மேற்குவங்கத்தில், பொது விநியோகத் திட்டம் (Public Distribution System (PDS)) மற்றும் அன்னபூர்ணா யோஜனா (Annapurna Yojana) ஆகிய திட்டங்களை, 'சிறப்பு தீவிர திருத்த' (Special Intensive Revision (SIR)) நடவடிக்கையின் முடிவுகளோடு இணைப்பதை எதிர்த்து ஒரு தொழிற்சங்கம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
தற்போதைய நிகழ்வு என்ன?
மேற்குவங்கத்தில் நடைபெற்ற சிறப்புத் தீவிர திருத்தத்தின் முடிவுகளுடன், பொது விநியோகத் திட்டம் (PDS) மற்றும் அன்னபூர்ணா யோஜனா ஆகியவற்றின்கீழ் வழங்கப்படும் சலுகைகளை இணைப்பது குறித்த மேற்குவங்க அரசின் அறிவிப்புகளை எதிர்த்து மனு தாக்கல் செய்தவர்கள், கல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜூன் மாதம் 23-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு வலியுறுத்தியது.
வேளாண் தொழிலாளர்கள், சிறு வேளாண் தொழிலாளர்கள் மற்றும் குத்தகை வேளாண் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான பச்சிம் பங்கா கேத் மஜூர் சமிதி (Paschim Banga Khet Majoor Samity), மேற்கு வங்கத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசால் வெளியிடப்பட்ட இரண்டு அறிவிப்புகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
உத்தரவில் கூறப்பட்டுள்ளவை
ஜூன் மாதம் 4-ஆம் தேதி, மேற்கு வங்க உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறையானது, ‘மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR), 2026-ன் முடிவுகளின் அடிப்படையில் தகுதியற்ற பொது விநியோகத் திட்டப் பயனாளிகளைச் சரிபார்த்தல் மற்றும் நீக்குதல்’ என்ற தலைப்பில் ஒரு உத்தரவை வெளியிட்டது.
2026-ஆம் ஆண்டின் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) முடிவுகளின் அடிப்படையில், பின்வரும் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின்கீழ் வருவதன் காரணமாகத் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட பொது விநியோகத் திட்டப் (PDS) பயனாளிகளைச் சரிபார்த்து நீக்குவதற்குத் துறை முடிவு செய்துள்ளதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து பிரிவுகளில், டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, வரைவுப் பட்டியலில் உள்ள இடம்பெறாத, வேறு இடத்திற்குச் சென்றவர்கள், இறந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு கொண்ட (Absentee, shifted, dead, and duplicate (ASDD)) வாக்காளர்கள், சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) செயல்பாட்டின்போது கண்டறியப்பட்டு, விசாரணைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்ட, பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள், வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இரண்டாவது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், தீர்ப்புக்குப் பிறகு நீக்கப்பட்டவர்கள் மற்றும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slips (VIS)), இறந்தவர்கள் அல்லது இரட்டைப் பதிவு கொண்டவர்கள் (ASDD) என கண்டறியப்பட்டவர்கள் ஆகியோர் அடங்குவர்.
இந்த உத்தரவானது, சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியின்போது நீக்கப்பட்ட வாக்காளர்களை மட்டுமல்லாமல், அதற்குப் பிறகு, பெரும்பாலும் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் நடக்கும் 'வாக்காளர் தகவல் சீட்டு' (Voter Information Slip) விநியோகத்தின்போது வாக்குப்பதிவு நாளில் தங்கள் முகவரியில் இல்லாதவர்கள் (Absent), வேறு இடத்திற்கு மாறிச் சென்றவர்கள் (Shifted), இறந்துவிட்டவர்கள் (Dead) மற்றும் இரண்டு இடங்களில் பெயர் இருக்கும் இரட்டைப் பதிவு வாக்காளர்கள் (Duplicate) எனத் கண்டறியப்பட்ட வாக்காளர்களையும் பொது விநியோகத் திட்டப் பயன்பட்டியலில் இருந்து நீக்குகிறது.
மேலும், ஜூன் மாதம் 15-ஆம் தேதி முடிவடைந்த 12 நாள் காலப்பகுதியில், வாக்குச்சாவடி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலின் அடிப்படையில், பொது விநியோகத் திட்ட (PDS) பயனாளிகளின் பெயர்களை நீக்குமாறும் உணவு மற்றும் நுகர்வோர் பொருள் வழங்கல் துறை தனது உத்தரவில் அறிவுறுத்தியுள்ளது.
மனுதாரர்களின் வாதம் என்ன?
பொது விநியோக அமைப்பு (Public Distribution System (PDS)), நாட்டின் குடிமக்களுக்கு உணவுக்கான உரிமையை வழங்கும், நாட்டின் மிக விரிவான சட்டங்களில் ஒன்றான 2013-ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (National Food Security Act) நிர்வகிக்கப்படுகிறது. பிற்கால நிர்வாக நடவடிக்கை மூலம் ஒரு குறைபாட்டை உருவாக்கி, அதை சிறப்பு தீவிர திருத்தம் (SIR) போன்ற ஒரு தேர்தல் செயல்முறையுடன் இணைப்பதன் மூலம் பொது விநியோக அமைப்பின் சலுகைகளை மறுக்க முடியாது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) வழக்கில், அந்த விசாரணை முறையைச் சரி என்று ஏற்றுக்கொண்ட அதே வேளையில், உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 27-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு ஒரு முக்கியக் கருத்தைத் தெரிவித்திருந்ததாக மனுதாரர்கள் வாதிடுகின்றனர். அதாவது, வாக்காளர் பட்டியலில் ஒருவரைச் சேர்ப்பதற்கான தகுதி இருக்கிறதா என்பதைத் தனக்குத்தானே உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கத்திற்காக மட்டுமே, குடியுரிமை குறித்து ஒரு குறிப்பிட்ட அளவிலான விசாரணையை நடத்தத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
இத்தகைய விசாரணை என்பது சட்டப்பூர்வமான முழுமையான குடியுரிமை நிர்ணயம் ஆகாது. மேலும் இதன் அடிப்படையில் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் தேர்தல் தொடர்பான விளைவுகளோடு மட்டுமே முடிந்துவிடும், என்று இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியிருந்தது. ஆனால், மேற்கு வங்க அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஜூன் மாதம் 4-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவு, இந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) வழக்கு விசாரணையின் எல்லையைத் தாண்டி, அதை பொது விநியோகத் திட்டம் (PDS) போன்ற மக்கள்நலத் திட்டங்களுக்கும் நீட்டிப்பது போல் தெளிவாகத் தெரிகிறது.
அன்னபூர்ணா திட்டம் தொடர்பான அரசாணை
அன்னபூர்ணா யோஜனா (Annapurna Yojana) தொடர்பான உத்தரவு, மேற்குவங்க அரசின் பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறையால் 2026-ஆம் ஆண்டு மே மாதம் 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தின்கீழ் (Lakshmir Bhandar Scheme) தற்பொழுது பயனடைந்து வரும் அனைவரும் அன்னபூர்ணா யோஜனா (Annapurna Yojana) திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், 2026-ஆம் ஆண்டின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது கண்டறியப்பட்ட இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் வரைவுப் பட்டியல் வெளியீட்டிற்குப் பிறகு இரண்டாவது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், இறுதித் தீர்ப்பிற்குப் பின் நீக்கப்பட்டவர்கள் மற்றும் வாக்காளர் சீட்டு விநியோகத்தின் போது கண்டறியப்பட்ட பிரிவினருக்கு இந்த இடமாற்றம் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க அரசாங்கம், பொது விநியோகத் திட்டம் (PDS) மற்றும் அன்னபூர்ணா யோஜனா (Annapurna Yojana) ஆகிய இரண்டு திட்டங்கள் தொடர்பான உத்தரவுகளிலும் ஒரு முக்கிய விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்கீழ் (Citizenship Amendment Act (CAA)) அமைக்கப்பட்டுள்ள சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக (SIR) தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ள பயனாளிகளுக்கு, அவர்களின் விண்ணப்பங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் வரை இந்தத் திட்டங்களின் பலன்கள் தொடர்ந்து கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் இந்த மாநில அளவிலான சரிபார்ப்பு நடைமுறை (SIR) 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ஆம் தேதி முதல் 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்தச் செயல்பாட்டின்போது, மாநிலத்தின் வாக்காளர் பட்டியலிலிருந்து 91 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இவர்களில் சுமார் 34 லட்சம் மக்கள் தங்களது பெயர் நீக்கப்பட்டதை எதிர்த்து மாநில அளவிலான சரிபார்ப்பு நடைமுறை (SIR) தீர்ப்பாயங்களில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் முக்கியத்துவம்
அன்னபூர்ணா யோஜனா என்பது பொது விநியோகத் திட்டத்தைப் (PDS) போன்ற ஒரு சட்டப்பூர்வமான திட்டம் அல்ல, மாறாக 2026-ஆம் ஆண்டு மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலின்போது பாஜகவின் முக்கிய தேர்தல் முழக்கமாக இருந்த ஒரு திட்டமாகும். 2021-ஆம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தை (Lakshmir Bhandar scheme) எதிர்கொள்வதற்காக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
2026-ஆம் ஆண்டு மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின்கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை ₹1,500-லிருந்து ₹3,000-ஆக உயர்த்தி அளிப்பதாக பாஜக உறுதியளித்தபோது, லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தில் 2.2 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் இருந்தனர். தேர்தலுக்குப் பிறகான சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அன்னபூர்ணா பண்டார் திட்டம் (Annapurna Bhandar) வழங்கப்படும் என்ற வாக்குறுதி அனைவருக்கும் பொதுவானதாக இருந்தபோதிலும், 'தகுதியுள்ள' பயனாளிகள் மற்றும் லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தின்கீழ் பலன் பெறுபவர்கள் உட்பட அனைவரும் 12 பக்க படிவத்தை நிரப்ப வேண்டியிருந்தது என்பது தெரியவந்தது.
ஜூன் மாதம் 22-ஆம் தேதி மேற்குவங்க சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், மாநில நிதியமைச்சர் இத்திட்டத்திற்காக ₹36,000 கோடியை ஒதுக்கியுள்ளார். இதன் பொருள் என்னவென்றால், பயனாளிகளின் எண்ணிக்கை லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தில் இருந்ததில் பாதியாக, அதாவது சுமார் ஒரு கோடியாகக் குறையும் என்பதாகும்.
முதலமைச்சர் சுவேந்து அதிகாரி கடந்த ஆறு வாரங்களாக, திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் கசிவுகள் குறித்து முதலமைச்சர் சுவேந்து அதிகாரி பேசி வருகிறார். இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வரும் சுமார் 30 லட்சம் பயனாளிகளுக்கு, உண்மையில் இதைப் பெறுவதற்கான தகுதி கிடையாது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். இறந்தவர்கள், சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் அல்லது இந்தியர் அல்லாத நபர்கள் எவரும் இந்த மாநில குடிமக்களுக்கான நலத்திட்ட உதவிகளைப் பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சுவேந்து அதிகாரி குறிப்பிட்டிருந்த நிலையில், சமூக நலத்திட்டங்களில் இருந்து பயனாளிகளை நீக்குவதற்கான ஒரு கருவியாக இந்தச் சரிபார்ப்பு நடைமுறை பயன்படுத்தப்பட்டு வருவதை தற்போதைய மாநில அரசின் உத்தரவுகள் காட்டுகின்றன.
Original Link: Why West Bengal’s decision of linking social security benefits to SIR is being challenged?