தர மதிப்பீடு இல்லை : சஞ்சார் சாதி செயலிக்கான மதிப்பு குறித்து . . .

     இணையக் குற்றங்களைச் சமாளிக்க சஞ்சார் சாதி செயலியை (Sanchar Saathi app) கட்டாயப்படுத்துவது என்பது மிகையான செயலாகும்.

டிஜிட்டல் கைதுகள்" (digital arrests) முதல், பெரிய அளவிலான எல்லை தாண்டிய அடையாளம் குறிப்பிடப்படாத (anonymous) மோசடிகள் வரை இணையக் குற்றங்களின் வளர்ந்துவரும் நுட்பம் வரை, அவற்றைக் கையாள்வதை அவசரமாகவும் கடினமாகவும் ஆக்கியுள்ளது. உடனடி செய்தியிடல் செயலிகளில் (instant messaging apps) பயனர்களின் கணக்குகள் தொடர்புடைய சிம் கார்டு அகற்றப்பட்ட பின்னரும் சில நாட்கள் செயல்பாட்டில் இருக்கும் பாதுகாப்பு இடைவெளியைக் கொண்டு இணையக் குற்றவாளிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அரசாங்க-ஆள்மாறாட்டம் மோசடியை இயக்க அவர்கள் இந்த அடையாளம் குறிப்பிடப்படாத தன்மையைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஏமாற்றப்பட்ட அல்லது சேதப்படுத்தப்பட்ட IMEI எண்களின் பரவலான பயன்பாடு, சட்ட அமலாக்கத்தால் குற்றவாளிகளைக் கண்காணிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக ஆக்கியுள்ளது. இந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் பாதிப்புகளை நிவர்த்திசெய்ய அரசாங்கம் இப்போது வலுவான கருவிகளை விரும்புகிறது என்பது புரிந்துகொள்ளத்தக்கது. இது நவம்பர் 28 மற்றும் டிசம்பர் அன்று வெளியிடப்பட்ட தொலைத்தொடர்புத் துறையின் உத்தரவுகளை விளக்குகிறது. முதலாவது, "சிம் பிணைப்பு" (SIM binding) ஒருவரின் உண்மையான சிம் அகற்றப்பட்டால் பயனரின் கணக்கு முடக்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். இரண்டாவதாக, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் மார்ச் 2026-க்குள் அனைத்து புதிய சாதனங்களிலும் சாதன நம்பகத்தன்மையை சரிபார்க்க சஞ்சார் சாதி செயலியை (Sanchar Saathi app) முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று கோருகிறது.  இந்த செயலி சாதனத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க உதவும். முதல் உத்தரவு ஒரு பாதுகாப்பு இணைப்பு என்றாலும், புலனம் (WhatsApp) அல்லது பிற இணைய செய்தி செயலிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு இது சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். இரண்டாவது உத்தரவு, சில நேரங்களில் நல்ல நோக்கங்கள் இன்னும் தீங்கு விளைவிக்கும் என்ற பழமொழியை நினைவூட்டுகிறது. போலி தொலைபேசிகள் மற்றும் போலி IMEI எண்களின் சிக்கலை சரிசெய்வதற்கு இந்த திட்டம் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், இதற்கான பயிற்சி இறுதியில் சிக்கலைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.


"முதலில் சாதனத்தை பயன்படுத்தும்போது அல்லது அமைத்தலின்போது இந்த செயலியை அணுகுவதும் பயனர்களுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்றும் அதன் செயல்பாடுகளை முடக்கப்படவில்லை அல்லது கட்டுப்படுத்தப்படவில்லை" என்றும் உத்தரவில் உள்ள வெளிப்படையான அறிவுறுத்தல், இந்த செயலிக்கு தொலைபேசியின் இயக்க முறைமைக்குள் (operating system) அதிக அளவிலான பாதுகாப்பு அனுமதியையும் பெறும். இது கேமரா, தொலைபேசி அல்லது SMS அணுகல் போன்ற அம்சங்களுக்கு அதிகளவில் ஊடுருவும் வாய்ப்பை அனுமதிக்கிறது. அரசு கண்காணிப்புக்காக இந்த செயலியை தவறாகப் பயன்படுத்தலாம். அமைப்பு சமரசம் செய்யப்பட்டால், தீங்கிழைக்கும் ஒரு நபராலும் இதைப் பயன்படுத்தலாம். அப்படியானால், மில்லியன் கணக்கான பயனர்கள் குறிவைக்கப்படலாம். இதற்கான ஆபத்தானது உண்மையானது மற்றும் கற்பனை சார்ந்தது அல்ல. அரசியலில் எதிர்க்கட்சி, பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்களை குறிவைக்க மத்திய அரசு ஏற்கனவே பெகாசஸ் மென்பொருளைப் (Pegasus software) பயன்படுத்தியுள்ளது. பயனர்கள் செயலியை நீக்கலாம் என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தெளிவுபடுத்தல் இருந்தபோதிலும், அதை முடக்க முடியாது என்று ஆணை கூறுகிறது. இதன் பொருள் இது ஒரு கண்காணிப்புச் சிறை (Panopticon) போலவும், ஒரு எளிய சரிபார்ப்பு கருவி போலவும் செயல்படும். உச்சநீதிமன்றத்தின் கே.எஸ். புட்டசாமி (2017) தீர்ப்பு தனியுரிமைக்கான

தெளிவான விதிகளை வகுத்துள்ளது. தனியுரிமையில் அரசின் எந்தவொரு ஊடுருவலும் சட்டபூர்வமான தன்மை, தேவை மற்றும் விகிதாசாரத்தின் சோதனைகளை பூர்த்திசெய்ய வேண்டும் என்று அது கூறியது. சாதனத்தின் உண்மைத்தன்மையை சரிபார்க்க அரசாங்கம் ஏற்கனவே குறைவான ஊடுருவும் வழிகளைக் கொண்டுள்ளது. இதில் சஞ்சார் சாதி வலை தரவுத்தளங்கள், SMS அடிப்படையிலான சோதனைகள் மற்றும் USSD குறிகள் போதுமானதாக இருக்க வேண்டும். இந்த குறைவான தலையீடு கொண்ட மாற்று வழிகளை புறக்கணிப்பதன் மூலம், சஞ்சார் சாதி குறித்த இந்த உத்தரவு விகிதாசாரத் தரத்திற்கு (proportionality standard) இணங்கத் தவறுகிறது. தனியுரிமையை மதிக்கும் ஆப்பிள் போன்ற உற்பத்தியாளர்கள் இந்த உத்தரவுக்கு இணங்க மறுப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது ஆச்சரியமில்லை.


Share: