இதற்கு முன்பு மக்களவை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதா? சபாநாயகர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு என்ன நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்? நாங்கள் விளக்குகிறோம்.
செவ்வாய்க்கிழமை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அது இப்போது ஆராயப்பட்டு விதிகளின்படி செயல்படுத்தப்படும் என்று மக்களவை வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை முன்னாள் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனேவின் வெளியிடப்படாத புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டவோ அல்லது அதைப் பற்றிப் பேசவோ அனுமதிக்காததற்காகவும், பிரதமர் நரேந்திர மோடி அவைக்குள் தாக்கப்படலாம் என்ற பிர்லாவின் கூற்றுக்காகவும் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் பிர்லா மீது குற்றம் சாட்டியுள்ளன.
மக்களவை சபாநாயகரை அவர்களின் பதவியில் இருந்து நீக்க முடியுமா?
ஆம், இந்த நடைமுறை மாநிலங்களவைக்கு பொருந்தாது. அவையில் சட்டமன்ற நடவடிக்கைகளை நிர்வகிக்கும் நடைமுறைகளின்படி, அவையில் அப்போது இடம் பெற்றுள்ளன அனைத்து உறுப்பினர்களின் பெரும்பான்மை உறுப்பினர்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகரை பதவியில் இருந்து நீக்க முடியும். இதை அரசியலமைப்பின் பிரிவு 94 (c)-ன் கீழ் செய்ய முடியும். பிரிவு 94, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளை வகிப்பவர்களை விடுப்பு, ராஜினாமா மற்றும் நீக்குவதற்கு வாய்ப்புகளை வழங்குகிறது. இருப்பினும், இது தொடர்பான விதிகள் கடுமையானதாக உள்ளன.
சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கான பல்வேறு நிபந்தனைகள் என்ன?
பிரிவு 94-ன் படி, சபையின் சபாநாயகராகவோ அல்லது துணை சபாநாயகராகவோ பதவி வகிக்கும் ஒரு உறுப்பினர், பிரிவு 94 (a)-ன் படி, "மக்களவையின் உறுப்பினராக இருப்பதை நிறுத்தினால்", 94 (b)-ன் படி, எந்த நேரத்திலும் "தனது கையால் எழுதுவதன் மூலம்" பதவியை ராஜினாமா செய்யலாம். மேலும், 94 (c)-ன் படி, "அப்போது அவையில் இடம்பெற்றிருந்த பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட மக்களவையின் தீர்மானத்தின் மூலம்" பதவி நீக்கம் செய்யப்படலாம்.
மக்களவை சபாநாயகர் அல்லது துணை சபாநாயகரை பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறை என்ன?
சபாநாயகர் அல்லது துணை சபாநாயகரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அறிவிக்க விரும்பும் உறுப்பினர், மக்களவையின் பொதுச் செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். இந்த செய்தியை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கூட்டாக தெரிவிக்கலாம். ஆனால் பிரிவு (c)-ன் கீழ் நீக்குவதற்கான எந்தத் தீர்மானத்தையும், அதை நகர்த்துவதற்கான நோக்கம் குறித்து குறைந்தது 14 நாட்களுக்கு முன்பே செய்தி தெரிவிக்கவிட்டால் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது.
அத்தகைய செய்தி தெரிவிக்கப்பட்ட பிறகு, தீர்மானத்தை முன்மொழிவதற்கான அனுமதி கோரும் தீர்மானம், சபாநாயகரால் நிர்ணயிக்கப்பட்ட நாளில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் பெயரில் அலுவல் பட்டியலில் சேர்க்கப்படும். இந்த நாள் 'தீர்மானங்களின் அறிவிப்பு பெறப்பட்ட நாளிலிருந்து 14 நாட்களுக்குப் பிறகு எந்த நாளிலும்’ அறிமுகப்படுத்தபடலாம்.
கடந்த காலத்தில் மக்களவை சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதா? இந்த நடைமுறை நடைபெற என்ன குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்?
ஆம், 1954, 1966 மற்றும் 1987 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை மக்களவை சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அத்தகைய தீர்மானத்தை மக்களவை குறைந்தது இரண்டு உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும். மேலும், அதற்கு ஆதரவாக "50 உறுப்பினர்கள் எழுந்து நிற்க வேண்டும்". தீர்மான நடைமுறை நடைபெற மக்களவையின் கோரிக்கை பூர்த்தி செய்யப்பட வேண்டும். இந்த செயல்முறை மக்களவையில் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதிகள் 200 முதல் 203 வரை நிர்வகிக்கப்படுகிறது.
1954-ஆம் ஆண்டு, மக்களவையின் முதல் சபாநாயகரான கணேஷ் வாசுதேவ் மாவலங்கர், 1954-ஆம் ஆண்டு டிசம்பரில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்ட முதல் தலைமை அதிகாரியாக இருந்தார். நவம்பர் 1966-ல் ஹுகாம் சிங்கிற்கு எதிராகவும், ஏப்ரல் 1987-ல் பால்ராம் ஜாக்கருக்கு எதிராகவும் இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. தீர்மானத்தின் காரணமாக யாரும் சபாநாயகர் பதவியை இழக்கவில்லை.
நம்பிக்கையில்லா தீர்மானம் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் ஏதேனும் உள்ளதா?
விதி 200A, இது போன்று கொண்டு வரப்படும் தீர்மானத்தில் குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். தெளிவாகவும் துல்லியமாகவும் வெளிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் வாதங்கள், அனுமானங்கள், முரண்பாடான வெளிப்பாடுகள், குற்றச்சாட்டுகள் அல்லது அவதூறு அறிக்கைகள் இருக்கக்கூடாது. மற்றொரு விதி, தீர்மானம் விவாதத்திற்கு அனுமதிக்கப்பட்டவுடன், அதைச் சமர்ப்பித்த உறுப்பினர் அல்லது உறுப்பினர்கள் உரை நிகழ்த்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அத்தகைய தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் என்ன நடக்கும்?
இத்தகைய ஒரு தீர்மானம் (motion) ஏற்றுக்கொள்ளப்பட்டால் (admitted ஆனால்), அதற்கு ஆதரவாக உள்ள உறுப்பினர்கள் தங்கள் இடத்தில் எழுந்து நிற்க வேண்டும். ‘ஐம்பது உறுப்பினர்களுக்கு குறையாமல்’ (not less than fifty) எழுந்து நின்றால், சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் அல்லது தலைமை தாங்கும் அதிகாரி (presiding officer), ‘அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ (leave has been granted) என்று அறிவிக்க வேண்டும். மேலும், அத்தீர்மானம், அனுமதி கோரப்பட்ட தேதியிலிருந்து ‘பத்து நாட்களுக்கு மேற்படாத’ (not being more than ten days from the date on which leave is asked for) ஒரு குறிப்பிட்ட நாளில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், தலைமை தாங்கும் அதிகாரியின் கூற்றுப்படி அறிவிக்க வேண்டும்.
தீர்மானம் நிறைவேற்றப்பட அனுமதிக்கப்பட்ட நாளில், தீர்மானம் 'அலுவல் பட்டியலில் சேர்க்கப்படும்', அதைத் தொடர்ந்து விவாதம் நடைபெறும். இந்த தீர்மானத்தை, தலைமை அதிகாரி அனுமதித்தால், தீர்மானத்தை முன்மொழிந்த உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்படலாம். ஆனால் அத்தகைய உரை '15 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. விவாதத்தின் போது, தீர்மானத்தில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு மட்டுமே கருத்துக்கள் கூறப்பட வேண்டும்.
தேவையான எண்ணிக்கையைவிடக் குறைவாக உறுப்பினர்கள் எழுந்தால் என்ன செய்வது? அத்தகைய தீர்மானம் தேவையற்றதாக மாறும் கூடுதல் நிபந்தனைகள் யாவை?
50-க்கும் குறைவான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால், அவைத் தலைவர், அவையை தொடர்வதற்கு அனுமதி இல்லை என்பதை அவைக்குத் தெரிவிக்க வேண்டும். சபாநாயகர் அல்லது துணை சபாநாயகரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் உரிய அறிவிப்பு இல்லாமல் பெறப்பட்டால், அந்த தீர்மானம் தொடரப்படாது.
சபை உறுப்பினராக சபாநாயகர், தங்கள் பதவியிலிருந்து நீக்கம் குறித்து விவாதிக்கப்படும்போது என்ன செய்வார்?
இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி, லோக்சபா (மக்களவை) கலைக்கப்படும் போதெல்லாம், சபாநாயகர் தனது பதவியை விடுவதில்லை – கலைப்புக்குப் பிறகு மக்களவையின் முதல் கூட்டம் நடைபெறும் முன்பு வரை அவர் பதவியில் தொடரலாம்.
சபாநாயகர் மீது பதவி நீக்கத்திற்கான தீர்மானம் மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் போது, அவருக்கு பேசும் உரிமை உள்ளதோடு, மக்களவையின் நடவடிக்கைகளில் பங்கேற்கும் உரிமையும் உண்டு. அத்தகைய தீர்மானம் அல்லது அந்த நடவடிக்கைகளின் போது வேறு எந்த விஷயத்திலும், முதல் முறை வாக்கெடுப்பில் மட்டுமே அவருக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு; ஆனால் வாக்குகள் சமமாக இருந்தால் (equality of votes) வாக்களிக்க முடியாது.
Original article : No Confidence motion against Om Birla: What happens now? What is the process for removal of Lok Sabha speaker? -Jatin Anand