குறுஞ்செய்தி முதல் தரப்படுத்தப்பட்ட மின்னஞ்சல்கள் வரை, அரசாங்கத்தின் வரி 'கவன ஈர்ப்பு (nudge) ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. -சித்தார்த் உபாசனி, சுகல்ப் சர்மா

            எந்த வகையான "'கவன ஈர்ப்பு' (nudge), சிறப்பாகச் செயல்பட்டது என்பதைக் கண்டறிய வருமான வரித் துறை இப்போது தரவுகளை பகுப்பாய்வு செய்து வருகிறது. "பொதுவாக, மூன்று வகையான மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகிறது. சில மென்மையான, சில கடுமையான வார்த்தைகள் பயன்படுத்துகின்றன.


தங்கள் வருமான வரித் துறையின் 'கவன ஈர்ப்பு' (nudge) பிரச்சாரத்திற்கு, தங்கள் வருமான வரித் தகவல்களைத் திருத்துதல் அல்லது புதுப்பித்தல் மூலம் சிறப்பாக வரி இணக்கத்தை ஊக்குவிப்பதற்காக பதிலளித்த 1.11 கோடி மக்களில் சுமார் 60 சதவீதம் பேர் தாக்கல் செய்யாதவர்கள் ஆவர். இந்தப் பிரச்சாரம், இலக்கு வைக்கப்பட்ட மின்னஞ்சல்களை உள்ளடக்கிய இந்த முயற்சி பலனளித்ததற்கான தெளிவான தாக்கத்தை ஏற்படுத்தின.


எந்த வகையான 'கவன ஈர்ப்பு' (nudge) சிறப்பாகச் செயல்பட்டது என்பதைக் கண்டறிய வருமான வரித் துறை இப்போது தரவை பகுப்பாய்வு செய்து வருகிறது. "பொதுவாக, மூன்று வகையான மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகிறது. சில மென்மையான, சில கடுமையான வார்த்தைகள் பயன்படுத்துகின்றன. இந்த மின்னஞ்சல்கள் ஒவ்வொன்றும் உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய குழுவின் தரவை பகுப்பாய்வு செய்து வருகிறது. அவர்கள் வெவ்வேறு மொழியுடன் செய்திகளை ஒப்பிடுகிறார்கள். "எது சிறப்பாகச் செயல்பட்டது என்பதைக் கண்டறிய இந்தக் குழுவின் தரவை பகுப்பாய்வு செய்து வருகிறது," என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (Central Board of Direct Taxes (CBDT)) தலைவர் ரவி அகர்வால் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.


"பொதுவாக SMS மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்கிறோமா? அல்லது மின் சரிபார்ப்பு மூலமாகவோ தொடர்பு கொள்கிறோமா? அது மின்னஞ்சலாக இருந்தால், எந்த வகையான மின்னஞ்சலை அனுப்ப வேண்டும், மேலும் அது வரி செலுத்துவோரின் சுயவிவரத்தைப் பொறுத்தது," என்று அகர்வால் கூறினார்.


வரி செலுத்துவோரின் சுயவிவரம் கடந்தகால இணக்க முறைகள் மற்றும் பரிசீலனையில் உள்ள வரி பொறுப்பு போன்ற பல காரணிகளால் வடிவமைக்கப்படும். "இந்த செயல்முறை தொடர்ந்து நிகழும் செயல்முறை மற்றும் காலப்போக்கில் இது மேலும் சுத்திகரிக்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.


2024-ம் ஆண்டின் பிற்பகுதியில் முதன்முதலில் செயல்படுத்தப்பட்ட 'கவன ஈர்ப்பு' (nudge) வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவிப்பதற்காக தரவை ஊடுருவாமல் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. வரி இணக்கத்தை மேம்படுத்த தரவு பகுப்பாய்வு, நடத்தை நுண்ணறிவு மற்றும் மின்னணு செய்திகளைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சாரமாகும்.


வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வருமானத்தில் கவனம் செலுத்திய 2025-ம் ஆண்டின் பிற்பகுதியில் 'கவன ஈர்ப்பு-2.0' (nudge) உட்பட, இணக்கத்தை அதிகரிப்பதற்கான முந்தைய முயற்சிகளுக்கும், இடையிலான முக்கிய வேறுபாடு என்னவென்றால், அது இயற்கையில் தடுப்பு மற்றும் மீறல்கள் நடந்த பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டது அல்ல. பின்னர் நடைமுறை அமலாக்கத்திற்கு கோடிக்கணக்கான வரி வருமானங்களை ஆய்வு செய்ய வேண்டியிருக்கும். இது அரசாங்கத்திற்கு சாத்தியமற்ற பணியாகும்.


இதற்கான முடிவுகள் தெளிவாகத் தெரியும். அகர்வாலின் கூற்றுப்படி, வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வருமானத்திற்கான கவன ஈர்ப்பு-2.0 (nudge) பிரச்சாரம் கவனம் செலுத்தப்பட்டது. இது துறைக்கு கூடுதல் வருவாயாக சுமார் ₹640 கோடியை ஈட்டியது. தரவு பகுப்பாய்வு தவறான பணத்தைத் திரும்பப்பெறும் கோரிக்கைகள் மற்றும் நீக்கல் கோரிக்கைகளை அடையாளம் காண துறைக்கு உதவியது. இந்த வழக்குகள் அடையாளம் காணப்பட்டவுடன், கவன ஈர்ப்பு-1.0 (nudge) மற்றும் 2.0 திருத்தப்பட்ட வருமான வரிகளில் சுமார் ரூ.1,750 கோடி பணத்தைத் திரும்பப்பெறும் கோரிக்கைகளைக் குறைக்க வழிவகுத்தது.


“ஒட்டுமொத்தமாக, இரண்டு வருட காலப்பகுதியில் சுமார் ரூ.8,800 கோடி கூடுதல் வரி வசூலிக்கப்பட்டது. மேலும், 1.11 கோடி புதுப்பிக்கப்பட்ட மற்றும் திருத்தப்பட்ட வருமான வரிகள் தாக்கல் செய்யப்பட்டன,” என்று அகர்வால் கூறினார்.


எனவே, யார் “நிராகரிக்கப்பட வேண்டும்” என்பதை வருமான வரித் துறை எவ்வாறு தீர்மானிக்கிறது? பொதுவாக, அனைத்து வரி செலுத்துவோரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். மார்ச் 2025-ல் முடிவடைந்த நிதியாண்டில், சுமார் 12 கோடி பேர் வரி செலுத்தினர். ஆனால், ஒன்பது கோடி வருமான வரிகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டன.


தாக்கல் செய்யாத மூன்று கோடி நபர்களையும் பின்தொடர்வதற்குப் பதிலாக, இந்தத் துறை ஒரு புதியளவில் கவனம் செலுத்தும் அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தது. இதில் தாக்கல் செய்யாதவர்களில் சிலர் மட்டும் மிகக் குறைந்த அளவு வரியை மட்டுமே செலுத்தியிருக்கலாம். எனவே, 'A' பிரிவில் வரி செலுத்துவோரை அடையாளம் காண்பதற்கு துறைரீதியில் தரவுகளை பகுப்பாய்வு செய்ததாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வரி செலுத்துவோர் குறைந்தபட்ச வரம்பான ₹12 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ஆவர். பின்னர் அவர்கள் மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்தி மூலம் பொருத்தமான முறையில் பணம் செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


வருமான வரித்துறையிலிருந்து நேரடியாக எந்தத் தகவல்தொடர்பும் பெறாதவர்கள் கூட, 'கவன ஈர்ப்பு' (nudge) பிரச்சாரம் குறித்த ஊடக அறிக்கைகளைப் பார்த்த பிறகு தங்கள் வருமான வரித் தகவல்களைத் திருத்திக் கொண்டுள்ளனர்.


இத்தகைய பிரச்சாரங்கள் மற்ற நாடுகளிலும் பொதுவானவை. 2012-ல் இங்கிலாந்தில் தொடங்கி, பிரிட்டிஷ் அரசாங்கம் எளிமையான மாற்றங்களுடன் நினைவூட்டல் கடிதங்களை அனுப்பியது. "இங்கிலாந்தில் பத்து பேரில் ஒன்பது பேர் தங்கள் வரிகளை சரியான நேரத்தில் செலுத்துகிறார்கள். ஆனால், நீங்கள் தற்போது எங்களுக்கு இன்னும் பணம் செலுத்தாத மிகச் சிறிய சிறுபான்மையினரில் இருக்கிறீர்கள்" என்று கூறப்பட்டது.


"இந்த மாற்றங்கள் மிகவும் வெற்றிகரமாக இருந்தன என்றும், இவை கிட்டத்தட்ட 120,000 வரி செலுத்துவோரின் மாதிரியில் 4.9 மில்லியன் பவுண்டுகள் (சுமார் $6.5 மில்லியன்) பணம் செலுத்த வழிவகுத்தது. இந்த தலையீடு இல்லாமல் இந்தத் தொகை வசூலிக்கப்பட்டிருக்காது" என்று உலக வங்கி 2018-ல் குறிப்பிட்டது.


பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான ரிச்சர்ட் தாலர் மற்றும் ஹார்வர்ட் சட்டப் பள்ளியின் பேராசிரியர் காஸ் சன்ஸ்டீன் ஆகியோரால் 2008-ம் ஆண்டு வெளியிடப்பட்ட கவன ஈர்ப்பு (nudge) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசாங்கங்கள் சிறந்த தேர்வுகள் மேற்கொள்ளப்படும் சூழலில் சிறிய மற்றும் நுட்பமான மாற்றங்களைச் செய்வதன் மூலம் மக்களை சிறந்த முடிவுகளை எடுக்க மக்களை ஊக்குவிக்க முடியும் என்று இந்தக் கருத்து கூறுகிறது.


இந்தியாவில், இதற்கிடையில், வரி விதிப்புகள் தொடரும்.


அகர்வாலின் கூற்றுப்படி, கவன ஈர்ப்பு (nudge) இப்போது சாக்ஷம் கவன ஈர்ப்பு-ஆக (SAKSHAM NUDGE) மாறிவிட்டது. S என்பது சங்கலன் (தரவுகளின் தொகுப்பு), A என்பது அனுசந்தன் (ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு), K என்பது கிரியன்வியன் (யாரைத் தூண்டுவது என்பதை அடையாளம் காணுதல்), S என்பது சம்பார்க் (விழிப்புணர்வை உருவாக்க மற்றும் நடத்தையை வழிநடத்த தொடர்பு கொள்ளுதல்), H என்பது ஹஸ்தக் (கைப்பிடித்தல் மற்றும் எளிதாக்குதல், FAQகள் மூலம்), A என்பது அதிகாரம் (நம்பிக்கையை வளர்ப்பதற்காக வருமானங்களைத் திருத்த அனுமதித்தல்) மற்றும் M என்பது முல்யங்கன் (மதிப்பீடு) ஆகியவற்றைக் குறிக்கிறது.


இது, "காலப்போக்கில் மேலும் வலுவடையும் ஒரு அறிவியல் செயல்முறை" என்று அகர்வால் கூறினார்.


மத்திய நேரடி வரிகள் வாரியத் (CBDT) தலைவரின் கூற்றுப்படி, வரி இணக்கம் ஒரு "கூட்டுறவு, விரோதமற்ற செயல்முறை" (collaborative, non-adversarial process) ஆக இருக்க வேண்டும், அங்கு வரி செலுத்துவோர் தாங்களாகவே இணங்குவார்கள் என்பது அடிப்படைக் கருத்தாக இருக்க வேண்டும்.


"வருமான வரித்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது. மேலும், வரி செலுத்துவோர் பின்னர் அந்த வருமானத்தைக் காட்டும் வருமான அறிக்கைகளை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலர் ஏற்கனவே இதைச் செய்து வருகின்றனர். இந்த கவன ஈர்ப்பு (nudge) பிரச்சாரத்திற்கு 1.11 கோடி மக்கள் பதிலளித்தனர் என்பது அதைப் பிரதிபலிக்கிறது. தொடர்ந்து, வரி செலுத்துவோருக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், ஏன் பலமுறை தொடர்ந்து செய்ய வேண்டும் அல்லது தொடர்பு கொள்ள வேண்டும்? முதலில், வரி செலுத்துவோர் சரியான வருமானம் தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பொருந்தாத சந்தர்ப்பங்களில், நீங்கள் தரவு பகுப்பாய்வுகளை மேம்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.


Original article : From SMS to graded e-mails, Govt’s tax ‘nudge’ makes a mark. -Siddharth Upasani, Sukalp Sharma

Share: