சமீபத்திய திவால் மற்றும் நொடிப்புநிலைச் சட்ட (திருத்த) மசோதா, 2025-ல் என்னென்ன திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• விவாதத்திற்குப் பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  இந்தச்சட்டம்   கடன் மீட்பு வழிமுறையாகச் செயல்படுவதற்காக மட்டுமல்லாமல், வணிக நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு கட்டமைப்பாகச் செயல்படுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.


• இந்த மசோதாவில் மொத்தம் 12 திருத்தங்கள் இடம்பெற்றுள்ளதாகவும்;  அதில் 11 திருத்தங்கள் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டவை என்றும், ஒரு திருத்தம் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.


• கடந்த 10 ஆண்டுகளில், திவால் மற்றும் திவால் குறியீடு (திருத்த) மசோதா (Insolvency and Bankruptcy Code) நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய   காரணியாக இருந்துள்ளதாக  நிதியமைச்சர் குறிப்பிட்டார். நாட்டின் வங்கித் துறையின் ஒட்டுமொத்த  பாதுகாப்பை  மேம்படுத்துவதில், திவால் மற்றும் திவால் குறியீடு ஒரு மிக முக்கிய காரணியாகத் திகழ்ந்துள்ளது என்று அவர் கூறினார்.


உங்களுக்குத் தெரியுமா:


• 2016-ஆம் ஆண்டு திவால் மற்றும் நொடிப்புநிலைச் சட்டம், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடையே ஏற்படும் திவால்நிலையைத் தீர்ப்பதற்கு ஒரு காலவரையறைக்குட்பட்ட செயல்முறையை வழங்குகிறது என்று PRS சட்டமன்ற ஆராய்ச்சி நிறுவனம் தனது சட்ட ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்தத் திருத்த மசோதா, இதுவரை சட்டம் எதிர்கொண்டு வந்த நடைமுறைத் தாமதங்களைக்  குறைப்பதை  நோக்கமாகக் கொண்டுள்ளது.


• இந்த மசோதா, கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது மற்றும் அவற்றின் மதிப்பைத் தீர்மானிப்பது போன்ற அலுவலரின் அதிகாரங்களை நீக்குகிறது. இது, அலுவலரை நியமிக்கவும் அல்லது நீக்கவும், கலைப்புச் செயல்முறையைக் கண்காணிக்கவும் கூடிய அதிகாரத்தை 'கடனளிப்போர் குழுவிடம்' (committee of creditors (CoC)) வழங்குகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிதி நிறுவனங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே திவால் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு அனுமதிக்கும் வகையில், 'கடனளித்தோரால் தொடங்கப்படும் திவால் தீர்வுச் செயல்முறை' (Creditor-Initiated Insolvency Resolution Process (CIIRP)) ஒன்றையும் இது நிறுவுகிறது.


• திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய மாற்றங்களில் ஒன்று, ஒரு நிதிசார் கடனாளியால் தாக்கல் செய்யப்படும் திவால் மனுவானது, கடனை செலுத்த தவறிவிட்டார் என நிரூபிக்கப்பட்டிருந்தாலும், நடைமுறை விதிமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தாலும், வல்லுநருக்கு எதிராக எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கைகளும் நிலுவையில் இல்லாவிட்டாலும் "கட்டாயமாக" ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதாகும். இதன் பொருள், இப்படிப்பட்ட விண்ணப்பங்களை கூடுதல் காரணங்களின் அடிப்படையில் நிராகரிக்கும் வாய்ப்பு இனி இருக்காது. மேலும், ஒரு திவால் மனுவைப் பரிசீலிப்பதற்கான ஒரே உண்மையான அடிப்படையாக 'கடன்தவறியமை' மட்டுமே அமையும்.


• மேலும், நிதி நிறுவனங்களின் பதிவுகள், கடனாளியின் தவறுக்கான போதுமான மற்றும் உறுதியான ஆதாரமாகக் கருதப்பட வேண்டும் என்பதையும் இந்த மசோதா தெளிவுபடுத்துகிறது.


Original article : What amendments are done in the recent Insolvency and Bankruptcy Code (Amendment) Bill, 2025? -Priya Kumari Shukla

Share: