Showing posts with label தேசிய முக்கியத்துவம். Show all posts
Showing posts with label தேசிய முக்கியத்துவம். Show all posts

ஒரு பழங்காலத் தளத்தில் ஒரு புதிய வளாகம் எழும்புகிறது : நாளந்தாவின் கதை -சந்தோஷ் சிங், அர்ஜுன் சென்குப்தா

       நாளந்தா பல்கலைக்கழக வளாகம் 455 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது பாட்னாவிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ராஜ்கிரில் அமைந்துள்ளது. இது பண்டைய புத்த மடாலயத்தின் இடிபாடுகளிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது, இது பழங்காலத்தின் மிகப்பெரிய கற்றல் மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.


நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை முறைப்படி திறந்து வைத்தார்.


2007ஆம் ஆண்டில், நாளந்தாவை மீண்டும் நிறுவுவதற்கான முன்மொழிவு பிலிப்பைன்சின் மாண்டேவில் நடந்த கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த ஒப்புதல் 2009-ல் தாய்லாந்தின் ஹுவா ஹின்னில் நடந்த கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பூட்டான், புருனே, கம்போடியா, சீனா, இந்தோனேசியா, லாவோஸ், மொரீஷியஸ், மியான்மர், நியூசிலாந்து, போர்ச்சுகல், சிங்கப்பூர், தென்கொரியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய பதினேழு நாடுகள் பல்கலைக்கழகத்தை அமைக்க உதவியுள்ளன. இந்த திறப்புவிழாவில் இந்த நாடுகளின் தூதர்களும் கலந்து கொண்டனர்.


2007ஆம் ஆண்டில், பீகார் சட்டமன்றம் ராஜ்கிரில் உள்ள பண்டைய கற்றல் மையத்திற்கு அருகில் ஒரு புதிய சர்வதேசப் பல்கலைக்கழகத்தை உருவாக்க நாளந்தா பல்கலைக்கழக மசோதாவை நிறைவேற்றியது. 2010ஆம் ஆண்டில், நாடாளுமன்றம் இந்தச் சட்டத்தை நாளந்தா பல்கலைக்கழக மசோதாவுடன் இணைத்தது, இது முன்மொழியப்பட்ட பல்கலைக்கழகத்தை "தேசிய முக்கியத்துவம்" என்று கருதி நிர்வாக விதிகளை வகுத்தது.


பல்கலைக்கழகம் வாகனம் இல்லாத மண்டலமாகும், பார்வையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வளாகத்திற்குள் நடக்கவோ அல்லது மிதிவண்டிகளைப் பயன்படுத்தியோ தான் வரவேண்டும்.


2013ஆம் ஆண்டில், புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் பி வி தோஷியின் வாஸ்து ஷில்பா கன்சல்டண்ட்-ஆல் முன்மொழியப்பட்ட வளாகத்திற்கான சிறப்புத் திட்டம், சர்வதேச போட்டிக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டது.


ஆராய்ச்சி மற்றும் கற்றல் மையம்


நாளந்தா பல்கலைக்கழகம் 2014-ல் பதினைந்து மாணவர்களைக் கொண்ட தனது முதல் தொகுதியை அனுமதித்தது. மாணவர்கள் வரலாற்று ஆய்வுகள் பள்ளி மற்றும் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் பள்ளி ஆகியவற்றில் சேர்க்கப்பட்டனர். வகுப்புகள் ராஜ்கிர் கன்வென்ஷன் சென்டரில் நடத்தப்பட்டன, பீகார் அரசாங்கத்தால் நடத்தப்படும் ஹோட்டல் ததாகட், தற்காலிக விடுதி வளாகமாக செயல்படுகிறது. ஆசிரியர் குழுவில் ஆறு ஆசிரியர்கள் இருந்தனர்.


2007ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தில் ஈடுபட்டு வந்த நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தரானார். இப்பல்கலைக்கழகத்தின் முதல் வருகையாளர் அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆவார்.


2014 முதல், பல்கலைக்கழகத்தில் மேலும் நான்கு பள்ளிகள் நிறுவப்பட்டுள்ளன. பௌத்த ஆய்வுகள் பள்ளி, தத்துவம் மற்றும் ஒப்பீட்டு மதம், மொழிகள் மற்றும் இலக்கியப் பள்ளி, மேலாண்மை ஆய்வுகள் பள்ளி மற்றும் சர்வதேச உறவுகள் மற்றும் அமைதி ஆய்வுகள் பள்ளி ஆகியவை இதில் அடங்கும். பல்கலைக்கழகம் தற்போது இரண்டு ஆண்டு முதுகலைப் படிப்புகள், முனைவர் (PhD) திட்டங்கள் மற்றும் சில டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது.


2022க்குள், வளாகக் கட்டுமானத்தில் 90% நிறைவடைந்தது. பல்கலைக்கழகத்தில் 800 நாடுகளைச் சேர்ந்த 150 சர்வதேச மாணவர்கள் உட்பட 31 மாணவர்கள் இருந்தனர். முழுமையாக கட்டி முடிக்கப்பட்டால், வளாகத்தில் 7,500 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடமளிக்க முடியும்.


இந்த வளாகம் நவீன மற்றும் பாரம்பரிய கூறுகளின் கலவையாகும். திறன்மிகு வெண்பலகைகள் மற்றும் மின்னணு மேடைகளைக் (electronic podiums) கொண்டிருக்கும் வகுப்பறைகளுக்குள் இயற்கையான ஒளி ஓடுகிறது. கட்டிடங்கள் குளிரூட்டப்பட்டவை, ஆனால் இயற்கையான குளிர்ச்சியை வழங்க வெற்று சுவர்கள் போன்ற முறைகளையும் பயன்படுத்துகின்றன.


கமல் சாகர் குளங்கள் என அழைக்கப்படும் நீர்நிலைகள் வளாகத்தின் 100 ஏக்கருக்கு மேல் உள்ளன. மேலும் 100 ஏக்கர் பசுமையால் நிரம்பியுள்ளது. வளாகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் நீர் மறுசுழற்சி ஆலை உள்ளது. யோகா மையம், அதிநவீன அரங்கம், நூலகம், காப்பக மையம் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு வளாகத்தையும் கொண்டுள்ளது. வாகனங்கள் உள்ளே செல்வதற்கு அனுமதியில்லை.


சமஸ்கிருத/பாலி மொழியில் மகாவீரா என்றால் 'பெரிய மடாலயம்' என்று பொருள். நாளந்தா மகாவீரா கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை செயல்பாட்டில் இருந்தது.


ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனப் பயணி யுவான் சுவாங்கின் வரலாற்றுக் குறிப்புகள் பண்டைய நாளந்தாவைப் பற்றிய மிக விரிவான விளக்கத்தை அளிக்கின்றன. யுவான் சுவாங் தனது வருகையின் போது, மடாலயத்தில் 10,000 மாணவர்கள், 2,000 ஆசிரியர்கள் மற்றும் பல பணியாளர்கள் இருந்ததாக மதிப்பிட்டார். தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கையை அறிஞர்கள் மறுத்துள்ளனர், ஆனால் நாளந்தா நிச்சயமாக ஒரு சராசரி பெளத்த விகாரம் அல்ல.


நாளந்தாவின்  வயதான மற்றும் புனிதமான மடாதிபதியான சிலபத்ரா  நாளந்தா வேதங்கள், இந்து தத்துவம், தர்க்கம், இலக்கணம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார். மாணவர்களின் எண்ணிக்கை புத்த மதத்திற்கு நின்றுவிடவில்லை, ஆனால் கடுமையான வாய்மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் அனுமதிக்கப்பட்டனர் என்று தோன்றுகிறது" என்று வரலாற்றாசிரியர் ஏ எல் பாஷாம் தனது கிளாசிக் தி வொண்டர் தட் வாஸ் இந்தியா (1954) (classic The Wonder that was India (1954)) என்ற நூலில் எழுதியுள்ளார்.



Share: