நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த, உயிரி மருந்து ‘சக்தி (SHAKTI) திட்டத்தில் என்னென்ன அம்சங்கள் உள்ளன?

தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி ஒதுக்கீட்டில் உயிரி மருந்து சக்தி (Biopharma SHAKTI) திட்டத்தை முன்மொழிகிறது. இந்தத் திட்டம் மற்றும் வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதாரம் தொடர்பான பிற அறிவிப்புகள் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இங்கே உள்ளன.


தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை 2026-ன் ஒரு பகுதியாக, இந்தியாவை உயிரி மருந்துத் தொழில்நுட்ப துறையில் ஒரு உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உயிரி மருந்துத் தொழில்நுட்ப சக்தி திட்டத்தை அறிவித்தார்.


நீரிழிவு, புற்றுநோய் மற்றும் தன்னுடல் தாக்கக் கோளாறுகள் போன்ற தொற்றா நோய்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மேலும், குறைவான விலையில் மக்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவுவதற்கு உயிரியல் மருந்துகள் முக்கியமானவை என்று நிதியமைச்சர்  குறிப்பிட்டார்.


முன்மொழியப்பட்ட திட்டம் குறித்து


நிதியமைச்சர், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி ஒதுக்கீட்டில், அறிவு, தொழில்நுட்பம் மற்றும் புதுமை மூலம் சுகாதார மேம்பாட்டிற்கான உத்தி (Strategy for Healthcare Advancement through Knowledge, Technology and Innovation (SHAKTI))  என்ற திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.


சேர்க்கப்பட்டுள்ள மருந்துகள்:


உயிரினங்கள் (செல்கள், பாக்டீரியா அல்லது விலங்குகள்) அல்லது அவற்றின் கூறுகளான புரதங்கள் மற்றும் மரபணுக்களிலிருந்து பெறப்படும் சிக்கலான மருந்துகளான உயிரியல் மருந்துகளை (Biologics) உள்நாட்டு உற்பத்திக்குத் தேவையான சூழலை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். புற்றுநோய்கள், தன்னுடல் தாக்க நோய்கள் (வாதம், குடல் அழற்சி நோய் மற்றும் சொரியாசிஸ்) மற்றும் மரபணு கோளாறுகள் போன்ற கடுமையான நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க உயிரியல் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இது போன்ற மருந்துகளை சுத்திகரிப்பது, பதப்படுத்துவது மற்றும் உற்பத்தி செய்வது சிக்கலானதாக இருக்கும்.


இந்தத் திட்டம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு மருந்துகளின் (biosimilar medications) உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இவை உயிரியல் மருந்துகளுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால், முற்றிலும் ஒரே மாதிரியாக இருக்காது.




உள்கட்டமைப்பு ஆதரவு:


இந்தத் திட்டத்தின்கீழ், மூன்று புதிய தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (National Institutes of Pharmaceutical Education and Research (NIPER)) தொடங்ப்படவுள்ளது. மேலும், தற்போதுள்ள 7  நிறுவனங்கள் உயிரிமருத்துவத் துறையை மையமாகக் கொண்ட வலையமைப்பின் (Biopharma-focused network) ஒரு பகுதியாக மேம்படுத்தப்படும்.


இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியாவில் மருத்துவப் பரிசோதனைகளுக்காக 1,000-க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற தளங்களின் வலையமைப்பும் உருவாக்கப்படும்.


உலகத் தரநிலைகள் மற்றும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட காலக்கெடுவை எட்டுவதற்காக, ஒரு பிரத்யேக அறிவியல் ஆய்வுக் குழு மற்றும் நிபுணர்கள் மூலம் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பை (Central Drugs Standard Control Organisation) வலுப்படுத்த இருப்பதாக நிதி அமைச்சர் கூறினார்.


உயிரி மருந்து சக்தி திட்டம் (Biopharma SHAKTI) ஏன் தொடங்கப்பட்டது?


தொற்று நோய்களுக்குப் (non-communicable diseases (NCDs)) பதிலாக, இந்தியா அதிக அளவில் நீண்டகால நோய்களை எதிர்கொண்டு வருகிறது என்பதை இந்தத் திட்டம் அங்கீகரிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்படும் அனைத்து இறப்புகளிலும் 63% தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. இதில், இருதய நோய்கள் மொத்த இறப்புகளில் 27% ஆகவும், அதைத் தொடர்ந்து நாள்பட்ட சுவாச நோய்கள் (11%), புற்றுநோய்கள் (9%), மற்றும் நீரிழிவு நோய் (3%) ஆகவும் உள்ளன.


முக்கியமாக, இந்தத் திட்டம் சரியான நேரத்தில் வந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் நிறுவன அடையாள மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு அக்டோபர் 2025 முதல் 100% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த பிறகு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மருந்து இறக்குமதிகள் தேசியப் பாதுகாப்புக்கு மருந்து இறக்குமதிகள் அச்சுறுத்தலாக உள்ளதா என்பது குறித்து டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட பிரிவு 232 விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தத் தீர்வைகள் பொதுவான மருந்துகள் மற்றும் அமெரிக்காவில் உற்பத்தித் தளங்களைக் கொண்ட நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்பதால், இந்தியா இந்த அபாயத்தை தவிர்த்துவிட்டது. இந்தியாவின் மருந்துப் பொருட்களின் ஏற்றுமதியில் 90% பொது மருந்துகளாகும் (generic medicine). இவற்றில் பாதி அமெரிக்காவிற்குச் செல்கின்றன. மேலும், பல இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் மருந்துத் தொழிற்சாலைகளும் உள்ளன.


வரி விதிப்பு நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டதால், அக்டோபர் 2025-ல் அமெரிக்காவிற்கான இந்தியாவின் மருந்து ஏற்றுமதி முந்தைய ஆண்டைவிட 23.7 சதவீதம் சரிந்தது. ஆனால், அடுத்த மாதமே அது முந்தைய ஆண்டைவிட 9.8 சதவீதமாக அதிகரித்தது.


இந்த வரி விகிதம் 250% வரை உயரக்கூடும் என்பதால், பயோலாஜிக்கல்ஸ் மற்றும் பயோசிமிலர்கள் துறையில் கவனம் செலுத்துவது, மருந்து சார்ந்த வரிகளிலிருந்து இந்தியாவின் மருந்துத் துறையைப் பாதுகாக்க உதவும். மேலும், அதன் நிலையை ‘உலகின் மருந்தகம்’ (pharmacy of the world) என்பதிலிருந்து, சிக்கலான பயோசிமிலர் மற்றும் உயிரியல் மருந்துகளுக்கான ஒரு மையமாக மாற்றுவதற்கும் இந்தத் திட்டம் வழிவகுக்கும்.


Biologicals மற்றும் Biosimilars என்றால் என்ன?


         உயிரியல் மருந்துகள் (Biologicals) என்பது  இயற்கை உயிரி (மிகச்சிக்கலான புரதங்கள், நுண்ணுயிர்கள் போன்றவை) பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மருந்துகள் ஆகும்.  ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு மருந்துகள் (Biosimilars) என்பது உயிரியல் மருந்துகளுக்கு ஏற்றதாக இருந்தாலும், ஒரே மாதிரி அல்லாத நகல் மருந்துகள் ஆகும்.


இந்தியாவின் மருந்துவத் துறை எவ்வாறு செயல்பட்டுள்ளது


இந்தியாவின் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியில் ஆயுஷ் மற்றும் மூலிகைப் பொருட்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், மொத்த மருந்துகள், மருந்து இடைநிலைப் பொருட்கள், மருந்து உருவாக்கங்கள் மற்றும் உயிரியல் மருந்துகள் இடம்பெற்றிருக்கும்.


இந்தியாவின் மருந்துத் துறை உலகின் மூன்றாவது பெரிய துறையாகும். இது உலகளாவிய மரபுவழி மருந்துகளுக்கான (உயிரியல் மருந்துகளுக்கு ஏற்ற மாதிரிகள்) தேவையில் 20%-ஐப் பூர்த்தி செய்கிறது. மேலும், 2025-ஆம் ஆண்டு  நிதியாண்டில் 191 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ஏற்றுமதிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற அதிகவரி கொண்ட  ஒழுங்குமுறை சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன.


குறைந்த விலையில் தடுப்பூசிகளை வழங்குவதில் இந்தியா ஒரு முன்னணி நாடக உள்ளது. உலகின் பெரும்பாலான டிப்தீரியா, டேட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் (diphtheria, tetanus and pertussis (DPT)) தடுப்பூசிகள், பேசிலஸ் கால்மெட்-குவெரின் (Bacillus Calmette-Guerin (BCG)) மற்றும் தட்டம்மை தடுப்பூசிகளை இந்தியா வழங்கி வருகிறது.


2025-ஆம் ஆண்டு நிதியாண்டில், இத்துறையின் ஆண்டு வருவாய் ரூ.4.72 லட்சம் கோடியை எட்டியது. 2015 முதல் 2025 நிதியாண்டு வரை ஏற்றுமதி ஆண்டுக்கு 7 சதவீத கூட்டு வளர்ச்சி விகிதத்தில் அதிகரித்துள்ளது.


இந்தியாவின் மருத்துவ சாதனங்கள் துறையும் உலக அளவில் போட்டித்தன்மை கொண்டதாக மாறியுள்ளது. 2025ஆம் ஆண்டு நிதியாண்டில் 187 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதன் ஏற்றுமதிகளில் காந்த அதிர்வு அலை வரைவு (Magnetic Resonance Imaging (MRI) மற்றும் கணினி வழி அகத்தோற்ற வரைவு  (Computed Tomography Scan (CT)) வரைவுகள், நேரியல் முடுக்கிகள் (inear accelerators), இதயம் சார்ந்த ஸ்டென்ட்‌கள் மற்றும் வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பங்கள், நுட்பமான படமெடுக்கும் கருவிகள் மற்றும் உயிர் ஆதரவு தொழில்நுட்பங்களில் விரிவடைந்துள்ளதை குறிக்கிறது.


பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிற சுகாதாரத் தொடர்பான முன்முயற்சிகள்


உள்கட்டமைப்பு மேம்பாடு: தற்போதுள்ள துணை மருத்துவ வல்லுநர்களுக்கான (Allied Health Professionals (AHPs)) நிறுவனங்கள் மேம்படுத்தப்படும் என்றும், அதே நேரத்தில் தனியார் மற்றும் பொதுத் துறைகளில் புதிய துணை மருத்துவ வல்லுநர்களுக்கான நிறுவனங்கள் நிறுவப்படும் என்றும் வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கண் மருத்துவம், கதிரியக்கவியல், மயக்க மருந்து, அறுவை சிகிச்சை அரங்க தொழில்நுட்பம், பயன்பாட்டு உளவியல் மற்றும் நடத்தை ஆரோக்கியம் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 10 துறைகளில் கவனம் செலுத்தும். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் துணை மருத்துவ வல்லுநர்களை உருவாக்கும்.


முதியோர் பராமரிப்பில் கவனம் (geriatric care): முதியோர் மற்றும் அது தொடர்பான பராமரிப்பில் கவனம் செலுத்தும் ஒரு வலுவான பராமரிப்புச் சூழல் அமைப்பு (CARE ecosystem) திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டில் 1.5 லட்சம் பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முக்கியப் பராமரிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய திறன்களை ஒருங்கிணைத்து, பல்வேறு திறன் கொண்ட பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, தேசிய திறன் தகுதி கட்டமைப்புடன் இணைந்த பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட உள்ளது.


மருத்துவ சுற்றுலா மையங்கள் (Medical tourism hubs): ஐந்து பிராந்திய மருத்துவ மையங்களை உருவாக்கவும், இந்த முயற்சியில் மாநிலங்களுக்கு ஆதரவளிக்கவும் தனியார் துறையுடன் இணைந்து ஒரு திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. நிதி அமைச்சரின் கூற்றுப்படி, இந்த மையங்கள் மருத்துவம், கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளை ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்களாகச் செயல்படும். இந்த மையங்களில் ஆயுஷ் மையங்கள் மற்றும் மருத்துவ மதிப்பு சுற்றுலா வசதி மையங்களும் இடம் பெற்றிருக்கும். இந்த முயற்சி, மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார நிபுணர்கள் என இருவருக்கும் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆயுஷ் மீதான கவனம்: தற்போதைய காலகட்டத்தில் யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நிதியமைச்சர் மூன்று புதிய அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்களை அமைப்பதற்கும், உயர் தரச் சான்றிதழ் சூழல் அமைப்புக்காக ஆயுஷ் மருந்தகங்கள் மற்றும் மருந்துப் பரிசோதனை ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கும் திட்டங்களை அறிவித்தார். பாரம்பரிய மருத்துவத்திற்கான சான்றுகள் அடிப்படையிலான ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் விழிப்புணர்வை வலுப்படுத்தும் வகையில், ஜாம்நகரில் உள்ள உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தை மேம்படுத்துவதற்கான திட்டமும் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


மனநலப் பராமரிப்பு மற்றும் அதற்கான அணுகலுக்கு ஊக்கம்: வட இந்தியாவில் 2-வது தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் நிறுவப்படும் என்றும், ராஞ்சி மற்றும் தேஜ்பூரில் உள்ள தேசிய மனநல நிறுவனங்கள் மேம்படுத்தப்படும் என்றும் வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை மையங்களை நிறுவுவதன் மூலம் அவற்றின் திறன்களை 50% விரிவுபடுத்தவும் இந்த வரவு செலவுத் அறிக்கை முன்மொழிகிறது.

 

Original Article : What’s in Biopharma SHAKTI scheme announced by FM Sitharaman?



Share: