இந்திய நகரங்கள் தங்களின் எதிர்கால நீர் தேவைகள் மற்றும் திட்டமிடல் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

 நகர்ப்புற இந்தியாவில் நீர் பயன்பாட்டில் காணப்படும் திறனற்ற தன்மைக்கு, மோசமான விநியோகக் கட்டமைப்புகள், திறனற்ற செயல்பாடுகள், போதுமான அளவீட்டு வசதிகள் இல்லாத நிலை  மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் குறைபாடுகள் ஆகியவை அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன.


நிலத்தடி நீர் நெருக்கடி மற்றும் அணைகளில் நீர்மட்டம் குறைதல் ஆகியவற்றால் ஏற்பட்ட கடுமையான நீர் பற்றாக்குறை, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்ப அலையின் தாக்கத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த அவசரநிலை, டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற பெருநகரங்கள் உட்பட அனைத்து நகரங்களும் எதிர்கொள்ளும் சவால்களை வெளிக்காட்டியுள்ளது. இதற்கான வழக்கமான விளக்கமாக வானிலை மாற்றங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. வெப்பநிலை உயரும் போது, நீர் ஆவியாகி வீணாவது அதிகரிக்கிறது என்பது உண்மைதான். ஆனால், நாட்டின் பெரும்பகுதி வறண்டு போயிருப்பதற்கு காலநிலை மாற்றம் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது.  நிதி ஆயோக்கின் 'கூட்டு நீர் மேலாண்மை குறியீடு' (Composite Water Management Index (CWMI)) 2018-ஆம் ஆண்டிலயே ஒரு மோசமான சூழல் குறித்து எச்சரித்திருந்தது. அந்த அறிக்கையில் கணிக்கப்பட்ட காலக்கெடு துல்லியமாக இல்லாவிட்டாலும், "இந்திய நகரங்கள்   நீர்வள வரம்புகளை தாண்டி நீரை பயன்படுதத்தியுள்ளன என்ற கூட்டு நீர்மேலாண்மை குறியீட்டின் எச்சரிக்கை, கொள்கை ரீதியான திருத்தங்களைத் மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு,          ஜல் சக்தி அமைச்சகத்தின் சமீபத்திய 'நிலத்தடி நீர் வளங்கள் குறித்த மதிப்பீடு' (Dynamic Groundwater Resources Assessment) உட்பட பல்வேறு  ஆய்வுகள், நிலத்தடி நீர் ஆதாரங்கள் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ளன. இருப்பினும், இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், நகராட்சி மற்றும் மாநில அளவிலான அதிகாரிகள் ஒவ்வொரு நீர் நெருக்கடியையும் ஒரு தனிப்பட்ட தற்காலிக நிகழ்வாகவே கருதுகின்றனர். கோடைக் காலத்தில் ஏற்படும் இந்தத் தண்ணீர் பற்றாக்குறைக்கான கட்டமைப்பு ரீதியான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து சரிசெய்ய மிகக் குறைந்த அளவிலான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன.


நகர்ப்புற இந்தியாவில் நீர் பயன்பாட்டில் காணப்படும் திறமையின்மைக்கு, மோசமான விநியோகக் கட்டமைப்புகள், போதியளவு செயல்படாமல் உள்ள  செயல்பாடுகள், போதுமான அளவீட்டு வசதிகள் இல்லாத நிலை  மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் குறைபாடுகள் ஆகியவை  முக்கியக் காரணியாக அமைகின்றன. கழிவுநீரைச் சுத்திகரிக்காத நிலை மற்றும் மழைநீர் சேகரிப்பில் போதிய கவனம் செலுத்தாத நிலை போன்றவை, பற்றாக்குறையான நீர் வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதைத் தடுக்கின்றன. 2016-ஆம் ஆண்டில் மிஹிர் ஷா குழு (Mihir Shah Committee), "சுதந்திர இந்தியாவின் நீர்க் கொள்கையானது                       நீர் விநியோகத்தை அதிகரிப்பதிலேயே கவனம் செலுத்தியது. நீர் தேவை மேலாண்மையில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டியிருந்தது. இந்தக் கொள்கை அணுகுமுறை உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்தது என்றாலும், ஷா குழு குறிப்பிட்டது போல,           நீர் வளத் துறையில் அமைப்பு ரீதியான புதுமைகளுக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அதன்பிறகு, 'அடல் நிலத்தடி நீர் திட்டம்' (Atal Bhujal Yojana) போன்ற திட்டங்கள் வேளாண்மையில் நீரைத் திறமையாக பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இருப்பினும், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் நீர் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வதும் அவசியமாகும். குறிப்பாக, வசதி படைத்தவர்கள் தண்ணீரை அளவுக்கு அதிகமாக வீணாக்குவதைத் தடுப்பதற்கு இது மிகவும் தேவையான நடவடிக்கை ஆகும்.


சமீபகாலங்களில், சில நகரங்கள் வடிகால்கள் மற்றும் குழாய்கள் போன்ற வழக்கமான கட்டமைப்புகளுடன், இயற்கையைச் சார்ந்த தீர்வுகளையும் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் மேற்கொள்ளப்படும் ஏரி சீரமைப்புத் (Lake restoration projects) திட்டங்கள்  நல்ல முயற்சிகளாகும். இருப்பினும், குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த இத்தகைய முயற்சிகள் அதிகமாக செயல்படுத்தப்பட வேண்டும். மழைநீரை இயற்கையாக தக்கவைப்பதை ஊக்குவிக்க, தண்ணீர் செல்லும் நடைபாதைகள் போன்ற பசுமை உள்கட்டமைப்புகளையும் நகர்ப்புற நிலப்பரப்புகளையும் பயன்படுத்தும், சீனாவின் 'Sponge City' திட்டம் போன்ற ஒரு ஒருங்கிணைந்த கொள்கை இன்னும் இந்தியாவில் இல்லை. அந்தத் திட்டம், நகர்ப்புற நிலப்பரப்புகளையும், மழைநீரை உறிஞ்சக்கூடிய நடைபாதைகள் போன்ற பசுமை உள்கட்டமைப்புகளையும் பயன்படுத்தி,        மழைநீரை இயற்கையாகவே பூமிக்கு அடியில் சேமிக்க உதவுகிறது.                   சமீபத்தில் ஏற்பட்ட இந்த நெருக்கடி, மழைக்காலத்தில் வெள்ளத்தில் மூழ்கும் நகரங்கள் கோடைக் காலத்தில் தண்ணீரின்றி வறண்டு போகக் கூடாது என்பதற்கான புதிய வழிகளைப் பற்றிப் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைய வேண்டும்.


‘கடற்பாசி நகர' (Sponge City) திட்டம் என்றால் என்ன?


இந்த முறையில், நகரங்களைச் சிமெண்ட் மற்றும் கான்கிரீட்டால்  உருவாக்காமல், மழைநீரை பஞ்சு (Sponge) போல உறிஞ்சி, வடிகட்டி, சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் வடிவமைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெள்ளத்தைத் தடுக்க செயற்கை வடிகால்களை மட்டும் நம்பி இருக்காமல், இயற்கையான சூழலை மேம்படுத்துவது கடற்பாசி நகர திட்டத்தின் நோக்கமாகும்.


original article : Indian cities need to rethink their water future.

Share: