குவிந்துகிடக்கும் திட்டங்கள்

 ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.


செய்தித்தாளில் சமீபத்தில் வெளியான ஒரு செய்தியின்படி, ஒன்றிய அரசு நிதியுதவி பெறும் திட்டங்களின் (Centrally Sponsored Schemes (CSS)) எண்ணிக்கையைக் குறைத்து, அவற்றைச் சீரமைக்க விரும்புகிறது. இந்தத் திட்டங்களுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கூட்டாக நிதியளிக்கின்றன. இந்த நோக்கம் இந்த மார்ச் மாதம் முடிவடையும் 50-க்கும் மேற்பட்ட திட்டங்களின் ஐந்தாண்டு காலத்துடன் ஒத்துப்போகிறது. ஒன்றிய அரசு நிதியுதவி பெறும் திட்டங்கள் (CSS) இருபதாண்டுகளுக்கும் மேலாக பொறுப்புணர்வுகளைத் தவிர்க்கும் மற்றும் மோசமான விளைவுகளை உருவாக்கும் சிக்கலான ஏற்பாடுகளாகக் கருதப்படுகின்றன. வரவிருக்கும் வரவு செலவு திட்டமானது வருவாய் கட்டுப்பாடு மற்றும் நெகிழ்வுத்தன்மையற்ற செலவினங்களை எதிர்கொள்வதால், மொத்த வரவு செலவு திட்ட அளவில் 8 சதவீதத்திற்கும் அதிகமாக அல்லது சுமார் ₹4 லட்சம் கோடியைக் கொண்ட ஒன்றிய அரசு நிதியுதவி பெறும் திட்டங்களை (CSS) பகுத்தறிவுபடுத்தும் நடவடிக்கைகள், ஒதுக்கீட்டின் செயல்திறனை மேம்படுத்துவதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.


இந்த பாதையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மூலதனச் செலவினங்களுக்கான நிதியை விடுவிக்க உதவியதாக ஒன்றிய அரசு கடந்த மே மாதம் கூறியது. இருப்பினும், பல தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) அறிக்கைகள் இந்தத் திட்டங்கள் பலவற்றில் திறமையின்மைகள் இருப்பதைக் காட்டுகின்றன. காலப்போக்கில், வெவ்வேறு குழுக்கள் மாற்றங்களைப் பரிந்துரைத்துள்ளன. ஒன்று முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் பி.கே. சதுர்வேதி தலைமையிலானது, அதன் அறிக்கை 2011-ல் வெளியானது. மற்றொன்று சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்ட முதலமைச்சர்கள் குழுவாகும். 15வது நிதிக் குழுவும் அவர்களின் பரிந்துரைகளை எதிரொலித்துள்ளது.  ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நிதிக்கும் குறைவான திட்டங்கள் மூடப்பட வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர். முதலமைச்சர்கள் குழுவின் பல பரிந்துரைகள் பின்னர் கொள்கையில் இடம் பெற்றுள்ளன. இருப்பினும், ஒன்றிய அரசு நிதியுதவி பெறும் திட்டங்களின் (CSS) எண்ணிக்கையை 30-ஆகக் குறைப்பது அவர்களின் இலக்கு இன்னும் எட்டப்படாமலேயே உள்ளது. அவ்வப்போது 'முதன்மைத் திட்டங்கள்' அறிவிக்கப்படுகின்றன. இந்த திட்டங்கள் 'முக்கிய' மற்றும் 'விருப்பத்தேர்வு' எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஒரு துறைக்கு 'ஒரே குடைத் திட்டமாக' (umbrella scheme) மட்டும் இருக்க வேண்டும் என்ற அக்குழுவின் முன்மொழிவு இன்னும் முழுமையடையாத நிலையிலேயே உள்ளது என்று கூறலாம்.


2016-ஆம் ஆண்டில், மாநில சுயாட்சியை அதிகரிக்க ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது ஒன்றிய ஒதுக்கீட்டில் 25 சதவீதம் ஒரு 'நெகிழ்வானதாக' நிதி ஒதுக்கப்பட்டது. இமாநிலங்கள் இந்த நிதியைப் பயன்படுத்தி, ஒன்றிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, திட்டத்தையோ அல்லது அதன் மாற்று வடிவத்தையோ தங்களின் சொந்த வழியில் வடிவமைத்து செயல்படுத்தலாம். இந்த முயற்சி வெற்றி பெற்றதா என்பதை மதிப்பிடுவது அவசியமாகும். இதற்கிடையில், தேசிய சுகாதார இயக்கம் (National Health Mission) மற்றும் பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (Pradhan Mantri Kaushal Vikas Yojana) பற்றிய சிஏஜி அறிக்கைகள் பயன்படுத்தப்படாத நிதி ஒதுக்கீடுகள், ஒன்றிய மற்றும் மாநில பங்களிப்புகளுக்கு இடையிலான பொருந்தாத தன்மை மற்றும் மோசமான விளைவுகளை சுட்டிக்காட்டுகின்றன. ஒருங்கிணைப்பு இல்லாமை, பெரும்பாலும் ஒரு அரசியல் பிரச்சினையாக மாறுகிறது. இந்தச் சூழ்நிலையில், மேலும் பல ஒன்றிய அரசின் திட்டங்கள், குறிப்பாக மாநில மற்றும் பொதுப் பட்டியலில் உள்ளவை, தெளிவான பொறுப்புணர்வுடன், முழுமையாக ஒன்றிய அல்லது முழுமையாக மாநிலத் திட்டங்களாகவே செயல்படுத்தப்படுவது நல்லது.


வெவ்வேறு மாநிலங்களின் வளர்ச்சிப் பற்றாக்குறைகளைச் சமாளிக்க அதன் இயல்பான அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட திட்டங்களைச் செயல்படுத்த ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிப்பதற்காக அரசியலமைப்பின் 282-வது பிரிவின் கீழ் ஒன்றிய அரசு நிதியுதவி பெறும் திட்டங்கள் (CSS) உருவாக்கப்பட்டன. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில், வெவ்வேறு நிர்வாகத் திறன்களைக் கொண்ட மாநிலங்களில் அடிப்படை சேவைகளை வழங்குவதை சமன் செய்வதற்கு ஒரு வழக்கு நிச்சயமாக இருந்தது. ஆனால் நிலைமைகள் மாறிவிட்டன. மேலும், ஒன்றிய அரசு நிதியுதவி பெறும் திட்டங்கள் (CSS) அதே நம்பிக்கையைத் தூண்டுவதில்லை. ஒன்றிய அரசு நிதியுதவி பெறும் திட்டங்களின் (CSS) வடிவமைப்பு மற்றும் நோக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.


Original Article : Schemes galore.

Share: