தற்போதைய செய்தி :
முதன்முறையாக நடைபெற்ற சர்வதேச மசாலா வழித்தட மாநாட்டின் (International Spice Routes Conference) முதல் பதிப்பில், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பங்கேற்பாளர்களும், 22 நாடுகளிலிருந்து 38 பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இவர்கள், கேரளாவை உலகளாவிய சந்திப்பின் ஒரு மையமாக மாற்றிய ஒரு பழங்காலப் பாதை குறித்த தங்கள் ஆராய்ச்சிகளையும் கதைகளையும் பகிர்ந்துகொள்வதற்காக ஒன்றுகூடினர்.
கேரள அரசாங்கத்தின் முசிறிஸ் பாரம்பரியத் திட்டத்தால் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 வரை ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, மசாலா வழித்தட பிராந்தியங்களின் ஆழமான பன்முகப் பண்பாட்டு உணர்வை எடுத்துரைத்ததுடன், இந்த பகிரப்பட்ட வரலாறுகள் நமது சமகால உலகத்தை எவ்வாறு தொடர்ந்து வடிவமைக்கின்றன என்பதையும் ஆராய்ந்தது.
முக்கிய அம்சங்கள்:
1. தொடக்க அமர்வில், மிளகு பல்வேறு புவியியல் பகுதிகளில் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தைப் பற்றிப் பேசிய வரலாற்றாசிரியர் பியுஸ் (Pius) மலேக்கண்டத்தில், மிளகு வர்த்தகத்தில் பங்கேற்ற வர்த்தகர்களும் வணிக இடைத்தரகர்களும் எவ்வாறு அதனுடன் பிரிக்க முடியாத வகையில் இணைந்த ஒரு அடையாளத்தைப் பெறத் தொடங்கினார்கள் என்பதை விரிவாக விளக்கினார்.
2. இது ஜெர்மனி மற்றும் ஹங்கேரியில் அவர்களுக்கு Pfeffer (மிளகு) என்ற குடும்பப் பெயரைப் பெற்றுத் தந்தது என்று அவர் கூறினார். இதேபோல், போர்ச்சுகலில் சிலவற்றுக்கு 'Pimenta' என்ற பெயர் வழங்கப்பட்டது. இது வெளிப்படையாகவே, மிளகு வர்த்தகத்துடனான அவர்களின் தொடர்பைக் குறிக்கும் ஒரு அடையாளமாக இருந்தது.
கருப்பு மிளகு: மசாலாப் பொருட்களின் ராஜா
3. பேரரசுகளைத் தோற்றுவிப்பதிலும், படையெடுப்புகளைத் அதிகரிப்பதிலும், கண்டுபிடிப்புகளுக்கு சக்தியாக இருப்பதிலும், நாம் இன்று காணும் உலகை வடிவமைப்பதில் மிளகு ஒரு முக்கியப் பங்கு வகித்துள்ளது. ஒரு காலத்தில் உலகின் மசாலா வர்த்தகத்தில் 80 சதவீதத்திற்கும் மேலாகப் பங்களித்த, இந்த ‘மசாலாப் பொருட்களின் ராஜா’ தான், கிழக்கு நாடுகள் காலனிமயமாக்கப்பட்டதற்கான முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம்.
4. கருப்பு மிளகு, இன்றைய கேரளா மாநிலத்தின் பெரும்பகுதியைக் கொண்ட மலபார் கடற்கரைப் பகுதியைத் தாயகமாகக் கொண்டது. 1322-ஆம் ஆண்டில், போர்டெனோனின் ஓடோரிக் தென்மேற்கு இந்தியாவிற்குப் பயணம் செய்து, மலபார் பிராந்தியத்தின் "மிளகு, நமது நாட்டில் தானியம் போல ஏராளமாக உள்ளது" (pepper is as abundant as grain in our land) என்று எழுதினார்.
5. பண்டைய இந்தியாவில் கி.மு. 2000-ஆம் ஆண்டிலேயே மக்கள் மிளகைப் பயன்படுத்தியதற்கான தொல்பொருள் சான்றுகள் உள்ளன. இந்த மசாலாப் பொருள் ஆசியாவின் பிற பகுதிகளுக்கும் வட ஆப்பிரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்தியத் துணைக்கண்டத்திற்கு வெளியே மிளகு பயன்படுத்தப்பட்டதற்கான ஆரம்பகால சான்று எகிப்திலிருந்து கிடைக்கிறது. கி.மு.1213-ஆம் ஆண்டைச் சேர்ந்த மாமன்னர் ராம்செஸின் பதப்படுத்தப்பட்ட சடலத்தின் நாசித் துவாரங்களில் மிளகு மணிகள் இருந்தன.
6. கி.பி.70-ல், மத்தியதரைக் கடல் பகுதிக்குச் செல்லும் ஒரு பெயர் தெரியாத வணிகரின் வழிகாட்டியான 'Periplus Maris Erythraei' என்ற நூல், ரோம் மற்றும் பண்டைய இந்தியத் துறைமுகமான முசிறி போன்றவற்றுக்கு இடையேயான வர்த்தகம் குறித்த தகவல்களைப் பதிவு செய்தது. மிளகு ரோமானியர்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தது. வரலாற்றாசிரியரான மார்கஸ் கேவியஸ் அபிசியஸ், ரோமானிய சமையல் குறிப்புகளில் 80 சதவீதம் மிளகைக் கொண்டிருந்ததாக மதிப்பிட்டார்.
மசாலாப் பொருட்களின் மீதான இந்த மோகம் பொருளாதாரரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பிளினி தனது 'இயற்கை வரலாறு' நூலில், "இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ரோமானியப் பேரரசைச் சுரண்டாமல் இருப்பதில்லை" என்று எழுதியுள்ளார்.
7. பெரியார் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்திருந்த முசிறி துறைமுக நகரம், தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் ஒரு முக்கிய வர்த்தக மையமாகத் திகழ்ந்தது. அது மிளகு, மணிகள் மற்றும் பட்டு ஆகியவற்றை ஏற்றுமதி செய்ததுடன், தங்க நாணயங்கள் மற்றும் தானியங்களை இறக்குமதி செய்தது. அது எப்படி நடந்தது என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. காலப்போக்கில் முசிறி நகரம் மறைந்து போனது. ஆனால், அதன் வழியாக வர்த்தகக் காற்றுடன் வீசிவந்த பல தாக்கங்கள் நீடித்தன.
8. ரோமானியப் பேரரசு வீழ்ச்சியடைந்த பிறகு, அவர்கள் கைவிட்ட மசாலா வழித்தடங்ளை மற்ற குழுக்கள் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கின. குறிப்பாக, அரேபியர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சக்தியாக மாறினர். அவர்கள் இந்த வர்த்தகத்தில் இடைத்தரகர்களாகவும் முக்கிய வசதியாளர்களாகவும் செயல்பட்டு, மசாலாப் பொருட்களை உற்பத்தி செய்யும் பகுதிகளை, குறிப்பாக இந்தியாவை, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நுகர்வோருடன் இணைத்தனர். மத்திய காலப்பகுதியில், மசாலாப் பொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவையாகவும் அதிக தேவை கொண்டதாகவும் இருந்தன. எனவே, அனைத்து கடல்வழி வல்லரசுகளும் அந்த வர்த்தகத்தில் ஒரு பங்கைப் பெற விரும்பின. உதாரணமாக, ஜெனோவா 14-ஆம் நூற்றாண்டுக்குள் ஒரு பிரபலமான வர்த்தக மையமாக மாறியது. மேலும், அதன் துறைமுகங்களுக்கு வரும் பொருட்களின் மதிப்பில் 40% மிளகாகவே இருந்தது.
9. 1511-ஆம் ஆண்டிற்குள், போர்த்துகீசியர்கள் மலபாரில் இருந்து நடைபெறும் மசாலாப் பொருள்களின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தினர். 1500 மற்றும் 1600-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து 2 மில்லியன் கிலோ மசாலாப் பொருட்களைக் கொண்டு வந்தனர். போர்ச்சுகலுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பயணம் ஆபத்தானதாக இருந்தது. 30 சதவீதக் கப்பல்கள் மீண்டும் இந்தியாவிற்கு வரவில்லை.
10. ஆசியாவின் கடற்கரைப் பகுதிகளில் நடந்த மிளகு வர்த்தகம், இஸ்லாம் மதம் கிழக்கு நோக்கி, கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து சீனாவின் தெற்குக் கடற்கரை வரை பரவியது. அது இஸ்லாமியக் கருத்துக்களை மட்டுமல்லாமல், அரபு மொழி, ஷரியா நீதிமன்றங்கள் மற்றும் தனித்துவமான வணிக பழக்கவழக்கங்களையும் கொண்டு வந்தது.
உலக மசாலா அமைப்பு (World Spice Organisation (WSO))
1. உலக மசாலா அமைப்பு (WSO) என்பது மசாலாத் துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களையும் - விவசாயிகள், பதப்படுத்துபவர்கள், கல்வியாளர்கள் மற்றும் இறுதி பயனர்கள் - ஒன்றிணைக்கும் ஒரு கூட்டுத் தளமாகும். நிலையான வளர்ச்சியை நோக்கி இணைந்து செயல்படுவதே இதன் நோக்கமாகும்.
2. மசாலாப் பொருள் தொழிலை மிகவும் பாதுகாப்பானதாகவும், நீடித்த நிலையானதாகவும் மாற்றுவதற்காக இந்த அமைப்பு 2011-ல் நிறுவப்பட்டது. காலப்போக்கில், உலக மசாலா அமைப்பு நிலைத்தன்மை, பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.
3. நவம்பர் 2025-ல், உலக மசாலா அமைப்பு ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரில், “முன்னோக்கிய மசாலாப் பாதை: பாதுகாப்பான, நீடித்த மற்றும் விரிவாக்கக்கூடியது” என்ற கருப்பொருளின்கீழ் 4-வது தேசிய மசாலா மாநாட்டை (National Spice Conference (NSC)) ஏற்பாடு செய்தது. இந்த மாநாட்டில் தேசிய நீடித்த மசாலாப் பொருட்கள் திட்டம் (National Sustainable Spice Program (NSSP)) குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
4. தேசிய நீடித்த மசாலாப் பொருட்கள் திட்டம் (National Sustainable Spice Program (NSSP)) என்பது நிலையான மற்றும் உணவுப் பாதுகாப்புடன் கூடிய சாகுபடி மாதிரிகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட உலக மசாலா அமைப்பின் ஒரு முதன்மைத் திட்டமாகும். இது இந்தியாவில் மசாலாப் பொருட்கள் துறையில் உள்ள சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பங்குதாரர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கிறது. இந்தத் தளம் உலக மசாலா அமைப்பால், இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம், GIZ, IDH-நிலையான வர்த்தக முன்முயற்சி மற்றும் மழைக்காடு கூட்டணி ஆகியவற்றுடன் இணைந்து நிறுவப்பட்டது.
Original Article : Kerala’s first International Spice Routes Conference and Black Pepper.