அடிப்படைக் கடமைகள் என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ், குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


 ஜனவரி 28 அன்று வெளியிடப்பட்ட ஒரு உத்தரவில், தேசியப் பாடலைப் (National Song) பாடுவதற்கான முதல் நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறைத் தலைவர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களுக்கு வழங்கியது. மேலும், அதன் ஆறு சரணங்கள், 3 நிமிடங்கள் 10 வினாடிகள் கால அளவு கொண்டவை, குடியரசுத்தலைவரின் வருகை, மூவர்ணக் கொடியை ஏற்றுதல் மற்றும் ஆளுநர்களின் உரைகள் போன்ற அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் பாடப்பட வேண்டும்.


 ஒன்றிய அரசு ஒரு வருட கால வந்தே மாதரம் கொண்டாட்டத்தைத் தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. முதல் கட்டம் நவம்பரில் நிறைவடைந்தது. இரண்டாவது கட்டம் இந்த மாதத்தில் நடைபெற உள்ளது. மூன்றாவது கட்டம் ஆகஸ்ட் 2026-ல் மற்றும் நான்காவது நவம்பர் 2026 நடைபெற உள்ளது..


தேசியப் பாடலின் அதிகாரப்பூர்வ பதிப்பு பாடப்படும்போதோ அல்லது இசைக்கப்படும்போதோ, பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும். இருப்பினும், ஒரு செய்திப்படம் அல்லது ஆவணப்படத்தின் போது தேசியப் பாடல் படத்தின் ஒரு பகுதியாக இசைக்கப்படும்போது, ​​பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதில்லை. ஏனெனில், நின்று கொண்டிருப்பது படத்தின் கண்காட்சியை குறுக்கிடும். மேலும், அது தேசியப் பாடலின் கண்ணியத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக குழப்பத்தை உருவாக்கும்.

 

சமீபத்திய ஆண்டுகளில், வந்தே மாதரத்தை இசைப்பதற்கான கட்டமைப்பையும், தேசிய சின்னங்களை அவமதிப்பதைத் தடுக்க இயற்றப்பட்ட 1971-ஆம் ஆண்டு தேசிய மரியாதையை அவமதிப்பதைத் (Prevention of Insults to National Honour Act) தடுக்கும் சட்டத்தின் கீழ் தண்டனைகள் விதிக்கப்படலாமா என்பது குறித்து தெளிவுபடுத்தவும் பல மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


2022-ஆம் ஆண்டு, 1971-ஆம் ஆண்டின் சட்டம் தேசிய கீதத்தைப் பாடுவதைத் தடுப்பது அல்லது அத்தகைய பாடலில் ஈடுபடும் ஒரு கூட்டத்திற்கு இடையூறு விளைவிப்பதை குற்றமாக்கினாலும், தேசியப் பாடலுக்கு இதே போன்ற தண்டனை விதிகள் செய்யப்படவில்லை என்று ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.


தேசிய பாடலைப் (National Song) போல் இல்லாமல், தேசிய கீதம் (National Anthem) வெளிப்படையான அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ பாதுகாப்பைப் பெறுகிறது.


அரசியலமைப்பின் பிரிவு 51A(a), குடிமக்கள் தேசிய கீதத்தை மதிக்க வேண்டும் என்ற அடிப்படைக் கடமையை கொண்டுள்ளது. அதன் பயன்பாடு உள்துறை அமைச்சகத்தால் (MHA) பிறப்பிக்கப்பட்ட விரிவான நிர்வாக உத்தரவுகளால் நிர்வகிக்கப்படுகிறது.


சுதேசி இயக்கத்தின் (1905–08) போது வந்தே மாதரம் ஒரு பேரணி முழக்கமாக வெளிப்பட்டது. சுதந்திரப் போராட்டத்துடன் இது நெருக்கமாக தொடர்புடையது.


உங்களுக்குத் தெரியுமா:


இந்திரா காந்தியின் அவசரநிலையின் போது, ​​1976-ஆம் ஆண்டு 42-வது திருத்தச் சட்டத்தின் மூலம் அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பின் பகுதி IV-A-ல் சேர்க்கப்பட்டன. பிரிவு 51(A) 11 அடிப்படைக் கடமைகளை விவரிக்கிறது. 10 அடிப்படைக் கடமைகள்  42-வது திருத்தத்துடன் வந்தது திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது. 11வது திருத்தம் 2002-ல் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 86-வது திருத்தத்தால் சேர்க்கப்பட்டது.


பிரிவு 51(A) இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் கடமையாக பின்வருபவனவற்றைக் குறிப்பிடுகிறது : 


(அ) அரசியலமைப்பைக் கடைப்பிடிப்பதும் அதன் இலட்சியங்கள், நிறுவனங்கள், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை மதிக்க வேண்டும்; 


(ஆ) நமது தேசிய சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த  முக்கிய இலட்சியங்களைப் போற்றிப் பின்பற்றை வேண்டும்; 


(இ) இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்திப் பாதுகாக்க வேண்டும். இது போன்ற பல கடமைகள்  உள்ளன.


original article : What are fundamental duties? -Roshni Yadav, Khushboo Kumari

Share: