பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதக் குழுவாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ -பஷாரத் மசூத்

 தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலுக்கு ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front (TRF)) பொறுப்பேற்றுள்ளது. 


அமெரிக்க வெளியுறவுத்துறை வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு (FTO) மற்றும் சிறப்பாக நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதி (Specially Designated Global Terrorist (SDGT)) எனச் சேர்த்துள்ளது.


தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் 26 பேர் கொல்லப்பட்ட ஏப்ரல் 22 பஹல்காம் தாக்குதலுக்கு ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஒரு சமூக ஊடகப் பதிவில் இந்த செய்தியை வரவேற்றார். இது "இந்தியா-அமெரிக்கா பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பின் வலுவான உறுதிப்படுத்தல்" என்று கூறினார்.


ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) என்பது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பா (LeT)-ன் ஒரு கிளை ஆகும். 


ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் எப்போது தோன்றியது?


உள்துறை அமைச்சகம் (MHA), ஜனவரி 2023-ல் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் TRF-ஐ "பயங்கரவாத அமைப்பு" (“terrorist organisation”) என்று அறிவித்தது. பயங்கரவாத நடவடிக்கைகள், பயங்கரவாதிகளை ஆட்சேர்ப்பு செய்தல், பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு மற்றும் காஷ்மீருக்குள் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களைக் கடத்துதல் பற்றிய பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அரசாங்கம் கூறியது.


ஆனால், TRF முதன்முதலில் 2020-ல் தலைப்புச் செய்திகளில் இடம்பெறத் தொடங்கியது. அந்த ஆண்டு மே மாதம், கெரானில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஐந்து ராணுவ கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். இதில் ஐந்து TRF போராளிகளும் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் ஹண்ட்வாரா மற்றும் சோப்பூரில் இதேபோன்ற மோதல்கள் நிகழ்ந்தன, இதில் பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.


இதற்கு முன்பு இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தன. முதலாவது, ஆகஸ்ட் 2019-ல் ஜம்மு-காஷ்மீரின் 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது, 2018-ல் காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா (LeT)-ன் தலைமை துண்டிக்கப்பட்டது.


ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் எவ்வாறு வளர்ந்தது?


லஷ்கர்-இ-தொய்பா 1985-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மேலும், அதன் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று காஷ்மீர் முழுவதையும் பாகிஸ்தானுடன் இணைப்பதாகும். இருப்பினும், 2018-ஆம் ஆண்டின் இறுதியில், அது இந்திய பாதுகாப்புப் படைகளின் கைகளில் குறிப்பிடத்தக்க பின்னடைவைச் சந்தித்தது.


நவம்பர் 2018இல், லஷ்கர்-இ-தொய்பா தளபதி நவீத் ஜாட் அல்லது அபு ஹன்சுல்லா ஸ்ரீநகரின் புறநகரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார். 45 நாட்களில் கொல்லப்பட்ட ஐந்தாவது உயர் லஷ்கர் தளபதி ஜாட் ஆவார். ஜாட்டுக்கு முன்பு, லஷ்கரின் ஸ்ரீநகர் தலைவர் மெஹ்ராஜ்-உத்-தின் பாங்க்ரூ, வடக்கு காஷ்மீரில் அதன் உயர் தளபதி அபு முவாஸ் மற்றும் அதன் தெற்கு காஷ்மீரின் உயர் தளபதிகள் ஆசாத் அகமது மாலிக் மற்றும் முஷ்டாக் அகமது மிர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.


உயர்மட்டத் தலைமையை அழிப்பது பள்ளத்தாக்கில் லஷ்கர்-இ-தொய்பா (LeT) தாக்குதல் திறனை வெகுவாகக் குறைத்தது. பின்னர் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.


பாதுகாப்புப் படைகளின் வட்டாரங்களின்படி, பாகிஸ்தான் இதற்கு பதிலடி கொடுக்க விரும்பியது. ஆனால், நிதி நடவடிக்கை பணிக்குழு (Financial Action Task Force (FATF)) அதன் சாம்பல் நிறப் பட்டியலில் இருப்பதை நினைவில் வைத்திருந்தது. FATF என்பது பயங்கரவாத நிதியுதவியைக் கண்காணிக்கும் ஒரு அரசுகளுக்கு இடையேயான அமைப்பாகும். சர்வதேச பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியைத் தடுக்க ஒரு நாடு போதுமான அளவு செய்யவில்லை என்று அது நம்பினால், அது நாட்டை சாம்பல் நிறப் பட்டியலில் வைக்கிறது. இது சர்வதேச முதலீட்டை ஈர்க்கும் மற்றும் வங்கிகள் மற்றும் பிற சர்வதேச நிதி நிறுவனங்களுடன் ஈடுபடும் நாட்டின் திறனை பாதிக்கிறது.


எனவே, காஷ்மீரில் "மதச்சார்பற்ற மற்றும் பூர்வீக" (“secular and indigenous”) என்று ஒலிக்கும் ஒரு போராளி அமைப்பை அது விரும்பியது.


2020-ஆம் ஆண்டில் ஒரு போலீஸ் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், "லஷ்கர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது மத அர்த்தங்களைக் கொண்டிருந்தன. பாகிஸ்தான் அதை விரும்பவில்லை. அவர்கள் காஷ்மீர் போராளித்தனத்தை மதச்சார்பற்றதாக்கி அதை பூர்வீகமாகக் காட்ட விரும்பினர். எனவே அவர்கள் 'எதிர்ப்பு' என்பதைத் தேர்ந்தெடுத்தனர். 


மற்றொரு அதிகாரி, “பயிற்சி இல்லாத உள்ளூர் போராளிகளைப் போலல்லாமல், இந்தப் புதிய போராளிகள் கடுமையாகப் பயிற்சி பெற்றதாகத் தெரிகிறது. நமக்குத் தெரிந்தவரை, அவர்கள் சேர்க்கப்படுவதற்கு முன்பு குறைந்தது ஆறு மாதங்களாவது பயிற்சி பெற்றவர்கள். இந்த அமைப்பில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு போராளிகள் இருவரும் கலந்து இருப்பதால், அது பூர்வீகமாகத் தெரிகிறது. ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், உள்ளூர் போராளிகளும் பாகிஸ்தானில் மிகவும் சிறப்பாகப் பயிற்சி பெற்றவர்கள்.” என்றார்.


TRF அமைப்பு, Facebook, Telegram மற்றும் WhatsApp போன்ற சமூக ஊடக சேனல்களில் தீவிரமாக உள்ளது. அங்கு அது பிரச்சார வீடியோக்களை பதிவிடுகிறது மற்றும் பல்வேறு தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்கிறது.


அமெரிக்க நடவடிக்கையின் அர்த்தம் என்ன?


குடியேற்றம் மற்றும் தேசியச் சட்டத்தின் (Immigration and Nationality Act (INA)) பிரிவு 219-ன் கீழ் வெளிநாட்டு அமைப்புகளை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாக (FTOs) அமெரிக்க வெளியுறவுத்துறை அங்கீகரிக்கிறது. இது அமெரிக்கா இந்தக் குழுக்களுக்கு எதிராக தண்டனை நடவடிக்கைகளை எடுக்க அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் செயல்படும் அவர்களின் திறனைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வளங்களை அணுக மறுத்தல்.


மிகவும் எளிமையாகச் சொன்னால், இந்தப் பெயர் அமைப்பை முடக்க முயல்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒருவர் நியமிக்கப்பட்ட FTO-விற்கு "பொருள் ஆதரவு அல்லது வளங்களை" வழங்குவது சட்டவிரோதமானது மட்டுமல்லாமல், அமெரிக்க நிதி நிறுவனங்களும் FTO-வால் வைத்திருக்கப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளையும் தடுக்க வேண்டியிருக்கலாம்.


லெபனானை தளமாகக் கொண்ட ஹெஸ்பொல்லா மற்றும் அல்-கொய்தா உட்பட சுமார் 79 அமைப்புகள் தற்போது அமெரிக்காவால் FTO-க்களாக நியமிக்கப்பட்டுள்ளன.


அமெரிக்க வெளிநாட்டு சொத்துக்கள் அலுவலகம் (OFAC) இத்தகைய பயங்கரவாத அமைப்புகளை சிறப்பாக குறிப்பிடப்பட்ட உலகளாவிய பயங்கரவாதிகள் (SDGTs) என பதவி நியமனம் செய்யலாம். அவர்களின் சொத்துக்கள் தடை செய்யப்படுகின்றன மற்றும் அமெரிக்காவில் உள்ளவர்கள் பொதுவாக அவர்களுடன் பரிவர்த்தனை செய்ய தடை விதிக்கப்படுகிறார்கள். இத்தகைய நியமனங்கள், குறிப்பிடப்பட்ட SDGT உடன் வணிகத்தில் ஈடுபடும் தனிநபர்களை இலக்காகக் கொண்டு இரண்டாம் நிலை தடைகளையும் தூண்டலாம்.



Original article:

Share:

இந்திய பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் உலக வங்கியின் கூற்றுகள் -ராம் சிங்

 உலக வங்கியின் சமத்துவமின்மை எண்கள் முற்றிலும் துல்லியமாக இல்லாவிட்டாலும், இந்தியாவின் சர்வதேச தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது


இந்திய ஜனநாயகத்தில் சமத்துவமின்மை (Inequality) ஒரு முக்கிய பிரச்சினையாகும். இருப்பினும், இதை பற்றிய விவாதங்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தரவுகளையே சார்ந்துள்ளன. இது சிறந்த புரிதலுக்குப் பதிலாக தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளை உருவாக்குகிறது. ஏப்ரல் 2025-ல் இந்தியாவில் வறுமை மற்றும் சமத்துவமின்மை (India Poverty and Equity Brief: April 2025) பற்றிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டது. மக்கள் இந்த அறிக்கைக்கு மிகவும் கடுமையாக எதிர்வினையாற்றினர்


உலக வங்கி அறிக்கை, இந்தியாவில் தீவிர வறுமை நீங்கிவிட்டது என்று கூறுகிறது. மேலும், மக்கள் பணத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பதில் உள்ள சமத்துவமின்மை 2011-12 முதல் வெகுவாகக் குறைந்துள்ளது என்றும் கூறுகிறது. சமத்துவமின்மையை அளவிடுவதற்கான பொதுவான வழியாகும் கினி குணகத்தின் (Gini coefficient) அடிப்படையில், இந்த அறிக்கை இந்தியாவை முதல் நான்கு மிகக் குறைந்த சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாகக் தரவரிசைப்படுத்துகிறது. ஆனால், இந்தியாவில் சமத்துவமின்மை மிக அதிகமாக உள்ளது என்று மக்களும் ஊடகங்களும் கேள்விப்பட்டுப் பழகிவிட்டதால், இந்தக் கண்டுபிடிப்புகள் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. என்ன நடந்தது?


இந்தியாவில் சமத்துவமின்மையின் நிலை என்ன?


இந்திய சமத்துவமின்மை பற்றிய உலக வங்கியின் கூற்றுகள் 2022-2023-க்கான அதிகாரப்பூர்வ வீட்டு நுகர்வு செலவு ஆய்வு (Household Consumption Expenditure Survey (HCES)) தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. இந்த தகவல் மாற்றியமைக்கப்பட்ட கலவை குறிப்பு காலம் (modified mixed reference period (MMRP)) முறையைப் பயன்படுத்தி சேகரிக்கப்பட்டது. இது மிகச் சிறந்த புள்ளியியல் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. உலக வங்கி அறிக்கை சரியாகக் குறிப்பிடுவது போல, MMRP ஒரு முன்னேற்றம் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகளுடன் ஒத்துப்போவதாக கருதப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவசப் பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், சிலவற்றைக் கணக்கிடும் வகையில் உலக வங்கி இந்தியத் தரவை மாற்றியமைத்துள்ளது.


உலக வங்கி 2011-12 மற்றும் 2022-23 காலத்தில், இந்தியா நுகர்வு சமத்துவமின்மையில் பெரும் சரிவு ஏற்பட்டதாக உலக வங்கி கண்டறிந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில், நுகர்வு அடிப்படையிலான கினி குணகம் 28.8-இலிருந்து 25.5-ஆக குறைந்துள்ளது.


உலக வங்கி அறிக்கை சமத்துவமின்மையை குறைத்து மதிப்பிடுகிறது என்று சில விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏனெனில், அது பயன்படுத்திய கணக்கெடுப்பு பணக்காரர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை முழுமையாகப் பார்க்கவில்லை. இந்த வரம்பு அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்து கணக்கெடுப்பு தரவுகளுக்கும் பொருந்தும். மேலும், நாடுகளின் பரந்த தரவரிசையை கேள்விக்குள்ளாக்குவதில்லை. உலக வங்கியின் சமத்துவமின்மை மதிப்பீடுகளின் துல்லியத்தை நாம் குறைத்து மதிப்பிட்டாலும், இந்தியாவின் சர்வதேச தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. நுகர்வு சமத்துவமின்மையை (consumption inequality) வருமான சமத்துவமின்மையுடன் நாம் குழப்பிக் கொள்ளக்கூடாது.


இந்தியாவின் நுகர்வு சமத்துவமின்மையின் குறைவு கணிசமானது மற்றும் மறுக்க முடியாதது. தரவு சிக்கலை நிவர்த்தி செய்ய, இந்தியாவில் உள்ள 5% பணக்கார குடும்பங்களின் எந்த செலவினமும் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை என்று கற்பனை செய்து பாருங்கள். அது உண்மையாக இருந்தால், நுகர்வு செலவினத் தரவுகளின்படி, HCES தரவுகளில் உள்ளடக்கப்பட்ட மீதமுள்ள 95% மக்கள்தொகைக்கு 2011-12 மற்றும் 2022-23க்கு இடையில் நுகர்வு சமத்துவமின்மை குறைந்துள்ளது என்பது மறுக்க முடியாதது.


HCES தகவல்கள் நாட்டின் நுகர்வு கூடை (consumption basket) இன்று எப்போதையும்விட ஆரோக்கியமானது என்பதைக் காட்டுகின்றன. 2012 முதல் 2023 வரை தனி நபருக்கு கிடைக்கும் இந்தியாவின் உணவுமுறை ஆரோக்கியமானதாக மாறியுள்ளது என்பதை HCES தரவு காட்டுகிறது. இப்போது ஒரு நபருக்கு 45% அதிக பால் மற்றும் 63% அதிக முட்டைகளைப் பெறுகிறார்கள். பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளுக்கான அணுகலும் அதிகமாக உள்ளது. உணவுச் செலவு மற்றும் கலோரி உட்கொள்ளலில் தானியங்கள் சிறிய பகுதியை உருவாக்குகின்றன. அதே நேரத்தில் அனைத்து குழுக்களுக்கும் ஆரோக்கியமான உணவுகள் அதிகரித்துள்ளன. இவை அனைத்தும், உலகின் சிறந்த உணவு வகைகளுடன் ஒப்பிடும் பணக்கார குழுக்களைவிட, 95% மக்களின் உணவை மேம்படுத்துகின்றன.


கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழ்மையான 20% குடும்பங்கள், இலவச உணவு அல்லது பண உதவி கிடைக்க விட்டாலும் தங்கள் உணவுமுறையை கணிசமாக மேம்படுத்தியுள்ளனர். புதிய பழங்களை நுகரும் கிராமப்புற குடும்பங்களின் பங்கு 2011-12-ல் 63.8%-லிருந்து 2023-ல் 90%ஆக அதிகரித்துள்ளது.


2022-23 மற்றும் 2023-24-ஆம் ஆண்டுகளின் தரவுகள் இந்தியாவில் தீவிர வறுமை  ஒழிந்துவிட்டதாகத் தெளிவாகக் காட்டுகின்றன. ரங்கராஜன், டெண்டுல்கர் அல்லது நிதி ஆயோக்கின் குறியீடு என எந்த முறையைப் பயன்படுத்தினாலும், வறுமை மிகவும் குறைந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. 2011 மற்றும் 2023-க்கு இடையில், $3 சர்வதேச வறுமைக் கோட்டின் அடிப்படையில், இந்தியாவில் சுமார் 27 கோடி மக்கள் தீவிர வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.


தனித்தனியாக, இரவு விளக்கு தரவுகள்  பிரதான் மந்திரி கிராமின் அவாஸ் யோஜனா (Pradhan Mantri Gramin Awas Yojana) மற்றும் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனாக்களின் (Pradhan Mantri Gram Sadak Yojana) காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற பகுதிகளில் நிலைத்தடிப்பான வீடுகள் (pucca homes)  மற்றும் அமைக்கப்பட்ட சாலைகளின் உரிமை விகிதங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகின்றன. 2011-12-ஆம் ஆண்டில் வெறும் 6%-ஆக இருந்த ஏழ்மையான 20% குடும்பங்களில், இன்று 40%-க்கும் அதிகமானோர் வாகனம் வைத்திருக்கின்றனர். இது கிராமப்புற தொழிலாளர்கள் இடம்பெயராமல் அருகிலுள்ள நகரங்களில் பகுதிநேர வேலை செய்ய உதவுகிறது. இவற்றையும், ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களையும் ஏழைகளுக்கான பிற திட்டங்களையும் நாம் சேர்த்தால், ஒட்டுமொத்த நன்மைகள் இன்னும் சிறப்பாக இருக்கும்.


வருமான நிலைகளை ஆராய்தல்


உண்மையில், நுகர்வு சமத்துவமின்மையிலிருந்து தனித்தனியாக வருமான சமத்துவமின்மையை ஆராய்வது முக்கியம். இன்னும் அதிகாரப்பூர்வ வருமான ஆய்வு தகவல்கள் இல்லை. முக்கிய ஊடகங்களும் வர்ணனையாளர்களும் உலக சமத்துவமின்மை ஆய்வகத்தால் (World Inequality Lab (WIL)) மதிப்பிடப்பட்ட முதல் 1% பேரின் வருமான பங்குகளைப் பயன்படுத்தி இந்தியாவில் வருமான சமத்துவமின்மை மிக அதிகம் என்று வாதிடுகின்றனர். இந்த மதிப்பீடுகளின் முக்கியமான வரம்புகளைப் புறக்கணித்து.


வருமான விநியோகம் பற்றிய தகவல் இல்லாததால், சமத்துவமின்மை ஆய்வகம் உயர் வருமான நிலைகளை மதிப்பிட வருமான வரி தகவல்களைப் பயன்படுத்துகிறது. அவர்கள் பழைய நுகர்வு தகவல்களையும் வருமான-நுகர்வு உறவின் மதிப்பீடுகளையும் பயன்படுத்தி குறைந்த மற்றும் நடுத்தர வருமான குடும்பங்களுக்கு வருமானை மதிப்பிடுகின்றனர். இந்த மதிப்பீடுகள் 70–80% குடும்பங்கள் தாங்கள் சம்பாதிப்பதைவிட அதிகமாகச் செலவிடுவதாக நம்பத்தகாத முறையில் கருதுகின்றன. ஆனால், பணக்காரர்களில் 20–30% பேரைத் தவிர, பெரும்பாலான குடும்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வருமானத்தைவிட அதிகமாகச் செலவு செய்வது எப்படி சாத்தியமாகும்?


இத்தகைய நம்பத்தகாத அனுமானத்தைப் பயன்படுத்துவதன் தவிர்க்க முடியாத விளைவாக, கீழ் 80% பேரின் வருமானம் குறைத்து மதிப்பிடப்படுகிறது. இது தேசிய வருமானத்தில் அவர்களின் மதிப்பிடப்பட்ட பங்கைக் குறைக்கிறது. மாறாக, உயர் வருமானக் குழுக்களின் பங்குகள் மிகைப்படுத்தப்படுகின்றன.


இந்த வரம்புகளை நாம் புறக்கணித்தாலும், வருமான சமத்துவமின்மையில் அதிகரிப்பைக் காணவில்லை. WIL மதிப்பீடுகளை அவை உள்ளபடியே எடுத்துக்கொண்டால், கீழ் 50% பேரின் தேசிய வருமானப் பங்குகள் 2017-ல் 13.9%-லிருந்து 2022-ல் 15% ஆக அதிகரித்துள்ளன. அதே காலத்தில், முதல் 10% பேரின் பங்கு 58.8%-லிருந்து 57.7%-ஆகக் குறைந்துள்ளது.


இந்தியாவின் வருமானத்தில் பெரும் பங்கை மேல்தட்டு 1% பேர் ஈட்டுவது கவலையளிக்கிறது. இருப்பினும், 2017 முதல், முதல் 1% பேரின் வருமானப் பங்குகள் 0.3 சதவீத புள்ளிகள் மட்டுமே அதிகரித்துள்ளன. இந்த எழுத்தாளரின் ஆராய்ச்சி, 2016-17 முதல் மத்திய அரசின் வரி ஏய்ப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பணக்கார குழுக்களின் மேம்பட்ட வருமான அறிக்கையே இந்த அதிகரிப்பின் ஒரு பகுதியாகும் என்பதைக் குறிக்கிறது. சிறந்த அறிக்கையிடலை அதிகரித்த சமத்துவமின்மை என்று தவறாகக் கருதக்கூடாது.


மேலும், ஊடகங்களும் வர்ணனையாளர்களும் பயன்படுத்தும் WIL சமத்துவமின்மை மதிப்பீடுகள் வரி-முன் வருமான நிலைகளின் அடிப்படையிலானவை. எவ்வாறாயினும், மக்களுக்கு முக்கியமானது வரி-பின் மற்றும் மானியம்/பரிமாற்றத்திற்குப் பிந்தைய வருமானமே மக்களுக்கு முக்கியமானது. எனவே, சமத்துவமின்மையை நன்கு புரிந்துகொள்ள, வரிக்கு முந்தைய வருமானத்தை அல்ல, வரிக்குப் பிந்தைய வருமானத்தைப் பார்க்க வேண்டும். உதாரணமாக, 2023-24 மதிப்பீட்டு ஆண்டில், அனைத்து வரி செலுத்துவோரில் முதல் 1% பேர் மொத்த வரியில் 72.77% செலுத்தியுள்ளனர். தனிநபர் பிரிவில், முதல் 1% பேர் மொத்த வரியில் 42% செலுத்தியுள்ளனர்.


பணக்காரர்கள் அதிக வரிகளை செலுத்த வேண்டும் என்பது விவாதத்திற்குரியது. ஆனால், தற்போதுள்ள வரி விகிதங்களில், அதிக வருமான வரி செலுத்துவோரின் உண்மையான வரிக்குப் பிந்தைய வருமானம், தலைப்புச் செய்திகளில் பயன்படுத்தப்படும் அளவுகளில் 65%-75% வரை மட்டுமே உள்ளன. குறைந்த வருமானக் குழுக்களுக்கு, அவர்களின் உண்மையான வருமானம் அறிவிக்கப்பட்டதைவிட அதிகமாக உள்ளது. ஏனெனில், பொருளாதாரத்தில் 8%-க்கும் அதிகமான நலன்புரி கொடுப்பனவுகள் சாதனை அளவில் அதிகமாக உள்ளன. வரிகள் மற்றும் மானியங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது, சமீபத்திய ஆண்டுகளில் வருமான சமத்துவமின்மை குறைந்துள்ளது.

இந்தியாவைப் பற்றிய மற்றொரு கதை


சமத்துவ சமூகம் (egalitarian society) என்று கூறுவதற்கு முன்பு நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நல்ல சுகாதாரம் மற்றும் கல்விக்கான சமமற்ற அணுகல் ஒரு பெரிய பிரச்சினையாகும். நமது பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மக்கள்தொகையுடன், மக்கள் பல வேறுபட்ட யதார்த்தங்களை அனுபவிக்கின்றனர். ஆனால், இந்தியாவின் கதை இனி வறுமை மற்றும் சமத்துவமின்மை பற்றியது மட்டுமல்ல. இது முன்னேற்றம் மற்றும் லட்சியத்தைப் பற்றியது. தற்போதைய, சவால்களை நாம் எதிர்கொள்ளும் அதே வேளையில், நாட்டின் சாதனைகளையும் நாம் கொண்டாட வேண்டும்.


ராம் சிங் டெல்லி பொருளாதார பள்ளியின் இயக்குநர், இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர் மற்றும் இந்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டம் செயல்படுத்தல் அமைச்சகத்தின் முதல் வீட்டு வருமான ஆய்விற்கான தொழில்நுட்ப நிபுணர் குழுவின் உறுப்பினர்.



Original article:

Share:

ஒரு நல்ல தொடக்கம்: சுபன்ஷு சுக்லா மற்றும் நாசா-ஆக்ஸியம்-இஸ்ரோ கூட்டுறவு பற்றி…

 நாசா-ஆக்ஸியம்-இஸ்ரோ கூட்டாண்மை ஒரு நல்ல மற்றும் வரவேற்க்கதக்க கூட்டணி ஆகும்.


இந்தியாவின் சுபன்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவினர் ஜூலை 15 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுமார் இரண்டு வார பயணத்தை நிறைவு செய்தனர். சுக்லாவின் பயணம், 2027-ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் இஸ்ரோவின் 'ககன்யான்' பயணத்திற்கான இந்தியாவின் முதல் தொகுதி விண்வெளி வீரர்களில் ஒருவராக அவர் பயணம் செய்வதற்கு ஒரு தீவிர ஒத்திகையாக இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆக்ஸியம் ஸ்பேஸுக்கு ₹500 கோடி செலுத்தி இஸ்ரோ ஏற்பாடு செய்த சுக்லாவின் பயணத்தின் இலக்குகள் இந்திய அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படாததால் இந்த அனுமானம் ஏற்படுகிறது.


அதிர்ஷ்டவசமாக, ஆக்சியம் மற்றும் நாசா இந்த பயணத்தின் நோக்கத்தை இன்னும் தெளிவாக விளக்கியுள்ளன. ககன்யானைப் பற்றிய கூடுதல் தகவல்களை இஸ்ரோவும் விண்வெளித் துறையும் இன்னும் பகிர்ந்து கொள்ள வேண்டும், குறிப்பாக இந்த பயணத்திற்கு ₹20,000 கோடி செலவாகும் என்பதால். சுக்லாவின் பயணம் இஸ்ரோ மனித விண்வெளிப் பயணத்திற்குத் தயாராக உதவும். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது சிக்கலானது, ஏனெனில் அவர்கள் அங்கு சென்றவுடன், குறைந்த உதவி மற்றும் வளங்களுடன் பிரச்சினைகளைக் கையாள வேண்டும்.


ஜூன் 25 அன்று தொடங்கப்பட்ட பயணத்திற்குப் பிறகு இஸ்ரோவின் அறிக்கையின்படி, ககன்யானின் முதல் விண்வெளி வீரர் குழுவில் இருந்த சுக்லா மற்றும் பிரசாந்த் நாயர் இருவரும் மேம்பட்ட விண்கல அமைப்புகள், அவசரகாலத் திட்டங்கள், அறிவியல் பணிகள், பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் பணிபுரிதல், விண்வெளி மருத்துவம் மற்றும் உயிர்வாழும் திறன்கள் ஆகியவற்றில் பயிற்சி பெற்றனர்.


திட்டத்தின் தலைவராக, ஆக்ஸியம் சுக்லாவுக்கு விண்கலத்தை டாக்கிங் மற்றும் அன்டாக் செய்தல், நேரடிப் பணிகளைச் செய்தல், பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைதல் மற்றும் சிக்கல்களைக் கையாளுதல் ஆகியவற்றில் பயிற்சி அளித்தது. விண்வெளி நிலையத்தில், சுக்லா ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் பணியாற்றினார். இதற்காக அவரும் நாயரும் ஜப்பான் மற்றும் ஜெர்மனியில் பயிற்சி பெற்றனர். இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கூறுகையில், சுக்லாவை ஆக்ஸியம் மூலம் அனுப்புவது அவருக்கு மட்டும் பயிற்சி அளிப்பதைவிட குறைவான செலவாகும். ஒட்டுமொத்தமாக, விண்வெளி நிறுவனங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கள் விண்வெளி தொழில்நுட்பங்களை இன்னும் பாதுகாத்தாலும், நாசா-ஆக்ஸியம்-இஸ்ரோ கூட்டாண்மை ஒரு நல்ல முடிவு.


அமெரிக்க விதிகள் (சர்வதேச ஆயுதப் போக்குவரத்து விதிமுறைகள் என்று அழைக்கப்படுகின்றன) இரண்டு விண்வெளி வீரர்களும் அதிகம் கற்றுக்கொள்வதைத் தடுக்கும் என்று சிலர் கவலைப்பட்டனர். ஆனால், இது இப்போது ஒரு பிரச்சனையாக இருக்காது. மாறாக, இஸ்ரோவின் மோசமான தகவல் தொடர்பு குறித்து மக்கள் அதிகம் கவலைப்படுகிறார்கள். விண்வெளி வீரர்கள் அனைத்து வயதினரையும் ஊக்குவிக்கிறார்கள். இந்தியா தனது முதல் மனித விண்வெளிப் பயணத்திற்குத் தயாராகி வருவதால், உற்சாகத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழி, இந்திய விண்வெளி வீரர்களைப் பார்க்கவும் கேட்கவும் மக்களை அனுமதிப்பதாகும். இதுவரை எந்த முயற்சியும் எடுக்கப்படாதது ஏன் என்பதைப் புரிந்துகொள்வது கடினம். ஆனால், செயல்பட இன்னும் நேரம் இருக்கிறது. இஸ்ரோ மற்றும் இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கு, அதிகமானவர்களைச் சென்றடைவதன் மூலமும், மக்கள் விண்வெளி வீரர்களுடன் இணைவதை எளிதாக்குவதன் மூலமும் நிறைய பயனடையக்கூடும்.



Original article:

Share:

பழங்குடி பெண்களுக்கு சொத்து உரிமைகளை மறுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது : உச்ச நீதிமன்றம் -உத்கர்ஷ் ஆனந்த்

 பாலினத்தின் அடிப்படையில் பழங்குடி பெண்களின் பரம்பரை உரிமைகளை மறுப்பது அரசியலமைப்பிற்கு முரணானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பழங்குடி பெண்களுக்கு மூதாதையர் சொத்தில் சம உரிமைகள் உள்ளன என்பதையும் அது உறுதிப்படுத்தியது.


வியாழக்கிழமை, பாலினத்தின் காரணமாக மட்டுமே பழங்குடியினப் பெண் அல்லது அவரது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மூதாதையர் சொத்தில் பங்கு மறுக்கப்படுவது நியாயமற்றது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பழங்குடியினர் சமூகங்களில் பெண்களுக்கு சமமான பரம்பரை உரிமைகளை இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தியது. குறிப்பிட்ட தனிப்பட்ட சட்டம் இல்லாவிட்டாலும் இது பொருந்தும். இந்த உரிமைகளை கட்டுப்படுத்தும் பழக்கவழக்கங்கள் வேறுவிதமாக நிரூபிக்கப்படாவிட்டால் அவை இருப்பதாகக் கருதப்பட வேண்டும் என்ற பழைய நம்பிக்கையையும் நீதிமன்றம் மாற்றியது.


1956-ம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டம் (Hindu Succession Act (HSA)) பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு (STs) பொருந்தாது என்றாலும், பழங்குடிப் பெண்கள் மூதாதையர் சொத்தை வாரிசாகப் பெற முடியாது என்று இது அர்த்தப்படுத்துவதில்லை என்று நீதிமன்றம் கூறியது. ஒரு குறிப்பிட்ட பழங்குடி வழக்கம் தெளிவாகத் தடைசெய்யப்படாவிட்டால் சமத்துவத்தைப் பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.


நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பு, சத்தீஸ்கரைச் சேர்ந்த ST பெண்ணின் சட்டப்பூர்வ வாரிசுகள் தொடர்பான வழக்கில், தனது தாய்வழி தாத்தாவின் சொத்தில் பங்கு கோரிய வழக்கில் வந்தது. அவர்களின் கூற்றை ஆண் குடும்ப உறுப்பினர்கள் எதிர்த்தனர், அவர்கள் பழங்குடி பாரம்பரியம் பெண்களை வாரிசுரிமையிலிருந்து தடுக்கிறது என்று வாதிட்டனர். மூன்று கீழ் நீதிமன்றங்கள், விசாரணை நீதிமன்றம், முதல் மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம், பெண் வாரிசுரிமையை அனுமதிக்கும் வழக்கத்தை நிறுவத் தவறியதாகக் கூறி, கோரிக்கையை நிராகரித்தது.


விசாரணை நீதிமன்றம் (appellate court), முதல் மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகிய மூன்று கீழ் நீதிமன்றங்கள் ST பெண்ணின் கோரிக்கையை நிராகரித்தன. பெண்கள் வாரிசுரிமைப் பெற அனுமதிக்கும் எந்த வழக்கத்தையும் அவர் நிரூபிக்கவில்லை என்று அவர்கள் கூறினர்.


பழக்கவழக்கங்கள் பற்றிய விவாதம் விலக்கு என்ற யோசனையுடன் தொடங்கியது. சொத்துரிமையிலிருந்து மகள்களை விலக்கும் ஒரு வழக்கம் இருப்பதாக அவர்கள் கருதினர். இதன் காரணமாக, மேல்முறையீட்டாளர்-வழக்குதாரர்கள் இது உண்மையல்ல என்று நிரூபிப்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும், மற்றொரு சாத்தியம் இருந்தது. விலக்கு என்று கருதுவதற்குப் பதிலாக, அவர்கள் சேர்ப்பதை ஊகித்திருக்கலாம்.


விசாரணைக்கு உட்பட்ட பெண்கள் உட்பட, பரம்பரை உரிமையிலிருந்து விலக்குவது நியாயமற்றது மற்றும் பாரபட்சமானது என்று நீதிமன்ற அமர்வு அறிவித்தது. வாரிசுரிமை தகராறுகளில் பழங்குடி குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு சம உரிமை உண்டு என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. இந்து வாரிசுரிமைச் சட்டம் (HSA) பட்டியல் பழங்குடியினருக்கு (STs) பொருந்தாது என்றாலும், அது தானாகவே பழங்குடிப் பெண்களுக்கு வாரிசுரிமை மறுக்கப்படுவதை அர்த்தப்படுத்துவதில்லை என்று அது தெளிவுபடுத்தியது. மூதாதையர் சொத்துரிமையில் அவர்களின் உரிமையைக் கட்டுப்படுத்தும் ஏதேனும் வழக்கம் இருந்தால் அதை நிரூபிப்பது பொறுப்பாகும் என்றும் நீதிமன்றம் மேலும் கூறியது.


நீதிமன்றம் இதை "ஆணாதிக்க முன்கணிப்பு" (patriarchal predisposition) என்று அழைத்தது. இந்த யோசனை இந்து சட்டத்திலிருந்து வந்திருக்கலாம் என்று அது கூறியது. ஆனால், இந்து சட்டம் பட்டியல் பழங்குடியினருக்கு (STs) பொருந்தாது. இந்த அணுகுமுறை குறைபாடுடையது என்று நீதிமன்றம் கூறியது. இது அரசியலமைப்பு மதிப்புகளை ஆதரிக்கவில்லை. நீதிமன்றங்கள் நீதி, நியாயம் மற்றும் நல்ல மனசாட்சியை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. சட்டங்களைப் போலவே பழக்கவழக்கங்களும் என்றென்றும் மாறாமல் இருக்க முடியாது என்று அது கூறியது. மற்றவர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு மக்கள் பழக்கவழக்கங்களை ஒரு சாக்காகப் பயன்படுத்த முடியாது.


அரசியலமைப்பின் பிரிவு 14 சட்டத்தின் முன் சமத்துவத்தை உறுதி செய்கிறது. இதில் பாலின சமத்துவமும் அடங்கும். ஆண்கள் மட்டுமே தங்கள் மூதாதையர்களிடமிருந்து சொத்துக்களை வாரிசாகப் பெற அனுமதிக்க எந்த தர்க்கரீதியான காரணமும் இல்லை என்று நீதிமன்ற அமர்வு கூறியது. குறிப்பாக, எந்த சட்டமும் பெண்கள் வாரிசாகப் பெறுவதைத் தடை செய்யாதபோது அடங்கும். பாலினத்தின் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டுவதைத் தடுக்கும் பிரிவு 15(1)-ஐயும் அவர்கள் குறிப்பிட்டனர்.


நீதி, நியாயம் மற்றும் பிரிவு 14-ன் விளைவு ஆகியவற்றின் அடிப்படையில், மேல்முறையீட்டாளர்-வழக்குதாரர்கள் (appellant-plaintiffs) சொத்தில் சம பங்கு பெறத் தகுதியானவர்கள் என்று நீதிமன்ற அமர்வு முடிவு செய்தது. அவர்கள் முந்தைய தீர்ப்புகளை ரத்து செய்தனர்.


"மேற்கண்ட விவாதத்தைக் கருத்தில் கொண்டு, நீதி, நியாயம் மற்றும் நல்ல மனசாட்சியின்படி, அரசியலமைப்பின் 14வது பிரிவின் முக்கிய தன்மையின் அடிப்படையில், மேல்முறையீட்டாளர்-வாதிகளுக்கு சொத்தில் சம பங்குக்கு உரிமை உண்டு என்று உறுதியாக நம்புகிறோம்" என்று கூறி நிதிமன்ற அமர்வானது முடித்தது. இந்தத் தீர்ப்பு முந்தைய தீர்ப்புகளை ரத்து செய்தது. 


இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியமானது. பழங்குடி சமூகங்களில் பாலின நீதி குறித்த நடந்து வரும் விவாதத்தை இது மறுபரிசீலனை செய்து வலுப்படுத்துகிறது. இந்த சமூகங்களுக்கு எழுதப்பட்ட தனிப்பட்ட சட்டங்கள் இல்லாததால் இது குறிப்பாக உண்மை. பிரிவு 2(2)-ன் கீழ் உள்ள இந்து வாரிசுரிமைச் சட்டம் (HSA), மத்திய அரசு வேறுவிதமாகக் கூறாவிட்டால், பட்டியலிடப்பட்ட பழங்குடி (ST) உறுப்பினர்களை தெளிவாக விலக்குகிறது. ஆனால் இந்த சட்டத்தின் பற்றாக்குறையின் பாகுபாட்டை நியாயப்படுத்தப் பயன்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் இப்போது தெளிவுபடுத்தியுள்ளது.


வியாழனன்று வழங்கப்பட்ட தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தின் டிசம்பர் 2024 தீர்ப்பில் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பான நிலைப்பாட்டிலிருந்து குறிப்பிடத்தக்க விலகலைக் குறிக்கிறது, அங்கு பழங்குடி பெண்களுக்கு சமமான பரம்பரை உரிமைகளை வழங்குவதற்கு நீதிமன்றம் தவறிவிட்டது. அந்த வழக்கில், பழங்குடி மற்றும் பழங்குடி இல்லாத மகள்களுக்கு இடையே சமத்துவத்தை உறுதி செய்ய, மத்திய அரசு HSA-வை திருத்துவது குறித்து பரிசீலிக்குமாறு நீதிமன்றம் வலியுறுத்தியது, ஆனால் வெளிப்படையான சட்ட உரிமை இல்லாத நிலையில் ஒரு பழங்குடி பெண்ணால் சொத்து பரம்பரையாக பெற முடியும் என்று தீர்க்கமாக தீர்ப்பளிக்கவில்லை.



Original article:

Share:

இந்தியாவுக்கு பசுமைப் புரட்சிக்கு ஈடு செய்யவதற்கான வாய்ப்பு : இதைச் செய்வது இந்தியாவின் நலனுக்கு ஏன் முக்கியம்? -ஹரிஷ் தாமோதரன்

 இந்தியாவின் பசுமைப் புரட்சியைத் தொடங்க உதவிய அமைப்புகள் இப்போது இந்தியாவின் ஆதரவிற்காக எதிர்நோக்குகின்றன. ஏனெனில், USAID கலைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலை இந்தியாவிற்கு நிதியை அதிகரிக்க வாய்ப்பளிக்கிறது. இந்த அமைப்புகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதில் இந்தியாவுக்கு கூடுதல் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவும் இது அனுமதிக்கிறது.


"பசுமைப் புரட்சி" (Green Revolution) என்ற வார்த்தையை முதன்முதலில் வில்லியம் எஸ் கவுட் பயன்படுத்தினார். அவர் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் (United States Agency for International Development (USAID)) நிர்வாகியாக இருந்தார்.


மார்ச் 8, 1968 அன்று, கவுட் ஒரு உரை நிகழ்த்தினார். அதில், உலக உணவுப் பிரச்சினை எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றி அவர் பேசினார். இந்தியா போன்ற நாடுகள் இந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்க்கின்றன என்பதையும் அவர் விளக்கினார். அதிக மகசூல் தரும் கோதுமை வகைகளை நடவு செய்வதன் மூலம் அவர்கள் இதைச் செய்து கொண்டிருந்தனர்.


இந்த வளர்ச்சி ஒரு புதிய புரட்சியைத் தொடங்கும் ஆற்றலைக் கொண்டிருந்தது என்று அவர் கூறினார். இது சோவியத் ஒன்றியங்களைப் போல வன்முறையான சிவப்புப் புரட்சியாக இருக்காது என்றும் அவர், அதை பசுமைப் புரட்சி என்று அழைத்தார்.


அதே USAID ஜூலை 1 முதல் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் மூடப்பட்டது. இந்த நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்தின் பொதுமக்கள் வெளிநாட்டு உதவி மற்றும் மேம்பாட்டு உதவியைக் கையாண்டது. USAID-ன் மூடலால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்று மெக்சிகோவை தளமாகக் கொண்ட சர்வதேச மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்பாட்டு மையம் அல்லது CIMMYT ஆகும்.


CIMMYT பிரபல விவசாய விஞ்ஞானி நார்மன் போர்லாக் உடன் நெருங்கிய தொடர்புடையது. CIMMYT லெர்மா ரோஜோ 64A, சோனோரா 63, சோனோரா 64, மற்றும் மேயோ 64 போன்ற அரை-குட்டை கோதுமை வகைகளை உருவாக்கியது. இந்திய விவசாயிகள் முதன்முதலில் இந்த வகைகளை 1964-65-ல் பயிரிட்டனர். அடுத்தடுத்த ஆண்டுகளில், இந்த வகைகள் பல நாடுகளுக்கு பரவி, கவுட் "பசுமைப் புரட்சி" (Green Revolution) என்று அழைத்ததைத் தொடங்கின.


பனிப்போர் நிறுவனங்கள்


பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI) அரிசிக்கு எப்படி பொருந்துகிறதோ, அதேபோல் CIMMYT கோதுமை பயிரிடும். IRRI 1960-ல் ஃபோர்டு மற்றும் ராக்ஃபெல்லர் அறக்கட்டளைகளால் தொடங்கப்பட்டது.


அமெரிக்கா மென்மையான சக்தியை வளர்ப்பதற்கும், குறிப்பாக பனிப்போரின் போது ஒரு நேர்மறையான உலகளாவிய பிம்பத்தை முன்னிறுத்துவதற்கும் இரண்டும் முக்கியமாக இருந்தன. அந்த நேரத்தில்தான் அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை ஒரு அச்சுறுத்தலாகக் கண்டது. மேலும் வளரும் நாடுகளில் மோசமடைந்து வரும் உணவின் நிலைமை அரசியல் உறுதியற்ற தன்மையையும் இறுதியில் கம்யூனிச கையகப்படுத்தல்களையும் தூண்டக்கூடும் என்று நம்பியது. இந்த நாடுகளில் தானிய உற்பத்தியை அதிகரிப்பது, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாக புவிசார் அரசியல் கட்டாயமாக மாறியது.


போர்லாக் வகைகளைப் பயன்படுத்தி, இந்திய விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு 4 முதல் 4.5 டன் கோதுமையை அறுவடை செய்ய முடியும். பாரம்பரிய உயரமான கோதுமை செடிகள் ஒரு ஹெக்டேருக்கு 1 முதல் 1.5 டன் மட்டுமே விளைச்சலைக் கொடுத்தன. இந்த உயரமான செடிகள் பெரும்பாலும் அவற்றின் தானியத் தலைகள் கனமாக இருக்கும்போது வளைந்து அல்லது விழும் நிலைக்கு வரும்.


IRRI IR 8, IR 36, மற்றும் IR 64 போன்ற அரை-குட்டை அரிசி ரகங்களை உருவாக்கியது. இவை குறைந்த உரத்துடன் நெல் விளைச்சலை 1 முதல் 3 டன் வரை ஹெக்டேருக்கு 4.5 முதல் 5 டன் வரை அதிகரித்தன. அதிக உரத்துடன், மகசூல் ஒரு ஹெக்டேருக்கு 9 முதல் 10 டன் வரை அதிகரித்தது. இந்த வகைகளும் 110 முதல் 130 நாட்களில் வேகமாக முதிர்ச்சியடைந்தன. பாரம்பரிய உயரமான அரிசி விதையிலிருந்து தானியமாக மாற 160 முதல் 180 நாட்கள் ஆனது.


போர்லாக் 1970-ல் நோபல் பரிசை வென்றார். அவர் அமைதிக்காக பரிசைப் பெற்றார்.


இந்தியா எப்படி பலன் அடைந்தது?


பசுமைப் புரட்சி இந்தியாவில் CIMMYT மற்றும் IRRI மூலம் விதைக்கப்பட்டது. 1967-68-ஆம் ஆண்டில் விவசாயத்திற்காக வெளியிடப்பட்ட பிரபலமான கோதுமை வகைகள் கல்யாண் சோனா மற்றும் சோனாலிகா, CIMMYT வழங்கிய மேம்பட்ட இனப்பெருக்கப் பொருட்களிலிருந்து வந்தன.


காலப்போக்கில், புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IARI) VS மாத்தூர் தலைமையிலான இந்திய விஞ்ஞானிகள் தங்கள் சொந்த கோதுமை வகைகளை உருவாக்கினர். குறிப்பிடத்தக்கவை 1982-ல் HD 2285 மற்றும் 1985-ல் HD 2329 போன்றவை ஆகும். இந்த வகைகள் கோதுமை விளைச்சலை ஒரு ஹெக்டேருக்கு 5-6 டன்களாக அதிகரித்தன. பின்னர், HD 2967 உடன் மகசூல் இன்னும் அதிகரித்தது. 2011-ல் IARI விஞ்ஞானிகள் BS மாலிக், ராஜ்பீர் யாதவ் மற்றும் AP சேதி ஆகியோரால் வெளியிடப்பட்ட இந்த வகை, ஒரு ஹெக்டேருக்கு 7 டன்களுக்கு மேல் உற்பத்தி செய்தது.


நெல்லில், ஆந்திரப் பிரதேச வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த V ராமச்சந்திர ராவ் மற்றும் MV ரெட்டி ஆகியோர் ஸ்வர்ணா (MTU 7029) மற்றும் சம்பா மஹ்சூரி (BPT 5204) எனப்படும் முக்கியமான வகைகளை உருவாக்கினர். இவை 1982 மற்றும் 1986-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. IARI-ல் உள்ள EA சித்திக், VP சிங் மற்றும் AK சிங் போன்ற விஞ்ஞானிகளும் சிறந்த அதிக மகசூல் தரும் பாஸ்மதி வகைகளை உருவாக்கினர். இவற்றில் பூசா பாஸ்மதி 1 (1989 இல் வெளியிடப்பட்டது), 1121 (2003-ல்) மற்றும் 1509 (2013-ல்) ஆகியவை அடங்கும்.


2024-25-ஆம் ஆண்டில், இந்தியா 6.1 மில்லியன் டன் பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்தது. ஏற்றுமதிக்கான மதிப்பு $5.94 பில்லியன் (ரூ. 50,311.89 கோடி) ஆகும். இந்த அரிசியில் 90%-க்கும் அதிகமானவை IARI-ஆல் வளர்க்கப்படும் வகைகளிலிருந்து வந்தவை.


இந்தியாவில் பசுமைப் புரட்சி ஏன் வேலை செய்தது? ஆனால், பல வளரும் நாடுகளில், குறிப்பாக ஆப்பிரிக்காவில் ஏன் வெற்றிபெறவில்லை என்று போர்லாக்கிடம் ஒரு முறை கேட்கப்பட்டது. அந்த நாடுகளில் IARI போன்ற நிறுவனங்களோ அல்லது எம்.எஸ். சுவாமிநாதன் போன்ற விஞ்ஞானிகளோ இல்லாததால்தான் என்று அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. பசுமைப் புரட்சிக்கான ஒட்டுமொத்த திட்டம் மற்றும் உத்தியை உருவாக்குவதில் சுவாமிநாதன் முக்கிய பங்கு வகித்தார். வேளாண் அமைச்சர் சி சுப்பிரமணியம் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திராகாந்தி போன்ற பிரதமர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களிடமிருந்து அவருக்கு வலுவான ஆதரவு கிடைத்தது.


IRRI-ன் தலைமை வளர்ப்பாளர் குருதேவ் சிங் குஷ் இந்தியர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவரது IR 36 மற்றும் IR 64 நெல் வகைகள் 1980கள் மற்றும் 1990களில் உலகம் முழுவதும் தலா 10-11 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டன.


சஞ்சய ராஜாராம் 29 வயதாக இருந்தபோது CIMMYT-ன் கோதுமை இனப்பெருக்கத் திட்டத்தை வழிநடத்த போர்லாக் அவர்களால் நியமிக்கப்பட்டார். 1990களில், இந்தியாவில் வெளியிடப்பட்ட முக்கிய கோதுமை வகைகள், PBW 343, WH 542, Raj 3765, மற்றும் PBW 373 அனைத்தும் அவரது தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டன.


இந்தியாவிற்கு அவை இன்னும் ஏன் தேவை?


சிறந்த 10 கோதுமை வகைகளில் ஆறு நேரடியாக CIMMYT-ன் பொருட்களிலிருந்து வருகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த ஆறு வகைகள் 2024-25-ஆம் ஆண்டில் இந்திய விவசாயிகளால் விதைக்கப்பட்ட சுமார் 32 மில்லியன் ஹெக்டேர்களில் 20 மில்லியன் ஹெக்டேர்களுக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளன.


இந்தியாவில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஒரே முக்கியமான கோதுமை வகை HD 2967 ஆகும். இது 2017-18 மற்றும் 2018-19-ஆம் ஆண்டுகளில் அதன் உச்சத்தில் 12-14 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் வளர்க்கப்பட்டது. இருப்பினும், அதன் பிறகு வெளியிடப்பட்ட பெரும்பாலான கோதுமை வகைகள் முக்கியமாக CIMMYT கிருமி பிளாஸ்மத்தை (germplasm) அடிப்படையாகக் கொண்டவை.


CIMMYT மற்றும் IRRI ஆகியவை இந்தியாவிற்கு இன்னும் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா இரண்டு நிறுவனங்களிலும் வலுவான ஆர்வத்தைக் கொண்டுள்ளது. டிரம்பின் கீழ் அமெரிக்கா வெளியுறவுக் கொள்கையில் மிகவும் பரிவர்த்தனை மற்றும் சில நேரங்களில் வலிமையான அணுகுமுறையை எடுத்துள்ளதால், உலகளாவிய இனப்பெருக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அதன் நிதியை அதிகரிக்க இந்தியாவுக்கு ஒரு காரணமும், வாய்ப்பும் உள்ளது. 2024-ம் ஆண்டில், இந்தியா CIMMYT க்கு $0.8 மில்லியனையும் IRRI க்கு $18.3 மில்லியனையும் மட்டுமே வழங்கியது.


"நாங்கள் அதிக நிதி வழங்க வேண்டும். ஆனால் இந்தப் பணம் அடிப்படை மற்றும் உத்தியின் செயல்பாட்டு ஆராய்ச்சிக்குச் செல்ல வேண்டும். இதில் வெப்பம் மற்றும் வறட்சி சகிப்புத்தன்மைக்கான புதிய மரபணு வளங்களைக் கண்டுபிடிப்பதும் அடங்கும். இது சிறந்த நைட்ரஜன் பயன்பாட்டு செயல்திறனுக்கான பண்புகளையும் உள்ளடக்கியது. மரபணு திருத்தம் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துவதும் முக்கியம். ஆராய்ச்சியானது ஒத்துழைப்புடன் செய்யப்பட வேண்டும். இருப்பினும், இது நமது சொந்த தேசிய வேளாண் ஆராய்ச்சி அமைப்புக்கான நிதியைக் குறைக்கக்கூடாது," என்று இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் ராஜேந்திர சிங் பரோடா கூறினார்.



Original article:

Share:

இந்தியாவின் இணையக் குற்றங்கள் : எழுச்சி மற்றும் அதற்கான எதிர்வினை. -ரோஷ்னி யாதவ்

 கம்போடியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தொடர்புடைய இணைய மோசடிகளால் இந்தியர்கள் ஒவ்வொரு மாதமும் ₹1,000 கோடி இழக்கிறார்கள் என்று உள்துறை அமைச்சகத்தின் (MHA) அறிக்கை கூறுகிறது. இணையக் குற்றங்கள் (cybercrimes) இந்தியாவிற்கு எப்படி பல பரிமாண சவாலாக உள்ளது? இணையக் குற்றங்களின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது?


இணையக் குற்றங்களைத் தீர்ப்பதற்கு இந்தியா ஒரு விரிவான சட்ட அமைப்பைக் கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000, ஃபிஷிங் (Phishing), ஸ்மிஷிங் (smishing) மற்றும் விஷிங் (vishing), அபராதம் மற்றும் சிறை தண்டனை தொடர்பான குற்றங்களை உள்ளடக்கியது. 


            ஃபிஷிங் (Phishing), ஸ்மிஷிங் (smishing) மற்றும் விஷிங் (vishing) ஆகியவை தனிநபர்களை ஏமாற்றுவதன் மூலம் அவர்களின் முக்கியமான தகவல்களைத் திருடுவதை நோக்கமாகக் கொண்ட அனைத்து வகையான இணைய தாக்குதல்களாகும் . 


ஃபிஷிங் மோசடி (Phishing) : மின்னஞ்சல்கள் மற்றும் வலைத்தளங்களை நம்பியுள்ளது.


ஸ்மிஷிங் (smishing) : ஏமாற்றுவதற்கு குறுஞ்செய்திகளைப் பயன்படுத்துகிறது.


விஷிங் (vishing) : பாதிக்கப்பட்டவர்களின் இரகசியத் தகவல்களை வெளியிடுவதற்கு, அவர்களை கையாள குரல் அழைப்புகள் அல்லது குரல் அஞ்சல்களைப் பயன்படுத்துகிறது.


பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS))-2023, பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita)-2023, மற்றும் பாரதிய சாக்ஷய ஆதினியம் (Bharatiya Sakshya Adhiniyam)-2023 ஆகியவை மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஆகும். இந்த சட்டங்கள் பிரிட்டிஷ் காலத்தின் பழைய சட்டங்களான, இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Code of Criminal Procedure) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் (Indian Evidence Act) போன்ற சட்டங்களை மாற்றியமைக்கப்பட்டது. புதிய சட்டங்கள் டிஜிட்டல் உலகில் ஏற்படும் மாற்றங்களிலும் கவனம் செலுத்துகின்றன. அவை இணையக் குற்றத்தின் வளர்ந்து வரும் பிரச்சனையை நிவர்த்தி செய்கின்றன.


இந்த மூன்று சட்டங்களும் மின்னணு மூலம், முதல் தகவல் அறிக்கைகளை (FIR) பதிவு செய்ய அனுமதிக்கின்றன என்று ரமீஷ் கைலாசம் விளக்குகிறார். அவை நீதிமன்றத்தில் மின்னணு ஆதாரங்களை (electronic evidence) ஒரு முக்கிய ஆதாரமாகவும் ஆக்குகின்றன. BNSS, 2023-ன் கீழ், குற்றவாளிகளை அடையாளம் காண தரவுகளை சேகரிப்பது அனுமதிக்கப்படுகிறது. சோதனைகள், விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை மின்னணு முறையில் செய்ய முடியும் என்றும் இந்த சட்டம் கூறுகிறது. இதற்காக மின்னணு தொடர்புக்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள், டிஜிட்டல் சான்றுகளைக் கொண்டிருக்கலாம், அவற்றை புலனாய்வுகள், விசாரணைகள் அல்லது சோதனைகளில் பயன்படுத்தலாம்.


பாரதிய சாக்ஷய ஆதினியம்-2023, டிஜிட்டல் காலகட்டத்திற்கேற்ப இது மாறி வருவதாகத் தெரிகிறது. மேலும், இது மின்னணுப் பதிவுகளை ஆவணங்களாகக் கருதுகிறது. இந்திய சாட்சியச் சட்டத்தின் கீழ், மின்னணு பதிவுகள் இரண்டாம் நிலை ஆதாரமாகக் கருதப்பட்டன. ஆனால், இந்த புதிய சட்டத்தில் அவற்றை முதன்மை ஆதாரமாகக் கருதுகிறது. குறைமின்கடத்தி நினைவகம் (semiconductor memory) அல்லது எந்த தகவல் தொடர்பு சாதனங்களிலும் (ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்றவை) சேமிக்கப்பட்ட தகவல்களைச் சேர்க்க இது அத்தகைய பதிவுகளை விரிவுபடுத்துகிறது.


புதிய சட்டங்கள் ஆதாரங்களைச் சேகரித்து வழங்குவதற்கு தொழில்நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்த உதவுகின்றன. இந்தியாவின் சட்ட அமைப்பில் இந்த மாற்றங்கள் விசாரணை மற்றும் நீதிமன்ற செயல்முறைகளை எளிதாக்கும். குற்றப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளுக்கு இது குறிப்பாக உண்மை.


பிற முயற்சிகள்


மாறிவரும் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் இந்திய அரசாங்கத்தை இணையஸ்பேஸில் (cyberspace) செயலில் நடவடிக்கைகளை எடுக்க கட்டாயப்படுத்தியுள்ளன. எனவே, சட்டங்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், அரசாங்கம் பிற நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.


1. இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) : நாட்டில் இணையக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கும், எதிராகப் போராடுவதற்கான ஒட்டுமொத்த பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், 2020 ஜனவரி 10-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.


செப்டம்பர் 2024-ல், உள்துறை அமைச்சர் நான்கு I4C தளங்களைத் திறந்து வைத்தார். இவை, தேசிய இணைய மோசடி தணிப்பு மையம் (National Cybercrime Reporting Portal (NCRP)), ‘சமன்வயா’ தளம் (‘Samanvaya’ platform), இணைய கமாண்டோஸ் திட்டம் (Cyber Commandos program) மற்றும் சந்தேக நபர் பதிவேடு (Suspect Registry) போன்றவை ஆகும்.


மத்திய சந்தேக நபர் பதிவேடு ஒரு முக்கிய தரவுத்தளமாக செயல்படுகிறது. இது நாடு முழுவதிலுமிருந்து சந்தேகத்துக்குரிய இணையக் குற்ற நபர்களின் ஒருங்கிணைந்த தரவைச் சேமிக்கிறது. இந்த சந்தேக நபர் பதிவேட்டை அமைக்கும் பொறுப்பு தேசிய இணைய குற்ற அறிக்கையிடல் தளத்துக்கு (NCRP) உள்ளது.


ஆன்லைன் நிதி மோசடி மற்றும் மோசடிகளைத் தடுக்க CFMC செயல்படுகிறது. பல்வேறு குழுக்களை ஒன்றிணைப்பதன் மூலம் இணைய குற்றங்களைத் தடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த குழுக்களில் முக்கிய வங்கிகள், கட்டணத் திரட்டிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இணைய சேவை வழங்குநர்கள் (Internet Service Providers (ISP)), மத்திய நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் காவல்துறை ஆகியவை அடங்கும். அவை அனைத்தும் ஒரே தளத்தில் ஒத்துழைக்கின்றன.


சமன்வயா தளம் (Samanvaya Platform) கூட்டு இணையக் குற்ற விசாரணை வசதி அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது இணையக் குற்றங்கள் தொடர்பான தரவைச் சேமிக்க ஒரே இடமாக செயல்படுகிறது.


கூட்டு இணையக் குற்ற விசாரணை வசதி அமைப்பு என்றும் அறியப்படும் சமன்வயா தளம், இணையக் குற்றங்கள் தொடர்பான தரவுகளின் ஒரு களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


2. இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) : CERT-In என்பது குற்றப் பாதுகாப்பு தொடர்பாக, ஏதேனும் சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றுவதற்கான இந்தியாவின் தேசிய நிறுவனமாகும். இது தகவல் தொழில்நுட்ப (IT) சட்டம், 2000-ன் பிரிவு 70B-ன் கீழ் நிறுவப்பட்டது. குற்றப் பாதுகாப்பு சம்பவங்களை நிர்வகிப்பதில் CERT-In மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. நாடு முழுவதும் இந்த சம்பவங்களுக்கான பதிலை இது ஒருங்கிணைக்கிறது. இந்தியாவின் சைபர்ஸ்பேஸில் பாதிப்புகளைக் கையாளுகிறது மற்றும் பாதுகாப்பை நிர்வகிக்கிறது.


3. சைபர் ஸ்வச்ச்தா கேந்திரா : சைபர் ஸ்வச்ச்தா கேந்திரா என்பது கணினிகள் மற்றும் சாதனங்களிலிருந்து தீங்கு விளைவிக்கும் போட்நெட் நிரல்களைக் (botnet programs) கண்டறிந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமாகும். இது மோசடி பொருளை பகுப்பாய்வு செய்வதற்கான இலவச கருவிகளை வழங்குகிறது. இந்த முயற்சி அமைப்புகள் மற்றும் சாதனங்களின் பாதுகாப்பை மேம்படுத்த உதவுகிறது.


4. வங்கிகளுக்கான ‘bank.in’ டொமைன் : அதிகரித்து வரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மோசடிகளை எதிர்த்து, இந்த ஆண்டு பிப்ரவரியில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்திய வங்கிகளுக்கான பிரத்யேக இணைய தளமான ‘bank.in’-ஐ அறிமுகம் செய்வதாக அறிவித்தது. இதைச் செயல்படுத்த ஏப்ரல் 22-ம் தேதி, ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்தது. வலைத்தளங்களைக் கண்டறிய ஒரு டொமைன் பெயர் பயன்படுத்தப்படுகிறது. இது உலகளாவிய இணையத்தில் தேசிய அடையாளமாக கருதப்படுகிறது.


உள்நாட்டு வங்கிகளுக்கான இந்த பிரத்யேக இணைய டொமைன் ஆனது இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை குறைக்கும் மற்றும் நாட்டின் டிஜிட்டல் வங்கி மற்றும் கட்டண சேவைகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த உதவும். புதிய டொமைனுக்கு இடம்பெயர்வதால், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் டொமைன் பெயராக ‘.bank.in’ ஐக் கொண்டிருக்கும். தற்போது, வங்கிகள் தங்கள் டொமைன் பெயராக '.com' அல்லது '.co.in' ஐப் பயன்படுத்துகின்றன, இது மிகவும் பொதுவானது. இருப்பினும், வங்கிகளுக்கு அக்டோபர் 31, 2025 வரை ‘.bank.in’ க்கு இடம் பெயர்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்துள்ளது.


5. தேசிய இணையக் குற்ற அறிக்கையிடல் தளம் : இது இந்திய அரசாங்கத்தின் ஒரு முயற்சியாகும். பாதிக்கப்பட்டவர்கள் அல்லது புகார்தாரர்கள் இணையக் குற்ற புகார்களை இணையத்தில் புகாரளிக்க உதவுகிறது. இந்த தளம் அனைத்து வகையான இணையக் குற்ற புகார்களையும் கையாளுகிறது. இதில் ஆன்லைனில் குழந்தையின் ஆபாசம் (Child Pornography (CP)) மற்றும் குழந்தை பாலியல் துஷ்பிரயோகப் பொருள் (Child Sexual Abuse Material (CSAM)) தொடர்பான புகார்கள் அடங்கும். இது கற்பழிப்பு அல்லது கும்பல் கற்பழிப்பு (CP/RGR) உள்ளடக்கம் போன்ற பாலியல் வெளிப்படையான உள்ளடக்கத்தையும் உள்ளடக்கியது. இவை தவிர, மொபைல் குற்றங்கள், இணைய மற்றும் சமூக ஊடக குற்றங்கள், இணைய நிதி மோசடிகள், ரான்சம்வேர், ஹேக்கிங், கிரிப்டோகரன்சி குற்றங்கள் மற்றும் இணைய ஆள் கடத்தல் போன்ற பிற இணைய குற்றங்களையும் இது கையாள்கிறது.


6. குடிமக்கள் நிதி குற்ற மோசடி அறிக்கையிடல் மற்றும் மேலாண்மை அமைப்பு (CFCFRMS) : இந்த அமைப்பு I4C-ல் உருவாக்கப்பட்டது. இது மாநில அல்லது யூனியன் பிரதேச அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகிறது. இது சட்ட அமலாக்க நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி இடைத்தரகர்களை ஒரே தளத்தில் இணைக்கிறது. இது நிதி குற்ற மோசடிகள் குறித்த புகார்களில் விரைவாக செயல்பட அவர்களுக்கு உதவுகிறது. புகார்கள் 1930 என்ற உதவி எண் மூலம் பெறப்படுகின்றன.


7. புதிய e-Zero FIR : I4C என்ற அமைப்பு e-Zero FIR முயற்சியைத் தொடங்கியது. இது இணைய நிதி குற்றங்கள் குறித்த புகார்களை தானாகவே FIRகளாக மாற்றுகிறது. இதற்கான மோசடி தொகை ரூ. 10 லட்சத்திற்கு மேல் இருக்கும்போது இது நிகழ்கிறது. 1930 உதவி எண் அல்லது தேசிய இணைய குற்ற அறிக்கையிடல் போர்டல் (National Cybercrime Reporting Portal (NCRP)) மூலம் புகார்களை அளிக்கலாம்.


8. சஞ்சார் சாத்தி : இது மொபைல் பயனர்களுக்கு உதவுவதிலும், அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் தொலைத்தொடர்புத் துறையின் (DoT) ஒரு முயற்சியாகும். இது பல சேவைகளை வழங்குகிறது. குறிப்பாக, பயனர்கள் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட மொபைல் சாதனங்களைக் கண்டறியலாம். அவர்களின் பெயரில் எத்தனை மொபைல் இணைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் அவர்கள் சரிபார்க்கலாம். மேலும், மொபைல் கைபேசி உண்மையானதா என்பதை பயனர்கள் சரிபார்க்க இந்த போர்டல் அனுமதிக்கிறது. இது இந்திய எண்களுடன் செய்யப்படும் சந்தேகத்திற்கிடமான சர்வதேச அழைப்புகளைப் புகாரளிக்கவும் அனுமதிக்கிறது. கூடுதலாக, பயனர்கள் போர்டல் மூலம் தேவையற்ற அல்லது மோசடி இணைப்புகளையும் புகாரளிக்கலாம்.


9. MuleHunter.AI மாதிரி : டிசம்பர் 6, 2024 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி (RBI), MuleHunter.AI எனப்படும் புதிய AI-இயங்கும் மாதிரியை அறிவித்தது. இந்த மாதிரி டிஜிட்டல் மோசடியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வளர்ந்து வரும் "ஆள்மாறாட்ட பணப் பரிமாற்ற" (mule) வங்கிக் கணக்குகளின் சிக்கலை நிர்வகிக்க வங்கிகளுக்கு உதவுகிறது. இந்த மாதிரியை ரிசர்வ் வங்கி புதுமை மையத்தால் உருவாக்கப்பட்டது.


ஆள்மாறாட்ட பணப் பரிமாற்றக் கணக்குகள் ( mule accounts) என்றால் என்ன?


இந்தக் கணக்குகள் திருடப்பட்ட பணத்தைச் சுமக்கும் கோவேறு கழுதைகளைப் போல செயல்படுகின்றன. சில நேரங்களில், கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகள் இந்த வழியில் பயன்படுத்தப்படுவது தெரியாது. மற்ற நேரங்களில், அவர்கள் தங்கள் அடையாளங்களை சிறிய பணம் வழங்குவதை கொடுக்க ஒப்புக்கொள்கிறார்கள்.


சமீபத்திய ஆண்டுகளில், அரசாங்கம் இணைய பாதுகாப்பிற்கான பட்ஜெட்டை அதிகரித்துள்ளது. ஆனால், சிக்கல்கள் இன்னும் உள்ளன. நிதியை நன்கு பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மேலும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். இவற்றின் பதிலுக்கு அரசாங்கம், தொழில்துறை மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு முக்கியமானது.


தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் இணையப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதும் மிகவும் முக்கியம். இதன் பொருள் வலுவான பாதுகாப்பு அமைப்புகளில் முதலீடு செய்தல், பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த வழக்கமான  முறையில் பயிற்சி அளித்தல் மற்றும் கடுமையான தரவு பாதுகாப்பு விதிகளைப் பயன்படுத்துதல் போன்றவை ஆகும். மேலும், உலகளவில் இணையக் குற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தகவல் மற்றும் சிறந்த முறைகளைப் பகிர்ந்து கொள்ள பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவது முக்கியமாகும்.



Original article:

Share: