
— மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்தின் பிரிவு 3 (1) ஒரு நிதியாண்டில் ஒரு கிராமப்புற குடும்பத்திற்கு 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், மாநிலம்/யூனியன் பிரதேசம் குறிப்பாகக் கோரினால் தவிர, ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்தில் 100 நாட்களுக்கு மேல் வேலைவாய்ப்புக்கான தரவுகளை உள்ளீடு செய்ய தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்தின் மென்பொருள் அனுமதிக்காததால், இது நடைமுறையில் ஒரு உச்சவரம்பாக மாறிவிட்டது.
— இருப்பினும், அரசாங்கம் (நிலையான 100 நாட்களை தாண்டி) கூடுதலாக 50 நாட்கள் வேலை செய்ய அனுமதிக்கிறது. உதாரணமாக, வனப் பகுதியில் உள்ள ஒவ்வொரு பழங்குடியினக் குடும்பமும், 2016ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் (Forest Right Act) கீழ் வழங்கப்பட்ட நில உரிமைகளைத் தவிர வேறு எந்தத் தனியார் சொத்தும் அக்குடும்பங்களுக்கு இல்லாத பட்சத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 150 நாட்கள் வேலை பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆவார்.
- மேலும்,, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்தின் பிரிவு 3(4)-ன் கீழ், வறட்சி அல்லது இயற்கை பேரிடர் என்று உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட ஊரக பகுதிகளில், 100 நாட்களுக்கு மேலாக, ஒரு வருடத்தில் கூடுதலாக 50 நாட்களுக்கு திறமையற்ற உடல் உழைப்பு வேலையை (unskilled manual work) அரசங்கத்தால் வழங்க முடியும்.
Original link: