தலைமைத்துவத்தின் மரபு : டாடா குடும்பத்தின் கதை -நிகிதா மோஹ்தா

 டாடா குழுமம் தலைமுறை தலைமுறையாக வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் தொழில்துறை மற்றும் சமூக நிலப்பரப்பை வடிவமைத்துள்ளது. டாடா குழுமம், ஜாம்செட்ஜி டாடா முன்னோடியாக  தொடங்கிய ஆலை முதல் ஜேஆர்டி டாடா விமானப் போக்குவரத்து வரை பரந்த மைல்கற்களை எட்டியுள்ளது. ரத்தன் டாடா உலகளாவிய கையகப்படுத்துதலில் கவனம் செலுத்தினார். டாடா குழுமம் மக்கள் சேவைக்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் முன்னேற்றமும் அடைந்துள்ளது.


அக்டோபர் 8-ம் தேதி, நாஸ் பர்வீன் விமானத்தில் புது டெல்லியிலிருந்து தனது சொந்த ஊரான ஜாம்ஷெட்பூருக்கு பயணம் மேற்கொண்டார். தற்போது, குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைவதற்காக அவர் மகிழ்ச்சியாக இருந்தார். இருப்பினும், ​​​​அவருடைய மகிழ்ச்சியில் துக்கமான செய்தி மும்பையிலிருந்து அவருக்கு எட்டியது. டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி இவருக்கு வந்தது. பின்னர் ஒரு நாள் கழித்து, அவரது மறைந்த செய்தி சமூகத்தில் சோகமான நிகழ்வுகளை கொண்டு வந்தது. ஒரு காலத்தில் பிரகாசமாக இருந்த நகரம் துக்கத்தில் மங்கியது. துர்கா பூஜைக்கான பந்தல்களில் ரத்தன் டாடாவின் உருவப்படங்கள் அன்புடன் காட்சிப்படுத்தப்பட்டன.


பர்வீன் மற்றும் ஜாம்ஷெட்பூரில் இருந்த பிற குடியிருப்பாளர்களுக்கு, ரத்தன் டாடாவின் மறைவு ஆழ்ந்த இழப்பாகும். “எனது தாத்தா, சஃபி முகமது, இங்குள்ள டாடா நிறுவனத்திற்காக 48 ஆண்டுகளை அர்ப்பணித்துள்ளார். மேலும், என் தந்தையும் அவரது கொள்கைகளைப் பின்பற்றினார். நான், வளர்ந்து வரும் போது ​​டாடா குழுமங்களின் கதைகள் முன்னோர்களின் கதைகள் போல் கேட்டிருக்கிறேன். அவர்களின் குடும்பங்கள் சாதரண குடும்பங்கள் போல் இருந்தது  இல்லை.





நிறுவப்பட்ட தருணங்கள்


டாடா குடும்பத்தின் அடித்தளம் குஜராத்தின் நவ்சாரி என்ற பகுதியில் உள்ளன. நுசர்வாஞ்சி டாடா 1822-ஆம் ஆண்டில் அங்குள்ள ஒரு பார்சி (Parsi) குடும்பத்தில் பிறந்தார். அவர் இளம் வயதிலேயே ஜீவன்பாயை மணந்தார். மார்ச் 3, 1839 அன்று  ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாடா என்ற மகனை பெற்றனர்.


தனது குடும்பத்திற்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நுசர்வாஞ்சி, கிராம வாழ்க்கையின் சுகபோகங்களை விட்டுவிட்டு, தன் மனைவி மற்றும் மகனுடன் மும்பை சென்றார். பின்னர் 20 வயதில், அவர் தனது மகன் ஜாம்செட்ஜிக்கு நல்ல கல்வியைப் பெற வேண்டும் என்ற நம்பிக்கையில், பருத்தி ஏற்றுமதி தொழிலைத் தொடங்கினார்.


1835-ஆம் ஆண்டில், கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங்க் பிரபு ஆங்கிலக் கல்விச் சட்டத்தை இயற்றினார். இந்த கல்விச் சட்டம் இந்தியாவில் கல்வி மற்றும் இலக்கியத்தை மேம்படுத்துவதற்காக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலிருந்து நிதியை பெற்றதுடன், உயர்கல்விக்கு ஆங்கிலத்தை முதன்மை மொழியாக மாற்றியது. நுசர்வான்ஜி, தனது தீவிர தொலைநோக்கு பார்வையால், இந்த மொழிக்கான மாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தார். 


1856-ஆம் ஆண்டில், மும்பையில் புதிதாக நிறுவப்பட்ட எல்பின்ஸ்டோன் கல்லூரிக்கு (Elphinstone College) விண்ணப்பிக்க ஜம்செட்ஜியை ஊக்குவித்தார். தனது படிப்பை முடித்த பிறகு, ஜாம்செட்ஜி இளம் ஹிராபாய் தாபுவை மணந்து தந்தையானார். இவர்கள் ஒரு மகனுக்கு டோராப் என்று பெயரிட்டனர்.


ஜம்செட்ஜி டாடா : தலைமுறைகளுக்கான எதிர்காலத்தை உருவாக்குதல்


1859-ஆம் ஆண்டில், ஜாம்செட்ஜி அவரது மனைவி ஹீராபாய் மற்றும் அவர்களது மகன் டோராப் ஆகியோருடன் ஹாங்காங்கின் பிரிட்டிஷ் காலனிக்கு கப்பலில் பயணம் சென்றனர். இவர்களுடன், அவரது தந்தை நுசர்வான்ஜி மற்றும் இரண்டு வணிகர்களும் அவருக்கு ஆதரவாக இருந்தனர். இருவரும் இணைந்து ஜாம்செட்ஜி மற்றும் அர்தேஷிர் என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். இந்த நிறுவனம் பருத்தி மற்றும் அபின் வர்த்தகத்தில் கவனம் செலுத்தியது. அவரது ”டாடாக்கள்: ஒரு குடும்பம் ஒரு வணிகத்தையும் தேசத்தையும் எவ்வாறு உருவாக்கியது” (The Tatas: How A Family Built A Business And A Nation), என்ற புத்தகத்தில், பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான கிரிஷ் குபேர் அந்த நேரத்தில் அபின் வர்த்தகம் சர்ச்சைக்குரியதாக பார்க்கப்படவில்லை என்று விளக்குகிறார். இது மருத்துவப் பயன்களைக் கொண்டிருந்தது மற்றும் கிரிமியன் போரின் (Crimean War) போது (1853-56) பரவலாகப் பயன்படுத்தப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.


நுசர்வான்ஜியின் மைத்துனரான தாதாபோய் டாடாவும் ஹாங்காங்கில் அபின் வியாபாரியாக இருந்தார். இதனால், வெளிநாடுகளில் வலுவான டாடா நிறுவனத்தை உருவாக்க அவர் உதவியாக இருந்தார். அவர்கள் பருத்தியை ஐரோப்பாவிற்கும், அபின் சீனாவிற்கும் ஏற்றுமதி செய்தனர். அதே நேரத்தில், அவர்கள் மற்ற பொருட்களுடன் தங்கம் மற்றும் ஜவுளிகளை இறக்குமதி செய்தனர். இதனால், வணிகம் வெற்றிகரமாக இருந்ததால், ஜம்செட்ஜி தலைமையில் ஷாங்காயில் இரண்டாவது அலுவலகம் திறக்க வழிவகுத்தது.


அமெரிக்க உள்நாட்டுப் போர் (1861-65) டாடாக்களுக்கு எதிர்பாராத வாய்ப்பை உருவாக்கியது. ஏனெனில், இங்கிலாந்துக்கு அமெரிக்க பருத்தி விநியோகத்தை போர் சீர்குலைத்தது. இது பருத்திக்கு வழக்கமான கட்டணத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக டாடாக்கள் வசூலிக்க அனுமதித்தது. இந்த தருணத்தைப் பயன்படுத்தி, ஜம்செட்ஜி அலுவலகத்தை நிறுவுவதற்கு லண்டன் சென்றார். இருப்பினும், போருக்குப் பிறகு, இங்கிலாந்தின் முக்கிய பருத்தி விநியோகர்கள் என்ற நிலையை அமெரிக்கா மீண்டும் பெற்றது. இந்த மாற்றம் ஜாம்செட்ஜியை நெருக்கடிக்குள் தள்ளியது. கடனை அடைக்க, நுசர்வாஞ்சி அவர்களின் வீட்டை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை மகனுக்குக் கொடுத்தார். டாடா பெயருடன் தொடர்புடைய அறக்கட்டளை இந்தச் செயலுடன் தொடங்கியிருக்கலாம் என்று குபேர் குறிப்பிடுகிறார்.


இங்கிலாந்தில் இருந்தபோது, ​​லிவர்பூல் மற்றும் லங்காஷயர் வழியாக ஜம்செட்ஜி பயணம் செய்தபோது உற்பத்தி பற்றி நிறைய கற்றுக்கொண்டார். இதனால், அவர் ஒரு வியாபாரி என்பதை உணர்ந்தார். எனவே, அவர் உற்பத்தியில் கவனம் செலுத்த முடிவு செய்தார். 1869-ஆம் ஆண்டில், அவர் மும்பையில் ஒரு பழைய எண்ணெய் ஆலையை வாங்கி அதை ஒரு பருத்தி ஆலையாக மாற்றினார். ஜனவரி 1, 1877-ஆம் ஆண்டில், அவர் நாக்பூரில் எம்ப்ரஸ் மில்லை (Empress Mills) விக்டோரியா மகாராணியின் நினைவாக நிறுவினார். இதில், தொழிலாளர்களின் ஓய்வூதியத்திற்கான வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியிட காலத்தில் விபத்துகளுக்கான காப்பீடு போன்ற முயற்சிகளையும் அவர் அறிமுகப்படுத்தினார்.


மும்பைக்கு தென்கிழக்கே உள்ள மலைப்பகுதியான பஞ்ச்கனி பகுதியில் ஜம்செட்ஜி நிலத்தை கையகப்படுத்தினார். அங்கு பார்சிகளுக்காக ஒரு மருத்துவமனையை நிறுவினார். 1896-ஆம் ஆண்டில், டாடா பட்டுப் பண்ணையை Tata Silk Farm) உருவாக்க பெங்களூரு மற்றும் மைசூரில் நிலம் வாங்கினார். இந்தப் பண்ணை உள்ளூர் விவசாயிகளை பட்டுப்புழு வளர்ப்பில் ஆய்வு செய்ய ஊக்குவித்தது. வெள்ளையர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஹோட்டலில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்ற தகவல் நிலவுகிறது.  இதற்குப் பதிலாக, அவர் 1903-ஆம் ஆண்டில் தாஜ்மஹால் அரண்மனையை நிறுவினார். இன்று அது மும்பையின் அடையாளமாக விளங்குகிறது.


குறிப்பாக, இளம் இந்தியர்களுக்கு பயிற்சி அளிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 1892-ஆம் ஆண்டில், அவர் வெளிநாடுகளில் உயர்கல்வி பெற தகுதியான மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கத் தொடங்கினார். அவர் வைஸ்ராய் கர்சனையும் சந்தித்து, அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இந்திய மையத்திற்காக (Indian centre of excellence in science and research) வாதிட்டார். அவர் தனது உயிலில், அவர் தனது வாழ்நாளில் நிறுவனம் கட்டப்படவில்லை என்றால், அதை உருவாக்க தனது தனிப்பட்ட செல்வத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 


அவர் 1904-ஆம் ஆண்டில் இறந்தாலும், அவரது கனவு பின்னர் நனவாகியது. ஆர்.எம்.லாலா, ”செல்வத்தின் உருவாக்கம்: டாடாக்கள் 19 முதல் 21-ம் நூற்றாண்டு வரை” (The Creation of Wealth: The Tatas to the 19th from 21st Century), என்ற புத்தகத்தில் மைசூர் மகாராஜா பெங்களூரில் 371 ஏக்கர் நிலத்தை வழங்கியதாக குறிப்பிடுகிறார். இந்த நிலம் 1909-ஆம் ஆண்டில் இந்திய அறிவியல் கழகத்தை ( Indian Institute of Science (IISc)) நிறுவ பயன்படுத்தப்பட்டது.


ஜாம்செட்ஜியின் மூத்த மகன் டோராப்ஜி டாடா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு 1879-ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் திரும்பி தனது சகோதரர் ரத்தன்ஜியுடன் சேர்ந்தார்.  20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சுதேசி இயக்கம் வேகம் பெற்றது. இந்த இயக்கம் பிரிட்டிஷ் பொருட்களைப் புறக்கணிக்கவும், இந்திய உற்பத்தியை ஆதரிக்கவும் வாதிட்டது. டோராப்ஜி 1907-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனத்திற்கு (Tata Iron and Steel Company (TISCO)) 8,000 முதலீட்டாளர்களை வெற்றிகரமாகத் திரட்டினார். 1914-ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போர் தொடங்கியபோது, ​​பிரிட்டன் தனது காலனிகளில் இருந்து மனிதவளத்தையும் பொருட்களையும் நாடியது. டிஸ்கோ (Tata Iron and Steel Company (TISCO)) நிறுவனம் இந்த தேவையை பூர்த்தி செய்ய 1,500 மைல்கள்  இரும்பு பாதைகளை தயாரித்தது.


1917-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி கேரளாவில் TISCO க்கு கூடுதலாக டாடா ஆயில் நிறுவனம் (Tata Oil Mills Company(TOMCO)) டாடாக்கள் நிறுவினர். TOMCO முதலில் Cocogem எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட, வாசனை நீக்கப்பட்ட தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்தது. இது விரைவில் தரத்திற்கான நற்பெயரைப் பெற்றது. டாடா ஆயில் நிறுவனம்  பின்னர் ஹமாம் மற்றும் மோதி குளியல் சோப்புகளை அறிமுகப்படுத்தியது. இவை இரண்டும் பெருமை வாய்ந்த சுதேசி தயாரிப்புகளாக அமைந்தன. இருப்பினும், முதல் உலகப் போர் 1918-ஆம் ஆண்டில் முடிவடைந்த பிறகு, ஒரு நெருக்கடி ஏற்பட்டது.  இதைத் தீர்க்க, டோராப்ஜி தனது தனிப்பட்ட சொத்துக்களில் சிலவற்றை விற்க வேண்டியிருந்தது. அவரது மனைவி மெஹர்பாய் நிறுவனத்தை காப்பாற்ற தனது நகைகளை அடகு வைக்க வேண்டியிருந்தது.


டோராப்ஜி மற்றும் மெஹர்பாய் இருவரும் சுதந்திர இயக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள். டோராப்ஜி சுதேசி இயக்கத்தில் கவனம் செலுத்தினார். மெஹர்பாய் பெண்களின் உரிமைகளுக்காக பாடுபட்டார். அவர் 1929-ஆம் ஆண்டு சர்தா சட்டம் (Sarda Act) என்றும் அழைக்கப்படும் குழந்தை திருமண தடைச் சட்டத்திற்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தார். ஒலிம்பிக்கில் இந்திய பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக டோராப்ஜி டாடா இயக்கத்தை வழிநடத்தியதாக பலருக்குத் தெரியாது என்று குபேர் குறிப்பிடுகிறார். மெஹர்பாய் விளையாட்டுகளை, குறிப்பாக டென்னிஸை விரும்பினார். அவர் மேற்கிந்திய நாடுகளில் டென்னிஸ் போட்டியில் ‘டிரிபிள் கிரவுன்’ (Triple Crown) உட்பட 60 பரிசுகளை வென்றார்.


இந்தியாவில் கல்வி மற்றும் சமூகத்தை மேம்படுத்த டோராப் மற்றும் ரத்தன்ஜி டாடா ஆகிய சகோதரர்கள் முக்கியமான அறக்கட்டளைகளை உருவாக்கினர். சர் ரத்தன் டாடா டிரஸ்ட் (1919) மற்றும் சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் (1932) ஆகியவை இதில் அடங்கும். டோராப்ஜி தனது மனைவியின் நினைவாக லேடி மெஹர்பாய் டி. டாடா கல்வி அறக்கட்டளையைத் (Lady Meherbai D. Tata Education Trust) தொடங்கினார். இந்த அறக்கட்டளை இது வெளிநாட்டில் குடிமைப்பணி தேர்விற்கு படிக்கும் பெண் பட்டதாரிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.


டோராப்ஜிக்கு இந்தியாவில் ஒரு சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம் கட்ட வேண்டும் என்ற கனவு இருந்தது.  இருப்பினும், அவர் ஜூன் 3, 1932-ஆம் ஆண்டில் காலமானார். அவரைக் கௌரவிக்கும் வகையில், 1932 முதல் 1938 ஆண்டு வரை டாடா குழுமத்தை வழிநடத்திய அவரது உறவினரும் வாரிசுமான நவ்ரோஜி சக்லத்வாலா டாடா மெமோரியல் மருத்துவமனையை நிறுவுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பரேல், பம்பாயில், இது பிப்ரவரி 28, 1941-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.


நவ்ரோஜி ஜாம்செட்ஜியின் சகோதரி விர்பாயின் மகன். அவர் ஒரு தீவிர விளையாட்டு ஆர்வலராக இருந்தார் மற்றும் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். பீகாரின் முங்கரில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, காயமடைந்தவர்களுக்கு உதவ நவ்ரோஜி ஒரு தற்காலிக மருத்துவமனையைக் கட்டினார். 


சக்லத்வாலாவின் வழிகாட்டுதலுடன், சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளையின் நிதி மூலம் 1936-ஆம் ஆண்டில் சர் டோராப்ஜி டாடா கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் (Graduate School of Social Work) உருவாக்கப்பட்டது. இந்த பள்ளி பின்னர் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் (Tata Institute of Social Sciences) ஆனது.  நவ்ரோஜி 1938-ஆம் ஆண்டில்  மாரடைப்பால் காலமானார். அந்த நேரத்தில், 34 வயதாக இருந்த ஜேஆர்டி டாடா, டாடா பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.


ஜே.ஆர்.டி.டாடா பிரான்சில் ஜாம்செட்ஜி டாடாவின் உறவினரான ரத்தன்ஜி தாதாபோய் டாடா மற்றும் தாயார் சுசான் பிரையர் ஆகியோரால் வளர்க்கப்பட்டார். அவர் கேம்பிரிட்ஜில் பொறியியல் படிக்க விரும்பினாலும், அவரது தந்தை மும்பைக்கு திரும்பவும், பின்னர் ஜாம்ஷெட்பூருக்கு குடும்ப வணிகத்தில் சேரவும் வலியுறுத்தினார். 1926-ஆம் ஆண்டில்  ரத்தன்ஜியின் மரணத்திற்குப் பிறகு, ஜே.ஆர்.டி. விமானப் போக்குவரத்து மீதான அவரது ஆர்வம் அவரை டாடா ஏவியேஷன் சர்வீசஸ் நிறுவனத்தை நிறுவ வழிவகுத்தது. பின்னர், டாடா ஏர்லைன்ஸ் என மறுபெயரிடப்பட்டது.


ஜே.ஆர்.டி டாடாவின் பயணத்தைப் புரிந்து கொள்ள, அவருடைய உறவினரான நேவல் டாடாவையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நேவல் ரத்தன் ஜம்செட்ஜி டாடாவின் மகன். அவரை ரத்தன்ஜியின் விதவை பெண் நவாஜ்பாய் தத்தெடுத்தார். நேவல் ஜூன் 1, 1930-ஆம் ஆண்டில்  டாடா குழுமத்தில் சேர்ந்தார். 1938-ஆம் ஆண்டில்  சக்லத்வாலா இறந்த பிறகு, ஜே.ஆர்.டி.யை தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தார்.


ஜேஆர்டியின் தலைமையின் கீழ், டாடா குழுமம் பெரிய மாற்றங்களைக் கண்டது. மூத்த தலைவர்களுக்கான சிறப்பு சலுகைகளை நீக்கினார். அனைவரும் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்தார். ஜேஆர்டி குழுமத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு தலைவரை நியமித்தது. இது 1939-ஆம் ஆண்டில் குஜராத்தின் மிதாபூரில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை நிறுவ வழிவகுத்தது.


ஒரு இளம் பார்சி சிறுவனும், டாடாவின் ஆலோசகருமான ஹோமி பாபா, தொழில்நுட்ப ஆராய்ச்சியை ஆதரிக்க நிதி கேட்டு ஜேஆர்டி டாடாவுக்கு கடிதம் எழுதியபோது ஒரு முக்கிய தருணம் ஏற்பட்டது. ஜேஆர்டி ஒப்புக்கொண்டு, டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (Tata Institute of Fundamental Research (TIFR)) அமைக்க உதவியது.  இது ஜூன் 1, 1945-ஆம் ஆண்டில்   அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.


"எனது தந்தை ஹோமி பாபா பொறுப்பில் இருந்த  டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில்  பணிபுரிந்தார். மேலும், ஜேஆர்டி அடிக்கடி வருகை தந்தார். இருவருமே நல்ல தலைமையின் எடுத்துக்காட்டுகள் என்று என்னிடம் கூறுவார். மும்பையைச் சேர்ந்த ஆலோசகர் ரோஷ்னி மாஸ்டர் என்பவர், "அவர் அடிக்கடி அவர்களை உதாரணமாகப் பயன்படுத்துவார் மற்றும் நல்ல தலைமை என்பது எல்லோரையும், குறிப்பாக துப்புரவு செய்பவர்களைக் கூட கேட்பது என்று அவர் என்னிடம் கூறுவார்."


1945-ஆம் ஆண்டில், ஜேஆர்டி ஜம்ஷெட்பூரில் ஒரு சிறிய தொழிற்சாலையை ரயில்வேயில் இருந்து வாங்கியதுடன், அதை டாடா இன்ஜினியரிங் மற்றும் லோகோமோட்டிவ் கம்பெனி லிமிடெட் (Tata Engineering and Locomotive Company Limited (TELCO)) ஆக மாற்றினார். பின்னர், டாடா மோட்டார்ஸ் என்று அழைக்கப்பட்டது. இந்த நிறுவனம் விரைவில் நீராவி இயந்திரங்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது.


1948-ஆம் ஆண்டில், ஜேஆர்டி ஏர் இந்தியா இன்டர்நேஷனல், இந்தியாவின் முதல் சர்வதேச விமான நிறுவனத்தை அறிமுகப்படுத்தியது. 1952-ஆம் ஆண்டில், நேவல் டாடாவின் இரண்டாவது மனைவியான சிமோனுடன் இணைந்து லாக்மே (Lakmé) என்ற அழகு சாதனப் பொருட்கள் நிறுவனத்தை நிறுவினார்.


இந்திய அரசாங்கம் தேசியமயமாக்கலில் கவனம் செலுத்தியதால், ஜே.ஆர்.டி பெரும் சவால்களை எதிர்கொண்டது. தேசியமயமாக்கல் தொழில்களை அரசியலாக்கியது மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கிறது என்று அவர் வாதிட்டார். நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் (New India Assurance Company) மற்றும் ஏர் இந்தியா இன்டர்நேஷனல் (Air India International) உட்பட பல வெற்றிகரமான டாடா முயற்சிகளை அரசாங்கம் தேசியமயமாக்கியது. இருந்தபோதிலும், 1956-ஆம் ஆண்டில், டாடா குழுமம் 46 நாடுகளுக்கு விரிவடைந்தது.


1990-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், ஜே.ஆர்.டி.யின் உடல்நிலை மோசமடைந்தது. ஆனால், அவர் உறுதியாக இருந்தார். மார்ச் 3, 1991 அன்று, அவர் ஜாம்ஷெட்பூரின் நிறுவன தினத்தை கொண்டாடினார். அவருக்குப் பின் யார் என்ற கேள்வி முக்கியமானது. தெல்மா விகாஜி என்பவரை திருமணம் செய்திருந்தாலும், அவர்களுக்கு குழந்தை இல்லை. மார்ச் 25 அன்று நடந்த ஒரு முக்கிய கூட்டத்தில், நேவல் டாடாவின் மகன் ரத்தனை தனது வாரிசாக பரிந்துரைத்தார்.


முதலில் ஜாம்ஷெட்பூரிலிருந்து வந்த பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஆகாஷ் முகோபாத்யாய். அவர் முதலில் ஜாம்ஷெட்பூரை சேர்ந்தவர். அவர் மார்ச் 3 அன்று இந்நிறுவனத்திற்கு திரும்புகிறார். "அன்றைய தினம், ஜே.ஆர்.டி. டாடாவின் பிறந்தநாளைக் கொண்டாட டாடா சமூகம் ஒன்று கூடுகிறது. ஊழியர்கள் அணிவகுத்துச் சென்று, ரத்தன் டாடா அன்புடன் கைகுலுக்கி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர் உண்மையிலேயே டாடாக்களின் உணர்வைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் தெளிவான சரியான வாரிசு ஆவார்.


ரத்தனின் தந்தை 1955-ஆம் ஆண்டில் சிமோனை மறுமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நோயல் என்ற மகன் இருந்தான். ரத்தன் கார்னெல் பல்கலைக்கழகத்தில் (Cornell University) கட்டிடக்கலையில் பட்டம் பெற்றார். 1962-ஆம் ஆண்டில், அவர் இந்தியா திரும்பி ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு அவர் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் பணியாற்றினார்.


1991-ஆம் ஆண்டில், ரத்தன் டாடா அவர்கள் டாடா சன்ஸ் தலைவராக ஆனார். இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் போது டாடா குழுமத்தின் பெரிய மறுசீரமைப்பை அவர் தொடங்கினார். 2000-ஆம் ஆண்டு காலகட்டத்தில், குழு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது. இந்த வளர்ச்சியில் டெட்லி (Tetley), ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) மற்றும் ப்ரன்னர் மோண்ட் (Brunner Mond) போன்ற குறிப்பிடத்தக்க கையகப்படுத்தல்களும் அடங்கும்.


2008-ஆம் ஆண்டில், ரத்தன் டாடா நானோ என்ற புதிய சிறிய கார் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 2012 டிசம்பரில், டாடா குழுமத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இருப்பினும், அவர் எமரிட்டஸ் தலைவராக (Chairman Emeritus) நியமிக்கப்பட்டார்.


ரத்தனின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் அக்டோபர் 9 அன்று டாடா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டார். நோயலுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்கள், நெவில் என்ற மகன் மற்றும் லியா மற்றும் மாயா என்ற இரண்டு மகள்கள். அவர்கள் டாடா குழுமத்தின் பல்வேறு கிளைகளை நிர்வகிக்கின்றனர்.


டாடா குடும்பத்தைப் பற்றிய இந்த பார்வை வெறும் குடும்பத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பேரரசை வெளிப்படுத்துகிறது. ஒரு டாடா ஊழியர், "என்னிடம் டாடா குடும்பப்பெயர் இல்லாமல் இருக்கலாம். ஆனால்,  நான் அந்த குடும்பத்தின் ஒரு பகுதியாக உணர்கிறேன்" என்றார்.


ஹைதராபாத்தில் உள்ள முன்னணி பயனர் அனுபவ வடிவமைப்பாளரான (User Experience Designer) சத்யகி போஸ் என்பவரின் குடும்பம் மூன்று தலைமுறைகளாக டாடா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறது. “டாடா குழுமத்தில் பணிபுரியும் ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறையுடன் இந்த அமைப்பில் சேருவதை உறுதிசெய்கிறது. டாடா நிறுவனர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் காட்டிய அன்பையும் அக்கறையையும் திரும்பக் கொடுப்பதற்காக அவர்கள் இதைச் செய்கிறார்கள்  என குறிப்பிடுகிறார்.




Original article:

Share:

இந்தியாவில் ஒரு புத்தொழில் (start-up) புரட்சி -மன்பிரீத் சிங் பாதல்

 புதிய கண்டுபிடிப்புகளுக்கான அரசின் நடவடிக்கைகள், தொழில்முனைவோரை முதல் நிலை (Tier-1) நகரங்களையும் தாண்டி எடுத்துச் சென்றுள்ளது. 


இந்தியா இப்போது தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவுக்கான மையமாக உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா புதுமையான நாடுகளின் குழுவில் இருந்தது. அதன் பின்னர் நாட்டில் கண்டுபிடிப்புகள் அதிகரித்துவிட்டது. இந்தியா இப்போது உலகளவில் படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது.


இந்தியாவின்  புத்தொழில், சுற்றுச்சூழல் அமைப்பு வளர்ந்து வருகிறது. நாடு இப்போது உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் மையமாக உள்ளது. தொழில்நுட்ப புத்தொழில்களின் எண்ணிக்கை 2023-ல் 68,000ல் இருந்து 2030-க்குள் 180,000 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்தியாவில் 111 யூனிகார்ன் புத்தொழில் நிறுவனங்கள் $350 பில்லியனுக்கும் அதிகமாக இருந்தன. 


பொருளாதாரம் பல துறைகளில் மதிப்புமிக்க நிறுவனங்களை உதவ முடியும் என்பதை இது காட்டுகிறது. அடுக்கு-2 மட்டுமல்ல, அடுக்கு-3 நகரங்களில் புத்தொழில் நிறுவனங்களின் செயல்பாடு அதிகரித்து வருகிறது. தொழில்முனைவு என்பது அதிகமான மக்களுக்கு அணுகக்கூடியதாகி வருவதை இது காட்டுகிறது.


ஐந்து முக்கிய முயற்சிகள் மூலம் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா தனது நிலையை மேம்படுத்தியுள்ளது. இந்தியா ஒரு வலுவான கண்டுபிடிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பில் அறிவு வளங்கள், செயலில் உள்ள தொடக்கங்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் ஆராய்ச்சி குழுக்களுக்கு இடையேயான குழுப்பணி ஆகியவை அடங்கும். 


அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை புதுமைகளை உருவாக்குதல் மற்றும் பயன்படுத்துவதற்கான தேசிய முயற்சி (National Initiative for Developing and Harnessing Innovations (NIDHI)) திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டம் இந்தியா முழுவதும் பல தொழில்நுட்ப வணிக மையங்களை உருவாக்கியுள்ளது. இந்த மையங்கள் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு புதிய யோசனைகளை தயாரிப்புகளாக மாற்ற உதவுகின்றன.


இரண்டாவதாக, புதுமைகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்ப துறை (biotechnology) மற்றும் அடல் புத்தாக்கத் திட்டம் (Atal Innovation Mission) ஆகியவற்றின் பணிகள் இதில் அடங்கும். 


மூன்றாவதாக, மின்சார வாகனங்கள், உயிரி தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் மாற்று எரிசக்தி போன்ற முக்கியமான பகுதிகளை மேம்படுத்த கொள்கை சார்ந்த கண்டுபிடிப்புகளை NITI ஆயோக் முன்னெடுத்து வருகிறது. 


நான்காவதாக, இந்தியா தனது தொழில்களை பல்வகைப்படுத்துதல், காப்புரிமைகளை உருவாக்குதல் மற்றும் கலாச்சார மற்றும் ஆக்கப்பூர்வமான சேவைகளை ஏற்றுமதி செய்வதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இறுதியாக, குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், இந்தியா மிக உயர்ந்த கண்டுபிடிப்புகளைக் கொண்டதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


சில உதாரணங்களைப் பார்ப்போம். நிதி ஆயோக் ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுகிறது. பொது-தனியார் கூட்டாண்மை மூலம் ரயில் நிலையங்களை மேம்படுத்தி வருகின்றனர். இந்திய மருந்து நிறுவனங்கள் இப்போது உலக நிறுவனங்களுக்காக மருந்துகளை தயாரிக்கின்றன. அவர்கள் இந்த நிறுவனங்களுக்கு மருத்துவ பரிசோதனைகளையும் நடத்துகிறார்கள்.


அடிமட்ட அளவில் புதுமையை ஊக்குவிப்பதன் மூலம் முந்தைய திட்டங்களால் சாதிக்க முடியாததை அடல் புத்தாக்கத் திட்டம் சாதித்தது. இது 650-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 4,880 அடல் பழுதுநீக்க ஆய்வகங்களை (Atal Tinkering Labs) அமைத்து, இரண்டு கோடிக்கும் அதிகமான மாணவர்களுக்கு புதுமையான கருவிகளை வழங்கியது. அடல் புத்தாக்க வளர் மையங்களை (Atal Incubation Centres) உருவாக்க அடல் புத்தாக்கத் திட்டம் 102 பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களையும் தேர்ந்தெடுத்தது. 


இவற்றில் 50-க்கும் மேற்பட்ட மையங்கள் இப்போது 900-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களை வளர்த்து வருகின்றன. கூடுதலாக, ஐந்து யூனியன் அமைச்சகங்களுடன் 24 அடல் நியூ இந்தியா சவால்களை அடல் புத்தாக்கத் திட்டம் எதிர்கொண்டு, 950 விண்ணப்பங்களைப் பெற்றது. இவர்களில் 52 பேர் மானியம் மற்றும் ஆதரவிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இந்தியா இப்போது உலகின் முன்னணி குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரமாக உள்ளது. இந்த வருமானக் குழுவில் உள்ள 37 நாடுகளில் இது முதலிடத்திலும், மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் உள்ள 10 நாடுகளில் முதலிடத்திலும் உள்ளது. 2015-ல் 81-வது இடத்தில் இருந்த இந்தியா, இன்று 40வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ICT சேவைகள் ஏற்றுமதியில் ஐந்தாவது இடத்திலும், பெறப்பட்ட மூலதனத்தில் ஆறாவது இடத்திலும், அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகளில் பதினொன்றாவது இடத்திலும், உலகளாவிய பெருநிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீட்டாளர்களில் பதின் மூன்றாவது இடத்திலும் உள்ளது.


இந்த முயற்சிகள் புதுமையான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இந்த மாற்றம் இப்போது பள்ளிகளில் காணப்படுகிறது. இந்த இயக்கம் முக்கிய நகரங்களை தாண்டி, இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது மற்றும் பொருளாதாரத்தில்  முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. 

 



Original article:

Share:

நீதி தேவதையின் கதை : கிரேக்க மூலத்திலிருந்து இன்று வரை - அஜய் சிஹ்னா கற்பூரம்

 நீதிபதிகளின் நூலகத்தில் உள்ள புதிய ஆறு அடி உயர சிலையாகவும், சேலை அணிந்ததாகவும், கண்கள் கட்டப்படாமல், தராசுகளை வைத்திருக்கிறது மற்றும் வாளுக்கு பதிலாக இந்திய அரசியலமைப்பின் நகலை வைத்திருக்கிறார். 


உச்ச நீதிமன்றம் "நீதி தேவதையின்" (Lady Justice) புதிய சிலையை திறந்து வைக்கப்பட்டது. இந்த புதிய சிலை பாரம்பரிய பிரதிநிதித்துவத்தை மறுவடிவமைக்கிறது. பொதுவாக, நீதி தேவதை சிலை தராசுகளின் தொகுப்பையும், மற்றொரு கையில் வாளையும் வைத்திருக்கும் ஒரு கண்ணைக் கட்டிய நிலையில் இருக்கும். இது உலகெங்கிலும் உள்ள சட்ட நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


நீதிபதிகள், நூலகத்தில் புதிய ஆறு அடி உயரமுள்ள சிலையானது, சேலை அணிந்து, கண்ணை கட்டப்படாமல், தராசு வைத்திருக்கும் இந்த நீதி தேவதை சிலையில் வாளுக்கு பதிலாக இந்திய அரசியலமைப்பின் நகல் புத்தகம் வைத்திருப்பதைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


பாரம்பரிய நீதி தேவதையின் சிலையில் கண்மூடிய நிலையில், பொதுவாக பாரபட்சமற்ற நீதியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. மாறாக, புதிய சிலை தெளிவான பார்வையைக் கொண்டுள்ளது. இந்த மாற்றம், “சட்டம் குருடானது அல்ல; அது அனைவரையும் சமமாகப் பார்க்கிறது” என்று சிலையை நிறுவிய இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் கூறுகிறார்.


டெல்லியில் உள்ள கலைக் கல்லூரியின் சுவரோவியரும், ஆசிரியருமான வினோத் கோஸ்வாமி இந்த புதிய நீதி தேவதையின் வடிவமைப்பை உருவாக்கியுள்ளார். இது புதிய குற்றவியல் விதிமுறைகள் (new criminal codes) உட்பட சமீபத்திய சட்ட சீர்திருத்தங்களை பிரதிபலிக்கிறது மற்றும் இந்தியாவின் சட்ட கட்டமைப்பை "காலனித்துவ நீக்கத்தை" நோக்கமாகக் கொண்டுள்ளது.


மறுவடிவமைப்பினால் மாறும் அர்த்தம் 


”நீதி தேவதை”  உருவகத்தை கிரேக்க மற்றும் ரோமானிய புராணங்களில் காணலாம்.  கிமு 700-களில் வாழ்ந்த கிரேக்க கவிஞர் ஹெசியோடின் கற்பனை படைப்புகளின்படி, கயா (Gaea) மற்றும் யுரேனஸுக்கு (Uranus) பிறந்த 12 டைட்டன்களில் ஒருவரான தெமிஸ் (Themis) நீதி, ஞானம் மற்றும் நல்ல ஆலோசனையின் தெய்வம் என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது பெரும்பாலும் ஒரு கையில் தராசுகளையும், மற்றொரு கையில் வாளையும் வைத்திருக்கும் நீதி தேவதையாக தெமிஸ் (Themis) சித்தரிக்கப்படுகிறது. 


முதல் ரோமானியப் பேரரசர் அகஸ்டஸ் கிமு 27 முதல் கிபி 14 வரை ஆட்சி செய்தவராவர். அவர் நீதி வழிபாட்டை ஜஸ்டிடியா (அல்லது இயுஸ்டிடியா) என்ற நீதியின் தெய்வமாக அறிமுகப்படுத்தினார். இங்கு, தெமிஸ் போல், ஜஸ்டிடியா கண்களை கட்டப்படவில்லை.


ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த சட்ட அறிஞர் டெஸ்மண்ட் மாண்டர்சன் 2020-ல் ஒரு கட்டுரையை எழுதினார். இந்த ஆய்வறிக்கையில், "கண்களை மூடிக்கொண்டு நீதியைக் காட்டும் முதல் படம் மர ஒவியத்திலிருந்து வருகிறது" என்று அவர் குறிப்பிட்டார். பதினைந்தாம் நூற்றாண்டின் வழக்கறிஞர் செபாஸ்டியன் பிராண்டின் வஞ்சப்புகழ்ச்சியாக நையாண்டி கவிதைகளின் தொகுப்பான "முட்டாள்களின் கப்பல்களில்" (Ship of Fools) இந்த படம் வெளியிடப்பட்டது.


           1494-ம் ஆண்டிலிருந்து இந்த படம், மாண்டர்சன் குறிப்பிட்டது போல், கண்களை மூடிக்கொண்டு நடத்தும் நீதியின் கொண்டாட்டம் அல்ல. மாறாக, அது ஒரு விமர்சனமாகவே பார்க்கப்படுகிறது. மர ஒவியம் பெரும்பாலும் ஜெர்மன் மறுமலர்ச்சி கலைஞரான ஆல்பிரெக்ட் டியூரர் முக்கிய காரணமாக இருந்தார். இதற்கு "கண்மூடித்தனமான நீதி" (The Fool Blindfolding Justice) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில், ஒரு 'முட்டாள்' நீதி தேவதை போல தோற்றமளிக்கும் ஒரு பெண்ணின் கண்களைக் கட்டுகிறார். இந்த பெண் ஒரு கையில் வாளையும், மறு கையில் தராசையும் பிடித்திருக்கிறார்.


17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்த படம் அதன் நையாண்டிக்கான அர்த்தத்தை இழந்துவிட்டது என்று மாண்டர்சன் விளக்கினார். அது, பின்னர் நீதியின் அடித்தளமாகப் பார்க்கப்பட்டது.


இந்தியாவில் நீதி தேவதை 


இந்தியாவின் நீதித்துறை பொதுவான சட்ட அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த முறை பிரிட்டிஷ் ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்ட அமைப்புடன், ஆங்கிலேயர்கள் நீதி தேவதையின் உருவப்படத்தையும் அறிமுகப்படுத்தினர். இந்த அடையாளம் இன்னும் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் காணப்படுகிறது.


1872-ம் ஆண்டில் முதன்முதலில் கட்டப்பட்ட கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதி தேவதையின் உருவங்கள் கட்டிடத்தின் தூண்களில் செதுக்கப்பட்டன. சில சமயங்களில் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டதையும், மேலும், சில சந்தர்பங்களில் கண்கள் திறந்திருப்பதையும் சித்தரிப்புகள் காட்டுகின்றன. மும்பை உயர் நீதிமன்றத்தின் கட்டிடம் ஒன்றில் கண்கள் கட்டப்படாத நிலையில் பெண் நீதி தேவதை சிலை உள்ளது. 


உச்ச நீதிமன்றத்தின் வளாகத்தில், உள்ள புதிய சிலை மற்றொரு கலைப்பொருளைப் போலவே உள்ளது. நீதிபதிகளின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஒரு சுவரோவியம் ஒரு சக்கரத்தின் இருபுறமும் மகாத்மா காந்தி மற்றும் நீதி தேவதையின் சிலை ஆகியவற்றைக் காட்டுகிறது. இந்த சித்தரிப்பில் நீதி தேவதை ஒரு சேலை அணிந்து, ஒரு வாளுக்கு பதிலாக தராசு மற்றும் ஒரு புத்தகத்தை வைத்திருக்கிறார். 



வங்காளதேசத்தில் போராட்டம் 


டிசம்பர் 2016-ல், வங்காளதேசத்தின் உச்ச நீதிமன்றத்தின் வளாகத்தில், தெமிஸ் பெண் தெய்வத்தின் பெரிய சிலை நிறுவப்பட்டது. இந்த சிலைக்கு புடவை மற்றும் கண்கள் மூடப்பட்டிருந்தது. மேலும், தராசையும், வாளையும் வைத்திருந்தது.


இந்த சிலை முஸ்லீம் பழமைவாதிகளிடமிருந்து எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது. மேலும், அவர்கள் சிலை வழிபாடு என்று கூறியதை எதிர்த்தனர். மே 2017-ல், இந்த சிலை உச்ச நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களின் பார்வையில் இருந்து விலக்கி வேறொரு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் 2024-ல், ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்த சிலையானது இடிக்கப்பட்டது.




Original article:

Share:

இஸ்ரேல் vs ஐக்கிய நாடுகள் சபை : டெல் அவிவின் நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவின் பதில்

 இந்தியாவின் நிலைப்பாடு, உலக அரங்கில் ஐ.நா.வின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ள வேண்டும். 


ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸை ஆதரித்தும், அவரை நாட்டிலிருந்து தடை செய்யும் இஸ்ரேலின் முடிவை விமர்சித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் கடிதத்துடன் இந்தியா தன்னை இணைத்துக் கொள்ளாதது புதிராகவும் கவலைக்குரியதாகவும் உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு சிலி நாடு பகிர்ந்து கொண்ட கடிதத்தில், ஐ.நா மற்றும் அதன் தலைவர்கள் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியது. இதில், இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் பாரபட்சமாக இருப்பதாக குற்றம் சாட்டியதோடு, குட்டெரெஸ் "இஸ்ரேலிய மண்ணில் காலடி எடுத்து வைக்க தகுதியற்றவர்" என்று கூறியதை அடுத்து இந்த விவாதம் வந்தது. இந்த மோதல் ஒரு வருடத்திற்கும் மேலாக கவனித்து வரும் நிலையில், டெல் அவிவ் அக்டோபர் 7, 2023 ஹமாஸ் பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து, இஸ்ரேல் காசா மீது கடுமையான குண்டுவீச்சு மூலம் பழிவாங்க முயன்றது. 


இதில், லெபனான் மற்றும் ஏமனில் உள்ள முக்கியமான இலக்குகளைத் தாக்கியதுடன், அதன் எல்லைகளைத் தாண்டியும் தாக்குதல்களை நடத்தியது. இதில், டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது குண்டுவீச்சு, தெஹ்ரானில் ஹமாஸ் தலைவரைக் கொன்றது, லெபனானில் ஹெஸ்புல்லாவை குறிவைக்க பேஜர் குண்டுகளைப் பயன்படுத்துவது போன்ற இரகசிய நடவடிக்கைகளை இஸ்ரேல் நடத்தியது. எவ்வாறாயினும், கடந்த ஆண்டில் ஐ.நா அமைப்பின் மீதான அதன் தாக்குதல்தான் தனித்து நிற்கிறது. 


இஸ்ரேல் வேண்டுமென்றே இந்தியா ஆதரிக்கும் அமைப்பான, ஐக்கிய நாடுகள் அவையின் நிவாரண முகமையை (United Nations Relief and Works Agency(UNRWA)) குறிவைத்தது. ஐ.நா. பொதுச் சபையில், இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு இந்த அமைப்பை "யூத எதிர்ப்புக்கான" (anti-semitic) சதுப்பு நிலம் (swamp) என்று குறிப்பிட்டார். மிக சமீபத்தில், லெபனானில் உள்ள ஐ.நா அமைதி காக்கும் படை மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல்களை நடத்தின. இதில், 50 நாடுகளின் 10,000 பேர் கொண்ட வலுவான படையின் ஒரு பகுதியாக 903 இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 


அக்டோபர் 1 அன்று இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதற்குப் பிறகு, இஸ்ரேலின் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எனபவர், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தெளிவாகக் கண்டிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இதன் விளைவாக, 104 நாடுகள், ஆப்பிரிக்க ஒன்றியத்துடன் இணைந்து ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டன. மற்றொரு கடிதத்தில் 34 ஐ.நா அமைதி காக்கும் நாடுகள் கையெழுத்திட்டன. அதில் இந்தியா முதலில் கையெழுத்திடவில்லை, ஆனால் பின்னர் ஆதரித்தது. உலகளாவிய தெற்கிலும், ஐரோப்பாவிலும் உள்ள அமைதியின்மை, நாடுகளுக்கிடையேயான மோதல் பிரச்சினைகளைத் தீர்க்க உலக அமைப்பின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் கவலையை அளிக்கிறது.


மோதல்களின் நிலைமை மற்றும் இந்திய வீரர்களுக்கு ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு, ஐ.நா.வுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளை விமர்சிப்பதில் இருந்து இந்தியா விலகி இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. சமீபத்தில் வியாழன் அன்று வெளிவிவகாரத் துறை அமைச்சர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியபோதும் கூட, இஸ்ரேலின் நடவடிக்கைகளை விமர்சிப்பதைத் தவிர்த்தது. 


ஐ.நா.வில் இந்தியா ஒரு முன்னணி உறுப்பினராக உள்ளதுடன், ஆரம்பத்தில் இருந்தே அதற்குப் பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. ஐ.நா  உலக நாடுகளுக்கு முக்கியமான சேவைகளையும் மற்றும் தளங்களையும் வழங்குகிறது. அனைத்து உறுப்பு நாடுகளும் இதன் மூலம் பயனடைகின்றன. ஐ.நா. பொதுச்செயலாளர் அலுவலகத்திற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் மதிக்க வேண்டும் என்று ஐ.நா சாசனத்தின் பிரிவு 100 (2) கூறுகிறது. 


இஸ்ரேலுடன் இந்தியா வலுவான உறவைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, அரசாங்கத்தில் உள்ள சிலர் மௌனம் காக்கும் அவர்களின் முடிவை ‘உண்மையான அரசியல்’ (realpolitik) கட்டுப்பாட்டின் ஒரு வடிவமாகக் கருதலாம். எவ்வாறாயினும், ஐநா அடிப்படையிலான சர்வதேச சட்டம் மற்றும் உலகளாவிய ஒழுங்குமுறையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளும்போது, ​​எந்த சமரசமும் இருக்க கூடாது.




Original article:

Share:

2024-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பற்றி..

 2024-ஆம் ஆண்டு  நோபல் பரிசு "உள்ளடக்கிய" (‘inclusive’) நிறுவனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.


2024-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்காக வழங்கப்பட்ட நோபல் பரிசு முக்கியமானது. ஏனெனில் இது ஒரு நாட்டின் நீண்டகால பொருளாதார வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளை எடுத்துக்காட்டுகிறது. ஒரு நாட்டில் உள்ள நிறுவனங்களின் தரம் எவ்வாறு பொருளாதார வளம் அல்லது வறுமைக்கு வழிவகுக்கும் என்பது குறித்த ஆராய்ச்சிக்காக அமெரிக்கப் பொருளாதார வல்லுநர்களான டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன் மற்றும் ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. 


பல்வேறு நாடுகளின் நிறுவனங்களின் தரம் மற்றும் காலனித்துவத்திற்குப் பிந்தைய வளர்ச்சியில் காலனித்துவத்தின் தாக்கம் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் மற்றும் சொத்துரிமைகளை அமல்படுத்தும் நிறுவனங்களைக் கொண்ட நாடுகள் தனிநபர்களுக்கு நீண்ட காலத்திற்கு வேலை செய்யவும், சேமிக்கவும், முதலீடு செய்யவும் வலுவான ஊக்கத்தை வழங்குகின்றன என்பதை அவர்கள் கண்டறிந்தனர். 


மறுபுறம், அதிகாரத்தை குவிக்கும் மற்றும் அரசியல் சுதந்திரங்களை கட்டுப்படுத்தும் பிரித்தெடுக்கும் நிறுவனங்களைக் கொண்ட நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன. சில விமர்சகர்கள், ஆசிரியர்கள் காலனித்துவத்தின் கடுமையான தன்மையை போதுமான அளவு விமர்சிக்கவில்லை என்றும், மேற்கத்திய நிறுவனங்களின் வளர்ச்சியை அவர்கள் விமர்சித்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். இருப்பினும், அவர்களின் பகுப்பாய்வு இன்னும் முக்கியமானது.

 

நோபல் பரிசு பெற்றவர்கள் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் என்று கூறும் "நிறுவனங்கள்" பல்வேறு விதிகளைக் குறிப்பிடுகின்றன. இந்த விதிகள் சமூகத்தில் மக்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை வழிகாட்டும் வெளிப்படையான சட்டங்கள் அல்லது மறைமுகமான சமூக விதிமுறைகளாக இருக்கலாம். குடிமக்கள் தங்கள் சொத்துக்களை அரசாங்கத்தால் எடுக்காமல் பாதுகாக்கும் சட்டங்களும் அவற்றில் அடங்கும். 


சீனாவும் இந்தியாவும் பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு விரைவான பொருளாதார வளர்ச்சி அடைந்தது இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சீனா தனது பொருளாதார தாராளமயமாக்கலை 1970-களின் பிற்பகுதியில் தொடங்கியது, அதே நேரத்தில் இந்தியா பொருளாதார தாராளமயமாக்கலை (economic liberalisation) 1990-களின் முற்பகுதியில் தொடங்கியது. இரு நாடுகளும் தங்கள் பொருளாதாரங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் அல்லது  விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்த பின்னர் முன்னேறின.


நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த கட்டமைப்பு சீர்திருத்தங்கள் முக்கியம். மேற்கத்திய நாடுகளில் அதிக வருமானம் கொண்ட வளர்ந்த நாடுகளில் உள்ளதைப் போன்ற பொருளாதாரங்கள் வாழ்க்கைத் தரத்தை அடைய இந்த சீர்திருத்தங்கள் அவசியம். உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் வலுவான ஆளுமைகளால் வழிநடத்தப்படும் ஜனரஞ்சக இயக்கங்களால் (populist movements) கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நேரத்தில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.


நோபல் பரிசு பெற்றவர்கள் ஜனநாயகம் என்பது நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் ஒரு முக்கியமான "உள்ளடக்கிய" (‘inclusive’) நிறுவனம் என்பதை வலியுறுத்துகின்றனர். இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் பாதுகாப்புவாத பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்ட தாராளவாத ஜனநாயகங்கள் (illiberal democracies) அதிகரித்து வருகின்றன. 


பலருக்கு உதவி செய்து வளர்ச்சியை ஊக்குவிக்கும் தாராளமய நிறுவனங்கள் கடுமையான ஆபத்தில் இருப்பதை இது காட்டுகிறது. குறுகிய கால ஜனரஞ்சகக் கொள்கைகளில் கவனம் செலுத்தும் ஜனநாயகம் சர்வாதிகார (autocracy) ஆட்சியைப் போலவே தீங்கு விளைவிக்கும். ஒரு சர்வாதிகார ஆட்சி பெரும்பாலும் அதிகாரத்தில் நெருக்கமாக இருப்பவர்களுக்கு அதிக பலன்களை அளிக்கும்.




Original article:

Share:

இந்தியாவில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்துதல் : மழை அல்லது வெயில் எதுவாயினும். - முகமது ரபியுதீன், பிஸ்வாஸ் சித்தாலே

 மேம்படுத்தப்பட்ட கணிப்புகளுடன், இந்தியாவில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த “மௌசம் திட்டம் (Mausam Mission)” தொடங்கப்பட்டுள்ளது. இது வானிலை முன்னறிவிப்புகளை மிகவும் துல்லியமாகவும் நம்பகமானதாகவும் மாற்றும்.


இந்தியா இந்த ஆண்டு மிக மோசமான பருவமழைக் காலத்தை எதிர்கொண்டது. தொடர் வெள்ளம் பெரும்பாலான மாநிலங்களை பாதித்துள்ளது. இந்தியாவில், உள்ள 40% மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் வறட்சி ஆகிய இரண்டையும் வெவ்வேறு நேரங்களில் எதிர்கொண்டுள்ளதாக எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆணையம் (Council on Energy, Environment and Water (CEEW)) 2021-ல் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது. 


இதன் பொருள் மழைக்காலங்களில் பொதுவாக வெள்ளம் வரும் பகுதிகள் வறட்சியான காலத்திலும் வறட்சியை எதிர்கொள்கின்றன. மற்றொரு CEEW பகுப்பாய்வில், 40 வருட மழைப்பொழிவு ஆய்வு செய்யப்பட்டது. அதன் படி, கடந்த பத்தாண்டுகளில் பருவமழையின் போது அதிக மழைப்பொழிவு நாட்கள் 64% வரை அதிகரித்துள்ளதை ஆய்வு முடிவு வெளிகாட்டுகிறது.  




தீவிர வானிலைக்கு சிறந்த முன்னறிவிப்பு தேவை 


இந்த சிக்கலான சூழ்நிலையில், இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வெள்ள அபாயத்தை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகளால் பாதுகாக்கப்படுகிறார்கள். புயல் எச்சரிக்கை அமைப்புகளிலிருந்து இது மிகவும் வேறுபட்டது, இது புயல் அபாயத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியது. அதிகரித்து வரும் தீவிர வானிலைக்கு எதிராக சிறந்த வானிலை முன்னறிவிப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் இந்தியா முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீடுகள் தீவிர வானிலையால் அதிகரித்து வரும் அபாயங்களை குறைக்க உதவும்.


“மௌசம் திட்டம்” செப்டம்பர் 2024-ல் அங்கீகரிக்கப்பட்டது. இந்தியா வானிலை கண்காணிப்பு வலையமைப்பை விரிவுபடுத்துதல், வானிலை முன்னறிவிப்பு மாதிரிகளை மேம்படுத்துதல் மற்றும் வானிலையை மாற்றுவதற்கான வழிகளை ஆராய்தல் போன்ற மூன்று முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. 


இந்த பணியானது புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)), நடுத்தர தூர வானிலை முன்னறிவிப்புக்கான தேசிய மையம் (National Centre for Medium Range Weather Forecasting (NCMRWF)  மற்றும் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (Indian Institute of Tropical Meteorology (IITM) ஆகிய  மூன்று நிறுவனங்களால் வழி நடத்தப்படுகிறது. ₹2,000 கோடி “மௌசம் திட்டம்” பல்வேறு கருவிகள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தி இந்தியாவின் வானிலை கண்காணிப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


வளிமண்டலம் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் இயந்திர கற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் முன்கணிப்பு மாதிரிகளை மேம்படுத்த இது உதவும். இந்த இந்த திட்டத்தை அதிகம் பயன்படுத்த, அதிக ஆபத்துள்ள காலநிலை பகுதிகளில் வானிலை முன்னறிவிப்பை இந்தியா விரிவுபடுத்த வேண்டும். கூடுதலாக, இது வானிலை தரவுகளை பரவலாக பகிர்ந்து கொள்ள வேண்டும். இதனால் ஆற்றல், விவசாயம் மற்றும் நீர் போன்ற பல்வேறு துறைகள் அதை திறம்பட பயன்படுத்த முடியும். “மௌசம் திட்டம்” கவனம் செலுத்த வேண்டிய பணியின் முக்கிய இலக்குகளாக இது இருக்க வேண்டும்.


வரையறுக்கப்பட்ட ரேடார் பாதுகாப்பு (radar coverage) மற்றும் தரவுக்கான கட்டுப்படுத்தப்பட்ட தேவை 


முதலாவதாக, இந்தியா தனது மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலும், காலநிலை மாற்றத்தால் அதிக ஆபத்தில் இருக்கும் பெரிய நகரங்களிலும் வானிலை கண்காணிப்பு தளங்களை நிறுவுவதில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது, ​​இந்தியாவில் மழையை கண்காணிக்கும் 39 டாப்ளர் வானிலை ரேடார்கள் (Doppler Weather Radars (DWRs)) உள்ளன. இந்த ரேடார்கள் 250 கிலோமீட்டர் சுற்றளவைக் கண்காணிக்கின்றன மற்றும் சில நிமிடங்களிலிருந்து சில மணிநேரங்கள் வரையிலான தீவிர மழை நிகழ்வுகளுக்கான குறுகிய கால முன்னறிவிப்புகளை வழங்குகின்றன.


39 ரேடார்களில், ஒன்பது இமயமலை மாநிலங்களிலும், எட்டு கிழக்கு கடற்கரையிலும், 17 இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் உள்ளன. ஐந்து ரேடார்கள் மட்டுமே மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளன. அரேபிய கடலில் புயல்கள் அடிக்கடி மற்றும் தீவிரமடைந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. 


இருப்பினும், மேற்கு கடற்கரையில் அதை கண்காணிக்க ஐந்து ரேடார்கள் மட்டுமே உள்ளன. அஹமதாபாத் (குஜராத்), பெங்களூரு (கர்நாடகா), ஜோத்பூர் (ராஜஸ்தான்) போன்ற பெரிய நகரங்களில் மீண்டும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது ரேடார்கள் எதுவும் இல்லை. எனவே, தற்போது பாதுகாப்பு இல்லாத மற்றும் அதிகரித்து வரும் காலநிலை அபாயங்களை எதிர்கொள்ளும் பகுதிகளில் வானிலை ரேடார்கள் மற்றும் பிற கண்காணிப்பு கருவிகளை நிறுவுவதில் “மௌசம் திட்டம்” கவனம் செலுத்த வேண்டும்.


இரண்டாவதாக, வானிலை தரவுகள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு வெளிப்படையாகக் கிடைக்க வேண்டும். அதனால் அவர்கள் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இந்தத் தரவிற்கான திறந்த அணுகல் போக்குகளை பகுப்பாய்வு செய்யவும் தீவிர வானிலை நிகழ்வுகளின் காரணங்களை நன்கு புரிந்துகொள்ளவும் உதவுகிறது. உள்ளூர்மயமாக்கப்பட்ட ஆரம்ப எச்சரிக்கை கருவிகளை உருவாக்கவும் இது அனுமதிக்கிறது.


எடுத்துக்காட்டாக, அமெரிக்கா அதன் 160 டாப்ளர் வெதர் ரேடார்களில் (DWRs) தரவைப் பகிர்ந்து கொள்கிறது. இது உள்ளூர் அரசாங்கங்களை ஆதரிக்கும் பல்வேறு பகுப்பாய்வுக் கருவிகளை உருவாக்க வழிவகுக்கிறது. இதேபோல்,ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் பொது அணுகலுக்காக கிளவுட்டில் தங்கள் வானிலை முன்னறிவிப்பு தரவை வழங்குகின்றன. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதன் வலைத்தள தரவைப் பகிர்ந்து கொள்கிறது. ஆனால், தரவை பயன்படுத்துவதற்கு வரம்புகள் உள்ளன. 


சமூக ஊடகங்களில் குடிமக்களுக்கு தகவல்களை உடனுக்குடன் அளித்த  நவீன வானிலை வல்லுநர்கள் 


மேலும், இந்திய வானிலை ஆய்வு மைய வலைத்தளத்தில் உள்ள தரவுகள் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிந்தனைக் குழுக்களின் ஆராய்ச்சியாளர்களுக்கு இலவசமாகக் கிடைக்காது. எனவே, “மௌசம் திட்டம்” வானிலை ரேடார்கள், காற்று விவரக்குறிப்புகள் மற்றும் ரேடியோமீட்டர்கள் போன்ற புதிய கருவிகளின் தரவை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள அமைப்புகளை உருவாக்க வேண்டும். கூடுதலாக, இந்த திட்டத்தால் உருவாக்கப்பட்ட வானிலை முன்னறிவிப்பு மாதிரிகளின் தரவுகளும் பொதுவில் வெளியிட வேண்டும். இது தரவுகளைச் சரிபார்த்து மேம்பாடுகளைப் பற்றி பரிந்துரைக்க ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும். இது புதிய யோசனைகளை ஊக்குவிக்கும் மற்றும் உள்ளூர் அமைப்புகள் முடிவெடுக்க உதவும்.

 

பயனர்களை சென்றடைதல் 


மூன்றாவதாக, வானிலை எச்சரிக்கைகளைத் தொடர்புகொள்வதற்கான கருவிகளை மேம்படுத்தி, பயனர்கள் அந்த கருவிகளை பற்றி தெரிந்து கொள்ள உதவ வேண்டும். இந்திய வானிலை ஆய்வுத் மையம்  இணையம் மற்றும் மொபைல் பயன்பாடுகள் உட்பட பல்வேறு சேனல்கள் மூலம் வானிலை தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது. வலைத்தள பயன்பாடு மேம்படுத்தப்பட்டு, அடுத்த ஒரு மணிநேரம் முதல் நான்கு நாட்களுக்கு மாவட்ட-குறிப்பிட்ட வானிலை எச்சரிக்கைகளை வழங்குகிறது. இருப்பினும், பயன்படுத்தும் நபருக்கு அதைப் பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.


பயன்பாடு பயனுள்ள எச்சரிக்கைகளை வழங்கும் அதே வேளையில், இந்த எச்சரிக்கைகளை எவ்வாறு விளக்குவது என்பது குறித்த வழிகாட்டுதலைச் சேர்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். “மௌசம் திட்டம்” தகவல் வீடியோக்கள், ஊடகங்கள் மற்றும் வழிகாட்டிகளை வழங்குவதன் மூலம் பயனர்களின் எச்சரிக்கைகளைப் புரிந்துகொண்டு செயல்படும் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.


“மௌசம் திட்டம்” என்பது வானிலை மாற்றங்கள் மற்றும் காலநிலை சவால்களுக்கு நாட்டை தயார்படுத்த ஒன்றிய அரசின் ஒரு முக்கிய முயற்சியாகும். இது வானிலை கண்காணிப்பு வலையமைப்பை விரிவுபடுத்துவதையும் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மேம்பாடுகள் மூலம், இந்தியாவில் வானிலை தகவல் எவ்வாறு பகிரப்படுகிறது மற்றும் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதை இந்த திட்டத்தால் மாற்ற முடியும். தீவிர வானிலை நிகழ்வுகள் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதித்து வருவதால், இந்த திட்டம் மிகவும் முக்கியமானது.


முகமது ரபியுதீன் எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலில் (Council on Energy, Environment and Water (CEEW)) இணை அதிகாரி ஆவார். விஸ்வாஸ் சித்தாலே எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் (CEEW) மூத்த திட்டத் தலைவராக உள்ளார். 




Original article:

Share:

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தது: அவரை இந்தியாவிலிருந்து நாடு கடத்த முடியுமா? -தீப்திமான் திவாரி

 இந்தியாவும் வங்கதேசமும் ஒரு ஒப்படைப்பு ஒப்பந்தத்தைக் (extradition treaty) கொண்டுள்ளன. அதன் விதிகளின் கீழ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வங்கதேசம் கோரலாம். ஆனால், இது அவர் தனது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல. 


வியாழக்கிழமை, அக்டோபர் 17 அன்று, வங்கதேசத்தின் சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் (International Criminal Tribunal (ICT)) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது ஆணை ஒன்றை பிறப்பித்தது. சமீபத்திய  மக்களின் போராட்டங்களின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது இறுதியில் அவர் பதவியில் இருந்து அகற்றப்படுவதற்கு வழிவகுத்தது. 


நாட்டை விட்டு தப்பியோடிய உயர்மட்ட அவாமி தலைவர்கள் (Awami leaders) உட்பட மொத்தம் 46 கைது ஆணைகளை சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் பிறப்பித்தது. இந்த குற்றச்சாட்டுகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் நடந்த படுகொலைகள், கொலைகள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை உள்ளடக்கியது. வங்கதேசத்தின் இடைக்கால சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கோடை மாதம் நடந்த வன்முறையில் 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 


77 வயதான ஷேக் ஹசீனா கடைசியாக புதுடெல்லிக்கு அருகிலுள்ள ஹிண்டன் விமான தளத்தில் காணப்பட்டார். ஆரம்பத்தில் அவர் இந்தியாவில் சிறிது காலம் தங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பிற நாடுகளில் தஞ்சம் கோருவதற்கான அவரது முயற்சிகள் தோல்வியடைந்தன. இப்போது ஒரு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஹசினாவை ஒப்படைக்குமாறு டாக்கா கோர முடியுமா?  என்ற கேள்வி எழுந்துள்ளது.


இந்தியாவும் வங்கதேசமும்  ஒப்படைப்பு ஒப்பந்தத்தைக் (extradition treaty) கொண்டுள்ளனவா?


ஆம், இந்தியாவும் வங்கதேசமும் 2013-ஆம் ஆண்டில் ஒரு ஒப்படைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது தப்பியோடியவர்களை ஒப்படைக்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக 2016-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. இந்தியர்கள், குறிப்பாக வடகிழக்கில் உள்ள கிளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் வங்கதேசத்தில் மறைந்திருந்ததால் இந்த ஒப்பந்தம் முதலில் உருவாக்கப்பட்டது. இதேபோல், மேற்கு வங்கம் மற்றும் அசாம் போன்ற இந்திய மாநிலங்களில் பதுங்கியிருந்த ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் (Jamaat-ul-Mujahideen Bangladesh (JMB)) போன்ற குழுக்களிடமிருந்து வங்கதேசம் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டது. 


இந்த ஒப்பந்தத்தின் மூலம், அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (United Liberation Front of Assam (ULFA)) கட்சியின் உயர்மட்ட தலைவரான அனுப் சேத்தியாவை 2015-ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வெற்றிகரமாக ஒப்படைத்தது. அதன் பின்னர் தப்பியோடிய மேலும் ஒருவரை வங்கதேசம் ஒப்படைத்துள்ளது. அதே நேரத்தில் இந்தியா ஒரு சில நபர்களை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளது. 


ஒப்பந்தம் என்ன சொல்கிறது?


இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவும் வங்கதேசமும் ஒரு  நாட்டில் நீதிமன்றத்தால் ஒப்படைக்கக்கூடிய குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட, குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட அல்லது தேடப்படும் நபர்களை ஒப்படைக்க வேண்டும்.  ஒப்படைக்கக்கூடிய குற்றத்திற்கு நிதிக் குற்றங்கள் உட்பட குறைந்தபட்சம் ஒரு வருட சிறைத்தண்டனை இருக்க வேண்டும். நாடுகடத்தல் நிகழ, குற்றம் இரு நாடுகளிலும் தண்டனைக்குரியதாக இருக்க வேண்டும். இது இரட்டை குற்றவியல் என்று அறியப்படுகிறது. 


குற்றத்தில் ஈடுபடுதல், உதவுதல், உடந்தையாக இருத்தல், தூண்டுதல் அல்லது உடந்தையாக பங்கேற்கும் செயல்களை  நாடு கடத்தும் இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது. 

இந்த விதிகளுக்கு விதிவிலக்குகள் உள்ளனவா? 


ஆம், குற்றம் அரசியல் இயல்புடையதாகக் கருதப்பட்டால் ஒப்படைப்பு கோரிக்கைகளை நிராகரிக்க இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது. எவ்வாறாயினும், கொலை, மனிதப் படுகொலை, தாக்குதல், வெடிகுண்டுகளை வைத்திருத்தல், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சொத்துக்களை சேதப்படுத்துதல், கடத்தல் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட அரசியல் குற்றங்களாகக் கருத முடியாத குற்றங்களின் நீண்ட பட்டியல் உள்ளது. 


ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க முடியுமா? 


ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் கோரலாம். எவ்வாறாயினும், கொலை, வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்குதல் மற்றும் சித்திரவதை போன்ற அவருக்கு எதிரான சில குற்றச்சாட்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் அரசியல் குற்றங்களாக வகைப்படுத்தப்படவில்லை. 


ஆகஸ்ட் 13 அன்று, கடந்த மாதம் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்த மளிகைக் கடை உரிமையாளரைக் கொலை செய்ததாக ஹசீனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அடுத்த நாளே, 2015-ஆம் ஆண்டு ஒரு வழக்கறிஞரை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது வலுக்கட்டாயமாக காணாமல் போன வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 15 அன்று, மூன்றாவது வழக்கில் கொலை, சித்திரவதை மற்றும் இனப்படுகொலை ஆகிய குற்றச்சாட்டுகள் ஹசீனா மீது சுமத்தப்பட்டன.


ஒப்பந்தத்தின் 10 (3) பிரிவில் 2016-ஆம் ஆண்டு திருத்தம் நடைபெற்றதால் இந்த நிலைமை சிக்கலானது. இந்த திருத்தத்தின் படி, குற்றத்திற்கான ஆதாரங்களை வழங்க வேண்டிய அவசியத்தை நீக்கியது. இப்போது, ஒப்படைப்பு நடவடிக்கையை தொடர தகுதிவாய்ந்த நீதிமன்றத்திலிருந்து கைது ஆணை மட்டுமே தேவைப்படுகிறது. 





ஹசீனாவை இந்தியா திருப்பி அனுப்ப வேண்டுமா? 


ஹசீனாவை திரும்ப அனுப்புவதற்கு அவசியமில்லை. ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் பிரிவு 7, அந்த  குற்றத்திற்காக அந்த நபரை இந்தியாவில் விசாரிக்க முடியுமானால், அவரை ஒப்படைப்பதை மறுக்க இந்தியாவை அனுமதிக்கிறது. ஆனால், இது ஹசினாவுக்கு பொருந்தாது. பிரிவு 8 மறுப்பதற்கான கூடுதல் காரணங்களை வழங்குகிறது.  அதாவது,  நீதியின் நலன்களில் நல்ல நம்பிக்கையுடன் குற்றம் சாட்டப்படாத வழக்குகள் அல்லது  பொது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் இல்லாத இராணுவக் குற்றங்கள் உட்பட, மறுப்புக்கான பல காரணங்களை பிரிவு 8 பட்டியலிடுகிறது.


ஹசினாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நல்லெண்ணத்துடன் கூறப்படவில்லை என்று வாதிடுவதன் மூலம் இந்தியா அவரை ஒப்படைப்பதை மறுக்க முடியும். இருப்பினும், இது வங்கதேசத்தின்  புதிய அரசாங்கத்துடனான இந்தியாவின் உறவுகளை பாதிக்கும். 


 இந்தியா என்ன செய்ய வேண்டும்? 


வங்கதேசத்தில் இந்தியா அதன் நீண்டகால இராஜதந்திர மற்றும் பொருளாதார நலன்களை ஒரு நீண்டகால நண்பரான ஷேக் ஹசீனாவுடனான அதன் உறவுடன் சமநிலைப்படுத்த வேண்டும். ஹசீனாவை ஒப்படைப்பது இந்தியாவின் முக்கிய நலன்களுக்கு சேவை செய்யாது என்று சிலர் வாதிடுகின்றனர். ஒரு முன்னாள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (Research and Analysis Wing (RAW)) அதிகாரி, ஒப்பந்தத்தின் சட்ட விவரங்கள் இரண்டாம் பட்சமானவை என்றும், வங்கதேசத்துடனான இந்தியாவின் உறவுகள் ஹசீனாவுக்கு அப்பால் செல்கின்றன என்றும் குறிப்பிட்டார். 


எந்தவொரு நாடும் அதன் தேசிய நலனுக்கு எதிராக, உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம் இல்லாமல் தப்பியோடியவர்களை  நாடு கடத்தல் செய்வதில்லை. இறுதியில், எது நடந்தாலும் அது அரசியல் காரணங்களுக்காகவே இருக்கும்.




Original article:

Share: