பயிர் மற்றும் மனித ஊட்டச்சத்தை மேம்படுத்த, இந்தியாவுக்கு ஒரு முன்னுதாரண மாற்றம் தேவை. -அசோக் குலாட்டி, லியோனார்டஸ் வெர்குட்ஸ், ரித்திகா ஜுனேஜா

 மக்களின் பசியைப் போக்குவதற்கு, உண்மையிலேயே ஊட்டமளிக்கும் உணவை பெற மண்ணுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் தேவை. இது  வேளாண்மைய சார்ந்தது  மட்டுமல்ல, இது பொது சுகாதாரத்திற்கும் முக்கியமானது.


1960-ஆம் ஆண்டுகளில் PL-480 திட்டத்தின் கீழ் அமெரிக்காவின் உணவு உதவியை நம்பியிருந்த இந்தியா, ஒருநாள் உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக மாறும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 2024-25-ஆம் ஆண்டில், மொத்த உலகளாவிய சந்தையான 61 மில்லியன் டன்களில் இந்தியா 20.2 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்தது. உலகின் மிகப்பெரிய உணவு விநியோகத் திட்டமான பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனாவையும் இந்தியா செயல்படுத்துகிறது. இது 800 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமையை வழங்குகிறது. இருப்பினும், இந்திய உணவுக் கழகத்திடம் சுமார் 57 மில்லியன் டன் அரிசி உள்ளது. இது 20 ஆண்டுகளில் மிக உயர்ந்த இருப்பு மற்றும் ஜூலை 1, 2025 நிலவரப்படி 13.54 மில்லியன் டன் என்ற இடையக விதிமுறையைவிட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம்.


வறுமை வெகுவாகக் குறைந்துள்ளது. 2021ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 3 டாலருக்கும் குறைவாக சம்பாதிக்கும் தீவிர வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை 2011-ல் 27.1% ஆக இருந்தது (2022-ல் 5.3% ஆகக் குறைந்துள்ளது. ஆனால், இந்த முன்னேற்றம் இருந்தபோதிலும், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு இன்னும் ஒரு பெரிய பிரச்சனையாகவே உள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 35.5% பேர் தங்கள் வயதுக்கு ஏற்றவாறு குறைவான உயரம் கொண்டவராக உள்ளனர். மேலும், 32.1% பேர் எடை குறைவாக உள்ளனர். 19.3% பேர் தங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு உள்ளனர் என்று தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (2019–21) கூறுகிறது. இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு இப்போது போதுமான கலோரிகளை மட்டுமல்ல, போதுமான ஊட்டச்சத்துக்களையும் உறுதி செய்ய வேண்டும்.


ஒரு முக்கியமான ஆனால் பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் விஷயம் மண்ணின் ஆரோக்கியம் ஆகும். மண்ணில் நுண்ணூட்டச்சத்துக்கள் இல்லாதபோது, அது பண்ணை உற்பத்தியைக் குறைத்து பயிர்களில் ஊட்டச்சத்தைக் குறைக்கிறது. மோசமான மண்ணில் வளர்க்கப்படும் பயிர்களிலும் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், மக்களிடையே மறைந்திருக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. உதாரணமாக, மண்ணில் துத்தநாகம் குறைவாக இருந்தால், கோதுமை மற்றும் அரிசியிலும் துத்தநாகம் குறைவாக இருக்கும். இது மக்களில் துத்தநாகக் குறைபாட்டை ஏற்படுத்தும், இது குழந்தைகளின் வளர்ச்சி குன்றுவதோடு தொடர்புடையது. வளர்ச்சி குன்றிய தன்மை குழந்தையின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் எதிர்கால வேலை வாழ்க்கையை பாதிக்கிறது.


இந்திய மண்ணைப் பார்க்கும்போது, மண் சுகாதார அட்டை திட்டத்தின் (Soil Health Card Scheme) கீழ் 2024ஆம் ஆண்டில் பரிசோதிக்கப்பட்ட 8.8 மில்லியனுக்கும் அதிகமான மண் மாதிரிகளில், 5%-க்கும் குறைவான இடங்களில் போதுமான நைட்ரஜன் இருந்தது, 40% மட்டுமே போதுமான பாஸ்பேட் இருந்தது, 32% போதுமான பொட்டாஷ் இருந்தது, மற்றும் 20% மட்டுமே போதுமான மண் கரிம கார்பன் இருந்தது.


மண் கரிம கார்பன் (Soil Organic Carbon (SOC)) மிகவும் முக்கியமானது. ஏனெனில், இது மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் குணங்களை பாதிக்கிறது. இந்த குணங்கள் மண் தண்ணீரை எவ்வளவு நன்றாகத் தக்கவைத்துக்கொள்கிறது மற்றும் ஊட்டச்சத்துக்களை எவ்வளவு நன்றாகப் பயன்படுத்துகிறது என்பதைத் தீர்மானிக்கிறது. எவ்வளவு SOC போதுமானது என்பது பற்றிய விவாதமும் உள்ளது. இந்திய மண் அறிவியல் நிறுவனம் 0.50% முதல் 0.75% வரையிலான SOC போதுமானது என்று கூறுகிறது. ஆனால் மண் நிபுணர் ரத்தன் லால் கூறுகையில், மண்ணில் குறைந்தது 1.5% முதல் 2% கார்பன் இருக்க வேண்டும்.


நமது மண்ணிலும் கந்தகம் மற்றும் இரும்பு, துத்தநாகம் மற்றும் போரான் போன்ற சிறிய ஆனால் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இல்லை. இந்தப் பற்றாக்குறை மிதமானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். இந்தியாவின் மண்ணின் பல பகுதிகளை மீண்டும் நல்ல ஆரோக்கியத்திற்குக் கொண்டுவர அவசர ஏற்பாடுகள் தேவை. எனவே அவை நீண்டகாலத்திற்கு ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்ய முடியும்.


இந்தியாவின் சில பகுதிகளில், விவசாயிகள் அதிகமாக நைட்ரஜனை பயன்படுத்துகிறார்கள். ஆனால், போதுமான பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் இல்லை. உதாரணமாக, பஞ்சாபில், நைட்ரஜன் பயன்பாடு பரிந்துரைக்கப்பட்டதைவிட 61% அதிகமாக உள்ளது, ஆனால் பொட்டாசியம் பயன்பாடு 89% குறைவாகவும், பாஸ்பரஸ் பயன்பாடு 8% குறைவாகவும் உள்ளது. தெலுங்கானா இதேபோன்ற முறையைக் காட்டுகிறது. நைட்ரஜன் பயன்பாடு 54% அதிகமாக உள்ளது. ஆனால் பொட்டாசியம் பயன்பாடு 82% குறைவாகவும், பாஸ்பரஸ் பயன்பாடு 13% குறைவாகவும் உள்ளது. இந்தப் பிரச்சனை பல மாநிலங்களிலும் உள்ளது. அதிகப்படியான நைட்ரஜன் மற்றும் மிகக் குறைந்த பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்துவது பயிர்களின் உற்பத்தியைக் குறைக்கிறது. இந்தியா முழுவதும், தானியங்களுக்கான உரங்களின் பங்கு 1970ஆம் ஆண்டுகளில் 1:10 ஆக இருந்தது. 2015இல் வெறும் 1:2.7 ஆகக் குறைந்துள்ளது.


குருணைவடிவ யூரியாவைப் பயன்படுத்துவது அதிக நைட்ரஜன் இழப்புக்கு வழிவகுக்கிறது. நைட்ரஜனில் சுமார் 35-40% மட்டுமே பயிர்களால் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ளவை நைட்ரஸ் ஆக்சைடாக காற்றில் வெளியேறுகின்றன. கார்பன்-டை-ஆக்சைடைவிட மிகவும் வலிமையான பசுமை இல்ல வாயு அல்லது நிலத்தடி நீரில் கசிந்து, நைட்ரேட்டுகளால் மாசுபடுத்துகிறது, இது தண்ணீரை குடிக்க பாதுகாப்பற்றதாக ஆக்குகிறது. எனவே, அதிகப்படியான நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைப் பயன்படுத்துவது பயிர் விளைச்சலை மேம்படுத்துவதற்குப் பதிலாக அதிக மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. மேலும், விவசாயத்தைத் தவிர வேறு விஷயங்களுக்கு நிறைய யூரியா பயன்படுத்தப்படுகிறது. மேலும் அண்டை நாடுகளுக்கும்கூட ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.


மண்ணை மீண்டும் ஆரோக்கியமாக்குவதற்கும், பயிர்கள் மற்றும் மக்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கும், இந்தியா தனது அணுகுமுறையை மாற்ற வேண்டும். சிந்திக்காமல் அதிக உரங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமாக மண் ஊட்டச்சத்தை நிர்வகிக்க வேண்டும். இதன் பொருள், சரியான மண் பரிசோதனை மற்றும் ஒவ்வொரு மண் மற்றும் பயிரின் தேவைகளின் அடிப்படையில், சரியான அளவு உரங்களைப் பயன்படுத்துவதாகும்.


மக்களின் பசியை போக்குவதற்கு, உண்மையிலேயே ஊட்டமளிக்கும் உணவைப் பெற மண்ணுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் தேவை. இது  வேளாண்மையை சார்ந்தது  மட்டுமல்ல, இது பொது சுகாதாரத்திற்கும் முக்கியமானது.


இது எவ்வளவு முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு, சர்வதேச பொருளாதார உறவுகள் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (International Economic Relations (ICRIER)) மற்றும் OCP நியூட்ரிகிராப்ஸ் (OCP Nutricrops) ஆகியவை இந்தியாவிலும் பிற இடங்களிலும் மண் ஆரோக்கியத்தை மேம்படுத்த இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளன. OCP நியூட்ரிகிராப்ஸ் மண் ஊட்டச்சத்து மற்றும் நிலையான உணவு உற்பத்திக்கான உரங்களில் மேம்பட்ட அறிவைக் கொண்டுள்ளது. ஒன்றாக, ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் மண் ஊட்டச்சத்து தீர்வுகளை உருவாக்க, பயன்படுத்த மற்றும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த தீர்வுகள் அதிக பயிர்களை வளர்க்கவும், அவற்றை அதிக சத்தானதாக மாற்றவும் உதவும்.


நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதற்கும், உணவை எப்படி வளர்க்கிறோம் என்பதற்கும் தொடர்பு ஏற்பட, முதலில் பூமியை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒரு தேசமாக நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.


குலாட்டி ICRIER இல் புகழ்பெற்ற பேராசிரியராகவும், வெர்குட்ஸ் OCP நியூட்ரிக்ரோப்ஸில் முதன்மை அறிவியல் அதிகாரியாகவும், ஜுனேஜா ICRIER-ல் ஆராய்ச்சி சக ஊழியராகவும் உள்ளார்.



Original article:

Share:

இந்தியாவின் பசுமை ஆற்றல் உற்பத்தித் திறன் வெப்ப ஆற்றலை மிஞ்சுகிறது -ரோஷ்னி யாதவ்

 புதைபடிவமற்ற எரிபொருள் (Non-fossil fuels) இப்போது இந்தியாவின் நிறுவப்பட்ட மின் உற்பத்தி திறனில் 50.1% ஆக உள்ளன—இலக்கை விட ஐந்து ஆண்டுகள் முன்னதாகவே.


இந்தியா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெரிய காலநிலை இலக்கை அடைந்துள்ளது. ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் நிறுவப்பட்ட மின்சார திறனில் புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்கள் 50.1 சதவீதத்தைக் கொண்டுள்ளன. 2015ஆம் ஆண்டில், பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் 2030-ஆம் ஆண்டுக்குள் 40%-ஐ எட்டுவதாக இந்தியா உறுதியளித்தது. இந்தியா 2022-ஆம் ஆண்டில், இந்த இலக்கை 50% ஆக உயர்த்தியது.

முக்கிய அம்சங்கள்:


1. அணுசக்தி, பெரிய நீர்மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட ஆதாரங்கள் 2015-ல் நிறுவப்பட்ட திறனில் 30 சதவீதத்தையும் 2020-ல் 38 சதவீதத்தையும் மட்டுமே கொண்டிருந்தன. பின்னர், கடந்த ஐந்து ஆண்டுகளில் சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தின் பின்னணியில் கூர்மையாக உயர்ந்தன.


2. ஜூன் மாத நிலவரப்படி, இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட திறன் 485 ஜிகாவாட் ஆக இருந்தது. இதில், சூரிய, காற்று, நீர் மற்றும் உயிரி எரிவாயு உட்பட புதுப்பிக்கத்தக்கவை 185 ஜிகாவாட் என புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (Ministry of New and Renewable Energy (MNRE)) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


3. பெரிய ஹைட்ரோ திறன்கள் 49 ஜிகாவாட் பங்களித்தன. மேலும், அணுசக்தி 9 ஜிகாவாட் சேர்த்தது, மொத்த புதைபடிவமற்ற எரிபொருள் திறனை பாதிக்கு மேல் எடுத்தது. அனல் மின்சாரம், பெரும்பாலும் நிலக்கரி மற்றும் எரிவாயு அடிப்படையிலானது, மீதமுள்ள 242 ஜிகாவாட் அல்லது 49.9 சதவீதம் ஆகும். 2015-ல் தெர்மலின் பங்கு 70 சதவீதமாக இருந்தது.


நிறுவப்பட திறன்

வெப்ப ஆற்றல் 

புதைபடிவமற்ற எரிபொருள்

மொத்தம்

புதைபடிவமற்ற எரிபொருள் பங்கு (%)

அணுக்கரு

பெரிய ஹைட்ரோ

புதுப்பிக்கத்தக்கவை*

ஜூன் 2015

191.26

5.78

42

35.78

274.82

30.4

ஜூன் 2020

230.9

6.78

45.7

87.67

371.05

37.8

ஜூன் 2025

242.04

8.78

49.38

184.62

484.82

50.1


4. குறிப்பிடத்தக்க வகையில், 2024ஆம் ஆண்டில், பெரிய நீர்மின்சாரம் உட்பட புதுப்பிக்கத்தக்க நிறுவப்பட்ட திறனில் சீனா, அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்குப் பிறகு, இந்தியா உலகளவில் நான்காவது இடத்தைப் பிடித்தது, 


5. இந்தியாவின் ஆற்றல் கலவையில் புதுப்பிக்கத்தக்க பொருட்களின் பங்களிப்பு அதிகரிப்பு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. இது சமீபத்திய ஆண்டுகளில் சூரிய மற்றும் காற்றாலை சக்தியின் விரைவான சேர்க்கையால் இயக்கப்படுகிறது. இருப்பினும், நிறுவப்பட்ட வெப்பத் திறன் பாதி அளவை விடக் குறைவாக இருப்பதால், இந்தியாவின் வெப்ப மின்சாரத்தை நம்பியிருப்பது 50 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்துவிட்டது என்று அர்த்தமல்ல. அதற்கு மாறாக, சூரிய சக்தி மற்றும் காற்று போன்ற புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் இடைவிடாது செயல்படுவதாலும், 24 மணி நேரமும் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாததாலும், அனல் மின் நிலையங்கள் நாட்டின் மின்சாரத்தில் 70%-க்கும் அதிகமாக உற்பத்தி செய்கின்றன.


6. 2030-ஆம் ஆண்டுக்குள் அனல் மின் பயன்பாட்டைக் குறைத்து, 500 ஜிகாவாட் புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றலை உருவாக்கும் இந்தியாவின் இலக்கை அடைய, மின் கட்டமைப்பை வலுவாகவும் நிலையானதாகவும் மாற்றுவதில் தொடங்கி, இந்தியா இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும்.


புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வகைகள்


1. சூரிய ஆற்றல்: சூரிய சக்தி சூரியனின் கதிர்களிலிருந்து வருகிறது. சூரிய ஒளிமின்னழுத்த மின்கலன்களைப் பயன்படுத்தி (photovoltaic cells) மின்சாரமாக மாற்றலாம் அல்லது மாற்றாக சூரிய வெப்ப அமைப்புகள் மூலம் வெப்பத்தை உற்பத்தி செய்ய பயன்படுத்தலாம். அதன் மிகுதியான இருப்பு காரணமாக, சூரிய சக்தி மிகவும் பரவலாகக் கிடைக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் ஒன்றாகத் தனித்து நிற்கிறது. சீனா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை உலகின் முன்னணி சூரிய சக்தி உற்பத்தியாளர்களில் முக்கிய நாடுகளாகும்.


2. நீர் மின்சாரம்: இது ஆறுகள், அணைகள், நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றில் பாயும் நீரின் இயக்க ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் உருவாக்கப்பட்டது. இது புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பழமையான மற்றும் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வடிவங்களில் ஒன்றாகும்.


3. உயிர்த்திரள் ஆற்றல் (Biomass energy): தாவர எச்சங்கள், விலங்குக் கழிவுகள் மற்றும் மரம் போன்ற இயற்கைப் பொருட்களிலிருந்து உயிர்த்திரள் வருகிறது. இதை சூடாக்கவோ அல்லது திரவ அல்லது வாயு எரிபொருளாகவோ மாற்ற முடியும். இதன் பயன்பாட்டில் வெப்பமாக்கல், மின்சார உற்பத்தி அல்லது போக்குவரத்துக்கான உயிரி எரிபொருள்கள் அடங்கும். இந்தப் பொருட்கள் மீண்டும் வளரலாம் அல்லது மாற்றப்படலாம் என்பதால் இது புதுப்பிக்கத்தக்கது என்று கருதப்படுகிறது.


4. காற்றாலை: காற்று விசையாழிகள் (wind turbines) பயன்படுத்தி காற்றின் இயக்க ஆற்றலை (kinetic energy) மின்சாரமாக மாற்றுவதன் மூலம் இது உருவாக்கப்படுகிறது. சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கலவையில் கடலோர மற்றும் கடல் காற்றாலைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக மாறியுள்ளன.


5. புவிவெப்ப ஆற்றல் (Geothermal Energy): இந்த ஆற்றல் வடிவம் பூமியின் உள் வெப்பத்திலிருந்து பெறப்படுகிறது. இவை இயற்கையாக நிகழும் சூடான நீர் தேக்கங்களாக இருக்கலாம் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம். பூமியின் மேற்பரப்பிற்கு கீழே பல்வேறு ஆழங்கள் மற்றும் வெப்பநிலைகளில் காணப்படுகிறது. இந்த புவிவெப்ப வளங்கள் மின்சாரம் உற்பத்தி மற்றும் நேரடி வெப்ப பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படலாம். மின்சாரத்தை உற்பத்தி செய்யும் புவிவெப்ப மின் நிலையங்கள், பொதுவாக நிலத்தடி நீர்த்தேக்கங்களிலிருந்து நீராவி அல்லது சூடான நீரைப் பயன்படுத்துகின்றன.


6. கடல் அலை ஆற்றல்: இது மின்சாரத்தை உருவாக்க கடல் நீரின் இயக்கத்தைப் பயன்படுத்துகிறது. அலை ஆற்றல் சந்திரன் மற்றும் சூரியனின் ஈர்ப்பிலிருந்து வருகிறது. அதே, நேரத்தில் அலை ஆற்றல் நீரின் மேற்பரப்பில் அலைகளின் இயக்கத்திலிருந்து வருகிறது.


ஆற்றல் மாற்றத்தில் முன்னணியில் உள்ள முதல் 10 நாடுகள் யாவை?


உலகப் பொருளாதார மன்றத்தால் வெளியிடப்பட்ட 2024ஆம் ஆண்டு ஆற்றல் மாற்றக் குறியீடு (Energy Transition Index (ETI)), நிலையான, மலிவு மற்றும் பாதுகாப்பான ஆற்றல் எதிர்காலத்தை நோக்கிய முன்னேற்றத்தின் அடிப்படையில் 120 நாடுகளை வரிசைப்படுத்தியுள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கையின்படி, ஆற்றல் மாற்றத்தில் முன்னணியில் உள்ள நாடுகள் இங்கே உள்ளன.


தர வரிசை

நாடு

2024ஆம் ஆண்டு ஆற்றல் மாற்றக் குறியீடு மதிப்பெண் 

2024ஆம் ஆண்டு கணினி செயல்திறன்

2024ஆம் ஆண்டு மாற்றம் தயார்நிலை

1

ஸ்வீடன்

78.4

79.4

76.8

2

டென்மார்க்

75.2

72.0

80.1

3

பின்லாந்து

74.5

76.2

69.1

4

சுவிட்சர்லாந்து

73.4

71.1

62.2

5

பிரான்ஸ்

71.1

74.7

65.6

6

நார்வே

69.9

75.2

62.0

7

ஐஸ்லாந்து

68

71.8

62.2

8

ஆஸ்திரியா

67.9

68.5

67.0

9

எஸ்டோனியா

67.8

73.7

59.0

10

நெதர்லாந்து

66.7

62.7

72.7


2024-ஆம் ஆண்டில், உலகளாவிய எரிசக்தி மாற்றக் குறியீட்டில் 120 நாடுகளில் இந்தியா 63வது இடத்தைப் பிடித்தது. 2023ஆம் ஆண்டில் 67வது இடத்தில் இருந்து முன்னேறியது.


02 ஆற்றல் மாற்றத்தில் கடைசி 10 நாடுகள் எவை?

WEF இன் ஆற்றல் மாற்றம் குறியீட்டில் கீழ் 10 நாடுகள்:

தர வரிசை

நாடு

2024ஆம் ஆண்டு ஆற்றல் மாற்றக் குறியீடு மதிப்பெண்

2024ஆம் ஆண்டு கணினி செயல்திறன்


2024ஆம் ஆண்டு மாற்றம் தயார்நிலை



110

ஜமைக்கா

46.6

50.3

41.1

111

செனகல்

46.6

53.3

36.5

112

ஜிம்பாப்வே

46.3

50.7

39.7

113

பாகிஸ்தான்

46.2

55.2

32.5

114

நிகரகுவா

46.0

57.7

28.6

115

போட்ஸ்வானா

45.6

54.3

32.7

116

மங்கோலியா

45.4

55.3

30.5

117

மொசாம்பிக்

45.3

57.0

27.8

118

தான்சானியா

44.3

49.7

36.1

119

ஏமன்.

43.8

55.1

26.8

120

காங்கோ ஜனநாயக குடியரசு

42.0

53.7

24.4



இந்தியாவின் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு (Nationally Determined Contribution (NDC)) மற்றும் முன்னேற்றம்


1. அக்டோபர் 2, 2015 அன்று, இந்தியா தனது முதல் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பை (NDC) ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)) சமர்ப்பித்தது. இந்தியா UNFCCC மற்றும் அதன் பாரிஸ் உடன்படிக்கையில் கையொப்பமிட்டது. இது 2015-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். இது NDC என அழைக்கப்படும் பெருகிய முறையில் அதிக லட்சிய காலநிலை நடவடிக்கை திட்டங்களின் ஐந்து ஆண்டு சுழற்சியில் செயல்படுகிறது.


2. இந்தியாவின் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு, தொடக்கத்தில் இரண்டு முக்கிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது: முதலாவதாக, 2005-ஆம் ஆண்டு அளவைவிட 2030-ஆம் ஆண்டுக்குள் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வு தீவிரத்தை 33-35 சதவீதம் குறைப்பது, இரண்டாவதாக, 2030-ஆம் ஆண்டுக்குள் அதன் மொத்த நிறுவப்பட்ட மின்சார திறனில் சுமார் 40 சதவீதத்தை புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றல் வளங்களிலிருந்து அடைவதாகும்.


3. ஆகஸ்ட் 2022-ல், இந்தியா இந்த இலக்குகளை புதுப்பித்தது: 2005 உடன் ஒப்பிடும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு யூனிட்டுக்கு உமிழ்வைக் குறைப்பதற்கான இலக்கு 2030-ஆம் ஆண்டுக்குள் 45% ஆக உயர்த்தப்பட்டது மேலும், புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான இலக்கு 2030-ஆம் ஆண்டுக்குள் 50% ஆக அதிகரிக்கப்பட்டது.


4. மேலும், இந்தியா 2030-ஆம் ஆண்டிற்குள் 500 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை அடையும் இலக்கை வைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் நடந்த 26வது காலநிலை மாநாட்டில் அறிவித்தார். மேலும், 2035-ஆம் ஆண்டுக்குள் 1 TW (500 GWஇல் இருந்து) மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடையவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைய அரசாங்கத்தின் முக்கிய திட்டங்கள்


இந்தியா தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை அடைவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதில் பங்களித்துள்ள சில முக்கிய திட்டங்கள் பின்வருமாறு:


பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மகாபியான் திட்டம் (Pradhan Mantri Kisan Urja Suraksha Evam Utthaan Mahabhiyan scheme (PM-KUSUM)): இந்தத் திட்டம் சிறிய சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், சூரிய மின்சக்தி பம்புகள் அமைப்பதை ஊக்குவிக்கிறது. மேலும், கிராமப்புறங்களில் ஏற்கனவே உள்ள மின்சார பம்புகளை சூரிய சக்தியில் இயங்கும் வகையில் மாற்றுகிறது.


பிரதான் மந்திரி சூர்யா கர்: முஃப்த் பிஜிலி யோஜனா (PM Surya Ghar: Muft Bijli Yojana): இது இந்திய குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசாங்கத் திட்டமாகும். பிப்ரவரி 15, 2024 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், மக்கள் தங்கள் வீட்டு கூரைகளில் சூரிய மின்கலங்களை (solar panels) வைப்பதற்கு தள்ளுபடி அளிக்கிறது. இது சூரிய மின்சக்தி பேனல்களின் விலையில் 40% வரை மானியம் செலுத்தும் மற்றும் இந்தத் திட்டம் இந்தியாவில் ஒரு கோடி வீடுகளுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை ஊக்குவிப்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும்.


கிரிட் இணைக்கப்பட்ட கூரை சூரிய சக்தி திட்டம் (பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா): இந்தத் திட்டத்தில், ஒரு கட்டிடத்திற்கு மின்சாரம் வழங்குவதற்காக ஒரு கட்டிடத்தின் கூரையில் சூரிய சக்தி பேனல்கள் வைக்கப்படுகின்றன. கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால், அதை மின்சார கட்டமைப்புக்கு அனுப்பலாம்.


பசுமை ஆற்றல் வழித்தடத் திட்டம் (Green Energy Corridor Scheme): புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து மின்சாரத்தை இந்தியாவின் முக்கிய மின்சார கட்டமைப்புடன் இணைப்பதற்கான பல திட்டங்களை இந்தத் திட்டம் உள்ளடக்கியது.


தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் (National Green Hydrogen Mission (NGHM)) : புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் (Ministry of New and Renewable Energy (MNRE)) 2030ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 5 மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திறனை அடையும் இலக்குடன் தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை செயல்படுத்தியது. இது நமது நாட்டில் சுமார் 125 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அதிகரிக்க உதவும்.


Original article:

Share: