கெயர் ஸ்டார்மர் பதவி விலகல்: பிரிட்டன் நாடாளுமன்ற அமைப்பு இந்தியாவின் நாடாளுமன்ற அமைப்பிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? -குஷ்பூ குமாரி

கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகும் நிலையில், பிரிட்டன் நாடாளுமன்ற முறையை மீண்டும் ஆராய்ந்து, அதனை இந்தியாவின் மாதிரியுடன் ஒப்பிட்டு, ஜனாதிபதி ஆட்சி முறையின் முக்கிய அம்சங்களைப் புரிந்துகொள்வோம்.


தற்போதைய செய்தி?


தொழிலாளர் கட்சி 412 இடங்களை வென்ற தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சியைப் படுதோல்வி அடையச் செய்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரதமர் மற்றும் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஆகிய இரு பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.


ஸ்டார்மரின் இந்தப் பதவி விலகல், அவருக்குப் பின் வரப்போகும் புதிய பிரதமரின் வருகையும், கடந்த பத்து ஆண்டுகளில் பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக ஏழு பிரதமர்களைப் பார்த்துள்ளது என்பதைக் காட்டுகிறது. ஒரு பிரதமரின் அதிகாரப்பூர்வப் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்றபோதிலும்,                       2016-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரு பிரிட்டன் பிரதமர் கூட தங்களது முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்யவில்லை. இதில் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) மட்டுமே 2019 முதல் 2022-ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பணியாற்றி, ஓரளவிற்குத் தனது பதவிக்காலத்தை நெருங்கினார்.


முக்கிய அம்சங்கள்:


1. பிரிட்டன்என்பது இங்கிலாந்து, வட அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ்  ஆகிய நான்கு பகுதிகளை கொண்டுள்ளது. இங்கு அரசியலமைப்பு முடியாட்சி (Constitutional Monarchy) நடைமுறையில் உள்ளது. மன்னரின் பதவி பெரும்பாலும் சடங்கு மற்றும் அடையாள முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது.


2. பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இரண்டு அவைகளைக் கொண்ட அமைப்பைக் கொண்டுள்ளது. அவை கீழ் அவை (lower house)  மற்றும்  மேல் அவை (upper house) ஆகும். இவை லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் கூடுகின்றன. 'கீழ் அவை' நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 650 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதே சமயம், நிலையான எண்ணிக்கை இல்லாத மேல்  அவையானது, ஆயுள் முழுவதும் பதவியில் இருக்கும் உறுப்பினர்கள்,              மதகுருமார்கள் மற்றும் பரம்பரை பிரபுக்கள் ஆகியோரைக் கொண்டுள்ளது.      பிரதமர் அரசின் நிர்வாகப் பிரிவுக்கு தலைமை தாங்கி, ஐந்து ஆண்டுகள் பதவியில் இருப்பார்.


3. பிரதமர் ஐந்தாண்டுகள் என்ற ஒரு குறிப்பிட்ட பதவிக்காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது ஒரு பொதுவான தவறான கருத்தாகும்.                       இந்த வரம்பு ஆளும் கட்சியின் நாடாளுமன்றப் பதவிக்காலத்திற்கே பொருந்தும், பிரதமராகும் தனிநபருக்கு அல்ல. எனவே, அரசாங்கத்திற்கும் கட்சிக்கும் மக்கள் ஆதரவு இருந்தாலும், உயர்மட்டத் தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து குழப்பங்களும் மாற்றங்களும் ஏற்படுகின்றன.

4. கட்சிக்குள் தலைவரின் மீது உள்ள உள்ளக நம்பிக்கை  குறைந்துவிட்டால், அந்தக் கட்சிக்கான உள்கட்சி  தேர்தல் நடத்தப்படலாம். அந்தத் தேர்தலில் தற்போதைய தலைவருக்கு எதிராக முடிவு வந்தால், பதவியில் இருக்கும் பிரதமர் மாற்றப்படுவார். இதற்கு காரணம், பிரிட்டிஷ் அரசியல் அமைப்பில் பிரதமர் “சமமானவர்களுள் முக்கியமானவர்” (First among equals / Primus inter pares) என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுவதாகக் கருதப்படுவது ஆகும்.


5. ஸ்டார்மரின் விவகாரத்தில், மே மாத உள்ளாட்சி தேர்தல்களில் ஏற்பட்ட மோசமான முடிவுகள் மற்றும் பீட்டர் மாண்டல்சனை  அமெரிக்காவிற்கான தூதராக நியமித்தது தொடர்பான சர்ச்சை காரணமாக அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். குறிப்பாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் தண்டனை பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன்  மாண்டல்சனுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்பட்டதால், இந்த நியமனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தியா மற்றும் பிரிட்டன் நாடாளுமன்ற முறைகளுக்கு இடையிலான ஒப்பீடு 


ஒற்றுமைகள்


1.  இரண்டு நாடுகளிலுமே அரசாங்கத்தின் தலைவர் கௌரவப் பொறுப்பை மட்டுமே வகிக்கிறார். பிரிட்டனில் அரசர்/அரசி (Monarch) மற்றும் இந்தியாவில் குடியரசுத் தலைவர் (President). இருப்பினும், பிரிட்டனின் கௌரவத் தலைவரைவிட இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அதிக அதிகாரங்கள் உள்ளன.


2. இரு நாடுகளிலும் இரு அவைகளைக் கொண்ட நாடாளுமன்ற அமைப்பு (Bicameral Parliament) உள்ளது. பிரிட்டனில் இது கீழ் அவை (lower house)  மற்றும்  மேல் அவை (upper house) என்று உள்ளது. இந்தியாவில், மாநிலங்களவை, மக்களவை என்று உள்ளது.


3. பெரும்பான்மை பெற்ற கட்சியின் ஆட்சியின் அடிப்படையிலேயே நிர்வாகம் நடக்கிறது. கீழவையில் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சியின் அல்லது கூட்டணியின் தலைவரே பிரதமராக பொறுப்பேற்கிறார்.


4. ஒரு கூட்டணி அரசாங்கத்தில், ஒருமித்த கருத்து அமைச்சர்களைக் கட்டுப்படுத்துகிறது. இந்த இரண்டு அமைப்புகளும், நிர்வாகம் சட்டமன்றத்திற்க்கு கட்டுப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இது ஜனநாயகப் பொறுப்புடைமை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு முக்கியமான ஒரு கட்டுப்பாடு மற்றும் சமநிலை அமைப்பை உறுதி செய்கிறது.India, UK, parliamentary















வேறுபாடுகள்


1. நாடாளுமன்ற இறையாண்மை என்பது பிரிட்டனின் அரசியலமைப்பின் ஒரு கொள்கையாகும். அது எந்தவொரு சட்டத்தையும் உருவாக்கவோ அல்லது ரத்து செய்யவோ நாடாளுமன்றத்திற்கே அதிகபட்ச சட்ட அதிகாரத்தை வழங்குகிறது. இருப்பினும், இந்தியா ஒரு அரசியலமைப்பு தன்மை கொண்ட ஒரு முறையைப் பின்பற்றுகிறது. இந்தியாவில் சட்டம் இயற்றுவதில் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை அரசியலமைப்பு கட்டுப்படுத்துகிறது.


 

2. இந்தியாவின் நாட்டின் குடியரசுத் தலைவர் ஐந்து ஆண்டு காலத்திற்கு மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால், பிரிட்டனின் தலைவர் (அரசர்/அரசி) பரம்பரைப் பொறுப்பு மூலமாக அந்தப் பதவியைப் பெறுகிறார்.


3. இந்தியாவில், பிரதமர் அல்லது அமைச்சர்கள் பதவியேற்கும் போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டால், அவர்கள் ஆறு மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு அவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.                         இதற்கு நேர்மாறாக, பிரிட்டனில் பிரதமர் பாரம்பரியமாக 'மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கீழவை' உறுப்பினராக மட்டுமே இருக்க வேண்டும். இது நேரடித் தேர்தல் பொறுப்பை உறுதி செய்கிறது.


4. அவைத் தலைவரின் பங்கும் வேறுபடுகிறது: இந்தியாவில், பொதுவாக ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதேசமயம் பிரிட்டனில், அவைத் தலைவர் நடுநிலைமையைக் கடைப்பிடிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் கட்சி பதவியை ராஜினாமா செய்கிறார்.


5. இந்தியாவின் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் 'பூஜ்ஜிய மணிநேரம்' (Zero Hour) என்ற ஒரு தனித்துவமான முறை உள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் முன் அறிவிப்பின்றி அவசரமான விவாகரங்களை எழுப்ப முடியும். பிரிட்டனில் இது போன்ற நேரடியான நடைமுறை எதுவும் இல்லை. இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்ற நாடாளுமன்ற நடைமுறைகள் மூலம் அவசரப் பிரச்சினைகளை எழுப்பலாம்.


6. இந்தியாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கட்சியின் கட்டுப்பாட்டிற்கு கண்டிப்பாகக் கட்டுப்பட வேண்டும், பெரும்பாலும் கட்சி சொல்லும் வழியிலேயே வாக்களிக்க வேண்டும். கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை இழக்க நேரிடும் என்று 'கட்சித் தாவல் தடைச் சட்டம்' (Anti-Defection Law) கூறுகிறது. இதனால் ஆறு மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.



7. இதற்கு மாறாக, பிரிட்டன் ஒரு வலுவான கட்சி ஒழுங்கு நடவடிக்கை முறையைப் பின்பற்றினாலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வப்போது தங்கள் மனசாட்சிப்படியோ அல்லது தங்கள் தொகுதி மக்களின் நலன்களின்படியோ வாக்களிக்க அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளனர். இந்தியாவைப் போல் இல்லாமல், பிரிட்டனில் கட்சித் தாவல் தடைச் சட்டத்திற்கு இணையான சட்டம் எதுவும் இல்லை. இது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிப்பு முடிவுகளில் அதிக சுதந்திரத்தை  வழங்குகிறது.


8. நாடாளுமன்ற அமைப்புகளுக்குள் இருக்கும் பிரதிநிதித்துவம் அந்தந்த நாட்டின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கிறது. பின்தங்கிய சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக இந்தியாவில் பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு (ST) இடஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் (Reserved seats) உள்ளன. பிரிட்டனில் இப்படி இடஒதுக்கீடு இல்லை என்றாலும், கட்சிகள் தங்களின் வேட்பாளர் தேர்வு முறைகள் மூலம் நாடாளுமன்றத்தில் பன்முகத்தன்மையை அதிகரிக்க முயற்சித்து வருகின்றன.


அதிபர் ஆட்சி முறை


1. இந்தியாவும் பிரிட்டனும் நாடாளுமன்ற ஆட்சி முறையைப் பின்பற்றுகின்றன. ஆனால், அமெரிக்கா (USA) அதிபர் ஆட்சி முறையின்கீழ் இயங்குகிறது. அங்கு நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் அதிபரின் கைகளில் உள்ளன.


2. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் (NCERT) கூற்றுப்படி, அதிபர் ஆட்சி முறையில், அதிபரே நாட்டின் தலைவராகவும் அரசாங்கத்தின் தலைவராகவும் செயல்படுகிறார். இந்த முறையில், அதிபரின் பதவி என்பது சட்டப்படியும் சரி, நடைமுறையிலும் சரி, மிகவும் சக்திவாய்ந்தது ஆகும்.


3. அதிபர் ஆட்சி முறையானது, நிர்வாகத் துறையை சட்டமன்றத்திடமிருந்து தனியாகப் பிரிப்பதற்குக் 'அதிகாரப் பகிர்வுக் கொள்கையை' (Doctrine of separation of powers) பயன்படுத்துகிறது. இது நாட்டின் மற்றும் அரசாங்கத்தின் தலைவரான அதிபருக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்குகிறது.


4. மேலும், அமெரிக்க அரசியலமைப்பு ஒரு கூட்டாட்சி முறையை வழங்குகிறது. இதில் மத்திய அரசைவிட மாநிலங்களுக்கு மிக அதிகமான தன்னாட்சி அதிகாரம் உள்ளது. அமெரிக்கச் சூழலில், குறிப்பிட்ட பட்டியலில் இல்லாத இதர அதிகாரங்கள் (Residuary powers) அனைத்தும் மாநிலங்களிடமே உள்ளன.


5. நீதித்துறை மறுஆய்வு என்று வரும்போது, அமெரிக்க அரசியலமைப்பு 'நீதித்துறை மேலாதிக்க' (Judicial supremacy) முறையை நிறுவியுள்ளது.                             இது எந்தவொரு சட்டத்தையும் அரசியலமைப்புக்கு முரணானது என்று அறிவிக்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றத்திற்கு வழங்குகிறது. இதன் மூலம் சட்டமன்றத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன.


Original Link: Keir Starmer’s exit: How the UK Parliamentary system differs from India’s.

Share: