குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கும் முறை, மாறிவரும் சூழலைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். -மோஹித் ஷர்மா

வட்டிச் செலவுகளைக் கணக்கிடும் முறையை மேம்படுத்துவதும், உள்ளீடு பொருட்களின் மாறிவரும் விலைகளைச் சரியாகக் கணக்கில் கொள்வதும், வேளாண் தொழிலாளர்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் பயிரிட ஊக்குவிக்க உதவும்.


இந்தியாவின் குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price (MSP)) முறையானது, பயிர் சாகுபடிக்கு ஆகும் செலவை மதிப்பிடுவதன் அடிப்படையில் அமைந்துள்ளது. இது முக்கியமாக மத்திய வேளாண் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பொருளாதார மற்றும் புள்ளிவிவர இயக்குநரகம் (Directorate of Economics and Statistics) நடத்தும் பயிர் சாகுபடி செலவை ஆய்வு செய்வதற்கான விரிவான திட்டத்தை (Comprehensive Scheme for Studying Cost of Cultivation) அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.


இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகால மாதிரி ஆய்வு முறையைப் (Three-year sampling method) பின்பற்றுகிறது. இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சில கிராமங்கள் மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றன, அதன் பிறகு அந்த இடத்திற்குப் பதிலாக வேறு கிராமங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இந்த ஆய்வு முறை அறிவியல் ரீதியாகத் துல்லியமானதாகக் கருதப்பட்டாலும், இந்திய வேளாண் துறையில் கடந்த காலங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ள சூழலில், இந்த பழைய நடைமுறை மட்டும் காலத்திற்கு ஏற்ப மாற்றப்படாமலேயே தொடர்வதாகக் கூறப்படுகிறது.


குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) நிர்ணயிப்பதில் உள்ள ஒரு முக்கியமான சிக்கல் என்னவென்றால், அதற்கான முடிவுகள் பெரும்பாலும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் பழமையான செலவுத் தரவுகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன. உதாரணமாக, 2021–22-ஆம் ஆண்டில் உலகளவில் உரங்களின் விலை உயர்ந்தது, டீசல் விலையும் அதிகரித்தது, மேலும் தொழிலாளர்களுக்கான கூலியும் ஓரளவிற்கு அதிகரித்தது. உள்ளீடு பொருட்களின் விலையில் திடீர் ஏற்றம் ஏற்படும் காலங்களில் இந்த முறை துல்லியமாக இருப்பதில்லை என்கின்றனர். மேலும், வேளாண் தொழிலாளர்களின் உண்மையான சாகுபடி செலவிற்கும், அரசு கணக்கிடும் செலவிற்கும் இடையே இடைவெளிகள் இருப்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. பயிர் சாகுபடிச் செலவுகள் துல்லியமாக அளவிடப்பட்டால், நிர்ணயிக்கப்பட்ட லாப வரம்பைத் தக்கவைக்க பல பயிர்களுக்கான ஆதரவு விலை தற்போது இருப்பதைவிட 20-30% அதிகமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.


வேளாண் துறை இயந்திரமயமாக்கலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் ஒரு நுட்பமான இடைவெளி உருவாகி வருகிறது. தற்போதைய முறையில், ஒரு வேளாண் தொழிலாளர் சொந்தமாக வைத்துள்ள இயந்திரங்களுக்கான செலவு (தேய்மானம் மற்றும் வட்டி மூலம் கணக்கிடப்படுகிறது) மற்றும் அவர் வாடகைக்கு எடுத்த இயந்திர சேவைகளுக்கான செலவு (நேரடிச் செலவுகளில் சேர்க்கப்படுகிறது) எனத் தனித்தனியாகப் பிரிக்கப்படுகிறது. இது ஒரே செலவை இருமுறை கணக்கிடுவதைத் தவிர்க்க உதவுகிறது. வேளாண்துறை இயந்திரமயமாக்கலுக்கான துணைத் திட்டத்தின்கீழ் (Sub-Mission on Agricultural Mechanization (SMAM)), 2014-15-ஆம் ஆண்டு முதல் 2024-25-ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மாநிலங்களுக்கு 8,565 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.9 மில்லியனுக்கும் அதிகமான இயந்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன மற்றும் ஆயிரக்கணக்கான அரசு வாடகை மையங்கள் (Custom Hiring Centres) அமைக்கப்பட்டுள்ளன. அரசின் இந்த அதீத கவனமும், வாடகை மையங்களின் வேகமான வளர்ச்சியும் குறிப்பாகச் சிறு மற்றும் குறு விவசாயிகள் இயந்திரங்களைப் பயன்படுத்தும் முறையை மாற்றியுள்ளன. இருப்பினும், தற்போது புழக்கத்தில் உள்ள மூன்று ஆண்டுகால மாதிரி ஆய்வுமுறை இன்னும் பழைய முறைகளையே பிரதிபலிக்கக்கூடும், அதாவது இயந்திரங்களைச் சொந்தமாக வைத்திருப்பதே பொதுவான விஷயமாக இருந்த காலத்தின் தரவுகளையே காட்ட வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.


பல்வேறு காரணிகள்


ஆய்வு முறைகளில் உள்ள இத்தகைய குறைபாடுகள் செலவினங்களை மதிப்பிடுவதன் துல்லியத்தைப் பாதிக்கின்றன. இருப்பினும், பயிர் சாகுபடி முறைகள் போன்ற பெரிய அளவிலான முடிவுகளை மட்டுமே இவை தீர்மானிப்பதில்லை. பல்வேறு மாநிலங்களில் இருந்து கிடைக்கும் தரவுகளின்படி, பயிர் சாகுபடியில் மாற்றங்களைக் கொண்டு வருவது என்பது வெறும் சாகுபடி செலவு மதிப்பீடுகளைச் சார்ந்தது அல்ல. மாறாக, விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்யும் உறுதி, பாசன வசதி, உள்ளீடு பொருள் மானியங்கள் (Input subsidies) மற்றும் சந்தை வாய்ப்புகள் போன்ற காரணிகளையே அதிகம் சார்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வலுவான சந்தை அமைப்புகள் இருப்பதால், அங்கு பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்திப் பங்கு அதிகமாக உள்ளது. ஆனால், இதற்கு நேர்மாறாக பஞ்சாப் மாநிலத்தில் இன்னும் நெல்-கோதுமை பயிரிடும் முறையே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.


இந்த வேறுபாடு ஒரு முக்கியமான விஷயத்தை உணர்த்துகிறது: நடைமுறையில், குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) என்பது உற்பத்திச் செலவை அடிப்படையாகக் கொண்ட ஒரு விலை சமிக்ஞையாகச் செயல்படுவதைவிட, அரசாங்கத்தின் கொள்முதல் உத்தரவாதமாகவே அதிகம் பார்க்கப்படுகிறது. பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டாலும், போதிய அளவில் அரசு கொள்முதல் செய்யாதது வேளாண் தொழிலாளர்களின் பயிர் தேர்வு முடிவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மேலும், பல பகுதிகளில் பல பயிர்களின் சந்தை விலை, அரசாங்கம் நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் குறைவாகவே இருப்பதை தரவுகள் காட்டுகின்றன.


எனவே, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) முடிவுகளில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, சந்தை நிலைத்தன்மையுடன் இருக்கும் காலங்களில், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் உண்மையான உற்பத்திச் செலவுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைவாகவே இருக்கும், இதனால் இந்தத் திட்டம், திட்டமிட்டபடி சரியாகச் செயல்படுகிறது. இரண்டாவதாக, உள்ளீடு பொருட்களின் (உரம், விதைகள் போன்றவை) விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்போது, உற்பத்திச் செலவைக் கணக்கிடுவதில் ஏற்படும் தாமதங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையின் லாப வரம்பைக் குறைக்கக்கூடும். இதன் காரணமாக, ஆதரவு விலை உயர்த்தப்பட்டாலும் வேளாண் தொழிலாளர்களின் உண்மையான லாபம் குறைகிறது. இந்தியாவில் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குறித்த விவாதம் பெரும்பாலும் விலை தொடர்பான பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மையில் இது செலவினங்களைக் கணக்கிடும் முறை மற்றும் அதன் பலன்கள் வேளாண் தொழிலாளர்களைச் சென்றடைவதில் உள்ள சிக்கலாகப் பார்க்கப்படுகிறது.


கணக்கிடப்பட்ட சீர்திருத்தம்


இந்தப் பிரச்சனைகளைச் சரிசெய்ய கவனமான சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. வட்டி விகிதங்களைக் கணக்கிடும் முறையை மேம்படுத்துவது மற்றும் எரிபொருள், உரங்கள் போன்ற மாறும் செலவுகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு மாற்றங்களை அனுமதிப்பது ஆகியவற்றை முதலில் பயிர் பல்வகைப்படுத்தல் தேவைப்படும் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களில் சோதனை செய்து பார்க்கலாம். பின்னர், தரவு சேகரிப்பு மற்றும் மண்டல வாரியான விரிவாக்கத்தை படிப்படியாக மேம்படுத்துவதோடு, இந்த மாற்றங்களை அனைத்து குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) பயிர்களுக்கும் விரிவுபடுத்தலாம். அரசின் கொள்கைகளை அதிக நம்பகத்தன்மையுடனும் துல்லியமாகவும் மாற்றுவதால் கிடைக்கும் பலன்களுடன் ஒப்பிடுகையில், இதற்காக அரசுக்கு ஏற்படும் செலவு மிகவும் குறைவாகவே இருக்கும் என்கின்றனர்.


இந்தியாவின் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) முறை உணவுப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. இருப்பினும், முந்தைய காலக்கட்டத்தின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த முறை, வேளாண் துறை மாறிவரும் இன்றைய சூழலில் காலாவதியான ஒன்றாக மாறும் அபாயத்தில் உள்ளது. தற்போதுள்ள நடைமுறைகளைச் சிதைக்காமல், சாகுபடிச் செலவு மதிப்பீட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, படிப்படியாகவும் திட்டமிட்டபடியும் இந்த முறையைப் புதுப்பிப்பது அதன் நம்பகத்தன்மையையும் செயல்திறனையும் அதிகரிக்கும். சாகுபடிச் செலவு மதிப்பீடுகள் உண்மையான கள நிலவரங்களோடு ஒத்துப்போகும்போது, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) என்பது வெறும் பாதுகாப்பு அம்சமாக மட்டுமல்லாமல், நீண்டகால வேளாண் துறை வளர்ச்சிக்கான ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மோஹித் ஷர்மா, பீகார் மாநிலம் சமஸ்திபூர் பூசாவில் உள்ள, டாக்டர் ராஜேந்திர பிரசாத் மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தில், வேளாண் வணிகத் துறையின் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

 

Original article : MSP methodology should reflect changing reality. -Mohit Sharma

Share:

இந்தியாவின் மூலதனக் கணக்கு மீதான அதீத ஈடுபாடு - டி.சி.ஏ. ஸ்ரீனிவாச ராகவன்

 இந்தியா தனது நடப்புக் கணக்கை வலுப்படுத்த முயற்சி செய்யவில்லை.  அதே நேரத்தில், மூலதனப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்துள்ளன.


1950-களின் நடுப்பகுதியிலிருந்து, இந்திய அரசாங்கங்கள் மூலதனக் கணக்கில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அதே வேளையில் நடப்புக் கணக்கை பெரும்பாலும் புறக்கணித்தே வந்துள்ளன. கடந்த ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான மூலதன வரத்து இருந்ததாக சுட்டிக்காட்டிய முதன்மை பொருளாதார ஆலோசகரின் அறிக்கை இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது.


அதிகப்படியான வெளிநாட்டு முதலீடுகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் நன்மையைத் தருகின்றன. இருப்பினும், இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: நம் நாட்டின் தற்போதைய நடப்புக் கணக்கு நிலவரம் குறித்து ஒரு தலைமைப் பொருளாதார ஆலோசகர் கடைசியாக எப்போது தீவிரமாக விவாதித்தார்?


இருப்பினும், நடப்புக் கணக்கு என்பது ஒரு நாட்டின் வர்த்தக சமநிலை (ஏற்றுமதி மற்றும் இறக்குமதி), வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் மற்றும் பணப் பரிமாற்றங்களை உள்ளடக்கியது. அதாவது, ஒரு நாடு, பிற நாடுகளிடமிருந்து ஈட்டும் ஒட்டுமொத்த வருமானத்தைக் குறிக்கிறது. மறுபுறம், மூலதனக் கணக்கு என்பது நாட்டிற்குள் பணப் புழக்கத்தைக் கண்காணிக்கிறது. இது அந்த நாட்டின் பொருளாதாரத்தின்மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.


உண்மையில், தலைமைப் பொருளாதார ஆலோசகர்கள் நடப்புக் கணக்கு குறித்து அரிதாகவே கவனம் செலுத்தியுள்ளனர். இது ஆச்சரியமான விஷயமாகும்; ஏனெனில், ஒரு நாடு ஏற்றுமதி செய்வதைவிட அதிகமாக இறக்குமதி செய்யும் போது ஏற்படும் இடைவெளியை ஈடுகட்டும் ஒரு சமநிலைப்படுத்தும் காரணியாகவே மூலதனக் கணக்கு செலுத்துதல், சமநிலையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.


1947-ஆம் ஆண்டிற்கு முன்பு, மூலதனக் கணக்கு என்பது ஒரு பெரிய விஷயமாகக் கருதப்படவில்லை. ஏனெனில், அப்போது இந்தியாவின் பொருளாதாரம் ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட பொருளாதாரத்துடனும், அதன் மூலம் உலகப் பொருளாதாரத்துடனும் முழுமையாக இணைக்கப்பட்டிருந்தது. அக்காலத்தில் மூலதனப் புழக்கம் மிகவும் வலுவாக இருந்தது. தங்களுக்குத் தேவையான அல்லது விருப்பமான முதலீடுகளைப் பெறுவதை ஆங்கிலேயர்கள் உறுதி செய்ததால், இந்தியா முழுமையான மூலதன மாற்றத்தக்கத் தன்மையை கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.


இருப்பினும், நடப்புக் கணக்கு நிலவரம் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியது. அவர்கள் தங்கள் சொந்த நலன்களுக்கு ஏற்ப அவ்வப்போது மாற்று விகிதத்தை (Exchange rate) மாற்றியமைத்துக் கொண்டே இருந்தனர். 1890-களின் தொடக்கத்திலிருந்து, இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவுக்குப் பெரும் சிக்கல்களை உருவாக்கின. மேலும், இது குறித்துப் பல விவாதங்களும் அப்போது நடைபெற்றன.


1955-ஆம் ஆண்டிற்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. அரசாங்கங்கள் நடப்புக் கணக்கைவிட மூலதனக் கணக்கின் மீது அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கின. மூலதனக் கணக்கில் ஏற்படும் மாற்றங்கள் நடப்புக் கணக்கின் விளைவாகவே ஏற்படுகின்றன. இதற்கு முக்கியக் காரணம், ஒரு நாடு தனது வருவாய் மூலம் எவற்றைப் பெற முடியவில்லையோ, அவற்றைப் பெறுவதற்கு மற்றவர்களிடம் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதே ஆகும்.


ஏன் மூலதனக் கணக்கு முக்கியமானது?


இதற்குப் பல காரணங்கள் இருந்தன. அவற்றில் மிக முக்கியமானது, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் (Second Five Year Plan) மற்றும் பி. சி. மகாலனோபிஸ் அவர்கள் குறிப்பிட்ட அதிகப்படியான அந்நியச் செலாவணித் தேவைகளுடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டம் அதிக முதலீடு தேவைப்படும் ஒன்றாக இருந்ததால், உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 2%-க்கும் அதிகமாக இருந்தபோதிலும், தேவையான நிதியானது ஏற்றுமதி வருவாய் மூலம் கிடைப்பதற்குப் பதிலாக, வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் மானியங்கள் மூலமாகவே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


இருந்தபோதிலும், அதிக முதலீடு தேவைப்படும் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தியதால், அதிக தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் ஏற்றுமதித் துறைகளில் முதலீடு குறைந்தது. இதன் விளைவாக, சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா தனக்கிருந்த சாதகமான சூழலை இழந்தது. எலி ஹெக்ஷர் (Eli Heckscher) மற்றும் பெர்டில் ஓலின் (Bertil Ohlin) போன்ற பொருளாதார வல்லுநர்கள் இந்தப் போக்கை கடுமையாக விமர்சித்திருப்பார்கள்.


மற்றொரு காரணம் நிர்வாகரீதியானது: நிதியமைச்சகம் மூலதனக் கணக்கை கவனித்துக்கொண்டது, அதேசமயம் அப்போதைய வெளிநாட்டு வர்த்தக அமைச்சகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை நிர்வகித்ததால், அது நடப்புக் கணக்கை நிர்வகித்தது.


அரசாங்கத்தில் இருந்த அதிகாரப் படிநிலையின்படி, நிதி அமைச்சகமும் அதன் மூலதனக் கணக்குமே முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. இந்த நடைமுறை 1950-களின் இடைப்பகுதியிலிருந்து இன்று வரை மாறாமல் அப்படியே தொடர்கிறது. இதனால், வர்த்தக அமைச்சகம் தனது கடன் மற்றும் அந்நியச் செலாவணி விகிதக் கொள்கைகளுக்காக நிதி அமைச்சகத்தின் முடிவுகளையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


அரசாங்கங்கள் கடனாளிகளாகத் தெரிவதைத் தவிர்க்க வேண்டும் என்ற அரசியல் அழுத்தமும் இதற்கு ஒரு காரணமாக இருந்தது. ஒரு விவசாயி கடனில் மூழ்கியிருப்பது போல, ஒரு நாடே கடனில் மூழ்கியிருப்பதாகக் கருதப்பட்டது.


பாகிஸ்தான் பலமுறை சர்வதேச நாணய நிதியத்தை (International Monetary Fund (IMF)) நாடியுள்ள நிலையில், ஒரு நாடு பொருளாதார ரீதியாக வலுவாக இருக்கிறது என்கிற பிம்பம் எப்போதும் உண்மையாக இருப்பதில்லை என்பதை அதன் நிலைமை காட்டுகிறது. இருப்பினும், இந்தியா இத்தகைய சூழலைத் தவிர்க்க முயன்றபோது, இந்திய அரசியல்வாதிகள் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கத் தவறிவிட்டனர். அதாவது, ஒரு நாடு போதுமான வருவாயை ஈட்டினால், அது கடன் வாங்கவேண்டிய அவசியம் இருக்காது என்பதே ஆகும். இதன் விளைவாக, அவர்கள் நாட்டின் நடப்புக் கணக்கு நிலவரத்தைக் கவனத்தில் கொள்ளாமல் புறக்கணித்தனர். மேலும், இந்தியாவில் கடன் பற்றிய பயம் காரணமாக முதலீட்டு வரத்து பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது.


விளைவுகள்


வெளிப்புறத் துறையை (external sector) நிர்வகிக்கும் இந்த அணுகுமுறை இரண்டு முக்கிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக, உள்நாட்டுச் சேமிப்பு போதுமானதாக இல்லாதபோதும், வெளிநாட்டுச் சேமிப்பை முறையாகப் பயன்படுத்த அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இது நடப்புக் கணக்கு பற்றாக்குறையைச் சரிசெய்யாததுடன், மூலதனப் பற்றாக்குறைக்கும் வழிவகுத்துள்ளது. மேலும், கடனை ஒரு எதிர்மறையான விஷயமாகப் பார்க்கும் போக்கு, பொருளாதார வளர்ச்சியின் வேகத்தையும் குறைத்துள்ளது.


இரண்டாவதாக, இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவது, மூலதனத்தின் திறமையான பயன்பாட்டைக் குறைத்துள்ளது. இறக்குமதி வரிகள் மூலம் பாதுகாக்கப்படும் தொழில்களில் செய்யப்படும் முதலீடுகள், திறமையாகச் செயல்பட வேண்டும் என்கிற கட்டாயத்தை இழக்கின்றன. இதன் தாக்கம் தொழிலாளர் சந்தையிலும் எதிரொலிக்கிறது. அதாவது, சாதாரணச் சூழலில் இருக்க வேண்டியதைவிட, இத்தகைய சூழலில் தொழிலாளர்களின் ஊதியம் அதிகமாக உயர்கிறது.


இது போன்ற இன்னும் பல தவறுகள் இருந்தாலும், முதன்மையான கருத்து தெளிவாக உள்ளது. மூலதனக் கணக்கில் மட்டும் கவனம் செலுத்தி, நடப்புக் கணக்கை அலட்சியப்படுத்தியதன் மூலம் ஒரு பெரிய தவறு இழைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார அணுகுமுறையை மாற்றினால் மட்டுமே இந்தத் தவறைச் சரிசெய்ய முடியும் என்று கூறப்படுகிறது.


Original article : India’s capital account obsession. -TCA Srinivasa Raghavan

Share:

அடிக்கடி நிகழும் போரின் விளைவுகளைத் தணித்தல் -ப. சிதம்பரம்

 நிலைமை 'அனைத்தும் சாதாரணமாக உள்ளது' என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) போரினால் ஏற்படும் செலவுகள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருப்பதாகத் தெரிகிறது.


ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போர் வெகு தொலைவில் இல்லை. அது இந்தியத் துணைக்கண்டத்திற்கு மிக அருகிலுள்ள மேற்கு ஆசியாவில் நடந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான இந்தியர்கள் அங்கு வசித்து வேலை செய்து வருகின்றனர். பல இந்திய ஷியா முஸ்லிம்கள் ஈரான் மக்களுடன் வலுவான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஈரானுடன் தங்களுக்கு நீண்டகால வரலாற்றுத் தொடர்பு இருப்பதாகவும், சாபஹார் (Chabahar) துறைமுக மேம்பாடு போன்ற வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் இருப்பதாகவும் இந்தியா நீண்டகாலமாகக் கூறி வருகிறது. இருப்பினும், பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்தின்கீழ் இந்த உறவுகள் பலவீனமடைந்துள்ளன. இதற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான நெருக்கமான உறவு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.


இனிமேல் தேவையில்லை


கடந்த காலங்களில், ஏதேனும் மோதல்கள் ஏற்பட்டால் இருநாடுகளுக்கும் இடையே அமைதியை நிலைநாட்டக்கூடிய மிகச் சிறந்த நாடாக இந்தியா கருதப்பட்டது. ஆனால், இந்த முறை, பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் இந்தியாவை பெரும்பாலும் பொருட்படுத்தவில்லை. ஈரான் மட்டுமே அவ்வப்போது இந்தியாவிற்குத் தகவல்களைத் தெரிவித்து வந்தது. இஸ்ரேலை விமர்சிக்கும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது ஆதரவை இந்தியா காட்டியது. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டணி இந்தியாவை ஒதுக்கி வைத்துவிட்டு, அதற்குப் பதிலாக சமரச பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் நாடாக பாகிஸ்தானை  ஈடுபடுத்தியுள்ளது.


மேற்காசியப் போர் இந்தியாவின் மீது பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதை இனி மறுக்க முடியாது. இந்தப் போர் பல நாடுகளின் பொருளாதாரத்தைச் சிதைத்துள்ளது, குறிப்பாக உலகளாவிய வர்த்தகம், விநியோகச் சங்கிலிகள் மற்றும் கடல்வழிப் பாதைகளைச் சார்ந்துள்ள நாடுகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் பொருளாதாரக் குறியீடுகள் எவ்வாறு உள்ளன என்பதைப் பற்றி விரிவாக ஆராய்வோம்.


அமெரிக்க அதிபர் டிரம்பின் மிகைப்படுத்தப்பட்ட பேச்சுகளைப் பற்றி உலகம் நன்கு அறியும். ஈரானின் விமானப்படை மற்றும் கடற்படை அழிக்கப்பட்டுவிட்டன என்றோ, ஈரானிடம் ராணுவ பலம் எதுவுமே இல்லை என்றோ, அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்றோ அவர் கூறியபோது பலரும் அதை நம்பவில்லை. அதுமட்டுமன்றி, ஈரான் அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது அல்லது போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்ற அவரது அறிவிப்புகளையும் மக்கள் ஏற்கவில்லை. அடிக்கடி போரை நிறுத்துவதும், மீண்டும் தொடங்குவதும், இடைநிறுத்தி விடுவதுமாக, டிரம்ப் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஆனால், மறுபுறம் இஸ்ரேல், ஈரான் மற்றும் லெபனான்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் அதற்குப் பதிலடி கொடுத்து வருகிறது. உண்மையில், பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி தொடங்கிய அந்தப் போர் ஒருபோதும் முழுமையாக நிறுத்தப்படவில்லை.


எதுவும் இயல்பாக இல்லை


"எல்லாம் சாதாரணமாக இருக்கிறது" என்று அரசாங்கம் கூறினாலும், போரினால் ஏற்படும் செலவுகள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிக விழிப்புணர்வுடன் இருப்பதாகத் தெரிகிறது. ஏப்ரல் மாத அறிக்கையில், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள அழுத்தம், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களால் அதிகரித்து வரும் பணவீக்கம், கடன் பத்திரங்களின் வட்டி விகித உயர்வு, இறக்குமதி மந்தநிலை மற்றும் நிலையற்ற வெளிநாட்டு முதலீடுகள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இந்த மோதல் நீடித்தாலோ அல்லது விநியோகச் சங்கிலி விரைவில் சீரமைக்கப்படாவிட்டாலோ, அது உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல் காரணங்களுக்காக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமல் வைத்திருப்பதைத் தவிர, அரசாங்கம் பெரிதாக எதையும் செய்யவில்லை. நிகழ்வுகளைக் கவனித்துக்கொண்டு, அவை இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்காது என்று அரசாங்கம் நம்புவது போலத் தெரிகிறது.


இந்திய மக்கள் எதையும் தாங்கும் மனவலிமையும் பொறுமையும் கொண்டவர்கள், ஆனால் அவர்கள் அரசாங்கத்திடமிருந்து மிகக் குறைந்த அளவிலான ஆதரவையே எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் தங்கள் வேலைகளையும் வருமானத்தையும் பாதுகாக்கப் போராடி வருகின்றனர். சமையல் எரிவாயுவின் (LPG) விலை உயர்வு மற்றும் சீரற்ற விநியோகம் காரணமாக, பல வீடுகளிலும் உணவகங்களிலும் மீண்டும் விறகுகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். குடும்பங்கள் தங்களின் செலவுகளைக் குறைத்துக்கொண்டு, சேமிப்புப் பணத்தைப் பயன்படுத்தி வருகின்றன. வெளியில் பார்ப்பதற்கு நிலைமை சீராகத் தெரிந்தாலும், கிராமப்புறங்களில் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுவது தெளிவாகத் தெரிகிறது. அதேவேளையில், பிரதமர் நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், செப்டம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கான பிரச்சாரங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மே மாதம் 5-ஆம் தேதிக்குப் பிறகு, மீண்டும் ஆட்சி நிர்வாகப் பணிகளுக்குத் பிரதமர் திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அரசாங்கம் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்


மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் வருமானத்தை உயர்த்தவும் அரசாங்கத்தால் இன்னும் கூடுதலான நடவடிக்கைகளை எடுக்க முடியும்:


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின்கீழ் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள ஊதியத்தை அரசு வழங்க முடியும். மேலும், தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டதிலிருந்து முடங்கிக் கிடக்கும் வேலைத் திட்டங்களை இதன் மூலம் மீண்டும் தொடங்க முடியும்.


கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தை (Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)) விரைவுபடுத்த முடியும். அதன்படி, 2026–27-ஆம் நிதியாண்டிற்காக ஒதுக்கப்பட்ட 19,000 கோடி ரூபாய் நிதியை 6–8 மாதங்களுக்குள்ளேயே செலவிட முடியும் (2025–26 நிதியாண்டில் பயன்படுத்தப்படாமல் மீதமிருந்த 6,871 கோடி ரூபாய் போலல்லாமல்). மேலும், தேவைப்பட்டால் இத்திட்டத்திற்கு கூடுதல் நிதியையும் ஒதுக்கீடு செய்ய முடியும்.


2025–26 ஆம் நிதியாண்டில், ஒன்றிய அரசின் குடிநீர் திட்டமான ஜல் ஜீவன் திட்டத்திற்கு (Jal Jeevan Mission (JJM)) 67,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இருப்பினும், திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி 17,000 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2026–27-ஆம் நிதியாண்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 67,670 கோடி ரூபாய் நிதிஒதுக்கீட்டுத் தொகையை முன்கூட்டியே செலவிட முடியும் என்பதால், அந்த நிதியை மாநிலங்களுக்கு விரைவாக விடுவிக்க வேண்டும்.


கொரோனா (COVID-19) பெருந்தொற்று காலத்தில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைப் போலல்லாமல், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (Micro, Small and Medium Enterprises (MSMEs)) கடன் வழங்குவதால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட அரசாங்கம் நிதி ஒதுக்க வேண்டும். மேலும், வங்கிகள் விரைவாகக் கடன் வழங்குவதை உறுதி செய்யவும், நலிவடைந்துவரும் இத்துறையை மீட்டெடுக்கவும் அரசு தெளிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


பொதுச் சொத்துக்களுக்கான முதலீடு, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் தனிநபர் வருமானத்தை அதிகரித்தல் போன்றவை, மேற்காசிய நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படும் பாதிப்புகளைக் கையாள்வதற்கு ஒரு சிறந்த வழியாகும். எதுவுமே செய்யாமல் இருப்பதைவிட, இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Original article : Mitigating costs of start-stop war. -P Chidambaram

Share:

1993-ல் கட்சித் தாவல் வழக்குகளில் சபாநாயகரின் பங்கு எப்போது சோதிக்கப்பட்டது? -சக்ஷு ராய்

 1993 மார்ச் மாதம், இந்தியாவின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற ஒரே மாதத்திலேயே, நீதிபதி எம்.என். வெங்கடாசலையா ஒரு அரசியலமைப்பு நெருக்கடியைச் சந்தித்தார். மணிப்பூர் சட்டமன்ற சபாநாயகரான டாக்டர் எச்.போரோபாபு சிங், உச்சநீதிமன்றத்தின் முன் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், சபாநாயகர் நீதிமன்றத்தின் முன் ஆஜராகத் தொடர்ந்து மறுத்து வந்தார். இதன் விளைவாக, உச்சநீதிமன்றத்திற்கும் சபாநாயகருக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது.


இதேபோன்ற ஒரு நிகழ்வு, முன்னதாக 1964-ல் நீதித்துறைக்கும் உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது, ​​அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கைது செய்யுமாறு சட்டமன்றம் உத்தரவிட்டிருந்தது. சபாநாயகர் தொடர்ந்து நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் கண்ணியத்தையும் மீறி நடந்தால் என்ன செய்வது என்று நீதிபதி வெங்கடாச்சலையா யோசித்திருக்க வேண்டும். 1993-ம் ஆண்டு ஏற்பட்ட இந்த நெருக்கடியானது, மணிப்பூரில் ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியது (கட்சித் தாவல்) தொடர்பான ஒரு வழக்கிலிருந்து உருவானதாகும்.


கட்சித் தாவல் தடைச் சட்டம் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியைச் (AAP) சேர்ந்த ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் பாஜகவுடன் இணைய விரும்புவதாக மாநிலங்களவைத் தலைவரிடம் தெரிவித்துள்ளனர். மாநிலங்களவைச் செயலகம், இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் கட்சி இணைப்புகளை நாடாளுமன்ற இணையதளத்தில் புதுப்பித்து, தற்போது அவர்களை பாஜக உறுப்பினர்களாகப் பட்டியலிட்டுள்ளது. மே 4, திங்கட்கிழமை அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள அசாம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களில் ஏதேனும் தொங்கு சபைகள் ஏற்பட்டால், இந்த கட்சித் தாவல் சட்டம் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடும்.


நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குத் தங்கள் விசுவாசத்தை மாற்றுவதைத் தடுப்பதற்காக, நாடாளுமன்றம் அரசியலமைப்பில் 10-வது அட்டவணையை (கட்சித் தாவல் தடைச் சட்டம் எனப் பரவலாக அறியப்படுகிறது) சேர்த்தது. கட்சித் தாவல் வழக்குகளை சட்டமன்றத்தின் அவைத் தலைவர்களே முடிவு செய்வார்கள் என்றும், அவர்களின் முடிவுகளே இறுதியானவை என்றும் குறிப்பிடுகிறது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்/சட்டமன்ற உறுப்பினர் கட்சித் தாவியுள்ளார் என்று சபாநாயகர் முடிவு செய்தால், அந்த உறுப்பினர் சட்டமன்றத்தில் தனது பதவியை இழப்பார். 1985-ல் நாடாளுமன்றம் இந்தச் சட்டத்தை இயற்றியபோது, ​​இந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதையும் அது தடை செய்தது.


அரசியலமைப்புத் திருத்தம் குறித்த விவாதத்தின்போது, ​​கட்சித் தாவல் வழக்குகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை அவைத் தலைவர்களுக்கு வழங்குவதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்தனர். மக்களவை உறுப்பினர் எஸ்.ஜெய்பால் ரெட்டி, பெரும்பான்மையினரே சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதால், அவர் ஆளும் கட்சி மற்றும் அதன் தலைமையின் கட்டுப்பாட்டில் இருப்பார் என்று வாதிட்டு, இந்த ஏற்பாட்டை எதிர்த்தார். மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் மது தண்டவதே, இந்த அதிகாரம் சபாநாயகரைத் தேவையற்ற சர்ச்சைகளில் சிக்க வைக்கும் என்று கவலை தெரிவித்தார்.


அரசாங்கங்களை அமைக்கும் மற்றும் கலைக்கும் அதிகாரம் சபாநாயகர்களுக்கு அதிகரித்து வருவதால், அரசியல் சார்பற்றதாகக் கருதப்படும் அந்தப் பதவி பெரும் அரசியல் அழுத்தத்திற்கு உள்ளானது. உதாரணமாக, ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ​​வாக்கெடுப்பு நடந்துகொண்டிருந்தபோதே, ஒரு சபாநாயகர் அவையில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்தார்.



மற்றொரு நிகழ்வில், ஒரு சபாநாயகர் சில சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்தார். பின்னர் அவரே பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பின் வந்த அடுத்த சபாநாயகர், முந்தைய சபாநாயகரின் அந்தத் தகுதிநீக்க முடிவை ரத்து செய்தார். கட்சித் தாவிய சட்டமன்ற உறுப்பினர்களால் ஒரு அரசாங்கம் கவிழ்ந்த பிறகு, மற்றொரு சபாநாயகர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்னும் ஒரு நிகழ்வில், ஒரு சபாநாயகர் சில சட்டமன்ற உறுப்பினர்களை ஒரு நாளில் தகுதிநீக்கம் செய்தார், மறுநாளே அவர்களை மீண்டும் பதவியில் அமர்த்தினார்.


1991-ம் ஆண்டு ஜூலை மாதம், மணிப்பூர் சட்டமன்ற சபாநாயகரான டாக்டர் சிங், கட்சித் தாவல் காரணமாக ஏழு காங்கிரஸ் (ஐ) சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்தார். கட்சித் தாவல் வழக்குகளில் கோவா, குஜராத், மணிப்பூர், மேகாலயா, மத்தியப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து சட்டமன்ற சபாநாயகர்கள் எடுத்த முடிவுகளுடன் சேர்த்து, இவருடைய முடிவும் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் (இது கிஹோட்டோ ஹொல்லோஹன் வழக்கு என அறியப்படுகிறது) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


நீதிபதி வெங்கடாசலையா இடம்பெற்றிருந்த இந்த அமர்வு, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மையை ஆய்வு செய்தது. இந்தச் சட்டம் செல்லுபடியாகும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தபோதிலும், சபாநாயகரின் முடிவுகள் மீதான நீதித்துறை மறுஆய்வைக் கட்டுப்படுத்திய விதியை ரத்து செய்தது. 1991 நவம்பரில், ஏழு சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்த மணிப்பூர் சபாநாயகரின் முடிவையும் நீதிமன்றம் ரத்து செய்தது.


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதை சபாநாயகர் எதிர்த்தார். சட்டமன்றச் செயலாளர் நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த முயன்றபோது, ​​சபாநாயகர் அவரைப் பதவியிலிருந்து நீக்கினார். இந்தச் செயலாளர் தாக்கல் செய்த ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம் டாக்டர் எச்.போரோபாபு சிங்கை பலமுறை ஆஜராகுமாறு கேட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுகளிலிருந்து தனக்கு அரசியலமைப்புரீதியான விலக்குரிமை இருப்பதாகக் கூறி சபாநாயகர் மறுத்துவிட்டார். டாக்டர் எச்.போரோபாபு சிங்கை சபாநாயகராக அல்ல, மாறாக சட்டமன்றத்தின் நிர்வாகத் தலைவராக ஆஜராகுமாறு உத்தரவிடுவதாக நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


சபாநாயகர் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக மறுத்த நிலையில், ஓராண்டு காலம் முழுமையாகக் கடந்து சென்றது. பின்னர், 1993 பிப்ரவரியில், சபாநாயகரின் வருகையை உறுதி செய்வதற்காக, “குறைந்தபட்ச பலத்தைப்” பயன்படுத்துவது உட்பட, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.


பின்னர், சபாநாயகரை டெல்லிக்கு அழைத்து வருவதற்காக மத்திய அரசு மணிப்பூருக்கு ஒரு எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force(BSF)) விமானத்தை அனுப்பியது.


சபாநாயகர் நீதிமன்றத்தின் முன் ஆஜராக வேண்டியிருந்த அந்த நாள், அரசாங்கத்திற்கு மிகவும் பதற்றமான ஒரு தருணமாக அமைந்தது. சட்டத்துறை இணை அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ், “சபாநாயகரின் கண்ணியம் மற்றும் நீதிமன்றத்தின் கண்ணியம் குறித்து அரசாங்கம் மிகவும் அக்கறை கொண்டுள்ளது. மேலும், இந்த இரு நிறுவனங்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, ​​அது ஒட்டுமொத்த தேசத்திற்கும் கவலையளிக்கும் ஒரு விஷயமாகும்,” என்று குறிப்பிட்டார்.


மணிப்பூர் சபாநாயகர் டாக்டர் எச்.போரோபாபு சிங், பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றத்திற்கு வந்தார். நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜரானதன் மூலம், ஒரு அரசியலமைப்பு நெருக்கடி தவிர்க்கப்பட்டது. நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் தாம் முழுமையாகப் பின்பற்றியதாகக் குறிப்பிட்டு, அவர் ஒரு பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பித்தார். மேலும், நீதிமன்றம் அவருக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட்டது. நீதிமன்றம், சட்டமன்றம் மற்றும் அரசாங்கம் இந்த குறிப்பிட்ட நெருக்கடியைத் தவிர்க்க முடிந்தது. ஆனால், முப்பதாண்டுகளுக்குப் பிறகும், கட்சித் தாவல் தடைச் சட்டம், தலைமை நீதிபதிகளின் நற்பெயருக்குத் தொடர்ந்து களங்கத்தை ஏற்படுத்தி வருவதோடு, அவர்களை நீதிமன்றங்களுடன் முரண்படும் சூழலுக்கும் தொடர்ந்து தள்ளி வருகிறது.


Original article : When Speaker’s role in defection cases was tested in 1993?. -Chakshu Roy

Share:

உலகளாவிய எரிசக்தி சீர்குலைவுகளுக்கு மத்தியில் நிலக்கரி வாயுவாக்கத்தில் இந்தியாவின் கவனம் அதிகரித்து வருகிறது. -அபினவ் ராய்

 கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவுடன் ஒப்பிடுகையில், நிலக்கரியின் விலைகள் ஒப்பீட்டளவில் குறைந்த ஏற்ற இறக்கங்களைக் கொண்டுள்ளன. நிலக்கரி வாயுவாக்கம் (coal gasification) போன்ற தொழில்நுட்பங்கள் மூலம், இந்தியா தனது பரந்த நிலக்கரி இருப்புகளின் தூய்மையான பயன்பாட்டை எவ்வாறு ஊக்குவித்து, தன்னிறைவை மேம்படுத்துகிறது?


மேற்கு ஆசியாவில் நிலவி வரும் நெருக்கடியானது, எரிசக்தி, உரங்கள் மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் ஆகிய துறைகளில் இந்தியா தன்னிறைவை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தைத் தனது உள்நாட்டு நிலக்கரி வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம்  வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் வணிக ரீதியான எரிசக்தி உற்பத்தியில்  55 சதவீதத்திற்கும், மொத்த மின் உற்பத்தியில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை நிலக்கரி அளிக்கிறது. உலக அளவிலும், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் நிலக்கரி இன்றும் ஏறத்தாழ 28 சதவீதப் பங்களிப்பை வழங்கி வருகிறது.


இந்தச் சூழலில், நிலக்கரி அடிப்படையிலான எரிசக்தி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களைக் கையகப்படுத்துவதில் அதிகரித்துவரும் முக்கியத்துவம், உலகின் 5-வது பெரிய இந்திய நிலக்கரி இருப்புகளை மதிப்புக்கூட்டிப் பயன்படுத்துவதை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. நிலக்கரி வாயுவாக்கம் என்பது அது போன்ற  ஒரு தொழில்நுட்பமாகும். இது வழக்கமான எரிப்பு முறைக்கு (நிலக்கரி எரிப்பு) ஒரு தூய்மையான, அதிக செயல்திறன் மிக்க மற்றும் நீடித்த மாற்றை வழங்குகிறது.


நிலக்கரி வாயுவாக்கம் (coal gasification) என்றால் என்ன?


நிலக்கரி வாயுவாக்கம் என்பது நிலக்கரியை, கார்பன் மோனாக்சைடு (CO), கார்பன் டை ஆக்சைடு (CO2), ஹைட்ரஜன் (H2) மற்றும் மீத்தேன் (CH4) போன்ற எரிபொருள்  அதிகமுள்ள  வாயுக்களின் கலவையாகும். இந்தச் செயற்கை வாயுவைக் கொண்டு செயற்கை இயற்கை எரிவாயு (Synthetic Natural Gas (SNG)), எரிபொருட்கள் (மெத்தனால் மற்றும் எத்தனால்), உரங்களுக்கான அம்மோனியா மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.


நிலக்கரி வாயுவாக்கம் (Coal Gasification) செயல்முறை என்பது, அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் நிலக்கரியை ஆக்ஸிடேஷன் (oxidation) செய்யும் மூலம் சின்கேஸ் உருவாக்கப்படும் செயல்முறையாகும். வாயுவாக்கலில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: அவை 


1) மேற்பரப்பு வாயுவாக்கம்


2) நிலத்தடி நிலக்கரி வாயுவாக்கம் (Underground coal gasification (UCG)) ஆகும்.


செயற்கை வாயுவைப் பயன்படுத்திப் பின்வருவனவற்றை உற்பத்தி செய்யலாம்: அவை,



1) செயற்கை இயற்கை எரிவாயு


2) எரிபொருட்கள் (மெத்தனால், டைமெத்தில் ஈதர் (DME), செயற்கை எரிபொருட்கள்)


3) உரங்கள் (அம்மோனியா, யூரியா)


4) பெட்ரோலிய வேதிப்பொருட்கள் மற்றும் பிற தொழில்துறை மூலப்பொருட்கள் ஆகும்.


எனவே, இந்தத் தொழில்நுட்பம் முக்கிய எரிசக்தி, பெட்ரோலிய வேதிப்பொருட்கள், உரங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் தன்னிறைவை வலுப்படுத்தவும், வெளி இறக்குமதி சார்புகளைக் குறைக்கவும் உதவுவதாகக் கருதப்படுகிறது.


இந்தியாவில் நிலக்கரியின் உருவாக்கம், வகைகள் மற்றும் பரவல்


நிலக்கரி புவியியல் கடந்த காலத்தில் தோன்றியது. கார்போனிஃபெரஸ் காலத்தில், இது 359 முதல் 299 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. பரந்த வனப்பகுதிகள் வண்டல் படிவுகளுக்கு அடியில் புதைக்கப்பட்டன.


காலப்போக்கில், அதிக வெப்பம் மற்றும் வெளிப்புற அழுத்தத்தின்கீழ், நிலக்கரியாக்கம் எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் மரம் நிலக்கரியாக மாறுகிறது. நிலக்கரியாதல் செயல்முறையானது, நீர், மீத்தேன் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு ஆகியவற்றின் படிப்படியான இழப்பையும், கார்பன் உள்ளடக்கத்தின் அதிகரிப்பையும் உள்ளடக்கியுள்ளது.


கார்பன் உள்ளடக்கம், ஈரப்பதம், ஆவியாகும் பொருட்கள் மற்றும் சாம்பல் ஆகியவற்றின் அடிப்படையில் கார்பனின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. நிலக்கரி பொதுவாக நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது: அவை,


ஆந்த்ராசைட் (80-95 சதவீதம் கார்பன்) – ஜம்மு காஷ்மீரில் மிகச் சிறிய அளவில் காணப்படும், மிகச்சிறந்த தரத்திலான நிலக்கரி ஆகும்.


பிட்யூமினஸ் (40-80 சதவீதம் கார்பன்) – இந்தியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் நிலக்கரி ஆகும். இது ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காணப்படுகிறது.


லிக்னைட் (40-55 சதவீதம் கார்பன்) – குறைந்த தரத்திலான ‘பழுப்பு நிலக்கரி’ (brown coal) ஆகும். அதிகப்படியான ஈரப்பதம் கொண்டிருப்பதால், இது அதிக புகையையும் மிகக் குறைந்த வெப்பத்தையும் மட்டுமே வெளியிடுகிறது. இந்தியாவில் லிக்னைட் வளங்கள் அதிக அளவில் உள்ள மாநிலம் தமிழ்நாடு ஆகும்.


பீட் (40 சதவீதத்திற்கும் குறைவான கார்பனைக் கொண்டது) – இது நிலக்கரி உருவாகும் செயல்முறையின் முதல் நிலையாகும்.


இந்தியாவின் நிலக்கரி இருப்பு மற்றும் சவால்கள்


இந்தியாவில் 378 பில்லியன் டன்கள் நிலக்கரி இருப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதிகமாக உள்ளது. இதில், 199 பில்லியன் டன்கள் 'நிரூபிக்கப்பட்ட' கையிருப்புகளாகும். ஒரு விரிவான பூர்வாங்க சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில், நியாயமான உறுதியுடன் பொருளாதாரரீதியாக இவ்வேளையை வெட்டி எடுக்க முடியும் என்பதாகும்.


2024–25 நிதியாண்டில், இந்தியா 1 பில்லியன் டன் அளவை மீறிய நிலக்கரியை உற்பத்தி செய்தது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச உற்பத்தியாகும். மேலும், 2030-ஆம் ஆண்டளவில் தேவை 1.5 பில்லியன் டன் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தரம் சார்ந்த சிக்கல்கள் மற்றும் அளிப்புக்கும் தேவைக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகள் ஆகிய காரணங்களால், இந்தியா ஆண்டுதோறும் 243 மில்லியன் டன்கள் நிலக்கரியை இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வருகிறது.



கோல் இந்தியா லிமிடெட் (Coal India Ltd (CIL)) உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது. மேலும், உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்துதல், தரத்தை மேம்படுத்துதல் மற்றும் பிற தேவையான நடவடிக்கைகள் மூலம் 15 கோடி டன் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கு மாற்றாக அந்நிறுவனம் தற்போது தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.


இந்திய நிலக்கரியின் ஒரு முக்கிய வரம்பு, உலக சராசரியான 10–20 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், அதன் சாம்பல் உள்ளடக்கம் (30–45 சதவீதம்) மிக அதிகமாக இருப்பதுதான். இது நிலக்கரி வாயுவாக்கச் செயல்முறையின் (gasification) செலவை அதிகரிக்கிறது. மேலும், இந்தியாவில் உள்ள மொத்த நிலக்கரி வளங்களில்   40 சதவீதம், 300 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளன. வழக்கமான சுரங்க முறைகளைப் பயன்படுத்தி இந்த வளங்களை வெட்டியெடுப்பது கடினமானது மட்டுமல்லாமல், அதிக மூலதனம் தேவைப்படும் ஒரு செயல்முறையாகவும் உள்ளது.


நிலத்தடி நிலக்கரி வாயுவாக்கம் (Underground Coal Gasification (UCG)) போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. நிலத்தடி நிலக்கரி வாயுவாக்கம் என்பது ஒரு 'இடத்திலியே நிகழும்' (in-situ) வாயுவாக்கல் செயல்முறையாகும். இது நிலக்கரியை பூமிக்கு அடியிலேயே 'செயற்கை வாயுவாக' (syngas) மாற்றுகிறது. மேம்பட்ட நிலக்கரி வாயுவாக்கல் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் வளர்ந்து வரும் ஆர்வத்தை உணர்த்தும் வகையில், இந்தியா தனது முதல் நிலத்தடி நிலக்கரி வாயுவாக்க முன்னோடித் திட்டத்தை 2024-ஆம் ஆண்டில் ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள 'காஸ்டா' (Kasta)  தொகுதியில் தொடங்கியது.


நிலக்கரி வாயுவாக்கத்தை நோக்கிய கொள்கை உந்துதல்


உலகின் 2-வது மிகப்பெரிய நிலக்கரி நுகர்வோராகவும், உலகின் 5-வது மிகப்பெரிய நிலக்கரி இருப்பைக் கொண்ட நாடாகவும் இருந்தபோதிலும், இந்தியா தனது நிலக்கரி வாயுவாக்கத் திட்டத்தை (Coal Gasification Mission) 2020-ஆம் ஆண்டில் தொடங்கியது. சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நிலக்கரி வாயுவாக்கத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலோ அல்லது அவற்றில் முதலீடு செய்வதிலோ இந்தியா இதுவரை பெரிய அளவில் ஈடுபடவில்லை.


தற்போது, ​​சீனாவின் அம்மோனியா உற்பத்தியில் 90 சதவீதமும், மெத்தனால் உற்பத்தியில் 70 சதவீதமும் நிலக்கரி வாயுவாக்கத்தின் மூலமே உற்பத்தி செய்யப்படுகின்றன. சீனா ஆண்டுக்கு 70 மில்லியன் டன்கள் (million tonnes per annum (MTPA)) அம்மோனியாவை (இது உலகளாவிய உற்பத்தியில் 30 சதவீதம்) மற்றும் 80 மில்லியன் டன்கள் யூரியாவை (இது உலகளாவிய உற்பத்தியில் ஏறத்தாழ 40 சதவீதம்) உற்பத்தி செய்கிறது. உலகின் மொத்த மெத்தனால் உற்பத்தித் திறனில் 54 சதவீதத்தைக் கொண்டுள்ள சீனா, மெத்தனால் உற்பத்தியிலும் முதலிடத்தில் உள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான உற்பத்தி நிலக்கரியிலிருந்தே பெறப்படுகிறது.


நிலக்கரி வாயுவாக்கத் தொழில்நுட்பத்தை சீனா முன்கூட்டியே ஏற்றுக்கொண்டதும், அதனோடு தொடர்புடைய பெரிய அளவிலான தொழில்துறைகளை மேம்படுத்தியதும், எரிசக்தி மற்றும் உரத் துறைகள் போன்ற முக்கியத் துறைகளில் அந்நாடு இறக்குமதியைச் சார்ந்திருப்பதை வெகுவாகக் குறைத்ததுடன், அதன் பொருளாதார வளர்ச்சியிலும்  முக்கியப் பங்காற்றியது.


ஆனால், இந்தியா இத்தகைய தொழில்நுட்பங்களை ஏற்கும் நோக்கில் வேகமாக முன்னேறி வருகிறது. 'தேசிய நிலக்கரி வாயுவாக்கத் திட்டத்திற்கான' (National Coal Gasification Mission (NCGM)) பட்ஜெட் ஒதுக்கீடு, 2025–26 நிதியாண்டில் ரூ.300 கோடியாக இருந்த நிலையில், 2026–27 நிதியாண்டில் ரூ. 3,525 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 2026 முதல் 2031 வரை அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிலக்கரி மற்றும் லிக்னைட் ஆய்வுக்காக கூடுதலாக ரூ.5,925 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2024-ல், இந்த நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி வாயுவாக்கத் திட்டங்களுக்கு நிதியுதவிச் சலுகைகளாக ரூ. 8,500 கோடியை ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்கள்


தற்போது, ​​ஜிண்டால் ஸ்டீல் லிமிடெட் நிறுவனம் ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் இந்தியாவின் ஒரே வாயுவாக்கல் திட்டத்தை (1.80 MTPA) செயல்படுத்தி வருகிறது. ஜிண்டால் ஸ்டீல் லிமிடெட் நிறுவனம் நான்கு நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களை உருவாக்கி வருகிறது: அவை,


ஒடிசா தால்சேர் நிலக்கரி அடிப்படையிலான அம்மோனியா-யூரியா வளாகம் .


ஒடிசா பாரத் நிலக்கரி வாயுவாக்கம் மற்றும் இரசாயனங்கள் லிமிடெட்.


மேற்கு வங்க கோல் கேஸ் இந்தியா லிமிடெட்.


மகாராஷ்டிரா மாநிலத்தில்  வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் CIL திட்டம்.


தனியார் துறை திட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், ஒடிசாவில் உள்ள தால்சேர் உர ஆலை, நிலக்கரி வாயுவாக்கல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் முதல் யூரியா ஆலையாகும். அது ஆண்டுக்கு 12.7 லட்சம் டன் கொள்ளளவு கொண்டது. இது முதலில் செப்டம்பர் 2023-க்கு முன்னர் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது டிசம்பர் 2027-க்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளில் நகர்ப்புற நிலக்கரிச் சுரங்கத்தையும் (UCG) அரசாங்கம் இணைக்கத் தொடங்கியுள்ளது.


பயன்பாட்டை விரைவுபடுத்துவதை நோக்கி


உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் கையிருப்பு குறைவாகவே உள்ளது. மேலும், இந்தியா இறக்குமதியையே சார்ந்துள்ளது. இது, விலை ஏற்ற இறக்கங்கள், விநியோகத் தடைகள் மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு அபாயங்களுக்கு நாட்டை ஆளாக்குகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிய செயல்முறை அதிகரித்து வந்தபோதிலும், நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் உற்பத்தி, 2030-ஆம் ஆண்டில் மின்சார உற்பத்தியில் 55 சதவீதத்தைக் கொண்டிருக்கும் என்றும், 2047-ஆம் ஆண்டில் 27 சதவீதமாகக் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


மின்சார உற்பத்தியைத் தவிர, நிலக்கரி முக்கியமாக எஃகு மற்றும் சிமெண்ட் துறைகளால் பயன்படுத்தப்படுகிறது. காகிதம், ஜவுளி, உரங்கள், ரயில்வே, பாதுகாப்பு மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (small and medium enterprises (SMEs)) போன்ற தொழில்களும் நிலக்கரியைப் பயன்படுத்துகின்றன.


இந்தியாவில் நிலக்கரி கையிருப்பு ஏராளமாக உள்ளது. மேலும், கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவுடன் (LNG) ஒப்பிடும்போது, நிலக்கரியின் விலைகள் ஒப்பீட்டளவில் குறைவான ஏற்ற இறக்கங்களைக் கொண்டுள்ளன. எனவே, நிலக்கரி வாயுவாக்கம் என்பது நிலக்கரியைத் தூய்மையாகப் பயன்படுத்துவதற்கும், கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (Carbon Capture, Utilization, and Sequestration (CCUS)) தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைப்பதற்கும் ஒரு முக்கியமான பாதையாகும். இது இந்தியாவின் நிகர பூஜ்ஜிய இலக்குகளுடன் ஒத்துப்போகிறது.


நகர்ப்புற வாயுவாக்கல் மீதான இந்த முக்கியத்துவம் சரியாக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாக இருந்தாலும், அதற்கு அதிக மூலதனம் தேவைப்படுகிறது மற்றும் அதிநவீன தொழில்நுட்பமும்  முக்கியத்துவம் பெறுகிறது. இதன் செயல்பாட்டை விரைவுபடுத்த, இந்தியா நிரூபிக்கப்பட்ட உலகளாவிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதேசமயம், இந்திய நிலக்கரியின் அதிக சாம்பல் தன்மைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட வாயுவாக்கல் தொழில்நுட்பங்களின் உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் முதலீடு செய்யலாம்.


Original article : India’s growing focus on coal gasification amid global energy disruptions. -Abhinav Rai

Share:

இந்திய இணையவழி விளையாட்டு ஆணையம் (Online Gaming Authority of India (OGAI)) என்பது என்ன? - குஷ்பூ குமாரி

 இந்தியாவின் இணையவழி விளையாட்டுத் துறைக்கான ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை அமைப்பாக இந்திய இணையவழி விளையாட்டு ஆணையம்  உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முக்கியப் பொறுப்புகள் யாவை?


தற்போதைய செய்தி :


'இணையவழி விளையாட்டுகளை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் (Promotion and Regulation of Online Gaming Rules) விதிகள், 2026' ஆனது மே 1, 2026 அன்று நடைமுறைக்கு வந்தது. இது இத்துறையின் 'டிஜிட்டல் மையமாக்களுக்கு முன்னுரிமை அளிக்கும்' ஒழுங்குமுறை அமைப்பான இந்திய இணையவழி விளையாட்டு ஆணையம் அமைவதற்கு வழிவகுத்தது. இதன் மூலச் சட்டமான 'இணையவழி விளையாட்டுகளை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம்' (Promotion and Regulation of Online Gaming Act) கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.

முக்கிய அம்சங்கள்:


1. இந்திய இணையவழி விளையாட்டு ஆணையம் (Online Gaming Authority of India (OGAI)) என்பது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Ministry of Electronics and Information Technology (MietY)) கீழ் இயங்கும் ஒரு ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை அமைப்பாகும். இந்த ஆணையம் இணைய விளையாட்டுகளை வகைப்படுத்தும், செயல்முறைகளைக் கண்காணிக்கும், பயனர் குறைகளைக் கையாளும், மேலும், நிதி நிறுவனங்கள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து அமலாக்கத்தை ஒருங்கிணைக்கும்.



2. இந்திய இணையவழி விளையாட்டு ஆணையம் ஒரு விளையாட்டு எந்த வகையைச் சேர்ந்தது என்பதை நிர்ணயிக்கும்: அது இணையப் பண விளையாட்டு (பயனர் கட்டணம் செலுத்தி அல்லது பணம் வைத்து விளையாடுவது), இணையச் சமூக விளையாட்டு (பணம் வைத்து விளையாடாதது) அல்லது மின்னணு விளையாட்டு (உடல் திறன் மற்றும் தந்திரமான சிந்தனை போன்ற திறன்களை உள்ளடக்கிய போட்டி அமைப்பில் நடைபெறும் விளையாட்டுகள்) என வகைப்படுத்தும்.


3. விளையாட்டு ஆணையம் வழிகாட்டுதல்களை வழங்கவும், புகார்களை விசாரிக்கவும், அபராதங்களை விதிக்கவும் அதிகாரம் பெற்றது. ஆணையம் முற்றிலும் அரசாங்கத்தால் வழிநடத்தப்படும் 6 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதன் தலைவராக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் உள்ளார். மற்ற ஐந்து உறுப்பினர்களில் உள்துறை அமைச்சகம், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை மற்றும் சட்ட விவகாரங்கள் துறை ஆகியவற்றின் இணைச் செயலாளர்கள் அடங்குவர்.


4. இந்த விதிமுறை, உலகளவில் கட்டாயமில்லாத “உறுதிப்படுத்தல் மற்றும் பதிவு” (determination and registration) முறைமையின் கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே விளையாட்டுகள் அதிகாரப்பூர்வ வகைப்பாட்டை பெறவேண்டிய சூழல் உள்ளது. உதாரணமாக, ஒழுங்குபடுத்தும் அமைப்பு உத்தரவிட்டால், மின்னணு விளையாட்டு ஆக அங்கீகரிக்ப்படும்போது அல்லது பரிவர்த்தனை மதிப்பு அல்லது அளவு போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரசு சில வகைகளை அறிவிக்கிறது. அதேபோல், பதிவு செய்வதும் அறிவிக்கப்பட்ட நிபந்தனைகளின்கீழ் அல்லது மின்னணு விளையாட்டு வகை விளையாட்டுகளுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு கட்டாயமானதாகும்.


5. இந்த விதிகள், நிதி நிறுவனங்களை நேரடியாக ஒழுங்குமுறை அமைப்பிற்குள் கொண்டு வருவதன் மூலம், செயல்முறையின் எல்லையை விரிவுபடுத்தின. வங்கிகள், கட்டண நுழைவாயில்கள் மற்றும் பிற இடைத்தரகர்கள், பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதற்கு முன், ஒரு விளையாட்டின் ஒழுங்குமுறை நிலையைச் சரிபார்க்க வேண்டும்.


6. தடைசெய்யப்பட்ட இணையவழி   பண விளையாட்டுகளைப் பொறுத்தவரை, பணம் செலுத்துதலை தடுப்பது அல்லது கட்டுப்படுத்துவது உள்ளிட்ட இந்திய இணையவழி விளையாட்டு ஆணைய (Online Gaming Authority of India (OGAI)) வழிகாட்டுதல்களின்படி அவர்கள் செயல்பட வேண்டும். இது, பணம் செலுத்தும் முறையை ஒரு முக்கிய அமலாக்கக் கருவியாக  மாற்றுகிறது.


7. இந்தக் கட்டமைப்பின்கீழ், இரண்டு அடுக்கு குறைதீர்ப்பு முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதலில், இணையவழி தளங்கள் தங்களுக்குள் ஒரு உள்நாட்டு குறைதீர் அமைப்பை உருவாக்க வேண்டும். அதன் பிறகு, பயனர்கள் தங்கள் புகார்களை இந்திய இணையவழி விளையாட்டு ஆணையத்தில் மேல்முறையீடு செய்யலாம். மேலும், அரசாங்கத்திற்குள் இயங்கும் ஒரு மேல்முறையீட்டு அதிகார அமைப்பிடம் கூடுதல் மேல்முறையிட்டு மனுவை வழங்கலாம்.


8. இது தரவு உள்ளூர்மயமாக்கல் (data localisation) கடமைகளையும் அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, சமூக விளையாட்டுகள் (social games) அல்லது மின்னணு விளையாட்டு வழங்கும் இணையவழி விளையாட்டு தளங்கள், பயனர் போக்குவரத்து  மற்றும் தொடர்புடைய தரவுகளை இந்தியாவின் உள்ளேயே சேமிக்க வேண்டும். அதே நேரத்தில், விளம்பரம் , பயனர் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு இணக்கம் போன்ற துறைகளில் எதிர்கால வழிகாட்டுதல்களை வழங்க இந்திய இணையவழி விளையாட்டு ஆணையத்திற்கு (Online Gaming Authority of India (OGAI)) அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒழுங்குமுறை வளர்ச்சிக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


இணையவழி சூதாட்ட ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம், 2025-ன் முக்கிய அம்சங்கள்


1. இணையவழி பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகளுக்குத் தடை: அனைத்து வகையான ஆன்லைன் பண விளையாட்டுகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. இதனால், Dream11, Mobile Premier League, Winzo போன்ற செயலிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வகை விளையாட்டுகளுக்கான விளம்பரங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. இணையவழி பண விளையாட்டுகளை விளையாடுவது, உதவுவது, அல்லது ஏதேனும் விதத்தில் ஈடுபடுவது போன்ற அனைத்து தடைசெய்யப்பட்டுள்ளது.


2. சட்டத்தை மீறுவதற்கான தண்டனைகள்: இணையவழி பண விளையாட்டுச் சேவையை வழங்கினால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம். அடிக்கடி குற்றம் செய்தால், சிறைத்தண்டனை ஐந்து ஆண்டுகள் வரையிலும், அபராதம் இரண்டு கோடி ரூபாய் வரையிலும் நீட்டிக்கப்படலாம்.


 சமூக ஊடக செல்வாக்குள்ளவர்கள் மற்றும் பிரபலங்கள் உட்பட, இதுபோன்ற விளையாட்டுகளை விளம்பரப்படுத்துவது அல்லது ஊக்குவிப்பது, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதத்தில் முடியலாம்.


 அடிக்கடி குற்றம் செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிப்பதற்கான வாய்ப்பும் ஏற்படலாம்.


வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள், இணையவழி பண விளையாட்டுச் சேவைகளுக்கான எந்தவொரு பரிவர்த்தனையையும் எளிதாக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.


3. மின்னணு விளையாட்டை ஒரு விளையாட்டாக அங்கீகரித்தல் (Recognising esports as sports): மின்னணு விளையாட்டு என்பது பல-விளையாட்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக விளையாடப்படும் ஒரு இணையவழி விளையாட்டு என வரையறுக்கப்படுகிறது. இது தனிநபர்கள் அல்லது அணிகளுக்கு இடையே ஒழுங்கமைக்கப்பட்ட போட்டி நிகழ்வுகளை உள்ளடக்கியது. மேலும், இது தேசிய விளையாட்டு ஆளுமைச் சட்டத்தின்கீழ் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


இதன் முடிவுகள் உடல் திறன், மன சுறுசுறுப்பு, தந்திரமான சிந்தனை போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன. இதில் எந்தவிதமான பந்தயம், சூதாட்டம் அல்லது பணம் வைத்து விளையாடுதல் போன்றவைகளும் இடம்பெறாது. ஒருவர் பங்கேற்பாளராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இது போன்ற பந்தயம் அல்லது பணம் சார்ந்த செயல்களில் ஈடுபடுவது மற்றும் அதிலிருந்து வெற்றி பெறுவது போன்றவை அனைத்தும் இதில் இடம்பெறாது.


மின்னணு விளையாட்டு நாடுகளின் தேசிய கோப்பை 2026 (Esports Nations Cup (ENC))


இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், நாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முதன்மையான போட்டியான மின்னணு விளையாட்டு நாடுகளின் தேசிய கோப்பையின் முதல் பதிப்பு, சவுதி அரேபியாவின் ரியாத் நகரில், நவம்பர் 2 முதல் 29 வரை  நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் அணிகள் போட்டியிடும் வழக்கமான போட்டிகளைப் போல் இல்லாமல், மின்னணு விளையாட்டு நாடுகளின் தேசிய கோப்பையில் வீரர்கள் தங்கள் சொந்த நாடு அல்லது பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். சர்வதேச மின்னணு விளையாட்டு துறைக்கு ஒரு முறையான கட்டமைப்பை வழங்குவதற்காகவே மின்னணு விளையாட்டு நாடுகளின் தேசிய கோப்பை உருவாக்கப்பட்டுள்ளது.



தேசிய விளையாட்டு ஆளுமை சட்டம்


1. 2025-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தேசிய விளையாட்டு ஆளுமைச் சட்டத்தின்கீழ், தேசிய விளையாட்டு ஆளுமை (தேசிய விளையாட்டு அமைப்புகள்) விதிகள், 2026 அறிவிக்கப்பட்டன.


2. நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் இந்த விதிகள், தேசிய ஒலிம்பிக் குழு, தேசிய பாராலிம்பிக் குழு, தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகள் மற்றும் மண்டல விளையாட்டுக் கூட்டமைப்புகள் உள்ளிட்ட தேசிய விளையாட்டு அமைப்புகளை நிறுவுதல் மற்றும் அவற்றின் நிர்வாகக் கட்டமைப்பு தொடர்பானவை ஆகும்.


3. இந்தச் சட்டம் தேசிய ஒலிம்பிக் குழு, தேசிய பாராலிம்பிக் குழு மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்குமான தேசிய மற்றும் பிராந்திய விளையாட்டுக் கூட்டமைப்புகளை நிறுவுகிறது. இந்த அமைப்புகள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு விளையாட்டிலும் நிலவும் சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப ஒரு நடத்தை விதிமுறைகளை உருவாக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


4. மேலும், ஒவ்வொரு விளையாட்டுக் கூட்டமைப்பின் செயற்குழுவும், குறைந்தது 2 தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் 4 பெண்களை உள்ளடக்கிய, 15 உறுப்பினர்கள் வரை கொண்டிருக்க வேண்டும் என்றும் இந்தச் சட்டம் கட்டாயமாக்குகிறது.


5. விளையாட்டுச் சங்கங்கள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக, ஒரு தேசிய விளையாட்டுத் தீர்ப்பாயம்  அமைக்கப்படும்.


Original article : What is the Online Gaming Authority of India (OGAI)? -Khushboo Kumari

Share:

அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவின் மூலம் வன உரிமைச் சட்டம் (Forest Rights Act) மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது எப்படி? -சி.ஆர். பிஜோய்

 மாவட்ட அளவிலான குழுவின் (District Level Committee (DLC)) முடிவில் நீதிமன்றம் ஏன் தலையிட்டது? கால்நடைகளை வெளியேற்றுவது மற்றும் மேய்ச்சல் உரிமைகள் குறித்து சட்டம் என்ன சொல்கிறது?


தற்போதைய நிகழ்வு  :


ஏப்ரல் 20 அன்று, உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூரில் உள்ள வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் செயல்படும் மாவட்ட அளவிலான குழுவிற்கு (DLC), அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை, பிந்தைய சட்டத்துடன் முரண்பட்டால், முந்தைய நீதிமன்ற உத்தரவு செல்லாததாகிவிடும் என்று கூறியது.


இந்த உத்தரவு ஏன் முக்கியமானது?


மாவட்ட அளவிலான குழுவின் (DLC) மார்ச் 2021 முடிவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த முடிவில், பாலியா கலான் தாலுகாவைச் சேர்ந்த பழங்குடி சமூகமான 'தாரு' (Tharu) அவர்களின் வன உரிமை கோரிக்கைகளை மாவட்ட அளவிலான குழு (DLC) நிராகரித்திருந்தது. மாவட்ட அளவிலான குழு, 2000-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவைச் சார்ந்திருந்தது. அந்த உத்தரவு, அடுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை "காடுகள், சரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்களின் ஒதுக்கீட்டை நீக்குவதை" நிறுத்தியிருந்தது.


மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இயங்கும் மாவட்ட அளவிலான குழுவில், கோட்ட வன அலுவலர், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் மூன்று மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் அடங்குவர்.


சட்டம் இயற்றுவதில் உள்ள முக்கிய சட்டக் கோட்பாடு என்னவென்றால், முந்தைய சட்டங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளில் உள்ள, பிற்காலச் சட்டத்தின் விதிகளுடன் முரண்படும் அனைத்து விதிகளும் செல்லாதவை ஆகும். 2006-ம் ஆண்டின் வன உரிமைச் சட்டமே (Forest Rights Act(FRA)), "தற்சமயம் நடைமுறையில் உள்ள வேறு எந்தச் சட்டத்திலும் உள்ள எதையும் பொருட்படுத்தாமல் மற்றும் இந்தச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு" வன உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு வனமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று கூறுகிறது. மாவட்ட அளவிலான குழு (DLC) இந்த விதியை மீறியுள்ளது, இது தண்டனைக்குரிய குற்றமாகும்.


மாவட்ட அளவிலான குழு (DLC) தண்டிக்கப்பட்டதா?


இந்த நீதிமன்ற உத்தரவு நாடு முழுவதும் நிவாரணத்தை அளித்திருந்தாலும், விதிமீறுபவர்களைத் தண்டிப்பதற்காக வன உரிமைச் சட்டம் (FRA) வழங்கும் வழிமுறையை உயர்நீதிமன்றம் பயன்படுத்தவில்லை. வன உரிமைச் சட்டத்தின்கீழ் கிராம சபை (Gram Sabha) ஒரு சட்டப்பூர்வ அதிகார அமைப்பாகும். சட்டத்தை மீறும் அதிகார அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குமுன், அது மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவுக்கு 60 நாட்கள் முன்னறிவிப்பு வழங்க வேண்டும்.


இருப்பினும், உயர்நீதிமன்றம் இந்த விதியை புறக்கணித்துவிட்டு, அதற்குப் பதிலாக மாவட்ட அளவிலான குழுவையே (DLC) தனது குற்றத்தை மறுபரிசீலனை செய்து, தற்போதுள்ள சட்டம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க புதிதாக முடிவெடுக்குமாறு கேட்டுக் கொண்டது.


வன உரிமைச் சட்டம் (Forest Rights Act(FRA)) இத்தகைய சலுகைகளை அனுமதிப்பதில்லை.



வன உரிமைச் சட்டம் (Forest Rights Act(FRA)) எவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது?


வனப்பகுதிகளில் வசிப்பவர்களின் உரிமைக் கோரிக்கைகளை அங்கீகரித்து சரிபார்க்கும் செயல்முறை முழுமையாக நிறைவடையும் வரை, அவர்கள் ஆக்கிரமிப்பில் உள்ள வன நிலங்களிலிருந்து அவர்களை வெளியேற்றவோ அல்லது அகற்றவோ வன உரிமைச் சட்டம் (FRA) அனுமதிக்காது. எடுத்துக்காட்டாக, ஜனவரி 2026-இல், உரிமைக் கோரிக்கைகள் குறித்த இறுதி முடிவு எட்டப்படும் வரை, வனத்துறை எவ்விதமான வற்புறுத்தல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவில், மனுதாரர்களை வெளியேற்றக்கூடாது என்பதும், அவர்கள் ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தில் அவர்கள் மேற்கொண்டு வரும் அமைதியான உடைமை மற்றும் விவசாய நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என்பதும் அடங்கும்.


இருப்பினும், வன உரிமைச் சட்டம் (FRA) தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டும் மீறப்பட்டும் வருகிறது. உதாரணமாக, செப்டம்பர் 2014-ல், தேனி மாவட்டம் ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்த மனுதாரர்கள் தாக்கல் செய்த ஒரு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தங்களுக்கு வழங்கப்பட்ட வெளியேற்ற அறிவிப்புகளை (eviction notices) எதிர்த்தும், வன உரிமைச் சட்டத்தின்கீழ் தங்களுக்குள்ள உரிமைக் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர்கள் அம்மனுவில் கோரியிருந்தனர். அம்மனுதாரர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், வன உரிமைச் சட்டத்தின்கீழ் உரிமைகள் பெற அவர்களுக்குத் தகுதி இல்லை என்றும் வன அதிகாரி அளித்த விளக்கத்தின் அடிப்படையிலேயே இந்தத் தள்ளுபடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


வன உரிமைச் சட்டத்தின்கீழ் உரிமைக் கோரும் நடைமுறைகளை மேற்கொள்வது, அதிகாரிகளின் நேரத்தை வீணடிப்பதாகவே அமையும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அப்போது குறிப்பிட்டது. எனவே, நீதிமன்றம் அம்மனுவைத் தள்ளுபடி செய்தது.


இதே உயர்நீதிமன்றம், 2017-ல் பெரம்பலூர், 2020-ல் தூத்துக்குடி, 2021-ல் சிவகங்கை மற்றும் 2022-ல் தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மனுதாரர்கள் வன உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த இதேபோன்ற மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், வன உரிமைச் சட்டத்தால் அத்தகைய உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டிருந்த போதிலும், 1882-ம் ஆண்டு தமிழ்நாடு வனச் சட்டத்தின் (Tamil Nadu Forest Act (TNFA)) கீழ் அதிகாரிகள் தொடர்ந்து வெளியேற்றும் உத்தரவுகளைப் (eviction orders) பிறப்பித்து வருகின்றனர்.


வன உரிமைச் சட்டம் (FRA) கால்நடைகளை மேய்க்க அனுமதிக்கிறதா?


இந்த ஆண்டு மார்ச் 13 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, "வனவிலங்குகளைப் பாதுகாக்கவும், நோய் பரவுவதைத் தடுக்கவும், தமிழ்நாடு வனச் சட்டத்தின் 57-வது பிரிவின்கீழ் வனங்களுக்குள் கால்நடைகள் அத்துமீறி நுழைவதைத் தடைசெய்யும் விதிமுறைகளே" அந்தத் தடைக்கான சரியான சட்ட அடிப்படை என்று குறிப்பிட்டு, மார்ச் 2022 உத்தரவுக்கு எதிரான மறுஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது.


உயர்நீதிமன்றம் ஆரம்பத்தில் தமிழ்நாட்டின் அனைத்து வனப் பகுதிகளிலும் கால்நடைகளை மேய்ப்பதற்குத் தடை விதித்திருந்தது. பின்னர் அதே மாதத்தில், அந்தத் தடை உத்தரவைப் புலிகள் காப்பகங்கள், தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தியது. இருப்பினும், புலிகள் காப்பகங்கள், தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களுடன் ஒருங்கிணைந்துள்ள பகுதிகள் உட்பட அனைத்துக் காடுகளிலும் மேய்ச்சல் உரிமைகளை அங்கீகரிக்கும் வன உரிமைச் சட்டத்தை (FRA) அது குறிப்பிடவில்லை. மேலும், வன உரிமைச் சட்டமும் ஒரு மத்திய சட்டமாகும். எனவே மேய்ச்சலுக்கான தடை மற்றும் அனுமதி ஆகிய இரண்டிலும் அது ஒரு மாநிலச் சட்டத்தை மீறிச் செயல்படும்.


இதனால்தான், பிந்தைய சட்டத்தில் உள்ள விதிகள், முந்தைய சட்டங்களில் உள்ள முரண்பாடான விதிகளையும், ஒன்றுக்கொன்று முரண்படும் நீதிமன்ற உத்தரவுகளையும் மீறிச் செயல்படும் என்பதை அலகாபாத் உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றமாக அமைந்துள்ளது.


சி.ஆர். பிஜோய் இயற்கை வள முரண்பாடுகள் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளை ஆராய்கிறார்.


Original article : How Forest Rights Act was reaffirmed by Allahabad HC order? -C.R. Bijoy

Share: