பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவீடாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஏன் கருதப்படுகிறது? -மீரா மல்ஹான் மற்றும் அருணா ராவ்

 பொருளாதார ஆய்வறிக்கை 2024-25ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில் 6.3-6.8 சதவீத வளர்ச்சி விகிதத்தைக் கணித்துள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை அளவீடான மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) ஆராய்வதை முக்கியமாக்குகிறது.


2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.3% முதல் 6.8% வரை வளர்ச்சியடையும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் முன்வைத்த இந்த மதிப்பீடு 2024-25 பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் ஆண்டுகளில், வெளிப்புற காரணிகளைவிட உள்நாட்டு காரணிகளே பொருளாதார வளர்ச்சியை அதிகம் இயக்கும் என்பதை இந்த கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது.


பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவீடு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆகும். ஜிடிபி என்றால் என்ன? என்பதைப் புரிந்துகொள்வோம். அது ஏன் பொருளாதாரத்திற்கான அளவீடாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது?


மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அளவிடும் ஒரு முக்கியமான பெரிய பொருளாதார குறிகாட்டியாகும். இது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அளவிடுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சியை உலகளவில் உள்ள மற்றவற்றுடன் ஒப்பிடுவதற்கான எளிய வழியாகும். இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சில வரம்புகள் உள்ளன. இது ஒரு சராசரி எண் குறிகாட்டியாகும். இது ஏற்றத்தாழ்வுகள், வேலையின்மை, கிராமப்புற-நகர்ப்புற பிளவு அல்லது வருமான வேறுபாடுகளைக் காட்டாது. இந்தக் குறைபாடுகள் இருந்தபோதிலும், GDP அளவிடப்படும் முறையின் காரணமாக இன்னும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவீடாகவே உள்ளது. 


GDP என்பது ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் புவியியல் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படும் அனைத்து இறுதி பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பின் கூட்டுத்தொகை ஆகும். ஒரு நாடு ஒவ்வொரு ஆண்டும் q1 முதல் qn வரையிலான அளவுகளைக் கொண்டு “n” பொருட்களை உற்பத்தி செய்தால், அவற்றின் சந்தை விலைகள் p1 முதல் pn வரை குறிக்கப்படுகின்றன.


மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிட, ஒவ்வொரு பொருள் அல்லது சேவையின் விலையையும் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த அளவால் பெருக்கி மற்றும் அனைத்து பொருட்களிலும் கூட்டி கணக்கிடப்படுகிறது. இது ஒரு கணித வடிவத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:


மொத்த உள்நாட்டு உற்பத்தி = (q1×p1)+(q2×p2)+(q3×p3)+...+(qn×pn)


இருப்பினும், சந்தை மதிப்புகளைப் பயன்படுத்துவது பொருளாதார அளவீட்டிற்கான தரப்படுத்தப்பட்ட மற்றும் வசதியான முறையை வழங்குகிறது. இது நன்மைகள் மற்றும் தீமைகளையும் ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. 



நன்மைகள்


பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பு என்பது அனைத்து வரிகளையும் உள்ளடக்கிய இறுதி நுகர்வோருக்கு அவை விற்கப்படும் விலைகளைக் குறிக்கிறது. சந்தை மதிப்பைப் பயன்படுத்துவது சில நன்மைகளைக் கொண்டுள்ளது. அவை, 


a) பொருட்கள் மற்றும் சேவைகளின் ஒருங்கிணைப்பு : வெவ்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பைக் கூட்டுவதற்கு விலைகள் ஒரு பொதுவான அலகைக் (common unit) கொண்டுள்ளது. இல்லையெனில் அவை வெவ்வேறு இயற்பியல் அலகுகளில் அளவிடப்படுகின்றன. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒற்றை மதிப்பாகக் குறிப்பிட உதவுகிறது


b) பொருளாதார முக்கியத்துவம் : சந்தை விலைகள் பொருளாதாரத்தில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் சேவைகள் எவ்வளவு முக்கியம் என்பதைக் குறிக்கின்றன.


தீமைகள்  


a) சந்தைப்படுத்தப்படாத பொருட்கள் மற்றும் சேவைகளை விலக்குதல் : வீடு கட்டுதல், குழந்தை வளர்ப்பு மற்றும் சுத்தமான காற்று போன்ற சில பொருட்கள் மற்றும் சேவைகள் முறையான சந்தைகளில் விற்கப்படுவதில்லை. இதன் விளைவாக, மாசுபாட்டைக் குறைத்தல் போன்ற இவற்றை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பிரதிபலிக்கவில்லை. இந்தப் பங்களிப்புகளைச் சேர்க்க தகுந்த மாற்றங்களைச் செய்ய முடிந்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு அதிகரிக்கும் மற்றும் அதிகப் பிரதிநிதித்துவமாக இருக்கும்.


b) சந்தைப்படுத்தப்படாத பொருட்கள் மற்றும் சேவைகளின் பகுதியளவு சேர்க்கை : சில சந்தைப்படுத்தப்படாத பொருட்கள் மற்றும் சேவைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பகுதியளவு சேர்த்தல். இதற்கு ஒரு உதாரணம், முறைசாரா பொருளாதாரம் (underground economy or shadow economy) அல்லது கருப்புப் பொருளாதாரம் (black economy) ஆகும். இதில் சட்ட மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் இரண்டும் அடங்கும்.


— சட்ட நடவடிக்கைகள் : இவை வரிகளைத் தவிர்ப்பதற்காக அல்லது விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருப்பதற்காக அரசாங்க பதிவுகளிலிருந்து மறைக்கப்பட்ட பரிவர்த்தனைகள்.


— சட்டவிரோத நடவடிக்கைகள் : இவற்றில் போதைப்பொருள் கடத்தல், சூதாட்டம் மற்றும் விபச்சாரம் போன்றவை அடங்கும். முறைசாரா பொருளாதாரம் (shadow economy) பெரியதாக இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்திக் கணக்கீடுகளில் இந்த நடவடிக்கைகளைக் கணக்கிடாதது பொருளாதார உற்பத்தியைக் கணிசமாகக் குறைத்து மதிப்பிடும்.


c) அரசு வழங்கும் சேவைகள் : சந்தையை கடந்து செல்லாத ஒரு மிக முக்கியமான கூறு, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, பொது சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அரசாங்கத்தால் வழங்கப்படும் சேவைகளின் மதிப்பு ஆகும். எனவே, இந்த அரசு சேவைகளுக்கு சந்தை மதிப்புகள் இல்லாததால், அவை நேரடியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கப்படவில்லை. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியை குறைத்து மதிப்பிடுவதற்கு வழிவகுக்கும். இந்த சேவைகளை அவற்றின் வழங்கல் செலவில் மதிப்பிடுவதே தீர்வாகும். இது "காரணி செலவு" (factor cost) என்று அழைக்கப்படுகிறது.


மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, அளவீட்டில் இறுதி மற்றும் இடைநிலை பொருட்களுக்கு இடையிலான வேறுபாட்டிற்கும் இதே போன்ற கொள்கை பொருந்தும்.


இறுதி மற்றும் இடைநிலை பொருட்கள் 


GDP என்பது புதிதாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு மட்டுமே அடங்கும். இவை, GDP கணக்கிடப்படும் ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், பொதுவாகவே நிதியாண்டாக (financial year) எடுத்துக் கொள்ளப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு வீட்டின் மறுவிற்பனை விலை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கப்படவில்லை, ஏனெனில் அந்த ஆண்டில் வீடு கட்டப்படவில்லை. இருப்பினும், வீட்டை விற்பனை செய்வதில் ரியல் எஸ்டேட் முகவர் வழங்கும் சேவைகளின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏனெனில், முகவரின் வருமானம் அந்த ஆண்டில் புதிதாக உருவாக்கப்படுகிறது.


புதிய பொருட்கள் அல்லது சேவைகளின் உற்பத்தி இல்லாமல் பணம் அல்லது பொருட்கள் கைமாறும் அனைத்து பரிவர்த்தனைகளையும் GDP புறக்கணிக்கிறது. எடுத்துக்காட்டாக, பத்திரங்கள் மற்றும் பங்குகளின் விற்பனை கணக்கிடப்படுவதில்லை. ஏனெனில் அவை உண்மையான சொத்துக்களைவிட காகித சொத்துக்களின் பரிமாற்றங்கள் ஆகும். இதேபோல், பங்குகள் மற்றும் பத்திரங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபம் அதே காரணத்திற்காக விலக்கப்படுகிறது.


மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இறுதிப் பொருட்கள் மற்றும் சேவைகள் மட்டுமே அடங்கும். பிற பொருட்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் இடைநிலை பொருட்கள், அவற்றை இரண்டு முறை எண்ணுவதைத் தவிர்க்க விலக்கப்படுகின்றன. சில நேரங்களில், இறுதி மற்றும் இடைநிலை பொருட்களுக்கு இடையிலான வேறுபாட்டைக் கூறுவது கடினம். எடுத்துக்காட்டாக, ஒரு தச்சரால் வாங்கப்பட்ட ஒரு கருவி ஒரு இடைநிலைப் பொருளாகும். ஏனெனில், அது மற்ற இறுதிப் பொருட்களை உருவாக்கப் பயன்படுகிறது. இருப்பினும், அந்தக் கருவி எதிர்கால ஆண்டுகளில் உற்பத்திக்குப் பயனுள்ளதாக இருந்தால், அது ஒரு மூலதனப் பொருளாகக் கருதப்படுகிறது. இது ஒரு சிறப்பு வகை இறுதிப் பொருளாகும்.


மற்றொரு உதாரணம் மின்சாரம் : ஒரு குடும்பத்தால் நுகரப்படும் போது, ​​அது இறுதிப் பொருளாகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஒரு தொழிற்சாலை உற்பத்தி செயல்பாட்டில் அதைப் பயன்படுத்தும்போது, ​​அது ஒரு இடைநிலைப் பொருளாகக் கருதப்படுகிறது. இதேபோல், சரக்கு முதலீடு (inventory investment) என்பது வருடத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆனால் அந்த ஆண்டில் விற்கப்படாத பொருட்களைக் குறிக்கிறது. இந்தப் பொருட்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்கீடுகளில் இறுதிப் பொருளாகவும் கருதப்படுகின்றன.


எனவே, சந்தை மதிப்புகளைப் பயன்படுத்துவது பொருளாதார செயல்பாட்டை அளவிடுவதை நடைமுறை மற்றும் சீரானதாக மாற்றும் அதே வேளையில், இறுதி மற்றும் இடைநிலைப் பொருட்களுக்கு இடையில் வேறுபாடு காண்பது கணக்கீடுகளில் துல்லியத்தை உறுதிப்படுத்த உதவுகிறது.




Original article:

Share:

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு திட்டம் -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• 18,693 உயர்நிலை கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளை (Graphics processing unit (GPU)) வழங்க அரசாங்கம் 10 நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. இயந்திர கற்றல் கருவிகள் மற்றும் அடிப்படை மாதிரிகளை உருவாக்குவதற்கு இந்த GPUகள் தேவைப்படுகிறது.


• தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள்: யோட்டா (ஹிரானந்தனி குழுமத்தால் ஆதரிக்கப்படுகிறது), ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ், E2E நெட்வொர்க்குகள், CMS கணினிகள், Ctrls டேட்டாசென்டர்கள், லோகுஸ் எண்டர்பிரைஸ் சொல்யூஷன்ஸ், NxtGen டேட்டாசென்டர், ஓரியண்ட் டெக்னாலஜிஸ் மற்றும் வென்சிஸ்கோ டெக்னாலஜிஸ் ஆகும்.


• யோட்டா மொத்த GPUகளில் கிட்டத்தட்ட பாதியை வழங்கும், 9,216 அலகுகளை வழங்கும்.


• அரசாங்கம் விரைவில் ஒரு பொதுவான கணினி வசதியைத் தொடங்கும். இந்த வசதி தொடக்க நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தேவையான கணினி சக்தியை அணுக அனுமதிக்கும்.


• உயர்நிலை GPUகளை அணுகுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 150 செலவாகும். அதே நேரத்தில் குறைந்த விலை GPUகளைப் பயன்படுத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 115.85 செலவாகும்.


• இந்த சேவைகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்ற, இறுதிப் பயனர்களுக்கு மொத்த விலையில் 40% மானியத்தை அரசாங்கம் வழங்கும்.


• இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு திட்டத்தின்கீழ், அரசாங்கம் முதல் சுற்று நிதியுதவிக்காக 18 செயற்கை நுண்ணறிவு விண்ணப்பங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் விவசாயம், கற்றல் குறைபாடுகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.


உங்களுக்குத் தெரியுமா:


• ஜனவரி 27 திங்கட்கிழமை, சீன செயற்கை நுண்ணறிவு மொபைல் செயலி (DeepSeek-V3 மாதிரியால் இயக்கப்படுகிறது) ChatGPT-ஐ முந்தி அமெரிக்காவில் Apple-ன் App Store-ல் சிறந்த இலவச செயலியாக மாறியது.


• 2015ஆம் ஆண்டில், லியாங் வென்ஃபெங், High-Flyer-ஐ நிறுவினார். இது ஒரு சீன அளவு ஹெட்ஜ் நிதியாகும். இது வர்த்தக வழிமுறைகள் மற்றும் புள்ளிவிவர மாதிரிகளைப் பயன்படுத்தி சந்தை வடிவங்களைக் கண்டறிந்து தானாகவே பங்குகளை வாங்க அல்லது விற்கிறது.


• லியாங் High-Flyer-ன் கீழ் Fire-Flyer என்ற ஆழமான கற்றல் ஆராய்ச்சி கிளையை நிறுவினார். நிதித் தரவை பகுப்பாய்வு செய்வதற்கும் சிக்கலான செயல்பாடுகளை ஆதரிப்பதற்கும் சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்க கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளை குவித்தார்.


• 2023ஆம் ஆண்டில், லியாங் நிதியின் வளங்களை DeepSeek என்ற புதிய நிறுவனத்திற்கு மாற்றினார். அடிப்படை AI மாதிரிகளை உருவாக்கி இறுதியில் செயற்கை பொது நுண்ணறிவை (artificial general intelligence (AGI)) அடைவதே DeepSeek-ன் குறிக்கோளாகும்.


• திறந்த மூலக் கொள்கைகளை ஆதரிக்கும் சீனாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் DeepSeek ஒன்றாகும்.


• DeepSeek-ன் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் நிபுணர்களின் கலவை (Mixture-of-Experts (MoE)) கட்டமைப்பு, மல்டி-ஹெட் லேட்டன்ட் அட்டென்ஷன், வலுவூட்டல் கற்றல் மற்றும் வடிகட்டுதல் போன்ற மேம்பட்ட நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.


• IndiaAI மிஷனின் கீழ், அரசாங்கம் 10,000-க்கும் மேற்பட்ட GPUகளின் கணினி திறனை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 100 பில்லியனுக்கும் அதிகமான அளவுருக்கள் கொண்ட அடிப்படை மாதிரிகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது, முக்கிய இந்திய மொழிகளில் தரவுத்தொகுப்புகளில் பயிற்சி பெற்றது, சுகாதாரம், விவசாயம் மற்றும் நிர்வாகத்தில் கவனம் செலுத்துகிறது.


• 50 அமைச்சகங்களில் AI க்யூரேஷன் யூனிட்கள் (ACUகள்) உருவாக்கப்படும். இந்தத் திட்டத்தில் AI சந்தையை உருவாக்குவதும் அடங்கும். இந்த சந்தையானது AI பயன்பாடுகளில் பணிபுரிபவர்களுக்கு AI-ஐ ஒரு சேவையாகவும் முன் பயிற்சி பெற்ற மாதிரிகளாகவும் வழங்கும்.


• செயற்கை நுண்ணறிவு கணினி உள்கட்டமைப்பு பொது-தனியார் கூட்டாண்மை மாதிரி மூலம் செயல்படுத்தப்படும். அரசாங்கம் 50% நம்பகத்தன்மை இடைவெளி நிதியை வழங்கும். கணினி செலவு குறைந்தால், வரவு செலவு அறிக்கையை  மீறாமல், அதிக தேவையை பூர்த்தி செய்ய தனியார் நிறுவனம் அதிக கணினி திறனைச் சேர்க்க வேண்டும். கணினி உள்கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் சார்பில்  ரூ.4,564 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.




Original article:

Share:

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் -குஷ்பூ குமாரி

 ஜனவரி 24 அன்று நிதி அமைச்சகம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (Unified Pension Scheme (UPS)) அறிவித்தது. இது தேசிய ஓய்வூதிய முறையின் (National Pension System (NPS)) ஒரு பகுதியாகும். இந்தத் திட்டம் ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு சேர்ந்த ஒன்றிய அரசு ஊழியர்களுக்கானது. இந்தத் திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏப்ரல் 1 முதல், இது 23 லட்சத்திற்கும் மேற்பட்ட ஒன்றிய  அரசு ஊழியர்கள் இந்தத் திட்டத்தின்  மூலம் பயன்பெறவுள்ளனர்.


முக்கிய அம்சங்கள்:


1. ஜனவரி 1, 2004 அன்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme (OPS)) தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme (NPS)) மாற்றியது. பல அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில், NPS குறைந்த உறுதியான வருமானத்தை வழங்கியது மற்றும் OPS-ஐப் போல் இல்லாமல் ஊழியர்கள் பங்களிக்க வேண்டும் என்று கோரியது. 2023ஆம் ஆண்டில், அப்போது நிதிச் செயலாளராக இருந்த டி.வி.சோமநாதன் தலைமையில் அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது. குழுவின் பரிந்துரைகளின் விளைவாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அறிவிக்கப்பட்டது. 


2. பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் போலவே, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமும்  உத்தரவாதமான ஓய்வூதியத்தை வழங்குகிறது. இது அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு நிலைத்தன்மை, கண்ணியம் மற்றும் நிதிப் பாதுகாப்பை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. NPS போல் இல்லாமல், ஓய்வு பெற்றவர்களுக்கு UPS நிலையான ஓய்வூதியத்தை உத்தரவாதம் செய்கிறது. இது NPS மீதான ஒரு முக்கிய விமர்சனமாகும்.


ஒருங்கிணைந்த ஓய்வூதியத்  திட்டத்தின்  முக்கிய அம்சங்கள்:


i. இந்தத் திட்டம் "உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்தை" (Assured Pension) வழங்குகிறது. இது பணியாளர் ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடைசி 12 மாதங்களில் சம்பாதித்த சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% ஆகும். அவர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவை செய்திருந்தால் சேவை செய்திருந்தால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை தேவைப்படும் நிலையில், பணிபுரிந்த ஆண்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து ஓய்வூதியம் குறைவாக இருக்கும்.


ii. உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம்: குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு UPS மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது.


iii. உறுதியளிக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் : ஓய்வு பெற்றவர் இறந்தால், அவரது குடும்பத்தினர் ஓய்வு பெற்றவர் பெறும் ஓய்வூதியத்தில் 60% பெறுவார்கள்.


iv. பணவீக்கக் குறியீடு : மூன்று வகையான ஓய்வூதியங்களுக்கான அகவிலைப்படி, தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது. இது சேவை செய்யும் தொழிலாளர்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.


v. ஓய்வூதியத்தில் மொத்த தொகை: பணிக்கொடைக்கு கூடுதலாக, ஊழியர்கள் ஓய்வு பெறும்போது மொத்த தொகையும் பெறுவார்கள். இது ஒவ்வொரு ஆறு மாத பணிக்காலத்திற்கும், ஓய்வு பெறும்போது அவர்களின் மாதாந்திர ஊதியம் + அகவிலைப்படியில் பத்தில் ஒரு பங்காக இருக்கும். இந்தக் கட்டணம் உத்தரவாதமான ஓய்வூதியத்தைப் பாதிக்காது.


vi. *கட்டாய ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதிய உத்தரவாதம்: UPS அடிப்படை விதி 56 (j)-ன் கீழ் கட்டாய ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் பொருந்தும், இது அபராதமாகக் கருதப்படாது. இருப்பினும், பணிநீக்கம் செய்யப்பட்ட, அல்லது ராஜினாமா செய்த ஊழியர்களுக்கு உறுதியான ஊதியம் கிடைக்காது. மேலும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அவர்களுக்குப் பொருந்தாது.


vii. திட்டத்திற்கான பங்களிப்பு: UPS இரண்டு நிதிகளைக் கொண்டிருக்கும். ஒன்று ஊழியர் மற்றும் அதனுடன் தொடர்புடைய மத்திய அரசின் பங்களிப்புகளுடன் கூடிய ஒரு தனிப்பட்ட நிதி. மற்றொன்று ஒன்றிய அரசின் பங்களிப்புடன் கூடிய ஒரு கூடுதல் நிதி. தொகுப்பு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியம் + அகவிலைப்படியில்  10% பங்களிப்பார்கள். மேலும்,  ஒன்றிய அரசு இந்தப் பங்களிப்பை ஈடுகட்டும். அனைத்து ஊழியர்களின் அடிப்படை ஊதியம் + அகவிலைப்படியில்  8.5% நிதியை  மூலதனத்திற்கு (pool corpus)  ஒன்றிய அரசு பங்களிக்கும்.


viii. முதலீட்டுத் தேர்வு: ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட நிதி மூலதனத்தை  எவ்வாறு முதலீடு செய்வது என்பதைத் தேர்வு செய்யலாம். இந்தத் தேர்வுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (Pension Fund Regulatory and Development Authority (PFRDA)) கட்டுப்படுத்தப்படும். முதலீடுகளுக்கான "இயல்புநிலை வடிவத்தையும்" (default pattern) ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வரையறுக்கும். தொகுப்பு நிதிக்கான அனைத்து முதலீட்டு முடிவுகளையும் ஒன்றிய அரசு எடுக்கும்.


பழைய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?


பழைய ஓய்வூதியத் திட்டத்தில் (Old Pension Scheme (OPS)), ஒன்றிய  மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தங்கள் கடைசி அடிப்படை ஊதியத்தில் 50% ஓய்வூதியத்தைப் பெற்றனர். ஓய்வு பெற்றவர்களுக்கு உத்தரவாதமான ஓய்வூதியத்தை உறுதியளித்ததால் பழைய ஓய்வூதியத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைத் தக்கவைக்க சம்பளத்தில் சேர்க்கப்பட்ட அகவிலைப்படி நிவாரணமும் இதில் அடங்கும். இந்த முறை நிலையான சலுகைகளை வழங்கியதால், ஊழியர்கள் பங்களிக்க வேண்டியதில்லை என்பதால் இந்த அமைப்பு "வரையறுக்கப்பட்ட சலுகைத் திட்டம்"  (Defined Benefit Scheme) என்று அழைக்கப்பட்டது.


ஒரு அரசு ஊழியரின் ஓய்வூதியத்தின் போது அவரது அடிப்படை மாத சம்பளம் ரூ.10,000ஆக இருந்தால், அவருக்கு ரூ.5,000 ஓய்வூதியம் கிடைக்கும் கூடுதலாக, அரசு ஊழியர்களின் சம்பளத்தைப் போலவே, அகவிலைப்படி (dearness allowance) அதிகரிப்புடன் ஓய்வூதிய கொடுப்பனவுகளும் அதிகரித்தன.


1. ஜனவரி 2004-க்குப் பிறகு சேர்ந்த ஊழியர்களுக்குப் பொருந்தும் தேசிய ஓய்வூதிய முறையின் கீழ், ஊழியர் பங்களிப்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால், அது  சலுகை  சந்தை செயல்திறனைப் பொறுத்தது.


2. OPS-ன் முக்கிய பிரச்சினை என்னவென்றால், ஓய்வூதியக் கடன்கள் நிதியளிக்கப்படாமல் இருந்தன. எதிர்கால ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வளர்க்கவும் ஈடுகட்டவும் குறிப்பிட்ட நிதி இல்லை. அரசாங்கம் ஆண்டுதோறும் ஓய்வூதியங்களை வழங்கியது. ஆனால், எதிர்காலத்தில் பணம் செலுத்துவதை உறுதி செய்வதற்கான தெளிவான திட்டம் எதுவும் இல்லை. அதிகரித்து வரும் ஓய்வூதியச் செலவுகளை அவர்கள் ஈடுகட்ட வேண்டியிருந்ததால், “ஓய்வு பெறுகையில் பணம் செலுத்தும்” (‘pay-as-you-go’) முறை எதிர்கால சந்ததியினருக்கு சிக்கல்களை ஏற்படுத்தியது.


3. OPS இரண்டு காரணங்களுக்காக நீடிக்க முடியாததாக இருந்தது. முதலாவதாக, ஓய்வூதியதாரர்களின் சலுகைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்ததால் ஓய்வூதிய செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தன. அதே, போல் தற்போதைய ஊழியர்களின் சம்பளமும் அதிகரித்தது. இது பணவீக்கத்திற்கு ஏற்ப ஓய்வூதியங்களை சரிசெய்த குறியீட்டு முறை அல்லது “அடையாள நிவாரணம்” (dearness relief) காரணமாகும். இரண்டாவதாக, மேம்படுத்தப்பட்ட சுகாதாரப் பராமரிப்பு ஆயுட்காலத்தை அதிகரித்தது. அதாவது ஓய்வூதியங்கள் நீண்ட காலத்திற்கு செலுத்தப்பட வேண்டியிருந்தது.


4. கடந்த 30 ஆண்டுகளில் ஒன்றிய மற்றும் மாநிலங்களுக்கான ஓய்வூதியச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. 1990-91ஆம் ஆண்டில், ஒன்றிய அரசின் ஓய்வூதியச் செலவு ரூ.3,272 கோடியாக இருந்தது. அனைத்து மாநிலங்களும் சேர்ந்து ரூ.3,131 கோடியைச் செலவிட்டது. 2020-21  நிதியாண்டில் ஒன்றிய அரசின் ஓய்வூதியச் செலவு 58 மடங்கு அதிகரித்து ரூ.1,90,886 கோடியாக இருந்தது. அதே நேரத்தில் மாநிலங்களின் ஓய்வூதியச் செலவுகள் 125 மடங்கு அதிகரித்து ரூ.3,86,001 கோடியாக இருந்தது.




Original article:

Share:

NEP-யின் வெற்றிக் கதைக்குப் பின்னால், உண்மையான நாயகர்கள் -ஆஷிஷ் தவான்

 NIPUN பாரத், அடிப்படைக் கற்றலில் கவனம் செலுத்துவதன் மூலம், கற்பித்தல்-கற்றலை மாற்றியுள்ளது.


வருடாந்திர கல்வி நிலை அறிக்கையின் (Annual Status of Education Report (ASER)) முடிவுகள் நம்பிக்கையின் ஒளியை அளிக்கின்றன. பல ஆண்டுகளில் முதல்முறையாக, அடிப்படைக் கற்றல் விளைவுகள் குறிப்பாக, தரம் III-ல் இந்திய மாநிலங்கள் முழுவதும் நேர்மறையான போக்குகளைக் காட்டுகின்றன. இந்த முன்னேற்றம் தற்செயலானது அல்ல. தரமான கல்விக்கு முன்னுரிமை அளிக்க இந்திய அரசாங்கத்தின் கவனம் செலுத்தும் முயற்சியை இது பிரதிபலிக்கிறது.


சமீபத்திய குடியரசு தின கொண்டாட்டங்களின் போது, ​​கல்வி முதன்மையானது என்பது பற்றிய ஓவியங்களின் அணிவகுப்பில், கல்வி மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் அடையாள நினைவூட்டல்களைக் கண்டோம். தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவின் (foundational literacy and numeracy (FLN)) முக்கியத்துவத்தை வலியுறுத்துவதன் மூலம் இந்த சாதனைகளுக்கு மேடை அமைத்தது. ஆனால், இந்த வெற்றிக் கதையின் பின்னணியில் உள்ள உண்மையான வீரர் NIPUN பாரத் மிஷன் ஆகும்.


NIPUN பாரத், அல்லது புரிதல் மற்றும் எண்ணறிவுடன் வாசிப்பதில் நிபுணத்துவத்திற்கான தேசிய முயற்சி (National Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy (NIPUN)), 2021ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது மற்றும் ஆரம்ப வகுப்புகளில் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை இலக்காகக் கொண்டு வகுப்பறைகளை அமைதியாக மாற்றியுள்ளது. இந்தத் திட்டம் ஒதுக்குகிறது என்பதைக் கவனியுங்கள்.


ஒவ்வொரு குழந்தைக்கும் கற்பித்தல்-கற்றல் பொருட்களுக்கு (TLM) ரூ.500 வழங்கப்படுகிறது. இது பள்ளிகள் மாணவர்களுக்கு சுவாரஸ்யமான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய பாடங்களை உருவாக்க உதவுகிறது. இந்த முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கும் ஆதரவு கிடைக்கிறது. ஆசிரியர் பயிற்சி பட்டறைகளுக்கு மாநிலங்கள் ரூ.5,000 வரை பெறுகின்றன. கூடுதலாக, ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறை உத்திகளை மேம்படுத்த உதவும் வகையில் வளப் பொருட்களுக்கு ரூ.150 வழங்கப்படுகிறது.


விரிவான மதிப்பீடுகளை நடத்துவதற்கும், மாணவர்களின் கற்றல் விளைவுகளின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும், கற்பித்தல் மற்றும் கற்றல் நடைமுறைகளில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிவதற்கும் மாநிலங்களுக்கு தலா ரூ.10-20 லட்சம் வரை அதிகாரம் வழங்கப்படுகிறது. தடையற்ற செயல்படுத்தல் மற்றும் மேற்பார்வையை உறுதி செய்வதற்காக, மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் வலுவான திட்ட மேலாண்மை அலகுகளை நிறுவுவதற்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வழங்கப்படுகிறது. இந்த நுணுக்கமான கட்டமைப்பு அடிப்படை கற்றலின் மாற்றத்தை தூண்டுகிறது.


எண்கள் மட்டுமே முழு கதையையும் படம்பிடிக்க முடியாது. NIPUN பாரத் மிஷனின் தாக்கத்தை உண்மையிலேயே புரிந்து கொள்ள, புள்ளிவிவரங்களுக்கு அப்பால் பார்த்து, ஒவ்வொரு நாளும் வாழ்க்கை மாற்றப்படும் குழந்தைகளைப் பார்க்க வேண்டும்.


உத்தரபிரதேசத்தில், தொடக்கப் பள்ளி ஆசிரியரான ரவி சர்மா, கணிதத்தைக் கற்பிக்க பாடல்களைப் பயன்படுத்துகிறார். அவரது மாணவர்கள் "ஒன்று அல்லது இரண்டு பைகள், மூன்று அல்லது நான்கு பைகளை எடுத்துக்கொண்டு சந்தைக்குச் செல்லுங்கள்." (ek-do thaila lo, teen-chaar chalo bazaar) என்று கோஷமிடுகிறார்கள். அவர்கள் தாளத்திற்கு ஏற்ப அசைந்து எண்களைக் கற்றுக்கொள்கிறார்கள். ஒடிசாவின் தேன்கனல் மாவட்டமும் இதேபோன்ற கதையைச் சொல்கிறது. இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஷ்ரகதிகா கோஷ், பெருமையுடன் ஒடியா கதைகளை உரக்கப் படிக்கிறார். ஒவ்வொரு பக்கத்திலும் அவளுடைய நம்பிக்கை வளர்கிறது.


தரவு இந்த நிகழ்வுகளை ஆதரிக்கிறது. உ.பி.யில், ASER 2024, மூன்றாம் வகுப்பு மாணவர்களின் இரண்டாம் நிலை நூல்களைப் படிக்கும் திறனில்  24 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும் மற்றும் கழித்தல் சிக்கல்களைத் தீர்க்கும் திறனில் ஒரு பாய்ச்சலைக் காட்டுகிறது. இது 2022 மற்றும் 2024ஆம் ஆண்டுக்கு இடையில் 29 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாக மேம்பட்டது. ஒடிசாவின் வண்ணமயமான மற்றும் சூழல் சார்ந்த பணிப்புத்தகங்களின் புதுமையான பயன்பாடு இதேபோன்ற ஆதாயங்களுக்கு வழிவகுத்தது. தேசிய அளவில், மில்லியன் கணக்கான குழந்தைகள் இப்போது அடிப்படை கணிதப் பிரச்சினைகளைப் படித்து தீர்க்க முடியும்.


முன்னேற்றம் இருந்தபோதிலும், இந்தியாவில் அடிப்படைக் கற்றல் இன்னும் பலவீனமாக உள்ளது. பல குழந்தைகள் ஆரம்ப வகுப்புகளிலிருந்து வெளியேறும்போது மிகவும் மேம்பட்ட கருத்துகளுடன் போராடுகிறார்கள். சிலர், குறிப்பாக ஓரங்கட்டப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், செழிக்கத் தேவையான தயார்நிலை அல்லது திறன்கள் இல்லாமல் பள்ளியைத் தொடங்குகிறார்கள்.


முறையான மாற்றங்கள் நேரம் எடுக்கும். அகில பாரதிய சிக்ஷா சமாகமில் பிரதமர் இதை எடுத்துரைத்து, "NIPUN பாரத் பலனளிக்க நான்கு ஆண்டுகள் ஆனது" என்று கூறினார். இந்த சாதனைகளைப் பராமரிக்கவும் விரிவுபடுத்தவும், இந்த இயக்கத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டும். ஒரு வலுவான பதிப்பான NIPUN 2.0, குறைந்தபட்சம் 2030ஆம் ஆண்டு வரை தொடர வேண்டும். இது தலையீடுகள் உறுதியாக வேரூன்றி நீடித்த தாக்கத்தை ஏற்படுத்த போதுமான நேரத்தை வழங்கும்.


NIPUN 2.0 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை கவனம் செலுத்த வேண்டும். ஆரம்பகால அடிப்படைத் திறன்களுக்கும் மேம்பட்ட கற்றலுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க இது முக்கியம். கூடுதலாக, இது ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்விக்கு (Early Childhood Education (ECE)) முன்னுரிமை அளிக்க வேண்டும். பாலர் கல்வியில் முதலீடுகள் குழந்தைகள் தொடக்கப் பள்ளியைத் தொடங்குவதற்கு முன்பே வெற்றிபெற உதவுகின்றன.


ASER முடிவுகள் முன்னேற்றம் சாத்தியம் என்பதை நிரூபிக்கின்றன. சரியான கருவிகள், வளங்கள் மற்றும் கொள்கைகள் மூலம், புவியியல் அல்லது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைப்பதை இந்தியா உறுதி செய்ய முடியும். NIPUN பாரத்தின் காலவரிசையை விரிவுபடுத்துவது வெறும் எண்கள் அல்லது தரவரிசைகளைப் பற்றியது அல்ல. இது ஷ்ரகதிகா மற்றும் ரவியின் கதைகளைப் பற்றியது மற்றும் அவர்களின் திறனைக் கண்டறிந்த குழந்தைகள் மற்றும் ஊக்கமளிக்க புதிய வழிகளைக் கண்டறிந்த ஆசிரியர்களின் கதைகள். அடிப்படைக் கற்றலில் உலகளாவிய அளவுகோலை அமைக்க இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால்,  செயல்பாட்டிற்கான சாளரம் குறுகியது.  NIPUN 2.0-ல் ஈடுபடுவதற்கான நேரம் இப்போது.


தவான் தி கன்வர்ஜென்ஸ் ஃபவுண்டேஷனின் நிறுவனர் (The Convergence Foundation) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO,). குக்ரேஜா சென்ட்ரல் ஸ்கொயர் ஃபவுண்டேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் (CEO and MD, Central Square Foundation) ஆவார்.




Original article:

Share:

ஒரு நடைமுறை பார்வை : 2024-25 பொருளாதார ஆய்வில் இந்தியாவின் வளர்ச்சிக்கான சவால்கள்

 குறிப்பாக மாறிய பின்னணியில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. தொற்றுநோய்க்குப் பிந்தைய நான்கு ஆண்டுகால ஆரோக்கியமான வளர்ச்சிக்குப் பிறகு இந்தியாவின் வளர்ச்சி தடுமாறுகிறது. பங்குச் சந்தைகள் சரிந்து வருகின்றன. ரூபாய் எதிர்பார்த்ததைவிட வேகமாக மதிப்பை இழந்து வருகிறது.  மேலும்,  பொருளாதாரத்தைத் தூண்டிவிட்ட முக்கிய இயக்கிகளான உள்நாட்டுத் தேவை மற்றும் பொதுத்துறை மூலதனம்  மந்தமாகவே உள்ளன. அதே நேரத்தில் தனியார் முதலீடுகள் மந்தமாகவே உள்ளன. சூழலைப் பொறுத்தவரை, 2019-20 நிதியாண்டு முதல் 2023-24 நிதியாண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் அரசாங்க மூலதனம் 16% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்திலும், வீட்டு முதலீடுகள் 12% ஆகவும், நிறுவனச் செலவுகள் 6% மட்டுமே அதிகரித்துள்ளன. 


பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளின் மந்தநிலை கவலையளிக்கும் அறிகுறியாகும். இந்த கவலையுடன், புதிய அமெரிக்க நிர்வாகத்தின் உலகளாவிய வர்த்தகம் மற்றும் வரிவிதிப்பு முறைகளை சீர்குலைக்கும் திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. 2024-25 பொருளாதார ஆய்வறிக்கை ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. உலகமயமாக்கல் வீழ்ச்சியடைவதால், இந்தியா உள் காரணிகள் மூலம் வளர்ச்சியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அது கூறுகிறது. அதே நேரத்தில், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க, குறிப்பாக அதன் போட்டி சந்தைகளுக்கு எதிராக, இந்தியா அதிக போட்டித்தன்மையுடன் மாற வேண்டும்.


இந்த ஆண்டு மதிப்பிடப்பட்ட 6.4% வேகத்தில் இருந்து, 2025-26ஆம் ஆண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கலாம் என்ற ஆய்வறிக்கையின் கணிப்பு, புதிய எதிர்க்காற்றுகளை எதிர்கொண்டு பொருளாதார வேகம் மேலும் சரியக்கூடும் என்பதை ஒப்புக்கொள்கிறது. 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இலக்கை அடைய, இந்தியா குறைந்தபட்சம் ஒரு தசாப்தத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 8% வளர்ச்சியடைய வேண்டும் என்று கணக்கெடுப்பின் ஆசிரியர்கள் நம்புகின்றனர். மாற்றங்கள் இல்லாமல் தற்போதைய முறைகளைப் பின்பற்றுவது பொருளாதார தேக்கத்திற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். 


சமீபத்திய சீர்திருத்தங்களைப் பாராட்டினாலும், கட்டுப்பாடுகளை நீக்காமல் அவர்கள் விரும்பிய இலக்குகளை அடைய முடியாது என்று ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. இந்தச் சூழலில், அரசாங்கம், நுண் மேலாண்மைக்கு நிகரான விதிமுறைகளை நீக்குவதன் மூலமும், அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் இடையேயான 'நம்பிக்கை பற்றாக்குறையை' (‘trust deficit’) குறைப்பதன் மூலமும், நாட்டின் நெருக்கமான சமூகங்களுக்குள்ளும் 'நம்பிக்கை பற்றாக்குறையை' குறைப்பதன் மூலமும், வணிகங்களை 'வழியிலிருந்து வெளியேற்றுவது' மிகவும் முக்கியமானது என்பதை இந்த கணக்கெடுப்பு வலியுறுத்துகிறது. 


வணிகம் செய்வதை எளிதாக்குவதைப் புதுப்பிக்க, சந்தைகளை சிதைக்கும் கட்டுப்பாடுகளைக் குறைக்கவும், விதிமுறைகளுக்கு 'குறைந்தபட்ச அவசியமான, அதிகபட்ச சாத்தியமான' அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளவும், அதே நேரத்தில் கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து அவர்கள் தங்கள் தொகுதிகளுக்கு விதிக்கும் அதே பொறுப்புணர்வை எதிர்பார்க்கவும் இது ஒரு உணர்ச்சிமிக்க வேண்டுகோளை விடுத்துள்ளது. சிறு நிறுவனங்களுக்கு அதிகாரம் அளித்தல், பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்துதல் மற்றும் ஒரு சமமான களத்தை உறுதி செய்தல் ஆகிய திட்டங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இறக்குமதி கட்டுப்பாடுகள், உற்பத்தி தொடர்பான ஊக்கத்தொகைகள் மற்றும் கேள்விக்குரிய வரிவிதிப்பு தவறான சாகசங்கள் போன்ற 1970ஆம் ஆண்டுகளின் பாணியிலான மோசமான யோசனைகளால் ஈர்க்கப்பட்ட ஒரு அரசாங்கத்திற்கு, இது பொருத்தமான ஆலோசனையாகும். இந்த ஆலோசனைகளை அரசாங்கம் பாரபட்சமின்றி கேட்கத் தயங்கியதா என்பதை, இந்த பட்ஜெட் வெளிப்படுத்தும்.




Original article:

Share:

ஒன்றிய பட்ஜெட் 2025 : உழவர்கள் எதை விரும்புகிறார்கள்? -அசோக் தவாலே

 "மோடி ஆட்சியின் முந்தைய அனைத்து பட்ஜெட்டுகளும் ஒரு சில உள்நாட்டு நிறுவனங்களையும் சர்வதேச நிதி மூலதனத்தையும் வளர வைத்துள்ளன. மேலும், அனைத்து வகையான உழைக்கும் மக்களையும் பிழிந்துள்ளன" என்று சிபிஐ(CPI(M)) தலைவர் அசோக் தவாலே கூறுகிறார்.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் முந்தைய பத்து பட்ஜெட்டுகளைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் 2025 (பதினொன்றாவது) ஒன்றிய பட்ஜெட்டிலிருந்து இந்திய உழவர்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்கள் எதிர்பார்க்கக் கூடிய காரணங்கள் குறைவாகவே உள்ளன. மாறாக, தவறாக வழிநடத்தும் வாக்குறுதிகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் தீங்கு விளைவிக்கும் கொள்கைகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும்.


மோசமான பதிவு


வெளிப்படையாகச் சொன்னால், மோடி ஆட்சியின் முந்தைய அனைத்து பட்ஜெட்டுகளும் ஒரு சில உள்நாட்டு நிறுவனங்களையும் சர்வதேச நிதி மூலதனத்தையும் வளர வைத்துள்ளன. மேலும், உழைக்கும் மக்களின் அனைத்து பிரிவுகளையும், குறிப்பாக உழவர்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்களையும் பிழிந்துள்ளன என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது.


ஒன்றிய பட்ஜெட் 2025 : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 8வது முறையாக வரலாற்றை உருவாக்க இலக்கு வைத்துள்ளார். 


ஆக்கிரமிப்பு மிக்க டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றிருப்பது, விவசாயம் உட்பட இந்தியப் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் ஏகாதிபத்திய அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும்.


ஜூலை 2024-ல் நடந்த கடைசி மத்திய பட்ஜெட்டில் உணவு மானியம் ₹7,082 கோடியும், உர மானியம் ₹24,894 கோடியும் குறைக்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) ஒதுக்கீட்டின் ₹86,000 கோடி, முந்தைய ஆண்டில் உண்மையில் செலவிடப்பட்ட தொகையை விடக் குறைவாகும். விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கான ஒட்டுமொத்த ஒதுக்கீடு 2019ஆம் ஆண்டில் 5.44%-ல் இருந்து 2024ஆம் ஆண்டில் 3.15% ஆகக் குறைந்துள்ளது.


மோடி ஆட்சியின் எட்டு ஆண்டுகளில், 2015 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கு இடையில் 1,00,474 உழவர்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau’s (NCRB)) தரவுகள் நமக்குத் தெரிவித்த போதிலும், இந்த அனைத்து பேரழிவு நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.  இதேபோல், உலகளாவிய பசி குறியீடு (Global Hunger Index) 2024, இந்தியா 127 நாடுகளில் 105வது இடத்தில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த புள்ளிவிவரங்கள் இந்தியாவின் விவசாய நெருக்கடியின் அப்பட்டமான மற்றும் சோகமான அறிகுறியாகும்.


இரண்டு பெருநிறுவன சார்பு ஆபத்துகள்


2025 பட்ஜெட்டுக்கு ஒரு அச்சுறுத்தும் விதமாக, நவம்பர் 25, 2024 அன்று மோடி ஆட்சி "வேளாண் சந்தைப்படுத்தல் தொடர்பான தேசிய கொள்கை கட்டமைப்பு (“National Policy Framework on Agricultural Marketing (NPFAM)”)" வரைவை வெளியிட்டது. அரசாங்கம் ரத்து செய்ய வேண்டிய மூன்று விவசாயச் சட்டங்களிலிருந்து சில பெருநிறுவன சார்பு விதிகளை ரகசியமாக மீண்டும் கொண்டுவர NPFAM முயற்சிக்கிறது. 2020-21 ஆம் ஆண்டில் சம்யுக்த கிசான் மோர்ச்சா (Samyukta Kisan Morcha (SKM)) தலைமையிலான உழவர்கள் நடத்திய ஒரு வருட போராட்டத்திற்குப் பிறகு இந்த சட்டங்கள் நீக்கப்பட்டன. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உழவர்கள் ஏற்கனவே நாடு முழுவதும் பெரிய போராட்டங்களை நடத்தியுள்ளனர். அவர்களின் முக்கிய கோரிக்கை NPFAM-ஐ உடனடியாக திரும்பப் பெறுவதாகும்.


2025 மத்திய பட்ஜெட் : எப்போது, ​​எங்கு பார்க்க வேண்டும்


ஒன்றிய அரசு ஏப்ரல் 2025 முதல் வெறுக்கப்படும் நான்கு தொழிலாளர் சட்டங்களை அறிவித்து செயல்படுத்த முடிவு செய்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோயைப் பயன்படுத்தி, இந்த தொழிலாளர் எதிர்ப்பு மற்றும் பெருநிறுவன சார்பு தொழிலாளர் சட்டங்கள் மூன்று பண்ணை சட்டங்களுக்குப் பிறகு செப்டம்பர் 2020ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இருப்பினும், தொழிலாள வர்க்கத்தின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளாக அவற்றை செயல்படுத்த முடியவில்லை. தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதற்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள் (Central Trade Unions (CTU)) அழைப்பு விடுத்த பொது வேலைநிறுத்தம் உட்பட ஒரு பெரிய போராட்டம் நடைபெறுகிறது. விவசாய சட்டங்களைப் போலவே, அவையும் ரத்து செய்யப்பட வேண்டும்.




குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் கடன் தள்ளுபடிக்கான கோரிக்கை


நாட்டில் உழவர்களுக்கு இன்று முதல் மற்றும் மிக முக்கியமான பிரச்சினை C2+50% என்ற விகிதத்தில் சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) ஆகும். இது 2006ஆம் ஆண்டில்  டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான தேசிய உழவர்கள் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட விரிவான உற்பத்தி செலவைவிட ஒன்றரை மடங்கு அதிகம். இந்த பரிந்துரையை மீறுவது கடன், விவசாய தற்கொலைகள் மற்றும் துயரமான நில விற்பனைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். பெரும்பாலான உழவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை எதுவும் கிடைப்பதில்லை. மேலும், அவர்கள் இரக்கமின்றி அவர்களை ஏமாற்றும் தனியார் வர்த்தகர்களின் தயவில் உள்ளனர். அவர்களால் தங்கள் உற்பத்தி செலவுகளை கூட மீட்டெடுக்க முடியாது. குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது 2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோடியின் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியாகும். இப்போது, ​​அவர்கள் இது குறித்து ஒரு கடுமையான மௌனம் காக்கின்றனர். ஆனால், அது செய்யப்படாவிட்டால், விவசாய நெருக்கடியைத் தீர்க்கத் தொடங்குவதுகூட சாத்தியமற்றதாகிவிடும். இதை செயல்படுத்த அவர்கள் பட்ஜெட்டில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.


உழவர்கள் மீண்டும் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?


இரண்டாவது பிரச்சினை உற்பத்தி செலவு அதிகரித்து வருவது. அனைத்து விவசாய உள்ளீடுகளின் விலைகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு பட்ஜெட்டில் உழவர்கள் கோருவது என்னவென்றால், அரசாங்கம் உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லிகள், டீசல், தண்ணீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க வேண்டும். உழவர்களுக்கு C2+50%-ல் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட வேண்டுமானால், உற்பத்திச் செலவைக் கணிசமாகக் குறைக்க வேண்டும்.


தற்போது இந்த உள்ளீடுகளின் முக்கிய உற்பத்தியாளர்களாக இருக்கும் பெருநிறுவனங்கள் மீது பட்ஜெட் மூலம் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் அரசாங்கம் இந்த விலைகளைக் குறைக்க முடியும். முன்னதாக, இந்த உள்ளீடுகளில் பெரும்பாலானவை பொதுத்துறையால் உற்பத்தி செய்யப்பட்டன. உரங்கள், விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனங்களை பட்ஜெட் ஆதரிக்க வேண்டும்.  இந்த அரசாங்கம் சுயசார்பு பற்றிப் பேசுகிறது. ஆனால், சுயசார்பை மேம்படுத்த எதுவும் செய்யவில்லை. உரங்களின் விஷயத்தில் இது தெளிவாகத் தெரிகிறது. பட்ஜெட்டில் உள்ளீடுகளுக்கான மானியங்கள் மற்றும் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளுக்கான செலவினங்களை கடுமையாக அதிகரிக்க வேண்டும்.


இந்த பட்ஜெட்டின் மூன்றாவது கோரிக்கை, அனைத்து ஏழை மற்றும் நடுத்தர உழவர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் மத்திய அரசு ஒரு முறை முழுமையான கடன் தள்ளுபடி செய்வதாகும். இது செய்யப்படாவிட்டால், விவசாய தற்கொலைகள் மற்றும் நிலம் அந்நியப்படுத்தப்படுவதைத் தடுக்க முடியாது. 1990 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் மத்திய அரசால் பகுதி கடன் தள்ளுபடிகள் வழங்கப்பட்டன. கடந்த பத்து ஆண்டுகளில் மோடி ஆட்சி தனது நெருங்கிய நிறுவன நண்பர்களின் ₹14.46 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், விவசாய தற்கொலைகள் அதிகரித்து வரும் போதிலும், விவசாயக் கடன்களில் ஒரு பைசா கூட தள்ளுபடி செய்யப்படவில்லை.


ஏழை மற்றும் நடுத்தர உழவர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிராக பெரிதும் சாய்ந்திருக்கும் நவ-தாராளவாத (neo-liberal) காலத்தின் பெருநிறுவன ஆதரவு கடன் கொள்கையை தீவிரமாக மாற்றியமைக்க வேண்டும். உழவர்கள் கந்து வட்டிக்கு பணம் செலுத்தும் தனியார் கடன் வழங்குபவர்களைச் சார்ந்திருப்பதை அகற்றுவதற்கான ஒரே வழி அதுதான். கடன் தள்ளுபடி, உற்பத்திச் செலவைக் குறைத்தல் மற்றும் C2+50% என்ற விகிதத்தில் MSPயை உறுதி செய்தல் ஆகியவை ஒன்றாகச் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்தால், விவசாயத் துறையில் உள்ள நெருக்கடியின் பெரும்பகுதியைச் சமாளிக்க முடியும்.


பயிர் காப்பீடு, நீர்ப்பாசனம், மின்சாரம்


காலநிலை மாற்றத்தின் பின்னணியில் நான்காவது பிரச்சினை பொருத்தமானது. வழக்கமான வறட்சி, வெள்ளம், பருவகாலமற்ற மழை மற்றும் ஆலங்கட்டி மழை ஆகியவற்றின் வெளிச்சத்தில், திவாலான பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)) இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு விரிவான பயிர் காப்பீட்டுத் திட்டம் இருக்க வேண்டும். இதை பல மாநிலங்கள் இதிலிருந்து விலகிவிட்டன. சில மாநிலங்கள் தங்கள் சொந்த திட்டங்களைத் தொடங்கியுள்ளன. ஏனெனில் PMFBY விவசாயிகளின் நலன்களுக்காக அல்ல. இவை காப்பீட்டு நிறுவனங்களின் நலன்களுக்காகவே செயல்படுகிறது. மேலும், உழவர்களுக்கு உதவும் ஒரு விரிவான காப்பீட்டுத் திட்டத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.


ஐந்தாவது அம்சம் நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரம் பற்றிய கேள்வி. கடந்த பத்தாண்டுகளில் நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரத்தில் பொதுத்துறை முதலீடு கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் துறைகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்படுகின்றன. எனவே, நீர் மற்றும் மின்சாரத்திற்கான செலவு அதிகரித்து வருகிறது. அணைகள் மற்றும் கால்வாய்கள் கட்டுவதில் ஒரு அரசாங்கம் செய்யக்கூடிய பணத்தை தனியார் துறை முதலீடு செய்ய முடியாது.  எடுத்துக்காட்டாக, அணைகள் மற்றும் கால்வாய்கள் கட்டுதல் தொடர்பான கேள்வியை மத்திய அரசு தீர்க்க வேண்டும். நாடு முழுவதும் பல நீர்ப்பாசனத் திட்டங்கள் முழுமையடையவில்லை. அவை நிறைவடைந்தால், ஒரு பெரிய பகுதி நிலம் பாசனத்தின் கீழ் வரும். எனவே, இந்த நீர்ப்பாசனத் திட்டங்களை முடிக்க பட்ஜெட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.


மின்சாரத் துறையிலும், பொது முதலீடு இல்லாமல், நிலையான மற்றும் மலிவான மின்சார விநியோகத்தை உறுதி செய்வது கடினமாக இருக்கும். மின்சார உற்பத்தி இப்போது பெரும்பாலும் அதானி, அம்பானி, டாடா போன்ற ஏகபோக நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஸ்மார்ட் மீட்டர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற என அனைத்து நுகர்வோருக்கும் பேரழிவை ஏற்படுத்தப் போகின்றன. மின்சாரத்தை தனியார்மயமாக்குவதை எதிர்த்து தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.


MGNREGA மற்றும் நிலப் பிரச்சினைகள்


ஆறாவது பிரச்சினை MGNREGA விரிவாக்கம் பற்றியது. மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அது MGNREGA நிதியைப் பஞ்சத்தில் ஆழ்த்த முயற்சித்து வருகிறது. கட்டாய 100 நாட்களுக்குப் பதிலாக, வருடத்திற்கு சராசரி வேலை நாட்களின் எண்ணிக்கை வெறும் 45 ஆகக் குறைந்துள்ளது. அரசாங்கம் MGNREGA கூலியை ₹600 ஆகவும், வேலை நாட்களின் எண்ணிக்கையை குறைந்தது 200 ஆகவும் அதிகரிக்க வேண்டும். இது கிராமப்புற மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரு உயிர்நாடியாகும், இது அவர்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க உதவும்.


ஏழாவது அம்சம், மிக முக்கியமானது, நிலம் பற்றிய கேள்வி. பாஜக அரசு நடைமுறையில் 'உழுபவனுக்கே நிலம்' என்ற முழக்கத்தை 'பெருநிறுவனங்களுக்கே நிலம்' (‘Land to the Tiller’ to ‘Land to the Corporates’) என்று மாற்றியுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (Land Acquisition Act), 2013-ஐ முற்றிலுமாக மீறும் வகையில், பெருநிறுவனங்கள் விவசாய நிலங்களை பெருமளவில் கையகப்படுத்துகின்றன. பழங்குடியின நிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு, எந்த இழப்பீடும் வழங்காமல் சுரங்கம் மற்றும் தொழில்துறைக்காக பெருநிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. பொது நோக்கங்களுக்காக கண்டிப்பாக தேவைப்படும்போது மட்டுமே நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும், அதுவும் கண்டிப்பாக 2013 சட்டத்தின் கீழ். தீவிர நில சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டு முடிக்கப்பட வேண்டும். வன உரிமைகள் சட்டம் (Forest Rights Act (FRA)) கடுமையாக செயல்படுத்தப்பட வேண்டும். மேலும், வன நிலம் தலைமுறை தலைமுறையாக பயிரிட்டு வரும் பழங்குடியினரின் பெயர்களில் ஒப்படைக்கப்பட வேண்டும். பெண்களுக்கு நிலம் மற்றும் சொத்து உரிமையில் சம பங்கு வழங்கப்பட வேண்டும். கூட்டுறவு மற்றும் கூட்டு உற்பத்தி முறைகள் போன்ற கூட்டு உற்பத்தி முறைகள் தீவிரமாக ஆராயப்பட வேண்டும்.


வளங்கள் எங்கிருந்து வரும்?


எப்போதும் இதற்கெல்லாம் வளங்கள் எங்கிருந்து வரும்? எனும் கேள்வி கேட்கப்படுகிறது. ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வரும் செல்வ வரி மற்றும் பரம்பரை வரியை விதிக்க வேண்டும். ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலின்படி, இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டில் 109-ல் இருந்து 2025ஆம் ஆண்டில் 200 ஆக அதிகரித்துள்ளது. அவர்களின் ஒருங்கிணைந்த செல்வம் இப்போது 1.1 டிரில்லியன் டாலர்கள். "பணக்காரர்களின் உயிர்வாழ்வு" (“Survival of the Richest”) என்று பெயரிடப்பட்ட இந்தியாவில் சமத்துவமின்மை குறித்த ஆக்ஸ்பாம் அறிக்கை, பணக்கார இந்தியர்களில் ஒரு சதவீதம் பேர் நாட்டின் செல்வத்தில் 40.1% வைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் கீழ்மட்ட 50% மக்கள் 3% மட்டுமே வைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறது. இந்தியா இன்று உலகின் மிகவும் சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

அரசாங்கம் பெருநிறுவன வரியை வெகுவாகக் குறைத்துள்ளது. இதைத் திரும்பப் பெற வேண்டும். இந்தியா மிகக் குறைந்த நிறுவன வரி விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும், பெருநிறுவன வரிகளைக் குறைப்பதன் காரணமாக நாடு ₹1.45 லட்சம் கோடியை இழந்து வருகிறது. ஒரு அதிர்ச்சியூட்டும் முன்னேற்றத்தில், 2024-25 பட்ஜெட்டில் ஒன்றிய அரசு இப்போது பெருநிறுவன வரியை விட (26.5%) வருமான வரியிலிருந்து (30.9%) அதிக வருவாயைப் பெறுகிறது. நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்கும், பணக்காரர்களை அதிகமாகச் செலுத்துவதற்கும் பதிலாக, அது அனைத்து வருமான வரியையும் குறைத்து வருகிறது. அடிப்படையில், நேரடி வரிகளை அதிகரிக்க வேண்டும் மற்றும் மறைமுக வரிகளைக் குறைக்க வேண்டும். கடுமையான முறைகள் மூலம் வரி ஏய்ப்பு நிறுத்தப்பட வேண்டும்.


முந்தைய பட்ஜெட்டுகளுடன் ஒப்பிடும்போது, ​​அரசாங்கம் பெரிய மற்றும் முழுமையான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று உழவர்கள் விரும்புகிறார்கள். இது ஒரு கடினமான கோரிக்கை. இருப்பினும், இந்த மாற்றங்கள் செய்யப்படாவிட்டால், வேளாண் நெருக்கடி மற்றும் உழவர்கள் போராட்டங்கள் தொடரும்.  இறுதியில், நிலைமை கட்டுப்பாட்டை மீறக்கூடும்.


அசோக் தவாலே சிபிஐ(CPI(M)) பொலிட் பீரோ (Polit Bureau) உறுப்பினர் மற்றும் அகில இந்திய கிசான் சபாவின் தேசியத் தலைவர்.




Original article:

Share: