சமீபத்திய GDP மதிப்பீடுகள் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து வெளிப்படுத்துவது என்ன? - உதித் மிஸ்ரா

 ஒரு டாலருக்கு தற்போதைய இந்திய ரூபாய் 85 மாற்று விகிதத்தில், 2025  நிதியாண்டில் இந்தியாவின் GDP $3.8 டிரில்லியன் ஆக இருக்கும். 2014-ம் ஆண்டில், ஒரு டாலருக்கு மாற்று விகிதம் சுமார் 61 ரூபாயாக இருந்தது. மாற்று விகிதம் அப்படியே இருந்திருந்தால், இன்று இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 டிரில்லியன் டாலர்களை எட்டியிருக்கும். சரியாகச் சொன்னால், அது $5.3 டிரில்லியனாக இருந்திருக்கும்.

 

2024-25 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் (FY25) முடிவடையும் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியின் "முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளை" (First Advance Estimates” (FAE)) புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்டது. முன்கூட்டிய மதிப்பீடுகள் (Advance Estimates) என்பது நிதியாண்டானது முடிவடையும் நேரத்தில் இந்தியாவின் பொருளாதார உற்பத்தி என்னவாக இருக்கும் என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் எதிர்பார்க்கும் ஒரு கணிப்பு ஆகும். கிடைக்கக்கூடிய தரவு மற்றும் கடந்த கால போக்குகளைப் பயன்படுத்தி ஆண்டு இறுதி மதிப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) இந்த மதிப்பீடுகளை உருவாக்குகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், இது பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து தரவைப் பெறுகிறது. 

 

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) கணிப்பு என்ன? 


மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது ஒரு பண அளவீடு (monetary measure) ஆகும். இது ஒரு வருடத்தில் இந்தியாவின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பைக் குறிக்கிறது. இது இந்தியப் பொருளாதாரத்தின் அளவை மதிப்பிடுகிறது.

 

MoSPI அமைச்சகத்தின் படி, இந்தியாவின் பெயரளவு GDP (nominal GDP) மார்ச் இறுதிக்குள் ரூ.324 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டுடன் (FY24) ஒப்பிடும்போது 9.7 சதவீத வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.

 

இந்தியப் பொருளாதாரத்தின் அளவிற்குச் சமமான அமெரிக்க டாலரைக் கணக்கிடுவதற்கு பெயரளவு GDP பயன்படுத்தப்படுகிறது. ஒரு டாலருக்கு 85 ரூபாய் மாற்று விகிதமாக இருந்தால், நிதியாண்டு-2025 இல் இந்தியாவின் GDP $3.8 டிரில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

2014-ம் ஆண்டில் இந்தியாவின் மாற்று விகிதம் ஒரு டாலருக்கு 61 ரூபாயாக இருந்திருந்தால், இந்தியா இன்று $5 டிரில்லியன் பொருளாதாரமாக (சரியாக $5.3 டிரில்லியன்) ஆகியிருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த பெயரளவிலான GDP (nominal GDP) பட்ஜெட் மதிப்பீடுகளை விட குறைவாக உள்ளது. இந்த மதிப்பீடுகள் கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டிலும் (ரூ.328 லட்சம் கோடி) ஜூலையில் தாக்கல் செய்யப்பட்ட முழு ஒன்றியப் பட்ஜெட்டிலும் (ரூ.326 லட்சம் கோடி) தாக்கல் செய்யப்பட்டன.

 

இருப்பினும், அன்றாட பயன்பாட்டில், இது "உண்மையான" மொத்த உள்நாட்டு உற்பத்தி (real GDP) ஆகும். 

 

உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (real GDP) பணவீக்கத்தின் விளைவை பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (nominal GDP) இருந்து நீக்குவதன் மூலம் கணக்கிடப்படுகிறது. பெயரளவு GDP இரண்டு காரணங்களுக்காக அதிகரிக்கலாம். முதலில், நாடு அதிக பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்யலாம். இரண்டாவதாக, பணவீக்கம் காரணமாக தற்போதுள்ள பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயரக்கூடும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இரண்டு காரணிகளும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகரிப்புக்கு பங்களிக்கின்றன.

 

இந்தியா போன்ற ஒரு நாடு எவ்வளவு அதிகமான பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்துள்ளது என்பதை உண்மையான ஜிடிபி (Real GDP) வெளிப்படுத்துகிறது. இது விலை மாற்றங்களின் தாக்கத்தைத் தவிர்த்து கணக்கீடு செய்கிறது.

 

MoSPI அமைச்சகத்தின் படி, நிதியாண்டு-2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் உண்மையான GDP ₹184.9 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57% மட்டுமே. மீதமுள்ள 43% விலைவாசி உயர்வின் விளைவை பிரதிபலிக்கிறது.

 

இந்தியாவின் பொருளாதார உற்பத்தி (GDP) மெதுவான வேகத்தில் வளர்ந்து வருவதை அட்டவணை 1 இல் உள்ள தரவு காட்டுகிறது. பெயரளவு GDP அல்லது உண்மையான GDP என்று குறிப்பிட்டிருந்தாலும் இது உண்மைதான். இதன் பொருள் பொருளாதார உற்பத்தி குறைகிறது என்று அர்த்தமல்ல. ஒரு வருடத்திலிருந்து அடுத்த ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் மெதுவாக வருகிறது என்று அர்த்தம்.


அட்டவணை 1


கோவிட்க்கு முந்தைய ஆண்டான 2020 ஆண்டு முதல், இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (compounded annual growth rate (CAGR)) 4.8% மட்டுமே வளர்ந்துள்ளது. 1991 ஆண்டு பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகு இந்தியா அனுபவித்த 7% சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. 


விளக்கப்படம் 1. ஆதாரம்: ஜூலை 2020 முதல் மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிடியூட் அறிக்கை.

பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்தவரை, 10 சதவீதத்திற்கும் குறைவான வருடாந்திர அதிகரிப்பு சமீபத்திய காலங்களில் இந்தியாவின் செயல்திறனிலிருந்து மிகவும் வேறுபட்டது. 2003-04 மற்றும் 2018-19 க்கு இடையில், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 13.5 சதவீத விகிதத்தில் வளர்ச்சியடைந்தது.


மொத்த உள்நாட்டு உற்பத்தியானது பொருளாதாரத்தில் செலவழிக்கப்பட்ட அனைத்து பணத்தையும் சேர்த்து கணக்கிடப்படுகிறது. இதைப் புரிந்து கொள்ள, செலவினத்தின் நான்கு முக்கிய வகைகளைப் பார்க்க வேண்டும். இந்த வகைகளை பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் நான்கு இயந்திரங்களாகச் செயல்படுகிறது. 

 

1. மக்கள் தங்கள் தனிப்பட்ட திறனில் செலவழித்தல் : தொழில்நுட்ப ரீதியாக இது தனியார் இறுதி நுகர்வு செலவு (Private Final Consumption Expenditure (PFCE)) என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 60% ஆகும். 

 

2. சம்பளம் போன்ற தினசரி செலவுகளை சந்திக்க அரசாங்கங்கள் செய்யும் செலவுகள் : இது அரசாங்கத்தின் இறுதி நுகர்வு செலவு (Government Final Consumption Expenditure (GFCE)) ஆகும். இது மிகச்சிறியளவிலான செயல் இயக்கமாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10% ஆகும். 


3. பொருளாதாரத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்யும் செலவு முதலீடு : சாலைகள் அமைக்கும் அரசாங்கங்கள் அல்லது தொழிற்சாலைகள் கட்டும் நிறுவனங்கள் அல்லது கணினிகளை வாங்குவது இதில் அடங்கும். இந்த செலவு மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (Gross Fixed Capital Formation (GFCF)) என்று அழைக்கப்படுகிறது. மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (GFCF) என்பது வளர்ச்சியின் இரண்டாவது பெரிய இயக்கமாகும். பொதுவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஆகும்.

 

4. நிகர ஏற்றுமதி அல்லது நிகர செலவினம் இந்தியர்கள் இறக்குமதி மற்றும் வெளிநாட்டவர்கள் இந்திய ஏற்றுமதியில் செலவு செய்வதால் விளைகிறது : இந்தியா வழக்கமாக ஏற்றுமதி செய்வதை விட அதிகமாக இறக்குமதி செய்கிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த GDPயை இயக்கச் செயல்பாடு இழுக்கச் செய்கிறது.  இதன் விளைவாக, இது ஒரு கழித்தல் அடையாளத்துடன் காண்பிக்கப்படுகிறது.

இந்த கூறுகள் ஒவ்வொன்றும் முழுமையான மற்றும் சதவீத அடிப்படையில் எவ்வாறு செய்துள்ளன என்பதை அட்டவணை 2 காட்டுகிறது. 

 

அட்டவணை 2 

 

தனியார் நுகர்வு தேவை அல்லது PFCE (PRIVATE CONSUMPTION DEMAND) : இந்தியர்கள் தங்கள் தனிப்பட்ட திறனில் என்ன செலவிடுகிறார்கள் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணியாகும். இந்த வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்தால், அது ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை இணைப்பது மட்டுமல்லாமல், பொருளாதாரத்தில் முதலீடு செய்வதிலிருந்து தனியார் துறையையும் தடுக்கிறது.  நடப்பு ஆண்டிற்கு, இந்த செலவு 7.3% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அட்டவணையில் முக்கியமான எண் நிதியாண்டு-2020 முதல் வெறும் 4.8% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) ஆகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியின் மிகப்பெரிய செயல்பாடு 5% க்கும் குறைவாக அதிகரித்து வருகிறது என்றால், ஏப்ரல் 2019 தொடக்கத்திலிருந்து ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதமும் 4.8% ஆக இருப்பதில் ஆச்சரியமில்லை.  

அரசாங்க செலவுகள் : அரசாங்கங்களை மற்ற பொருளாதார நிபுணர்களிடமிருந்து வேறுபடுத்துவது அவர்களின் வருமானத்தை விட அதிகமாக செலவழிக்கும் திறன் ஆகும். கிட்டத்தட்ட எல்லா அரசாங்கங்களும் இதைச் செய்கின்றன. பொருளாதாரத்தின் மற்ற பகுதிகள் சிரமப்படும்போது, ​​அரசாங்கங்கள் பணத்தை கடன் வாங்கலாம் அல்லது அச்சிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், கோவிட் காரணமாக ஏற்பட்ட இடையூறுகள் இருந்தபோதிலும், அரசாங்கத்தின் செலவுகள் குறைவான அளவில் கூட அதிகரிக்கவில்லை.  இது இந்த ஆண்டு வெறும் 4.2% ஆகவும், 2019 முதல் சராசரியாக 3.1% ஆகவும் வளர்ந்துள்ளது.

 

உற்பத்தித் திறனை நோக்கிய செலவினங்கள் : உற்பத்தித் திறனை நோக்கிச் செலவிடுவது பொதுவாக இரண்டு காரணங்களுக்காக அதிகரிக்கிறது. முதலாவதாக, தனியார் வணிகங்கள் திறனை விரிவுபடுத்துகின்றன. ஏனெனில், அவை பொதுமக்களுக்கு அதிகமாக விற்க எதிர்பார்க்கின்றன. இரண்டாவதாக, அரசாங்கங்கள் பௌதீக உள்கட்டமைப்புக்கான மூலதனச் செலவை அதிகரிக்கின்றன. இந்த ஆண்டு, செலவு 6.3% உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நீண்ட காலமாக, இது ஆண்டுக்கு 5.3% மட்டுமே அதிகரித்துள்ளது. உண்மையில், கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) 2014 ஆண்டு முதல் முதலீட்டு வளர்ச்சி குறைந்து வருவதைக் காட்டுகிறது. இது ஆச்சரியமல்ல. ஏனென்றால், தனியார் நுகர்வு மீண்டு வராவிட்டால், வணிகங்கள் வரி சலுகைகளைப் பொருட்படுத்தாமல், புதிய திறனில் முதலீடு செய்யாது. 

 

நிகர ஏற்றுமதி : எந்தவொரு குறிப்பிட்ட ஆண்டிற்கான தரவு எதிர்மறையான அடையாளத்துடன் காண்பிக்கப்படும்போது, இந்தியர்கள் ஏற்றுமதி செய்வதை விட அதிகமாக இறக்குமதி செய்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது. பெரும்பாலான ஆண்டுகளில், நிகர ஏற்றுமதி எதிர்மறை எண்ணாக உள்ளது. எனவே, இந்த பிரிவில் எதிர்மறை வளர்ச்சி விகிதங்கள் ஒரு நல்ல வளர்ச்சியாகும். நடப்பு ஆண்டிலும், சமீப காலத்திலும் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான இந்த இடைவெளி குறைந்துள்ளது. 

 

சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகள் கொள்கை வகுப்பாளர்களுக்கும் குடிமக்களுக்கும் ஒரு உண்மையான சோதனையை வழங்குகின்றன. கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகை வெல்லும் வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்துள்ளது. ஆனால், மேலே உள்ள தரவு பகுப்பாய்வு வெளிப்படுத்துவது போல, இந்தியாவின் சமீபத்திய அதிகரித்த வளர்ச்சி விகிதங்களின் பெரும்பகுதி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் குறிப்பிடத்தக்க பகுதியாக உருவாக்கப்பட்ட ஒரு புள்ளிவிவர மாயையாகும். இந்த மாயை 2020-21 ஆண்டில் GDP சுருக்கத்தின் விளைவாக குறைந்த GDP அடிப்படையால் உருவாக்கப்பட்டது.

 

2019-20 (கோவிட்க்கு முந்தைய ஆண்டு) உட்பட சற்று நீண்ட காலத்தை நாம் பார்க்கும்போது, ​​இந்தியாவின் உண்மையான பொருளாதாரம் ஆண்டுக்கு 5%க்கும் குறைவாகவே வளர்ந்து வருகிறது என்பது தெளிவாகிறது. இது 2047-ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்குத் தேவையான விகிதத்தில் பாதியாகும்.




Original article:

Share:

உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்த பாரத்போல் (Bharatpol) தளம், நாடுகடந்த குற்றங்களை விசாரிக்க எவ்வாறு உதவும்? - மகேந்திர சிங் மன்ரல்

 பாரத்போல் (Bharatpol) என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படும்? அது பல்வேறு விசாரணை அமைப்புகளுக்கு எவ்வாறு உதவும்? 


உள்துறை அமைச்சர் அமித் ஷா  ஜனவரி 7, செவ்வாய்க்கிழமை அன்று  “பாரத்போல்” (Bharatpol) தளத்தை தொடங்கிவைத்தார். இது சட்ட விசாரணை அமைப்புகளுக்கான சர்வதேச ஒத்துழைப்பை சீராக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


பாரத்போல் என்பது சர்வதேச குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுவதற்காக ஒன்றிய புலனாய்வு அமைப்பால் (Central Bureau of Investigation (CBI)) உருவாக்கப்பட்ட தளமாகும். இந்த தளம் ஒன்றிய மற்றும் மாநில அமைப்புகளை பன்னாட்டு முகமையுடன் (Interpol) விரைவாக தொடர்பு கொள்ளவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும் அனுமதிக்கும்.

 

பாரத்போல் (Bharatpol) என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படும்? அது பல்வேறு விசாரணை அமைப்புகளுக்கு எவ்வாறு உதவும்? ஒன்றிய புலனாய்வு  அமைப்பு அதை ஏன் உருவாக்கியது? 


ஒன்றிய புலனாய்வு  அமைப்பு, பன்னாட்டு முகமைக்கான இந்தியாவின் தேசிய பணியகமாகும். இந்திய சட்ட செயலாக்கம் 195 நாடுகளில் உள்ள பன்னாட்டு முகமைகளுடன் இணைக்கிறது. தற்போது, ​​ஒன்றிய புலனாய்வு  அமைப்பு, பன்னாட்டு முகமை அதிகாரிகள் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளுடன் ஒன்றிய அமைப்புகள் மற்றும் மாநில காவல்துறை கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைநகல் மூலம் தொடர்பு கொள்கின்றன. இதனால், அவர்களின் விசாரணையில் அடிக்கடி தாமதம் ஏற்படுகிறது.

 

பாரத்போல், சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பை மிகவும் தடையற்றதாகிறது. 


சைபர் குற்றங்கள், நிதிக் குற்றங்கள், ஆன்லைன் தீவிரமயமாக்கல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனித கடத்தல் போன்ற சர்வதேச குற்றங்கள் அதிகரித்து வருவதால் இந்த இணையதளத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.  இந்த வழக்குகளின், விசாரணைகளுக்கு சர்வதேச உதவி தேவைப்படுகிறது.


ஐந்து முக்கிய அம்சங்கள்: 


ஒருங்கிணைந்த தளம் (Unified Platform): இந்த தளம் ​​ஒன்றிய புலனாய்வு அமைப்பை பன்னாட்டு முகமைகளை (Interpol-NCB-New Delhi) இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட அமலாக்க அதிகாரிகளுடனும், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை ஆணையர்கள் வரை ஒருங்கிணைக்கிறது. 


எளிமைப்படுத்தப்பட்ட கோரிக்கை செயல்முறை (Simplified Request Mechanism): தரப்படுத்தப்பட்ட படிவங்களைப் பயன்படுத்தி 195 பன்னாட்டு முகமை உறுப்பு நாடுகளிடம் இருந்து சர்வதேச உதவியை விரைவாகவும் எளிதாகவும் பெற இந்த தளம் காவல்துறை அதிகாரிகளை அனுமதிக்கிறது. 


விரைவான தகவல் பரப்புதல் (Rapid Information Dissemination): இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட அமலாக்க நிறுவனங்களுடனும் 195 நாடுகளின் குற்றவியல் தகவல்களை விரைவாகப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.


பன்னாட்டு முகமையின் உடனடி அறிவிப்பிகளின் பயன்பாட்டை அதிகப்படுத்துதல் (Increase utilisation of Interpol notices): இந்த  தளம் சிவப்பு வண்ண உடனடி அறிவிப்புகள் (Red Corner Notice)  மற்றும் பிற  பன்னாட்டு முகமை அறிவிப்புகளை உருவாக்குவதை எளிதாக்கும். இது உலகம் முழுவதும் உள்ள குற்றங்கள், குற்றவாளிகள் மற்றும் அவர்களின் சொத்துக்களை கண்காணிக்க உதவும்.


திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி (Capacity Building and Training): இந்த இணையதளம் தொடர்புடைய ஆவணங்கள், வார்ப்புருக்கள் (templates) மற்றும் பயிற்சி ஆதாரங்களுக்கான அணுகலை வழங்குகிறது. இதன் மூலம் அவர்கள் வெளிநாடுகளில் விசாரணை நடத்தவும், பன்னாட்டு முகமை மூலம் வெளிநாட்டு உதவியை பெறவும் உதவும்.


புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தப்பியோடியவர்களை பிடிக்க இந்திய புலனாய்வு அமைப்புகள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டிய நேரம் இது என்று கூறினார். உலகளாவிய சவால்கள் மற்றும் உள் அமைப்புகளை மேம்படுத்துவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பாரத்போல் முக்கியத்தை  அவர் விளக்கினார். பன்னாட்டு முகமையில் உள்ள 195 நாடுகளில் இருந்து ஒன்றிய மற்றும் மாநில முகமைகள் தேவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும் பெறவும் புதிய தளம் உதவும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விரிவாக விளக்கினார். 


மேலும், இதில் இணைத்தல் (Connect), பன்னாட்டு முகமை அறிவிப்புகள் (INTERPOL Notices), குறிப்புகள் (References), தொலைப்பரப்பு (Broadcast) மற்றும் ஆதாரங்கள் (Resources) என ஐந்து முக்கிய தொகுதிகள் உள்ளன.  

"இணைத்தல் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட அமலாக்க முகவர்களும் பன்னாட்டு முகமையின் உடன் நெருக்கமாக செயல்படும் வாய்ப்பு உருவாகும். மேலும், இந்த அமைப்பு விரைவாகவும் பாதுகாப்பாகவும் பன்னாட்டு முகமை அறிவிப்புகளுக்கான கோரிக்கைகளை அனுப்பும். இது இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள குற்றவாளிகளைக் கண்டறிய உதவும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டார். 


பன்னாட்டு முகாமையில் உள்ள 195 உறுப்பு நாடுகளின் உதவிக்கான கோரிக்கைகள் தொலைப்பரப்பு தொகுதியில் கிடைக்கும். பின்பு, ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை எளிதாகப் பரிமாறிக்கொள்ளவும் நிர்வகிக்கவும் ஆதாரங்கள் தொகுதியானது பயன்படுகிறது.




Original article:

Share:

அரசியலமைப்பு அமைப்புகளுக்கும் சட்டப்பூர்வ அமைப்புகளுக்கும் இடையிலான வேறுபாடு -நிதேந்திர பால் சிங்

 அரசியலமைப்பு அமைப்புகள்:


  • அரசியலமைப்பு அமைப்புகள் (Constitutional bodies) என்பது அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட அமைப்புகளாகும். இத்தகைய அமைப்புகளின் அமைப்பு முறை, அதிகாரங்கள் மற்றும் கடமைகள் அதில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. அமைப்புகள் நிர்வாகப் பணிகளுக்காக மட்டும் உருவாக்கப்படவில்லை. இந்த அமைப்புகள்  அரசாங்க அதிகாரத்தின் மீதான சரிபார்ப்புகள் மற்றும் சமநிலையுடன்  செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளன.


  • இந்திய தேர்தல் ஆணையம், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC), நிதி ஆணையம், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்(CAG), பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியின வகுப்பினர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையங்கள் மற்றும் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் ஆகியவை அரசியலமைப்பு அமைப்புகளின் எடுத்துக்காட்டுகள் ஆகும்.



சட்டப்பூர்வ அமைப்புகள் (Statutory bodies):


  • நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் சட்டப்பூர்வ அமைப்புகள் (Statutory bodies) முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த அமைப்புகள் நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களின் சட்டத்தால் நிறுவப்பட்ட அமைப்புகளாகும். அவை அரசியலமைப்பிலிருந்து நேரடியாக இல்லாமல் சட்டத்திலிருந்து தங்களுக்கு தேவையான அதிகாரத்தைப் பெறுகின்றன.


சட்டப்பூர்வ அமைப்புகளின் எடுத்துக்காட்டுகள்: 


  • இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT), இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI), மத்திய கண்காணிப்பு ஆணையம் (CVC), பல்கலைக்கழக மானியக் குழு (UGC), தேசிய மகளிர் ஆணையம் (NCW), இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகியவை ஆகும்.


சட்டப்பூர்வமற்ற அமைப்புகள் (Non-statutory bodies):


  •  சட்டப்பூர்வமற்ற அமைப்புகள், நிர்வாக அல்லது ஆலோசனை அமைப்புகள் (executive or advisory bodies) என்றும் அழைக்கப்படுகின்றன. அவை நிர்வாக உத்தரவுகள் அல்லது நிர்வாகத் தீர்மானங்களால் உருவாக்கப்படுகின்றன. அவை குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், சட்டப்பூர்வ அமைப்புகள் போன்று அதற்கு சட்டப்பூர்வ ஆதரவு இல்லை.


  • சட்டப்பூர்வமற்ற அமைப்புகளின் எடுத்துக்காட்டுகளில் திட்டக் குழு இப்போது இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனமாக (National Institution for Transforming India (NITI Aayog)) மாற்றப்பட்டுள்ளது.  பணிக்குழுக்கள் மற்றும் சமூக மேம்பாடு அல்லது பொருளாதார சீர்திருத்தம் போன்ற சிக்கல்களைச் சமாளிக்க உருவாக்கப்பட்ட நிபுணர் குழுக்கள் ஆகியவை இதில் அடங்கும்.



Original article:

Share:

மக்களவை பற்றி… - நிதேந்திர பால் சிங்

 

  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 79வது பிரிவு மக்களவையை நாடாளுமன்றத்தின் கீழ் சபை (lower house of parliament) என்று கூறுகிறது. மக்களவை வயது வந்தோருக்கான வாக்குரிமை மூலம் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டுள்ளது.


  • அரசியலமைப்பின்படி, மக்களவையில் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 552 ஆகும்.


  • அரசியலமைப்பின் 81வது பிரிவின்படி, 331வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிவிலக்குகளுடன், மக்களவையில் குறிப்பிடப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கியிருக்க வேண்டும்.


 (அ) ​​மாநிலங்களில் உள்ள பிராந்திய தொகுதிகளில் இருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 530 உறுப்பினர்கள் மக்களவையில் இருக்க வேண்டும்.

 (ஆ)  யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்த, பாராளுமன்றம் முடிவு செய்யும் விதத்தில் 20 உறுப்பினர்கள் வரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.


  • அக்டோபர் 25, 1951 ஆண்டு முதல் பிப்ரவரி 21, 1952 ஆண்டு வரை நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மக்களவை ஏப்ரல் 17, 1952 ஆண்டு  முதலில் உருவாக்கப்பட்டது.


  • தற்போது, ​​மக்களவையில் 543 உறுப்பினர்கள் உள்ளனர். அதன் பதவிக்காலம்  ​​மக்களவை முன்னதாகவே கலைக்கப்படாவிட்டால் முதல் கூட்டம் தொடங்கியதிலிருந்து ஐந்து ஆண்டுகள் நீடிக்கும். 


  • அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டால், நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் மக்களவையின் காலத்தை நீட்டிக்க முடியும். இந்த நீட்டிப்பு ஒரு வருடம் வரை நீடிக்கும் மற்றும் அவசரநிலை முடிந்த பிறகு ஆறு மாதங்களுக்கு மேல்  நீடிக்கக்கூடாது.



Original article:

Share:

பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்கள் அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் பெரும் சவால்களை கொண்டுள்ளது. - மிலிந்த் குமார் சர்மா

 விரைவுபடுத்தப்பட்ட மற்றும் நீட்டிக்கப்பட்ட பட்டப்படிப்புகள் இந்தியக் கல்வி முறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. இருப்பினும், இந்த மாற்றங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன. 

 

சமீபத்திய, பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission (UGC)) வழிகாட்டுதல்கள் இந்தியாவில் உயர்கல்வியில் பெரிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. மற்ற சீர்திருத்தங்களுக்கிடையில், பல்கலைக்கழக மானியக் குழு இளங்கலை மாணவர்களுக்கு விரைவுபடுத்தப்பட்ட பட்டப்படிப்பு திட்டம் (accelerated degree programme) மற்றும் நீட்டிக்கப்பட்ட பட்டப்படிப்பு திட்டத்தை (extended degree programme) அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ மாணவர்கள் தங்களது பட்டப்படிப்பை முடிக்க அனுமதிக்கும். 

 

நன்மைகள் மற்றும் சவால்கள் 


இந்தப் புதிய அணுகுமுறை இந்தியாவில் கல்வியை உலக அளவில் போட்டித்தன்மையுடன் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மாணவர்களுக்கு அவர்களின் படிப்பைத் திட்டமிட அதிக சுதந்திரத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் அளிக்கிறது. இது இந்தியாவின் நிலையான கல்வி முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றமாகும்.

 

விரைவுபடுத்தப்பட்ட பட்டப்படிப்பு, விரைவாக பணிபுரிய விரும்பும் மாணவர்களுக்கு பயனளிக்கிறது.  ஆரம்பகால தொழில்முறை அனுபவத்தைப் பெற அல்லது கல்விக் கட்டணத்தில் பணத்தைச் சேமிக்க விரும்புவோருக்கும் இது உதவியாக இருக்கும். நீட்டிக்கப்பட்ட பட்டப்படிப்புத் திட்டம் மாணவர்களுக்கு வெவ்வேறு பாடங்களை ஆராயவும், பயிற்சி பெறவும், ஆராய்ச்சித் திட்டங்களில் பணிபுரியவும், பயணம் செய்யவும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், தனிப்பட்ட அல்லது தொழில்முறை கடமைகளுடன் சமநிலை ஆய்வுகளை மேற்கொள்ளவும் அதிக நேரத்தை வழங்குகிறது. தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) 2020 பலதரப்பட்ட கற்றல் முறையை ஆதரிக்கிறது. இந்த அணுகுமுறையால் மாணவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் திறமையான பட்டதாரிகளை உருவாக்க முடியும். இது அவர்களுக்கு நுண் திறன்கள் (soft skills), படைப்பு திறன்கள் மற்றும் புதுமையான யோசனைகளை வளர்க்க உதவும்.

 

கூடுதலாக, சீர்திருத்தங்கள் இந்தியாவில் இளங்கலைக் கல்வியை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன் மூலம் இந்திய மாணவர்கள் இந்தியாவிற்குள்ளும் வெளிநாடுகளுக்கும் செல்ல அதிக வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நெகிழ்வான கடன் அமைப்பு மாணவர்களை சுயமாக முன்னேற அனுமதிக்கிறது. மாணவர்கள் தங்கள் தேவைகள், ஆர்வங்கள் மற்றும் தொழில் இலக்குகளுக்கு ஏற்றவாறு தங்கள் படிப்பை மேற்கொள்ளலாம். இந்த சுதந்திரம் மாணவர்களுக்கு முக்கியமானது.

 

இருப்பினும், இதில் சவால்கள் உள்ளன. விரைவுபடுத்தப்பட்ட  பட்டப்படிப்பு திட்டம் கல்வியின் ஆழம் மற்றும் தரம் பற்றிய கேள்விகளை  எழுப்புகிறது. குறைந்த நேரத்தில் ஒரே பாடத்திட்டத்தை மாணவர்கள் கற்றுக்கொண்டால், மாணவர்கள் முக்கியமான கருத்துக்களை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை எனில், அது மாணவர்களின் கற்றலை பாதிக்கும். மறுபுறம், நீட்டிக்கப்பட்ட பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்க அதிக நேரம் எடுக்கலாம். இது அவர்களின் பட்டத்தின் மதிப்பைக் குறைக்கலாம்.

 

புதிய கட்டமைப்பை சரிசெய்தல்


புதிய கட்டமைப்பிற்கு ஏற்ப தொழில்நுட்பக் கல்வி மிகவும் கடினமாக உள்ளது. பொறியியல் திட்டங்களுக்கு கொள்கை மற்றும் நடைமுறை திறன்கள் இரண்டையும் பற்றிய ஆழமான புரிதல் தேவை. இடைநிலைக் கல்வி மாணவர்களுக்கு உதவும் அதே வேளையில், பொறியியல் படிப்புகள் மாணவர்களுக்கு குறிப்பிட்ட தொழில்களுக்கு சிறப்பு கல்வியை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன.


விரைவுபடுத்தப்பட்ட பொறியியல் பட்டங்கள் தொழில்நுட்பக் கற்றலை எளிதாக்கும். பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் மேம்பட்ட பொறியியல் கொள்கைகள் போன்ற பாடங்களின் ஆழமான ஆய்வு தேவை. இந்தப் பாடங்களுக்கான நேரத்தைக் குறைப்பது, நடைமுறைத் திட்டங்கள், ஆய்வகப் பணிகள், பயிற்சிகள் மற்றும் பயிற்சி அமர்வுகள் போன்ற முக்கியமான நடவடிக்கைகளுக்கான நேரத்தைக் குறைக்கலாம். இந்தத் துறையில் தேவைப்படும் தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்கு இந்த நடவடிக்கைகள் முக்கியமானவை. பொறியியல் மாணவர்கள் பெரும்பாலும் நிகழ்நேர உலக பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். பட்டப்படிப்புகளை விரைவாக முடிக்க வேண்டும் என்ற அழுத்தம், அவர்களின் தொழிலுக்குத் தேவையான பிரச்சனைகளைத் தீர்க்கும் நுட்பங்களில் தேர்ச்சி பெறுவதை கடினமாக்கும்.


மறுபுறம், பொறியியல் துறையில் நீட்டிக்கப்பட்ட பட்டப்படிப்பை விரும்பும் மாணவர்களுக்கு நிபுணத்துவம், ஆராய்ச்சி மற்றும் நடைமுறை அனுபவத்தைப் பெற அதிக வாய்ப்புகளை அளிக்கும். இருப்பினும், இது மாணவர்களுக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்தலாம் மற்றும் ஏற்கனவே பொருளாதார தடைகளை எதிர்கொள்பவர்களை தன்னம்பிக்கை இழக்கச் செய்யலாம்.

 

நடைமுறை சிக்கல்கள் 


விரைவுபடுத்தப்பட்ட மற்றும் நீட்டிக்கப்பட்ட பட்டப்படிப்பு வடிவங்களுக்கு ஏற்ப மாறுவதற்கு பெரிய மாற்றங்கள் தேவை. பல்கலைக்கழகங்கள் தங்கள் பாடத்திட்டங்கள், கற்பித்தல் முறைகளை மறுசீரமைக்க வேண்டும் மற்றும் தொடர்புடைய அமைப்புகளிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும். ஏற்கனவே, குறைந்த வளங்களைக் கொண்ட பல்கலைக்கழகங்களுக்கு இது சவாலாக இருக்கலாம். கூடுதலாக, இந்த சீர்திருத்தங்களுடன் வரும் டிஜிட்டல் கல்வியை நோக்கிய மாற்றம் டிஜிட்டல் பிரிவை அதிகரிக்கலாம்.


விரைவுபடுத்தப்பட்ட மற்றும் நீட்டிக்கப்பட்ட பட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு, மாணவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும், அவற்றை மதிப்பீடு செய்வதற்கும், நன் மதிப்பு பரிமாற்றங்களை நிர்வகிப்பதற்கும், கல்விச் சாதனைகளை அங்கீகரிப்பதற்கும் அமைப்புகள் தேவைப்படுகின்றன. இந்தப் பணிகளைக் கையாள கல்வி நிறுவனங்கள் வலுவான நிர்வாக அமைப்புகளை உருவாக்க வேண்டும்.


இந்தச் சீர்திருத்தங்களின் சமத்துவத்தன்மையின் தாக்கம் கவலைக்குரியது. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள், போதிய ஆதரவு இல்லாத காரணத்தினால் புதிய முறைக்கு ஏற்ப மாறுவதற்கு அவர்கள் சிரமப்படுவார்கள். அவர்களால் கல்வியைத் தொடர முடியவில்லை என்றால் பட்டப்படிப்பை கைவிடலாம்.


புதிய கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு உதவுவது மற்றொரு சவால். நெகிழ்வான, இடைநிலைப் படிப்புகளை நிர்வகிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி தேவை. இந்த சீர்திருத்தங்களின் வெற்றியானது மாணவர்களின் மாற்றியமைக்கும் திறன் மற்றும் அவர்களை வழிநடத்தும் ஆசிரியர்களின் திறன் ஆகிய இரண்டையும் சார்ந்துள்ளது.


இந்த சவால்களை கவனமாக திட்டமிடுதல், முறையான முதலீடு, சரியான நேரத்தில் பணியாளர்களை பணியமர்த்துதல் மற்றும் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றின் மூலம் தீர்க்கப்பட்டால், புதிய சீர்திருத்தங்கள் மூலம் வலுவான கல்வி முறையை உருவாக்க முடியும். இது சந்தை தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்து 2047 ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா (Viksit Bharat) என்ற இலக்கை அடைய இந்தியாவிற்கு உதவும்.


மிலிந்த் குமார் சர்மா, ஜோத்பூரில் உள்ள முக்னீரம் பங்கூர் நினைவு பல்கலைக்கழகத்தின் உற்பத்தி மற்றும் தொழில்துறை பொறியியல் துறையில் ஆசிரியராக உள்ளார்.




Original article:

Share: