வேலைவாய்ப்புகள், உற்பத்தி, வருமானம், செலவு மற்றும் முதலீடு ஆகியவற்றை மிகவும் துல்லியமாகவும் அடிக்கடி கண்காணிக்க அரசாங்கம் புள்ளிவிவர அமைப்புகளை மேம்படுத்தியுள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தை அளவிடுவது எளிதல்ல. வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு நிலைகளில் உருவாகின்றன. மேலும், முறையான மற்றும் முறைசாரா துறைகள் இரண்டும் ஒன்றாக உள்ளன. மக்கள் பல வகையான வேலைகளையும் செய்கிறார்கள். இது அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் சரியாகப் பதிவு செய்வதை கடினமாக்குகிறது. மற்றொரு சிரமம் தகவல்களை அடிக்கடி புதுப்பிப்பதும், காலப்போக்கில் ஒப்பிடக்கூடிய தரவைச் சேகரிப்பதும் ஆகும். இந்தியாவில், முக்கியமான ஆய்வுகள் அடிக்கடி செய்யப்படாததால் இது கடினமாக உள்ளது.
தேசிய மற்றும் துணை தேசிய மட்டங்களில் நம்பகமான மற்றும் நிலையான நடவடிக்கைகள், பொருளாதாரம் எவ்வளவு வளர்ந்து வருகிறது மற்றும் மாறுகிறது என்பதை மட்டுமல்ல, அந்த வளர்ச்சி எங்கே, யாருக்காக நிகழ்கிறது என்பதையும் புரிந்துகொள்வது முக்கியம். இது சம்பந்தமாக, புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) பல புதிய முயற்சிகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை வேலைவாய்ப்பு, வெளியீடு, வருமானம், நுகர்வு மற்றும் முதலீடு போன்ற முக்கிய பொருளாதார மாறிகள் குறித்த உயர் அதிர்வெண், இடம்சார்ந்த பிரிக்கப்பட்ட தகவல்களை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அளவிடப்படாதவற்றை அளவிடுதல்
2021-22ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) உற்பத்தி, வர்த்தகம் மற்றும் பிற சேவைகளின் (கட்டுமானம் =
தவிர) முறைசாரா துறையில் வருடாந்திர பொருளாதார நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தொடங்கியது. இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்புக்கு முன்பு, முறைசாரா துறை தொடர்பான கணக்கெடுப்புகள் ஆண்டுக்கு ஒரு முறை நடந்தன. இடைப்பட்ட காலத்தில், புள்ளிவிவர வல்லுநர்கள் பகுப்பாய்விற்காக கணிப்புகளை நம்பியிருக்க வேண்டியிருந்தது.
தற்போதைய, அமைப்பில் மற்றொரு பெரிய இடைவெளி முறையான சேவைத் துறையின் வருடாந்திர அளவீட்டைப் பற்றியது. பொருளாதாரத்தின் இந்தக் கூறுகளைப் பிடிக்கும், ஒருங்கிணைந்த சேவைகள் துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பை (Annual Survey of Incorporated Services Sector Enterprises (ASISSE)) தொடங்குவதாக அமைச்சகம் அறிவித்துள்ளது. முறையான உற்பத்தித் துறையை உள்ளடக்கிய வருடாந்திர தொழில்துறை கணக்கெடுப்பு (Annual Survey of Industries (ASI)) போல் இல்லாமல், சேவைகளுக்கான வருடாந்திர கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு, வருடாந்திர தொழில்துறை கணக்கெடுப்பு மற்றும் ஒருங்கிணைந்த சேவைகள் துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு ஆகியவை இணைந்து, அனைத்துத் துறைகள் மற்றும் பிராந்தியங்களிலும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்த நம்பகமான தரவை வழங்கும்.
உயர் அதிர்வெண் குறிகாட்டிகள் (High-frequency indicators)
2017ஆம் ஆண்டில், நாட்டின் தொழிலாளர் சக்தி தொடர்பான வருடாந்திர மதிப்பீடுகளை வழங்கும் நோக்கத்துடன், இந்தியா காலமுறை தொழிலாளர் நலன் கணக்கெடுப்பை (Periodic Labour Force Survey (PLFS)) தொடங்கியது. இந்த கணக்கெடுப்பு தொடங்கப்படுவதற்கு முன்பு, தேசிய சேவைத் திட்டம் (National Service Scheme (NSS) வேலைவாய்ப்பு-வேலையின்மை கணக்கெடுப்புகள் மூலம் வேலைவாய்ப்பு தரவு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே சேகரிக்கப்பட்டது. காலமுறை தொழிலாளர் நலன் கணக்கெடுப்பு ஆண்டு மதிப்பீடுகளை வழங்குவதன் மூலம் இதை மாற்றியது. ஜனவரி 2025-ல், PLFS தரவு இப்போது தேசிய அளவில் மாதந்தோறும் கிடைக்கும் என்றும், காலாண்டு மதிப்பீடுகள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கும் என்றும் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) அறிவித்தது (முன்னர், நகர்ப்புறங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன).
கூடுதலாக, மாவட்டங்களை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் காலமுறை தொழிலாளர் நலன் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) மாதிரி மேம்படுத்தப்பட்டுள்ளது. விரிவான வேலைவாய்ப்பு தரவு மாவட்டங்கள் முழுவதும் உற்பத்தித்திறன் மற்றும் வருமானத்தைக் கண்காணிக்க உதவும். அதேபோல், வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) பழைய நுகர்வு கணக்கெடுப்புகளை மாற்றியுள்ளது. இப்போது அது அடிக்கடி நடத்தப்படும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தித் தொடருக்கான புதிய அடிப்படை ஆண்டு
மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் "அடிப்படை ஆண்டை" ஒரு குறிப்புப் புள்ளியாகப் பயன்படுத்துகின்றன. மேலும், இந்தியா தற்போது 2011-12 நிதியாண்டை அதன் அடிப்படை ஆண்டாகப் பயன்படுத்துகிறது. இந்த அடிப்படை ஆண்டு காலாவதியானது. எனவே, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) அதைப் புதுப்பித்து வருகிறது. புதுப்பிப்புடன், மதிப்பீடுகளை மிகவும் துல்லியமாக்க சரக்கு மற்றும் சேவை வரித் தரவுத்தளம் மற்றும் சமீபத்திய ஆய்வுகள் போன்ற புதிய தரவு மூலங்களைப் பயன்படுத்தி மொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை மேம்படுத்த புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் நிறுவனங்களுக்கு, அவற்றின் மொத்த உற்பத்தி பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொடர்புடைய துறைக்கும் ஒதுக்கப்படும். சமீபத்திய வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பின் (HCES) தரவைப் பயன்படுத்தி பணவீக்கத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் பொருட்களின் பட்டியல் புதுப்பிக்கப்படும். புதிய தொடர் அடுத்த ஆண்டுக்குள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கம் பற்றிய நமது புரிதலிலும், தேசிய மற்றும் துணை தேசிய மட்டங்களில் பணவீக்கத்தால் சரிசெய்யப்பட்ட உற்பத்தியிலும் தாக்கங்களை ஏற்படுத்தும்.
தேசியத்திலிருந்து துணை தேசியம் வரை
தேசிய அளவில் பொருளாதாரத்தின் அளவீட்டை மேம்படுத்துவதோடு, இந்த நடவடிக்கைகள் துணை தேசிய மட்டங்களில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான மதிப்பீடுகளை மிகவும் துல்லியமாக மாற்றும். அக்டோபர் 2025-ல், ஒரு பொது நிகழ்வில் பேசிய அமைச்சகத்தின் செயலாளர், இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) மற்றும் PLFS-ன் சமீபத்திய நெறிப்படுத்தப்பட்ட பதிப்புகளைப் பயன்படுத்தி, மாவட்ட உள்நாட்டு உற்பத்தியின் (District Domestic Product (DDP)) மதிப்பீடுகளை உருவாக்க மாநில அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.
இந்தச் சூழலில் ASUSE மற்றும் PLFS தரவைப் பயன்படுத்துவது ஒவ்வொரு மாவட்டத்திலும் வணிக நடவடிக்கைகள் மற்றும் வேலைகளை சிறப்பாகக் கண்காணிக்கும். இது கொள்கை வகுப்பாளர்களுக்கு உள்ளூர் பொருளாதாரங்களைப் பற்றிய தெளிவான விளக்கத்தை வழங்கும். ஒரு திடமான மாவட்ட உள்நாட்டு உற்பத்தி (DDP) அமைப்பு மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் இடையிலான ஒப்பீடுகளை செயல்படுத்தும். இது வளர்ச்சி மற்றும் பொருளாதார மாற்றங்களின் உண்மையான இயக்கிகளைக் கண்டறிய உதவுகிறது.
சீர்திருத்தங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன
புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), தேசிய வீட்டு வருமான கணக்கெடுப்பு (National Household Income Survey (NHIS)) என்ற புதிய வருடாந்திர கணக்கெடுப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இது வெற்றிகரமாக தொடங்கப்பட்டால், இது மிகவும் துல்லியமான வீட்டு வருமான புள்ளிவிவரங்களை வழங்கும். இது பிராந்தியங்கள் மற்றும் வயது அல்லது தொழில் போன்ற மக்கள்தொகை குழுக்களுக்கு (demographic groups) இடையே வருமானத்தை ஒப்பிட்டுப் பார்க்க அனுமதிக்கும்.
இதுவரை, இந்தியா தனது கவனிக்கப்பட்ட செலவினங்கள் மூலம் வீட்டு வருமானத்தைப் மதிப்பிடுவதற்கு NSS நுகர்வு கணக்கெடுப்பை மட்டுமே நம்பியிருந்தது. ஆனால், இந்த கணக்கெடுப்பு பொருளாதார விளைவுகளின் முக்கிய குறிகாட்டியின் நேரடி அளவீட்டை வழங்கும்.
பொருளாதாரம் எவ்வாறு அளவிடப்படுகிறது என்பதில் அமைச்சகம் முக்கியமான மாற்றங்களைச் செய்து வருகிறது. இருப்பினும், இந்த மாற்றங்கள் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருந்தால் மட்டுமே சிறப்பாக செயல்படும். தரவுத் தொகுப்புகளின் பொது வெளியீடு, தெளிவான வழிமுறை ஆவணங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் திறந்த ஆலோசனைகள் ஆகியவை உருவாக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் நம்பகமானவை மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும்.
புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் அடிக்கடி ஏற்பாடு செய்யப்படும் தரவு பயனர் மாநாடுகள், அரசாங்க புள்ளிவிவர வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் அமைச்சகத்தின் முயற்சிகளைப் பற்றி விவாதிக்க ஒரு வெளிப்படையான தளத்தை வழங்கியுள்ளன. நம்பகத்தன்மையை வளர்ப்பதற்கும், விரிவாக்கப்பட்ட தரவு உள்கட்டமைப்பு அதன் பயனர்களுக்கு பொறுப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கும் இத்தகைய மன்றங்கள் மிக முக்கியமானவை.
கடந்த காலங்களில், 2017-18 நுகர்வு செலவு கணக்கெடுப்பு போன்ற முக்கிய கணக்கெடுப்புகளை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ரத்து செய்தபோது அல்லது தாமதப்படுத்தியபோது கவலைகள் எழுப்பப்பட்டன. இது அமைப்பின் மீதான நம்பிக்கையை பலவீனப்படுத்துகிறது. அமைச்சகத்தின் புதிய கொள்கை செயல்படுத்தப்பட வேண்டுமானால், இதுபோன்ற பின்னடைவுகளைத் தவிர்ப்பது அவசியம்.
புள்ளியியல் நிபுணர் PC மஹலனோபிஸின் தாயகமான இந்தியா, உயர்தர புள்ளிவிவர அமைப்பை உருவாக்கி இயக்கும் திறன்களைக் கொண்டுள்ளது. அமைச்சகத்தின் சமீபத்திய முயற்சிகள் சரியான திசையில் நகர்கின்றன. இது போன்ற பெரிய திட்டங்கள் நீண்ட காலத்திற்கு தொடரும் என்று நம்பப்படுகிறது.
எழுத்தாளர்கள் பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள்.
Original link:
Towards measuring the economy more accurately.