மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் ஏன் தள்ளுபடி செய்தது? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


• தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (Electronic Voting Machines (EVMs)) பயன்பாட்டை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. வாக்குச் சீட்டுகளுக்கு மாற்றுவதற்கான வேண்டுகோள்களை நீதிமன்றம் நிராகரித்தது. ஏப்ரல் 2024-ல், வாக்குச் சீட்டு முறைக்குத் திரும்பவும், வாக்காளர் சரிபார்க்கப்பட்ட காகித தணிக்கை முறையை (Voter Verifiable Paper Audit Trail (VVPAT)) முழுமையாக சரிபார்க்க கோரிய மனுக்களை நீதிமன்றம் நிராகரித்தது. தேர்தல் செயல்முறையின் முக்கியத்துவத்தையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான வலுவான நடவடிக்கைகளையும் நீதிமன்றம் வலியுறுத்தியது.


"நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறை சொல்லப்படாது. தேர்தலில் தோல்வி அடைந்தால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறை சொல்லப்படுகின்றன. சந்திரபாபு நாயுடு தோற்றபோது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முடிவை மாற்ற முடியும் என்று கூறினார். இப்போது, இந்த முறை, ஜெகன் மோகன் ரெட்டி தோற்றார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முடிவை மாற்றமுடியும் என்று அவர் கூறினார்" என்று போதகர் கே.ஏ.பால் தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்யும் போது இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு தலைமை தாங்கிய நீதிபதி விக்ரம் நாத் கூறினார். 


• இந்திய தேர்தல் ஆணையம்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து விரிவான விளக்கங்களை வழங்கியுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு பொத்தான்கள் (buttons) ஒதுக்கப்படுவது குறித்து உற்பத்தியாளர்களுக்கு தெரியாது. இது முறைகேடுகளைத் தடுக்க உதவுகிறது.


• இரண்டு தனித்தனி ஆனால் ஒரே மாதிரியான தீர்ப்புகளில், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை விரிவாக ஆய்வு செய்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான நிர்வாக மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்புகள் இரண்டையும் அவர்கள் ஆய்வு செய்தனர். வலுவான பாதுகாப்புகள் மற்றும் சோதனைகள் வைக்கப்பட்டுள்ளன என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்கள் மோசடி அல்லது நேர்மையற்ற அறிகுறிகளைக் காட்டவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

 

• வாக்குச் சீட்டுகளுக்குத் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை "தவறானது" என்று நிராகரித்த நீதிபதி கன்னா, அது தேர்தல் சீர்திருத்தங்களை ரத்து செய்யும். மேலும், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகின்றன" என்று கூறினார். நிமிடத்திற்கு 4 வாக்குகளாகக் கட்டுப்படுத்தியதன் மூலம் தேவையான நேரத்தை நீட்டித்து, கள்ள ஓட்டு போடுவதை தடுக்கும் வகையில், பூத் கைப்பற்றும் முறையை ஒழித்துள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செல்லாத வாக்குகளை நீக்குகின்றன. குறைவான காகிதங்களைப் பயன்படுத்துகின்றன. எண்ணிக்கையை விரைவுபடுத்துகின்றன மற்றும் தவறுகளைக் குறைக்கின்றன என்றும் நீதிபதி கூறினார்.

 

உங்களுக்கு தெரியுமா: 


  தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தில் உள்ளபடி, EVM என்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் (Electronic Voting Machines) குறிக்கிறது. 


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல்களில் வாக்குகளை மின்னணு முறையில் பதிவு செய்யவும் எண்ணவும் பயன்படுகிறது. 


இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அமைப்பு தேர்தல் ஆணைய வாக்குப்பதிவு இயந்திரம் (ECI-EVM) என்று அழைக்கப்படுகிறது. ECI-EVM குறிப்பாக இந்தியாவில் தேர்தல்களுக்காக வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது. இது இந்திய தேர்தல் ஆணையம் அமைத்த தேர்தல் நடைமுறைகள் மற்றும் விதிகளை பின்பற்றுகிறது. இந்த நடைமுறைகள் மற்றும் விதிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள கையேட்டில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அமைப்பு மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருந்து வேறுபட்டது.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குச்சீட்டு அலகு (Ballot Unit (BU )), கட்டுப்பாட்டு அலகு (Control Unit (CU)) மற்றும் பின்னர் சேர்க்கப்பட்ட வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை முறை (VVPAT) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேரடி பதிவு மின்னணு (Direct Recording Electronic (DRE)) வாக்குப்பதிவு இயந்திர அமைப்புகளின் ஒட்டுமொத்த வகையின் கீழ் வருகின்றன. இது உலகளவில் கிடைக்கும் பல வாக்குப்பதிவு முறைகளில் ஒன்றாகும். 


காகித வாக்குச்சீட்டுகளைவிட இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் திறமையாகவும் துல்லியமானதாகவும் கருதப்படுகின்றன. ஏனெனில், அவை தெளிவற்ற அல்லது தவறாகக் குறிக்கப்பட்ட காகித வாக்குகளால் ஏற்படும் செல்லாத வாக்குகளை நீக்குகின்றன. வாக்குகளை எண்ணும் நேரத்தை வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறைக்கின்றன. ஒவ்வொரு வாக்கும் ஒரு வேட்பாளருக்கு மட்டுமே பதிவாவதை  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உறுதி செய்கின்றன.


காகித வாக்குச்சீட்டு முறையில், போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல், வரிசை எண், பெயர் மற்றும் வேட்பாளர்களின் சின்னத்துடன் ஒரு காகிதத்தில் வாக்குச் சீட்டு  அச்சிடப்படுகிறது. 


போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வாக்காளர் ஒரு சின்னத்தை இடுவதன் மூலம் வாக்களிக்கலாம். அதன்பிறகு, வாக்காளர் வாக்குச் சீட்டை குறிப்பிட்ட முறையில் மடித்து வாக்குப் பெட்டியில் வைக்க வேண்டும். அந்த வேட்பாளரால் பெறப்பட்ட வாக்குகளை எண்ணுவதற்கு, சரியாக குறிக்கப்பட்ட வாக்குகள் மட்டுமே எண்ணப்படும். 


வாக்குச் சீட்டு வாக்களிப்பில் (ballot paper voting) உள்ள சில முக்கிய சிக்கல்களாவன :

  • முறையற்ற குறியீடு / மை கறை படிவதால் பல வாக்குகள் செல்லாதவையாகின்றன. வாக்குப் பெட்டிகள் சில நிமிடங்கள் வாக்குச் சாவடியைக் கைப்பற்றுவதன் மூலம் "போலி வாக்குகளால் பதிவாவதற்கு" (stuffing with spurious votes) உள்ளாகின்றன. 


  • முன் குறியிடப்பட்ட வாக்குச் சீட்டுகளுடன் வாக்களித்தல். 


  • வாக்குகளை கையால் எண்ணுவது, பிழைகள் மற்றும் விஷமங்களுக்கு ஆளாகிறது மற்றும் நிறைய நாட்கள் ஆகும். 


  • தேர்தல் ஆணையம்-மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையில், கட்டுப்பாட்டு அலகு தலைமை அலுவலரிடம் வழங்கப்படுகிறது மற்றும் வாக்குச்சீட்டு அலகுகள் மற்றும் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை சீட்டு ஆகியவை வாக்குப்பதிவு பெட்டிக்குள் வைக்கப்படுகின்றன. 


  • வாக்குச் சீட்டை வழங்குவதற்குப் பதிலாக, கட்டுப்பாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான வாக்குச்சாவடி அலகு கட்டுப்பாட்டுப் பிரிவில் உள்ள "வாக்குச் சீட்டு பொத்தானை" அழுத்துவதன் மூலம் மின்னணு வாக்குச்சீட்டை விடுவிக்கிறார். இது வாக்காளர் தான் விரும்பும் வேட்பாளருக்கு எதிராக வாக்குச் சீட்டு அலகில் உள்ள "நீல பொத்தானை" அழுத்துவதன் மூலம் தனது வாக்கை அளிக்க உதவுகிறது. 


  • வாக்குச் சீட்டு அலகில் வாக்காளர் தான் விரும்பும் வேட்பாளருக்கு எதிராக ஒரு பொத்தானை அழுத்தும்போது, வாக்குப்பதிவு அலகில் (Ballot Unit (BU)  தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரின் பொத்தானுக்கு எதிராக வாக்கு பதிவானால் சிவப்பு LED ஒளிரும். வரிசை எண், பெயர் மற்றும் அவர் விரும்பும் வேட்பாளரின் சின்னம் ஆகியவற்றைக் காட்டும் ஒரு காகிதச் சீட்டு உருவாக்கப்பட்டு வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை பாதை வெளிப்படையான சாளரத்தின் வழியாக சுமார் 7 வினாடிகள் தெரியும். 


எனவே, வாக்காளர் தங்கள் விருப்பப்படி வாக்களிக்கப்பட்டதா என்பதைச் சரிபார்க்க "அச்சிடப்பட்ட சீட்டை" பார்க்க முடியும். அதன் பிறகு, அச்சிடப்பட்ட காகித சீட்டு தானாகவே வெட்டப்பட்டு VVPAT-ன் சீல் செய்யப்பட்ட டிராப் பாக்ஸில் சேமிக்கப்படும். வாக்களிப்பு வெற்றிகரமாகப் பதிவுசெய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில், கட்டுப்பாட்டுப் பிரிவில் இருந்து உரத்த பீப் ஒலி கேட்கிறது. வாக்களிக்கும் போது வாக்குப்பதிவு அலகு (BU), கட்டுப்பாட்டு அலகு (CU) மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை பாதை (VVPAT) ஆகியவற்றுக்கு இடையேயான செய்தி ஓட்டம் காட்டப்படும்.


சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை பாதை (VVPAT) காகித சீட்டுகள் பின்னர் சர்ச்சை ஏற்பட்டால் கட்டுப்பாட்டு அலகிலிருந்து பெறப்பட்ட மின்னணு எண்ணிக்கையை சரிபார்க்க பின்னர் பயன்படுத்தலாம். வாக்காளரால் சரிபார்க்கப்பட்ட VVPAT காகிதச் சீட்டுகளின் இந்தப் பதிவும், கட்டாயச் சரிபார்ப்பு நடைமுறையின்படி VVPAT மற்றும் கட்டுப்பாட்டு அலகு (CU) எண்ணிக்கையைப் பொருத்தும் செயல்முறையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பதை நம்பகமானதாக ஆக்குகிறது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்க தொழில்நுட்ப அறிவு தேவையில்லை. சாதாரண குடிமக்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் (ECI EVMs) பயன்படுத்தி எளிதாக வாக்களிக்க முடியும்.




Original article:

Share:

இந்திய அரசியலமைப்பு, அதன் உரைக்கு அப்பாற்பட்டது -ராஜேஷ் ரஞ்சன்

 'அதிகாரம்' என்ற மையமயமாக்கல் அகற்றப்பட்டு, இந்தியாவின் ஜனநாயக நடைமுறையில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு அதிகாரம் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டால் அரசியலமைப்பின் நோக்கம் நிறைவேறும். 

 

“Founding Mothers of the Indian Republic: Gender Politics of the Framing of the Constitution” என்ற புத்தகத்தில், அச்யுத் சேத்தன் ஒரு கதையைப் பகிர்ந்துள்ளார். அதில், அரசியலமைப்புச் சட்டமே அனைத்தும் என்றும், எழுதப்பட்ட வார்த்தைகளை தாண்டி எதுவும் இல்லை என்றும் நம்பிய ஒரு கலாச்சார கோட்பாட்டாளருடனான உரையாடலை அவர் குறிப்பிடுகிறார். எழுதப்பட்ட வார்த்தைகளை தாண்டி அரசியலமைப்பை நாம் எப்படி கற்பனை செய்ய முடியும்?


அரசியலமைப்பு அதன் உரைக்கு வெளியே என்ன மதிப்பைக் கொண்டுள்ளது?


இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 75-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், இந்தக் கேள்விகள் அதன் பரந்த முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திக்க நம்மைத் தூண்டுகின்றன. 

 

நம்பிக்கையான மற்றும் லட்சிய குடியுரிமைக்கான சான்று


அரசியலமைப்பு உரை மிகவும் முக்கியமானது. இது கொள்கை முடிவுகளை விளக்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் நிறுவனங்களுக்கு ஒரு கருவியாக செயல்படுகிறது. அரசியலமைப்பு என்பது வெறும் சட்ட ஆவணம் மட்டும் அல்ல. அது எழுதப்பட்ட வார்த்தைகளை தாண்டிய ஒரு வடிவமைக்கப்பட்ட வாழ்க்கை கட்டமைப்பாகும். இந்தியாவின் பலதரப்பட்ட மக்களின் நம்பிக்கைகள், போராட்டங்கள் மற்றும் கனவுகளை அரசியலமைப்பு பிரதிபலிக்கிறது. இது நமது அரசாங்கத்தின் அடித்தளம் மற்றும் குடிமக்களின் லட்சியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆனால், அரசியலமைப்பை மதிப்பிடும்போது குடிமக்கள் எங்கு பொருந்துகிறார்கள்?

 

குடியுரிமை என்பது பெரும்பாலும் சட்டங்கள் அல்லது அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்ட ஒரு கருத்தாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்திய வரலாற்றில், எழுதப்பட்ட உரையைத் தாண்டி குடியுரிமை பற்றிய கருத்தை வடிவமைப்பதிலும் மாற்றியதிலும் மக்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். பல்வேறு இயக்கங்கள் மூலம், அவர்கள் சமத்துவமின்மைகளுக்கு எதிராக போராடுவதற்கும், சாதி, வர்க்க உயரடுக்கினரால் கட்டுப்படுத்தப்பட்ட உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை பெறுவதற்கும் அரசியலமைப்பு கோட்பாடுகளைப் பயன்படுத்துகின்றனர்.

 

உதாரணமாக, தலித் இயக்கம் சமத்துவத்தையும் கண்ணியத்தையும் கோருவதற்கு அரசியலமைப்பைப் பயன்படுத்தியது. அரசியலமைப்பு சுதந்திரம் மற்றும் நியாயமற்ற சமூக விதிமுறைகளை சவால் செய்வதற்கான ஒரு கருவியாக மாறியது. தீண்டாமையை ஒழிக்கும் (abolishes untouchability) அரசியலமைப்பின் 17வது பிரிவு, சாதி அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிராகப் போராடுவதற்கு விளிம்புநிலை சமூகங்களுக்கு முக்கியப் புள்ளியாக மாறியது. இதேபோல், நிலச் சீர்திருத்தங்கள், கல்வி, தகவல் அறியும் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் உரிமைகளுக்கான இயக்கங்கள் நீதியை பெறுவதற்கு அரசியலமைப்பு விதிகளைப் பயன்படுத்துகின்றன. இதன் விளைவாக, அவர்கள் குடியுரிமை பற்றிய கருத்தை விரிவுபடுத்தியுள்ளனர். குடியுரிமை (citizenship) என்பது சட்டப்பூர்வ நிலை மட்டுமல்ல. இது அனைவருக்கும் சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தலின் உண்மையான அனுபவமாக மாறியுள்ளது.

 

பேராசிரியர் ரோஹித் டி ‘ஒரு மக்கள் அரசியலமைப்பு  (A People’s Constitution)’ என்ற தனது புத்தகத்தில், அரசியல் சட்டத்தைப் பயன்படுத்தி தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய மக்களின் கதைகளைப் பகிர்ந்துள்ளார். இந்த நபர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட அரசியலமைப்பைப் பயன்படுத்தினர். அரசியலமைப்பு விவாதத்தின் மையத்தில் சாதாரண குடிமக்களை வைக்க அவர்கள் உதவினார்கள். அரசியல் சட்டத்தை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதில் சாதாரண குடிமக்களின் ஈடுபாடு இன்றும் தொடர்கிறது. இது இன்னும் வலுவாகவும் ராஜதந்திரமாகவும் மாறியுள்ளது. குடியரசில் தங்களுக்கு உரிய இடத்தைப் பெறுவதற்கு இது குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

 

அரசியலமைப்பு மற்றும் குடிமக்களுக்கு இடையிலான உரையாடல் 


அரசியலமைப்பின் கதையும் அதன் மக்களின் கதையாகும். சமூக ஆர்வலர் அருணா ராய், தனது சமீபத்திய நினைவுக் குறிப்பில் "தனிப்பட்ட அரசியல்" (The Personal is Political) ஜனநாயகத்தில், "மக்கள்" என்பது செல்வம் மற்றும் செல்வாக்கால் வரையறுக்கப்பட்ட சக்திவாய்ந்த உயரடுக்கினரைக் குறிக்கும் என்று வாதிடுகிறார். இந்த அதிகார கட்டமைப்பை நாம் உடைத்து பின்தங்கிய குழுக்களை நமது ஜனநாயகத்தின் அதிகாரத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று அவர் கூறுகிறார். இது அரசியலமைப்பின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றும் என்று அவர் நம்புகிறார்.

பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற சமூகத்தில் பின்தங்கிய குழுக்களுக்கு அரசியலமைப்பு உருவாக்கம் ஒரு முக்கியமான கருவியாகும். இந்தக் குழுக்களுக்கு அரசியல் நிர்ணய சபையில் நேரடிப் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்தாலும், அவர்களின் கவலைகள் கவனமாக விவாதிக்கப்பட்டன. இது அரசியலமைப்பு அனைவரையும் உள்ளடக்கியது மற்றும் நியாயமானது என்பதை உறுதிப்படுத்த உதவியது.

 

இருப்பினும், இந்த முற்போக்கான முயற்சிகள் இருந்தபோதிலும், அரசியலமைப்பில் குறைபாடுகள் உள்ளன. அரசியலமைப்புச் சட்டம் சில குழுக்களை தற்செயலாக விலக்கி வைத்த நேரங்களும் உண்டு.

 

ஒரு கூட்டுப் பொறுப்பு 


அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் இந்த வேளையில், அதன் வாக்குறுதிகள் பொது நிறுவனங்களை தாண்டி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். அரசு மற்றும் தனிநபர்கள் தவறாகச் செயல்படும்போது அவர்களுக்கு சவால் விடுவதற்கான அதிகாரத்தை குடிமக்களுக்கு வழங்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுவது மட்டுமின்றி, அதன் கொள்கைகளை உண்மையாக்க வேண்டிய பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் அந்தஸ்து அல்லது அடையாளம் எதுவாக இருந்தாலும் உண்மையான சமத்துவம், நீதி மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதே நோக்கமாக இருக்க வேண்டும்.

 

ராஜேஷ் ரஞ்சன் ஒரு வழக்கறிஞர் மற்றும் ஆராய்ச்சியாளர்.




Original article:

Share:

PAN 2.0: திட்டம் என்றால் என்ன? உங்கள் PAN அட்டையை ஏன் மேம்படுத்த வேண்டும்?

 தற்போதுள்ள 78 கோடி நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number (PAN)) வைத்திருப்பவர்கள் தங்கள் PAN அட்டையை மேம்படுத்த வேண்டும்.  


வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட 10 இலக்க எண்ணெழுத்து நிரந்தர கணக்கு எண் (PAN) மேம்படுத்தப்பட உள்ளது. அனைத்து புதிய மற்றும் பழைய அட்டைகளிலும் QR குறியீடு இணைக்கப்பட உள்ளது. இது முற்றிலும் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை, வணிகங்களுக்கான பொதுவான அடையாளங்காட்டியாக PAN அட்டையை உருவாக்கவும், மேலும் தற்போதுள்ள அனைத்து அடையாள எண்களையும் இணைத்தல், தரவு பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு நோக்கங்களுக்காக இம்முறை செயல்படுத்தப்பட உள்ளது.


PAN எண்ணை "வணிகங்களுக்கான பொதுவான அடையாளங்காட்டியாக" மாற்றுவதற்கும் மற்றும் "உண்மை மற்றும் தரவு நிலைத்தன்மையின் ஒற்றை ஆதாரமாக" மாற்றுவதற்கும் மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை (நவம்பர் 25) PAN 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. 


இதனை மேம்படுத்துவதன் மூலம், PAN ஏற்கனவே ஆதாரின் மற்ற அடையாள எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதால், அதிகாரிகளுக்கு அடையாளம் மற்றும் தகவல்களுக்கான வலுவான ஆதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


தற்போதுள்ள 78 கோடி PAN எண் வைத்திருப்பவர்கள் தங்கள் PAN அட்டைகளை மேம்படுத்திக் கொள்ளலாம். தற்போதுள்ள பயனர்களுக்கு PAN எண் அப்படியே இருக்கும். இதில் PAN அட்டையை மட்டுமே மேம்படுத்த வேண்டும். இது பயனர்களுக்கு இலவசமாக இருக்கும் என்று அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


PAN 2.0 திட்டம் என்றால் என்ன? 


வருமான வரித்துறையின் PAN 2.0 திட்டத்திற்கு 1,435 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மத்திய அமைச்சரவை திங்களன்று ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின் கீழ், தற்போதுள்ள PAN அமைப்பு முழுமையாக மேம்படுத்தப்படும். தகவல் தொழில்நுட்ப முறையில் புதுப்பிக்கப்படும் மற்றும் குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் PAN ஒரு பொதுவான வணிக அடையாளங்காட்டியாக மாற்றப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திங்களன்று அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவித்தார். 


"ஒரு பொதுவான வணிக அடையாளங்காட்டியைக் கொண்டிருக்க தொழில்துறையிலிருந்து பலமுறை கோரிக்கைகள் வந்தன. அவர்கள் வெவ்வேறு (அடையாள) எண்களை விரும்பவில்லை. ஒற்றை எண் நன்மை பயக்கும் என்று கூறினர். இந்த திட்டம் PAN எண்ணை பொதுவான வணிக அடையாளங்காட்டியாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும். அனைத்து PAN/ TAN/ TIN ஆகியவை இந்த அமைப்பின் கீழ் இணைக்கப்படும்" என்று வைஷ்ணவ் கூறினார். 


PAN 2.0 இன் அம்சங்கள் என்ன? 


அனைத்து புதிய மற்றும் தற்போதுள்ள PAN அட்டைகளுக்கான QR-குறியீடு அம்சத்தைத் தவிர, PAN 2.0 திட்டம் PAN தரவைப் பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களுக்கும் "கட்டாய PAN தரவு வால்ட் அமைப்புடன் (data vault system) ஒரு ஒருங்கிணைந்த  தளத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இது தரவு பாதுகாப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக செய்யப்படுகிறது. 


"மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று PAN டேட்டா வால்ட் அமைப்பு.  நிரந்தர கணக்கு எண் தொடர்பான தகவல்களை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற பல நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. PAN கணக்கு எண் விவரங்களை பல்வேறு இடங்களில் தருகிறோம். எனவே, PAN விவரங்களை எடுக்கும் நிறுவனங்கள் PAN தரவை பாதுகாப்பாகவும், கட்டாயமாகவும் டேட்டா வால்ட் சிஸ்டம் வைத்திருக்க வேண்டும்" என்று வைஷ்ணவ் கூறினார். 


தற்போதுள்ள மென்பொருள் கிட்டத்தட்ட 15-20 ஆண்டுகள் பழமையானது என்பதால், இந்த புதிய ஒருங்கிணைந்த போர்ட்டல் புதுமையான அம்சங்களுடன்  இருக்கும் என்று வைஷ்ணவ் கூறினார். "இது முற்றிலும் காகிதமில்லாத சேவையாக இருக்கும். மேலும், இதில் குறை தீர்க்கும் அமைப்பில் அதிக கவனம் செலுத்தப்படும்" என்று கூறினார். 


PAN 2.0 திட்டம் எளிதான அணுகல் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கத்துடன் வரி செலுத்துவோர் பதிவு சேவைகளில் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தை செயல்படுத்தும் என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. இது தற்போதைய PAN/TAN 1.0 சுற்றுச்சூழல் அமைப்பின் மேம்படுத்தலாக இருக்கும். இது முக்கியமான மற்றும் தேவையற்ற PAN/TAN செயல்பாடுகள் மற்றும் PAN சரிபார்ப்பு சேவையை ஒருங்கிணைக்கிறது. 


தற்போதுள்ள பயனர்கள் PAN 2.0 அட்டையை மேம்படுத்த விருப்பம் இருக்கும். விண்ணப்ப செயல்முறை மற்றும் காலக்கெடு பற்றிய விவரங்கள் வருமான வரித் துறையால் இன்னும் வெளியிடப்படவில்லை. 


புதிய மற்றும் பழைய PAN கார்டுகளில் உள்ள QR -குறியீடு முறை,  வருமான வரித் துறையுடன் நிதி பரிவர்த்தனைகளை ஒருங்கிணைப்பதற்கான மேம்பட்ட அளவைக் குறிக்கும். QR குறியீடு 2017-ஆம் ஆண்டில் PAN  அறிமுகப்படுத்தப்பட்டது. PAN 2.0 திட்டம் இந்த அம்சத்தை மேம்படுத்தல்களுடன் தொடர விரும்புகிறது என்று வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர். 


"தற்போதுள்ள PAN அட்டை வைத்திருப்பவர்கள் பழைய PAN  அட்டையை   QR குறியீடு உடன் மீண்டும் உருவாக்கலாம்.  QR குறியீடு இல்லாத பழைய PAN கார்டு வைத்திருப்பவர்கள் QR குறியீட்டுடன் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். PAN 2.0 முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது  இணைய வழியில் (காகிதமற்றது) இருக்கும்" என்று நிதி அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். தற்போதுள்ள பயனர்களுக்கு PAN அட்டையை மேம்படுத்துவது இலவச சேவையாக இருக்கும் என்று வைஷ்ணவ் மாநாட்டில் தெரிவித்தார். 


இதுவரை சுமார் 78 கோடி PAN அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 98 சதவீதம் தனிநபர்களுடையது. 


வணிகங்களைப் பொறுத்தவரை, இது பல்வேறு வரி சீட்டுகள் (challans) மற்றும் வருமானங்களை தாக்கல் செய்வதற்கான தடையற்ற, பொதுவான அமைப்பைக் கொண்டுள்ளது. 


PAN என்ற 10 இலக்க எண்ணெழுத்து எண், ஒரு நபரின் அனைத்து பரிவர்த்தனைகளையும் துறையுடன் இணைக்க வருமான வரித்துறைக்கு உதவுகிறது. இந்த பரிவர்த்தனைகளில் வரி செலுத்துதல்கள், மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (Tax Deducted at Source (TDS)) / மூலத்தில் சேகரிக்கப்பட்ட வரி (Tax Collected at Source (TCS) ) வரவுகள், வருமானம், குறிப்பிட்ட பரிவர்த்தனைகள் ஆகியவை அடங்கும். இதனால், PAN, வரித் துறையில் உள்ள நபருக்கு அடையாளங்காட்டியாக செயல்படுகிறது. PAN ஒதுக்கப்பட்டவுடன், அது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது PAN எண் குறிப்பிடுவது கட்டாயமாகும். 


TAN என்பது வரி விலக்கு மற்றும் சேகரிப்பு கணக்கு எண்ணைக் குறிக்கிறது. இது வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட 10 இலக்க எண்ணெழுத்து எண்ணாகும். 

வரியைக் கழிப்பதற்கு அல்லது வசூலிப்பதற்கு பொறுப்பான அனைத்து நபர்களும் TAN அட்டையை பெற வேண்டும்.  TDS/TCS ரிட்டர்ன், ஏதேனும் TDS/TCS பணம்செலுத்தல், TDS/TCS சான்றிதழ்களில் TAN மேற்கோள் காட்டுவது கட்டாயமாகும். 

               




Original article:


Share:

'ஒரே நாடு ஒரே சந்தா (ONOS)' திட்டத்தின் முதல் கட்டம் ஒப்புதல்: அரசு நிறுவனங்கள் பத்திரிகைகளுக்கான அணுகலை எவ்வாறு மேம்படுத்த முடியும்? - ரித்திகா சோப்ரா

 ஏறக்குறைய அரசாங்கத்தால் நடத்தப்படும் 6,300 நிறுவனங்களுக்கான பத்திரிகை சந்தாக்களை மையப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஒரே நாடு ஒரே சந்தா (One Nation One Subscription (ONOS)) தளத்தின் கீழ் 13,000 அறிவார்ந்த பத்திரிகைகளுக்கு சமமான அணுகலை வழங்க முற்படுகிறது. 


'ஒரே நாடு ஒரே சந்தா' (One Nation One Subscription (ONOS)) என்ற முன்முயற்சிக்கு 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை (நவம்பர் 25) ஒப்புதல் அளித்தது. இது இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு (higher education institutions (HEIs)) கல்வி வளங்களை சிறப்பாக அணுக உதவும் என்று மையம் நம்புகிறது. 


ஏறக்குறைய அரசாங்கத்தால் நடத்தப்படும் 6,300 நிறுவனங்களுக்கான பத்திரிகை சந்தாக்களை மையப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ONOS ஒரே தளத்தின் கீழ் 13,000 அறிவார்ந்த பத்திரிகைகளுக்கு சமமான அணுகலை வழங்க முற்படுகிறது. 


தற்போதைய அமைப்பின் முடிவு, அமைச்சரவையின் ஒப்புதல் மற்றும் இந்த முயற்சிக்கான வரைவு போன்றவை விளக்கப்பட்டு உள்ளது. 


தற்போது, பல்வேறு அமைச்சகங்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 10 வெவ்வேறு நூலக கூட்டமைப்புகள் (library consortium) மூலம் உயர் கல்வி நிறுவனங்கள் பத்திரிகைகளை அணுக முடியும். நூலகக் கூட்டமைப்பு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நூலகங்களின் குழுவாகும். அவை பொதுவாக வளப் பகிர்வு போன்ற ஒரே மாதிரியான சில தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒத்துழைக்க ஒப்புக்கொண்டன. உதாரணமாக, காந்திநகரில் உள்ள INFLIBNET (Information and Library Network Centre)  மையம் என்பது கல்வி அமைச்சகத்தின் (இந்தியா) கீழ் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission) பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மையமாகும். இது யுஜிசி-இன்ஃபோநெட் டிஜிட்டல் நூலக கூட்டமைப்பை (UGC-Infonet Digital Library Consortium) மேற்பார்வையிடுகிறது. இது பல்வேறு துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவார்ந்த மின்னணு பத்திரிகைகள் மற்றும் தரவுத்தளங்களுக்கு அணுகலை வழங்குகிறது. 


இது தவிர, உயர் கல்வி நிறுவனங்கள் தனித்தனியாக பல பத்திரிகைகளுக்கு சந்தா செலுத்துகின்றன. அரசாங்க மதிப்பீடுகளின்படி, சுமார் 2,500 உயர் கல்வி நிறுவனங்கள் மேற்கண்ட அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட சந்தாக்கள் மூலம் 8,100 பத்திரிகைகளை அணுக முடியும். 


ONOS திட்டத்தின் மூலம், அனைத்து அரசாங்க உயர் கல்வி நிறுவனங்களுக்கும் பத்திரிகை அணுகலுக்கான மாறுபட்ட அணுகுமுறையை ஒருங்கிணைப்பதை மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ONOS ஆனது மாநில மற்றும் மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஒரே தளத்தில் ஆயிரக்கணக்கான பத்திரிகைகளை அணுக உதவும். இது ஜனவரி 1, 2025 முதல் நடைமுறையில் இருக்கும். 


இந்த பொதுவான தளம் Elsevier Science Direct (including Lancet), Springer Nature, Wiley Blackwell Publishing, Taylor & Francis, IEEE, Sage Publishing, American Chemical Society மற்றும் American Mathematical Society உள்ளிட்ட 30 சர்வதேச வெளியீட்டாளர்களால் வெளியிடப்பட்ட 13,000 பத்திரிகைகளை வழங்கும்.  அனைத்து நிறுவனங்களும் இந்த இதழ்களை அணுக இத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த முன்முயற்சியை செயல்படுத்தும் நிறுவனமாக INFLIBNET நியமிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு 30 வெவ்வேறு வெளியீட்டாளர்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தலா ஒரு சந்தா விலையை நிர்ணயம் செய்து, 2025, 2026 மற்றும் 2027 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு 6,000 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளித்தது. 


"பொது தளத்தில்  கிடைக்கும் 13,000-க்கு வெளியே உள்ள பத்திரிகைகளை உயர் கல்வி நிறுவனங்கள் இன்னும் அணுக விரும்பினால், அவர்கள் தனித்தனியாக இதில் சேரலாம்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ONOS திட்டம் நான்கு காரணங்களுக்காக நியாயப்படுத்தப்பட்டுள்ளது. 


முதலாவதாக, இது சுமார் 6,300 அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும்  2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்கள் உட்பட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் ( Institutions of National Importance (INIs)) சுமார் 1.8 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு 55 லட்சம் மாணவர்களுக்கான சிறந்த அறிவார்ந்த பத்திரிகைகளுக்கான அணுகலை விரிவுபடுத்தும். 


இரண்டாவதாக, பல்வேறு நூலகக் கூட்டமைப்புகள் மற்றும் தனிப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பத்திரிகை சந்தாக்களை இரட்டிப்பாக்குவதைத் தடுக்கலாம். இதனால் ஒன்றுடன் ஒன்று வளங்களுக்கான அதிகப்படியான செலவைக் குறைக்கலாம். 


மூன்றாவதாக, அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு உயர் கல்வி நிறுவனங்களுக்கும் ஒரே சந்தா வெளியீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது சிறந்த வாய்ப்பை வழங்கும். ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்டி, மத்திய அரசு, "நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெவ்வேறு வெளியீட்டாளர்களின் பிரதிநிதிகளை சந்தித்து வருகிறோம். இந்த நேரத்தில், சிறந்த விலையை நிர்ணயம் செய்ய, பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் பணியாற்றியுள்ளோம். இதன் விளைவாக, 13,000 பத்திரிகைகளுக்கு ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாயாக இருந்த ஆரம்ப செலவு ரூ.1,800 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 


நான்காவதாக, அரசு உயர்கல்வி சூழல் அமைப்பால் எந்த அளவிற்கு பத்திரிகைகள் அணுகப்படுகின்றன மற்றும் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன என்பது குறித்த தகவல்களை இந்த மையம் பெறும் என்று அதிகாரி குறிப்பிட்டார். "இது நீண்டகால திட்டமிடலுக்கு உதவுவது மட்டுமல்லாமல், செயலற்ற நிறுவனங்களை தளத்தை முழுமையாகப் பயன்படுத்தவும், அவர்களின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே அதன் நன்மைகளை மேம்படுத்தவும் ஊக்குவிக்க அனுமதிக்கும்" என்று அந்த அதிகாரி கூறினார். 


இந்த முயற்சி தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) 2020-ல் இருந்து உருவானது. இது கல்வி மற்றும் தேசிய வளர்ச்சியில் சிறந்து விளங்குவதற்கான ஒரு ஆராய்ச்சியை வலியுறுத்தியது.  "இந்த வேறுபட்ட பகுதிகளில் இந்தியா ஒரு தலைமையாக மாற வேண்டுமானால், வரவிருக்கும் காலங்களில் மீண்டும் ஒரு முன்னணி அறிவுசார் சமூகமாக மாற அதன் பரந்த திறமையின் திறனை உண்மையிலேயே அடைய வேண்டுமானால், தேசத்திற்கு அதன் ஆராய்ச்சி திறன்கள் மற்றும் துறைகளில் வெளியீடு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் தேவைப்படும்" என்று தேசிய கல்விக் கொள்கை 2020 கூறுகிறது. இந்தியாவின் உயர்கல்வி சுற்றுச்சூழல் அமைப்பு முழுவதும் புதுமை கலாச்சாரத்தை வளர்க்கும் அதே வேளையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை (research and development (R&D)) ஊக்குவிப்பதற்கும், உறுதியளிப்பதற்கும், வளர்ப்பதற்கும் மற்றும் மேம்படுத்துவதற்கும் ஒரு தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை (National Research Foundation (NRF)) நிறுவுவதற்கு இக்கொள்கை வலுவாக பரிந்துரைத்தது.


2022-ஆம் ஆண்டில், முதன்மை அறிவியல் ஆலோசகர் தலைமையில் செயலாளர்களின் முக்கிய குழுவை உருவாக்குவதன் மூலம் மத்திய அரசு இந்த இலக்கை நோக்கி ஒரு உறுதியான நடவடிக்கையை எடுத்தது. இந்த குழு பின்னர் ONOS முன்முயற்சிக்காக பத்திரிகை வெளியீட்டாளர்களுடன் வலுவான பேச்சுவார்த்தைகளை நடத்த செலவு பேச்சுவார்த்தை குழுவை அமைத்தது. அதன் காரணமாகவே அனுசந்தன் (Anusandhan) தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (National Research Foundation (ANRF)) இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்டது. 


அடுத்த கட்டமாக மத்திய அரசு கட்டுரை செயலாக்க கட்டணங்கள் (Article Processing Charges (APCs)) பத்திரிகை வெளியீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.  APCகள், வெளியீட்டுக் கட்டணம் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை சில பத்திரிகைகளில் வெளியிட ஆசிரியர்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள், அறிவியல் பத்திரிகைகள் வெளியீடு, தலையங்கம், செயல்பாடு, சக மதிப்பாய்வு மற்றும் பிற செயல்பாட்டு செலவுகளை உள்ளடக்கிய வருமானத்தை உருவாக்க பல்வேறு வழிகளைக் கொண்டுள்ளன. திறந்த அணுகல் பத்திரிகைகள் பொதுவாக APC எனப்படும் கட்டுரை செயலாக்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கின்றன. 


அரசாங்க மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் உள்ள ஆசிரியர்கள் 2021-ஆம் ஆண்டில் APCகளாக பத்திரிகை வெளியீட்டாளர்களுக்கு கிட்டத்தட்ட ₹380 கோடியை செலுத்தினர். அரசாங்கத்தால் நடத்தப்படும் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் (HEIs) ஒற்றை சந்தா விகிதத்தை அரசாங்கம் எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியதோ, இப்போது APCகளுக்கும் இதைச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அணுகுமுறை ஒட்டுமொத்த செலவுகளைக் குறைக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது. 


இதை அடைவதற்காக, பங்கேற்கும் அமைச்சகங்களைச் சேர்ந்த நிபுணர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆய்வுக் கட்டுரைகளுக்காக APC களில் உள்ள பத்திரிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். 


ONOS தனியார் உயர் கல்வி நிறுவனங்களையும் உள்ளடக்குமா என்பது குறித்து, அரசாங்கம் இன்னும் ஒரு முடிவை எடுக்கவில்லை என்று இந்த வட்டாரங்கள் தெரிவித்தன.




Original article:

Share:

அரசியலமைப்பு தினத்தில், இந்தியாவின் எதிர்காலம் குறித்த அம்பேத்கரின் இன்றும் பொருந்தக்கூடிய 3 எச்சரிக்கைகளை நினைவு கூர்வது. -யாஷி

 அதிகரித்து வரும் கசப்பான அரசியல் விவாதங்களுக்கு மத்தியில் இரு தரப்பினராலும் அரசியலமைப்பு அடிக்கடி பயன்படுத்தப்படுவதால், அம்பேத்கரின் பல அச்சங்களின் எதிரொலிகளைக் கேட்க முடியும். அவற்றில் மூன்றை முன்னிலைப்படுத்துவோம்.


அரசியலமைப்பு தினம்: செவ்வாய்கிழமை (நவம்பர் 26), நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்தன. துணை குடியரசுத் தலைவர் தி ஜக்தீப் தன்கர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை மேற்கோள் காட்டினார். இதில், அரசியல்வாதிகள் "நாட்டை நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு வைத்திருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.


இந்திய அரசியலமைப்பின் தந்தையான அம்பேத்கர், அரசியலமைப்பின் செயல்திறன் மற்றும் தாக்கம் அதை செயல்படுத்துபவர்களைப் பொறுத்தது என்று பல முறை வலியுறுத்தியுள்ளார். “ஒரு அரசியலமைப்பு எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அது மோசமானதாக மாறும் என்பது உறுதியாக, அதைச் செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமாக மாறும்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 


நவம்பர் 25, 1949 அன்று அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கரின் இறுதிக் குறிப்புகளில் இருந்து தன்கர் மேற்கோள் காட்டிய அறிக்கையில், நாட்டின் எதிர்காலம் குறித்த பல அச்சங்களை அவர் வெளிப்படுத்தினார். இன்று, அரசியல் சாசனம் பற்றி இரு தரப்பும் அடிக்கடி குறிப்பிடும் அரசியல் விவாதத்திற்கு மத்தியில். இது அம்பேத்கரின் பல கவலைகளை நினைவுபடுத்துகிறது. அவற்றில் மூன்றை நாங்கள் முன்னிலைப்படுத்துகிறோம்.



  1. 'இந்தியா மீண்டும் தனது சுதந்திரத்தை இழக்குமா?' 


உள்நாட்டுப் பிரிவுகளால் இந்தியா தனது சுதந்திரத்தை எவ்வாறு இழந்தது என்பதைப் பற்றி அம்பேத்கர் பேசினார். மீண்டும் இப்படி நடக்கலாமா என்று குறிப்பிட்டிருந்தார். 


வரலாறு மீண்டும் நிகழும் சாத்தியம் குறித்து அவர் கவலை தெரிவித்தார். சாதிகள் மற்றும் சமயங்கள் போன்ற பழைய எதிரிகளைத் தவிர, பல்வேறு மற்றும் எதிர் நம்பிக்கைகளைக் கொண்ட பல அரசியல் கட்சிகளையும் இந்தியா எதிர்கொள்ளும் என்று அவர் கவலைப்பட்டார். இந்தியர்கள் தங்கள் சொந்த நம்பிக்கைகளைவிட நாட்டிற்கு முன்னுரிமை கொடுப்பார்களா அல்லது நாட்டிற்கு மேல் தங்கள் நம்பிக்கைகளை வைப்பார்களா என்று அம்பேத்கர் கேள்வி எழுப்பினார். அவர் இதைப் பற்றி நம்பிக்கையற்றவராக இருந்தார். ஆனால், அவர் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தார். அரசியல் கட்சிகள் நாட்டின் மீது மதத்தை முதன்மைப்படுத்தினால், இந்தியாவின் சுதந்திரம் மீண்டும் ஆபத்தில் இருக்கும் மற்றும் என்றென்றும் இழக்கப்படலாம்.


சுதந்திரத்தை இழப்பது என்பது நிலத்தை இழப்பது மட்டுமல்ல. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்காக அந்நாட்டு மக்கள் செயல்படவில்லை என்றால், அந்த நாடு உண்மையிலேயே சுதந்திரமாக இருக்காது. மதம், சமூகம், சாதி மற்றும் பிற காரணிகள் தொடர்பான அச்சங்கள் மற்றும் பாரபட்சத்தால் அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டால், நாட்டை சுதந்திரமானது என்று அழைக்க முடியாது.


  1. 'இந்தியாவிற்கு முன்பே ஜனநாயகம் தெரியும், அது தொடர்ந்து ஜனநாயகமாக இருக்குமா?' 


அம்பேத்கர் தனது உரையில், ஜனநாயகம் என்பது இந்தியாவுக்கு ஒரு புதிய கருத்தாக்கம் அல்ல. ஆனால், பண்டைய காலங்களில் எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். 


இந்தியா ஒரு காலத்தில் குடியரசுகளால் நிரம்பியிருந்தது. நாடாளுமன்றங்களையோ, நாடாளுமன்ற நடைமுறைகளையோ இந்தியா அறிந்திருக்கவில்லை என்பது உண்மையல்ல. பௌத்த பிக்கு சங்கங்கள் (Buddhist Bhikshu Sanghas) பற்றிய ஆய்வு இரண்டு விஷயங்களை வெளிப்படுத்துகிறது. முதலில், நாடாளுமன்றங்கள் இருந்தன. ஏனெனில், சங்கங்கள் அடிப்படையில் நாடாளுமன்றங்களாக இருந்தன. இரண்டாவதாக, இன்று நமக்குத் தெரிந்த அனைத்து நாடாளுமன்ற நடைமுறை விதிகளையும் சங்கத்தினர் அறிந்து பின்பற்றினர்.

அம்பேத்கர் இந்த வகையான செயல்பாட்டை "அவரது காலத்தில் நாட்டில் செயல்பட்ட அரசியல் சபைகளின் விதிகளிலிருந்து" கடன் வாங்கியிருக்க வேண்டும் என்று கூறினார். 


பின்னர் அவர், ஒரு தலைவரிடம் அளவுக்கதிகமான பக்தி காட்டுவது அல்லது நாயக வழிபாட்டிற்கு (hero-worship) எச்சரிக்கை விடுத்தார்.


வாழ்நாள் முழுவதும் நாட்டிற்கு சேவை செய்த பெரிய மனிதர்களுக்கு நன்றி செலுத்துவதில் தவறில்லை. ஆனால், ஒருவர் எவ்வளவு நன்றியைக் காட்ட வேண்டும் என்பதற்கு வரம்புகள் உள்ளன. இந்தியாவில், பக்தி அல்லது நாயக வழிபாட்டின் பாதை என்று அழைக்கப்படுவது, அரசியலில் பெரும் பங்கு வகிக்கிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு பக்தியின் தாக்கம் அரசியலில் இல்லை. மதத்தில் உள்ள பக்தி ஆன்மாவுக்கு முக்திக்கான ஒரு வழியாகும். இருப்பினும், அரசியலில் பக்தி அல்லது நாயக வழிபாடு சீரழிவுக்கும் இறுதியில் சர்வாதிகாரத்துக்கும் இட்டுச் செல்கிறது என்றார்.


  1. அரசியல் ஜனநாயகம் சமூக ஜனநாயகமாக விரிவடையுமானால் 


அம்பேத்கர் அரசியல் ஜனநாயகமானது "அதன் சமூக ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு இல்லாவிட்டால்" நீடிக்காது என்று கூறினார். அதாவது, "சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வாழ்க்கையின் கொள்கைகளாக அங்கீகரிக்கும் ஒரு வாழ்க்கை முறை" ஆகும். 


பின்னர் அவர் இந்தியாவில் நிலவும் தீவிர சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மையை எடுத்துரைத்தார். 


இந்த நாட்டில் அரசியல் அதிகாரம் நீண்ட காலமாக ஒரு சிலரால் கட்டுப்படுத்தப்பட்டது. பலர் பாரம் சுமக்கும் மிருகங்களாகவும், கொள்ளையடிக்கும் மிருகங்களாகவும் கருதப்படுகிறார்கள். இந்த ஏகபோகம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பைப் பறித்தது மட்டுமல்லாமல், வாழ்க்கையின் அர்த்தத்தையும் பறித்துவிட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆளப்படுவதில் சோர்வடைந்துள்ளனர். அவர்கள் தங்களையே ஆளத் துடிக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களிடையே சுய-உணர்தலுக்கான தூண்டுதல் வர்க்கப் போராட்டமாகவோ அல்லது வர்க்கப் போராகவோ மாறக்கூடாது என்று எச்சரித்தார்.


இறுதியாக, நாட்டின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக மாறினால், ஒரே ஒரு முடிவுதான் எடுக்கப்படும் என்றார். அவர் மேலும் கூறுகையில், “புதிய அரசியலமைப்பின் கீழ் விஷயங்கள் தவறாக நடந்தால், அதற்குக் காரணம் நாம் மோசமான அரசியலமைப்பை வைத்திருந்ததாக ஆகாது. நாம் சொல்ல வேண்டியது என்னவென்றால், மனிதன் மோசமானவன்” என்றார்.




Original article:

Share: