முக்கிய அம்சங்கள்:
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையே வளர்ந்து வரும் கருத்து மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமைதி வாரியம் (Board of Peace) இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு புதிய அணுகுமுறையை முயற்சிக்கும் சூழலில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையான டெல்லி பிரகடனத்தில், இந்தியா மற்றும் அரபு லீக் ஆகியவை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளுடன், பல பிரச்சினைகள் குறித்த தங்களின் நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்தின.
டெல்லி பிரகடனம் (Delhi Declaration), சூடான், சோமாலியா மற்றும் லிபியா ஆகிய நாடுகள் சுதந்திரமாகவும் ஒன்றுபட்டவையாகவும் நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. மேலும், டெல்லி பிரகடனம் அவற்றின் உள்விவகாரங்களில் வெளித் தலையீடுகளை எதிர்க்கிறது.
இந்த மூன்று நாடுகளும் மத்திய கிழக்கில் உள்ள இரண்டு முகாம்களுக்கு இடையே வளர்ந்துவரும் பிளவுக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளன. ஒரு முகாம், பெரும்பாலான அரபு லீக் நாடுகளின் ஆதரவுடன் சவூதி அரேபியாவை முதன்மை சக்தியாகக் கொண்டு வழிநடத்தப்படுகிறது. மற்றொன்று, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேலால் வழிநடத்தப்பட்டு, அமெரிக்காவால் ஆதரிக்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வமாக, இந்தப் பிரிவுகள் இல்லை. குறிப்பாக, அரபு லீக்கில் முக்கியத்துவம் வாய்ந்த ஐக்கிய அரபு அமீரகம், ஜனவரி 31 கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்கியதால் இது மேலும் உறுதியாகிறது. ஆனால், கள யதார்த்தத்தில், ஒவ்வொரு நாட்டிலும் இந்த வேறுபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. ஒவ்வொரு தரப்பினரும் எடுத்த நடவடிக்கைகளே இதற்குச் சான்றாகும்.
ஐக்கிய அரபு அமீரகம், 2023-ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்துடன் சண்டையிட்டு வரும் விரைவு ஆதரவுப் படை (Rapid Support Forces) என்ற போராளிக் குழுவிற்கு ஆதரவளிப்பதாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. விரைவு ஆதரவுப் படை குழுவானது ஏப்ரல் 2025-ல் தனக்கென ஒரு போட்டி அரசாங்கத்தை அமைத்து, நகரங்களுக்குப் பிறகு நகரங்களில் பொதுமக்களைக் கொடூரமாகத் தாக்கி வருகிறது.
லிபியாவிலும் நிலைமை இதேபோல்தான் உள்ளது. அங்கு ஐக்கிய அரபு அமீரகம் நீண்டகாலமாக காலிஃபா ஹஃப்தார் தலைமையிலான பிரிவினைவாத லிபிய தேசிய இராணுவத்திற்கு (Libyan National Army (LNA)) ஆதரவளித்து வருகிறது. இந்த இராணுவம், டிரிப்போலியில் உள்ள சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தை எதிர்க்கிறது. சவூதி அரேபியா போன்ற மற்ற அரபு லீக் நாடுகள் லிபிய தேசிய இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தாலும், அவற்றின் பெரும்பாலான முயற்சிகள் மோதல் குழுக்களுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்துவதை நோக்கியே உள்ளன.
சோமாலியாவைப் பொறுத்தவரை, சோமாலியாவிற்குள் பிரிந்து சென்ற ஒரு பகுதி-அரசான சோமாலிலாந்து குடியரசை அங்கீகரித்த ஒரே ஐ.நா. உறுப்பு நாடு இஸ்ரேல் மட்டுமே. மற்ற அரபு லீக் நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, ஐக்கிய அரபு அமீரகம் 2025-ஆம் ஆண்டு முதல் சோமாலியாவிலிருந்து வரும் கடவுச்சீட்டுகளை ஏற்கத் தொடங்கியது.
கடந்த ஆண்டு டிசம்பரில் சோமாலியாவை அங்கீகரிப்பதை இந்தியா உடனடியாக நிராகரித்தது. ஜனவரி 31 அன்று, டெல்லி பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளபடி, இந்தியாவும் அரபு லீக்கும் லிபியா மற்றும் சூடானில் உள்ள அதிகாரப்பூர்வ அரசாங்கங்களுக்கு உறுதியான ஆதரவளித்து, பொதுமக்கள்மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்தன.
அபுதாபிக்கும் ரியாத்திற்கும் இடையிலான மோதலின் முக்கிய களமாக இருந்து வரும் யேமனில், இந்தியாவும் அரபு லீக்கும் செங்கடலில் கப்பல் போக்குவரத்தின் மீதான ஹூதி தாக்குதல்களை வெளிப்படையாகக் கண்டித்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹூதி குழுவின் செயல்களை வெளிப்படையாகப் பெயரிடாமல் கண்டித்து வந்த இந்தியாவின் கொள்கையிலிருந்து இது ஒரு நுட்பமான விலகலாகும். ஏனெனில், ஹூதிகள் தங்கள் நடவடிக்கைகளை காசாவில் இஸ்ரேல் நடத்தும் போருடன் தொடர்புபடுத்தியுள்ளனர்.
— மிக முக்கியமாக, ஏமனின் ஒற்றுமைக்கு பிரகடனம் அளித்துள்ள ஆதரவு, தெற்கு ஏமனில் உள்ள பிரிவினைவாதக் குழுவான ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவு பெற்ற தெற்கு இடைக்கால கவுன்சிலுக்கு எதிராக ரியாத் டிசம்பர் மற்றும் ஜனவரியில் இராணுவ நடவடிக்கை எடுத்ததன் மூலம் செயல்படுத்திய சவூதி நிலைப்பாட்டிற்கு ஆதரவாக உள்ளது.
இறுதியாக, இந்த பிரகடனம் சிரியா அமைதியாக இருந்து வருகிறது. இஸ்லாமிய அரசுக்கு எதிரான டமாஸ்கஸின் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளைப் பாராட்டுகிறது. முன்பு அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அகமது அல்-ஷாரா தலைமையிலான, அசாத்திற்குப் பிந்தைய சிரியாவுடனான இந்தியாவின் ஈடுபாடு, "அதிகாரத்துவ-அமைச்சரவை" (bureaucratic-ministerial) சார்ந்ததாகவே இருந்துள்ளது.
டெல்லி பிரகடனம் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமைதி வாரியம் (Board of Peace (BoP)) பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. முக்கிய வளைகுடா நாடுகள் இப்போது அமைதி வாரியம் உறுப்பினர்களாக இருந்தாலும், ஜனவரியில் வழங்கப்பட்ட அழைப்பை இந்தியா இன்னும் ஏற்கவில்லை.
மிக முக்கியமாக, டெல்லி பிரகடனம் 2002-ஆம் ஆண்டின் அரபு அமைதி முயற்சிக்கு ஆதரவளிக்கிறது. இது நிலத்திற்குப் பதிலாக அமைதி என்ற ஒரு ஏற்பாடாகும். இதில் அரபு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கும், அதற்கு ஈடாக இஸ்ரேல் 1967-க்கு முந்தைய எல்லைகளின் அடிப்படையில் ஒரு பாலஸ்தீனிய அரசை அங்கீகரிக்கும்.
— இந்த பிரகடனம் 2025 ஷர்ம் எல்-ஷேக் (Sharm el-Sheikh summit’s) உச்சிமாநாட்டின் முடிவுகளையும் ஆதரித்தாலும், அமெரிக்காவின் பங்கு பற்றிய ஒரே ஒரு குறிப்பும் இடம்பெற்றுள்ளது. அரபு அமைதி முன்முயற்சி பற்றிய குறிப்பு இந்தியாவிற்கும் அரபு லீக்கிற்கும் உள்ள உண்மையான விருப்பங்களை உணர்த்துகிறது.
இறுதியாக, புதிய பிராந்திய நிலைத்தன்மைக்கு உள்ள முக்கிய அச்சுறுத்தலான, ஈரானுக்கு அருகில் அமெரிக்காவின் இராணுவக் குவிப்பு மற்றும் ஒரு பெரிய போருக்கான ஆபத்து ஆகியவை குறித்து அந்தப் பிரகடனத்தில் குறிப்பிடப்படவில்லை. இது தனிப்பட்ட நாடுகளின் அணுகுமுறைகளை மதிக்கும் நோக்கில் செய்யப்பட்டிருக்கலாம்.
மிக முக்கியமாக, 2024-ல் சபாஹார் துறைமுகத்தை (Chabahar Port) இயக்குவதற்காக இந்தியா 10 ஆண்டுகால ஒப்பந்தம் செய்திருந்தபோதிலும், இந்தியாவின் 2026-27 வரவுசெலவுத் திட்டத்தில் அத்துறைமுகத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இந்தியா அமெரிக்க விதித்து வரும் தடைகள் காரணமாக எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதை குறிப்பிடுகிறது.
— இறுதியில், டெல்லி பிரகடனம், 2002-ல் இந்தியாவுக்கும் அரபு லீக்கிற்கும் இடையேயான மிக உயர்ந்த நிறுவன உரையாடல் பொறிமுறையாக இந்த சந்திப்பின் தொடக்கத்தில் அடையாளம் காணப்பட்ட பொருளாதாரம், எரிசக்தி, கல்வி, ஊடகம் மற்றும் கலாச்சாரம் ஆகிய ஐந்து முக்கிய தூண்களின்மீது இந்தியா-அரபு லீக் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் இணைத் தலைமையில், 2026-ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று 2வது இந்தியா-அரபு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை (India-Arab Foreign Ministers’ Meeting (IAFMM)) இந்தியா தலைமைத்தாங்கியது. 2016-ல் பஹ்ரைனில் நடைபெற்ற முதல் கூட்டத்திற்குப் பிறகு, 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
முதல் கூட்டம் 2016-ஆம் ஆண்டு பஹ்ரைனில் நடைபெற்ற நிலையில், 10-ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தியா-அரபு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் என்பது இந்தப் கூட்டாண்மையை வழிநடத்தும் மிக உயர்ந்த நிறுவன வழிமுறையாகும். இது மார்ச் 2002-ல் இந்தியாவும் அரபு நாடுகளின் கூட்டமைப்பும் (League of Arab States (LAS)) பேச்சுவார்த்தை செயல்முறையை நிறுவனமயமாக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது முறைப்படுத்தப்பட்டது.
முறையாக அரபு நாடுகளின் கூட்டமைப்பு என்று அழைக்கப்படும் அரபு லீக், ஆரம்பத்தில் எகிப்து, ஈராக், ஜோர்டான், லெபனான், சவுதி அரேபியா மற்றும் சிரியா ஆகிய ஆறு நாடுகளுடன் 1945-ல் தொடங்கப்பட்டது. தற்போது, இதில் 22 உறுப்பு நாடுகள் உள்ளன. அவை பொருளாதாரம் மற்றும் இராணுவ விவகாரங்கள் உட்பட பிற விஷயங்களில் ஒத்துழைக்க உறுதியளித்துள்ளன.
நிகழ்கால சோமாலிலேண்ட் தன்னை முன்னாள் பிரிட்டிஷ் சோமாலிலேண்ட் அல்லது சோமாலிலேண்ட் காப்பரிசின் (Protectorate) சட்டப்பூர்வமான வாரிசாகக் கூறிக்கொள்கிறது.
இது 1884 மற்றும் 1920-க்கு இடையில் பிரிட்டிஷ் பாதுகாப்புப் பிரதேசத்தின்கீழ் தன்னிச்சையான அரசுகளை கொண்டிருந்தது. பின்னர் பிரிட்டிஷ் முடியாட்சியின் அதிகார வரம்பிற்குள் வந்தது. இது 1920-ல் முறையாக ஒரு பிரிட்டிஷ் காலனியாக நிறுவப்பட்டது.
பிரிட்டிஷ் சோமாலியாவிலிரூந்து சுதந்திரம் பெற்று சோமாலியா மாநிலமாக மாறியது. இந்த மாநிலம் 1960-ஆம் ஆண்டு ஜூன் 26 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளுக்கு இடையில் ஐந்து நாட்கள் நீடித்தது. பின்னர், அந்த மாநிலம், இத்தாலியால் நிர்வகிக்கப்பட்ட அதன் அண்டைநாடான முன்னாள் சோமாலியாவிலிருந்து அறக்கட்டளைப் பிரதேசத்துடன் தானாக முன்வந்து ஒன்றிணைந்து சோமாலி குடியரசை 1960 முதல் 1969 ஆண்டிற்குள் உருவாக்கியது.
ஒரு இராணுவப் புரட்சிக்குப் பிறகு நாடு சீர்குலைந்தது. மேலும், ஜெனரல் சியாட் பாரே தலைமையில் சோமாலி ஜனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டது.
1988-ல், பார்ரே தனது கொள்கைகளுக்கு எதிரான சுதந்திர ஆதரவுக் குழுவான சோமாலி தேசிய இயக்கத்தின் (Somali National Movement (SNM)) கிளர்ச்சியை பல்வேறு கட்டுப்பாடுகளின் மூலம் ஒடுக்கினார். இதில் 50,000 முதல் 200,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 300,000-க்கும் மேற்பட்டோர் எத்தியோப்பியாவுக்கு அகதிகளாக வெளியேறினர்.
சோமாலி தேசிய இயக்கம் பார்ரேயின் ஆட்சிக்கு எதிரான தனது போராட்டத்தில் வெற்றி பெற்று, 1991-ல் அவரை பதவியிலிருந்து நீக்கி, சுதந்திரம் பெற்றதாக அறிவித்தது. தற்போதைய சோமாலிலாந்து பகுதி சுதந்திர ஆதரவுக் குழுவான சோமாலி தேசிய இயக்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்ததுடன், 1991-ல் முறையாக உருவாக்கப்பட்டது.