சர்வதேச விண்வெளி நிலையத்தின் புகைப்படங்களை எடுக்கும் இந்திய செயற்கைக்கோள் ஏன் ஒரு தொழில்நுட்ப சாதனையாகக் கருதப்படுகிறது? -ரிது சர்மா

 விண்வெளியில் புகைப்படம் எடுப்பதில் சிரமங்கள் எழுகின்றன. இந்த சவால்களை சமாளிப்பது வலுவான தொழில்நுட்ப திறன்களைக் காட்டுகிறது. மேலும், இந்த திறன்களை கண்காணிப்பு மற்றும் பிற விண்வெளி பாதுகாப்பு பணிகளுக்கும் பயன்படுத்தலாம்.


இந்த மாத தொடக்கத்தில், அகமதாபாத்தை தளமாகக் கொண்ட விண்வெளி புதிய தொழில்துறை நிறுவனமான அஜிஸ்டா ஸ்பேஸ், அதன் செயற்கைக்கோள்-சுற்றுப்பாதையில், அஜிஸ்டா ஃபர்ஸ்ட் ரன்னர் (Azista First Runner (AFR), சர்வதேச விண்வெளி நிலையத்தின் (International Space Station (ISS)) உயர் தெளிவுத்திறன் படங்களை ஏறக்குறைய 300 கிமீ தூரத்தில் இருந்து படம்பிடித்தது.


இந்தியாவின் நவீன விண்வெளிப் பாதுகாப்பு - ஆப்டிகல் விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு (Space Situational Awareness (SSA)) முக்கியமான களத்தில் இந்தியாவின் நுழைவாக இந்த வளர்ச்சி அறிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பயன்பாடுகளுக்கு எலக்ட்ரோ-ஆப்டிகல் சேவைகளை வழங்கும் இந்தியாவில் தனியார் மூலம் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஆகும். இது ஜூன் 2023-ல் எலோன் மஸ்க்கின் SpaceX-க்குச் சொந்தமான 9 ராக்கெட்டில் ஏவப்பட்டது.


இந்தியாவின் பெரிய தொழில்நுட்ப திறன்களுக்கு AFR-ன் புகைப்படங்கள் ஏன் முக்கியம் என்பதை  இங்கே தெரிந்து கொள்ளலாம்.


சர்வதேச விண்வெளி நிலையத்தின் International Space Station (ISS)) படம்பிடித்தல்


விண்வெளியில் புகைப்படங்களை எடுப்பதில் வெளிப்படையான சிரமங்கள் எழுகின்றன. கடந்து செல்லும் பொருட்களின் அதிக வேகம், கேமராக்கள் பூமியிலிருந்து ஏவப்படுவதை உறுதி செய்தல், வெளிச்சத்தில் உள்ள வேறுபாடுகள் போன்ற  சிரமங்கள் எழுகின்றன.


நாடுகளுக்கு இடையே ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான தளமாக சர்வதேச விண்வெளி நிலையம் செயல்படுகிறது. இது பூமியை சராசரியாக 400 கிமீ உயரத்தில் சுற்றி வருகிறது மற்றும் வினாடிக்கு 7.6 கிமீ வேகத்தில் பயணிக்கிறது. அதே நேரத்தில் அஜிஸ்டா ஃபர்ஸ்ட் ரன்னர் (AFR) வினாடிக்கு 7 கிமீ வேகத்தில் வேறுபட்ட சுற்றுப்பாதையில் நகர்கிறது. தெளிவான மற்றும் பயன்படுத்தக்கூடிய படத்தைப் பெற, பொருளின் பாதையை சரியாகக் கணிப்பது, அதை துல்லியமாகக் கண்காணித்து சுட்டிக்காட்டுவது, சூரிய ஒளிக்கு ஏற்ப சரிசெய்வது, படத்தை நிலையாக வைத்திருப்பது மற்றும் படத்தைப் பிடித்த பிறகு மேம்பட்ட செயலாக்க முறைகளைப் பயன்படுத்துவது முக்கியம்.


அஜிஸ்டா ஃபர்ஸ்ட் ரன்னர் (AFR) 2.2 மீட்டர் தெளிவுத்திறனில் சர்வதேச விண்வெளி நிலையத்தை படம்பிடித்தது. மேலும், சுமைகள் இன்னும் சிறந்த படங்களை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அதன் பின்னால் உள்ள நிறுவனம் கூறுகிறது. Azista Space-ன் இயக்குனர் சுனில் இந்தூர்தி, இந்த செயல்விளக்கம் மூன்று முக்கிய SSA திறன்களைக் காட்டுகிறது என்று கூறினார்: அதன் படி, சுற்றுப்பாதையில் ஒரு பொருளைக் கண்டறிதல், அதன் இயக்கத்தைத் துல்லியமாகக் கண்காணித்தல் மற்றும் அதை பார்வைக்கு ஆய்வு செய்து அடையாளம் காண்பதன் மூலம் வகைப்படுத்தலாம். மூன்றாவது கூறு, குணாதிசயம், ஆப்டிகல் SSA ராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் பெறும்" என்று அவர் கூறினார்.


விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு தேவை


விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு (Space Situational Awareness (SSA)) என்பது பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள மற்றும் அதைச் சுற்றியுள்ள பொருட்களின் நடத்தை பற்றிய அறிவைக் குறிக்கிறது. இதில் செயலில் உள்ள செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளியில் உள்ள பொருட்கள் அடங்கும்.


நவீன விண்வெளி பாதுகாப்பு என்பது மோதல்களைத் தடுப்பது மட்டுமல்ல. இது விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வது பற்றியது. ஒரு செயற்கைக்கோள் நிலையானதா அல்லது சரிகிறதா? அது புதிய இணைப்புகளைப் பயன்படுத்தியுள்ளதா? அது எதிர்பாராத விதமாக பிரச்னை கூறியதாக உள்ளதா? அது அருகில் செயல்பாடுகளை நடத்துகிறதா? வடிவங்களை பகுப்பாய்வு செய்யவும், நோக்குநிலையைக் கண்டறியவும், சிக்கல்களைக் கண்டறியவும் ஆப்டிகல்  சுமைகள் உதவுகின்றன என்று இந்தூர்டி கூறினார். இது விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வை வெறும் கவனிப்பதிலிருந்து தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கு மாற்றுகிறது.


விண்வெளியை " போட்டியிடும் களம்" என்று அழைத்த இந்துர்டி, உள்நாட்டு ஆப்டிகல் விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு திறன் ராஜதந்திர சார்புநிலையைக் குறைத்து "இறையாண்மை சார்ந்த முடிவெடுப்பதை" அதிகரிக்கிறது என்று வாதிட்டார். ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்காவை அவர் சுட்டிக்காட்டினார். அவை டாக்கிங் விண்கலம் போன்ற சந்திப்பு மற்றும் அருகாமை செயல்பாடுகள் (Rendezvous and Proximity Operations (RPO)) திறன்களைக் காட்டியுள்ளன. இத்தகைய பணிகளில் நிபுணத்துவம் விண்வெளி சொத்துக்களைப் பாதுகாக்கவும் நிலைநிறுத்தவும் உதவுகிறது என்று இந்துர்டி கூறுகிறார். மேலும், இது "தொடர்ச்சியான கண்காணிப்பு, விரைவான ஒழுங்கின்மை கண்டறிதல் மற்றும் சுயாதீன சரிபார்ப்பு ஆகியவற்றைக் கோருகிறது. வெளிநாட்டு கண்காணிப்பு வலையமைப்புகளை மட்டும் நம்பி இருக்காது என்று  கூறுகிறார்.


விண்வெளி குப்பைகள் அல்லது செயற்கைக்கோள்களைக் கண்காணிப்பது போன்ற பூமி அல்லாத படத்தை எடுத்தல் (Non-Earth Imaging (NEI)) பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட அதிக திறன் கொண்ட-துல்லிய ஆப்டிகல் சுமைகளை - ஏவுகலங்கள் மூலம் விண்வெளிக்கு கொண்டு செல்லப்படும் கருவிகளைப் - பயன்படுத்தி விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு பணிகளுக்கு உதவ இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர அஜிஸ்டா திட்டமிட்டுள்ளது.


கூடுதலாக, இது பல பாதுகாப்பு, பொதுமக்கள் மற்றும் வணிக ரீதியான தாக்கங்களைக் கொண்டுள்ளது. "Starlink நிறுவனம் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமானது மற்றும் OneWeb  போன்ற மெகா-விண்மீன் கூட்டங்களால், மோதல் அபாயங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், சுற்றுப்பாதை நெரிசல் அதிகரித்து வருகிறது. காப்பீட்டு சந்தைகள் சிறந்த கண்காணிப்பைக் கோருகின்றன. ஆபரேட்டர்களுக்கு சரிபார்ப்பு சேவைகள் தேவைப்படுகின்றன. இங்கே, விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு திறன்கள் விண்வெளி போக்குவரத்து மேலாண்மை, மோதல் தவிர்ப்பு, குப்பைகள் கண்காணிப்பு, காப்பீட்டு ஆபத்து மாதிரி மற்றும் செயற்கைக்கோள் சுகாதார சரிபார்ப்பை ஆதரிக்கின்றன என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.


ISRO-SAC வழிகாட்டுதல்


கடந்த மாதம், அகமதாபாத் அருகே உள்ள சனந்தில் இந்தியாவின் முதல் தனியார் துறை எலக்ட்ரோ-ஆப்டிகல் சுமை தாங்கும் தொழிற்சாலைக்கு அசிஸ்டா ஸ்பேஸ் அடிக்கல் நாட்டியது. இந்த வசதியை அமைப்பதற்காக குஜராத் அரசாங்கத்துடன் ரூ.500 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் நிறுவனம் கையெழுத்திட்டது. அங்கு சுமைகள் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, ஒன்று சேர்க்கப்பட்டு, உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சோதிக்கப்படும்.


அஜிஸ்டாவின் நிர்வாக இயக்குநர் M. ஸ்ரீனிவாஸ் ரெட்டி கூறுகையில், சனந்த் வசதி உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆப்டிகல் பேலோடுகளை உருவாக்கும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் 30 உயர் தெளிவுத்திறன் கொண்ட இமேஜிங் பேலோடுகளை (imaging payloads) உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என்றும் கூறினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அதன் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் நிபுணர்கள் நிறுவனம் தொடக்கத்திலிருந்தே அதன் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவியதாகவும் அவர் கூறினார்.


2027-ஆம் ஆண்டுக்குள், ஒரு முழு நாட்டிற்கான படமாக்கலை ஒரே சுற்றுப்பாதையில் நடத்தக்கூடிய வகையில், அதன் திறன்களை மேம்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், ஆப்டிகல் சுமை 500 கிமீ அகலத்தைக் கொண்டிருக்கும்.


கடந்த ஏப்ரல் மாதம், உள்நாட்டு விண்வெளி தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்காக IN-SPACE, ISRO மற்றும் விண்வெளித் துறையுடன் இணைந்து செயல்பட குஜராத் அதன் விண்வெளி தொழில்நுட்பக் கொள்கை 2025-2030-ஐ அறிவித்தது.


குஜராத் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அர்ஜுன் மோத்வாடியா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், இந்தக் கொள்கை ரூ.5 கோடி வரையிலான செயற்கைக்கோள் ஏவுதலுக்கு 25% மானியம் வழங்குகிறது. மேலும், இந்திய காப்புரிமை தாக்கல்களுக்கு (ரூ. 50 லட்சம் வரை) 30% திருப்பிச் செலுத்தும் சலுகை வழங்கப்படலாம் என்று கூறினார்.


original article : Why is an Indian satellite capturing photos of the ISS being seen as a technical milestone? -Ritu Sharma

Share: