வாக்குப்பதிவு புதிர் : வாக்காளர் பங்கேற்பு குறித்து . . .

 பல மாநிலங்களில் குறைந்த வாக்குப்பதிவு சதவீதம் கவலை அளிக்கிறது.


2024 பொதுத் தேர்தலில், ஏழுகட்டம் உள்ள நிலையில், கடைசியாக ஒரு கட்டம் மட்டுமே எஞ்சியுள்ளதால், நாடு முழுவதும் வாக்காளர்களின் பங்கேற்பை மறுஆய்வு செய்ததில், 2019 மற்றும் 2014 பொதுத் தேர்தல்களுடன் ஒப்பிடும்போது தேர்தல் வாக்குப்பதிவில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வீழ்ச்சியானது மாநில மற்றும் பிராந்தியத்தில் வேறுபடுகின்றன. இவை கிழக்கு, வடகிழக்கு மற்றும் தெற்கில் உள்ள பல மாநிலமான பொதுவாக மேற்கு, மத்திய மற்றும் வட இந்தியாவில் உள்ளவர்களைவிட அதிகமாக வாக்களித்தனர். தெலுங்கானா மற்றும் கர்நாடகா போன்ற சில மாநிலங்கள் விதிவிலக்குகளைத் தவிர, இந்த மாநிலங்களின் வாக்குப்பதிவுகள் முறையே 62.8% முதல் 65.7% மற்றும் 68.8% முதல் 70.6% வரை அதிகரித்துள்ளது. 2024-ம் ஆண்டில் மாநிலங்கள் முழுவதும் வாக்குப்பதிவில் பொதுவான சரிவு ஏற்பட்டுள்ளது. முதல் ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற 485 தொகுதிகளில் 132 தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளதாகவும், தி இந்து நாளிதழில் வெளியான பகுப்பாய்வு தெரிவிக்கிறது. 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முந்தைய சமீபத்திய எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு வாக்காளர் பங்கேற்பு குறைந்து அதிக எண்ணிக்கையிலான இடங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளன. இந்த வாக்குப்பதிவு எண்ணிக்கையை உன்னிப்பாகப் கவனித்தால், 2014ல் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள வாக்காளர்களின் பங்கு கணிசமான அதிகரிப்பைக் காட்டுகிறது. 2019 மற்றும் 2024ல் சிறிதளவு அதிகரிப்பு இருந்தது. இருப்பினும், 2024ல், பல தொகுதிகளில் வாக்குப்பதிவு வெகுவாகக் குறைந்துள்ளது.


வாக்குப்பதிவில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சிக்கு அரசியல் காரணிகள் காரணமாக இருக்கலாம். சில வலுவான கட்சிகளின் போட்டி இல்லாத மாநிலங்களில் வாக்களிக்கும் ஆர்வம் குறைந்துள்ளதா? குஜராத்தில் ஒப்பீட்டளவில் குறைந்த வாக்குப்பதிவை இது விளக்குகிறதா? குஜராத்தில் வாக்குப்பதிவு 60.1%, இது 2019 இல் இருந்து 4.4 புள்ளிகள் குறைவு. குஜராத்தில், பாரதிய ஜனதா கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது. கேரளாவில் 71.3% வாக்குகள் பதிவானது, அதாவது 6.6 புள்ளிகள் குறைந்துள்ளது. கேரளாவில், முக்கிய போட்டியாளர்களான இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸும், அவர்களது கூட்டணிக் கட்சிகளும் இணைந்து, தேசிய அளவில் இந்தியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. மாநிலங்களுக்கு இடையேயான இடப்பெயர்வு வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் குறைந்த வாக்குப்பதிவுக்கு பங்களித்துள்ளதா? உதாரணமாக, பீகாரில் வாக்காளர் பங்கேற்பில் குறிப்பிடத்தக்க பாலின இடைவெளி உள்ளது. பெண் வாக்காளர்கள் சதவீத அடிப்படையில் ஆண்களை விட அதிகமாக உள்ளனர். ஒரு கேள்வி என்னவென்றால், வெப்ப அலையின் தாக்கத்தால்,  வாக்காளர்களின் நிலைமைகள் சிலரை வீட்டிலேயே இருக்கச் செய்ததா என்பதுதான். இந்தக் கேள்விகள் தரவைக் கூர்ந்து கவனிக்க வேண்டியவை. அவற்றில் சிலவற்றுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும். மற்ற தேர்தல் ஜனநாயகங்களுடன் ஒப்பிடும்போது இந்தியா எப்போதும் அதிக வாக்காளரின் பங்களிப்பைக் கொண்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு வாக்காளர் எண்ணிக்கையில் கணிசமான சரிவு கவலையளிக்கிறது. நீண்டகாலத்திற்கு வாக்காளர்களின் அக்கறையின்மை ஜனநாயக செயல்முறையை பலவீனப்படுத்தும். மக்கள் வாக்களிக்கும்போது அவர்களுக்குத் தகுதியான அரசாங்கத்தையும், வாக்களிக்காதபோது அவர்களுக்குத் தகுதியில்லாத அரசாங்கத்தையும் பெறுகிறார்கள்.




Original article:

Share:

சமத்துவம் மற்றும் உள்ளடக்க மொழிக்கான அறிகுறி இன்னும் தென்படவில்லை -அனுக்ரிதி நிகம், ராதிகா சர்மா, சதேந்தர் சிங்

 இந்தியாவில் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை செய்வதற்கான உரிமைகளில் சமத்துவம் பெற, காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள குடிமக்களை சூழ்ந்துள்ள  தடைகளை அகற்ற வேண்டும்.


2024-ஆம் ஆண்டு தேர்தல் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India (ECI)) மார்ச் மாதம் தேர்தலை அறிவித்தபோது, சமூக ஊடகங்களில் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நீண்ட வீடியோவில் ஒரு சைகை மொழி பெயர்ப்பாளர்கள் (sign language interpreters) இல்லை. இது இந்தியாவில், அன்றாட வாழ்க்கை காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள (Deaf and Hard of Hearing (DHH)) குடிமக்களை எவ்வாறு விலக்கிவைக்கிறது என்பதற்கு இது ஒரு சிறிய  எடுத்துக்காட்டு.


உள்ளடக்கம்:


இந்தியா கல்வி, சுகாதாரம் மற்றும் உரிமைகளில் நேர்மையை விரும்புகிறது. ஆனால், காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள நபர்களை விலக்கும் தடைகளை அகற்றாமல் அதை செயல்படுத்த முடியாது.

 

தேசிய காது கேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாடுத் திட்டம், செவித்திறன் குறைபாட்டைத் தடுத்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் மருத்துவ மறுவாழ்வு அளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை. இது திரையிடல் மற்றும் செவிப்புலன் கருவிகளைப் (screening and hearing aids) பற்றி பேசுகிறது. ஆனால், காது கேளாதோர் தொடர்புகொள்வதற்கு  தேவையான இந்திய சைகை மொழியைக் (Indian Sign Language (ISL)) குறிப்பிடவில்லை. 2015-ல்  சமூக நீதி அமைச்சகம் (Social Justice Ministry)  இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை (Indian Sign Language Research and Training Center (ISLRTC)) நிறுவியது. ஆனால், இந்திய சைகை மொழி அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை. 2020-ஆம் ஆண்டு தேசிய கல்விக்  கொள்கையின் (National Education Policy 2020) படி, பள்ளிகளில் ISL கற்பிக்க பரிந்துரைக்கிறது. ஆனால், காதுகேளாதவர்களுக்கான பள்ளிகளில் கூட அதன் பயன்பாடு இன்னும் குறைவாகவே உள்ளது.


சைகைமொழி மற்றும் வாய்மொழி (Sign language versus oralism)


இந்தியக் கல்வி முறை இன்னும் "வாய்மொழி" (“oralism”)  மீது கவனம் செலுத்தி வருகிறது. இந்த அணுகுமுறையில், காது கேளாதவர்கள் தொடர்புகொள்வதற்கு தங்கள் கைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அவர்களின் குரலைப் பயன்படுத்துகிறார்கள் உதடுகளைப்  படிப்பதற்கு  பயன்படுத்துகிறார்கள்.

 

காதுகேளாதோர் பள்ளிகளில் உள்ள பெரும்பாலான கல்வியாளர்கள்  இந்திய சைகைமொழி ஆராய்ச்சி மையத்தில்  பயிற்சி பெறவில்லை. தற்போதைய காது கேளாதோர் கல்வி முறை "மறுவாழ்வு" (“rehabilitation”) மீது கவனம் செலுத்துகிறது. காது கேளாதோர் சமூகத் தடைகளை அகற்றுவதற்குப் பதிலாக தங்கள் சுற்றுப்புறங்களுடன் சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். பேசுவதில் மட்டுமே கவனம் செலுத்துவது, குறைபாடுகள் இல்லாதவர்களுக்கு ஆதரவாக இருக்கும் உலகில் காது கேளாதவர்களை தனிமைப்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால், சைகைமொழியைப் பயன்படுத்துவது காது கேளாத குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் மொழி சிக்கல்களைத் தவிர்க்கிறது. 70-க்கும் மேற்பட்ட நாடுகள் சைகை மொழிகளை சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன. காதுகேளாத குடிமக்களுக்கு கல்வி மற்றும் முக்கியமான தகவல்களை எளிதில்  அணுகக்கூடியதாக ஆக்குகிறது. 


இந்தியாவில் ஒரு தலை எண்ணிக்கை


2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 50 லட்சம் செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் இருந்தனர். தேசிய காதுகேளாதோர் சங்கம் (National Association of the Deaf) செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் 18 மில்லியன் என்று கூறுகிறது. உலக சுகாதார அமைப்பு 63 மில்லியன் இந்தியர்களுக்கு குறிப்பிடத்தக்க செவித்திறன் குறைபாடு இருப்பதாக கருதுகிறது. ஆனால், அவர்கள் பெரும்பாலும் நம் சமூகத்தை விட்டு வெளியேறுகிறார்கள். காதுகேளாத குழந்தைகளில் 5% மட்டுமே பள்ளிக்குச் செல்கிறார்கள். வாய்மொழி பாட அமைப்பு காரணமாக அவர்கள் பட்டம் பெற அதிக நேரம் எடுக்கும்.


காதுகேளாதவர்களுக்கு அரசாங்கம் வேலை  பெற்றுத்தர முயற்சிகள் எடுத்தாலும், அவர்கள் பெரும்பாலும் வேலை வாய்ப்புகளுக்காக போராடிக்கொண்டு இருக்கிறார்கள். 40%-க்கும் குறைவான செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஆட்சேர்ப்பு காரணமாக 2020-ல் போராட்டங்கள் வெடித்தன. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 2016 (Rights of Persons with Disabilities Act,2016-(RPDA)) மொழியைப் பாதுகாப்பதற்கும் முன்னேற்றுவதற்கும் போதுமானதாக இருப்பதாக மேற்கோள் காட்டி, இந்திய சைகைமொழியை அங்கீகரிக்க பல கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்தத் தோல்வி, எதிர்ப்புகள் இருந்தபோதிலும், காதுகேளாதவர்கள் இன்னும் எப்படி ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.


காது கேளாதவர்களுக்கு அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும்? பொதுப் போக்குவரத்து அறிவிப்புகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொது கட்டமைப்புகளுக்குள் திசைகள் மற்றும் உதவி எண்களை அழைப்பது கூட அணுகல் இல்லாததால் தீர்க்க முடியாத பணிகளாக மாறும். மற்றவர்களால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் அன்றாட விஷயங்கள் பல ஆண்டுகளாக போர்களாக மாறுகின்றன. 1987-ஆம் ஆண்டில் தூர்தர்ஷன் ஐ.எஸ்.எல்லில் வாராந்திர செய்திப் பிரிவில் முன்னோடியாக இருந்தபோதிலும், தனியார் செய்தித் தொலைக்காட்சிகள் இதைப் பின்பற்றவில்லை. திரைப்படங்கள், இந்தியன் பிரீமியர் லீக்  2024 கிரிக்கெட் போட்டிகள் மற்றும் OTT நிகழ்ச்சிகளை அணுகலாம். ஆனால், இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.


காது கேளாதோர் சமூகத்திற்கான வாய்ப்புகள் வீட்டு பராமரிப்பு வேலைகள், காத்திருப்பு ஊழியர்கள் மற்றும் தரவு உள்ளீடு போன்ற வேலைகளைப் பெறுகிறார்கள். தனியார் நிறுவனங்கள் தலைப்பு மற்றும் மொழிபெயர்ப்பாளர் போன்ற உதவிகளை வழங்குகின்றன. ஆனால், அரசாங்கம் அதிகம் செய்யவேண்டும். காது கேளாதோர் சிறந்த கல்வி மற்றும் வேலைக்காக மாநில மற்றும் தேசிய அளவில் போராட்டம் நடத்தினர். ஆனால், அவர்கள் பெரும்பாலும் வெற்று வாக்குறுதிகளை எதிர்கொள்கின்றனர். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் (Rights of Persons with Disabilities Act,(RPDA)) கூட, கொள்கை மாற்றங்கள்  மற்றும் அதிக வித்தியாசத்தை ஏற்படுத்தாது. ஏனெனில், அவை சரியாக செயல்படுத்தப்படவில்லை.


இந்தியாவில் பெரும்பாலான மருத்துவமனைகளில் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாததால் காதுகேளாதோர் சமூகம் சுகாதார சேவையைப் பெறுவதில் சவால்களையும் கூடுதல் பாகுபாட்டையும் எதிர்கொள்கிறது. சைகைமொழியில் போதிய மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாததால், மனநலப் பராமரிப்பைப் பெறுவது அவர்களுக்கு கடினமாக உள்ளது. 2017-ஆம் ஆண்டின் மனநலப் பாதுகாப்புச் சட்டம் (Mental Healthcare Act, 2017) அனைவருக்கும் மனநலப் பாதுகாப்பை உறுதியளிக்கிறது என்றாலும், அது சரியாகச் செயல்படவில்லை. 250 சான்றளிக்கப்பட்ட சைகைமொழி மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே உள்ளனர். மேலும், எத்தனை மனநல நிபுணர்கள் சைகைமொழியில் பயிற்சிபெற்ற மனநல நிபுணர்கள்  என்பது  குறித்த தெளிவானத் தரவு இல்லை.


என்ன செய்ய வேண்டும்


தற்போதைய சூழ்நிலை மாற வேண்டும் விஷயங்களை எளிதில் அணுகக்கூடியதாக மாற்ற  வேண்டும். இந்திய சைகை மொழி அதிகாரப்பூர்வமாக ஒரு மொழியாக அங்கீகரிக்கப்பட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செவித்திறன் மற்றும் காது கேளாதோர் மற்றும் காது கேளாத மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். இது அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும். ஒவ்வொருவரும் இந்திய சைகைமொழியை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி மொழியில் சரளமாக  இருக்க  வேண்டும்.


அனைத்து மட்டங்களிலும் காது கேளாதவர்களுக்கான தகவல்தொடர்புகளை சுகாதார அமைப்புகள் மேம்படுத்த வேண்டும். காதுகேளாதோர் மற்றும் காதுகேளாத நோயாளிகள் தங்கள் மொழியைப் புரிந்துகொள்ளும் மருத்துவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது சிறப்பாகச் செயல்படுகிறார்கள். ஆனால், மருத்துவ பல் மற்றும் செவிலியர் ஆணைய விதிகள் காது கேளாதோர் நபர்கள் சுகாதார நிபுணர்களாக மாறுவதை கடினமாக்குகின்றது. அவர்களை சுகாதாரப் பணிகளில் அமர்த்துவது அவர்களை மாற்றுவது மட்டுமல்லாமல் இந்திய சைகைமொழி மொழிப்பெயர்ப்பாளர்களை பிரதான பணிகளில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கும்.

 

காதுகேளாதோர் நிகழ்ச்சிகள் எல்லா ஊடக சேனல்களிலும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆங்கிலமொழி தொலைகாட்சிகளில் பொதுவாக வசன வரிகள் இருக்கும். ஆனால், இந்தி மற்றும் பிற பிராந்திய சேனல்களுக்கு இந்திய சைகை மொழி விளக்கம் அல்லது வசன வரிகள் இல்லை. அரசாங்க நிகழ்வுகள் பல நாடுகளைப் போலவே நேரடி இந்திய சைகை மொழி பெயர்ப்பாளர்களைக் கொண்டிருக்க வேண்டும். சரியான திசையில் சரியான நேரத்தில் தலையீடுகள் மூலம், தேர்தல் ஆணையத்தால் கட்டளையிடப்பட்ட அடுத்த தேர்தலில் நிகழ்நேர இந்திய சைகை மொழி பெயர்ப்பாளர்களின்  விளக்கங்களை நாம் காணலாம்.


அனுக்ரதி நிகம் ஒரு தரவு விஞ்ஞானி மற்றும் புனேவில் உள்ள சமூக பயன்பாட்டு ஆராய்ச்சி சங்கத்தில் ஆராய்ச்சி தன்னார்வலர் (Association of Socially Applicable Research) ஆவார். ராதிகா சர்மா புனேவில் உள்ள சமூகப் பயன்பாட்டு ஆராய்ச்சி சங்கத்தில் ஆராய்ச்சி தன்னார்வலராக உள்ளார். டாக்டர் சதேந்திர சிங் ஒரு ஊனமுற்றோர் உரிமைகள் பாதுகாவலர் மற்றும் டெல்லி பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் கல்லூரியில் இயக்குநர் பேராசிரியர் ஆவார்.




Original article:


Share:

ஆயுதங்களைக் கூர்மைப்படுத்துதல்: அரங்கு கட்டளைகளை (theatre command) ஒழுங்கமைப்பது முதல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது வரையிலான பணிகளை சீராக்குவதற்கான வழிகள்

 இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நடப்பு மக்களவைத் தேர்தலின் போது மூத்த நியமனங்கள் எதையும் செய்வதைத் தவிர்க்க இந்திய அரசு விரும்புவதால் இது மேற்கொள்ளப்பட்டது. பல பாதுகாப்புச் சவால்களைக் கையாளும் 12L வலுவான படைகளின் நீட்டிப்பு பாதிக்கக் கூடாது. தீர்க்கப்படாத பாகிஸ்தான் பிரச்சனையில் இருந்து சீனாவுடனான மோதல் மற்றும் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சி போன்ற பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்கள் வரை, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு தற்போதைய கட்டமைப்பு மாற்றங்கள் மூலம் பார்க்க வேண்டும்.  


ஒன்றிணைவுக்கு சிறிய நகர்வு |  ஜெனரல் அனில் சௌஹானின் முக்கிய குறிக்கோள் கூட்டுப்படையை அடைவதாகும். அதாவது, ஒன்றிணைந்து செயல்படுவது. இந்த இலக்கை நோக்கி சிறிய படிகளை எடுப்பதை அவர் நம்புகிறார். அரங்கு கட்டளைகளை (theatre command) உருவாக்குவது சீரற்றதாக உள்ளது. ஏனெனில், இராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் வளங்கள் மற்றும் பணியாளர்கள் மீது வாதிடுகின்றன. சமீபத்தில், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த பணியாளர்கள் எளிதாக இணைந்து பணியாற்ற அனுமதிக்கும் சேவைகளுக்கு இடையேயான நிறுவனங்கள் (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம்) சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியதால் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது ஆரம்பம் மட்டுமே. சேவைகள் முழுவதும் கூட்டு கலாச்சாரத்தை உருவாக்குவது மற்றும் முன்மொழியப்பட்ட மூன்று அரங்கு கட்டளைகளில் அவற்றை இணைப்பது பெரிய பணிகளாக உள்ளது.


அக்னிவீரர்களை மதிப்பிடுதல் | அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டம் (Agnipath recruitment scheme) புதிய உறுப்பினர்களை படைகளுக்குள் கொண்டுவரும் விதத்தை முற்றிலும் மாற்றிவிட்டது. இந்தத் திட்டம் குறித்து ராணுவம் ஆய்வு நடத்தி வருகிறது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாற்றத்திற்கான திறந்த மனப்பான்மையைக் காட்டியுள்ளார். இத்திட்டம் படைகளை இளமையாக்குவதையும், அதிகப்படியான பணியாளர்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், நடவடிக்கைகளுக்கு போதுமான ஆட்கள் இல்லாததால் படைகள் இன்னும் போராடுகின்றன. 2024-25 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்புக்கான பட்ஜெட் ₹6.2 டிரில்லியன் ஆகும். ஆனால், இதில் 28% மட்டுமே இராணுவ உபகரணங்களைப் புதுப்பிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள தொகையில் குறிப்பிடத்தக்க பகுதி, ₹1.4 டிரில்லியன், ஓய்வூதியத்திற்காக மட்டுமே ஒதுக்கப்படுகிறது.


ஒரு தொழில்நுட்ப ஆர்வமுள்ள இராணுவம் | உக்ரைன் போர், போரின் மாறிவரும் தொழில்நுட்பத் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. இதில், ஆளில்லா விமானங்கள் (Drones) இன்றியமையாதவை. ஆனால், விண்வெளி, இணையம் மற்றும் தகவல் தொடர்பு தளங்கள் சமமாக முக்கியமானவை. அமெரிக்கா இப்போது ஒரு பிரத்யேக விண்வெளிப் படையைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், சீனா சமீபத்தில் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் செயல்பாடுகளை சிறந்த மேற்பார்வைக்காக ஒரு தகவல் ஆதரவுப் படையை உருவாக்கியுள்ளது. இந்தியா ஒரு பாதுகாப்பு விண்வெளி நிறுவனம் மற்றும் ஒரு பாதுகாப்பு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை அமைத்துள்ளது. ஆனால் விண்வெளி மற்றும் இணைய தொழில்நுட்பத்தை இராணுவ சக்திகளுடன் இணைக்க இன்னும் அதிகமாக வேலை செய்ய வேண்டும். மேலும், அது உயர்மட்ட இராணுவ ஆளில்லா விமானங்களை (Drones) உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும். எனவே, தற்போதைய மற்றும் புதிய இராணுவத் தலைவர்கள் நிறைய பணியாற்ற வேண்டியுள்ளது.




Original article:

Share:

இந்தியாவில் திறந்தவெளி சிறைகளை விரிவுபடுத்துவதற்கான விவாதம் -சித்தார்த் லம்பா

 திறந்த சிறைச்சாலைகள் (open prisons) என்றால் என்ன, நீதி அமைப்பில் அவற்றின் பங்கு என்ன, சமூகத்தில் குற்றவியல் நீதியின் இலக்குகளை மேம்படுத்துவதற்கு இந்த நிறுவனம் ஏன் முக்கியமானது? 


திறந்தவெளிச் சிறைகளின் (open prisons) பரப்பளவைக் குறைக்க எந்த முயற்சியும் எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. ஜெய்ப்பூரில் உள்ள சங்கனர் திறந்தவெளி முகாமின் (Sanganer open-air camp) பரப்பளவைக் குறைக்கும் திட்டத்தைக் குறிப்பிட்டு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர். திறந்தவெளி முகாம்கள்/நிறுவனங்கள்/சிறைகள் எங்கு செயல்படுகிறதோ அங்கெல்லாம் அவற்றின் பரப்பளவைக் குறைக்கும் முயற்சிகள் கூடாது என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம், என்று அமர்வு கூறியது. 


திறந்தவெளிச் சிறைகள் (open prisons) என்றால் என்ன?


திறந்தவெளிச் சிறைச்சாலைகள், பாரம்பரிய சிறைகளைப் போலல்லாமல், குறைந்த கண்காணிப்பு மற்றும் கைதிகளுக்கு அதிகமாக சுதந்திர நடமாட்டம் உள்ளது. திறந்தவெளிச் சிறைகளின் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக வரையறைகள் இந்திய மாநிலங்கள் முழுவதும் வேறுபடலாம் என்றாலும், அவை கட்டுப்பாட்டிற்குப் பதிலாக கைதிகளுக்கான சுய-ஒழுக்கத்தின் கொள்கைகளால் பிணைக்கப்பட்டுள்ளன. வழக்கமான சிறைச்சாலைகளின் மூடிய சூழலுக்கும், சுதந்திர உலகத்திற்கும் இடையில் ஒரு இடைநிலைக் கட்டமாக செயல்படும் திறந்த சிறைகள், சிறைப்பிடிக்கப்பட்ட சூழ்நிலைகளில் ஒரு நபர் சுதந்திரத்திற்கு தயாராக இருக்க முடியாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நிறுவப்பட்டது.


காலப்போக்கில், சிறைவாசத்தின் தண்டனையின் நோக்கங்கள் முதன்மையாக பழிவாங்கலில் இருந்து பரந்த சமூக நலனுக்காக சிறையில் அடைக்கப்பட்ட நபரின் சீர்திருத்தத்தைப் பார்ப்பதற்கும் விரிவடைந்துள்ளன. சிறைச்சாலைக்கான சீர்திருத்தங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன. இப்போது தண்டனையானது ஒரு பரந்த சமூக நோக்கத்திற்கு சேவை செய்வதை உறுதி செய்வதில் சிறைச்சாலைகள் கவனம் செலுத்துகின்றன. இது "கண்ணுக்குக் கண்" (an eye for an eye) என்ற பழைய யோசனையிலிருந்து விலகியதாகும்.   


ராஜஸ்தான் சிறைத் துறை, திறந்த முகாம்கள் திருத்தச் செயல்பாட்டில் பயனுள்ள 'விடுபட்ட இணைப்புகள்' (missing links) என்று கூறியது. அவை 'அரைவழி வீடுகளாக' (halfway homes) அல்லது 'போக்குவரத்து வீடுகளாக' (transit homes) சேவை செய்கின்றன. இந்த முகாம்கள் மூடிய நிறுவனமயமாக்கப்பட்ட சிகிச்சைக்கும் சுதந்திர சமூகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கின்றன.


திறந்தவெளிச் சிறைகளில் உள்ள கைதிகள் வெளியே செல்லலாம், வாழ்வாதாரத்திற்காக சம்பாதிக்கலாம், குடும்பத்தைச் சந்திக்கலாம், புதிய திறன்களைக் கற்றுக் கொள்ளலாம் மற்றும் படிக்கலாம், சமூக உறவுகளைக் கொண்டிருக்கலாம், பிறகு தண்டனையை அனுபவிக்கலாம். இது கைதிகளை தங்க வைப்பதற்கான வழக்கமான நிறுவனம் அல்ல. ஆதற்கு மாறாக, நீண்ட வருட சிறைவாசத்திற்குப் பிறகு மிகப்பரந்த சமுதாயத்தில் கைதிகள் மீண்டும் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சி இது.


தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகள், முதன்மையான குற்றவாளிகள், வழக்கமான சிறைகளில் குறிப்பிடத்தக்க காலத்தை அனுபவித்தவர்கள் மற்றும் மாற்றத்திற்கான சாத்தியம் மற்றும் நல்ல நடத்தையை வெளிப்படுத்தியவர்கள் மட்டுமே திறந்தவெளி சிறையில் அனுமதிக்கப்படுவார்கள். முன்னரே தீர்மானிக்கப்பட்ட அளவுகோல்களைப் பயன்படுத்தி, எந்தவிதமான தண்டனை பெற்ற நபர்கள் இந்த மாற்றத்திற்குப் பொருத்தமானவர்கள் என்பதை மதிப்பீடு செய்து, அவர்கள் தண்டனைக் காலத்தை அனுபவிக்கும் போது அவர்களின் மறுவாழ்வை வளர்ப்பதற்கு உகந்த ஒரு வசதிக்கு அவர்களை ஒதுக்குவதே இதன் நோக்கமாகும். திறந்த சிறைச்சாலைகள் என்ற கருத்தின் வரையறைகள் அர்த்தமுள்ள மறு ஒருங்கிணைப்பு, பொறுப்பை வளர்ப்பது மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றால் வரையறுக்கப்படுகின்றன. இந்த அணுகுமுறை ஆக்கபூர்வமான கைதிகளின் ஈடுபாட்டை மேம்படுத்துகிறது மற்றும் குற்றவியல் நீதியின் முடிவை திறம்பட உதவுகிறது.

திறந்தவெளி சிறைகளின் வரலாறு


இந்தியாவின் முதல் திறந்தவெளி சிறைச்சாலை 1905-ம் ஆண்டு பாம்பே மாகாணத்தில் கட்டப்பட்டது.  சாலைகள் மற்றும் கட்டிடங்கள் போன்றவற்றை சரிசெய்ய அல்லது கட்டியமைக்க கைதிகளை ஊதியமில்லாத தொழிலாளர்களாக பயன்படுத்த யோசனை இருந்தது. 


சுதந்திர இந்தியாவின் முதல் திறந்தவெளிச் சிறை 1949-ல், உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள மாதிரிச் சிறைச்சாலையில் அமைக்கப்பட்டது. பின்னர், 1953-ல், உத்தரப் பிரதேசத்தில் ஒரு முழுமையான திறந்தவெளிச் சிறை நிறுவப்பட்டது. அங்குள்ள கைதிகள் சந்திரபிரபா அணை கட்ட உதவினர். இந்த அணை சமீபத்தில் ரூ. 12.58 கோடியில் பழுது நீக்கம் செய்யப்பட்டது.


சுதந்திரத்திற்குப் பிந்தைய குற்றவியல் மாற்றமானது அரசியலமைப்பு நீதிமன்றங்களால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்வேறு வழக்குகளில் அவர்களின் தீர்ப்புகள் மூலம், நீதித்துறையானது மனசாட்சியை உலுக்கிய மனிதாபிமானமற்ற சிறையின் நிலைமைகளை மீண்டும் மீண்டும் எடுத்துரைத்துள்ளது. 1977-ல், உச்ச நீதிமன்றம் கைதிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணி இணக்கமானதாக இருக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு ஊதியம் இல்லாத உழைப்பால் பறிக்கப்பட்ட மனித கண்ணியத்தை மீட்டெடுக்கிறது. இதைத் தொடர்ந்து சிறைக் கைதிகள் ஊதியம் பெறாத வேலையை அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாக அறிவிக்க பல உயர் நீதிமன்றங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் தொடர்ந்தன.


நீதிமன்றங்கள் உண்மையில் நியாயமான குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வு நோக்கத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மாநிலங்களை வலியுறுத்தியது. நீதித்துறையின் உரிமைகள் அடிப்படையிலான முக்கியத்துவம் மற்றும் சிறைச் சீர்திருத்தவாதிகளின் முயற்சிகளால், திறந்த சிறைச்சாலைகள் கடினமான குற்றவாளிகளை, நடைமுறை வாழ்க்கையில் மீண்டும் ஒருங்கிணைக்கும் சீர்திருத்த அணுகுமுறையாக இவை பார்க்கப்படுகிறது.




ஒவ்வொரு மாவட்டத்திலும் திறந்தவெளி சிறை: 


1982 காலகட்டத்தில், 14 மாநிலங்களில் திறந்தவெளிச் சிறைகள் இயங்கின. எவ்வாறாயினும், 2022-ம் ஆண்டில் 17 மாநிலங்களில் மட்டுமே இத்தகைய சிறைகள் இருப்பதுடன், மாநில அதிகாரிகளின் முன்முயற்சியின்மையால் ஏற்பட்ட முன்னேற்றமாக உள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் திறந்தவெளிச் சிறைகளை நிறுவ வேண்டும் என்று 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதிலும் இதன் செயல்பாட்டில் வேகம் குறைந்தது. இதில், ராஜஸ்தான் 41 திறந்தவெளி சிறைகளுடன் முன்னணியில் உள்ளது. மகாராஷ்டிரா 19, மத்தியப் பிரதேசம் 7, குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 4 சிறைகள் உள்ளன. கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தலா மூன்று திறந்தவெளி சிறைகளை நிறுவியுள்ளன. இதற்கிடையில், 11 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், எந்த திறந்த சிறைகளும் இல்லை. அவை சிறைச் சீர்திருத்த  இணக்கத்திற்கு வெகு தொலைவில் உள்ளன.  


திறந்தவெளிச் சிறைச்சாலைகள் இல்லாதது மட்டுமல்ல, தற்போதுள்ள உள்கட்டமைப்பைப் மேம்படுத்திவதிலும் சிக்கல் உள்ளது. சிறைகள் மற்றும் கைதிகள் இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் பட்டியல் II (மாநிலப் பட்டியல்) இன் சேர்க்கை எண். 4 (Entry No. 4) இல் குறிப்பிடப்பட்டு, அவை மாநிலப் பட்டியலில் உள்ளது. இது நாடு முழுவதும் சிறைக் கொள்கைகளில் விரும்பிய மற்றும் விரும்பத்தகாத பன்முகத்தன்மைக்கு வழிவகுத்தது. சிறைச்சாலைகள் மாநிலப் பட்டியலில் இருப்பதன் ஒரு விளைவு என்னவென்றால், பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இன்னும் திறந்தவெளிச் சிறைகளை நிர்வகித்தல், கைதிகளின் தகுதி, நிவாரணம் மற்றும் ஊதியம் ஆகியவற்றிற்கான புறநிலை விதிகள் அல்லது வழிகாட்டுதல்களை நிறுவவில்லை. 


2021 ஆம் ஆண்டில், திறந்தவெளிச் சிறைகளில் 6,000 பேர் வரை சிறையில் அடைக்க முடியும். ஆனால் 2,178 பேர் மட்டுமே இருந்தனர். இது வெறும் 36% மட்டுமே. பின்னர் 2022-ல், இது 74% ஆக உயர்ந்தது. தேசிய அளவில் திறந்தவெளி சிறைகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்குப் பின்னால் மகாராஷ்டிராவும், மேற்கு வங்கமும் முக்கிய பங்கு வகித்துள்ளன. மகாராஷ்டிரா திறந்தவெளி சிறைகளில் அடைப்பு விகிதத்தை 2021-ல் 9% இலிருந்து, 2022-ல் 107% ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மேற்குவங்கம் 2021-ல் 10% இலிருந்து 2022-ல் 54% ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், இது இன்னும் வழக்கமான சிறைகளில் உள்ள நெரிசலின் கடுமையான பிரச்சனையுடன் முரண்படுகிறது. அங்கு ஆக்கிரமிப்பு விகிதங்கள் 300-400% வரை அதிகமாக இருக்கும் அதே வேளையில், மாநிலங்களுக்கு அதிக கைதிகளை சிறைச்சாலை வசதிகளுக்கு மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால், மாநில அதிகாரிகளின் விருப்பமும் முயற்சியும் இல்லாததால், அவர்களை நெரிசலான சிறைகளுக்கு தொடர்ந்து உட்படுத்துகிறது.


முடிவுரை


இந்தியாவின் தண்டனை முறை, பழைய, கண்டிப்பான முறையைப் பயன்படுத்துவது அல்லது கனிவான, மறுவாழ்வு அணுகுமுறைக்கு மாறுவது என்பதான ஒரு பெரிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அதிகமான மக்கள் சிறையில் அடைக்கப்படும் அதே வேளையில், தற்போதைய கொள்கைகள் மற்றும் நிர்வாக விருப்பமின்மை ஆகியவை சிறையில் உள்ள நபர்களை அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு வழிநடத்தத் தவறி வருகின்றன. மாறாக, அவர்கள் மனிதாபிமானமற்ற சிறைச்சாலைகளை தொடர்ந்து சகித்துக்கொண்டிருக்கிறார்கள். சிறைவாசத்தின் மீளமுடியாத விளைவுகளை எதிர்கொள்கிறார்கள். இது அவர்களை மறுவாழ்வில் இருந்து வெகு தொலைவில் வைத்திருக்கிறது.


1835 இல், மெக்காலே இந்திய தண்டனைச் சட்டத்தை எழுதினார். ஆனால், இது இனி பயன்படுத்தப்படவில்லை. இந்தியாவில் உள்ள சிறைகள் மக்களுக்கு மிகவும் மோசமானவை என்று அவர் கூறினார். இப்போது, கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு, 1382 சிறைகளில் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை உச்ச நீதிமன்றம் இன்னும் கையாள்கிறது. கைதிகளை புறக்கணிக்கும் சுழற்சியில் சிக்கியுள்ள இந்தியாவின் சீர்திருத்த அமைப்பில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சனையை இது சுட்டிக்காட்டுகிறது. தொடர்ச்சியான நீதித் தீர்ப்புகள், விரிவான நிபுணர் அறிக்கைகள் மற்றும் சட்டமன்றத் தலையீடுகள் இருந்தபோதிலும், கைதிகளுக்கு மறுவாழ்வு மற்றும் மனிதாபிமான சிகிச்சை அளிக்கப்படும் என்ற வாக்குறுதி பெரும்பாலும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்தியாவின் சீர்திருத்த அமைப்பு ஒரு பெரிய சிக்கலைக் கொண்டுள்ளது. இது கைதிகளை அலட்சியப்படுத்துகிறது. இது நீண்ட காலமாக நடந்து வருகிறது. பல நீதிமன்றத் தீர்ப்புகள், நிபுணர்களின் அறிக்கைகள் மற்றும் புதிய சட்டங்களைச் சரிசெய்ய முயற்சித்தாலும், கைதிகளுக்கு இன்னும் மறுவாழ்வு அளிக்கத் தேவையான உதவி கிடைக்கவில்லை மற்றும் அவர்கள் நன்றாக நடத்தப்படுவதில்லை.


இந்தக் கவலைகளை நிவர்த்தி செய்ய இந்தியா முயற்சி செய்து வரும் நிலையில், திறந்தவெளிச் சிறை இடத்தைப் பாதுகாப்பதற்கான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் அவசரமானதாக இருந்ததில்லை. திறந்தவெளி சிறைச்சாலைகளை நிறுவுதல் மற்றும் செயல்படுதல் பற்றிய கேள்வி, சிறைச்சாலை சீர்திருத்தங்களுக்கான தற்போதைய தேடலில் ஒரு சிறிய பகுதியாகும். தண்டனை மற்றும் மறுவாழ்வு பற்றிய விவாதம் பழிவாங்குதல் மற்றும் குற்றவாளிகளை ஒதுக்கி வைப்பதில் கவனம் செலுத்தும் அணுகுமுறைகளுடன் அடிக்கடி மோதுகிறது. காலப்போக்கில் அரசின் புறக்கணிப்பு, சட்ட மேற்பார்வையின் அடிப்படையில் இருந்தால், திறந்தவெளி சிறைச்சாலைகள் சிறப்பாக செயல்பட உதவாது. நீதி அமைப்பில் மக்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்க, எங்களுக்கு கொள்கை மாற்றங்கள் மற்றும் செயலூக்கமான நடவடிக்கைகள் இரண்டும் தேவை. இவை அனைத்திற்கும் மேலாக மனிதகுலத்தின் மீதான நமது பகிரப்பட்ட நம்பிக்கையிலிருந்து வர வேண்டும்.


ஸ்ருத்திகா பாண்டே ஒரு வழக்கறிஞர் மற்றும் ஆராய்ச்சியாளர். 




Original article:

Share:

இந்தியா ஒரு பெரிய சைபர் கிரைம் சவாலை எதிர்கொள்ளுவதற்குத் தயாராக உள்ளதா? -ரமேஷ் கைலாசம்

 டீப் ஃபேக் (deep fakes) முதல் நிதி மோசடிகள் (financial scams) வரை இணைய குற்றம் (cyber crime) வேகமாக வளர்ந்து வருகிறது. இணைய பாதுகாப்பை மேம்படுத்த புதிய குற்றவியல் விதிகளை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.


கடந்த பத்தாண்டுகளில், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரமாக மாறியுள்ளது. இணைய தளங்கள், ஸ்மார்ட்போன்கள், தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றின் பரவலான பயன்பாடு குடிமக்களின் வாழ்க்கை முறையை மாற்றியுள்ளது. இருப்பினும், இந்த வளர்ச்சி கொள்கை வகுப்பாளர்களுக்கும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் புதிய சவால்களைக் கொண்டு வந்துள்ளது.


டீப் ஃபேக் (deep fakes) சவால்கள்


குறிப்பாக தேர்தல்களின் போது டீப் ஃபேக் காணோலிகள் (Deep fake videos) குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும். இணைய குற்றவாளிகள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆள்மாறாட்ட திருட்டு மற்றும் தவறான தகவல்களை பரப்புவதற்கு மேற்கொள்ளலாம். 


முக்கியமான தலைப்புகளைச் சுற்றியுள்ள டீப் ஃபேக்கள் உடனடி சேதத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. இதில் குறிப்பிட்டுள்ள சில உதாரணமாக, அமித் ஷா டீப் ஃபேக் காணொலி ஒரு குறிப்பிடத்தக்கது. பரவலாகப் பரப்பப்பட்ட சிறு மாற்றம் செய்யப்பட்ட காணொலியில், அமித் ஷா அவர்கள் தெலுங்கானாவில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றுவதைக் காட்டுகிறது. மேலும், யாரோ ஒருவர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இடஒதுக்கீடு தொடர்பாக அவர் கூறியதற்கு நேர்மாறாகச் சித்தரிக்கப்பட்டது.


தனியுரிமை மீறல்கள் மற்றும் நிதி மோசடிகள்


இது ஒரு தனிச் சம்பவம் அல்ல. பிரபல கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா தரவு ஊழல் (Cambridge Analytica data scandal), தேர்தல்களின் போது விளம்பரத்திற்காக 87 மில்லியன் மக்களின் சமூக ஊடக தரவுகளை சேகரித்தது. இதேபோல், அமெரிக்கத் தேர்தல்களின்போதும் வாக்காளரின் தனிவிவரங்களை சேகரிக்க ஒரு முக்கிய உலகளாவிய சமூக ஊடக தளத்திலிருந்து இணையத்தில் முறையற்ற முறையில் பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.


நிதி இணைய மோசடி வங்கிகளுக்கு ஒரு பெரிய பிரச்சனை மற்றும் பொதுவான நபர்களையும் பாதிக்கிறது. இது நிதி நிறுவனங்களுக்கு கடினமானது மற்றும் சாதாரண குடிமக்களை காயப்படுத்தும் ஒரு வகையான இணைய பாதுகாப்பு பிரச்சினை ஆகும். 2023-ம் ஆண்டில், இந்தியாவில் நிதி மோசடிகள் ரூ.7,488.64 கோடியாக இருந்ததாக குடிமக்கள் நிதி சைபர் மோசடி அறிக்கை மேலாண்மை அமைப்பு (Citizen Financial Cyber Fraud Reporting Management System) தெரிவித்துள்ளது.


இணைய பாதுகாப்பை நிவர்த்தி செய்ய பல அமைச்சகங்கள் மற்றும் முகமைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான கட்டமைப்பை இந்தியா நிறுவியுள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry for Electronics and Information Technology (MeitY)) தகவல் தொழில்நுட்ப கொள்கைகள் மற்றும் இணைய சட்டங்களை மேற்பார்வை செய்கிறது. 2020-ல் தொடங்கப்பட்ட இணைய மற்றும் தகவல் பாதுகாப்புப் பிரிவு (Cyber and Information Security Division) மற்றும் இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre) மூலம் இணையப் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை உள் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் கையாள்கிறது.  


உள்துறை அமைச்சகம் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகப்படுத்தியது: பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bhartiya Nagrik Suraksha Sanhita (BNSS)), பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyay Sanhita (BNS)), மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் (Bharatiya Sakshya Adhiniyam(BSA)) 2023-ல், இந்தச் சட்டங்கள் பழைய இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றை மாற்றாக கொண்டுவரப்பட்டது. புதிய சட்டங்கள் டிஜிட்டல் வயது சவால்கள் மற்றும் சைபர் கிரைம் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தியாவின் சட்ட அமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தச் சட்டங்கள் இந்தியாவின் சட்ட அமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஏனெனில், டிஜிட்டல் உலகம் மாறி வருவதால், இணைய குற்றம் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.


புதிய குற்றவியல் சட்டங்களின் பங்கு


வரவிருக்கும் புதிய சட்டங்கள் இந்தியாவின் முன்னேற்றத்தின் முக்கிய குறிகாட்டிகள் என இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் பாராட்டினார். இந்த சட்டங்கள் மின்னணு முதல் தகவல் அறிக்கைகளை (First Information Reports (FIR)) அனுமதிக்கின்றன மற்றும் மின்னணு ஆதாரங்களை முதன்மை ஆதாரமாக அங்கீகரிக்கின்றன. பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bhartiya Nagrik Suraksha Sanhita (BNSS)) ஆனது குற்றவியல் அடையாளத்தின் தரவுக்கான சேகரிப்பை அனுமதிக்கிறது மற்றும் மின்னணு சோதனைகள், விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளை அனுமதிக்கிறது. பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் (Bharatiya Sakshya Adhiniyam(BSA)) மின்னணு பதிவுகளை முதன்மை ஆதாரமாக வகைப்படுத்துகிறது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற சாதனங்களில் சேமிக்கப்பட்ட தரவைச் சேர்க்க வரையறையை விரிவுபடுத்துகிறது.


பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் (Bharatiya Sakshya Adhiniyam(BSA)) 2023, டிஜிட்டல் காலத்திற்கு ஏற்புடையதாக உள்ளது. இது மின்னணு பதிவுகளை ஆவணங்களாக வகைப்படுத்துகிறது. இந்திய சாட்சிகள் சட்டம் மின்னணு பதிவுகளை இரண்டாம் நிலை சான்றுகளாக வகைப்படுத்துகிறது. இருப்பினும், புதிய சட்டத்தின் கீழ், மின்னணு பதிவுகள் முதன்மை ஆதாரமாக வகைப்படுத்தப்படுகின்றன. குறைகடத்தி நினைவகம் (semiconductor memory) அல்லது ஏதேனும் தகவல் தொடர்பு சாதனங்களில் (ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்றவை) சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவலைச் சேர்க்க இது போன்ற பதிவுகளை விரிவுபடுத்துகிறது.


புதிய சட்டங்கள் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்த அனுமதிக்கின்றன. இது மிகவும் திறமையாக ஆதாரங்களை சேகரிக்க உதவுகிறது. ஆதாரங்களை சிறப்பாக முன்வைப்பதற்கும் இது உதவுகிறது. இந்தியாவின் சட்ட கட்டமைப்பிற்கான இந்த திருத்தங்கள் விசாரணை மற்றும் நீதித்துறை செயல்முறையை தெளிவாக எளிதாக்கும். இணைய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளுக்கு இது குறிப்பாக உண்மை. டிஜிட்டல் இடைவெளிகள் (digital spaces) டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய பாதுகாப்பு குற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்த குற்றங்கள் பொதுவாக டிஜிட்டல் வடிவங்களில் ஆதாரங்களை விட்டுச் செல்கின்றன.


எவ்வாறாயினும், விசாரணைச் செயல்பாட்டின் போது இத்தகைய பதிவுகள் சேதப்படுத்தப்படுவதையும் மாசுபடுவதையும் தடுக்க நம்பகமான பாதுகாப்புகளை நிறுவுவது தொடர்பான சவால்களை இது ஏற்படுத்தும். இந்தச் செயல்பாட்டில் சேகரிக்கப்படும் பெரிய அளவிலான தரவுகள் பாதுகாக்கப்படுவதையும், தனிநபர்களின் தனியுரிமைக்கான உரிமையை நிலைநிறுத்துவதையும் உறுதி செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேலும் மேற்கொள்ள வேண்டும்.




Original article:

Share:

குறைந்தபட்ச ஆதரவுக் கொள்கையுடன் இறக்குமதிக் கொள்கை நன்கு ஒருங்கிணைக்கப்பட வேண்டும் -அசோக் குலாட்டி , ரித்திகா ஜுனேஜா

 முதலாவதாக, அனைத்து இறக்குமதி வரிகளையும் திடீரென நீக்குவதை விட, படிப்படியாக செய்திருக்கலாம். 

 

இரண்டாவதாக, முக்கிய பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price (MSP)) விட இறக்குமதி செய்யப்பட்ட விலை (landed price) குறைவாக இல்லை என்பதை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 


மூன்றாவதாக, உள்நாட்டு விலைகள் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கீழே சென்றால், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (National Agricultural Cooperative Marketing Federation of India (NAFED)) இடையகப் பங்குகளை உருவாக்ககுறைந்தபட்ச ஆதரவு விலையில் பெரிய அளவிலான கொள்முதலை மேற்கொள்ள வேண்டும்.


 இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI)) நுகர்வோர் விலை பணவீக்கத்தை அதன் இலக்கு வரம்பான 4±2 சதவீதத்திற்குள் வெற்றிகரமாக வைத்துள்ளது. இது ஒட்டுமொத்த நிதி நிலையை பராமரித்து, முன் எப்பொழுதும் இல்லாத உபரிகளை உருவாக்கி, ஒன்றிய அரசுக்கு 2.11 டிரில்லியன் ரூபாய் குறிப்பிடத்தக்க வருமானத்தை வழங்குகிறது. பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அதே வேளையில், இந்தியா அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை (7 சதவீதத்திற்கு மேல்) அடைவதை உறுதிசெய்ய,  இந்திய ரிசர்வ் வங்கி  நிதி அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி பணவியல் கொள்கையின் (monetary policy) மூலம் விலைகளைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், உணவுப் பணவீக்கத்தை எதிர்கொள்ள வர்த்தகக் கொள்கைகள் மற்றும் திறந்த சந்தை செயல்பாடுகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.  உணவு பணவீக்கம்  8 சதவீதமாக உள்ளது. கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் மீது அரசாங்கம் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இது நுகர்வோருக்கு நன்மை பய்க்கும். ஆனால், விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.  


2023-24-ல் இந்தியாவின் விவசாய இறக்குமதி 8 சதவீதம் குறைந்து 2022-23ல் $35.7 பில்லியனிலிருந்து $32.8  பில்லியனாக குறைந்தது. நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் விவசாய இறக்குமதிக்கான சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் (average annual growth rate (AAGR)) ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ( United Progressive Alliance(UPA)) அரசாங்கத்தின் கீழ் 14 சதவீதத்திலிருந்து 2014-15 முதல் 2023-24 வரை 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது விவசாயத்தில் அதிக தன்னிறைவுக்கான போக்கைக் குறிக்கிறது. இதைப் புரிந்து கொள்ள, இந்தியாவின் மாறிவரும் விவசாய இறக்குமதி கூடை மற்றும் அதை பாதிக்கும் காரணிகளை ஆராய்வோம்.


2023-24-ஆம் ஆண்டில், விவசாய இறக்குமதியின் மதிப்பு முக்கியமாக குறைந்துள்ளது. ஏனெனில், சமையல் எண்ணெய்களின் விலை 28.5 சதவிகிதம், ஒரு வருடத்தில் 20.8 பில்லியன் டாலரிலிருந்து 14.9 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இருப்பினும், 2022-23 மற்றும் 2023-24 ஆகிய இரண்டிலும் இறக்குமதியின் அளவு சுமார் 15-16 மில்லியன் மெட்ரிக் டன்கள் இருந்தது. இந்தியா வழக்கமாக தனது சமையல் எண்ணெய் நுகர்வில் 55 முதல் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. சமையல் எண்ணெய்களில், பாமாயில் 50 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. அதைத் தொடர்ந்து சோயாபீன் மற்றும் சூரியகாந்தி உள்ளது. சர்வதேச சந்தையில் பாமாயில் விலை குறைந்ததே இறக்குமதி மதிப்பு குறைவதற்கு முக்கிய காரணம், உணவு மற்றும் விவசாய அமைப்பின் (Food and Agriculture Organization (FAO))  தாவர எண்ணெய் துணைக் குறியீடு 2022-23-ல் 168.5 புள்ளிகளிலிருந்து 2023-24-ல் 123.4 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. இது உலகளாவிய விலைகளைக் குறைப்பதைக் குறிக்கிறது மற்றும் 2023-24-ல் இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி செலவுகளைக் குறைத்தது. 


இந்தியாவின் விவசாய இறக்குமதிகள் முக்கியமாக சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள், சர்க்கரை, மசாலா, முந்திரி மற்றும் பிற பொருட்கள் ஆகும். பருப்பு இறக்குமதி 2016-17-ல்  $4.2 பில்லியனிலிருந்து 2022-23ல் $1.9 பில்லியனாகக் குறைந்துள்ளது. ஆனால், 2023-24ல் திடீரென இருமடங்காக, $3.7 பில்லியனாக இருந்தது. 2016-17-ஆம் ஆண்டில், உள்நாட்டு பருப்பு உற்பத்தி சுமார் 6 மில்லியன் மெட்ரிக் டன்கள் அதிகரித்து, உபரி மற்றும் உள்நாட்டு விலையைக் குறைத்தது. உள்நாட்டு விலையை ஆதரிக்க, இந்திய அரசு பருப்பு, புறா பட்டாணி / துவரம் பருப்பு மற்றும் கொண்டைக்கடலை மீது 30% இறக்குமதி வரியை விதித்தது. பின்னர், கொண்டைக்கடலை மீதான இறக்குமதி வரி 40%-ஆகவும், மார்ச் 2018-க்குள் 60%-ஆகவும் அதிகரித்தது. மஞ்சள்/வெள்ளை பட்டாணிக்கு, 50% வரியும், குறைந்தபட்ச விலையான ரூ. 200/கிலோவாகவும் சேர்க்கப்பட்டது. இந்த வரம்புக்குக் கீழே இறக்குமதி செய்யப்படுவது தடுக்கப்படுகிறது. 


பருப்பு உற்பத்தி மெதுவாக, சுமார் 25-27 மில்லியன் மெட்ரிக் டன்களாக உள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள், மெதுவான உள்நாட்டு உற்பத்தியுடன், பருப்பு வகைகளின் உயர் பணவீக்கத்திற்கு வழிவகுக்கிறது. ஏப்ரல் 2024-ல், பருப்பு வகைகளின் பணவீக்கம் 17%-ஆக இருந்தது. அதே சமயம் துர் (tur) 31% பணவீக்கம் இருந்தது. விலையைக் கட்டுப்படுத்த, பருப்பு இறக்குமதியை 2024-25 இறுதி வரை வரியின்றி அரசு அனுமதிக்கிறது. இது விவசாயிகளை பாதிக்கலாம் ஆனால் நுகர்வோருக்கு உதவும்.


உள்நாட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்கையுடன் இணைந்த பகுத்தறிவு வர்த்தகக் கொள்கை தேவை. திடீரென இறக்குமதி வரிகளை பூஜ்ஜியமாகக் குறைப்பதற்குப் பதிலாக, படிப்படியாகச் செய்யலாம். இறக்குமதி செய்யப்பட்ட விலைகள் குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறைவாக இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். உள்நாட்டு விலை குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கீழே குறைந்தால், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (National Agricultural Cooperative Marketing Federation of India (NAFED)) இடையகப் பங்குகளை உருவாக்க குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருப்பு வகைகளை வாங்க வேண்டும், இல்லையெனில் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். 


இதே அணுகுமுறை சமையல் எண்ணெய்கள்/எண்ணெய் வித்துக்களுக்கும் பொருந்தும். இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் விலை உள்நாட்டு குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கீழே குறையாது என்பதை உறுதி செய்கிறது. தேசிய சமையல் எண்ணெய் -ஆயில் மற்றும் எண்ணெய் பனைக்கான திட்டம்  (National Edible Oil Mission-Oil Palm (NMEO-OP)) மூலம் சமையல் எண்ணெய்களில் தன்னிறைவு என்ற பிரதமரின் குறிக்கோளுக்கு இது மிகவும் முக்கியமானது. பாரம்பரிய எண்ணெய் வித்துக்கள் போதாது. பொருத்தமான நிலத்தில் பாமாயிலை ஊக்குவித்தல் அவசியம்.

 

முடிவாக, வர்த்தகக் கொள்கை, குறிப்பாக இறக்குமதி தாராளமயமாக்கல், குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்கையுடன் ஒத்துப்போக வேண்டும். பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கு இது மிகவும் முக்கியமானது. அவைகளுக்கு குறைந்த நீர் மற்றும் உரம் தேவைப்படும் மற்றும் விவசாயிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்கிறது.




Original article:

Share:

பூமியின் துருவங்களிலிருந்து வெப்ப உமிழ்வுகளை அளவிட நாசா ஏன் ஒரு சிறிய செயற்கைக்கோளை அனுப்பியது? -அலிந்த் சவுகான்

 பூமியின் துருவத்திலிருந்து தொலைதூர அகச்சிவப்பு கதிர்வீச்சை (far-infrared radiation) அளவிட நாசாவினால் ஏவப்பட்ட இரண்டு காலநிலை செயற்கைக்கோள்களில் இந்த செயற்கைக்கோள் ஒன்றாகும்.  இதன் பணியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்  இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. 


மே 25 அன்று, அமெரிக்காவின் தேசிய வானியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் நாசா (National Aeronautics and Space Administration (NASA)) நியூசிலாந்தின் மாஹியாவில் இருந்து ராக்கெட் ஆய்வகத்தின் எலக்ட்ரான் ராக்கெட்டில் அமர்ந்து பூமியின் துருவங்களில் வெப்ப உமிழ்வுகளைப் ஆய்வு செய்யும் இரண்டு காலநிலை செயற்கைக்கோள்களில் (climate satellite) ஒன்றை ஏவியது. அடுத்த சில நாட்களில் இரண்டாவது செயற்கைக்கோள் ஏவப்படும்.


ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் CubeSats என்று அழைக்கப்படுகின்றன. இவை சிறிய, கனசதுர வடிவிலான செயற்கைக்கோள்கள் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவால் வெளிப்படும் வெப்பத்தை அளவிடும். இந்த பகுதிகள் பூமியில் மிகவும் குளிரானவை. இந்த வெப்பம் பூமியின் காலநிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் செயற்கைக்கோள்கள் ஆய்வு செய்யும். இந்த பணிக்கு தூர அகச்சிவப்பு சோதனையில் துருவ கதிர்வீச்சு ஆற்றல் (Polar Radiant Energy in the Far-InfraRed Experiment(PREFIRE)) என்று பெயரிடப்பட்டது மற்றும் நாசா மற்றும் அமெரிக்காவின் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகம் (University of Wisconsin-Madison (US)) இணைந்து உருவாக்கப்பட்டது.


பூமியின் துருவங்களில் வெப்ப உமிழ்வை ஏன் ஆராய்ச்சியாளர்கள் அளவிட விரும்புகிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு பார்வை இங்கே உள்ளது.


ஆனால் முதலில், CubeSats என்றால் என்ன?


CubeSats-கள் அடிப்படையில் சிறிய செயற்கைக்கோள்கள் ஆகும். அதன் அடிப்படையான வடிவமைப்பு 10 செ.மீ x 10 செ.மீ x 10 செ.மீ (இது “ஒரு யூனிட்” அல்லது “1U”) கன சதுரம் ஆகும். இது ரூபிக் கனசதுரத்தை (Rubik’s cube) விட சற்று பெரியது மற்றும் அதன் எடை 1.33 கிலோவுக்கு மிகாமல் இருக்கும். நாசாவின் கூற்றுப்படி, CubeSat-ன் பணியைப் பொறுத்து, அலகுகளின் எண்ணிக்கை 1.5, 2, 3, 6 மற்றும் 12 ஆக இருக்கலாம்.


 இந்த செயற்கைக்கோள்கள் முதன்முதலில் 1999-ல் கலிபோர்னியா பாலிடெக்னிக் மாநில பல்கலைக்கழகம் (California Polytechnic State University) மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தால் (Stanford University) உருவாக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. பாரம்பரிய செயற்கைக்கோள்களை விட அவை மலிவானவை மற்றும் இலகுவானவை என்பதால், புதிய தொழில்நுட்பத்தை சோதிப்பதற்காகவும், அறிவியல் சோதனைகளை மேற்கொள்வதற்காகவும், வணிக காரணங்களுக்காகவும் சிறிய செயற்கைக்கோள்களை  சுற்றுப்பாதையில் செலுத்தத் தொடங்கின.


தூர-அகச்சிவப்பு சோதனையில் துருவ கதிர்வீச்சு ஆற்றல் (Polar Radiant Energy in the Far-InfraRed Experiment(PREFIRE)) செயற்கைக்கோள்கள் சிறியவை, அவற்றின் சோலார் பேனல்கள் வெளியேறும்போது 90 செமீ உயரமும் கிட்டத்தட்ட 120 செமீ அகலமும் இருக்கும். அவை ஆறு அலகுகள் கொண்ட குயூப்சாட்ஸ் (6U CubeSats) என்று அழைக்கப்படுகின்றன. இரண்டு செயற்கைக்கோள்களும் சுமார் 525 கிலோமீட்டர் உயரத்தில் துருவ சுற்றுப்பாதையில் (குறைந்த பூமியின் சுற்றுப்பாதையில்) நிலைநிறுத்தப்படும்.


கியூப்சாட்கள் (CubeSats) என்பது நானோ மற்றும் மைக்ரோசாட்லைட்டுகளின் ஒரு பிரிவாகும். நாசா ஆராய்ச்சியாளர்கள் ஏன் பூமியின் துருவங்களில் வெப்ப உமிழ்வை அளவிட விரும்புகிறார்கள்? 

 

இது பூமியின் ஆற்றல் பட்ஜெட்டுடன் (energy budget) தொடர்புடையது. இது சூரியனிலிருந்து பூமிக்கு வரும் வெப்பத்தின் அளவு மற்றும் பூமியிலிருந்து விண்வெளிக்கு வெளிவரும் வெப்பத்தின் அளவு ஆகியவற்றுக்கு இடையே உள்ள சமநிலை ஆகும். இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு கிரகத்தின் வெப்பநிலை மற்றும் காலநிலையை தீர்மானிக்கிறது. ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவில் இருந்து அதிக வெப்பம் தொலைதூர அகச்சிவப்பு கதிர்வீச்சாக அனுப்பப்படுகிறது. இந்த கதிர்வீச்சு 3 μm மற்றும் 1,000 μm இடையே அலைநீளங்களைக் கொண்டுள்ளது. இது மின்காந்த கதிர்வீச்சின் அகச்சிவப்பு வரம்பின் ஒரு பகுதியாகும்.  


தூர-அகச்சிவப்பு சோதனையில் துருவ கதிர்வீச்சு ஆற்றல் (PREFIRE) பணியின் நோக்கம் என்ன?   


தூர-அகச்சிவப்பு சோதனையில் துருவ கதிர்வீச்சு ஆற்றல் (PREFIRE) பணியானது பூமியின் துருவங்களில், குறிப்பாக ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவில் வெப்ப உமிழ்வை அளவிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பகுதிகள் கணிசமான அளவு வெப்பத்தை தூர-அகச்சிவப்புக் கதிர்களாக வெளியிடுகின்றன. இது மின்காந்தக் கதிர்வீச்சின் அகச்சிவப்பு வரம்பில் உள்ள ஒரு வகை ஆற்றலாகும். தற்போது, ​​இந்த வகையான கதிர்வீச்சை துல்லியமாக அளவிட எந்த முறையும் இல்லை. இது பூமியின் ஆற்றல் பட்ஜெட்டை (energy budget) புரிந்து கொள்வதில் ஒரு இடைவெளியை விட்டுச்செல்கிறது. 


ஒவ்வொரு தூர-அகச்சிவப்பு சோதனையில் துருவ கதிர்வீச்சு ஆற்றல் (PREFIRE) CubeSat-லும் வெப்ப அகச்சிவப்பு நிறமாலை அளவீடு (THermal Infrared Spectrometer(TIRS)) எனப்படும் இந்த சாதனம் துருவங்களில் இருந்து அகச்சிவப்பு மற்றும் தூர அகச்சிவப்பு கதிர்வீச்சை அளவிடுகிறது. அகச்சிவப்பு ஒளியைப் பிரிக்கவும் அளவிடவும் வடிவமைக்கப்பட்ட சிறப்பு வடிவ கண்ணாடிகள் (special mirrors) மற்றும் கண்டுபிடிக்கும் கருவி (detectors) கொண்டுள்ளது. 


துருவங்களில் உள்ள நீராவி மற்றும் மேகங்களால் எவ்வளவு தூர அகச்சிவப்பு கதிர்வீச்சு சிக்கியுள்ளது என்பதை CubeSats அளவிடும். இது அங்குள்ள பசுமைஇல்ல வாயுவின் விளைவை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. 




Original article:

Share: