ஆரஞ்சு பொருளாதாரம் (orange economy) என்றால் என்ன?, இந்தச் சொல் எங்கிருந்து வந்தது? நிதிநிலை அறிக்கையில் இது தொடர்பாக என்னென்ன அறிவிப்புகள் வெளியிடப்பட்டன? என்பதை கீழே குறிப்பிட்டுள்ளன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிதிநிலை அறிக்கை உரையில், இந்தியாவின் படைப்பாற்றல் துறை (India’s creative industry) குறிப்பிடப்பட்டது. அப்போது அவர் நாட்டின் ‘ஆரஞ்சு பொருளாதாரத்தை’ மேம்படுத்துவதற்கான திட்டங்களை அறிவித்தார்.
இந்தியாவின் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (Animation, Visual Effects, Gaming and Comics (AVGC)) துறை ஒரு வளர்ந்து வரும் துறையாகும் என்றும், 2030-ம் ஆண்டுக்குள் இதற்கு இரண்டு மில்லியன் வல்லுநர்கள் தேவைப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் சீதாராமன் கூறினார். "மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜி (Indian Institute of Creative Technologies) நிறுவனத்திற்கு ஆதரவளித்து, நாடு முழுவதும் உள்ள 15,000 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) உள்ளடக்கத்தை உருவாக்கும் ஆய்வகங்களை அமைக்க உதவுவதற்கு நான் முன்மொழிகிறேன்," என்று நிதியமைச்சர் கூறினார்.
இந்திய வடிவமைப்புத் துறை (National Institute of Design) வேகமாக விரிவடைந்து வருவதாகவும், இருப்பினும் இந்திய வடிவமைப்பாளர்களுக்குப் பற்றாக்குறை இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். "இந்தியாவின் கிழக்கு பிராந்தியத்தில் வடிவமைப்பு கல்வி மற்றும் மேம்பாட்டை (design education and development) மேம்படுத்துவதற்காக, ஒரு போட்டி வழிமுறை மூலம், ஒரு புதிய தேசிய வடிவமைப்பு நிறுவனத்தை நிறுவ நான் முன்மொழிகிறேன்," என்று சீதாராமன் கூறினார்.
பாரம்பரியம் மற்றும் கலாச்சார சுற்றுலா குறித்துப் பேசியபோது, லோத்தல், தோலாவிரா, ராகிகர்கி, ஆதிச்சநல்லூர், சாரநாத், ஹஸ்தினாபுரம் மற்றும் லே அரண்மனை உட்பட 15 தொல்பொருள் தளங்களை "துடிப்பான, அனுபவமிக்க கலாச்சாரத் தலங்களாக" மேம்படுத்துவது பற்றி நிதியமைச்சர் பேசினார்.
"அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட நிலப்பரப்புகள் பிரத்யேக நடைபாதைகள் மூலம் பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்படும் என்று அவர் கூறினார். பாதுகாப்பு ஆய்வகங்கள், விளக்க மையங்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ஆதரவளிக்க, ஆழ்ந்த கதை சொல்லும் திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த முன்முயற்சிகள், 2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வின் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப அமைந்துள்ளன. அதன்படி, 2024-ல் கேமிங்கில் இருந்து கிடைத்த வருவாய் சுமார் ரூ.232 பில்லியனாகவும், அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மூலம் கிடைத்த வருவாய் சுமார் ரூ.103 பில்லியனாகவும் இருந்தது. நேரலை பொழுதுபோக்குத் துறை 2024-ல் ரூ.100 பில்லியனுக்கும் அதிகமான வருவாயைப் ஈட்டியது. இது சுற்றுலா மற்றும் நகர்ப்புற சேவைகளிலும் வலுவான நேர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தியது.
ஜெய்ப்பூர் இலக்கிய விழா மற்றும் மஹிந்திரா நாடகக் கலைக்கான சிறப்பு விருதுகள் உள்ளிட்ட நாட்டின் சில முக்கிய நிகழ்வுகளைத் தயாரிக்கும் டீம்வொர்க் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் (Teamwork Arts produces) நிர்வாக இயக்குநரும், முன்னணி கலாச்சார தொழில்முனைவோருமான சஞ்சய் ராயின் கூற்றுப்படி, நிதி அமைச்சரின் அறிவிப்பு "மிகவும் அவசியமானது மற்றும் முற்றிலும் சிறப்பானது" என்று குறிப்பிட்டிருந்தார்.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், உள்ளூர் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பதிலும் படைப்பாற்றல் துறையின் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குப் பல ஆண்டுகள் எடுத்ததாகவும் மற்றும் ஒருவேளை கோல்ட்ப்ளே போன்ற இசை நிகழ்வுகள் (Coldplay concerts) தேவைப்பட்டிருக்கின்றன. மிக முக்கியமாக, ஒரு படைப்பாற்றல் பொருளாதாரம் என்பது புத்தாக்கத் துறைக்கு அடிப்படையாக அமைகிறது. வெறும் ஐந்து நாட்கள் நடைபெறும் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவே உள்ளூர் பொருளாதாரத்திற்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானத்தை ஈட்டித் தருகிறது” என்று அவர் கூறினார்.
படைப்பாற்றல் சேவைகளை ஏற்றுமதி செய்வதிலும், நமது அறிவுசார் ஆற்றலை மேம்படுத்துவதிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று ராய் மேலும் கூறினார். "நாங்கள் எந்தவித ஊக்கத்தொகையும் இல்லாமல், இந்தியாவின் திருவிழாக்களை உலகம் முழுவதும் நடத்திவரும் நிலையில், அது அதிக விழிப்புணர்வையும் நீண்டகால சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் ஏற்படுத்தும். ஜெய்ப்பூர் இலக்கிய விழா நிகழ்வுகள் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதன் மூலம் மேலும் பல குழுக்கள் இந்தியாவிற்கு வருகின்றன," என்று அவர் கூறினார்.
ஆரஞ்சு பொருளாதாரம் (Orange Economy) என்றால் என்ன?
'ஆரஞ்சு பொருளாதாரம்' (Orange Economy) என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்திய பெருமை கொலம்பியாவின் முன்னாள் அதிபர் இவான் டியூக் மார்க்வெஸ் மற்றும் முன்னாள் கலாச்சாரத் துறை அமைச்சர் ஃபெலிப் புயிட்ராகோ ஆகியோரையே சேரும். 2013-ல் அவர்கள் எழுதிய ‘ஆரஞ்சு பொருளாதாரம்: ஒரு எல்லையற்ற வாய்ப்பு’ (The Orange Economy: An Infinite Opportunity) என்ற புத்தகத்தில், அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார். அவை, “ஆரஞ்சு பொருளாதாரம் என்பது, யோசனைகள் அறிவுசார் சொத்துரிமையால் அதன் மதிப்பு தீர்மானிக்கப்படும் கலாச்சாரப் பொருட்கள் மற்றும் சேவைகளாக மாற்றப்படும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட செயல்பாடுகளின் குழுவாகும். இந்த ஆரஞ்சுப் பிரபஞ்சத்தில் பின்வருவன அடங்கும்: i) கலாச்சாரப் பொருளாதாரம் மற்றும் ஆக்கப்பூர்வத் தொழில்கள் ஆகும், இதில் வழக்கமான கலாச்சாரத் தொழில்கள் அடங்கும். மற்றும் ii) படைப்பாற்றலை ஆதரிக்கும் செயல்பாடுகள்” ஆகும்.
‘ஆரஞ்சு’ நிறத்தை அவர்கள் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பது குறித்து, அந்தப் புத்தகம், அந்த நிறம் “அடிக்கடி கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் அடையாளம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது” என்றும், பல மதங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது என்றும் கூறுகிறது.
2024-ல் ஐ.நா. செய்திகளுக்கு அளித்த ஒரு நேர்காணலில், ஃபெலிப் புயிட்ராகோ குறிப்பிட்டதாவது, “ஒலி-ஒளி ஊடகங்கள், திரைப்படத் தயாரிப்பு, தொலைக்காட்சி, காணொலி கேம்கள், அனைத்து வடிவங்களிலும் இசை, அத்துடன் கைவினைப் பொருட்கள், நுண்கலைகள், நாடகம் மற்றும் வடிவமைப்பு, ஃபேஷன் போன்ற செயல்பாடுகள், மேலும் அதிகரித்து வரும் தகவல்தொடர்புகளின் பிற மின்னணு வெளிப்பாடுகள் போன்ற செயல்பாடுகள் நாம் யார் என்பதைப் பிரதிபலிக்கின்றன என்றும், நமது அடையாளத்தை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார். இந்தத் துறையை அவர் பொருளாதாரத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஒரு பகுதியாக விவரித்தார்.
பொருளாதாரத்தின் மற்ற ‘நிறங்கள்’
பொருளாதாரத்தின் பல துறைகள் நிறங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. பசுமைப் பொருளாதாரம் (Green Economy) என்பது ஆற்றல் திறன் கொண்ட, நிலையான தொழில்துறையைக் குறிக்கிறது. அதேசமயம், வெள்ளை பொருளாதாரம் (White Economy) என்பது சுகாதாரம் மற்றும் சமூகப் பராமரிப்பைக் குறிக்கிறது. நீலப் பொருளாதாரம் (Blue Economy) என்பது கடல் மற்றும் பெருங்கடல் சார்ந்த நடவடிக்கைகளுடன் தொடர்புடையது. வெள்ளிப் பொருளாதாரம் (Silver Economy) என்பது முதியோர் மக்கள்தொகையுடன் தொடர்புடைய துறைகளில் கவனம் செலுத்துகிறது.
இந்தியாவில் படைப்பாற்றல் துறையின் தற்போதைய நிலை
உலகளவில், படைப்பாற்றல் பொருளாதாரம் ஆண்டுக்கு 2 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டி, கிட்டத்தட்ட 50 மில்லியன் வேலைகளை உருவாக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா குறித்து, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகஸ்ட் 2024-ல் அகில இந்திய படைப்பாற்றல் பொருளாதார முன்முயற்சியைத் தொடங்கி வைத்தபோது, “இந்தியாவில் படைப்பாற்றல் துறை இப்போது 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு துறையாகும். மேலும், இது இந்தியாவின் உழைக்கும் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 8 சதவீதத்தினருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது,” என்றும் அவர் கூறினார்.
2023-24 ஆம் ஆண்டில் மட்டும் படைப்பாற்றல் சார்ந்த ஏற்றுமதிகள் 20 சதவீதம் அதிகரித்து, 11 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளன என்றும் அவர் கூறினார். “வரும் ஆண்டுகளில் இந்தத் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்றும் அவர் மேலும் கூறினார்.
சஞ்சய் ராய், அமைப்பாளர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் அனுமதிகள் மற்றும் தடையில்லாச் சான்றிதழ்கள் உள்ளிட்ட சிக்கல்கள் குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். ஒற்றைச் சாளர அனுமதி முறையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் சரியான திசையில் எடுக்கப்பட்டவை. மகாராஷ்டிராவும் டெல்லியும் கடந்த 10 ஆண்டுகளாக ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்த முயற்சித்து வருகின்றன,” என்று அவர் கூறினார்.