காஷ்மீரில் தீவிரவாதிகளால் 7 பேர் கொல்லப்பட்ட Z-Morh திட்டம் என்றால் என்ன? அது ஏன் முக்கியமானது? - பஷாரத் மசூத்

 ஜம்மு காஷ்மீரில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்பு திட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.


ஜம்மு-காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். ஸ்ரீநகர்-சோனாமார்க் நெடுஞ்சாலையில் Z-Morh சுரங்கப்பாதையை உருவாக்கும் நிறுவனமான APCO Infratech-ன் தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஜம்மு காஷ்மீரில் முக்கியமான உள்கட்டமைப்பு திட்டத்தை தீவிரவாதிகள் குறிவைப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு, இதுபோன்ற திட்டங்கள் இப்பகுதியில் தீவிரவாதிகளால் தாக்கப்படவில்லை.


Z-Morh சுரங்கப்பாதை என்றால் என்ன, அதன் முக்கியத்துவம் என்ன?


Z-Morh சுரங்கப்பாதை 6.4-கிலோமீட்டர் சுரங்கப்பாதையாகும். இது சோனாமார்க் சுகாதார ரிசார்ட்டை மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள கங்கன் நகரத்துடன் இணைக்கிறது. இது சோனாமார்க்கிற்கு சற்று முன்பு ககாங்கிர் கிராமத்திற்கு அருகில் கட்டப்பட்டு வருகிறது. இந்த சுரங்கப்பாதையானது ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான சோனாமார்க்கிற்கு அனைத்து வானிலை அணுகலையும் அனுமதிக்கும்.


இசட் வடிவ சாலைப் பகுதி கட்டப்பட்டு வருவதால் சுரங்கப்பாதைக்கு அதன் பெயர் வந்தது. இந்த பகுதி 8,500 அடிக்கு மேல் உயரம் கொண்டது மற்றும் குளிர்காலத்தில் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் விளைவாக, பெரும்பாலான குளிர்காலங்களில் சோனாமார்க் செல்லும் சாலை அடிக்கடி மூடப்படும்.


எல்லைச் சாலைகள் அமைப்பு முதலில் 2012-ல் சுரங்கப்பாதைத் திட்டத்தைத் திட்டமிட்டது. ஆரம்பத்தில், அவர்கள் கட்டுமான ஒப்பந்தத்தை டன்னல்வே லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கினர். இருப்பினும், இந்தத் திட்டம் பின்னர் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (National Highways & Infrastructure Development Corporation Limited (NHIDCL)) வசம் ஒப்படைக்கப்பட்டது. Shri Amarnathji Tunnel Private Limited (APCO) என்ற சிறப்பு நோக்க வாகனத்தின் மூலம் திட்டத்தை செயல்படுத்துகிறது.


Z-Morh சுரங்கப்பாதை திட்டம் ஆகஸ்ட் 2023க்குள் முடிக்கப்படும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அது தாமதத்தை எதிர்கொண்டது. சுரங்கப்பாதையின் மென்மையான திறப்பு இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்தது. இத்திட்டம் ஏறக்குறைய நிறைவடைந்தாலும், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கான மாதிரி நடத்தை விதிகள் (எம்சிசி) காரணமாக அதன் அதிகாரப்பூர்வ திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இந்த சுரங்கப்பாதையானது சோனாமார்க் ஹெல்த் ரிசார்ட்-ஐ அனைத்து வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப ஆண்டு முழுவதும் லடாக்குடன் இணைக்கும். லடாக்கின் எல்லைப் பகுதிகளுக்கு ராணுவ வீரர்களை விரைவாக அணுகுவதற்கு இந்த இணைப்பு முக்கியமானது.


தற்போது சோஜிலா சுரங்கப்பாதை (Zojilla tunnel) 12,000 அடி உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்த சுரங்கப்பாதை காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள சோனாமார்க்கை லடாக்கில் உள்ள டிராஸுடன் இணைக்கும் மற்றும் 2026 டிசம்பரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக அனைத்து வானிலை இணைப்பை உறுதி செய்ய Z-Morh சுரங்கப்பாதையை திறப்பது அவசியம்.




Original article:

Share:

வளரும் நாடுகளுக்கான காலநிலை நிதி குறித்து… -அர்ஜூன் தத்,ககன் சித்து

 வளரும் நாடுகள் ஏன் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றன? காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு காலநிலை நிதியை எவ்வாறு வரையறுக்கிறது? பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (Organization for Economic Cooperation and Development (OECD)) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் ஏன் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன? இந்தியாவுக்கு காலநிலை நிதி (climate financing) தேவையா? 


காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு உறுப்பு நாடுகளின் (United Nations Framework Convention on Climate Change (UNFCC)) 29-வது மாநாடு (COP29) அஜர்பைஜானில் உள்ள பாகுவில் நடைபெற உள்ளது. மாநாடு நவம்பர் 11 முதல் 22 வரை திட்டமிடப்பட்டுள்ளது. 


29-வது மாநாடு "நிதி சார்ந்த நாடுகளின் மாநாடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலநிலை நிதி சிக்கல்கள் மாநாட்டின் முக்கிய விவதாக பொருளாக இருக்கும்.


வளரும் நாடுகள் அதிக ஆபத்தில் உள்ளனவா? 


பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடுகள் காலநிலை மாற்றத்தின் காரணமாக கடுமையாக பாதிக்கப்படுகின்றன. புவியியல் காரணிகள் மற்றும் அவர்களின் பொருளாதாரங்கள் விவசாயம் போன்ற துறைகளை பெரிதும் நம்பியிருப்பதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. விவசாயம் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாறும் தன்மை கொண்டது. இந்த நாடுகளில் வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரங்கள் மற்றும் சிறப்பு மனித வளங்கள் உள்ளன. இதன் காரணமாக, மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப அவை குறைந்த திறன் கொண்டவை. பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து  மீண்டு வர இந்த நாடுகள் பல்வேறு  திறன்களைக் கொண்டுள்ளன. 


வளரும் நாடுகள் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என்றாலும், அவை ஏற்படுத்தும் மொத்த உமிழ்வுகளில் அவை மிகக் குறைவான பங்களிப்பை வழங்கியுள்ளன. காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழுவின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின்படி, 1850-ஆம் ஆண்டு முதல் மொத்த உலகளாவிய உமிழ்வுகளில் 57% வளர்ச்சியடைந்த நாடுகளே காரணமாகின்றன. அவை வளரும் நாடுகளை விட சிறிய மக்கள்தொகையைக் கொண்டிருந்தாலும், வளரும் நாடுகள் வளங்களுக்காக பிறநாடுகளை சார்ந்துள்ளன. இதனால் அவர்கள் காலநிலை தொடர்பாக நடவடிக்கை எடுப்பது மிகவும் கடினமாகிறது.


2009 கோபன்ஹேகன் உடன்படிக்கையின்படி (Copenhagen Accord), 2020-க்குள் வளரும் நாடுகளுக்கு பருவநிலை நிதியாக ஆண்டுக்கு $100 பில்லியன் வளர்ந்த நாடுகள் வழங்க வேண்டும். இந்த உறுதிமொழி பின்னர் 2025 வரை நீட்டிக்கப்பட்டது. 2025-க்குப் பிறகு புதிய நிதி இலக்கு பற்றி 29-வது கட்சிகளின் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

 


காலநிலை நிதி (climate finance) என்றால் என்ன? 


காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு (UNFCCC) காலநிலை நிதி என்பது உள்ளூர், தேசிய அல்லது அல்லது பன்னாட்டு பொது, நிதியுதவி - தனியார் மற்றும் மாற்று மூலங்களிலிருந்து பெறப்பட்டது


காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)) காலநிலை நிதியை உள்ளூர், தேசிய அல்லது பன்னாட்டு நிதியுதவி - பொது, தனியார் மற்றும் மாற்று மூலங்களிலிருந்து பெறப்பட்ட நிதி என வரையறுக்கிறது. உமிழ்வைக் குறைத்தல் மற்றும் அதன் விளைவுகளை குறைத்தல் போன்ற காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கு இந்த நிதி உதவுகிறது.


காலநிலை நிதிக்கு இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன:


1. ஆதாரங்கள் : இது ஒரு நாட்டிற்குள் அல்லது எல்லை தாண்டி வரக்கூடிய பொது அல்லது தனியார் நிதியை  குறிக்கிறது.


2. பயன்பாடுகள் : இது காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் அல்லது அதன் விளைவுகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் குறிக்கிறது.


பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development (OECD)) வளர்ந்த நாடுகளில் இருந்து வளரும் நாடுகளுக்கு காலநிலை நிதி எவ்வாறு பயனளிக்கிறது என்பது குறித்த அறிக்கைகளை வெளியிடுகிறது. இந்த அறிக்கைகள் சர்வதேச பொது நிதி மற்றும் அதிலிருந்து திரட்டப்படும் தனியார் நிதி உட்பட நான்கு நிதி ஆதாரங்களை கொண்டுள்ளது. 


சசர்வதேச பொது காலநிலை நிதியானது வணிகக் கடன்கள், சலுகைக் கடன்கள், மானியங்கள், ஈக்விட்டி மற்றும் பிற நிதிக் கருவிகளை உள்ளடக்கியது. 2022-ஆம் ஆண்டில் 69.4% ஆகவும், அதைத் தொடர்ந்து 28% மானியமாகவும் இருக்கும் கடன்கள் பொதுவாக மிகப்பெரிய பகுதியை உருவாக்குகின்றன.


இருப்பினும், வளரும் நாடுகள் மற்றும் Oxfam போன்ற நிறுவனங்கள் OECD-ன் அறிக்கைகளில் உள்ள சிக்கல்களைச் சுட்டிக்காட்டியுள்ளன. காலநிலை நிதியை வழங்குவதற்கான வாக்குறுதிகள் மட்டுமல்ல, உண்மையான நிதி பற்றிய அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கூறுகின்றனர். நிதியானது புதியதாகவும் கூடுதலாக வழங்க பட வேண்டும் என்று கூறுகின்றனர். கடைசியாக, சலுகை நிதியின் மானியங்கள் அல்லது மானியத்திற்கு சமமானவை மட்டுமே கணக்கிடப்பட வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். வணிக அடிப்படையில் நிதி வழங்கப்படக் கூடாது என்று கூறுகின்றனர். 


காலநிலை நிதி யாருக்கு தேவை? 


வளரும் நாடுகளுக்கு காலநிலை நடவடிக்கைக்கு வெளிநாட்டு நிதி தேவைப்படுகிறது. இந்த நாடுகளில் உள்ள 675 மில்லியன் மக்களுக்கு 2021-ல் மின்சாரம் கிடைக்கவில்லை என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் (International Energy Agency (IEA)) தெரிவித்துள்ளது. இந்த நாடுகள் அனைவருக்கும் மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்து ஒட்டுமொத்த மின்சார பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.


கூடுதலாக, வளரும் நாடுகள் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது சிறிய நிதி அமைப்புகளைக் கொண்டுள்ளன மற்றும் அதிக கடன் மற்றும் செலவுகளை எதிர்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, சூரிய ஆற்றல் மற்றும் சேமிப்புத் தொழில்நுட்பங்களுக்கான மூலதனச் செலவு, வளர்ந்த நாடுகளில் இருப்பதைவிட, வளரும் நாடுகளில் இரு மடங்கு அதிகமாக உள்ளது என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, வளர்ச்சி மற்றும் காலநிலை நடவடிக்கையை சமநிலைப்படுத்த, வளரும் நாடுகளுக்கு வெளிநாட்டு நிதி கிடைக்க வேண்டும். 


இந்தியாவுக்கு எவ்வளவு தேவை? 


இந்தியா குறுகிய கால மற்றும் நீண்ட கால காலநிலை இலக்குகளைக் கொண்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள், புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆதாரங்களில் இருந்து 500 ஜிகாவாட் உற்பத்தி திறனை உருவாக்குவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு ஐந்து மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை (green hydrogen (GH2)) உற்பத்தி செய்யவும். பல்வேறு வகையான மின்சார வாகனங்களுக்கு (EVகள்) பல்வேறு நிலைகளை ஏற்றுக்கொள்வதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. 2030 ஆம் ஆண்டில் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அடைய கூடுதலாக ₹ 16.8 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும் என்று அறிக்கையின் ஆசிரியர்கள் மதிப்பிட்டுள்ளனர். 


தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் படி, பச்சை ஹைட்ரஜன் (GH2) இலக்கை அடைய ₹8 லட்சம் கோடி தேவைப்படும். இந்த இலக்குகளை அடைய நுகர்வோர்கள் மின்சார வாகனங்களை வாங்குவதற்கு சுமார் ₹16 லட்சம் கோடி செலவழிக்க வேண்டும். ​​நிகர-பூஜ்ஜிய உமிழ்வை (net-zero emissions) அடைய 2020 முதல் 2070 வரை இந்தியாவுக்கு மொத்தம் ₹850 லட்சம் கோடி முதலீடுகள் தேவைப்படும்.

 

புதிய கூட்டு அளவு இலக்கு (New Collective Quantified Goal (NCQG)) என்னவாக இருக்க வேண்டும்? 


புதிய வருடாந்திர காலநிலை நிதி திரட்டல் இலக்கை தீர்மானிப்பது - புதிய கூட்டு அளவிடப்பட்ட இலக்கு (New Collective Quantified Goal (NCQG)) என்று அழைக்கப்படுகிறது. NCQG ஆனது (i) உண்மையான பட்டுவாடா, வெறும் கடமைகள் மட்டுமல்ல (ii) புதிய மற்றும் கூடுதல் நிதி  (iii) நேரடி மானிய வடிவில் பொது மூலதனம்; மற்றும் (iv) பொது மூலதனத்தால் திரட்டப்படும் தனியார் மூலதனம். 


இருப்பினும், வளரும் நாடுகளுக்கு இயல்பாக வரும் தனியார் நிதியை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. இருப்பினும், வளரும் நாடுகளுக்கு இயற்கையாக வழங்கபட்டு வரும் தனியார் நிதியைக் கணக்கிடக்கூடாது. COP26 மற்றும் COP27-ன் தலைவர்களால் அமைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழு, வளரும் நாடுகளுக்கு (சீனாவைத் தவிர) 2030-ஆம் ஆண்டுக்குள் சுமார் $1 டிரில்லியன் வெளி நிதி தேவைப்படும் என்று கண்டறிந்துள்ளது.


அர்ஜுன் தத் மற்றும் ககன் சித்து ஆகியோர் சி.இ.இ.டபிள்யூ எரிசக்தி நிதி மையத்தில் முறையே மூத்த திட்ட தலைவர் மற்றும் இயக்குநராக உள்ளனர்.




Original article:

Share:

ஆளுநர் Vs அரசு: தமிழ்நாட்டில் நிலவும் பகைமை குறித்து…

 தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும் ஆளுநர் ரவியை திரும்பப் பெற வேண்டும். 


சிறிது கால ஒத்துழைப்புக்குப் பிறகு, தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே மோதல் போக்கு மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த முறை, பிரசார் பாரதி நிகழ்ச்சியில் மாநில கீதம் தவறாகக் பாடப்பட்டதே இந்த மோதலுக்கு  முக்கிய காரணமாகும். 1970 முதல் அரசு விழாக்களில் வாழ்த்துப் பாடலாக பாடப்பட்டு வரும் தமிழ்த்தாய் வாழ்த்து 2021 டிசம்பரில் மாநில கீதமாக அறிவிக்கப்பட்டது. 


தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று சட்டரீதியான அல்லது நிர்வாக உத்தரவு எதுவும் இல்லை என்று ஒரு நீதிபதி தீர்ப்பளித்தார். ஒரு மதத் தலைவர் பாடல் நிகழ்ச்சியின் போது அமர்ந்திருந்ததை அடுத்து நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கினார். ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், 55 வினாடி கீதத்தில் 'திராவிடநல் திருநாடு' என்ற வரி நீக்கப்பட்டது. இது கவனக்குறைவு என்று கூறப்பட்டாலும், அதை மேடையில் சரிசெய்ய யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆளுநர் திரு.ரவி "ஆளுநராக" இருக்கிறாரா அல்லது "ஆரியராக" இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின், அடையாளத்தின் மீது வெறுப்பை காட்டிவரும் ஆளுநர், தேசிய கீதத்திலிருந்து "திராவிடர்" என்ற வார்த்தையை நீக்க முன்மொழிவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

 

இந்த கருத்திற்கு ஆளுநர், "ஆரிய" என்று குறிப்பிட்டதை  "இனவெறி" என்று கூறினார் இத்தகைய விளக்கம் ஆரியர், திராவிடர் என்ற கருத்தாக்கம் முக்கியமாக "இனப் பிரிவினையைக் காட்டிலும்" புவியியல் ரீதியானது என்ற ஆளுநரின் நம்பிக்கைக்கு எதிரானது. ஆங்கிலேயர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப அதை "இன" ரீதியாக மாற்றியதாக ஆளுநர் நினைக்கிறார். 


தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முதலமைச்சரின் பதவியின் கண்ணியத்தை குறைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார். பாடகர்கள் வரியைத் தவிர்த்ததற்கு ஆளுநரை தொடர்புபடுத்துவது தவறு என்றாலும், ஆளுநர் ஆர்.என்.ரவி  தொடர்ந்து 'திராவிட' கருத்தாக்கத்தை "பிரிவினைவாத உணர்வை" வளர்க்கும் ஒரு சூழலை உருவாக்கிய ஒரு "காலாவதியான சித்தாந்தத்துடன்" இணைத்து பேசி வருகிறார். மேலும், ஆளுநர் அவர்கள்  "ஒரே இந்தியா" என்ற கருத்தை திராவிட சித்தாந்தம் ஆதரிக்காது என்று நம்புகிறார். மாநிலத்தின் இரு மொழிக் கொள்கை மொழி மொழிப் பாகுபாட்டிற்கு வழிவகுக்கிறது என்று ஆளுநர் கூறியுள்ளார். பிரசார் பாரதி நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள மக்களின் மனதில் ஏராளமான நச்சுத்தன்மை விதைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குற்றம் சாட்டினார். 


ஆளுநரின் இது போன்ற  கருத்துகள் அவர் திராவிட அடையாளத்திற்கு எதிரானவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே ஏற்படும் மோதல் மாநிலத்தில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆளுநர் ரவியின் அரசியல் சார்ந்த பேச்சுகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக  அவர் கூறும் கருத்துகளை கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு அவரை உடனடியாக திரும்ப பெற வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே மோதல் போக்கு  தொடர்ந்து வருகிறது. இது போன்ற மோதல்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் மற்றும் ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும்.




Original article:

Share:

இஸ்லாமாபாத்தில் ஒரு துவக்கம்

 வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்திற்கான பயணம் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு படியாகும். இது கணிசமான பேச்சுவார்த்தைகளுக்கும் உறுதியான வெற்றிகளுக்கும் வழிவகுக்கும். 


இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation (SCO)) அரசுத் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்த முன்னேற்றமும் ஏற்படாதது ஆச்சரியத்தை அளிக்கிறது.  வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், எல்லை தாண்டிய தனது பயணம் முக்கியமாக பலதரப்பு சந்திப்புக்காகவே என்று தெளிவாகக் கூறினார். 


ஒன்பது ஆண்டுகளில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஒருவரின் முதல் வருகை இதுவாகும். மேலும், இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் குறைவான தொடர்பு இருந்தது. எவ்வாறாயினும், பாகிஸ்தான் தொடர்பான ஒவ்வொரு வளர்ச்சிக்கும், அது நேர்மறையாக இருந்தாலும் சரி அல்லது எதிர்மறையாக இருந்தாலும் சரி, இந்தியா பதிலளிக்கும் என்று ஜெய்சங்கர் சமீபத்திய வாரங்களில் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில், கடந்த ஆண்டு கோவாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் நடந்தது போன்ற குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதுவும் இல்லை. இந்தியா ஒரு கண்ணியமான நிலையை பராமரித்தது, ஜெய்சங்கர் யூரேசியன் கூட்டத்திலேயே இந்தியா என்ன எதிர்பார்க்கிறது என்பதை கோடிட்டுக் காட்டினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) அதன் சாசனக் கடமைகளை நிறைவேற்றவில்லை.  குறிப்பாக, பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிரான அதன் உண்மையான இலக்குகள் குறித்து அவர் சுட்டிக்காட்டினார். சீனப் பிரதமர் லீ கியாங் தனது உரையில், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட கூட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.


இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் இந்தியப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது (SCO), பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஊக்குவித்த சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட பயணத்தில் கட்டமைப்பை நிறுவுவதற்கு மிகவும் தேவையானது ஆகும்.

 

இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்பு குறைவாக இருந்தாலும், அவை நல்ல முறையிலேயே பாராமரிக்கப்பட்டு வந்தது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் அவரது பாகிஸ்தான் பிரதமர் இஷாக் தர் ஆகியோருக்கு இடையே மகிழ்ச்சியான பரிமாற்றங்கள் மற்றும் சுருக்கமான உரையாடல்கள் இருந்தன. இது முறைசாரா அமைப்புகளில் நிகழ்ந்தது. ஆனால், கணிசமான தகவல்கள்  எதுவும் வெளிவரவில்லை. இது இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு நல்ல தொடக்கமாக பார்க்கப்படுகிறது.


ஸ்ரீநகரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் பதவியேற்ற போது முற்றிலும் தற்செயல் நிகழ்வாக இது நடந்துள்ளது. இந்த வளர்ச்சியானது ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு அப்பால் உள்ள புதிய சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்ள  ஊக்குவிக்க வேண்டும். இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியாக புதிதாக தொடங்கக்கூடிய திட்டங்கள் ஏராளமாக  உள்ளன.  அவற்றில் வர்த்தகம் மற்றும் கிரிக்கெட் ஆகியவை அடங்கும்.  இஸ்லாமாபாத்தில் ஜெய்சங்கரின் முறைசாரா உரையாடல்களில் கிரிக்கெட் உறவுகளின் மறுமலர்ச்சி குறிப்பிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிகவும் குறைவான சர்ச்சைக்குரிய பிரச்சினை மற்றும் வர்த்தகத்துடன் இணைந்து, இருதரப்பு உறவுகளை புத்துயிர் பெறுவதற்கு மேலும் அளவீடு செய்யப்பட்ட அணுகுமுறைக்கு வழிவகுக்கும்.


இரு நாட்டின் உறவுகளில் இயல்பான தன்மையின் மேம்பாட்டிற்கு இது ஒரு நல்ல தொடக்கமாகும்.  மேலும், இவை கணிசமான உரையாடல்களுக்கும் உறுதியான ஆதாயங்களுக்கும் வழிவகுக்கும்.




Original article:

Share:

குடியுரிமையும் அதன் அதிருப்திகளும்

 குடியுரிமைச் சட்டத்தின் 6A பிரிவை உச்ச நீதிமன்றம் சரிபார்த்துள்ளது வரவேற்கத்தக்கது மற்றும் அசாமில் இந்த விதி மீதான விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


குடியுரிமைச் சட்டம் (Citizenship Act), 1955 இன் பிரிவு 6A மீதான 4-1 தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் பல கேள்விகளைக் கருத்தில் கொண்டது. இந்தக் கேள்விகள் அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் வரையிலானவை. இருந்தபோதிலும், நீதிமன்றம் பிரிவு 6A க்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. 


இந்த தீர்ப்பு பல ஆண்டுகளாக அசாமில் பிரச்சனையாக இருந்த ஒரு பெரிய விவாதத்திற்கு தீர்வு காணும் என்று நம்பலாம். ஜனவரி 1, 1966-ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகும், மார்ச் 25, 1971-ஆம் ஆண்டுக்கு முன்பும் அசாமிற்கு  வந்தவர்கள் 10 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியக் குடிமக்களாகப் பதிவு செய்ய பிரிவு 6A அனுமதிக்கிறது.  1985-ஆம் ஆண்டு அசாம் ஒப்பந்தம் (Assam Accord) கையெழுத்தான பிறகு இந்தப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது.  இருப்பினும், இது ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருந்து. கிளர்ச்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தீவிரவாத குழுக்களைத் (militant groups) தூண்டியது.


வழக்கின் பெரும்பான்மையான பார்வையானது, புவிசார் அரசியல் சூழலில் ஏற்பாட்டை சரியாக வைத்துள்ளது. குடியுரிமைச் சட்டத்தில் அசாம் தொடர்பான விதிவிலக்கான பிரிவை நாடாளுமன்றம் உருவாக்க வழிவகுத்த அரசியல் சூழ்நிலைகளையும் அது ஆய்வு செய்தது. இந்த விதி அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் மற்றும் அசாமின் சமூக மற்றும் கலாச்சார இயக்கவியலில் சட்டவிரோத இடம்பெயர்வு மற்றும் அதன் தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்கு நிர்வாகத்திற்கு அவசியமானது என்று நீதிமன்றம் கூறியது.


அசாமில் பல ஆண்டுகளாக இடம்பெயர்வு ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக உள்ளது.  தேயிலை தோட்டங்களுக்கு தொழிலாளர்களை வழங்கவும், குறைந்த அளவிலான நிர்வாக வேலைகளை செய்யவும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அசாமிற்கு குடிபெயர்ந்தனர். 


1947-ஆம் ஆண்டில் நடந்த பிரிவினையானது கிழக்கு பாகிஸ்தானிலிருந்து மக்கள் வெளியேற வழிவகுத்தது. பிந்தைய ஆண்டுகளில், கிழக்கு பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம், குறிப்பாக 1971-ஆம் ஆண்டில் நடைபெற்ற  போர், ​​பிரம்மபுத்திராவின் மேற்பகுதியில் இருந்து அசாமின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்வதை பாதித்தது.  இந்த இடபெயர்வு கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் எழுச்சி பற்றிய அச்சத்தை எழுப்பியது. 


மேலும், பல புலம்பெயர்ந்தோர் வாக்காளர்களாக பதிவு செய்து அரசியல் அதிகாரம் பெற்றனர். இந்தப் பின்னணியானது 1979-ஆம் ஆண்டில் தொடங்கிய அசாம் இயக்கத்திற்கு (Assam Movement) வழிவகுத்தது.  1983-ஆம் ஆண்டில் நடந்த தேர்தல்,  வன்முறை மற்றும் மோசமான வாக்குப்பதிவைக் கண்டன. இந்த வன்முறை போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசை கட்டாயப்படுத்தியது.


 இது அசாம் ஒப்பந்தத்திற்கு (Assam Accord) வழிவகுத்தது.   இந்த ஒப்பந்த்தின் படி மார்ச் 25, 1971-ஆம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தான்/வங்கதேசத்திலிருந்து குடியேறியவரை இந்தியாவின் வாக்காளர் பட்டியல் மற்றும் குடியுரிமை ஆகியவற்றில் சேர்ப்பதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பிரிவு 6A இந்த வாக்குறுதியை முறைப்படுத்தியது. உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலுடன், மார்ச் 25, 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு அசாமில் நுழைந்த நபர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாகக் கருதப்படுவார்கள். மேலும், அவர்களை நாடு கடத்துவதும் தொடங்கும். 


நீதிபதி ஜே.பி. பர்திவாலா இந்த விதி சட்டவிரோத குடியேற்றத்தை ஊக்குவிப்பதாக வாதிட்டார். வெளிநாட்டவர்களுக்கு எதிரான போராட்டத்தின் போது அசாமில் நிலவும் சூழ்நிலைக்கு அரசியல் தீர்வு தேவை என்றும், மத்திய அரசு அசாம் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் கூறினார். பின்னர், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றம் வழிவகை செய்தது. இந்த செயல்முறையை பின்பற்றுவது சரியானது. மேலும், அசாமில் உள்ள சூழ்நிலைகளின் அடிப்படையில் சட்டத்தின் விதிவிலக்கான தன்மை நியாயமானது.


உச்ச நீதிமன்றத்தின் ​​பிரிவு 6A சரிபார்ப்பு, தற்போது வழக்கில் உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (Citizenship Amendment Act (CAA)) விளக்கத்தை பாதிக்கலாம். இந்த சூழலில், பிரிவு 6A ஒரு மதச்சார்பற்ற ஏற்பாடு என்பதை நினைவில் கொள்வது அவசியம். இது அசாமின் தனித்துவமான வரலாற்று அனுபவத்தில் வேரூன்றியது மற்றும் அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் யாரையும் விலக்கவில்லை.


 மக்கள்தொகை மாற்றங்கள், இயற்கை வளங்கள் மற்றும் பொது பொருட்கள் மீதான அழுத்தம் பற்றிய கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த பிரிவு எழுந்தது.  இதற்கு நேர்மாறாக, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் முஸ்லீம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதன் மூலம் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) ஒரு வகுப்புவாத வேறுபாட்டை உருவாக்குகிறது.  இந்த விவாதங்கள் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான உணர்வுகளை ஊக்குவிப்பதில்லை என்பதும் முக்கியமானது. ஏனெனில் சமூகங்களும், கலாச்சாரங்களும் இடம்பெயர்வுகளின் பயனாளிகளாக இருந்துள்ளன.




Original article:

Share:

தலைமைத்துவத்தின் மரபு : டாடா குடும்பத்தின் கதை -நிகிதா மோஹ்தா

 டாடா குழுமம் தலைமுறை தலைமுறையாக வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் தொழில்துறை மற்றும் சமூக நிலப்பரப்பை வடிவமைத்துள்ளது. டாடா குழுமம், ஜாம்செட்ஜி டாடா முன்னோடியாக  தொடங்கிய ஆலை முதல் ஜேஆர்டி டாடா விமானப் போக்குவரத்து வரை பரந்த மைல்கற்களை எட்டியுள்ளது. ரத்தன் டாடா உலகளாவிய கையகப்படுத்துதலில் கவனம் செலுத்தினார். டாடா குழுமம் மக்கள் சேவைக்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் முன்னேற்றமும் அடைந்துள்ளது.


அக்டோபர் 8-ம் தேதி, நாஸ் பர்வீன் விமானத்தில் புது டெல்லியிலிருந்து தனது சொந்த ஊரான ஜாம்ஷெட்பூருக்கு பயணம் மேற்கொண்டார். தற்போது, குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைவதற்காக அவர் மகிழ்ச்சியாக இருந்தார். இருப்பினும், ​​​​அவருடைய மகிழ்ச்சியில் துக்கமான செய்தி மும்பையிலிருந்து அவருக்கு எட்டியது. டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி இவருக்கு வந்தது. பின்னர் ஒரு நாள் கழித்து, அவரது மறைந்த செய்தி சமூகத்தில் சோகமான நிகழ்வுகளை கொண்டு வந்தது. ஒரு காலத்தில் பிரகாசமாக இருந்த நகரம் துக்கத்தில் மங்கியது. துர்கா பூஜைக்கான பந்தல்களில் ரத்தன் டாடாவின் உருவப்படங்கள் அன்புடன் காட்சிப்படுத்தப்பட்டன.


பர்வீன் மற்றும் ஜாம்ஷெட்பூரில் இருந்த பிற குடியிருப்பாளர்களுக்கு, ரத்தன் டாடாவின் மறைவு ஆழ்ந்த இழப்பாகும். “எனது தாத்தா, சஃபி முகமது, இங்குள்ள டாடா நிறுவனத்திற்காக 48 ஆண்டுகளை அர்ப்பணித்துள்ளார். மேலும், என் தந்தையும் அவரது கொள்கைகளைப் பின்பற்றினார். நான், வளர்ந்து வரும் போது ​​டாடா குழுமங்களின் கதைகள் முன்னோர்களின் கதைகள் போல் கேட்டிருக்கிறேன். அவர்களின் குடும்பங்கள் சாதரண குடும்பங்கள் போல் இருந்தது  இல்லை.





நிறுவப்பட்ட தருணங்கள்


டாடா குடும்பத்தின் அடித்தளம் குஜராத்தின் நவ்சாரி என்ற பகுதியில் உள்ளன. நுசர்வாஞ்சி டாடா 1822-ஆம் ஆண்டில் அங்குள்ள ஒரு பார்சி (Parsi) குடும்பத்தில் பிறந்தார். அவர் இளம் வயதிலேயே ஜீவன்பாயை மணந்தார். மார்ச் 3, 1839 அன்று  ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாடா என்ற மகனை பெற்றனர்.


தனது குடும்பத்திற்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நுசர்வாஞ்சி, கிராம வாழ்க்கையின் சுகபோகங்களை விட்டுவிட்டு, தன் மனைவி மற்றும் மகனுடன் மும்பை சென்றார். பின்னர் 20 வயதில், அவர் தனது மகன் ஜாம்செட்ஜிக்கு நல்ல கல்வியைப் பெற வேண்டும் என்ற நம்பிக்கையில், பருத்தி ஏற்றுமதி தொழிலைத் தொடங்கினார்.


1835-ஆம் ஆண்டில், கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங்க் பிரபு ஆங்கிலக் கல்விச் சட்டத்தை இயற்றினார். இந்த கல்விச் சட்டம் இந்தியாவில் கல்வி மற்றும் இலக்கியத்தை மேம்படுத்துவதற்காக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலிருந்து நிதியை பெற்றதுடன், உயர்கல்விக்கு ஆங்கிலத்தை முதன்மை மொழியாக மாற்றியது. நுசர்வான்ஜி, தனது தீவிர தொலைநோக்கு பார்வையால், இந்த மொழிக்கான மாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தார். 


1856-ஆம் ஆண்டில், மும்பையில் புதிதாக நிறுவப்பட்ட எல்பின்ஸ்டோன் கல்லூரிக்கு (Elphinstone College) விண்ணப்பிக்க ஜம்செட்ஜியை ஊக்குவித்தார். தனது படிப்பை முடித்த பிறகு, ஜாம்செட்ஜி இளம் ஹிராபாய் தாபுவை மணந்து தந்தையானார். இவர்கள் ஒரு மகனுக்கு டோராப் என்று பெயரிட்டனர்.


ஜம்செட்ஜி டாடா : தலைமுறைகளுக்கான எதிர்காலத்தை உருவாக்குதல்


1859-ஆம் ஆண்டில், ஜாம்செட்ஜி அவரது மனைவி ஹீராபாய் மற்றும் அவர்களது மகன் டோராப் ஆகியோருடன் ஹாங்காங்கின் பிரிட்டிஷ் காலனிக்கு கப்பலில் பயணம் சென்றனர். இவர்களுடன், அவரது தந்தை நுசர்வான்ஜி மற்றும் இரண்டு வணிகர்களும் அவருக்கு ஆதரவாக இருந்தனர். இருவரும் இணைந்து ஜாம்செட்ஜி மற்றும் அர்தேஷிர் என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். இந்த நிறுவனம் பருத்தி மற்றும் அபின் வர்த்தகத்தில் கவனம் செலுத்தியது. அவரது ”டாடாக்கள்: ஒரு குடும்பம் ஒரு வணிகத்தையும் தேசத்தையும் எவ்வாறு உருவாக்கியது” (The Tatas: How A Family Built A Business And A Nation), என்ற புத்தகத்தில், பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான கிரிஷ் குபேர் அந்த நேரத்தில் அபின் வர்த்தகம் சர்ச்சைக்குரியதாக பார்க்கப்படவில்லை என்று விளக்குகிறார். இது மருத்துவப் பயன்களைக் கொண்டிருந்தது மற்றும் கிரிமியன் போரின் (Crimean War) போது (1853-56) பரவலாகப் பயன்படுத்தப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.


நுசர்வான்ஜியின் மைத்துனரான தாதாபோய் டாடாவும் ஹாங்காங்கில் அபின் வியாபாரியாக இருந்தார். இதனால், வெளிநாடுகளில் வலுவான டாடா நிறுவனத்தை உருவாக்க அவர் உதவியாக இருந்தார். அவர்கள் பருத்தியை ஐரோப்பாவிற்கும், அபின் சீனாவிற்கும் ஏற்றுமதி செய்தனர். அதே நேரத்தில், அவர்கள் மற்ற பொருட்களுடன் தங்கம் மற்றும் ஜவுளிகளை இறக்குமதி செய்தனர். இதனால், வணிகம் வெற்றிகரமாக இருந்ததால், ஜம்செட்ஜி தலைமையில் ஷாங்காயில் இரண்டாவது அலுவலகம் திறக்க வழிவகுத்தது.


அமெரிக்க உள்நாட்டுப் போர் (1861-65) டாடாக்களுக்கு எதிர்பாராத வாய்ப்பை உருவாக்கியது. ஏனெனில், இங்கிலாந்துக்கு அமெரிக்க பருத்தி விநியோகத்தை போர் சீர்குலைத்தது. இது பருத்திக்கு வழக்கமான கட்டணத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக டாடாக்கள் வசூலிக்க அனுமதித்தது. இந்த தருணத்தைப் பயன்படுத்தி, ஜம்செட்ஜி அலுவலகத்தை நிறுவுவதற்கு லண்டன் சென்றார். இருப்பினும், போருக்குப் பிறகு, இங்கிலாந்தின் முக்கிய பருத்தி விநியோகர்கள் என்ற நிலையை அமெரிக்கா மீண்டும் பெற்றது. இந்த மாற்றம் ஜாம்செட்ஜியை நெருக்கடிக்குள் தள்ளியது. கடனை அடைக்க, நுசர்வாஞ்சி அவர்களின் வீட்டை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை மகனுக்குக் கொடுத்தார். டாடா பெயருடன் தொடர்புடைய அறக்கட்டளை இந்தச் செயலுடன் தொடங்கியிருக்கலாம் என்று குபேர் குறிப்பிடுகிறார்.


இங்கிலாந்தில் இருந்தபோது, ​​லிவர்பூல் மற்றும் லங்காஷயர் வழியாக ஜம்செட்ஜி பயணம் செய்தபோது உற்பத்தி பற்றி நிறைய கற்றுக்கொண்டார். இதனால், அவர் ஒரு வியாபாரி என்பதை உணர்ந்தார். எனவே, அவர் உற்பத்தியில் கவனம் செலுத்த முடிவு செய்தார். 1869-ஆம் ஆண்டில், அவர் மும்பையில் ஒரு பழைய எண்ணெய் ஆலையை வாங்கி அதை ஒரு பருத்தி ஆலையாக மாற்றினார். ஜனவரி 1, 1877-ஆம் ஆண்டில், அவர் நாக்பூரில் எம்ப்ரஸ் மில்லை (Empress Mills) விக்டோரியா மகாராணியின் நினைவாக நிறுவினார். இதில், தொழிலாளர்களின் ஓய்வூதியத்திற்கான வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியிட காலத்தில் விபத்துகளுக்கான காப்பீடு போன்ற முயற்சிகளையும் அவர் அறிமுகப்படுத்தினார்.


மும்பைக்கு தென்கிழக்கே உள்ள மலைப்பகுதியான பஞ்ச்கனி பகுதியில் ஜம்செட்ஜி நிலத்தை கையகப்படுத்தினார். அங்கு பார்சிகளுக்காக ஒரு மருத்துவமனையை நிறுவினார். 1896-ஆம் ஆண்டில், டாடா பட்டுப் பண்ணையை Tata Silk Farm) உருவாக்க பெங்களூரு மற்றும் மைசூரில் நிலம் வாங்கினார். இந்தப் பண்ணை உள்ளூர் விவசாயிகளை பட்டுப்புழு வளர்ப்பில் ஆய்வு செய்ய ஊக்குவித்தது. வெள்ளையர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஹோட்டலில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்ற தகவல் நிலவுகிறது.  இதற்குப் பதிலாக, அவர் 1903-ஆம் ஆண்டில் தாஜ்மஹால் அரண்மனையை நிறுவினார். இன்று அது மும்பையின் அடையாளமாக விளங்குகிறது.


குறிப்பாக, இளம் இந்தியர்களுக்கு பயிற்சி அளிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 1892-ஆம் ஆண்டில், அவர் வெளிநாடுகளில் உயர்கல்வி பெற தகுதியான மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கத் தொடங்கினார். அவர் வைஸ்ராய் கர்சனையும் சந்தித்து, அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இந்திய மையத்திற்காக (Indian centre of excellence in science and research) வாதிட்டார். அவர் தனது உயிலில், அவர் தனது வாழ்நாளில் நிறுவனம் கட்டப்படவில்லை என்றால், அதை உருவாக்க தனது தனிப்பட்ட செல்வத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 


அவர் 1904-ஆம் ஆண்டில் இறந்தாலும், அவரது கனவு பின்னர் நனவாகியது. ஆர்.எம்.லாலா, ”செல்வத்தின் உருவாக்கம்: டாடாக்கள் 19 முதல் 21-ம் நூற்றாண்டு வரை” (The Creation of Wealth: The Tatas to the 19th from 21st Century), என்ற புத்தகத்தில் மைசூர் மகாராஜா பெங்களூரில் 371 ஏக்கர் நிலத்தை வழங்கியதாக குறிப்பிடுகிறார். இந்த நிலம் 1909-ஆம் ஆண்டில் இந்திய அறிவியல் கழகத்தை ( Indian Institute of Science (IISc)) நிறுவ பயன்படுத்தப்பட்டது.


ஜாம்செட்ஜியின் மூத்த மகன் டோராப்ஜி டாடா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு 1879-ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் திரும்பி தனது சகோதரர் ரத்தன்ஜியுடன் சேர்ந்தார்.  20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சுதேசி இயக்கம் வேகம் பெற்றது. இந்த இயக்கம் பிரிட்டிஷ் பொருட்களைப் புறக்கணிக்கவும், இந்திய உற்பத்தியை ஆதரிக்கவும் வாதிட்டது. டோராப்ஜி 1907-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனத்திற்கு (Tata Iron and Steel Company (TISCO)) 8,000 முதலீட்டாளர்களை வெற்றிகரமாகத் திரட்டினார். 1914-ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போர் தொடங்கியபோது, ​​பிரிட்டன் தனது காலனிகளில் இருந்து மனிதவளத்தையும் பொருட்களையும் நாடியது. டிஸ்கோ (Tata Iron and Steel Company (TISCO)) நிறுவனம் இந்த தேவையை பூர்த்தி செய்ய 1,500 மைல்கள்  இரும்பு பாதைகளை தயாரித்தது.


1917-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி கேரளாவில் TISCO க்கு கூடுதலாக டாடா ஆயில் நிறுவனம் (Tata Oil Mills Company(TOMCO)) டாடாக்கள் நிறுவினர். TOMCO முதலில் Cocogem எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட, வாசனை நீக்கப்பட்ட தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்தது. இது விரைவில் தரத்திற்கான நற்பெயரைப் பெற்றது. டாடா ஆயில் நிறுவனம்  பின்னர் ஹமாம் மற்றும் மோதி குளியல் சோப்புகளை அறிமுகப்படுத்தியது. இவை இரண்டும் பெருமை வாய்ந்த சுதேசி தயாரிப்புகளாக அமைந்தன. இருப்பினும், முதல் உலகப் போர் 1918-ஆம் ஆண்டில் முடிவடைந்த பிறகு, ஒரு நெருக்கடி ஏற்பட்டது.  இதைத் தீர்க்க, டோராப்ஜி தனது தனிப்பட்ட சொத்துக்களில் சிலவற்றை விற்க வேண்டியிருந்தது. அவரது மனைவி மெஹர்பாய் நிறுவனத்தை காப்பாற்ற தனது நகைகளை அடகு வைக்க வேண்டியிருந்தது.


டோராப்ஜி மற்றும் மெஹர்பாய் இருவரும் சுதந்திர இயக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள். டோராப்ஜி சுதேசி இயக்கத்தில் கவனம் செலுத்தினார். மெஹர்பாய் பெண்களின் உரிமைகளுக்காக பாடுபட்டார். அவர் 1929-ஆம் ஆண்டு சர்தா சட்டம் (Sarda Act) என்றும் அழைக்கப்படும் குழந்தை திருமண தடைச் சட்டத்திற்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தார். ஒலிம்பிக்கில் இந்திய பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக டோராப்ஜி டாடா இயக்கத்தை வழிநடத்தியதாக பலருக்குத் தெரியாது என்று குபேர் குறிப்பிடுகிறார். மெஹர்பாய் விளையாட்டுகளை, குறிப்பாக டென்னிஸை விரும்பினார். அவர் மேற்கிந்திய நாடுகளில் டென்னிஸ் போட்டியில் ‘டிரிபிள் கிரவுன்’ (Triple Crown) உட்பட 60 பரிசுகளை வென்றார்.


இந்தியாவில் கல்வி மற்றும் சமூகத்தை மேம்படுத்த டோராப் மற்றும் ரத்தன்ஜி டாடா ஆகிய சகோதரர்கள் முக்கியமான அறக்கட்டளைகளை உருவாக்கினர். சர் ரத்தன் டாடா டிரஸ்ட் (1919) மற்றும் சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் (1932) ஆகியவை இதில் அடங்கும். டோராப்ஜி தனது மனைவியின் நினைவாக லேடி மெஹர்பாய் டி. டாடா கல்வி அறக்கட்டளையைத் (Lady Meherbai D. Tata Education Trust) தொடங்கினார். இந்த அறக்கட்டளை இது வெளிநாட்டில் குடிமைப்பணி தேர்விற்கு படிக்கும் பெண் பட்டதாரிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.


டோராப்ஜிக்கு இந்தியாவில் ஒரு சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம் கட்ட வேண்டும் என்ற கனவு இருந்தது.  இருப்பினும், அவர் ஜூன் 3, 1932-ஆம் ஆண்டில் காலமானார். அவரைக் கௌரவிக்கும் வகையில், 1932 முதல் 1938 ஆண்டு வரை டாடா குழுமத்தை வழிநடத்திய அவரது உறவினரும் வாரிசுமான நவ்ரோஜி சக்லத்வாலா டாடா மெமோரியல் மருத்துவமனையை நிறுவுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பரேல், பம்பாயில், இது பிப்ரவரி 28, 1941-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.


நவ்ரோஜி ஜாம்செட்ஜியின் சகோதரி விர்பாயின் மகன். அவர் ஒரு தீவிர விளையாட்டு ஆர்வலராக இருந்தார் மற்றும் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். பீகாரின் முங்கரில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, காயமடைந்தவர்களுக்கு உதவ நவ்ரோஜி ஒரு தற்காலிக மருத்துவமனையைக் கட்டினார். 


சக்லத்வாலாவின் வழிகாட்டுதலுடன், சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளையின் நிதி மூலம் 1936-ஆம் ஆண்டில் சர் டோராப்ஜி டாடா கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் (Graduate School of Social Work) உருவாக்கப்பட்டது. இந்த பள்ளி பின்னர் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் (Tata Institute of Social Sciences) ஆனது.  நவ்ரோஜி 1938-ஆம் ஆண்டில்  மாரடைப்பால் காலமானார். அந்த நேரத்தில், 34 வயதாக இருந்த ஜேஆர்டி டாடா, டாடா பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.


ஜே.ஆர்.டி.டாடா பிரான்சில் ஜாம்செட்ஜி டாடாவின் உறவினரான ரத்தன்ஜி தாதாபோய் டாடா மற்றும் தாயார் சுசான் பிரையர் ஆகியோரால் வளர்க்கப்பட்டார். அவர் கேம்பிரிட்ஜில் பொறியியல் படிக்க விரும்பினாலும், அவரது தந்தை மும்பைக்கு திரும்பவும், பின்னர் ஜாம்ஷெட்பூருக்கு குடும்ப வணிகத்தில் சேரவும் வலியுறுத்தினார். 1926-ஆம் ஆண்டில்  ரத்தன்ஜியின் மரணத்திற்குப் பிறகு, ஜே.ஆர்.டி. விமானப் போக்குவரத்து மீதான அவரது ஆர்வம் அவரை டாடா ஏவியேஷன் சர்வீசஸ் நிறுவனத்தை நிறுவ வழிவகுத்தது. பின்னர், டாடா ஏர்லைன்ஸ் என மறுபெயரிடப்பட்டது.


ஜே.ஆர்.டி டாடாவின் பயணத்தைப் புரிந்து கொள்ள, அவருடைய உறவினரான நேவல் டாடாவையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நேவல் ரத்தன் ஜம்செட்ஜி டாடாவின் மகன். அவரை ரத்தன்ஜியின் விதவை பெண் நவாஜ்பாய் தத்தெடுத்தார். நேவல் ஜூன் 1, 1930-ஆம் ஆண்டில்  டாடா குழுமத்தில் சேர்ந்தார். 1938-ஆம் ஆண்டில்  சக்லத்வாலா இறந்த பிறகு, ஜே.ஆர்.டி.யை தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தார்.


ஜேஆர்டியின் தலைமையின் கீழ், டாடா குழுமம் பெரிய மாற்றங்களைக் கண்டது. மூத்த தலைவர்களுக்கான சிறப்பு சலுகைகளை நீக்கினார். அனைவரும் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்தார். ஜேஆர்டி குழுமத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு தலைவரை நியமித்தது. இது 1939-ஆம் ஆண்டில் குஜராத்தின் மிதாபூரில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை நிறுவ வழிவகுத்தது.


ஒரு இளம் பார்சி சிறுவனும், டாடாவின் ஆலோசகருமான ஹோமி பாபா, தொழில்நுட்ப ஆராய்ச்சியை ஆதரிக்க நிதி கேட்டு ஜேஆர்டி டாடாவுக்கு கடிதம் எழுதியபோது ஒரு முக்கிய தருணம் ஏற்பட்டது. ஜேஆர்டி ஒப்புக்கொண்டு, டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (Tata Institute of Fundamental Research (TIFR)) அமைக்க உதவியது.  இது ஜூன் 1, 1945-ஆம் ஆண்டில்   அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.


"எனது தந்தை ஹோமி பாபா பொறுப்பில் இருந்த  டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில்  பணிபுரிந்தார். மேலும், ஜேஆர்டி அடிக்கடி வருகை தந்தார். இருவருமே நல்ல தலைமையின் எடுத்துக்காட்டுகள் என்று என்னிடம் கூறுவார். மும்பையைச் சேர்ந்த ஆலோசகர் ரோஷ்னி மாஸ்டர் என்பவர், "அவர் அடிக்கடி அவர்களை உதாரணமாகப் பயன்படுத்துவார் மற்றும் நல்ல தலைமை என்பது எல்லோரையும், குறிப்பாக துப்புரவு செய்பவர்களைக் கூட கேட்பது என்று அவர் என்னிடம் கூறுவார்."


1945-ஆம் ஆண்டில், ஜேஆர்டி ஜம்ஷெட்பூரில் ஒரு சிறிய தொழிற்சாலையை ரயில்வேயில் இருந்து வாங்கியதுடன், அதை டாடா இன்ஜினியரிங் மற்றும் லோகோமோட்டிவ் கம்பெனி லிமிடெட் (Tata Engineering and Locomotive Company Limited (TELCO)) ஆக மாற்றினார். பின்னர், டாடா மோட்டார்ஸ் என்று அழைக்கப்பட்டது. இந்த நிறுவனம் விரைவில் நீராவி இயந்திரங்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது.


1948-ஆம் ஆண்டில், ஜேஆர்டி ஏர் இந்தியா இன்டர்நேஷனல், இந்தியாவின் முதல் சர்வதேச விமான நிறுவனத்தை அறிமுகப்படுத்தியது. 1952-ஆம் ஆண்டில், நேவல் டாடாவின் இரண்டாவது மனைவியான சிமோனுடன் இணைந்து லாக்மே (Lakmé) என்ற அழகு சாதனப் பொருட்கள் நிறுவனத்தை நிறுவினார்.


இந்திய அரசாங்கம் தேசியமயமாக்கலில் கவனம் செலுத்தியதால், ஜே.ஆர்.டி பெரும் சவால்களை எதிர்கொண்டது. தேசியமயமாக்கல் தொழில்களை அரசியலாக்கியது மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கிறது என்று அவர் வாதிட்டார். நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் (New India Assurance Company) மற்றும் ஏர் இந்தியா இன்டர்நேஷனல் (Air India International) உட்பட பல வெற்றிகரமான டாடா முயற்சிகளை அரசாங்கம் தேசியமயமாக்கியது. இருந்தபோதிலும், 1956-ஆம் ஆண்டில், டாடா குழுமம் 46 நாடுகளுக்கு விரிவடைந்தது.


1990-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், ஜே.ஆர்.டி.யின் உடல்நிலை மோசமடைந்தது. ஆனால், அவர் உறுதியாக இருந்தார். மார்ச் 3, 1991 அன்று, அவர் ஜாம்ஷெட்பூரின் நிறுவன தினத்தை கொண்டாடினார். அவருக்குப் பின் யார் என்ற கேள்வி முக்கியமானது. தெல்மா விகாஜி என்பவரை திருமணம் செய்திருந்தாலும், அவர்களுக்கு குழந்தை இல்லை. மார்ச் 25 அன்று நடந்த ஒரு முக்கிய கூட்டத்தில், நேவல் டாடாவின் மகன் ரத்தனை தனது வாரிசாக பரிந்துரைத்தார்.


முதலில் ஜாம்ஷெட்பூரிலிருந்து வந்த பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஆகாஷ் முகோபாத்யாய். அவர் முதலில் ஜாம்ஷெட்பூரை சேர்ந்தவர். அவர் மார்ச் 3 அன்று இந்நிறுவனத்திற்கு திரும்புகிறார். "அன்றைய தினம், ஜே.ஆர்.டி. டாடாவின் பிறந்தநாளைக் கொண்டாட டாடா சமூகம் ஒன்று கூடுகிறது. ஊழியர்கள் அணிவகுத்துச் சென்று, ரத்தன் டாடா அன்புடன் கைகுலுக்கி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர் உண்மையிலேயே டாடாக்களின் உணர்வைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் தெளிவான சரியான வாரிசு ஆவார்.


ரத்தனின் தந்தை 1955-ஆம் ஆண்டில் சிமோனை மறுமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நோயல் என்ற மகன் இருந்தான். ரத்தன் கார்னெல் பல்கலைக்கழகத்தில் (Cornell University) கட்டிடக்கலையில் பட்டம் பெற்றார். 1962-ஆம் ஆண்டில், அவர் இந்தியா திரும்பி ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு அவர் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் பணியாற்றினார்.


1991-ஆம் ஆண்டில், ரத்தன் டாடா அவர்கள் டாடா சன்ஸ் தலைவராக ஆனார். இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் போது டாடா குழுமத்தின் பெரிய மறுசீரமைப்பை அவர் தொடங்கினார். 2000-ஆம் ஆண்டு காலகட்டத்தில், குழு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது. இந்த வளர்ச்சியில் டெட்லி (Tetley), ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) மற்றும் ப்ரன்னர் மோண்ட் (Brunner Mond) போன்ற குறிப்பிடத்தக்க கையகப்படுத்தல்களும் அடங்கும்.


2008-ஆம் ஆண்டில், ரத்தன் டாடா நானோ என்ற புதிய சிறிய கார் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 2012 டிசம்பரில், டாடா குழுமத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இருப்பினும், அவர் எமரிட்டஸ் தலைவராக (Chairman Emeritus) நியமிக்கப்பட்டார்.


ரத்தனின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் அக்டோபர் 9 அன்று டாடா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டார். நோயலுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்கள், நெவில் என்ற மகன் மற்றும் லியா மற்றும் மாயா என்ற இரண்டு மகள்கள். அவர்கள் டாடா குழுமத்தின் பல்வேறு கிளைகளை நிர்வகிக்கின்றனர்.


டாடா குடும்பத்தைப் பற்றிய இந்த பார்வை வெறும் குடும்பத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பேரரசை வெளிப்படுத்துகிறது. ஒரு டாடா ஊழியர், "என்னிடம் டாடா குடும்பப்பெயர் இல்லாமல் இருக்கலாம். ஆனால்,  நான் அந்த குடும்பத்தின் ஒரு பகுதியாக உணர்கிறேன்" என்றார்.


ஹைதராபாத்தில் உள்ள முன்னணி பயனர் அனுபவ வடிவமைப்பாளரான (User Experience Designer) சத்யகி போஸ் என்பவரின் குடும்பம் மூன்று தலைமுறைகளாக டாடா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறது. “டாடா குழுமத்தில் பணிபுரியும் ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறையுடன் இந்த அமைப்பில் சேருவதை உறுதிசெய்கிறது. டாடா நிறுவனர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் காட்டிய அன்பையும் அக்கறையையும் திரும்பக் கொடுப்பதற்காக அவர்கள் இதைச் செய்கிறார்கள்  என குறிப்பிடுகிறார்.




Original article:

Share: