வழக்கமான வாக்குப்பதிவு செயல்முறை தடைபட்டால் தேர்தல் ஆணையம் என்ன செய்யும் ? -ரவி மிட்டல்

 இடையூறுகள் ஏற்பட்டாலும் கூட, ஒவ்வொரு வாக்குகளும் எண்ணப்படுவதையும், மக்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதையும் தேர்தல் கட்டமைப்பு உறுதி செய்கிறது. 


மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளிலும், அருணாச்சல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி செல்லாது என்று அறிவித்தது. ஏப்ரல் 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மறுவாக்குப்பதிவு நடந்தது. 


மத்தியப் பிரதேசத்தின் பேதுல் மக்களவைத் தொகுதியில், ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரு வேட்பாளர் இறந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற இருந்த வாக்குப்பதிவு தற்போது மே 7-ம் தேதி நடைபெறுகிறது.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (electronic voting machine (EVM)) சேதம், வாக்குச்சாவடி கைப்பற்றல், இயற்கை பேரழிவுகள் அல்லது வேட்பாளர் இறப்புகள் போன்ற இடையூறுகளை இந்தியாவின் தேர்தல் சட்டங்கள் கையாளுகின்றன. மறுவாக்குப்பதிவு, ஒத்திவைப்பு மற்றும் செல்லுபடியற்ற தேர்தல்கள் ஆகியவை நியாயமான, வெளிப்படையான மற்றும் தடையற்ற ஜனநாயக செயல்முறையை உறுதி செய்கின்றன.


இடையூறுகள் ஏற்படும் போது சூழ்நிலைகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் விருப்பங்களின் தீர்வறிக்கை இங்கே வழங்கப்படுகிறது. வேண்டுமென்றே அழித்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பறித்தல் போன்ற வாக்களிக்கும் செயல்முறையில் ஏதேனும் தவறு நடந்தால் என்ன நடக்கும் என்பது பற்றி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்  (representation of peoples act (RPA)) பிரிவு 58 கூறுகிறது: 


1. யாராவது சட்டவிரோதமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் சென்றாலோ, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சேதமடைந்தாலோ அல்லது வாக்குப்பதிவின் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டாலோ, தேர்தல் ஆணையம் அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவை ரத்து செய்யலாம்.

2. தேர்தல் அதிகாரி என்ன நடந்தது என்பதை தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் கூறுவர். பின்னர் தேர்தல் ஆணையம் புதிய தேர்தல் நடத்த வேண்டுமா என்பதை முடிவு செய்து அதற்கான தேதியை அறிவிக்கும். 

3. வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் எழுத்துப்பூர்வ அறிவிப்புகளைப் பெறுகிறார்கள். மேலும், புதிய வாக்கெடுப்பு பற்றிய பொது அறிவிப்புகள் உள்ளன.

4. வாக்களிக்கக்கூடிய ஒவ்வொருவரும் புதிய வாக்கெடுப்பில் வாக்களிக்க வேண்டும்.

5. புதிய வாக்கெடுப்பின் போது, வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்ததைக் காட்ட தங்கள் நடுவிரல்களில் மை பூசப்படுகிறார்கள்.


சாவடி கைப்பற்றல் (Booth capturing)


மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 135A (Section135A) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி சாவடி-கைப்பற்றுதல், பல செயல்களை உள்ளடக்கியது:


1. வாக்குச் சாவடியைக் கைப்பற்றுவதால் தேர்தல் நடைமுறைகள் பாதிக்கப்படுகின்றன.

2. ஒரு வாக்குச் சாவடியின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டு ஆதரவாளர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதித்தல்.

3. வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு வருவதைத் தடுக்குமாறு மிரட்டுதல் அல்லது அச்சுறுத்துதல்.

4. வாக்கு எண்ணும் இடத்தை கைப்பற்றுவதால் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்படும்.

5. மேற்கண்ட நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகளின் ஈடுபாடு.


பூத் கைப்பற்றுவது சட்டப்படி தண்டனைக்குரியது:

- சாதாரண மக்களுக்கு ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

- அரசு ஊழியர்களுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.


பிரிவு 58A இன் கீழ் ('வாக்குச் சாவடியைக் கைப்பற்றுவதைக் காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைத்தல் அல்லது தேர்தலை ரத்து செய்தல்'), ஒரு வாக்குச் சாவடியில் வாக்குச்சாவடி கைப்பற்றல் நடந்தால்:


- தலைமை தாங்கும் அதிகாரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகை மூடி, தேர்தல் நடத்தை விதிகள், 1961 (Conduct of Election Rules, 1961)இன் விதி 49X இன் கீழ் வாக்குச்சீட்டு அலகுகளை கட்டுப்பாட்டு அலகிலிருந்து பிரிக்க வேண்டும்.  


பின்னர் அவர் தேர்தல் அதிகாரி தகவல் தெரிவிக்கிறார். அவர் முழு உண்மைகளையும் தேர்தல் ஆணையத்திற்கு விரைவான தகவல் தொடர்பு மூலம் தெரிவிக்கிறார். தேர்தல் ஆணையம், உண்மைகளின் அடிப்படையில்,


வாக்களிக்கும் போது ஏதேனும் தவறு நடந்தால்:


1. ஒரு வாக்குச் சாவடியில் உள்ள தலைமை தாங்கும் அலுவலர் பின்வரும் சந்தர்ப்பங்களில் வாக்களிப்பை நிறுத்தி புதிய வாக்கெடுப்பை திட்டமிடலாம்:

- வெள்ளம் அல்லது பெரிய புயல் போன்ற இயற்கை பேரழிவு உள்ளது.

    - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அல்லது வாக்காளர் பட்டியல்கள் போன்ற முக்கியமான வாக்குப்பதிவு பொருட்கள் தொலைந்துவிட்டன, சேதமடைந்தன அல்லது பெறப்படவில்லை.

   - வாக்குப்பதிவைத் தடுக்கும் கலவரம் அல்லது வன்முறை உள்ளது.

 - பிரச்சினைகள் அல்லது தடைகள் காரணமாக வாக்களிக்கும் குழு நிலையத்தை அடைய முடியாது.

    - மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பிரச்சினைகள் அல்லது பிற காரணங்களால் வாக்குப்பதிவு இரண்டு மணி நேரத்திற்குள் தொடங்காது.


2. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கும். இதுகுறித்து தேர்வர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதுவரை வாக்களிக்காதவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.



வேட்பாளர் மரணம்


1996 இல் மாற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (representation of peoples act (RPA)) பிரிவு 52 இன் படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் இறந்தால் மட்டுமே தேர்தல் நிறுத்தப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தால் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தேர்தல் சின்னங்கள் உத்தரவின் கீழ் ஒரு சின்னம் வழங்கப்பட்ட ஒரு தேசியக் கட்சி அல்லது மாநிலக் கட்சி ஆகும்.


வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளன்று காலை 11.00 மணிக்குப் பிறகு வாக்குப்பதிவு தொடங்கும் வரை செல்லுபடியாகும் வேட்புமனுவுடன் வேட்பாளர் இறந்தால் இந்த விதி பொருந்தும். தேர்தல்  நடத்தும்  அதிகாரி தேர்தல் ஆணையத்திடம் கூறி தேர்தலை வேறு தேதிக்கு ஒத்திவைக்கிறார்.


பின்னர், ஏழு நாட்களுக்குள் வேறு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்குமாறு தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளைக் கேட்கிறது. வாக்குப்பதிவு நிறுத்தப்படுவதற்கு முன்பே வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருந்தால், புதிய வேட்பாளரின் பெயருடன் புதிய பட்டியல் தயாரிக்கப்படும். 


பெதுல் (Betul) தொகுதியில், வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளுக்கு ஒரு நாள் கழித்து வேட்பாளர் இறந்துவிட்டதால், தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆனால் மொராதாபாத் (Moradabad) மக்களவை தொகுதியில் வேட்பாளர் ஓட்டு போட்டு உயிரிழந்தார். வாக்கு எண்ணிக்கை முடிந்து அவர் வெற்றி பெற்றால், இடைத்தேர்தல் நடத்தப்படும்.  


கட்டுரையாளர் சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்ட ஆட்சியர்.




Original article:

Share:

காட்டுத் தீ எவ்வாறு ஏற்படுகிறது மற்றும் இந்தியாவில் அவை ஏன் அடிக்கடி நிகழ்கின்றன?

 இந்தியாவில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக காட்டுத் தீ நிகழ்வுகள் பதிவாகியுள்ளன, ஏனெனில் குளிர்காலம் முடிந்து நடப்பு கோடை காலத்திற்குப் பிறகு உலர் தாவரங்கள் அதிகமாக இருப்பதால் காட்டுத்தீ ஏற்படுகிறது.    


உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தீ விபத்தின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இந்திய விமானப்படை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது.


நைனிடால், ஹல்த்வானி மற்றும் ராம்நகர் வனப் பிரிவுகள் தீயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வன அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். சில பகுதிகளில், தீயை அணைக்க பாம்பி வாளி பயன்படுத்தப்பட்டது, அவற்றின் மீது நிறைய தண்ணீரை விரைவாக ஊற்றுகிறது.


இந்த தீ விபத்துகளுக்கான குறிப்பிட்ட காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பொதுவாக காட்டுத் தீ ஏற்படுவதற்கான சாத்தியமான காரணங்கள் மற்றும் அவை எவ்வளவு அடிக்கடி மற்றும் எவ்வளவு கடுமையானவை என்பதைப் பாதிக்கும் விஷயங்களை நினைவில் கொள்வோம்.


இந்தியாவில் காட்டுத்தீ ஏன் அடிக்கடி ஏற்படுகிறது?


இந்தியாவில் காட்டுத்தீ ஏற்படும் காலம் நவம்பர் முதல் ஜூன் மாதம் வரையாகும். வெப்பநிலை, மழை, தாவரங்கள் மற்றும் ஈரப்பதம் போன்ற விஷயங்கள் காட்டுத் தீ அடிக்கடி ஏற்பட காரணமாகிறது. 


எரிபொருள், காற்று மற்றும் வெப்பம் ஆகிய மூன்று விஷயங்கள் காட்டுத்தீ பரவுவதற்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். காய்ந்த இலைகள் நெருப்புக்கு எரிபொருளாகும். இதனால் தான் இந்தியாவின் 36% காடுகள் அடிக்கடி தீப்பிடிக்கின்றன என்று இந்திய வன கணக்கெடுப்பு (FSI) கூறுகிறது.


மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக தீ விபத்துகள் ஏற்படுகின்றன, ஏனெனில் குளிர்காலத்திற்குப் பிறகு நிறைய உலர்ந்த தாவர கழிவுகள் உள்ளன, அது காட்டுத் தீ ஏற்பட காரனமாக உள்ளது. 


இந்திய வன ஆய்வு அறிக்கை 2019 "வறண்ட காடுகள் போன்ற சில வகையான காடுகளில் பெரிய தீ விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன. ஆனால் நிறைய பசுமையான மரங்கள் உள்ள காடுகளில் தீ ஏற்படும் வாய்ப்பு குறைவு. இந்தியாவின் சுமார் 4% காடுகள் காட்டுத் தீ விபத்து ஏற்படும் அபாயத்தில் உள்ளன, மேலும் 6% தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.


இந்திய வன ஆய்வு  2021 ஆம் ஆண்டின் தரவைப் பார்க்கும் போது, வடகிழக்கு மாநிலங்களில் அதிக காட்டுத் தீ ஏற்படுவதற்க்கான வாய்ப்பு உள்ளது. மேற்கு மகாராஷ்டிரா, தெற்கு சத்தீஸ்கர், மத்திய ஒடிசா மற்றும் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளிலும் நிறைய காட்டுத் தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.


காட்டுத்தீக்கு பின்னால் உள்ள சில காரணங்கள் என்ன?


பெரும்பாலான தீ விபத்துகள் மனிதர்களால் ஏற்படுவதாக கருதப்படுகிறது. இதற்குக் காரணம் விவசாயம் மற்றும் நிலப் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கட்டுப்படுத்தப்படாததுதான்.


உத்தரகண்ட் மாநிலத்தில் காட்டுத் தீ ஏற்படுவதற்கு நான்கு முக்கிய காரணங்களை வனத்துறை கண்டறிந்துள்ளது. இவை உள்ளூர் மக்களின் கவனக்குறைவு, விவசாய நடவடிக்கைகள் மற்றும் இயற்கை காரணங்களால் ஏற்படுதல், மற்றும் வேண்டுமென்றே தீ வைத்தல் ஆகியவற்றினால் நடைபெற்றிருக்கலாம். உயர்தர புல்லின் வளர்ச்சியை ஊக்குவிக்க உள்ளூர்வாசிகள் காடுகளில் தீ வைப்பதாக அரசாங்க அறிக்கை விளக்குகிறது. சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதற்கும், வேட்டையாடுவதற்கும் அவர்கள் இதை செய்கிறார்கள்.


அறிக்கையின்படி, காய்ந்த இலைகள் மீது மின்சார கம்பிகள் உராய்வதாலும், மின்னல் தோன்றுவதாலும் காட்டுத் தீ ஏற்படுகிறது 


காட்டிற்கு தீ வைப்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். வன அதிகாரி ஒருவர் கூறுகையில், காட்டுத்தீ பற்றி பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுபோன்ற பெரும்பாலான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை.


காட்டுத்தீ எவ்வாறு தடுக்கப்படுகிறது மற்றும் அணைக்கப்படுகிறது?


சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC)) காட்டுத் தீயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் பல வழிமுறைகளை பரிந்துரைக்கிறது. முன்கூட்டியே கண்டறிவதற்காக கண்காணிப்பு கோபுரங்களை உருவாக்குதல், தீயணைப்பு கண்காணிப்பாளர்களை நியமித்தல், உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்துதல் மற்றும் தீ கோடுகளை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவை இதில் அடங்கும்.


தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (National Disaster Management Authority (NDMA)) இணையதளம் இரண்டு வகையான தீ கோடுகளை விவரிக்கிறது: கச்சா (Kachha) அல்லது மூடப்பட்ட தீ கோடுகள் மற்றும் பக்கா (Pucca) அல்லது திறந்த நெருப்பு கோடுகள். கச்சா நெருப்பு கோடுகள் மரங்களை வைத்திருக்கும் போது அடிமரங்கள் மற்றும் புதர்களை அகற்றுவதை உள்ளடக்கியது. இது எரியக்கூடிய பொருட்களின் அளவைக் குறைக்கிறது.


காடுகளின் வெவ்வேறு பகுதிகளை பிரிக்கும் சுத்தமான பகுதிகள் பக்கா தீ கோடுகள். இவை தீ பரவுவதைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. 


செயற்கைக் கோளின் அடிப்படையிலான ரிமோட் சென்சிங் தொழில்நுட்பம் மற்றும் புவியியல் தகவல் முறைமை  கருவிகள் (Geographic information system (GIS)) தீயை தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் பயனுள்ளதாக இருப்பதாக இந்திய வன ஆய்வு  நிறுவனம் (Forest Survey of India (FSI)) கூறுகிறது. தீ விபத்து ஏற்படும் பகுதிகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்குவதற்க்கும், நிகழ்நேரத்தில் தீயைக் கண்காணிப்பதற்க்கும், எரிந்த பகுதிகளின் அளவை மதிப்பிடுவதற்க்கும் அவை பெரிதும் உதவுகின்றன.




Original article:

Share:

தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளில் சிர்திருத்தம் தேவை மற்றும் மற்றும் இந்தியாவிற்கு முன்மாதிரியான தலைமைத்துவம் தேவை -அசோக் லவாசா, முன்னாள் தேர்தல் ஆணையர்

 தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தற்போதைய சட்டத்தில் தெளிவு இல்லை. இது அதன் தடுப்பு விளைவை (deterrent effect) பலவீனப்படுத்துகிறது.


"தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படும் பொதுவான நடைமுறைகள் திருப்திகரமாக இல்லை. தேர்தல்கள் ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கம். அவற்றை நம்மால் அகற்ற முடியாது. இருப்பினும், தேர்தல்கள் பெரும்பாலும் மக்களின் மோசமான நிலையை வெளிப்படுத்துகின்றன. சிறந்த நபர் எப்போதும் வெற்றி பெறுவதில்லை என்பது தெளிவாகிறது. உணர்திறன் உள்ளவர்கள் மற்றும் ஆக்கிரமிப்பு தந்திரங்களைப் பயன்படுத்த விரும்பாதவர்கள் பெரும்பாலும் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கிறார்கள். ஜனநாயகத்தில் கடுமையாகவும், வெளிப்படையாகவும், தார்மீக ரீதியில் அனுசரித்துச் செல்லக்கூடியவர்களும் மட்டுமே பங்கேற்க முடியும் என்று அர்த்தமா?”  இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாதிரி நடத்தை விதிகள் (Model Code of Conduct (MCC)) ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, தனது "தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா" (The Discovery of India) என்ற புத்தகத்தில் மேற்கண்டவாறு எழுதினார்.


மாதிரி நடத்தை விதிகள் ((Model Code of Conduct (MCC))) என்பது காலப்போக்கில் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு ஒப்பந்தமாகும். தேர்தல்கள் அறிவிக்கப்படும்போது, ​​அது அரசியல் கட்சிகள், தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு சவால் விடுகிறது. ஊடகங்கள் உன்னிப்பாக இவற்றை கவனிக்கின்றன, நீதித்துறை அதை கவனமாக கண்காணிக்கிறது.  


மாதிரி நடத்தை விதிகள் எவ்வாறு உருவானது ?

1960 ஆம் ஆண்டில், அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் கே.வி.கே.சுந்தரம் தலைமையில் கேரளாவில் தேர்தலுக்கான அடிப்படை விதிகளுடன் தேர்தல் நடத்தை விதிகள் தொடங்கப்பட்டன. தேர்தல் நிகழ்வுகளின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், சுவரொட்டிகள் மற்றும் உரைகளில் என்ன சொல்ல வேண்டும் போன்ற விஷயங்களை அது உள்ளடக்கியிருந்தது. 


1968 ஆம் ஆண்டில், தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.பி.சென் வர்மாவின் (S P Sen Verma) கீழ், தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுடன் பேசி நியாயமான தேர்தலுக்கான சில அடிப்படை விதிகளை அனைவரும் பின்பற்றுவதை உறுதி செய்தது. பின்னர், 1979 இல், எஸ்.எல்.ஷக்தார் (S L Shakhdar) பொறுப்பில் இருந்தபோது, ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்கு முன்பும் தேர்தல் ஆணையம் நெறிமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக்கியது. அவர்கள் அரசியல் கட்சிகளுடன் இணைந்து அதைப் பலப்படுத்தினர். ஆளும் கட்சியின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் ஒரு பகுதியையும் சேர்த்தனர். இதனால் ஆளும்கட்சியின் அரசாங்க தலையீடும் தவிர்க்கப்பட்டது.


1991 ஆம் ஆண்டில், தேர்தல் நடத்தை விதிகள் புதுப்பிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது. முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியான திரு டி.என்.சேஷன்   இதை சிறப்பாகச் செயல்படுத்துவதை உறுதி செய்தார்.


மாதிரி தேர்தல் நடத்தை விதிகளுக்கு ஏன் அதிக அதிகாரம் தேவை ?


நாட்டின் அரசியல் நிலைமை சமீபத்தில் மிகவும் தீவிரமாகிவிட்டது. தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் சிறப்பாக செயல்படுவதைக் கடினமாக்குகின்றன. மக்கள் விதிகளை மீறும் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறது. அரசியல் தலைவர்கள் தங்கள் அதிகாரம், செல்வாக்கு மற்றும் இராஜதந்திரம் மூலம் விதிகளில் உள்ள குறைபாடுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். உடல் வலிமையை விட பணம் இப்போது முக்கியமானது. மேலும், தொழில்நுட்பம் அவர்களின் செயல்களை மறைக்க உதவுகிறது. மாதிரி தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றுவதை விட அவற்றைத் தவிர்ப்பது மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதப்படுகிறது. 


தேர்தல் ஆணையம் அதைக் கண்டிப்பாகவும் சமமாகவும் அமல்படுத்துவதால் மாதிரி தேர்தல் நடத்தை விதிகள் வலுவாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும். ஆனால் அனைவருக்கும் சமமாக பொருந்தக்கூடிய மிகவும் நேர்மையான விதிகளைக் கொண்டிருக்க இவற்றின் சட்டங்களை மாற்ற வேண்டும்.


இப்போது ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால், யாராவது விதிகளை மீறினால் என்ன நடக்கும் என்பதை மாதிரி தேர்தல் நடத்தை விதிகள் தெளிவாகக் கூறவில்லை. எனவே, அது விதிகளை மீறுபவற்களை திறம்பட தண்டிக்காது. குறிப்பாக வெறுக்கத்தக்க பேச்சை பரப்புதல், வாக்குகளுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்குதல், எதிகட்சியினருக்கு  எதிராக மரியாதையற்ற பிரச்சாரங்களை பயன்படுத்துதல் அல்லது அரசியல் ஆதாயத்திற்காக இராணுவத்தைப் பயன்படுத்துதல் போன்ற கடுமையான மீறல்களுக்கு தெளிவான மற்றும் நியாயமான தண்டனைகள் தேவை.


விதிகளை மீறினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும், அது தரப்படுத்தப்பட்டு பகிரங்கமாக அறிவிக்கப்பட வேண்டும். உதாரணமாக, முதல் மீறல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிரச்சாரத்தை தடை செய்யக்கூடும். இரண்டாவது மீறல் நீண்ட தடைக்கு வழிவகுக்கும். மூன்றாவது மீறல், மாதிரி நடத்தை விதிகளின்  காலத்திற்கு வேட்பாளர் அல்லது அரசியல் அதிகாரியை தகுதி நீக்கம் செய்யலாம். அத்தகைய தடை அனைத்து ஊடகங்களிலும் பொது வெளி தொடர்புகளை முற்றிலும் தடை செய்யும். மேலும், விதிகளை மீண்டும் மீண்டும் மீறுபவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு எதிர்கால தேர்தல்களில் நட்சத்திர பிரச்சாரகர்களாக வகைப்படுத்த அனுமதிக்க தடைசெய்ய வேண்டும்.


கட்சித் தலைவர்கள் மற்றும் விதிமீறல்கள்


தனிநபர்களின் விதிமீறல்களுக்காக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது விகாரமான பொறுப்பு என்ற கருத்தை அறிமுகப்படுத்துகிறது. அங்கு கட்சிகளே தங்கள் உறுப்பினர்களின் செயல்களுக்கு பொறுப்பாகும். கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் கட்சிகளுக்கு அபராதம் விதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். இது தேர்தல் சின்னங்கள் உத்தரவின் கீழ் அபராதம் அல்லது பிற நடவடிக்கைகளை உள்ளடக்கியது.


நம்பகத்தன்மையை ஏற்படுத்த விதிமீறல் நடந்த 72 மணி நேரத்திற்குள் தண்டனை மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொது நம்பிக்கையை அழிக்கும் தாமதங்களைத் தடுக்க ஒரு தெளிவான நடைமுறை நிறுவப்பட வேண்டும்.


புகாரளிக்கப்பட்ட அனைத்து மீறல்களின் பட்டியல் தொகுக்கப்பட வேண்டும். இந்த வழக்குகளின் நிலை, தீர்க்கப்பட்டதா அல்லது நிலுவையில் இருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இந்த தகவலுக்காக ஒரு பொது தரவுத்தளத்தை உருவாக்க வேண்டும்.


மாதிரி நடத்தை விதிகளின் மீறல்கள் பல்வேறு சட்டங்களின் கீழ் குறிப்பிட்ட சட்டங்களுடன் இணைக்கப்பட்டால், சட்ட அமலாக்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட அமலாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மற்றும் இந்திய தேர்தல் ஆனையம் புகாரைப் பெற்று நடவடிக்கை எடுத்தால், சட்ட அமலாக்கத்தின் சட்ட நடவடிக்கை தானாகவே பின்பற்றப்படும். தேர்தல் ஆணையத்தின் குறிப்பிட்ட அறிவுறுத்தல்கள் இல்லாமல் கூட இது நடக்க வேண்டும்.


சிறந்த அரசியல்வாதிகள், நடுநிலையான தேர்தல் ஆணையம்  

இந்த நடவடிக்கைகளை மீறுபவர்களைத் தடுக்குமா மற்றும் அரசியல் கட்சிகளிடையே சுய கட்டுப்பாட்டை ஊக்குவிக்குமா என்பது அரசியல் தலைவர்களின் தன்மையைப் பொறுத்தது. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் நிச்சயமாக முடிவெடுப்பதில் நடுவரின் விருப்பத்தைக் குறைக்கும். இந்தக் குறைப்பு, சார்பு அல்லது பாகுபாடு குற்றச்சாட்டுகளில் இருந்து அவரைப் பாதுகாக்கும். தேர்தல் ஆணையம் அத்துமீறல் வழக்குகளை சரியான நேரத்தில் மற்றும் நம்பகமான முறையில் கையாளவும் உறுதியளிக்கும். இந்த அர்ப்பணிப்பு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான அதன் திறனில் பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கக்கூடும்.  

ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, பொது நம்பிக்கையை உண்மையிலேயே ஊக்குவிப்பது ஒரு முன்மாதிரியான தலைமைத்துவம், நடத்தை விதிகள் மட்டுமல்ல. டெமோஸ்தீனஸ் கூறியது போல், "உங்கள் நடத்தை அற்பமாகவும் இருந்தால், நீங்கள் பெருமை மற்றும் துணிச்சலான மனதைக் கொண்டிருக்க முடியாது; ஒரு மனிதனின் செயல்கள் எதுவாக இருந்தாலும், அது அவருடைய நலனுக்காக இருக்க வேண்டும்."


கட்டுரையாளர் முன்னாள் தேர்தல் ஆணையர்.




Origin article:

Share:

இந்தியாவில் மனித உரிமைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் சர்வதேச மனித உரிமைக் குழு -சுஹாசினி ஹைதர், இஷிதா மிஸ்ரா

 2023 இல், தேசிய மனித உரிமை நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணி (Global Alliance of National Human Rights Institutions (GANHRI)) இந்தியாவை பற்றி  மதிப்பீடு செய்வதை ஒத்திவைத்தது. ஏனெனில், அவர்கள் அதன் செயல்முறைகளை கேள்விக்குள்ளாக்கினர். இந்தியாவில் பன்மைத்துவம் இல்லை என்றும், மனித உரிமைகள் ஆணையம் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களை நியமிக்கிறது என்றும் விமர்சிக்கப்படுகின்றனர். 


ஜெனிவாவில் நடைபெறும் கூட்டத்தில் அரசின் மனித உரிமைப் பணிகளுக்கு ஆதரவளிக்க NHRC தயாராகி வருகிறது. இந்த வாரம், இந்தியாவின் மனித உரிமைகள் அமைப்பு அதன் "A அந்தஸ்தை" வைத்திருக்குமா என்பதை அவர்கள் கண்டுபிடிப்பார்கள். 2023 ஆம் ஆண்டில், NHRC எவ்வாறு அமைக்கப்பட்டது. உரிமை விசாரணைகளில் காவல்துறை ஈடுபாடு மற்றும் அதிக பாலினம் மற்றும் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தின் தேவை பற்றிய கவலைகள் அவர்களின் மதிப்பீடுகளை இடை நிறுத்தியது. A அல்லது B மதிப்பீட்டின் முடிவு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (United Nations General Assembly (UNGA)) மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் சில UNGA குழுக்களில் அவர்களின் வாக்களிக்கும் சக்தியை பாதிக்கும்.


தேசிய மனித உரிமை நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணி (Global Alliance of National Human Rights Institutions (GANHRI)) அங்கீகாரத்திற்கான துணைக் குழுவின்  (Sub-Committee on Accreditation (SCA)) கூட்டம் மே 1 அன்று  நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டம், 114 உறுப்பு நாடுகளில் ஒவ்வொன்றிற்கும் ஐந்தாண்டு சக மதிப்பாய்வின் ஒரு பகுதியாகும். கடந்த ஆண்டு, NHRC தலைவர் நீதிபதி அருண் குமார் மிஸ்ரா, இந்தியா தொடர்பான GANHRI அங்கீகாரத்திற்கான துணைக் குழுவின்  (Sub-Committee on Accreditation (SCA)) கூட்டத்திற்காக ஜெனீவா சென்றார். இந்த ஆண்டு, N.H.R.C. இணைய வழியில் மறு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கும். வெளியுறவு அமைச்சகம் மறு ஆய்வுச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள பல்வேறு நாடுகளைத் தொடர்பு கொண்டு இராஜதந்திர வழிகள் மூலம் தனது வாதத்தை முன்வைத்துள்ளது.


மோடி அரசாங்கம் மீண்டும் பட்டியல் தரமிழப்பைச் சந்திக்கிறது. இந்தியா 1999, 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் A தரவரிசையைப் பெற்றது. ஆனால், 2016 இல் அது ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஒரு வருடத்தில் மீட்டெடுக்கப்பட்டது. மார்ச் 2023 இல், SCA ஆறு புள்ளிகளைச் சமர்ப்பித்தது. NHRC சுதந்திரமாக செயல்படவில்லை என்று விமர்சிக்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் விசாரணைகளில் ஈடுபடுவது ஒரு பிரச்சினையாக இருந்ததை அவர்கள் சுட்டிக்காட்டினார். அதை "விருப்ப மோதல்" (“conflict of interest” ) என்று அழைத்தனர்.


NHRCயின் பதில்:


முன்னாள் IAS அதிகாரியான பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி போன்ற அரசு அதிகாரிகள் இருப்பது அதன் செயல்திறனுக்கு உதவுகிறது என்று NHRC கூறியது. தற்போது, ​​NHRC-யில் உள்ள இரண்டு நபர்கள் அரசு அதிகாரிகள், உளவுத்துறை பணியகத்தின் இயக்குநராக இருந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரி உட்பட. NHRCக்கு போதுமான பன்முகத்தன்மை மற்றும் பாலின பிரதிநிதித்துவம் இல்லை என்றும் SCA விமர்சித்தது. ஆரம்பத்தில், NHRC அதன் உயர்மட்ட அமைப்பில் ஒரு பெண் மட்டுமே உறுப்பினராக இருந்தனர். 2023 டிசம்பரில் விஜய பாரதி சயானி  (Vijaya Bharathi Sayani) என்ற மற்றொரு பெண்ணை நியமித்தனர். 


தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக இக்பால் சிங் லால்புரா (Iqbal Singh Lalpura) உள்ளார். இந்த குழு சமூகத்தின் அனைத்து பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று உறுதியான நடவடிக்கைக்கான நிலைக்குழு SCA கூறுகிறது. ஆனால் இது இந்தியாவின் மிகப்பெரிய சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டிருக்கவில்லை. பெரும்பாலான உறுப்பினர்கள் ஆளும் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என சில சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 10 உறுப்பினர்களில் 5 பேர் பாரதிய ஜனதா காட்சியை சேர்ந்தவர்கள். அவர்களில் குஜராத்தில் பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் கிஷோர் மக்வானா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் பாஜக எம்எல்ஏ அந்தர் சிங் ஆர்யா ஆகியோர் அடங்குவர். பாஜகவின் முன்னாள் எம்பியான ஹன்ஸ்ராஜ் அஹிர் மற்றும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டிலும் தொடர்புடைய பிரியங்க் கனூங்கோ ஆகியோர் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (National Commission for Protection of Child Rights) தலைவராக உள்ளனர். 


ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் திரு.ஜெயின் சிறுபான்மையினராகக் கருதப்படுகிறார் என்று விளக்கினர். அனைத்து உறுப்பினர்களும் இந்தியாவின் சட்டமன்ற மற்றும் அரசியலமைப்பு நடைமுறைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதில் எதிர்க்கட்சித் தலைவர்களின் உள்ளீடு அடங்கும் என்றும் அவர்கள் தெளிவுபடுத்தினர். 


வெளியுறவு அமைச்சகம்  மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் 120 உறுப்பினர்களைக் கொண்ட GANHRI இல் இந்தியாவின் நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. அவர்களில், 88 பேர் "A' அந்தஸ்தும், 32 பேர் "B' அந்தஸ்தும் பெற்றுள்ளனர். ஆப்கானிஸ்தான், மியான்மர், நைஜர் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் முன்னேற்றங்கள் காரணமாக அந்த நாடுகளுக்கான அங்கீகாரத்தை நீக்குவதற்கு அங்கீகாரத்திற்கான துணைக் குழு பரிந்துரைத்தது.


புதன்கிழமை சந்திப்பு பற்றி கேட்டபோது, ​​இந்தியாவின் A அந்தஸ்தை மீட்டெடுப்பதில் அரசாங்கம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், ஆனால் வெளி சான்றிதழ்களில் கவனம் செலுத்தவில்லை என்றும் ஆதாரங்கள் தெரிவித்தன. 2014 முதல் இந்தியாவை விமர்சிக்கும் சர்வதேசக் குடிமை  சமூக அமைப்புகள் தேவையற்ற செல்வாக்கைக் கொண்டிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மார்ச் 26, 2024 அன்று, சர்வதேச பொதுமன்னிப்புச் சபை (Amnesty International), மனித உரிமைகள் கண்காணிப்பு, மற்றும் CIVICUS உட்பட ஒன்பது மனித உரிமைக் குழுக்கள் பொதுத் தேர்தலுக்கு முன்னர் சிவில் சமூகத்தின் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுகளை அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்து GANHRI க்கு கூட்டாக கடிதம் எழுதின. பல்வேறு வளர்ச்சி மற்றும் மனித உரிமைக் குறியீடுகள் சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் தரவரிசைகளைக் குறைத்துள்ளதையும், அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட ஐநா மனித உரிமைகள் கவுன்சில் அறிக்கைகளையும் அவர்கள் குறிப்பிட்டனர்.

NHRCI இன் 'A' மதிப்பீட்டை GANHRI-SCA மாற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஏனெனில் அது பாரிஸ் கோட்பாடுகளைப் பின்பற்றவில்லை மற்றும் இந்தியாவில் மோசமடைந்து வரும் மனித உரிமைகளைக் கையாள்கிறது. கடந்த வாரம், இந்தியாவில் மனித உரிமைகள் பற்றிய அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் விமர்சித்தது, அது ஒரு சார்புடையது மற்றும் இந்தியாவைப் பற்றிய மோசமான புரிதலைக் காட்டுகிறது எனக் கூறியது. வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்த அறிக்கையைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை, நீங்களும் கவலைப்பட வேண்டியதில்லை என்று கூறினார்.




Original article:

Share:

இஸ்ரேல்-ஈரான் நெருக்கடியின் மீதான முப்பரிமாணப் பார்வை -ஸ்டான்லி ஜானி

 பல ஆண்டுகளாக, இஸ்ரேலுடனான  ரகசிய போரில் ஈரான் இராஜதந்திர பொறுமை காத்து வருகிறது. ஆனால், டமாஸ்கஸ் (Damascus) மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சு ஈரானின் சிந்தனையை  மாற்றியமைத்துள்ளது.


மார்ச் 2018 இல், ஒரு நேர்காணலின் போது, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலுக்கு எதிராக உள்ள மூன்று  அச்சறுத்தல்களை பட்டியலிட்டார் : "ஈரான், ஈரான், ஈரான்." மத்திய கிழக்கில் ஈரான் ஒரு ஆக்கிரமிப்பு சாம்ராஜ்யத்தை உருவாக்கி வருகிறது” என்று பிரதமர் கூறினார். இஸ்ரேலின் பிரதமராக  நெதன்யாகு நீண்டகாலமாக பணியாற்றி வருகிறார். ஈரான் மீதான தனது நிலைப்பாட்டில் அவர் எப்போதும் தெளிவாக இருக்கிறார். இந்த ஒப்பந்தம் ஒபாமா ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது.  பின்னர், டொனால்ட் டிரம்ப்பால் ரத்து செய்யப்பட்டது. 2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை அவர் கடுமையாக எதிர்த்தார். ஈரான் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் திறன் கொண்ட ஒரு வலுவான தலைவராக நெத்தனியாகு தன்னை நிலை நிறுத்தி கொண்டார். இருப்பினும், அவரது தலைமையின் கீழ், ஈரான் ஏப்ரல் 14 அன்று இஸ்ரேலைத் தாக்கியது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேல் மீது  ஈரான்  நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.


இஸ்ரேலை நேரடியாக தாக்கியதன் மூலம் ஈரான் ஒரு எல்லையைத் தீவிரமாகக்   கடந்தது. அச்சுறுத்தல்களைத் தடுக்கும் இஸ்ரேலின் திறனை பலவீனப்படுத்தியது. இருந்த போதிலும், அமெரிக்கா இஸ்ரேலை கடுமையாக பதிலடி கொடுக்காமல் தடுத்தது. ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடி அதன் தேசிய பாதுகாப்பு அமைச்சர்  இதமர் பென் ஜிவிரால் (Itamar Ben Gvir) பலவீனமாகக் கருதப்பட்டது. முதல் சுற்றுக்குப் பிறகு, இரு தரப்பினரும் பின்வாங்கும்போது, ​​​​நெருக்கடியானது மிகவும் ஆபத்தான மேற்கு ஆசியாவில் ஈரானின் அதிகரித்து வரும் அபாயத்தை வலுப்படுத்துகிறது. அமெரிக்காவின் தயக்கம் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக அமெரிக்காவை நம்பியிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.

 

பைடன் கோட்பாடு


அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பின்னர், பைடன் நிர்வாகம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் ஒரு பிராந்திய போராக மாறுவதைத் தடுப்பதில் எச்சரிக்கையாக உள்ளது. காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை ஜனாதிபதி ஜோ பைடன் ஆதரித்துள்ளார். அதே நேரத்தில் இஸ்ரேலுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த ஒரு இராஜதந்திர முயற்சியையும் தொடங்கியுள்ளார். இந்த முயற்சி இஸ்ரேலுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே பதட்டத்தை குறைக்கும் நோக்கத்தை கொண்டது. இருப்பினும், இந்த அணுகுமுறை இரண்டு முக்கிய சவால்களைச் சந்தித்தது. முதலாவதாக, பைடன் நிர்வாகம் இஸ்ரேல்-அரபு உறவுகளை நிலையானதாக வைத்திருப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. இருப்பினும், ஈரான் மீது வாஷிங்டன் தனது ஆதிக்கத்தை செலுத்தியது. இரண்டாவதாக, இஸ்ரேல் இரண்டு பகுதிகளில் மோதல்களில் ஈடுபட்டது. ஒன்று காஸாவில் இருந்தது. மற்றொன்று ஈரானிய செல்வாக்கை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்ட அதன் சுற்றியுள்ள பகுதியில் இருந்தது. இந்த நிலை இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் ஏற்படும் அபாயத்தை அதிகரித்தது.


ஏப்ரல் 1, 2024 அன்று டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியதில் மூத்த புரட்சிகர காவலர் அதிகாரிகள் கொல்லப்பட்டபோது இந்த ஆபத்து உருவானது. ஈரானின் பதிலடி மற்றும் அதன் தாக்கங்களை அறிந்திருந்த அமெரிக்கா, முன்கூட்டியே உளவுத் தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்டது. ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எந்தவொரு பதிலடி நடவடிக்கைகளையும் அமெரிக்கா ஆதரிக்காது என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிடம் தெரிவித்ததாக அதிபர் பைடன் கூறினார். பதற்றத்தைத் தணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கிழக்கு ஐரோப்பா மற்றும் இந்தோ-பசிபிக் பகுதிகளில் அமெரிக்கா முக்கியமான இலக்குகளைக் கொண்டுள்ளது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இஸ்ரேலை இலக்காகக் கொண்ட பெரும்பாலான ஈரானிய "99%" ஏவுகணைகளை இடைமறித்தனர். இதனால் போர் விரிவாக்கம் தடுக்கப்பட்டது. அமெரிக்கா நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.  


நெதன்யாகுவின் குழப்பம்


இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஈரானிய நலன்களை குறிவைத்து சிரியாவில் மட்டும் இஸ்ரேல் 400க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. நவம்பர் 2020 இல் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டது உட்பட ஈரானிலும் அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கைகளுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. இது இஸ்ரேலை போர் நடவடிக்கைகளைத்  தொடர ஊக்குவித்தது. 


அக்டோபர் 7 க்குப் பிறகு இஸ்ரேல் அதன் இரகசிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. டிசம்பர் 25 அன்று, அவர்கள் சிரியாவில் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் உயர்நிலை ஆலோசகரான சையத் ராஸி மௌசவியை கொன்றனர். ஈரான் கடுமையாக பதிலடி கொடுக்கவில்லை. பின்னர், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (Islamic Revolutionary Guard Corps  (IRGC)) முக்கிய தளபதியான முகமது ரேசா ஜாஹேதி டமாஸ்கஸில் உள்ள தூதரகத்தில் இருப்பதை இஸ்ரேல் அறிந்தது. டமாஸ்கஸில் ஈரான் நடத்திய தாக்குதலால் தாங்கள் ஆச்சரியமடைந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

ஈரானின் பதிலடிக்குப் பிறகு திரு.நெதன்யாகு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் பொதுவாக தெஹ்ரானுக்கு எதிராக பலத்தை பயன்படுத்த விரும்பினார். இந்த தாக்குதல் அவருக்கு பலமாக பதிலடி கொடுக்க ஒரு வாய்ப்பு என்று பலர் நினைத்தனர். ஆனால் சூழ்நிலை அவருக்கு சாதகமாக இல்லை. அவர் ஈரானுக்கு எதிராக பலத்தை பயன்படுத்த விரும்பினாலும், அவர்களுடன் தனியாக போராட விரும்பவில்லை. அமெரிக்கா வழிநடத்தவும் ஆதரவளிக்கவும் அவர் விரும்புகிறார். இருப்பினும், இஸ்ரேலின் பதிலடியில் அமெரிக்கா சேராது என்று திரு. பிடன் கூறியபோது, ​​அது திரு. நெதன்யாகுவின் விருப்பங்களை குறைத்து. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரில் இருந்து விலகி இருக்க அமெரிக்காவின் விருப்பத்தை அவர் இன்னும் சோதித்திருக்கலாம். காசாவில் இஸ்ரேலின் போர் இன்னும் முடிவடையவில்லை. அதன் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி பைடனனின் தொடர்ச்சியான ஆதரவு தேவைப்பட்டது. எனவே, பிரதமர் நெதன்யாகு ஈரானின் மீதான நடவடிக்கைகளின் வேகத்தைக் குறைத்தார். அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தபடி, அவர் ஒரு ரேடார் அமைப்பைக் குறிவைத்தார். இந்த தாக்குதலை நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நடவடிக்கை பைடன் நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்பட்டது. இது ஒரு பரந்த பிராந்திய மோதலைத் தடுக்க உதவியது. இருப்பினும், இஸ்ரேலின் கண்ணோட்டத்தில், இந்த பதில் பலவீனமாக இருந்தது. 


அயதுல்லாவின் கணக்கீடு


இஸ்ரேலுடனான போரில் ஈரான் பல ஆண்டுகளாக  பொறுமையாக உள்ளது. ஏனென்றால், காலப்போக்கில் ஈரான் பிராந்தியத்தில் தனது இருப்பை வளர்க்க விரும்புகிறது. பல முக்கியமான ஈரானிய அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், ஈரானின் சக்தி அதிகம் பலவீனமடையவில்லை. ஈரானின் அணுசக்தி திட்டம் இன்னும் பெரிதாகி வருகிறது. மேலும், பிராந்தியத்தில் அதன் நட்பு நாடுகளும் வலுவடைந்து வருகின்றனர். ஆனால், ஈரானின் தூதரக அமைப்பின் மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியபோது, ​​மீண்டும் போரிட வேண்டிய நேரம் இது என்று ஈரான் முடிவு செய்தது. குண்டுவெடிப்பு தவிர, மற்ற விஷயங்கள் ஈரான் தனது வியூகத்தை மாற்றியது. ஈரான் இப்போது ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கமாக உள்ளது. சீனாவுடனான அதன் பிணைப்பு பெரும்பாலும் பணத்தைப் பற்றியது. ஆனால் ரஷ்யாவுடன் அது ஆழமானது. உக்ரைனில் போரிட ரஷ்யாவிற்கு ஈரான் ட்ரோன்களை வழங்கியது. மத்திய கிழக்கில், குறிப்பாக சீனா மற்றும் ரஷ்யா பிரச்சனைகளை ஏற்படுத்துவதால், அமெரிக்கா அதிக போர்களை விரும்பவில்லை என்பதையும் ஈரான் காண்கிறது.


மேற்கு ஆசியாவில் ஆறு மாதங்களாக ஹமாஸுடன் இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இருந்த போதிலும் இஸ்ரேல் தனது இலக்குகளை அடையவில்லை. இந்த இலக்குகளில் ஹமாஸை அகற்றுவது. பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் அதன் இராணுவத் தடுப்பை வலுப்படுத்துவது ஆகியவை முக்கியமானவை ஆகும். காசாவில் இஸ்ரேல் தனது  படைகளை  பயன்படுத்தியுள்ளது. இந்த படை வடக்கு மற்றும் மத்திய காசாவில் உள்ள பகுதிகளை அழித்துள்ளது. இந்த   போரில் 34,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இஸ்ரேல் இப்போது சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கை எதிர்கொள்கிறது. அக்டோபர் 7 தாக்குதலும் பின்வரும் யுத்தமும் இஸ்ரேலை பலவீனப்படுத்திவிட்டதாக ஈரான் நம்புகிறது. அமெரிக்க பாதுகாப்பு உறுதிமொழிகளை முன்பு போல் நம்பகமானதாக பிராந்தியங்கள் பார்க்கவில்லை. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஈரான் இஸ்ரேலை வெளிப்படையாக தாக்கி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜோர்டான் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு முயற்சிகள் இருந்தபோதிலும், சில ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் இன்னும் இஸ்ரேலைத் தாக்கியுள்ளன.


ஏப்ரல் 14-ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அதற்கு முன்பு, ஈரான் 2019 இல் சவுதி அரேபியாவைத் தாக்கியது. இந்த தாக்குதல் அதன் எண்ணெய் உற்பத்தியில் பாதியைக் குறைத்தது. 2020 இல், அது ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியது. கடுமையான விளைவுகளை சிந்திக்காமல் ஈரான் இவற்றைச் செய்தது. இது மேற்கு ஆசியாவில் ஈரானின் நடவடிக்கைகள் கட்டுப்பாடின்றி நடக்கும் புதிய சூழ்நிலையைக் காட்டுகிறது. ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் வலுவாக பதிலளிக்கவில்லை. திருப்பித் தாக்கியதை ஒப்புக் கொள்ளவில்லை. மேற்கத்திய நட்பு நாடுகள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டன. ஆபத்து குறித்த ஈரானின் மதிப்பீடு சரியானது என்று பரிந்துரைத்தது. இது ஈரானுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தலாம். இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை ஏவுகணைகள் அல்லது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்கும் ஒரே நாடு ஈரான் மட்டுமே.




Original article:

Share:

அதிக வெப்பநிலைக்கும் குறைந்த வாக்குப்பதிவுக்கும் இடையே உள்ள தொடர்பு -சீனிவாசன் ரமணி

 வெப்பநிலை குறைவாக இருந்தபோதிலும், பல தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்ததுள்ளது. இதற்கிடையில், சில பகுதிகளில் வெப்பமான சூழ்நிலையிலும் அதிக வாக்குப்பதிவு இருந்தது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 189 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இந்த கட்டங்களுக்கான முழுமையான வாக்குப்பதிவு தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India (ECI)) இன்னும் வழங்கவில்லை. இருப்பினும், ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு குறித்த விரிவான தகவல்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். 2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது வாக்குப்பதிவு பொதுவாக குறைந்துள்ளது என்பதை இந்த தரவு காட்டுகிறது. இந்த இரண்டு கட்டங்களில், 189 இடங்களில் 32 மட்டுமே முந்தைய தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. மீதமுள்ள இடங்களில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. கடந்த 2014 தேர்தலை விட 60 தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகரித்தது, 129 தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது இதை அட்டவனை 1 குறிப்பிடுகிறது.


பல மாநிலங்களை பாதித்துள்ள வெப்ப அலை வாக்காளர் பங்கேற்பு குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணியாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் வெப்ப அலை குறித்து அறிந்திருக்கிறது மற்றும் அதை நிவர்த்தி செய்வதற்கான தீர்வுகளை ஆராய்ந்து வருகிறது. இந்தியா, பெரும்பாலும் வெப்பமண்டலமாக இருப்பதால், வெப்பமான கோடைகாலத்தைக் கொண்டுள்ளது. இதில் கங்கைச் சமவெளி, மத்திய, மேற்கு, கிழக்கு சமவெளிகள் மற்றும் தீபகற்பப் பகுதிகள் ஆகியவை அடங்கும்.


அதிக பகல் வெப்பநிலை இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவை குறைக்க வழிவகுத்ததா? 172 இடங்களை ஆய்வு செய்ததில், 2019 உடன் ஒப்பிடும்போது 118 இடங்களில் வெப்பநிலை உயர்ந்துள்ளது 54 இடங்களில் வெப்பநிலை குறைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் 142 இடங்களில் வெப்பநிலை அதிகரித்திருந்தது, 30 இடங்களில் வெப்பநிலை குறைந்திருந்தது.


இந்தத் தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்ததற்கு வெப்பநிலை அதிகரிப்பு நேரடியாகக் காரணம் என்று கூற முடியாது. 2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் வாக்காளர் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு இடையேயான புள்ளிவிவர தொடர்பு மிகவும் குறைவாக (0.016) உள்ளது, இதேபோல், 2014 தேர்தல்களின் வாக்குப்பதிவுடன் ஒப்பிடும் போது, ​​-0.048 என்ற அளவில் தொடர்பும் குறைவாக உள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் வெப்பநிலை மாற்றங்களை விட மற்ற காரணிகள் வாக்காளர்களின் எண்ணிக்கையை பாதிக்கும் என்று கூறுகின்றன இதை அட்டவனை 3ல் கூறிப்பிடப்பட்டுள்ளது.


வெவ்வேறு மாநிலங்களில் மாறுபட்ட வாக்குப்பதிவுக்கான காரணங்கள் ஒப்பீட்டளவில் தெளிவாக உள்ளன. உதாரணமாக, சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில், வெப்பநிலை அதிகரித்தாலும், வாக்குப்பதிவு உண்மையில் அதிகரித்துள்ளது. மாறாக, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், பல தொகுதிகளில் வெப்பநிலை குறைந்தாலும், வாக்குப்பதிவு குறைந்துள்ளது. வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் வாக்குப்பதிவு மாற்றங்கள் ஆகியவற்றுக்கு இடையே நிலையான தொடர்பு இல்லாதது, வெப்பநிலை மட்டும் வாக்களிக்கும் முறையை கணிசமாக பாதிக்காது என்பதைக் குறிக்கிறது. பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவை பாதிக்கும் பிற காரணிகள் இருக்கக்கூடும்.


நகர்ப்புறங்களில், குறிப்பாக பெருநகரங்களில், உயரும் வெப்பநிலைக்கும் வாக்காளர் எண்ணிக்கைக்கும் இடையே சற்று வலுவான எதிர்மறை தொடர்பு உள்ளது. வெப்பநிலை அதிகரிக்கும் போது, ​​வாக்காளர்களின் எண்ணிக்கை சற்று குறைகிறது. இது 2014 மற்றும் 2019 தேர்தல்களின் தரவுகளுடன் ஒத்துப்போகிறது. குறிப்பாக நகர்ப்புற இடங்களில் கவனம் செலுத்தும்போது, ​​2014 மற்றும் 2024 தேர்தல்களுக்கு இடையேயான வித்தியாசம் -0.3 ஆகவும் 2019 இல் இருந்து வாக்குப்பதிவு மாற்றங்களை ஒப்பிடும்போது -0.16 ஆகவும் அதிகரிக்கிறது.


இருப்பினும், அதிகரித்து வரும் வெப்பநிலை மட்டும் வாக்குப்பதிவை பாதிக்கும் ஒரே காரணி அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகமான மக்கள் வாக்களிக்காததற்கான காரணங்கள் சிக்கலானவை. தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அவற்றை நாம் நன்றாகப் புரிந்து கொள்ளலாம். இருந்த போதிலும், 2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிக வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிகரிப்பிற்கு, இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்முயற்சிகளால் உந்தப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வும் ஒரு காரணம். இது வாக்காளர்களில் பெரும் பகுதியினரை வாக்களிக்கத் தூண்டியது.




Original article:

Share:

இந்தியாவில் எதிர்ச்சூறாவளிகள் (Anticyclones) வெப்பத்தை வெப்ப அலைகளுடன் இணைக்கின்றன - ரகு முர்துகுடே

 2023ஐ வெப்பமான ஆண்டு என இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளமுடியவில்லை. புவி வெப்பமடைதலுக்கு எல் நினோ (El Niño) நாம் எதிபார்த்தை விட அதிக வெப்பத்தை ஏற்படுத்தியது.


புவி வெப்பமடைதல் உள்ளூர் வானிலையை சிக்கலான வழிகளில் பாதிக்கிறது. நாம் உலகம் முழுவதையும் கண்காணிக்க வேண்டும், ஆனால் குறிப்பிட்ட இடங்களுக்கான கணிப்புகளையும் அதிகப்படுத்த  வேண்டும்.

2023இல், வலுவான எல் நினோ முடிவுக்கு வந்தது, உலகம் முழுவதும் அதிக வெப்பநிலையைக் ஏற்படுத்தியது. ஆனால், மார்ச் மாதத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் மேற்கு வங்கம் வரை மிதமான வெப்பநிலை நீடித்தது. மற்ற இடங்களில் வரலாறு காணாத அதிக அளவு வெப்பநிலை இருந்தபோதிலும், 2023 முழுவதும் இந்தப் பகுதிகள் குளிர்ச்சியாகவே இருந்தன.


வெப்ப அலைகளுக்கும் புவி வெப்பமடைதலுக்கும் என்ன சம்பந்தம்?


புவி வெப்பமடைதல் இந்தியா போன்ற சில நாடுகளில் வெப்ப அலைகளை வலுப்படுத்துகிறது, இங்கு மக்களவை தேர்தல் நடைபெருவதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது சில வானிலை முறைகள் இந்த வெப்ப அலைகளை ஏற்படுத்துகின்றன, இதை நாம் சிறப்பாகக் கணிக்க கவனம் செலுத்த வேண்டும்.


மார்ச் மாதத்தில், வட இந்தியப் பெருங்கடலில் எதிர்ச் சூறாவளி (anticyclonic) சுழற்சியால் ஒடிசாவில் அசாதாரண மழை பெய்தது. இந்த சுழற்சிகள் காற்றை வெப்பமடைய செய்கின்றன மற்றும் அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் துபாயில் ஏற்பட்ட வெள்ளம் இதேபோல் ஏற்பட்டது.


இந்த சுழற்சிகள் வட இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்திய துணைக் கண்டத்தில் ஏற்படுகின்றன.


எதிர்ச் சூறாவளியை வெப்பத்துடன் இணைப்பது எது?


பருவமழைக்கு முந்தைய காலங்களில் இப்பகுதியில் எதிர்ச் சூறாவளிகள் ஏற்படுவது ஒரு சாதாரண காலநிலை நிகழ்வாகும். பருவமழைக்கு முந்தைய காலம் நெருங்கும் போது, ​​மேல் நிலை இந்திய ஈஸ்டர்லி ஜெட் (upper-level Indian Easterly Jet (IEJ)) உருவாகத் தொடங்குகிறது, இது அரேபிய கடல், தீபகற்ப இந்தியா மற்றும் வங்காள விரிகுடா முழுவதும் சுமார் 10 டிகிரி வட அட்சரேகையில் பரவுகிறது. அதே நேரத்தில், மேற்கிலிருந்து காற்றைக் கொண்டு செல்லும் ஒரு வலுவான மேற்கு ஜெட்காற்று, வடக்கே 30 டிகிரியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஜெட் காற்றுகளுக்கிடையே உள்ள தொடர்பு இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்திய துணைக்கண்டத்தின் மீது ஒரு எதிர்ச் சூறாவளியை ஏற்படுத்த முடியும்.


வானிலையின் அடிப்படையில், ஒரு ஜெட்காற்று கிழக்கிலிருந்து வரும் வலுவான காற்றைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் மேற்கு ஜெட்காற்று மேற்கில் இருந்து வரும் காற்றைக் கொண்டுள்ளது. இந்த ஜெட் காற்றுகள் பிராந்திய வானிலை முறைகளை பாதிக்கும் குறிப்பிடத்தக்க பருவகால வளிமண்டல அம்சங்களாகும். பருவமழையின் போது, ​​மேற்கத்திய ஜெட்காற்று வடக்கு நோக்கி நகர்கிறது, இது இந்திய துணைக்கண்டத்தின் வானிலையில் இந்திய ஈஸ்டர்லி ஜெட் (Indian Easterly Jet (IEJ)) ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறது. பருவமழைக்கு முந்தைய பருவத்தில், எதிர் சூறாவளி வலிமை பெற்று ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது: வலுவான எதிர்சூறாவளி இந்தியாவின் பெரிய பகுதிகளில் வறண்ட மற்றும் வெப்பமான நிலைமைகளுக்கு வழிவகுக்கும், அதேசமயம் பலவீனமான எதிர்சூறாவளி மிதமான வானிலைக்கு வழிவகுக்கும்.


இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, எதிர்சூறாவளியின் தற்போதைய வலிமை மற்றும் புவி வெப்பமடைதலுக்கான அதன் சாத்தியமான கூறுகள் ஆகியவை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எதிர்சூறாவளி வழக்கத்திற்கு மாறாக வலுவாக இருந்தால், அது பிராந்தியம் முழுவதும் வெப்ப அலைகளை அதிகப்படுத்தும் காரணியாக இருக்கும். புவி வெப்பமடைதல் இந்த பாரம்பரிய காலநிலை முறைகளை பாதிக்கலாம் மற்றும் வெப்ப அலைகள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளையும் தீவிரப்படுத்தும் என்பதை ஆராய வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது.


வெப்ப அலைகள் எவ்வாறு அதிகரிக்கின்றன?


இந்தியாவின் பருவமழைக்கு முந்தைய காலத்தில், இது மிகவும் வெப்பமாக இருக்கும் மற்றும் வெப்ப அலைகள் பொதுவானவை. அவற்றைத் துல்லியமாகக் கணித்து, மக்களையும் அவர்களின் உடைமைகளையும் பாதுகாக்க ஆரம்பகட்ட எச்சரிக்கைகளை வழங்குவது மிக முக்கியம். வெப்ப அலைகளுக்கு என்ன காரணம், அவை எவ்வளவு காலம் நீடிக்கும், அவை எவ்வளவு தீவிரமானவை, அவை எவ்வாறு அடிக்கடி நிகழ்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது, அவை எங்கு கடுமையாகத் தாக்கும் என்பதை அடையாளம் காண உதவுகிறது.


2023 இல், வெப்பநிலை மிகவும் அதிகரித்தது. எல் நினோ மற்றும் புவி வெப்பமடைதலில் கூட, ஏன் அதிக வெப்பம் ஏற்பட்டது என்பது இன்னும் சரியாக அறியமுடியவில்லை. ஆனால் பருவமழை காலத்திற்க்கு முன், எல் நினோ ஒரு எதிர்ச்சூறாவளியை வலிமையாக்குகிறது, இது நீண்ட மற்றும் கடுமையான வெப்ப அலைகளுக்கு வழிவகுக்கிறது.


எல் நினோ மற்றும் 2023 இல் விவரிக்கப்படாத வெப்பமயமாதல் காரணமாக இந்த ஆண்டின் அதிக வெப்ப அலை மற்றும் வெப்பநிலையை ஏற்படுத்தியுள்ளது.


வழக்கமான குளிர்கால வெப்பநிலை மற்றும் வலுவான நீடித்த எதிர்சூறாவளியை அறிவது மிக முக்கியம். இது இந்திய வானிலை ஆய்வுத் துறைக்கு துல்லியமான கணிப்புகளைச் கண்டறியவும் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்கவும் உதவுகிறது.


ஆரம்ப எச்சரிக்கைகளின் நிலைகள் என்ன?


புவி வெப்பமயமாதலின் உள்ளூர் விளைவுகள், உலக காலநிலை ஆராய்ச்சித் திட்டம் மற்றும் உலக வானிலை அமைப்பு ஆகியவற்றின் தலைமையிலான 'துணை பருவகாலம் முதல் பருவகால கணிப்புகள்' (Subseasonal-to-Seasonal Predictions) திட்டத்தின் ஒரு பகுதியான 'தயாராகு-அமைத்துக்கொள்-செல்' (ready-set-go) அமைப்பு எனப்படும் மூன்று-படி அணுகுமுறை மூலம் தீர்க்கப்படுகிறது, இது உலக வானிலை அமைப்பின் கீழ் உள்ள உலக காலநிலை ஆராய்ச்சி திட்டத்தின் 'துணை பருவகால கணிப்புகள்' திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில் இந்தியா ஈடுபட்டுள்ளது மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்துள்ளது.


திறமையான செயல்பாட்டிற்கு, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (National Disaster Management Agency (NDMA)) இந்த மூன்று படி அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. நடைபெற்று வரும் பொதுத் தேர்தலுக்காக 1.2 மில்லியனுக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் இருப்பதால், இடம் சார்ந்த தகவல்களைக் கொண்டிருப்பது முக்கியம்.


'தயார்' (ready) நிலையில், புவி வெப்பமடைதல் மற்றும் எல் நினோ போன்ற காரணிகளைப் பயன்படுத்தி நீண்டகால கணிப்புகளை மேம்படுத்த பருவகால கண்ணோட்டம் வழங்கப்படுகிறது. இது தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம்  மற்றும் உள்ளூர் ஏஜென்சிகள் தயாராக இருக்க உதவுகிறது.


'அமைத்துக்கொள்' (set) நிலையில், துணை பருவகால கணிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டு முதல் நான்கு வாரங்களை உள்ளடக்கியது. அவை வளங்களை ஒதுக்கவும், பேரிடர் தயார்நிலைக்கு சாத்தியமான இடங்களைக் கண்டறியவும் உதவுகின்றன.


'செல்' (go) பேரிடர் மேலாண்மையில் 'செல்' என்பது ஒரு முக்கியமான கட்டமாகும், இது குறுகிய தூர நாட்கள் 1-3 மற்றும் நடுத்தர தூர நாட்கள் 3-10 வானிலை முன்னறிவிப்புகளை பெரிதும் நம்பியுள்ளது. இந்த நடவடிக்கையின் போது, ​​அனைத்து ஆயத்த திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு, பேரழிவை திறம்பட நிர்வகிக்க பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுக்களை அனுப்புதல், வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்க நீரேற்றம் மையங்களை நிறுவுதல் மற்றும் தீவிர வெப்பநிலையிலிருந்து பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்க வெப்ப உறைவிடங்களை அமைத்தல் ஆகியவை இதில் அடங்கும். பேரழிவின் தாக்கங்களைக் குறைப்பதற்கும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சமூகத்தில் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்கும் இந்த நடவடிக்கைகள் அவசியம்.


தயார்நிலை மற்றும் மீட்பு எவ்வாறு செயல்படுகிறது?


அனைத்து ஆதாரங்களின்படியும் இந்தியாவின் தேசிய பேரிடர் மேலான்மை வாரியம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தேசிய பேரிடர் மேலான்மை வாரியம் இந்த மேம்பாடுகளை  'தயாராகு-அமைத்துக்கொள்-செல்' (ready-set-go) அமைப்பில் ஒருங்கிணைத்துள்ளது.


இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் வானிலையை மிகவும் துல்லியமாக கணிப்பது, எதிர்காலத்திற்கு தயார்படுத்துவது ஆகியவை முக்கிய சவாலாகும். ஆனால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு வானிலை முறைகளை கணிக்கும் சமீபத்திய முயற்சிகள் முன்னேற்றத்தைக் காட்டுகின்றன.


தேசிய அளவில் இருந்து அண்டை நிலை வரை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் மற்றும் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரிக்கைகளை வழங்குவதற்கான முயற்சிகள் முன்னேறி வருகின்றன. இந்த வெற்றியை நீடிக்க, அரசாங்கங்கள், அவற்றின் துறைகள் மற்றும் பொதுமக்களுக்கு போதிய பயிற்சியும் ஈடுபாடும் தேவை. இந்தியாவின் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி இதை நம்பியிருக்கிறது. 


ரகு முர்துகுடே ஐஐடி பாம்பேயில் வருகைப் பேராசிரியராகவும், மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் எமரிட்டஸ் பேராசிரியராகவும் உள்ளார்.




Original article:

Share: