முக்கிய அம்சங்கள்:
• ஆர்க்டிக் பிராந்தியத்தில் நிலப்பரப்பைக் கொண்ட 8 நாடுகளை உள்ளடக்கிய 'ஆர்க்டிக் சபையின்' (Arctic Council) 13 பார்வையாளர் நாடுகளில் (observer countries) இந்தியாவும் ஒன்றாகும். பார்வையாளர் நாடுகளுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. மேலும், அவை நிதிப் பங்களிப்பை வழங்கவோ அல்லது ஆர்க்டிக் பகுதியில் நேரடியாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவோ முடியாது.
• அந்தக் குழு தனது பரிந்துரைகளில் பின்வருமாறு கூறியுள்ளது: "துருவப் பகுதிகளுக்கென பிரத்யேக தூதர்களை நியமித்துள்ள பிற நாடுகளைப் போல, இந்தியாவும் துருவப் பகுதிகளுக்கு எனத் தனி 'தூதரை' (Ambassador) நியமிக்க வேண்டும். இது, தனது வெளியுறவுக் கொள்கையில் துருவப் பகுதிகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுவதுடன், சர்வதேச அளவில் நாட்டின் கருத்துக்களைத் தெளிவாக முன்வைக்கவும், துருவப் பகுதிகள் சார்ந்த இலக்குகளைப் பின்தொடரவும் உதவும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
• வளரும் நாடுகளின் பிரதிநிதியாக இந்தியாவின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்த, அரசு ஒரு வலுவான உத்தியைக் கையாள வேண்டும் என்றும் இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், ஆர்க்டிக் சபையில் (Arctic Council) பார்வையாளர்களாக இருக்கும் ஆசிய நாடுகளான இந்தியா, ஜப்பான், தென்கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவை இணைந்து ஒரு நான்கு முனை கூட்டாண்மை (Quadrilateral partnership) மூலம் தங்களுக்குள் கூடுதல் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் இந்தக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
• ஆர்க்டிக் சபையில் 'பார்வையாளர்' தகுதி பெற்றுள்ள 13 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த சபையில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் போன்ற 13 அரசுக்களுக்கிடையேயான இடையேயான அமைப்புகளும், 12 அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் பார்வையாளர்களாகச் செயல்பட்டு வருகின்றன.
• பார்வையாளர்கள் (Observers) முடிவெடுக்கும் செயல்பாடுகளில் பங்குபெற முடியாது. ஆனால், ஆர்க்டிக் கவுன்சிலின் கூட்டங்களில், குறிப்பாக அதன் செயற்குழுக்களின் கூட்டங்களில் கலந்துகொள்ள அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
• ஆர்க்டிக் சபையின் நோக்கங்களை ஆதரிக்கும் மற்றும் நிதியுதவி உட்படப் பல்வேறு வழிகளில் பங்களிப்பை வழங்கக்கூடிய திறனை நிரூபித்த நாடுகள் மற்றும் அமைப்புகளுக்கு மட்டுமே பார்வையாளர் தகுதிநிலை வழங்கப்படுகிறது. இந்த தகுதிநிலை ஒருமுறை வழங்கப்பட்டுவிட்டால், அது பொதுவாகத் தானாகவே புதுப்பிக்கப்படும். பார்வையாளராக உள்ள நாடு ஆர்க்டிக் சபையின் நோக்கங்களுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளது என அதன் அனைத்து உறுப்பினர்களும் ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்த அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
• சீனா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இணைந்து, இந்தியா 2013-ஆம் ஆண்டில் பார்வையாளர் தகுதிநிலையைப் பெற்றது. இதற்கு முன்பு, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, போலந்து, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு மட்டுமே பார்வையாளர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. சுவிட்சர்லாந்து நாடு 2017-ஆம் ஆண்டில் பார்வையாளர் நாடாக இணைந்தது.
• அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக ஆர்க்டிக் (Arctic) பகுதியில் நிரந்தர ஆராய்ச்சி நிலையத்தை அமைத்துள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். வளிமண்டலம் மற்றும் காலநிலை அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிகளை வேறு எங்கும் செய்ய முடியாத வகையில், துருவப் பகுதிகள் மிக தனித்துவமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
• வடதுருவத்திற்குத் தெற்கே சுமார் 1,200 கி.மீ தொலைவில் உள்ள நார்வே நாட்டின் ஸ்வல்பார்ட் (Svalbard) தீவில் அமைந்துள்ள 'நை அலெசுண்ட்' (Ny-Alesund) என்ற இடத்தில் 'இமாத்ரி' (Himadri) ஆராய்ச்சி நிலையம் ஜூலை மாதம் 2008-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கோவாவை தளமாகக் கொண்ட தேசிய அண்டார்டிக் மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையம் (National Centre for Antarctic and Ocean Research (NCOAR)) இந்த நிலையத்தின் ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முதன்மை அமைப்பாகச் செயல்படுகிறது.
• கடந்த பத்தாண்டுகளில், உயிரியல், பனிப்பாறை ஆய்வு (glaciology), வளிமண்டல மற்றும் காலநிலை அறிவியல் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள இந்த நிலையம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வகங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இந்த வசதிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
• 1981-ஆம் ஆண்டில் தொடங்கிய அண்டார்டிகாவிற்கான இந்தியாவின் 30 ஆண்டுகால அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் பிறகே 'ஹிமாத்ரி' (Himadri) ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. இந்தியா 1983-ஆம் ஆண்டில் அண்டார்டிகாவில் தனது முதல் நிரந்தர ஆராய்ச்சி நிலையத்தை அமைத்தது. 2010-ஆம் ஆண்டில் இந்திய விஞ்ஞானிகள் தென்துருவத்திற்கும் ஒரு அறிவியல் பயணத்தை மேற்கொண்டனர். இன்று, அண்டார்டிகாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிலையங்களைக் கொண்டுள்ள மிகச்சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
• ஆர்க்டிக் பகுதி கனிமங்கள், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாகும். உலக வெப்பமயமாதல் காரணமாக ஆர்க்டிக் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால், பயணத் தூரத்தைக் குறைக்கும் புதிய கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகள் உருவாகி வருகின்றன. எனவே, ஆர்க்டிக் பகுதியில் ஏற்கனவே தீவிரமாகச் செயல்பட்டு வரும் நாடுகள், அங்குள்ள இயற்கை வளங்களை வணிகரீதியாகப் பயன்படுத்துவதில் தங்களது பங்கைப் உறுதிசெய்ய இலக்கு நிர்ணயித்துள்ளன.
Original Link : What is the Arctic Council? -Priya Kumari Shukla