தென்சீனக் கடல் மீண்டும் கவனம் பெற்றுள்ளது: அங்கு என்ன நடக்கிறது, அது ஏன் முக்கியமானது? -ரோஷ்னி யாதவ்

தென்சீனக் கடல் தொடர்பான சீனாவின் புதிய விதிகள், நீண்டகாலமாக நிலவி வரும் கடல்சார் எல்லைச் சிக்கலை மீண்டும் உலகளவில் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளன. இந்தப் புதிய நடவடிக்கைகள் எதைக் குறிக்கின்றன? தென்சீனக் கடல் இராஜதந்திரரீதியாக ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? ஒன்பது கோடுகள் எல்லை (Nine-Dash Line), கடல்சார் எல்லைப் பிரச்சனை மற்றும் இந்தியாவின் 'சாகர்' (Security and Growth for All in the Region (SAGAR)) மற்றும் 'மகாசாகர்' (Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions (MAHASAGAR)) கோட்பாடுகள் குறித்த தகவல்கள் பின்வருமாறு: 


ஒன்பது கோடுகள் எல்லை (Nine-Dash Line) : 


  • 1947-இல் சீனக் குடியரசு (Republic of China) அதிகாரப்பூர்வ வரைபடத்தில் 11 கோடுகள் கொண்ட எல்லையை வெளியிட்டது.


  • பின்னர் 1950-களில் மக்கள் சீனக் குடியரசு (PRC) அதை 9 கோடுகளாக குறைத்தது (வியட்நாமுடன் டோன்கின் வளைகுடா தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பிறகு).


  • அன்று முதல் சீனா இந்த “ஒன்பது கோடுகள் எல்லையை” தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. தைவான் இன்னும் 11 கோடுகளைக் குறிப்பிடுகிறது.


கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி, சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் அமைந்துள்ள 'ஹுவாங்யான் தீவு தேசிய இயற்கை சரணாலயத்திற்காக' (Huangyan Dao National Nature Reserve) சீனா புதிய நிர்வாக விதிமுறைகளை வெளியிட்டது. இந்தத் தீவுக்குச் சொந்தம் கொண்டாடும் பிலிப்பைன்ஸ் நாட்டுடன், சீனாவிற்கு இருக்கும் பதற்றத்தை இந்த நடவடிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், தென்னசீனக் கடலின் இந்த மணல் திட்டின் மீதான தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்தச் சீனா அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதிகள் என்ன என்பதையும், பரந்த தென்சீனக் கடல் பிரச்சனை குறித்தும் அறிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. ஹுவாங்யான் தீவின் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பின் பன்முகத்தன்மை, நிலைத்தன்மை மற்றும் நீண்டகாலப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த நடவடிக்கைகள் ஒரு முக்கியப் படியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2. இந்த விதிகளின்கீழ், சட்டவிரோதச் செயல்கள் மற்றும் விதிமீறல்களை உடனுக்குடன் கண்டறிந்து, விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்காக வழக்கமான கண்காணிப்பு அமைப்பு முறை ஒன்று உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


3. இன்ஹுவா (Xinhua) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இயற்கை வளங்கள் அமைச்சகம், தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகம், சீனா கடலோரக் காவல் படை மற்றும் ஹைனான் மாகாண அரசாங்கம் ஆகியவை இணைந்து வெளியிட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது, தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிகளின்கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது .


4. முன்அனுமதி இல்லாமல், மீன்பிடித்தல், சுரங்கத் தொழில் செய்தல் அல்லது அரிதான கடல்வாழ் உயிரினங்களுக்கும் இயற்கைச் சூழல் அமைப்பிற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பவளப்பாறைகள் (Corals and Coral reefs) மற்றும் ராட்சத சிப்பிகளைச் சேகரித்தல் போன்ற செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


5. சட்ட விதிமுறைகளின்படி அனுமதி பெற்றவர்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான பணிகளுக்காக வருபவர்களைத் தவிர, வேறு எந்த நபரோ அல்லது அமைப்போ இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய அனுமதியில்லை என்றும் கூறப்படுள்ளது.


தென்சீனக் கடல் என்பது என்ன?


1. தென்சீனக் கடல், சீனப் பெருநிலப்பரப்பிற்குத் தெற்கே அமைந்துள்ளது. பிரூனை, சீனா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இதன் எல்லைகளாக உள்ளன. இந்தக் கடலின் பல்வேறு பகுதிகளைத் தங்கள் சொந்தப் பகுதி என உரிமை கொண்டாடுவதில் இந்த நாடுகளுக்கு இடையே பல நூற்றாண்டுகளாக மோதல்கள் நிலவி வந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் இந்த பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.


2. தென்சீனக் கடல் உலகிலேயே மிக முக்கிய கடல்சார் பிராந்தியங்களில் ஒன்றாகும். இந்தப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்த சீனா இதன் மீது முழுஅதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கிறது. 1947-ஆம் ஆண்டு, 'Kuomintang' என்ற தேசியவாத ஆட்சியின்கீழ், சீனா "ஒன்பது கோடுகள் எல்லை வரைபடத்தை" (Nine-dash line) வெளியிட்டது.


3. ஒன்பது கோடுகள் எல்லை வரைபடம், தெற்கு சீனக் கடலில் பெய்ஜிங் (சீனா) உரிமை கோரும் நீர்நிலைகளையும் தீவுகளையும் சூழ்ந்துள்ளது. இது தெற்கு சீனக் கடலின் ஏறக்குறைய 90 சதவீதப் பகுதியை உள்ளடக்கியது. சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகும், இந்த உரிமை கோரல் தொடர்ந்து சீனாவின் அதிகாரப்பூர்வ வரைபடங்களில் இடம்பெற்று வருகிறது.


4. சமீபத்திய ஆண்டுகளில், தெற்கு சீனக் கடல் பகுதி தனது பிரத்யேக பொருளாதார மண்டலத்தின் (Exclusive Economic Zone (EEZ)) ஒரு பகுதி என்ற வாதத்தை முன்வைக்கும் சீனா, தனது அனுமதியின்றி மற்ற நாடுகள் அப்பகுதியில் ராணுவ அல்லது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளது.


5. இருப்பினும், தெற்கு சீனக் கடற்பகுதியில் சீனாவின் பரந்த உரிமை கோரல்களை மற்ற நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதற்குப் பதிலாக, தெற்கு சீனக் கடலில் ஏற்கனவே உள்ள தீவுகளை விரிவுபடுத்தியும், புதிய செயற்கைத் தீவுகளை உருவாக்கியும் சீனா தனது ஆதிக்கத்தைப் பெருக்கி வருகிறது என்று வெளியுறவுத் தொடர்புகளுக்கான அமைப்பு (Council on Foreign Relations (CFR)) தெரிவிக்கிறது.

'ஒன்பது கோடுகள் எல்லை' (Nine-dash line) என்றால் என்ன?


Knowledge Nugget | China tightens grip on the South China Sea: What’s happening and why it matters1. 'ஒன்பது கோடுகள் எல்லை' என்பது தென் சீனக் கடலில் உள்ள பகுதிகளைத் தனக்குச் சொந்தமானது எனக் கோருவதற்காகச் சீனா தனது அதிகாரப்பூர்வ வரைபடங்களில் வரைந்துள்ள எல்லைக் கோடாகும். இது ஆரம்பத்தில் 'பதினொரு கோடுகள் எல்லை' (Eleven-dash line) என்று அழைக்கப்பட்டது. ஆனால், 1953-ஆம் ஆண்டில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம் 'டாங்கின் வளைகுடா' (Gulf of Tonkin) பகுதியை இதில் இருந்து நீக்கியதால், இது ஒன்பது கோடுகளாகக் குறைந்தது.

2. இந்தக் கோடு சீனாவின் நிலப்பரப்பில் இருந்து சுமார் 2,000 கிலோமீட்டர் வரை நீண்டு, பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் எல்லைக்கு சில நூறு கிலோமீட்டர் வரை நீள்கிறது. வரலாற்றுரீதியான கடல்சார் உரிமைகளின் அடிப்படையில் இந்த எல்லைக்கோட்டுக்குள் இருக்கும் நீர்ப்பரப்புகளும் தீவுகளும் தனக்கே சொந்தம் என்று சீனா உரிமை கோருகிறது. இருப்பினும், இந்த எல்லைக் கோட்டிற்கான துல்லியமான புவியியல் ஆயத்தொலைவுகளை சீனா இதுவரை தெளிவாக வரையறுக்கவில்லை. மேலும், சீனா 'ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்டங்களுக்கான ஒப்பந்தத்தில்' (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)) கையெழுத்திட்டுள்ள ஒரு நாடாக இருந்தபோதிலும், இந்த எல்லைக்கோடானது அந்த ஒப்பந்தம் அனுமதிக்கும் கடல்சார் எல்லைகளைத் தாண்டி மிக அதிக தூரம் நீண்டுள்ளது.

தென்சீனக் கடலின் முக்கியத்துவம் என்ன?




1. தென்சீனக் கடல் பகுதியானது உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதைகளில் ஒன்றாகும். இது இந்தியப் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது. உலகின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் சுமார் 22 சதவீதமும், கடல் வழியிலான வர்த்தகத்தில் 60 சதவீதமும் இந்தப் பகுதி வழியாகவே நடைபெறுகின்றன.


2. கடல் மீன்பிடித்தலுக்கு மிகவும் முக்கியமானது; மேலும் இதில் அதிக அளவிலான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் இது பொருளாதாரரீதியாகவும், பாதுகாப்புரீதியாகவும் மிக மதிப்பமிக்கதாகக் கருதப்படுகிறது.


3. அமெரிக்க எரிசக்தி தகவல் முகமையின் (EIA) தரவுகளின்படி, தென்சீனக் கடலின் அடிவாரத்தில் சுமார் 1,100 கோடி கொள்கலன் எண்ணெயும், 190 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


4. மேலும், தென்சீனக் கடல் வளமான மீன்பிடிப் பகுதிகளைக் கொண்டுள்ளது. இது அப்பகுதியில் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது. ‘BBC’ செய்தி நிறுவனத்தின் தரவுகளின்படி, உலகின் மொத்த மீன்பிடிப் படகுகளில் பாதியளவுக்கும் அதிகமானவை இந்தப் பகுதியில்தான் இயங்கி வருகின்றன.

தென்சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய தீவுகள் யாவை?


1. தென்சீனக் கடலில் தனது எல்லைக் கோரிக்கைகளை விரிவுபடுத்த சீனா எடுத்து வரும் முயற்சிகள், எல்லைப் பிரச்சனைகளுக்கு வழிவகுத்துள்ளன. புரூனை, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா மற்றும் சீனா ஆகிய பல நாடுகள் தென்சீனக் கடலின் பல்வேறு பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன.


2. ஸ்கார்பரோ ஷோல் (Scarborough Shoal), 'ஹுவாங்யான் தீவு' (Huangyan Island) என்றும் அழைக்கப்படுகிறது. இது தெற்காசியாவின் தென்சீனக் கடலில், பிலிப்பைன்ஸின் லூசான் (Luzon) தீவிற்கு மேற்கே சுமார் 120 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு பாறை நிறைந்த பகுதியாகும். 2012-ஆம் Knowledge Nugget | China tightens grip on the South China Sea: What’s happening and why it mattersஆண்டிலிருந்து சீனாவும் பிலிப்பைன்ஸும் இந்த பாறைப் பகுதிக்கு உரிமைகோரி எல்லைப் பிரச்சனையில் ஈடுபட்டு வருகின்றன.


— இந்த மணல் திட்டு (Shoal) பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) அமைந்துள்ளது. இருப்பினும், சீனா தனது மாலுமிகள் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த 'ஹுவாங்யான் தீவை' (Huangyan Island) கண்டுபிடித்ததாக உரிமை கோருகிறது. மேலும், தனது இந்த உரிமைகோரலுக்கு ஆதரவாக, சாங் வம்சத்தின் (கி.பி. 960–1279) ஆட்சிக்காலம் முதல் இன்று வரை அங்கு மேற்கொண்ட பயணங்கள், நிலப்பரப்பு வரைபடங்களை உருவாக்கியது மற்றும் அந்த மணல் திட்டைப் பயன்படுத்தியது குறித்த வரலாற்றுப் பதிவுகளையும் சீனா சுட்டிக்காட்டுகிறது.


இருதரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சி 


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ஸ்கார்பாரோ ஷோல் (Scarborough Shoal) கடல் பகுதிக்கு அருகில் இரண்டு நாள் இருதரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சியை நடத்தின. மேலும், இது எதிர்காலக் கூட்டாண்மைக்கான மிக முக்கியக் களமாகவும் உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி, 2024-ஆம் ஆண்டு இந்தியா தனது பிரம்மோஸ் (BrahMos) ஏவுகணை அமைப்பின் முதல் தொகுதியை பிலிப்பைன்ஸுக்கு வழங்கியது. இதன் மூலம் பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பைப் பெற்ற முதல் வெளிநாடு என்ற பெருமையை பிலிப்பைன்ஸ் பெற்றது.




— 2016-ஆம் ஆண்டில், ஸ்கார்பரோ ஷோல் (Scarborough Shoal) எல்லைப் பிரச்சனை தொடர்பாகப் பிலிப்பைன்ஸ் நாடு சீனாவிற்கு எதிராகச் சர்வதேச தீர்ப்பாயத்தை அணுகியது. தென்சீனக் கடலின் பெரும்பகுதிக்கு உரிமை கோரும் சீனா வைத்திருந்த 'ஒன்பது கோடுகள் எல்லை' (Nine-dash line) வாதத்தை அந்தத் தீர்ப்பாயம் நிராகரித்தது. மேலும், பிலிப்பைன்ஸ் நாட்டின் கப்பல்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாலும், கடல்சார் சுற்றுச்சூழலைச் சேதப்படுத்தியதாலும் சீனா சர்வதேசச் சட்டங்களை மீறியுள்ளது என்றும் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.


— இந்தத் தீர்ப்பு சட்டப்படிப் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாக இருந்தபோதிலும், அதைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் எதுவும் அங்கு இல்லை. இந்த வழக்கின் விசாரணைகளைச் சீனா புறக்கணித்ததுடன், இந்த வழக்கை விசாரிக்கத் தீர்ப்பாயத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், இந்தத் தீர்ப்பை தான் ஏற்கவோ அல்லது பின்பற்றவோ போவதில்லை என்றும் சீனா கூறியது.


3. ஸ்ப்ராட்லி தீவுகள் (Spratly Islands) மற்றும் அதனை சுற்றியுள்ள பவளப்பாறைகள், மணல் திட்டுகள் மற்றும் சிறிய நிலப்பரப்புகளின் உரிமையைக் கோருவதில் சீனா, தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலப்பரப்புச் சார்ந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது.


— 1968-ஆம் ஆண்டு முதல், இந்த நாடுகள் இராணுவ நடவடிக்கைகளின் மூலம் பல்வேறு தீவுகளையும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து ஆக்கிரமித்துள்ளன. இதில் புரூனே (Brunei) நாடு மட்டுமே ஒரே விதிவிலக்காகும். அது தன் கடல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வணிகரீதியான மீன்பிடித்தலுக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


— ஸ்ப்ராட்லி தீவுகள் (Spratly Islands) பெரும்பாலானவை மனிதர்கள் வாழாத தீவுகளாக இருந்தபோதிலும், அவற்றில் பயன்படுத்தப்படாத மிகப்பெரிய இயற்கை வளங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


4. பாராசெல் தீவுகள் (Paracel Islands) தொடர்பான பிரச்சனை மிகவும் சிக்கலானது. இந்த தீவுகள் தென்சீனக் கடலில், சீனா மற்றும் வியட்நாம் ஆகிய இருநாடுகளுக்கும் இடையே சுமார் 130 தீவுகள் அமைந்துள்ளன.

— 14-ஆம் நூற்றாண்டின் சாங் வம்ச ஆவணங்கள், பாராசெல் தீவுகள் (Paracel Islands) தங்களின் பகுதியாக இருந்ததைக் காட்டுகின்றன என்று சீனா கூறுகிறது. இருப்பினும், 15-ஆம் நூற்றாண்டின் வரலாற்றுப் பதிவுகள் அந்தத் தீவுகள் வியட்நாமுக்குச் சொந்தமானவை என்பதை நிரூபிப்பதாக வியட்நாம் கூறுகிறது.


— ஜனவரி மாதம் 1974-ஆம் ஆண்டில், இந்தத் தீவுகளுக்காக சீனாவிற்கும் வியட்நாமிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் சீனா தீவுகளைத் தன் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. இதற்குப் பதிலடியாக, 1982-ஆம் ஆண்டில் அந்தத் தீவுகள் மீதான தனது நிர்வாக அதிகாரத்தை விரிவுபடுத்தியுள்ளதாக வியட்நாம் அறிவித்தது. இதற்கிடையே, 1999-ஆம் ஆண்டில் தைவானும் பாராசெல் தீவுகள் முழுவதற்கும் உரிமை கோரியது.


— 2012-ஆம் ஆண்டு முதல் சீனா, வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய மூன்று நாடுகளும் அரசு அலுவலகங்களைக் கட்டுதல், சுற்றுலாவை ஊக்குவித்தல், நிலச் சீரமைப்புத் திட்டங்களைச் செய்தல் மற்றும் தீவுகளில் தங்கள் ராணுவப் பலத்தை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் உரிமைக் கோரல்களை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

சாகர் மற்றும் மகாசாகர் கோட்பாடுகள்

1. சாகர்: 'இப்பகுதியில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி' (Security and Growth for All in the Region (SAGAR)) என்ற கொள்கையை இந்தியப் பிரதமர் முதன்முதலில் 2015-ஆம் ஆண்டு மொரிஷியஸ் நாட்டில் அறிமுகப்படுத்தினார். இக்கொள்கையின்கீழ், சுதந்திரமான, திறந்த, அனைவரையும் உள்ளடக்கிய, அமைதியான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இது சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஆட்சிமுறை, நிலையான மற்றும் வெளிப்படையான உள்கட்டமைப்பு வளர்ச்சி, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்திற்கான சுதந்திரம், தடையில்லாத சட்டபூர்வமான வர்த்தகம், அனைத்து நாடுகளின் இறையாண்மைக்கு மதிப்பளித்தல், தகராறுகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ளுதல் மற்றும் அனைத்து நாடுகளையும் சமமாக நடத்துதல் ஆகியவற்றை ஆதரிக்கிறது.



2. மகாசாகர் (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றம்): இந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மொரிஷியஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டபோது, இருநாடுகளுக்கு இடையேயான விரிவான உத்திசார் கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியதோடு, 'சாகர்' (SAGAR) திட்டத்தை 'மஹாசாகர்' (MAHASAGAR) திட்டமாக மேம்படுத்துவதாகவும் அறிவித்தார். 


3. மகாசாகர் (MAHASAGAR) கோட்பாடானது, இந்தியாவின் பழைய சாகர் (SAGAR) திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, இந்தியாவின் கடல்சார் உறவுகளைப் பலப்படுத்துகிறது. இது இந்தியாவின் அண்டை நாடுகளை மட்டுமன்றி, பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதையும் உள்ளடக்குகிறது. மேலும், இது (Quadrilateral Security Dialogue) அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடங்கிய ‘QUAD’ கூட்டமைப்புடன் இந்தியாவின் உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துகிறது.

 

Original Link : South China Sea back in spotlight: What’s happening and why it matters. -Roshni Yadav

Share: